யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/12/18

ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு, உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்த விழிப்புணர்வுக் கல்வி மற்றும் பயிற்சி!!

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சம் மாணவர்களுக்கு, உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்த விழிப்புணர்வு கல்வியை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வழங்கினர்.

முதற்கட்டமாக சத்தான உணவுகள், அவற்றை உட்கொள்ளும் விதம் குறித்து, மாணவர்களுக்கு விளக்க, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, உணவில் உள்ள கலப்படத்தை கண்டறியவும், தவிர்க்கவும் பயிற்சி வழங்கப்பட்டது.


மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், ''தலைமை ஆசிரியர்கள், 197 பேருக்கும், ஒரு லட்சம் குழந்தைகளுக்கும், பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி தொடரும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக