யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/2/18

கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி!!!

வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால்,
அதனடிப்படையில்

பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், ஏழு ஆண்டுகளாக அமலில் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 13 ஆண்டுகளாக, ஒரே பாடத்திட்டத்தில் தான் பாடம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சியை உள்ளடக்கிய, புதிய பாடத்திட்டம் கொண்டு வர, கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.அதன்படி, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, செயலர் உதயசந்திரன் தலைமையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாக உள்ளது. புதிய பாடத்திட்ட இறுதி அறிக்கைக்கு, முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், பாட புத்தகம் அச்சிடும் பணியை துவங்க, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கிடையில், புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க, ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே, கல்லுாரி பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும், என்.ஜி.ஓ,,க்கள் வழியாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.அதற்காக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களை குறைத்து, ஏப்ரலில் புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக, ஒவ்வொரு பாடத்திலும், 10 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்து, பயிற்சி தரப்பட உள்ளது.

அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது – உயர்நீதிமன்றத்தில் TRB விளக்கம்

அரசுபோட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

போட்டித் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான வழக்கில் தவறான முறையில் மதிப்பெண்களை பெறுபவர்கள் தகுதியுடையவர்களின் இடங்களை பறித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. போட்டித்தேர்வுகளை முறைப்படுத்தி முறைகேடுகளை தடுக்கக் கோரப்பட்டிருந்தது.

தொடர்புடையவர்கள் மீது விசாரணைக்குழு அமைக்கவோ, விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றவோ கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என டி.ஆர்.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டி.ஆர்.பி. அலுவலகத்திற்குள் நுழைவது பயோமெட்ரிக் முறையில் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி. பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மார்ச் 9-க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்

வேலைவாய்ப்பு: மின்சார வாரியத்தில் பணி!

                                         

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் நிரப்பப்படவுள்ள உதவி பொறியாளர்
பணியிடங்களுக்கான அறிவிப்பை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 325

பணியின் தன்மை: உதவி பொறியாளர்

சம்பளம்: மாதம் ரூ.10,100 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100

தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கடைசி தேதி: 28.02.2018

மேலும் விவரங்களுக்கு https://www.tangedco.gov.in/linkpdf/AE%20NOTIFICATION%20.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

90,000 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு-உலகில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

பள்ளிகளில் யோகா பயிற்சி வகுப்பு பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு!!!(பத்திரிகை செய்தி)

மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு!!!

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்களின் இன்று முதல் தொடர்
வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.*

இணையதளம் வாயிலாக வாக்காளர் பெயர் சேர்ப்பு!!!

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம்... செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள்..

மருத்துவம் படிக்க வேண்டும்; பொறியியல் படிக்க வேண்டும் என்று 
ஆசைப்படும் மாணவர்கள், சென்டம் ஸ்கோருடன் தாண்டவேண்டிய முதல் படி, பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு.

1. ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு சாய்ஸ் கிடையாது என்பதால், எல்லாப் பாடங்களின் புக் பேக் ஒரு மதிப்பெண் கேள்விகளுடன், பாடங்களின் உள்ளே இருக்கும் ஒன் வேர்டுகளையும் படியுங்கள்.

2. இரண்டு மதிப்பெண் கேள்விகள் 32 கொடுத்து, இருபதுக்கு மட்டும்தான் பதில் கேட்பார்கள். ஸோ, தெரியாத கேள்விகளை ஸ்கிப் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

3. 5 மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை, ஜோடி ஜோடியாக, அதாவது 2 மற்றும் 3-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும், 4 மற்றும் 7-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும், 10 மற்றும் 13-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும், 15 மற்றும் 17-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும் கேட்கப்படும். அதனால், 2, 4, 10, 15 ஆகிய பாடங்களிலிருந்தோ அல்லது 3, 7, 13, 17 ஆகிய பாடங்களிலிருந்தோ ஏதேனும் நான்குப் பாடங்களின் புக் பேக் கேள்விகளோடு, பாடங்களுக்குள்ளே இருக்கும் 5 மதிப்பெண் கேள்விகளையும் நன்குப் படியுங்க.
4. கணக்குகள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை எழுதும்போது, அதற்கான அலகு போட மறந்துவிடாதீர்கள். மறந்தால், மதிப்பெண் குறைந்துவிடும்.

5. சரியா, தவறா? தவறாக இருந்தால் திருத்தி எழுதுக, அல்லது காரணம் கூறு என்று கேட்கப்படுகிற வினாக்களுக்கு, விடை எழுதும்போது சரி/ தவறு என்று குறிப்பிட்டுவிட்டே, கேள்விக்கான பதிலை எழுதவும்.

6. பெரிய கேள்விகளில், உப கேள்விகளாக அ அல்லது ஆ, i அல்லது ii என்று கேட்டிருந்தால், கேள்விகளுக்கான நம்பரை போட்டுவிட்டு, பதில் எழுதுங்கள். கேள்விக்கான நம்பரை போடாமல் இருப்பதோ, அல்லது தவறாகப் போடுவதோ உங்கள் மதிப்பெண் குறைய காரணமாகிவிடும்.

7. பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதல்முறையாக பொதுத் தேர்வு எழுதுவதால், இன்னொரு தவறையும் செய்து, நேரத்தையும் மதிப்பெண்ணையும் வீணடிக்கிறார்கள். அதாவது, கேள்வி 'அ' அல்லது 'ஆ', 'இ' அல்லது 'ஈ' என எழுத வேண்டும் என்கிற பகுதியில் அவர்களுக்கு 'அ' மற்றும் 'ஆ' தெரிந்திருக்கும். 'இ' மற்றும் 'ஈ' தெரிந்திருக்காது. உடனே, மாணவர்கள் 'அ' மற்றும் 'ஆ'வை எழுதிவிடுகிறார்கள். இதில், ஒரு கேள்விக்கு மட்டும்தான் மதிப்பெண் கிடைக்கும்.

8. ஒரு படத்தை வரையச்சொல்லி, அதன் பாகங்கள் இரண்டைக் குறி என்று கேட்டால், மூன்று, நான்கு பாகங்கள்கூட குறிக்கலாம் தவறில்லை. அதேபோல, ஒரு தனிமத்தின் பயன்கள் இரண்டினைக் கூறு என்கிற கேள்விக்கும் மூன்று, நான்கு பயன்களைக் கூறலாம்.

9. ஒரு மதிப்பெண் கேள்விகளில் வரும் 'பொருத்துக' பகுதிக்கு, வெறுமனே பதிலை மட்டும் எழுதாமல், இரு பக்கத்தையும் சேர்த்தே எழுதுங்கள்.

10. பாடங்களின் உள்ளே வருகிற அறிந்துகொள்வோம், செயல், அறிஞர்களின் குறிப்புகள், சிந்திக்க படிக்க பின்னர் அறிக போன்ற பகுதிகளைக் கட்டாயம் படியுங்கள்.

11. எல்லாப் பாடங்களிலும் உள்ள கணக்குகள், அட்டவணைகள், வேறுபாடுகள், பயன்கள், சிறப்பியல்புகள். விதிகள் மற்றும் வகைகளை நன்றாகப் படித்துவிடுங்கள், சிறு வினாக்களில் ஆரம்பித்து, பெருவினாக்கள் வரை இவை உதவியாக இருக்கும்.


சி.பி.எஸ்.சி.க்கான டிப்ஸ்...

1. அறிவியல் கேள்விகளை பொறுத்தவரை மேம்போக்காக படிக்காதீர்கள் மாணவர்களே... ஒரு மார்க் கேள்விகளிலும் லேசாக டிவிஸ்ட் வைத்துதான் கேள்வித்தாளை செட் செய்திருப்பார்கள்.  ஸோ, முதல் 15 நிமிடங்கள் கேள்விகளை கவனமாகப் படியுங்கள்.

2. வேதியியல் ஈக்குவேஷன்களில் எதையும் மிஸ் பண்ணாதீர்கள்.

3. இயற்பியல் பாடத்தில் டயகிராம் வரையும்போது நீட்டாக வரையுங்கள்.

4. உயிரியல் பாடத்தின் டயகிராம்களை வீட்டில் வரைந்து பிராக்டிஸ் செய்திருப்பதே நல்லது. திடீரென்று எக்ஸாம் ஹாலில் ஒரு படம் வரைய வேண்டுமென்றால், பதட்டமாகி விடுவீர்கள்.

5. முந்தைய வருட பப்ளிக் எக்ஸாம் கேள்வித்தாள்களை கட்டாயம் ரிவிஷன் செய்யுங்கள். அதிலும் திரும்பத்திரும்ப கேட்கப்படுகிற கேள்விகளை படிக்கத் தவறாதீர்கள்.

6. இயற்பியல், வேதியியல், உயிரியல் என அனைத்துப் பாடங்களிலும் உள்ள டெஃபனிஷன்களை மறக்காமல் படித்துவிடுங்கள்.

அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது – உயர்நீதிமன்றத்தில் TRB விளக்கம்

அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என்று உயர்நீதிமன்ற
மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

▪போட்டித் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான வழக்கில் தவறான முறையில் மதிப்பெண்களை பெறுபவர்கள் தகுதியுடையவர்களின் இடங்களை பறித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. போட்டித்தேர்வுகளை முறைப்படுத்தி முறைகேடுகளை தடுக்கக் கோரப்பட்டிருந்தது.

▪தொடர்புடையவர்கள் மீது விசாரணைக்குழு அமைக்கவோ, விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றவோ கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என டி.ஆர்.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

▪டி.ஆர்.பி. அலுவலகத்திற்குள் நுழைவது பயோமெட்ரிக் முறையில் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி. பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மார்ச் 9-க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்

துனிச்சலான மாணவர் வழக்கு கல்லூரிக்கு 55 ஆயிரம் அபராதம்!!!

ABACUS பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை விடுவிக்கும் பொருட்டு அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் சுற்றறிக்கையும் ஆசிரியர்கள் பட்டியலும்!!!



தேசிய கீதம்: மாணவிகளுக்குத் தண்டனை!

                                                    
ராஜஸ்தானில் தேசிய கீதத்தை மெதுவாக பாடியதாக ஒன்பதாம் வகுப்பு 
மாணவிகளைத் தலைமை ஆசிரியர் தோப்புக்கரணம் போட வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள சபல்பூரா கிராமத்தில் ராஜ்கியா ஆதர்ஷ் மத்யமிக் வித்யாலயா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று காலை (பிப்ரவரி 15) தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் தேசிய கீதத்தை மெதுவாகப் பாடியுள்ளனர். அப்போது அதைப் பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களை ஒரு மணி நேரம் தோப்புக்கரணம் பொடவைத்துள்ளார். பின்னர் அவர்களை அடித்துள்ளார். இந்தத் தண்டனையால் மாணவிகளுக்குக் கால்களில் வீக்கம் ஏற்பட்டது. சில மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாணவிகளில் பெற்றோர் பள்ளியின் முன்பு திரண்டு பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவிகளின் பெற்றோர்களும், மாணவிகளும் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் விடுதிகளில் உள்ள மாணவர்கள் கட்டாயமாக தேசிய கீதம் பாடவேண்டும் என ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பண மதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8ஆம் தேதியை கறுப்பு தினமாக கடைப்பிடிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தபோது, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 50,000 பேர் ஒன்று கூடி தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஆர்பி அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறை!

                                        

அரசு போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக உயர் நீதிமன்ற 
மதுரைக் கிளை தாமாக எடுத்துக்கொண்ட வழக்கில், ஆசிரியர் தேர்வு வாரியப் பணிகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

“போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளினால் தவறான முறையில் மதிப்பெண்களைப் பெறுபவர்கள், தகுதியுடையவர்களின் பணியைப் பறித்துவிடுகின்றனர். அதனால், போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனுடன் தொடர்புடையவர்கள் மீது விசாரணைக் குழு அமைக்கவோ அல்லது விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றவோ செய்ய வேண்டும்” என்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையில் இன்று (பிப்ரவரி 16) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், “அரசு போட்டித் தேர்வு நடைமுறைகள் தனியாருக்கு வழங்கப்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறையைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

தற்போது கடைபிடிக்கப்படும் தேர்வு மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து டி.என்.பி.எஸ்.சி மார்ச் 9ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ENTRANCE EXAMINATION -2018

பட்டதாரி ஆசிரியர்களை +2 பொதுத்தேர்வில் பணியமர்த்தக் கூடாது!!!

16/2/18

INCOME TAX FILE











சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி பட்டங்கள் தமிழக கல்வித்துறையில் ஊக்க ஊதிய உயர்விற்கு தகுதியற்றது . முதல்வர் தனிப்பிரிவில் பதில் .

15/2/18

நீட்' தேர்வுக்கு இலவச, 'ஆன்லைன்' வசதி : அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு!!!

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு, அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக,
அரசு சார்பில், இலவச, 'ஆன்லைன்' வசதி செய்து தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் அறிவியல் பிரிவு மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, மத்திய அரசின், நீட் நுழைவு தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

கட்சிகளால் குழப்பம் : நடப்பாண்டு, 2017 - 18 வரை, நீட் தேர்வு குறித்து, அரசியல் கட்சிகள், மாணவர்களை குழப்பி விட்டதால், பெரும்பாலான மாணவர்கள், நீட் தேர்வை எழுத முடியவில்லை. இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு கட்டாயம் என்பது, எந்த குழப்பமும் இன்றி, துவக்கத்திலேயே உறுதியாகி விட்டது. அதனால், தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், நீட் நுழைவு தேர்வு எழுத உள்ளனர். அவற்றில், அரசு பள்ளிகளில் படிக்கும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, அரசின் சார்பில், நீட் நுழைவு தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.நீட் தேர்வு, மே, 6ல் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு, கடந்த, 9ல் துவங்கியது. தனியார் பள்ளிகளும், பயிற்சி மையங்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கும், விண்ணப்ப பதிவுகளை செய்து தருகின்றன. ஆனால், நீட் தேர்வு குறித்த அறிக்கை மற்றும் தகவல் கையேடு ஆங்கிலத்தில் உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களால், அவற்றை முழுவதுமாக படித்து, வழிகாட்டுதல் பெற முடியாத நிலை உள்ளது.
கிராமப்புற மாணவர்கள் : சென்னை போன்ற மாநகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரையுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், நீட் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதிகள் இன்றி தவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு தலையிட்டு, பள்ளிக்கல்வித் துறை அல்லது சுகாதாரத் துறை சார்பில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இலவச ஆன்லைன் வசதி செய்து தரவேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.

குரூப் 4 தேர்வு : விண்ணப்பித்த பிஎச்டி பட்டதாரிகள்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 11)நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த
சுமார் 20 லட்சம் பேரில் 992 பேர் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

தமிழக அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 9,351 பணியிடங்களை நிரப்ப பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வுக்கு சுமார் 20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியை மட்டுமே தகுதியாகக் கொண்ட குரூப் 4தேர்வுக்கு பிஎச்டி பட்டதாரிகள் 992 பேர் விண்ணப்பித்திருந்ததாகவும், எம்ஃபில். பட்டதாரிகள் 23 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதாகவும் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குரூப் 4 தேர்வில் முதன்முறையாகத் தேர்வர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் பெயர், படம், பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட தனித்துவமான விடைத்தாள்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயத் தேர்ச்சி முறையை மறுஆய்வு செய்ய வேண்டும்: நாடாளுமன்றக் குழு பரிந்துரை!!!

பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்கும்
நடைமுறையை மறுஆய்வு செய்யுமாறு பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தி மாணவர்களைத் திறனை மதிப்பிட்டால்தான் அவர்களது கல்வியறிவு மேம்படும் என்றும் அக்குழு கூறியுள்ளது.
ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைவருக்கும் கல்வி சட்டத்தின் கீழ் கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான சட்டத் திருத்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலின்படி, அந்த மசோதா மனிதவள மேம்பாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது
. பாஜக எம்.பி. சத்தியநாராயணன் ஜாட்டியா தலைமையிலான அக்குழு கடந்த சில மாதங்களை அதனை ஆய்வு செய்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தனது ஆய்வறிக்கையை அக்குழு சமர்ப்பித்துள்ளது.
 அதுதொடர்பான விவரங்கள் மாநிலங்களவைச் செயலர் அலுவலகத்தில் இருந்து திங்கள்கிழமை வெளியாகியுள்ளன
.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சியளிக்கும் நடைமுறை தொடர வேண்டும் என்று 6 மாநிலங்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளன.
 மீதமுள்ள மாநிலங்கள் அனைத்தும் அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
அதன் அடிப்படையில் பார்க்கும்போது கட்டாயத் தேர்ச்சி முறையை மாற்றியமைப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஆண்டுதோறும் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தி அவர்களது திறனை மதிப்பிடுவது அவசியம்.
 அதில் தோல்வியடைபவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கலாம். அதன் மூலம் அவர்கள் கல்வியறிவு செழுமையடையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது