யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/12/18

கிராம தபால் ஊழியருக்கு விருப்ப ஓய்வு திட்டம் :

கிராம தபால் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை, தபால்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் உள்ள, 1.55 லட்சம் தபால் நிலையங்களில், 1.39 லட்சம் தபால் நிலையங்கள் புறநகரங்களில் செயல்படுகின்றன.இதில், கிராம் தபால் ஊழியர்களாக, 2.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். பணி நிரந்தரம், நிரந்தர பணியாளர்களுக்கான பணப்பயன், ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை நிறைவேற்றக்கோரி பல ஆண்டுகளாக, கிராம தபால் ஊழியர்கள் போராடி வருகின்றனர்.இந்நிலையில், கமலேஷ் சந்திரா தலைமையிலான குழு அறிக்கை அடிப்படையில், அனைத்து வகை கிராம தபால் ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு திட்டத்தை தபால்துறை அமல்படுத்தியுள்ளது.இதன்படி, 20 ஆண்டு சேவைக்காலம் முடித்த கிராம தபால் ஊழியர்கள், நிரந்தர பணியாளர்களைப் போல, விருப்ப ஓய்வில் செல்லலாம். மேலும், மருத்துவ காரணங்களால் உடல்நலம் குன்றி பணியாற்ற முடியாத ஊழியர்கள், 10 ஆண்டு சேவை முடித்திருந்தால், 'இன்வேலிடேசன்' அடிப்படையில் ஓய்வு வழங்கப்படும். விருப்பு ஓய்வு எடுக்கும் ஊழியர்களுக்கு, பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகள் எந்தப்பாதிப்பும் இல்லாமல், சேவைக் காலத்தை கணக்கிட்டு கொடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக