யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/2/18

தேசிய கீதம்: மாணவிகளுக்குத் தண்டனை!

                                                    
ராஜஸ்தானில் தேசிய கீதத்தை மெதுவாக பாடியதாக ஒன்பதாம் வகுப்பு 
மாணவிகளைத் தலைமை ஆசிரியர் தோப்புக்கரணம் போட வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள சபல்பூரா கிராமத்தில் ராஜ்கியா ஆதர்ஷ் மத்யமிக் வித்யாலயா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று காலை (பிப்ரவரி 15) தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் தேசிய கீதத்தை மெதுவாகப் பாடியுள்ளனர். அப்போது அதைப் பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களை ஒரு மணி நேரம் தோப்புக்கரணம் பொடவைத்துள்ளார். பின்னர் அவர்களை அடித்துள்ளார். இந்தத் தண்டனையால் மாணவிகளுக்குக் கால்களில் வீக்கம் ஏற்பட்டது. சில மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாணவிகளில் பெற்றோர் பள்ளியின் முன்பு திரண்டு பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவிகளின் பெற்றோர்களும், மாணவிகளும் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் விடுதிகளில் உள்ள மாணவர்கள் கட்டாயமாக தேசிய கீதம் பாடவேண்டும் என ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பண மதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8ஆம் தேதியை கறுப்பு தினமாக கடைப்பிடிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தபோது, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 50,000 பேர் ஒன்று கூடி தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஆர்பி அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறை!

                                        

அரசு போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக உயர் நீதிமன்ற 
மதுரைக் கிளை தாமாக எடுத்துக்கொண்ட வழக்கில், ஆசிரியர் தேர்வு வாரியப் பணிகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

“போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளினால் தவறான முறையில் மதிப்பெண்களைப் பெறுபவர்கள், தகுதியுடையவர்களின் பணியைப் பறித்துவிடுகின்றனர். அதனால், போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனுடன் தொடர்புடையவர்கள் மீது விசாரணைக் குழு அமைக்கவோ அல்லது விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றவோ செய்ய வேண்டும்” என்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையில் இன்று (பிப்ரவரி 16) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், “அரசு போட்டித் தேர்வு நடைமுறைகள் தனியாருக்கு வழங்கப்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறையைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

தற்போது கடைபிடிக்கப்படும் தேர்வு மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து டி.என்.பி.எஸ்.சி மார்ச் 9ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ENTRANCE EXAMINATION -2018

பட்டதாரி ஆசிரியர்களை +2 பொதுத்தேர்வில் பணியமர்த்தக் கூடாது!!!

16/2/18

INCOME TAX FILE











சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி பட்டங்கள் தமிழக கல்வித்துறையில் ஊக்க ஊதிய உயர்விற்கு தகுதியற்றது . முதல்வர் தனிப்பிரிவில் பதில் .

15/2/18

நீட்' தேர்வுக்கு இலவச, 'ஆன்லைன்' வசதி : அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு!!!

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு, அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக,
அரசு சார்பில், இலவச, 'ஆன்லைன்' வசதி செய்து தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் அறிவியல் பிரிவு மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, மத்திய அரசின், நீட் நுழைவு தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

கட்சிகளால் குழப்பம் : நடப்பாண்டு, 2017 - 18 வரை, நீட் தேர்வு குறித்து, அரசியல் கட்சிகள், மாணவர்களை குழப்பி விட்டதால், பெரும்பாலான மாணவர்கள், நீட் தேர்வை எழுத முடியவில்லை. இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு கட்டாயம் என்பது, எந்த குழப்பமும் இன்றி, துவக்கத்திலேயே உறுதியாகி விட்டது. அதனால், தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், நீட் நுழைவு தேர்வு எழுத உள்ளனர். அவற்றில், அரசு பள்ளிகளில் படிக்கும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, அரசின் சார்பில், நீட் நுழைவு தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.நீட் தேர்வு, மே, 6ல் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு, கடந்த, 9ல் துவங்கியது. தனியார் பள்ளிகளும், பயிற்சி மையங்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கும், விண்ணப்ப பதிவுகளை செய்து தருகின்றன. ஆனால், நீட் தேர்வு குறித்த அறிக்கை மற்றும் தகவல் கையேடு ஆங்கிலத்தில் உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களால், அவற்றை முழுவதுமாக படித்து, வழிகாட்டுதல் பெற முடியாத நிலை உள்ளது.
கிராமப்புற மாணவர்கள் : சென்னை போன்ற மாநகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரையுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், நீட் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதிகள் இன்றி தவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு தலையிட்டு, பள்ளிக்கல்வித் துறை அல்லது சுகாதாரத் துறை சார்பில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இலவச ஆன்லைன் வசதி செய்து தரவேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.

குரூப் 4 தேர்வு : விண்ணப்பித்த பிஎச்டி பட்டதாரிகள்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 11)நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த
சுமார் 20 லட்சம் பேரில் 992 பேர் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

தமிழக அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 9,351 பணியிடங்களை நிரப்ப பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வுக்கு சுமார் 20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியை மட்டுமே தகுதியாகக் கொண்ட குரூப் 4தேர்வுக்கு பிஎச்டி பட்டதாரிகள் 992 பேர் விண்ணப்பித்திருந்ததாகவும், எம்ஃபில். பட்டதாரிகள் 23 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதாகவும் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குரூப் 4 தேர்வில் முதன்முறையாகத் தேர்வர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் பெயர், படம், பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட தனித்துவமான விடைத்தாள்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயத் தேர்ச்சி முறையை மறுஆய்வு செய்ய வேண்டும்: நாடாளுமன்றக் குழு பரிந்துரை!!!

பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்கும்
நடைமுறையை மறுஆய்வு செய்யுமாறு பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தி மாணவர்களைத் திறனை மதிப்பிட்டால்தான் அவர்களது கல்வியறிவு மேம்படும் என்றும் அக்குழு கூறியுள்ளது.
ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைவருக்கும் கல்வி சட்டத்தின் கீழ் கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான சட்டத் திருத்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலின்படி, அந்த மசோதா மனிதவள மேம்பாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது
. பாஜக எம்.பி. சத்தியநாராயணன் ஜாட்டியா தலைமையிலான அக்குழு கடந்த சில மாதங்களை அதனை ஆய்வு செய்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தனது ஆய்வறிக்கையை அக்குழு சமர்ப்பித்துள்ளது.
 அதுதொடர்பான விவரங்கள் மாநிலங்களவைச் செயலர் அலுவலகத்தில் இருந்து திங்கள்கிழமை வெளியாகியுள்ளன
.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சியளிக்கும் நடைமுறை தொடர வேண்டும் என்று 6 மாநிலங்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளன.
 மீதமுள்ள மாநிலங்கள் அனைத்தும் அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
அதன் அடிப்படையில் பார்க்கும்போது கட்டாயத் தேர்ச்சி முறையை மாற்றியமைப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஆண்டுதோறும் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தி அவர்களது திறனை மதிப்பிடுவது அவசியம்.
 அதில் தோல்வியடைபவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கலாம். அதன் மூலம் அவர்கள் கல்வியறிவு செழுமையடையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்லூரி தரவரிசை : யு.ஜி.சி., உத்தரவு

பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., மற்றும் தேசிய தர அங்கீகார அமைப்பான, 'நாக்' சார்பில், உயர் கல்வி நிறுவனங்களுக்கு, தரவரிசை அந்தஸ்து வழங்கப்படுகிறது.
எட்டு வகை, 'கிரேடு'களில், தரவரிசை தரப்படுகிறது. ஒவ்வொரு பல்கலையும், கல்லுாரியும், நாக் தரவரிசையை கட்டாயம் பெற வேண்டும். மாணவர் சேர்க்கையின் போது, தங்கள் கல்வி நிறுவனங்களின் தரவரிசை குறித்து, சில கல்லுாரிகள், மாணவர்களுக்கு தவறான தகவலை தருவதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதை தடுக்கும் வகையில், கல்லுாரிகளும், பல்கலைகளும், தாங்கள் பெற்ற, தரவரிசை குறித்த விபரத்தை, தங்கள் நிறுவன இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.

பாலிடெக்னிக் விவகாரம்:ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு ::

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்துக்கு எதிரான வழக்கில் 22-ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என்று  பள்ளிக் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 200 பேருக்காக அனைவரையும் தண்டிப்பது ஏற்கக் கூடியதல்ல என சிவங்கை இளமதி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழக அரசில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு 1573 உதவியாளர் வேலை!

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 1573 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது.
தற்போது தஞ்சாவூர், கரூர், திருவண்ணாமலை, வேலூர், கன்னியாகுமாரி, நீலகிரி, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, விருதுநகர், திருவாரூர் போன்ற மாவடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, விழுப்புரம், சேலம், திருப்பூர் மாவடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவியாளர்
மாவட்ட வாரியான காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
* தஞ்சாவூர் - 201
கடைசி தேதி: 26.02.2018
* கரூர் - 24
கடைசி தேதி: 22.02.2018
* திருவண்ணாமலை - 57
கடைசி தேதி: 26.02.2018
* வேலூர் - 67
கடைசி தேதி: 22.02.2018
* கன்னியாகுமாரி - 48
கடைசி தேதி: 26.02.2018
* நீலகிரி - 17
கடைசி தேதி: 21.02.2018
* ராமநாதபுரம் - 18
கடைசி தேதி: 21.02.2018
* தேனி - 34
கடைசி தேதி: 22.02.2018
* திருநெல்வேலி - 62
கடைசி தேதி: 23.02.2018
* விருதுநகர் - 43
கடைசி தேதி: 26.02.2018
* திருவாரூர் - 43
கடைசி தேதி: 27.02.2018
தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கால்நடைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:01.07.2015 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் அருந்தியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர் 35க்குள்ளும், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்) 32க்குள்ளும், பொதுபிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரர்களின் சான்று சரிபார்க்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை அலுலவலகத்துக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.5க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை (Envelope) இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் இணையதளங்களில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய தஞ்சாவூர் மாவட்டம் http://www.thanjavur.nic.in/pdf/AHA.pdf, கரூர் மாவட்டம் http://karur.tn.nic.in/departments/AH_Application.pdf, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.tiruvannamalai.tn.nic.in/aha.pdf, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://vellore.nic.in/edocs/Ah-asst%20Vacancy.pdf, கன்னியாகுமார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.kanyakumari.tn.nic.in/AH%20assistant.pdf, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://nilgiris.nic.in/images/ah.pdf, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.ramnad.tn.nic.in/pdf/animal_husbandry.pdf, தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.theni.tn.nic.in/pdfs/ahasst1.pdf, திருநெல்வேலி மாவட்டத்தை தேர்ந்தவர்கள் http://www.nellai.tn.nic.in/pdf/animhustnv.pdf, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.tiruvarur.tn.nic.in/documents/animal2018.pdf, http://virudhunagar.tn.nic.in/ என்ற அதிகார்ப்பூர்வ இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் இணையதளங்களில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

குருப் நான்கு 2018 தேர்வு சொல்வது என்ன ? சிவ ஆனந்த கிருஷ்ணனின் அலசல்

1. 20.80 லட்சம் பேர் விண்ணபித்து 17 லட்சம் பேர் எழுதியது பற்றி ?
எனக்கு தெரிஞ்சு அதிக மக்கள் தொகை கொண்ட உத்திர பிரதேசம்ல கூட இப்படி நடந்தது இல்ல.. காரணம் இளைஞர்கள் படிப்பறிவு விகிதம் கம்மி.. அதுவே கேரளால இந்த மாறி நடக்கும்... இப்ப எல்லாம் படிக்றதுக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை.. அப்டியே படிச்சாலும் வேலை கிடைக்கிறது இல்ல.. அதற்கான தகுதிகளை இன்றைய இளைஞர்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்வதும் இல்லை. பக்கோடா விற்பதே வேலைவாய்ப்பு என்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதால் இது போன்ற போட்டித் தேர்வுகள் இத்தனை பேர் விண்ணப்பிப்பது அதிசயம் இல்லை... அதைவிட முன் எப்போதும் இல்லாததை விட அதிக விழிப்புணர்வு கூடிருக்கு போட்டி தேர்வை பற்றி .... எத்தனை பேர் எழுதினாலும் முழுமையாக முயற்சி கொண்ட முழுமையாக அர்பணித்துக் கொண்ட தேர்வு அன்று முழுமையாக திறனை வெளிபடுத்திய நபருக்கு கண்டிப்பாக வெற்றி கிடைத்தே தீரும் ....

2. இந்த தேர்வில் வட மாநில இளைஞர்கள் இங்கே எழுதியதாகவும் அதனால் பாதி வேலையே அவங்களே பறிச்சிட்டு போயிருவாங்க போலன்னு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதே ?
பொதுவா நம்ம தமிழ்நாட விட வட மாநில இளைஞர்களுக்கு கொஞ்சம் கூடுதலாவே போட்டி தேர்வு பற்றிய விழிப்புணர்வு இருக்கும்... யாரோ 5 பேரு நேரம் போகல போல.. இதுக்கு விண்ணப்பித்து எழுதி இருக்காங்க.. 5 வருஷம் உக்காந்து படிச்சவனே இங்க தள்ளாடுறான்.. இவங்க தமிழும் ஒன்னும் தெரியாம எப்படி பாஸ் பண்ண முடியும்.. ஒரு வேலை இங்கயே அவங்க குடும்பம் முன்னாடியே செட்டில் ஆயிருக்கலாம்... ஊடகம் எப்பவே இப்டித்தான் கிளப்பி விடும்... ஏய் இந்தா பாருடா தமிழ ஒழிக்க வந்துட்டாங்க ன்னு ... .. இது எப்டின்னா சீட்டு கட்டுல ஒரு சீட்டு ஜோக்கர் வந்தா எல்லாமே ஜோக்கரா மாறிரும் ன்னு சொல்ற மாறி இருக்கு .... சும்மா பீதிய கிளப்பி விடறதே இவங்க தான் ... அப்டியே அவங்க பாஸ் பண்ணாலும் தமிழ் எழுத படிக்க தெரியலன்னா பணி நீக்கம் செய்யபடுவார்கள்.. பொறுப்புள்ள ஊடகம் இந்த மாதிரி செய்திலாம் வெளியிடுவது வருத்ததற்குரியது.
3. கேள்வித் தாளில் ஓர் நகரத் தன்மை தெரிகிறதே,வாழ்வியல் குறித்த கேள்விகள் இடம்பெறவில்லை என்று ஒரு நாளிதழ் வெளியிட்டதே ?
கேள்வித்தாளில் என்னங்க நகரத் தன்மை ஊரகத் தன்மை ன்னு ... ? ஊரகத் தன்மை ன்னா ஜல்லிக்கட்டு எந்த விலங்கை கொண்டு விளையாடபடுகிறது னு கேக்கணுமா? இல்ல இந்தியா சுதந்திரம் பெற்றது எப்போது னு கேக்கணுமா ? போட்டித் தேர்வு என்பது ஒருவரை ஒருவர் முந்திக் கொள்வதற்கான தேர்வு.. இங்கே முந்துபவர் வெற்றி பெற்று வேலை பெறுகிறார்... பிந்துபவர் வாய்ப்பை இழக்கிறார்.. விழுமியங்கள் குறித்த கேள்விகள் இடம்பெற வில்லை என்ற கட்டுரையாளரின் ஆதங்கம் நியாயமாகவே இருந்தாலும் இதைதான் கேட்க வேண்டும் இதைத் தான் கேட்க கூடாது என்று பணியாளர் தேர்வாணையத்திற்கு ஒவ்வொருவரும் ஒரு ஆலோசனை வழங்கினால் கேள்விகள் எல்லா பாடத்தில் இருந்து சரி சமமாக இடம் பெற வாய்ப்பே இல்லை... மேலும் ஆணையம் ஒரு பாடத் திட்டத்தை மையமாக கொண்டு வினாத்தாள் வடிவமைக்குமே தவிர எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கேட்பதில்லை.. நடப்பு நிகழ்வுகள் பகுதி கேள்விகள் என்பது நாம் அன்றாடம் செய்தித்தாள் மற்றும் செய்திகளில் இருந்து இடம்பெறுவது.. இதில் ஒன்றும் வியப்பான வினாக்கள் கேட்கவில்லை... சாமானிய மனிதனுக்கு இதுவியப்பை தரலாம் .. ஆனால் முழுமையாக தயார் ஆகும் ஒரு தேர்வர் இதை எல்லாம் படித்தால் தான் தேர்வு பெற முடியும்... தகவல் நிறைந்த கேள்விகள் தான் எல்லா போட்டித் தேர்வுகளிலும் கேட்கப்படுகின்றன.. இங்கே விழுமியங்கள்,வாழ்வியல் பாடங்களை கேள்விகளாக வைக்க வேண்டும் என்றால் உயர் பதவிகளுக்கு உள்ள தேர்வான குருப் 1 தேர்விற்கு அது பொருந்தும்.. மற்றபடி குருப் நான்கு தேர்விற்கு அதை படிக்கும் அளவுக்கு யாருக்கும் வாய்ப்பும் இல்லை..அப்படிப்பட்ட கல்வி முறையும் இங்கே கற்பிக்கப்படவில்லை.... எனவே வயிற்றுபிழைப்பா வாழ்வியலா என்று தேர்வரிடம் கேட்டால் இன்றைய சூழ்நிலையில் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் கூற வேண்டுமா என்ன ? எனவே ஆணையத்தின் கேள்வித்தாள் தரத்தில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு புலப்படவில்லை
4. கேள்வித் தாளில் பிழை இருக்கிறதே ?
பிழையை தவிர்ப்பது தான் முக்கிய கூறாக இருந்திருக்க வேண்டும்... அனால் எப்படியும் எல்லா தேர்விலும் பிழையுள்ள வினாக்கள் தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது.. அது டைப் பன்னவரின் வேலையா கூட இருக்கலாம் ? இல்ல அச்சின் பிழையா இருக்கலாம்.. இல்ல எடுக்கும்போதே பிழையோடு இருந்திருக்கலாம்.. அதற்கு தேர்வாணையம் கண்டிப்பாக மதிப்பெண் வழங்கும்.. இந்த பிழையுள்ள கேள்விகளால் தேர்வாணையத்தின் தரமே போச்சு ன்னு சிலர் எழுதறப்ப தான் சிரிப்பு வருது... நீங்களே 200 கேள்விகள் எடுத்து பாருங்க.. ஒட்டு மொத்தமா வரும்போது ஒரு சில கேள்விகளில் நம்மளே தப்பு விட்டு இருப்போம்.. ஆணையம் இதை கொஞ்சம் கவனித்து இருக்கலாம் என்பதில் மாற்று கருத்து இல்லை
5. இறுதியாக இந்த தேர்வை பற்றி ?
ஒவ்வொரு வருஷமும் புது வண்டி மார்கெட்ல வந்துட்டே இருக்கு.. நீங்க ஆரம்பிக்கும்போது உங்க திறன் ஒரு டி வி எஸ் 50 அளவுக்கு இருந்து இருக்கலாம்... இன்னைக்கு பல்சர் ,KTM ன்னுகூடுதல் திறன் கொண்ட அதிக புதுபிக்கபட்ட வாகனங்கள் வந்தாகி விட்டது.. நீங்க அதே TVS50 வச்சிக்கிட்டு அடுத்த தேர்வையும் எதிர் கொண்டா அடுத்த வருஷம் குள்ள வேற ஒரு கூடுதல் திறன் கொண்ட ஒரு புது வண்டி முந்தி போயிட்டேஇருக்கும்.. ஆமா இது ஒரு ரேஸ்..ரேஸ் க்கு எவ்ளோ பிரயத்தனம் வேணும்.. வண்டிய எப்படி பராமரிக்கணும் ? எப்படி ஓட்டனும் ? கூட வரவங்களாம் என்ன மாதிரி வண்டி வச்சி ஓட்டறாங்கன்னு ளாம் பாக்கணும்.. அதனால அடுத்த பந்தயத்தில் வெற்றி பெற வேண்டுமெனில் உங்கள் நீங்களே திறன் கூட்டிய ஒரு நபரா மாறி தயாரா இருங்க... திருக்குற திருக்குல மத்தவங்க எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு முன்னாடி போய் நிக்கணும்...
அன்புடன்
வெ.சிவ ஆனந்த கிருஷ்ணன்
ஒலிபரப்பு பொறுப்பாளர்
அகில இந்திய வானொலி

9/2/18

அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் 20 பேர் அண்ணா பல்கலைக்கு மாற்றம்

அண்ணாமலை பல்கலையில் உபரி இடங்களில் பணியாற்றிய, 20 ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கு, அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அண்ணாமலை பல்கலையில், தற்போதுள்ள பணி தேவைகளை விட, 3,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உட்பட, 10 ஆயிரம் பேர் உபரியாக இருப்பதாக, தமிழக அரசு கணக்கெடுத்துள்ளது.
பல்வேறு பிரிவு : இவர்களுக்கு, பல கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டியுள்ளதால், ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் வரை, கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை மிக மோசமாக உள்ளதால், அண்ணாமலை பல்கலையின் நஷ்டத்தை சரிக்கட்ட, தணிக்கை ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அண்ணாமலை பல்கலையில், உபரியாக உள்ளவர்களை, பல்வேறு அரசு பல்கலை மற்றும் கல்லுாரி களுக்கு மாற்றும் நடவடிக்கையில், தமிழக அரசு, தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாமலை பல்கலையில் பணியாற்றும், 20 ஊழியர்கள் நேற்று, அண்ணா பல்கலைக்கு அதிரடியாக இடம் மாற்றப்பட்டு, சென்னை அலுவலகத்தில், பல்வேறு பிரிவுகளில் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களால், அண்ணா பல்கலை உட்பட உயர்கல்வித் துறையின் பணியாளர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
முக்கிய முடிவு : இதுகுறித்து, அண்ணா பல்கலை ஊழியர் ஒருவர் கூறியதாவது:அண்ணா பல்கலையில், 100க்கும் மேற்பட்டோர், தற்காலிக பணியாளர்களாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், மற்ற பல்கலைகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்து, அண்ணா பல்கலைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து, சங்கங்கள் கூடி, முக்கிய முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்

விரைவில் டிஜிட்டல் சான்றிதழ்கள்!!

உயர்கல்வி நிறுவனங்களில் முதல் முறையாக, டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை மாணவர்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சோதனை முயற்சியாக 2019ம் கல்வியாண்டு முதல் இத்தகைய சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மும்பை ஐஐடி., டில்லி பல்கலை., கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்பட உள்ளது. 
நிதி ஆயோக்கின் கண்காணிப்பில் பேரில் இந்த சோதனை பணிகள் நடத்தப்பட உள்ளது. இத்தகைய டிஜிட்டல் சான்றிதழ்கள் உறுதித்தன்மை வாய்ந்தாகவும், இந்தியாவை இணைக்கும் சங்கிலியாகவும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. சோதனை செயல்பாடு வெற்றி பெற்றால், நாடு முழுவதும் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே இமெயில்கள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
கல்வித்துறை ஏற்கனவே டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுவதால், அதில் இம்முறை அமல்படுத்துவது சிக்கலாக இருக்காது. கல்வி துறையை தொடர்ந்து நில பட்டாக்கள் தொடர்பான ஆவணங்களும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பல மாநிலங்கள் இன்னும் டிஜிட்டல் முறைக்கு மாறாமல் இருப்பதால் , இதனை நடைமுறைபடுத்த பல காலம் ஆகும் என்றே கூறப்படுகிறது.

2016-17 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்குதல்

DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2016-17 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்குதல் ஆகியவை 12.02.18 திங்கள் அன்று சென்னையில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்குவது குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

சென்னையில் சி.இ.ஓ.,க்கள் கூட்டம்

பொதுத் தேர்வுகளை தில்லுமுல்லு இல்லாமல் நடத்துவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க் களுக்கு, இன்று வழிகாட்டுதல் கூட்டம், சென்னையில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுத் தேர்வுகளை சுமுகமாக நடத்தி முடிக்க, தேர்வுத் துறை சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, இன்று காலை, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், வழிகாட்டுதல் கூட்டம் நடக்கிறது. இதில், பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், முதன்மை செயலர், பிரதீப் யாதவ், இயக்குனர்கள், இளங்கோவன், வசுந்தராதேவி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்கின்றனர்.

வருங்கால வைப்பு நிதி கையாடல் : தொடக்கக்கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்'

ஓசூர்: சூளகிரி ஒன்றியத்தில் பணியாற்றிய போது, வருங்கால வைப்பு நிதியில் கையாடல் செய்ததாக, ஓசூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கணக்கு சரிபார்ப்புஓசூர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர், பிரேம் ஆனந்த், 58. இவர், சூளகிரி ஒன்றியத்தில், மூன்று ஆண்டுகள் பணியாற்றிய போது, ஆசிரியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியை கையாடல் செய்ததாக புகார் வந்தது.
இதையடுத்து, சூளகிரி உதவி தொடக்கக்கல்வி அலுவலராக உள்ள சுதா, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நடராஜனுக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் முன்னிலையில் கணக்குகளை சரிபார்த்தனர். ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த, 29 லட்சம் ரூபாயை போலி ஆவணங்கள் தயாரித்து, சூளகிரி உதவி தொடக்கக் கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் பாலமுரளி என்பவரது வங்கி கணக்கில் செலுத்தியிருப்பதும் தெரிந்தது.
பணி ஓய்வுஇது தொடர்பான விரிவான அறிக்கை, சென்னை தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்புசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஓசூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பிரேம் ஆனந்த் மற்றும் இளநிலை உதவியாளர் பாலமுரளி, நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரேம் ஆனந்த், வரும், ஜூன் மாதம் பணி ஓய்வு பெற இருந்தார்.

வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு

வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இவற்றின் பலனைப் பெறுவதற்கு ஆதார் எண்களை இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது. முறைகேடுகளை தடுப்பதற்காக இப்படி செய்யப்படுவதாக அரசு சார்பில் கூறப்படுகிறது. 
வங்கிக்கணக்கு, பான் கார்டு, இன்சூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல் பண்ட், தபால் துறை திட்டங்கள், அலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு அடையாள ஆவணங்களுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் போலி ஓட்டுநர் உரிமம் பிரச்னையை தீர்க்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு பணிகள் வழங்க தடை தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கை

தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களை தேர்வு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று தேர்வுத்துறை வாரியம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

பிளஸ்–2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து பிளஸ்–1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


இந்த நிலையில் கடந்த பொதுத்தேர்வுகளில் நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்பட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது தேர்வுத்துறை அது போன்ற பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து அந்த பள்ளிகளின் ஆசிரியர்களை தேர்வு பணிகளில் ஈடுபடுத்த கூடாது என்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றனர்.

தேர்வுத்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘கடந்த காலங்களில் பொதுத்தேர்வில் முறைகேடு செய்த தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தேர்வு பணிகளோ, விடைத்தாள் திருத்தும் பணிகளோ கொடுக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், தேர்வு பணிகளில் எவ்வளவு ஆசிரியர்கள் ஈடுபட போகிறார்கள் என்பது குறித்து உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘இன்னும் பள்ளிக்கல்வி துறையில் இருந்து எத்தனை மாணவர்கள் தேர்வு எழுத இருக்கிறார்கள் என்ற முழுவிவரம் கிடைக்கப்பெறவில்லை. அது வந்ததும், அந்த எண்ணிக்கையை, 20 ஆல் வகுத்தால்(ஒரு அறைக்கு 20 மாணவர்கள் என்பதை வைத்து) எவ்வளவு ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுவார்கள் என்பது தெரியும்’ என்றார்.

குறைந்த மதிப்பெண் பெறுவோருக்கு மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்க ரேங்க் பட்டியல் வெளியிடாமல் புதிய முறையில் கடந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மேலும் ஒரு புதிய முறையை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிக்க இருக்கிறது.

அதாவது, தேர்வு முடிவு வெளியாகும் முதல் நாள் அன்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளின் மதிப்பெண்களின் பட்டியலும் அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் அப்படி கிடையாது. மாறாக தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் மதிப்பெண்களை ஆன்–லைனில் பார்த்து தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

இதற்கிடையில் தேர்வு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற இருக்கிறது. இதில் தேர்வுத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் பல எடுக்கப்பட இருக்கின்றன.