யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/11/18

கஜா' புயல் எதிரொலிபயிர் காப்பீடு சுறுசுறு

கஜா' புயல் எதிரொலி யாக, டெல்டா மாவட்டங் களில், பயிர் காப்பீடு செய்ய, வேளாண் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ நெல் சாகுபடி காலம் துவங்கிஉள்ளது.
இம்மாவட்டங்களில், 12 லட்சம் ஏக்கர் வரை சாகுபடியை அதிகரிக்க, வேளாண் துறையினர் திட்டமிட்டுள்ளனர். சம்பா சாகுபடி பாதித்தால், ரேஷன் அரிசி வினியோகத்தில் சிக்கல் ஏற்படும். இந்நிலையில், கஜா புயலால், டெல்டா மாவட்டங்களில், அதிக மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக, இம்மாவட்டங்களில் சாகுபடி செய்துள்ள, சம்பா பயிர்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயிகளை பாதிப்பில் இருந்து காப்பதற்காக, பயிர் காப்பீடு செய்ய, வேளாண் துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சம்பா சாகுபடி செய்துள்ள, டெல்டா விவசாயிகள் அனை வரையும், பயிர் காப்பீடு செய்ய வைப்பதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட வேளாண் துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.பயிர் காப்பீடு செய்த விபரங்களை, அறிக்கையாக வழங்கும்படி, வேளாண் இணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக