யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/12/18

செல்பி’யால் பல உயிர்கள் பறிபோயிருக்கும் நிலையில், அமெரிக்காவில் செல்பி மூலம் ஒருவர் ஜெயில் தண்டனையில் இருந்து தப்பித்திருக்கிறார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், கிறிஸ்டோபர் பிரிகோபியா. அமெரிக்காவின் ஜார்ஜ் டவுனில் வேலைசெய்து வருகிறார். இவரை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டில் இருந்தபோது திடீரென போலீஸ் கைதுசெய்தது. ஏன் கைதுசெய்யப்பட்டிருக்கிறோம் எனத் தவித்த கிறிஸ்டோபர், கைதுக்கான காரணத்தை போலீசார் விளக்கியபோது அதிர்ந்தார்.

இவர் தனது பள்ளிக்கால தோழியை வீடு புகுந்து தாக்கியதாகவும், அவரின் கழுத்தில் கத்தியைக்கொண்டு கீறியதாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ‘நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்ட தினத்தில் நான் வீட்டில் இருந்தேன்’ எனக் கதறிய வரின் விளக்கத்தைக் கேட்காமல் அவரைச் சிறையில் அடைந்த போலீசார், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 99 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும் எனவும் எச்சரித்தனர். ஆனால், கிறிஸ்டோபரின் பெற்றோர்கள் கோர்ட்டை நாடினர். ஒன்பது மாதம் சிறையில் இருந்த அவரை ஜாமீனில் வெளியில் எடுத்தனர்.

அதேநேரம், சட்டப் போராட்டத்தைத் தீவிரப் படுத்திய அவர்களுக்கு, கோர்ட்டில் தங்கள் மகன் குற்றவாளி அல்ல என நிரூபிக்க உதவியது ஒரு செல்பி படம்.

ஆம், கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி சம்பவம் நடந்ததாக அந்தப் பெண் புகார் கொடுத்திருந்தார்.

ஆனால் கிறிஸ்டோபர் அதே நாளில், அதே நேரத்தில், சம்பவம் நடந்த இடத்துக்கு 65 மைலுக்கு அப்பால், தன் தாய் மற்றும் குடும்பத்தினருடன் இருந்துள்ளார்.

அதற்கு ஆதாரமாக, இவர்கள் அந்த நேரத்தில் குடும்பத்துடன் செல்பி ஒன்றை எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதை சுட்டிக்காட்டினர்.

இதை ஆதாரமாக வைத்து வாதாடிய வக்கீல்கள், கிறிஸ்டோபரை 99 வருட ஜெயில் தண்டனையில் இருந்து வெளிக்கொண்டுவந்தனர். இதை முன்னிட்டு, பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவரின் தாயார் எரினா, ‘தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் அனைவருக்கும் நீதி வேண்டிப் போராட நாங்கள் தயாராக இருக்கிறோம். இது இங்கே முடிவுக்கு வரவில்லை. நாங்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தப் போராடுவோம்’ என உருக்கமாகக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக