யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/11/18

"கல்விமுறை 2030" எனும் தலைப்பில் மேகாலயா மாநிலத்தில் தமிழக ஆசிரியர் கட்டுரை சமர்பிப்பு!

NCERT மூலம் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெறும் NERIE கருத்தரங்கு மற்றும் ஒரிசா மாநிலம் புபனேஸ்வரில் நடைபெறும் NCSE கருத்தரங்கிலும் பங்கேற்க நமது மாநிலத்திலிருந்து திரு சீனிவாசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இக்கருத்தரங்கில் பங்கேற்று எனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக 9.11.2018   அன்று நமது பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உயர்திரு. பிரதீப் யாதவ் அவர்கள் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உயர்திரு.கருப்பசாமி அவர்கள் முன் எனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தேன்.  நம் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் ஆய்வு கட்டுரை மிகச்சிறப்பாக உள்ளது என பாராட்டி, ஒரிசா மற்றும் மேகாலயாவில் நடைபெறும் கருத்தரங்கில் மிகச்சிறப்பாக வழங்கி நமது மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும்படி வாழ்த்தி அனுப்பினர்.
சார்ந்த ஆசிரியரை நமது 
கல்விசிறகுகள் வாழ்த்துகிறது.

Teacher Details:
Srinivasan K
Head master
Hindu primary school
AMBUR
Vellore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக