யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/1/19

ஜனவரி 23, 24ம் தேதிகளில் பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் தட்கலில் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித் தேர்வர்களாக எழுத விரும்பும் மாணவர்கள் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்


 இந்த தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்கள் 23 மற்றும் 24ம் தேதிகளில் சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது


 தமிழகத்தில் மார்ச் மாதம் நடக்க இருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்


நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் பகுதி 1ல் மொழிப்பாடத்தை தேர்வு செய்யும்போது கண்டிப்பாக தமிழ் மொழியை முதல் மொழிப்பாடமாக எழுத வேண்டும்


முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 2019 மார்ச் 1ம் தேதி பதினான்கரை வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்


 மத்திய, மாநில அரசுப் பள்ளிகளில் 8ம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர், 9ம் வகுப்பு வரை படித்து இடையில் நின்றவர்கள், பிற துறையால் நடத்தப்படும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


 பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல் பாடத் தேர்வு இருப்பதால், செய்முறைப் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பித்து செய்முறைத் தேர்வு எழுதிய பிறகே அறிவியல் பாடத் தேர்வை எழுத முடியும். செய்முறை பயிற்சி வகுப்பில் சேர கடந்த 8.6.18 முதல் 30.6.2018 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது


மேற்படி தேதிகளில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் தற்போது அறிவிக்கப்படும் தேதியில் பதிவு செய்து 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை பயிற்சி பெற்று செய்முறைத் தேர்வு எழுத வேண்டும்


ஏற்கெனவே அறிவியல் பாடத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் செய்முறை அல்லது எழுத்து தேர்வு இதில் எந்த பகுதியில் தோல்வி அடைந்தார்களோ அதற்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்


 தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். சேவை மையங்கள் குறித்த விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்


 பத்தாம் வகுப்புக்கு தனித் தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணம் ₹125, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ₹50 சேர்த்து செலுத்த வேண்டும். தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்


 மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறுவோர், சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் 23ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில் ஆன்ைலனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக