யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/10/18

பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை: வட்டாரக் கல்வி அலுவலர் எச்சரிக்கை

பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது தெரியவந்தால் பள்ளி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்.ஆர்.பால்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பருவத்துக்கான இலவச சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், நோட்டுப் புத்தகங்களை அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்.ஆர்.பால்ராஜ் வழங்கினார்.
பின்னர், தினமணி நிருபரிடம் அவர் கூறியதாவது: தற்போது அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள 79 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இரண்டாம் பருவத்துக்கான இலவச சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், இரண்டாம் பருவ தொடங்க நாளான புதன்கிழமையே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன.
மேலும், கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி வளாகங்கள் பிளாஸ்டிக் இல்லா வளாகங்களாக மாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் எந்த வகையிலாவது பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது தெரியவந்தால் தலைமை ஆசிரியர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தி அதை தடுக்க செய்ய வேண்டும். மேலும், பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு இருப்பது ஆய்வுகளின் போது தெரியவந்தால் பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வளாகங்கள் புகையிலை இல்லா வளாகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு அருகில் புகையிலை பயன்பாடு குறித்து தெரியவந்தால், அது குறித்த விவரத்தை காவல் துறைக்கு நிர்வாகிகள் தெரியப்படுத்தி அவற்றை அகற்ற வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வெண்ணிலா தலைமை வகித்தார். இதில் ஆசிரியர் வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக