யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/12/18

ராணுவ வீரர் நிதியுதவி இரு மடங்காக உயர்வு

சென்னை :கடலோர காவல் படை வீரர்கள், பணியின் போது இறந்தாலோ, காயமடைந்தாலோ, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுவது போல், நிதியுதவி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிதியுதவி, இரு மடங்காகவும் உயர்த்தப்பட்டுள்ளது.எல்லை பாதுகாப்பு பணி வீரர்கள், எதிரிகள் தாக்குதலில் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசின், கார்கில் நிதியிலிருந்து, நிதியுதவி வழங்கப்படுகிறது. அதேபோல், காயமடைந்தோருக்கும் வழங்கப்படுகிறது.வீர மரணமடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு, இதுவரை, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதை, 20 லட்சமாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், முழுமையாக ஊனமடைந்த, இரண்டு கைகளை இழந்த, பார்வை இழந்த வீரர்களுக்கு, இதுவரை, ஏழு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதை, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், ஒரு கை இழந்தாலோ, ஒரு கண் இழந்தாலோ, ஐந்து லட்சம் ரூபாயை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும், அரசு உத்தரவிட்டுள்ளது.அதேபோல, கடலோர காவல் படையினர், பணியின் போது இறந்தாலும், ஊனமடைந்தாலும், ராணுவ வீரர்களுக்கு வழங்குவது போல, நிதியுதவி வழங்கவும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக