யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/12/18

இடைநிலை ஆசிரியர்கள் ஜன., 7ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் : கல்வித்துறை இயக்குநர் கோரிக்கை:

ஊதிய முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி சென்னையில் 3வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, சித்தக் குழு அறிக்கையை பொருத்தே நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் ஜன., 7ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக