யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/10/16

ரிலையன்ஸ் ஜியோ: இலவச 4ஜி சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிக்க முடிவு.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ரிலையன்ஸ் அறிமுகப்படுத்திய ஜியோ சிம், தொலைத்தொடர்பு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் ஏராளமான சலுகைகளை வழங்கி ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஜியோ சிம்மால்மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலக்கமடைந்தன. 
அத்துடன், ஜியோவின் இந்த அறிவிப்புகளை எதிர்த்து மேல் முறையீடு செய்தன. கடந்த வாரம் இதனை விசாரித்த டிராய், ஜியோவின் இலவச வாய்ஸ் கால் சலுகை டிசம்பர் 3 வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவித்தது.

இந்நிலையில் ஜியோ தன்னுடைய பயனாளர்களை மேலும் அதிகரிக்கும் வகையில் இலவச 4ஜி சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலவச சேவைக்கான கால அவகாசம் மூன்று மாதங்கள் மட்டுமே என டிராய் அறிவித்துள்ளதால் வெல்கம் ஆபர் என பெயரை மாற்றி இந்த சேவையை தொடர ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபி ஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகை: அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் ஊதியம் வரும் 28ம் தேதியே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு அரசாரணையை வெளியிட்டுள்ளது.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அக்டோபர் மாத ஊதியம் 28ம் தேதியே வழங்கப்பட உள்ளது.

அக்டோபர் மாத சம்பளம் 28.10.2016 அன்று கிடைக்காததற்கு காரணம்?

31.10.2016. அன்று சம்பளம் வழங்குவதற்கு Reserve Bank of India வங்கிகளுக்கு Cutt of date நிர்ணயித்த நாள் 26.10.2016. காலை 10 மணி.அதாவது இன்று மாலை ECS கணக்கினை TREASURY முடித்தால் மட்டுமே 26.10.2016 காலை யில் BATCH அனுப்ப இயலும்.
ஆனால் அரசாணை 25.10.2016 மதியத்திற்கு மேல் தான் கிடைக்கப்பெற்றது.

நேற்றே GO வந்திருந்தால் இது சாத்தியம்.

25/10/16

பத்திரப்பதிவு சட்ட திருத்தத்தை அமலாக்க அரசாணை:அங்கீகாரமில்லா மனைகளுக்கு அக்.20 முதல் தடை

அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனையை தடை செய்யும் வகையில், பத்திரப்பதிவு சட்டத்தில், எட்டு ஆண்டுகளுக்கு முன் சேர்க்கப்பட்ட, '22 அ' பிரிவை அமல்படுத்தும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.

விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை, தடுக்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனையை பதிவு செய்ய, செப்., 9ல், தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு, அக்., 21ல் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அங்கீகாரம் இல்லாத மனைகள் விற்பனையை தடை செய்யும் வகையில், பத்திரப்பதிவு சட்டத்தில், '22 அ' என்ற, புதிய பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது. புதிய சட்ட திருத்தத்தை, அக்., 20 முதல் அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும், அரசாணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. தற்போது, அதன் நகல் வெளியாகி உள்ளது. அதில், 'பத்திரப்பதிவுக்கான, 1908ம் ஆண்டு சட்டத்தில், '22 அ' பிரிவைச் சேர்ப்பதற்கான சட்ட திருத்தத்தை, 2016 அக்., 20 முதல் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசிதழ் அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை பதிவை தடை செய்யும், இந்த சட்ட திருத்தம், 2008ல் நிறைவேற்றப்பட்டது. எட்டு ஆண்டுகளாக, அமலாக்கம் தேதி குறித்து, அரசாணை பிறப்பிக்கவில்லை. தற்போது மனை விற்பனை பதிவில், நீதிமன்றம் தடை விதித்ததால், வேறு வழியின்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



குழப்பம் நீடிக்கும்:இது குறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசாணைப்படி, 2016 அக்., 20க்கு பின் அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்ய முடியாது. அதற்கு முன், வீட்டு மனையாக பதிவு செய்யப்பட்ட மனைகளின் அடுத்தடுத்த விற்பனைக்கு தடை இருக்காது.இந்த அரசாணையை, நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதா; எப்படி அமல்படுத்துவது என, பதிவுத்துறை தலைவர் தான் நிர்வாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; அது வரை குழப்பம் நீடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

TRB Exam:'ஹால் டிக்கெட்' பிரச்னை;வழக்கு தொடர முடிவு.

அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில், பலருக்கு, 'ஹால் டிக்கெட்' கிடைக்காததால், வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர், காலி பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், நேற்று முன் தினம் எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு, 48 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்; 45 ஆயிரம் பேர் தகுதி பெற்றனர்.

நேற்று முன் தினம் நடைபெற்ற தேர்வில், 16 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை. பல விண்ணப்பதாரர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து, ஹால் டிக்கெட் அனுப்பாததே காரணம் என, தெரிய வந்துள்ளது. ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

ஆறு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்.

மடிக்கணினி எல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும்அரசு பாராட்டுக்குரியதுதான். ஆனால்,மாணவர்களுக்குக் கணினி கொடுத்த அரசு கணினிவழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது ஏன்?இதனால், கணினிவழிகல்வி போதிக்கும் பல பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்க்கைகேள்விக்குறியாகி இருக்கிறது என்று வேதனையுடன் கூறுகிறார்கள் கணினி வழிக்கல்வி ஆசிரியர்கள்.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளி மாணவர்களும் உயரவேண்டும் என்று சமச்சீர் கல்வி முறையை 2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது அரசு. அதில்,ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் புத்தகங்கள்கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு வருடம் மட்டும் புத்தகங்கள்கொடுக்கப்பட்டு, அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால், கடந்த ஆறு வருடங்களாககணினி அறிவியலில் பி.எட். படித்தஆசிரியர்களை பணிநியமனம் செய்யவில்லை.கடந்த 15ஆண்டுகளாக கணினி அறிவியல் பட்டதாரிகள் பலர் வேலையில்லாமல் தவிக்கின்றனர்.இந்தப் பட்டதாரிகள் ஒருங்கிணைந்து 2014-ஆம் ஆண்டு கணினி அறிவியல்வேலையில்லாபட்டதாரிகள் சங்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.

 இச்சங்கத்தின்மாநிலப் பொதுச்செயலாளர் குமரேசன் கூறுகையில், 1992-ஆம் ஆண்டுல இருந்தேகம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட். இருக்கு. நான் படிச்சது பி.எட். ஆனா,டெக்ஸ்டைல்ல வேலை பாத்துட்டு இருக்கேன். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 39,019கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் வேலை இல்லாமஇருக்காங்க.ஒரு படிப்புனுஇருந்தா அதுக்கான வேலை வாய்ப்பு இருக்கணும். வருஷாவருஷம் ஆயிரக்கணக்கான பேர்படிச்சுட்டு வெளியே வராங்க. ஆனா,ஏற்கெனவே படிச்சு வேலைவாய்ப்பு அலுவலகத்திலபதிவு செய்திருக்கிறயாருக்குமே வேலை இல்லை. பின்ன ஏன் இந்தப்படிப்பஇன்னும்வச்சிருக்காங்கன்னு புரியல" என்று குமுறுகிறார்.கம்ப்யூட்டர் சயின்ஸ்ல பி.எட்.படிச்ச நாங்க பலவகையில நசுக்கப்பட்டவங்க. மற்ற ஆசிரியர்பயிற்சி முடித்தவர்கள்கலந்துகொள்ளும்  டெட், டிஆர்பி எக்ஸாம் போன்றவற்றில் கூட கலந்துகொள்ளஎங்களுக்கு அனுமதி கிடையாது" என்று விரக்தியுடன் பேசுகிறார்கள் கணிப்பொறிஆசிரியர்கள்.2006-ஆம் ஆண்டுக்குப் பிறகுதரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகள்எதிலும் கணிப்பொறி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.கடந்த வருடத்தில் கூட 407பள்ளிகள்தரம் உயர்த்தப்பட்டதாக எம்.எல்.ஏ பெஞ்சமின் கூறியிருக்கிறார்.ஆனால்அந்தப் பள்ளிகள் எதிலும் கணிப்பொறிவழிக் கல்வி கிடையாது.கம்யூட்டர் சயின்ஸ்டீச்சர் இல்லாமல்தான் பல பள்ளி மாணவர்கள் தானாகவே கற்றுக்கொள்கிறார்கள்.2011 இல் சமச்சீர் கல்வி கொண்டு வந்தார்கள் அதில் கணினி அறிவியல் பாடத்திட்டம்இருந்தது.ஆனால்,அந்தபுத்தகங்களும் அரசு அலுவலகங்களில் கிடப்பில்போடப்பட்டிருக்கிறது.மாணவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.பட்டதாரிஆசிரியர்களுக்கும் வேலை வழங்கவில்லை.வருடந்தோறும் மத்திய அரசு கோடி கணக்கில்நிதி ஒதுக்கி வருகிறது.வருடத்திற்க்கு 250 கோடி ரூபாய் வருகிறது.2011-இல்முதல்கட்டமாக 43கோடி ரூபாய் கொடுத்தார்கள்.ஆனால் எதையும் செயல்படுத்தாமல்வீணாக்குகிறார்கள்"என்று மாநில செயலாளர் குமரேசன் வருத்தத்துடன் பேசுகிறார்.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டமும் போராட்டமும்நடத்தியிருக்கிறோம்.ஒவ்வொரு மாவட்ட ஆட்சியிர் அலுவலகத்திலும் கருணை மனுகொடுத்திருக்கிறோம்.47முறை சென்னைக்கு வந்து மனு செய்திருக்கிறோம்.அரசு அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து எங்கள் கோரிக்கையைமுன்வைத்திருக்கிறோம்.எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தது போல் அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டதுஎன்ற பதில்தான் வருகின்றது.தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புமுதலே கணினி வழிக்கல்வி இருக்கிறது.அதைஇன்னும் மேம்படுத்த அரசும் ஊக்குவிக்கிறது.ஆனால் அரசுப் பள்ளிகளில் ப்ளஸ்ஒன்,ப்ளஸ் டூக்கு மட்டுமே அதுவும் பாதி பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாமல்படிக்கிறார்கள்" என்கிறார் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் வேல்முருகன்.****படித்தது கணினி அறிவியல் பிடிப்பது கசாப்புக் கத்தி!"2010இல் பி.எட் முடிச்சேன். அப்ப் கூட வாரத்துல ஒருநாள் மட்டன் கடையில் வேலைபாக்குறேன்.எனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு.இப்ப வரைக்கும் எவ்வளவோபோராட்டம் பண்ணிருக்கோம்.எத்தனையே இடத்துல மனு கொடுத்தும் ஒண்ணும்நட்க்கல.நாங்க நாற்தாயிரம் ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கிறோம்.அங்குபள்ளிகளில் பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் இல்லை.ஸ்கூலுக்கு ஒரு டீச்சருக்கு வேலைகிடைச்சிருந்தாலும் படிச்சவங்க பாதிபேரு வேலைக்குப் போயிருக்கலாம்என்றுஆதங்கப்படுகிறார் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள்ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் கார்த்திக்.

*ரங்கநாயகி, அந்தியூர்*

பி.எட் முடிச்சிட்டு ஒரு பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போய்ட்டிருக்கேன்சூப்பர்வைசரா இருந்தாலும் எல்லா வேலையும் பாக்காணும்.படிச்சபடிப்புக்கேத்தவேலையில்லாம,குறைஞ்ச கூலிக்கு கிடைத்த வேலையைச் செஞ்சிட்டிருக்கேன்.பொண்ணுப்பாக்க வர்றவங்க பி.எட் கம்ப்யூட்டர் சயின்ஸ்னா வேலை கிடைக்கிறதுகஷ்டம்னு சொல்லிட்டு போய்டுறாங்க

.*ஆரிஃபா, ஈரோடு*

எங்க வீட்ல அஞ்சு பொண்ணுங்க.பி.எட் முடிச்சிட்டு ஒரு கம்பெனிக்கு வேலைக்குப்போய்ட்டு இருக்கேன்.எங்கப்பாவால வேலை செய்யமுடியாது.நாங்க வேலை செஞ்சுதான்குடும்பத்தக் காப்பாத்தானும்.வேலை கிடைக்காததால கல்யாணம் தள்ளிப்போய்ட்டுஇருக்கு.

*லலிதா, கொள்ளிமலை*

அம்மாவோட கூலி வேலைக்குப் போய்டுருக்கேன்.வீட்டில இருக்கிற ஆடு மாடு அப்பாபாத்துக்கிறாங்க.இவ்ளோ தூரம் படிச்சிட்டு கூலி வேலைக்குப் போறது ரொம்ப கஷ்டமஇருக்கு.பி.எட் படிச்சிருந்த வேலை வாங்கித் தந்துடுவோம்னு சொல்லி பொண்ணு பாக்கவந்தாங்க .கம்ப்யூட்டர் சயின்ஸ்னு தெரிஞ்சதும் அதுக்கு எப்போ கிடைக்கிறதுனுரிஜெக்ட் பண்ணிட்டாங்க....

*கிருத்திகா, கோவை*

எனக்கு குடும்பத்தில பல சிக்கல்.அரசு வேலைதான் என்னை மீட்டெடுக்காணும்என்னுடைய ரெண்டு பெண் குழந்தைகளோட  எதிர்காலம் பத்தி ரெம்பக் கவலையாஇருக்கு.வாழ்க்கைய நகர்த்துறதுறதே பெரிய போராட்டம இருக்கு...****

*சாய்  ஜானு , கரூர்*

நான் ஒருகல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்கிறேன்.என்க்கு சில கேள்விகள் இருக்கு.
--->வேலைகேட்டு போராடும்போது அரசுக் கொள்கை முடிவுக்கு உட்பட்டதுன்னுசொல்றாங்க.அப்படினா அரசு கொள்கை பி.எட் முடிச்சவங்களுக்கு வேலை தரக்கூடாதுஎன்பதா?
--->அரசு வேலைக்கு எடுக்க முடியாத நிலையில் ஏன் இந்தப் படிப்ப நீக்காமவைச்சிருக்கங்கா?
--->சபீதா மேடம் மத்திய அரசு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டுத்துக்காக கொடுத்தபணத்தை ஏன் திருப்பிக் கொடுத்தார்கள்?இதுக்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறது அரசு ?என கேள்விகளை அடுக்குகிறார் சாய்ஜானு.சுமார் 40,000 வேலையில்லா பட்டதாரிகள் 27,000 பேர் பெண்கள்.இவர்களின்வாழ்க்கைக் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.தாயுள்ளம் கொண்ட தமிழக இவர்களின்மீது கருணை கண் காட்டுமா??

திரு வெ.குமரேசன்,
9626545446,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.

Article:தனியார் பள்ளிகளில் மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

நடுத்தர வயதைச் சேர்ந்த அவர் பதற்றத்தோடு காத்திருந்தார். அவருடைய உடையையும் தோரணையையும் பார்த்தாலே ஏதோ ஒரு பெருநிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரி என்பதைச் சொன்னது. பக்கத்தில் அவர் மனைவி. இருவரும் பொறுமை இல்லாமல் அரை மணிநேரம் காத்திருந்த பிறகு அவர்கள் அந்த அறைக்குள் அழைக்கப்பட்டார்கள். 
வெளியே வர 15 நிமிடங்கள் ஆயின.இது தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியரைப் பெற்றோர்கள் சந்திக்கும் காட்சி. இந்தச் சந்திப்பு எப்போது நடக்க வேண்டும் என்று முடிவுசெய்வது பள்ளி நிர்வாகம். தேர்வுக்குப் பிந்தைய சந்திப்பு என்றால் முன்கூட்டியே தகவல் கொடுப்பார்கள். புகார் அல்லது அதுபோன்ற பிரச்சினை என்றால் திடீர் அழைப்பு வரும். இப்போது வர இயலாது என்னும் பதிலைப் பள்ளி நிர்வாகங்கள் பெரும்பாலும் ஏற்பதில்லை. குழந்தையின் கல்வி அல்லது மனநிலை தொடர்பான பிரச்சினை என்பதால் பெற்றோர் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார்கள். பள்ளியின் முதல்வர் விடுக்கும் அழைப்பு கிட்டத்தட்ட நீதிமன்ற அழைப்புபோலத்தான்.பள்ளி முதல்வரைப் பெற்றோர் எதிர்த்துப் பேச முடியாது. தங்கள் தரப்பை எடுத்துச் சொல்வதாக இருந்தாலும் மிகவும் கவனமாகத்தான் பேச வேண்டும்.

நிர்வாகத்துக்கு எதிராக இவர்கள் எழுப்பும் ஒவ்வொரு குரலும் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் குழந்தை மீது திரும்புவதற்கான சாத்தியம் அதிகம். குழந்தையை நடத்தும் விதத்திலிருந்து, மதிப்பெண்,விளையாட்டு, கலை முதலான துறைகளில் கிடைக்கும் வாய்ப்புகள் எனப் பல விதங்களிலும் பாதிப்பு இருக்கலாம்.எனவே பெற்றோர் எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும்கூட கூடியவரை பள்ளி நிர்வாகத்தை எதிர்த்துப் பேச மாட்டார்கள்.தனியார் பள்ளிகளைப் பற்றிப் பேசும்போது அவற்றின் 'கட்டணக் கொள்ளை' பற்றிப் பேசப்படும் அளவுக்கு அவை தரும் கல்வியின் தரம் பற்றிப் பேசப்படுவதில்லை. பல தனியார் பள்ளிகளில் ஆண்டொறுக்குச் சராசரியாக ஒரு மாணவருக்கு 20000 முதல் 70000 வரை கட்டணம் வசூலிக்கும் நிலையில்அதுபற்றிப் பேசாமல் இருக்க முடியாது. ஆனால், கல்வித் தரம்?தனியார் பள்ளிகளின் பெருவாரியான மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்கள், பொது அறிவு, ஆங்கில மொழி அறிவு, போட்டித் தேர்வுகளிலும் நுழைவுத் தேர்வுகளிலும் செயலாற்றும் விதம், தன்னம்பிக்கையின் அளவு ஆகியவை அரசுப் பள்ளிகளில்படிப்பவர்களைவிடவும் அதிகமாக இருப்பதைப் பொதுவாகக் காணமுடிகிறது. ஆனால், இவற்றை வைத்துக்கொண்டு மட்டும் இந்தப் பள்ளிகள் தரமான கல்வியை வழங்குவதாகச் சொல்லிவிட முடியுமா?தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் ஆங்கில வழிப்பாடம் இருப்பதாலும் ஆங்கிலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தாலும் ஆங்கில அறிவு ஓரளவு நன்றாகக் கிடைத்துவிடுகிறது.

ஆனால், மற்ற பாடங்களைப் பொறுத்தவரை மாணவர்களின் குடும்ப, சமூகப் பின்புலங்களில் இருக்கும் வலுவான ஆதாரங்கள்தாம் அவர்களை நன்றாகப் படிக்கவைக்கின்றன. வீட்டிலும் தாங்கள் சார்ந்த நடுத்தர வர்க்கச் சூழலிலும் இருக்கும் நெருக்கடிகள், பள்ளியில் கொடுக்கப்படும் நெருக்கடி, அடுக்கடுக்காக வைக்கப்படும் தேர்வுகள், தேர்வுகளுக்கான பயிற்சிகள் ஆகியவற்றால் இந்தமாணவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்குகிறார்கள்.சொல்லித்தருவதன் மூலம் அதிக மதிப்பெண்கள் என்பது ஒரு சில பள்ளிகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். பெரும்பாலான பள்ளிகள் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியே மாணவர்களைப் படிக்கவைக்கின்றன. கற்பித்தல் (Teaching) என்பதைவிடப் பயிற்றுவித்தல் (coaching) என்பதுதான் இந்தப் பள்ளிகளில் அதிகம். அதாவது, மதிப்பெண் பெறும் இயந்திரங்கள் இங்கே தயாரிக்கப்படுகின்றன. இந்த மதிப்பெண்ணையே அளவீடாக பெற்றோரும் எண்ணுவதாலேயே தாங்கள் எல்லா விதத்திலும் சரி எனும் முடிவுக்கு வந்துவிடுகின்றன தனியார் பள்ளி நிர்வாகங்கள்.கணிதம், அறிவியல் முதலானவற்றில் கோட்பாடுகளைப் புரியவைக்கும் கற்பித்தல் முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை.

தனியார் பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்களிடம் அவர்கள் கல்வி பற்றி உரையாடியிருக்கிறேன். அந்த உரையாடல்களில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் படிப்பதெல்லாம் சொற்களைத்தான். கோட்பாடுகளையோ அடிப்படைகளையோ புரிந்துகொண்டு படிப்பதில்லை. கேட்டால், அதையெல்லாம் யாரும் சொல்லித்தருவதில்லை என்றே சொல்லியிருக்கிறார்கள்.ஆங்கிலத்தில்கூட, சரளமாகப் படிக்கவும் பேசவும் பயிற்றுவிக்கும் அளவுக்கு இலக்கணம் சொல்லித்தரப்படுவதில்லை. ஆங்கிலத்திலேயே புழங்குவதால் மாணவர்கள் அம்மொழியை இயல்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் தடுமாறுவதையும் இதோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.மாணவர்களில் பலர் பொது அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் முதலானவற்றைப் புரிந்துகொள்ளும் திறன் அதிகம் பெற்றிருப்பதன் காரணம் பெரும்பாலும் அவர்களுடைய இயல்பான ஆர்வமும், குடும்பச் சூழலும், சொந்த முயற்சியும்தான்.பள்ளி முதல்வரும் ஆசிரியர்களும் தங்கள் பள்ளியைப் பற்றியும் தங்களது அலாதியான அணுகுமுறைகள் பற்றியும் பேசும் பகட்டுப் பேச்சுகளே பெற்றோர் – ஆசிரியர் கூட்டங்களை ஆக்கிரமித்திருக்கும். இதையெல்லாம் கேட்கும் பெற்றோர்கள், கல்வி, குழந்தைகளை நடத்தும் விதம்என்று தங்களுக்குத் தெரிந்த எதையாவது பகிர்ந்துகொண்டாலோ, அதை வைத்துக் கேள்வி எழுப்பினாலோ, எல்லாமே தங்களுக்குத் தெரியும் என்ற ரீதியில் பதில் வரும். அதோடு, இந்தக் கேள்வியின் தாக்கம் குழந்தையின் மீது எதிரொலிக்கும்.நண்பர் ஒருவர், தன் பையன் படிக்கும் பள்ளியில், மாணவர்கள் தூக்கும் பையின் எடை பற்றி பேசியிருக்கிறார்.செய்தித்தாளில் வந்திருந்த தகவலை ஆதாரமாகக் காட்டி, இவ்வளவு எடையை ஒரு குழந்தை தூக்கக் கூடாது என்றிருக்கிறார்.

முகம் சிவந்துபோன முதல்வர், நாங்கள் அப்படித் தூக்கச் சொல்வதில்லையே என்று சொல்லி அந்த விவாதத்தை முடித்துக்கொண்டுவிட்டார். ஆனால், மறுநாள் வகுப்பில் அந்தக் குழந்தையிடம் இதுபற்றி ஆசிரியைகள் குத்தலாகப் பேசியிருக்கிறார்கள். கடும் மன உளைச்சலுக்கு ஆளான அக்குழந்தை, “நீங்க ஏன் எங்க டீச்சர்கிட்ட என் பையைப் பத்தி கேட்டீங்க?” என்று நண்பரிடம் கேட்டு அழுதிருக்கிறது. கேள்வி எழுப்பினால், அது மீண்டும் தன் குழந்தையின் தலையில்தான் வந்து விடியும் என்பதையே நம்முடைய பள்ளிகள் நமக்குச் சொல்கின்றன.மாணவர் சரியாகப் படிக்கவில்லை என்றால் பெற்றோர் அழைக்கப்பட்டுக் கிட்டத்தட்ட எச்சரிக்கப்படுகிறார்கள்.பதறிப்போகும் பெற்றோர் மேலும் பணம் செலவுசெய்து தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். போதாக்குறைக்குத் தாங்களும் சொல்லிக்கொடுக்கிறார்கள். மிகவும் புகழ்பெற்ற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் கணிதம் முதலான பாடங்களுக்குத் தனிப் பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார்கள் என்றால் இந்தப் பள்ளிகளின் கல்வித் தரத்தைப் பற்றி என்ன சொல்ல?பொதுவாக, எங்கே நாம் அதிகமாக விலை கொடுக்கிறோமோ அங்கே கேள்வி கேட்கும் உரிமை நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது.

பெரிய உணவகங்களிலும் கடைகளிலும் வாடிக்கையாளருக்கு ஒப்பீட்டளவில் அதிக மரியாதை கொடுக்கப்படுவதைப் பார்த்திருப்போம். ஆனால், கல்வி விஷயத்தில் இதற்கு நேர்மாறாக நடக்கிறது. அதிகமாகப் பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் பெற்றோர்கள் நிர்வாகத்தைக் கேள்வி கேட்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.இது அதிகாரப் போக்கு மட்டும் அல்ல; நுண்ணுணர்வற்ற தடித்தனமும்கூட. அதிகார போதை ஏறிய இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது?-

அரவிந்தன்,
தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை விரைவாக இணைக்கவும்.

ஆசிரியர்கள் நவ.4 முதல் மூன்று கட்ட போராட்டம்.

Jio Network : வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அரசாரணையை தமிழக அரசு வெளியிட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.


இதையடுத்து, அவற்றின் நிர்வாகத்தை கவனிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளின் மேயர்கள்-மாமன்ற உறுப்பினர்கள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12, 524 கிராம ஊராட்சிகளின் தலைவர்கள்- உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் (அக்டோபர் 24) முடிவடைகிறது.

இதையடுத்து, தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அரசாணையை ஊரக வளர்ச்சித் துறை பிறப்பித்துள்ளது.

அவசரச் சட்டம்: முன்னதாக, அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட இருந்தது. ஆனால், பழங்குடியினருக்கு தகுந்த இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்தது. மேலும், புதிய தேர்தல் தேதியை அறிவித்து டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பிறப்பித்தார்.

இதன்படி, புதியதாகத் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் நடைபெறும் நாள் அல்லது டிசம்பர் 31-ஆம் தேதி ஆகிய இந்த இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை தனி அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் இருப்பார்கள் என்று அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு (25.10.2016) விசாரணை!

28.10.2016 வெள்ளிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக செயல்படும்.


24/10/16

ஆறு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்

மடிக்கணினிஎல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு பாராட்டுக்குரியதுதான். ஆனால்,மாணவர்களுக்குக்கணினி கொடுத்த அரசு கணினிவழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களைநியமிக்காமல் இருப்பது
ஏன்? இதனால், கணினிவழிகல்விபோதிக்கும் பல பட்டதாரி ஆசிரியர்களின்வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது என்று வேதனையுடன் கூறுகிறார்கள்கணினி வழிக் கல்வி ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்கு நிகராகஅரசுப்பள்ளி மாணவர்களும் உயர வேண்டும் என்றுசமச்சீர் கல்வி முறையை 2011ஆம்ஆண்டு அறிமுகப்படுத்தியது அரசு. அதில்,ஒன்றாம்வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை கணினி அறிவியல் புத்தகங்கள்கொடுக்கப்பட்டிருக்கிறது. 

முதல் இரண்டு வருடம்மட்டும் புத்தகங்கள் கொடுக்கப்பட்டு, அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால், கடந்த ஆறுவருடங்களாக கணினி அறிவியலில் பி.எட். படித்தஆசிரியர்களை பணிநியமனம்செய்யவில்லை.கடந்த 15 ஆண்டுகளாக கணினி அறிவியல் பட்டதாரிகள்பலர் வேலையில்லாமல் தவிக்கின்றனர். இந்தப் பட்டதாரிகள் ஒருங்கிணைந்து2014-ஆம் ஆண்டு கணினி அறிவியல்வேலையில்லாபட்டதாரிகள் சங்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர். இச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்குமரேசன் கூறுகையில், 1992-ஆம் ஆண்டுல இருந்தேகம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட். இருக்கு. நான் படிச்சது பி.எட். ஆனா, டெக்ஸ்டைல்லவேலை பாத்துட்டு இருக்கேன். 

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 39,019 கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் வேலைஇல்லாமஇருக்காங்க.ஒரு படிப்புனு இருந்தாஅதுக்கான வேலை வாய்ப்பு இருக்கணும். வருஷாவருஷம் ஆயிரக்கணக்கான பேர் படிச்சுட்டு வெளியேவராங்க. ஆனா,ஏற்கெனவே படிச்சுவேலைவாய்ப்பு அலுவலகத்தில பதிவு செய்திருக்கிறயாருக்குமே வேலை இல்லை. 

பின்ன ஏன் இந்தப்படிப்ப இன்னும்வச்சிருக்காங்கன்னு புரியல" என்று குமுறுகிறார்.கம்ப்யூட்டர்சயின்ஸ்ல பி.எட். படிச்சநாங்க பலவகையில நசுக்கப்பட்டவங்க. மற்ற ஆசிரியர்பயிற்சி முடித்தவர்கள்  கலந்துகொள்ளும்  டெட், டிஆர்பி எக்ஸாம் போன்றவற்றில் கூடகலந்துகொள்ள எங்களுக்கு அனுமதி கிடையாது" என்றுவிரக்தியுடன் பேசுகிறார்கள் கணிப்பொறி ஆசிரியர்கள்.2006-ஆம் ஆண்டுக்குப் பிறகுதரம்உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகள் எதிலும்கணிப்பொறி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.கடந்த வருடத்தில் கூட407 பள்ளிகள்தரம் உயர்த்தப்பட்டதாக எம்.எல்.ஏபெஞ்சமின் கூறியிருக்கிறார்.ஆனால் அந்தப் பள்ளிகள்எதிலும் கணிப்பொறி வழிக் கல்வி கிடையாது.கம்யூட்டர் சயின்ஸ் டீச்சர் இல்லாமல்தான்பல பள்ளி மாணவர்கள் தானாகவேகற்றுக்கொள்கிறார்கள்.

2011 இல்சமச்சீர் கல்வி கொண்டு வந்தார்கள்அதில் கணினி அறிவியல் பாடத்திட்டம்இருந்தது.ஆனால்,அந்த
புத்தகங்களும்அரசு அலுவலகங்களில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.மாணவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலை வழங்கவில்லை.வருடந்தோறும்மத்திய அரசு கோடி கணக்கில்நிதி ஒதுக்கி வருகிறது.வருடத்திற்க்கு250 கோடி ரூபாய் வருகிறது.2011-இல்முதல்கட்டமாக 43கோடி ரூபாய் கொடுத்தார்கள்.ஆனால் எதையும் செயல்படுத்தாமல்வீணாக்குகிறார்கள்"என்று மாநில செயலாளர்குமரேசன் வருத்தத்துடன் பேசுகிறார்.

தமிழ்நாட்டில்27 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்தியிருக்கிறோம்.ஒவ்வொரு மாவட்ட ஆட்சியிர்அலுவலகத்திலும் கருணை மனு கொடுத்திருக்கிறோம்.
47முறைசென்னைக்கு வந்து மனு செய்திருக்கிறோம்.
அரசு அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் பலரையும்சந்தித்து எங்கள் கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம்.
எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தது போல்அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டதுஎன்ற பதில்தான் வருகின்றது.

தனியார்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதலேகணினி வழிக்கல்வி இருக்கிறது.அதை இன்னும் மேம்படுத்தஅரசும் ஊக்குவிக்கிறது.ஆனால் அரசுப் பள்ளிகளில்ப்ளஸ் ஒன்,ப்ளஸ் டூக்குமட்டுமே அதுவும் பாதி பள்ளியில்ஆசிரியர்கள் இல்லாமல் படிக்கிறார்கள்" என்கிறார் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர்வேல்முருகன்.

****
படித்ததுகணினி அறிவியல் பிடிப்பது கசாப்புக் கத்தி!

"2010இல்பி.எட் முடிச்சேன். அப்ப்கூட வாரத்துல ஒருநாள் மட்டன் கடையில்வேலை பாக்குறேன்.எனக்கு கல்யாணமாகி ஒருகுழந்தை இருக்கு.இப்ப வரைக்கும்எவ்வளவோ போராட்டம் பண்ணிருக்கோம்.எத்தனையே இடத்துல மனு கொடுத்தும்ஒண்ணும் நட்க்கல.நாங்க நாற்தாயிரம்ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கிறோம் .அங்கு பள்ளிகளில் பிள்ளைகளுக்குஆசிரியர்கள் இல்லை.ஸ்கூலுக்கு ஒருடீச்சருக்கு வேலை கிடைச்சிருந்தாலும் படிச்சவங்கபாதிபேரு வேலைக்குப் போயிருக்கலாம் என்று ஆதங்கப்படுகிறார் தமிழ்நாடுபி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் கார்த்திக்.

*ரங்கநாயகி, அந்தியூர்*

பி.எட் முடிச்சிட்டு ஒருபனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போய்ட்டிருக்கேன் சூப்பர்வைசரா இருந்தாலும் எல்லா வேலையும் பாக்காணும்.படிச்ச படிப்புக்கேத்த வேலையில்லாம,குறைஞ்ச கூலிக்கு கிடைத்தவேலையைச் செஞ்சிட்டிருக்கேன். பொண்ணுப்பாக்க வர்றவங்க பி.எட் கம்ப்யூட்டர்சயின்ஸ்னா வேலை கிடைக்கிறது கஷ்டம்னுசொல்லிட்டு போய்டுறாங்க.

*ஆரிஃபா, ஈரோடு*

எங்க வீட்ல அஞ்சு பொண்ணுங்க.பி.எட் முடிச்சிட்டுஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போய்ட்டு இருக்கேன்.எங்கப்பாவால வேலை செய்யமுடியாது.நாங்கவேலை செஞ்சுதான் குடும்பத்தக் காப்பாத்தானும்.வேலை கிடைக்காததால கல்யாணம்தள்ளிப்போய்ட்டு இருக்கு.

*லலிதா, கொள்ளிமலை*

அம்மாவோடகூலி வேலைக்குப் போய்டுருக்கேன்.வீட்டில இருக்கிற ஆடுமாடு அப்பா பாத்துக்கிறாங்க.இவ்ளோதூரம் படிச்சிட்டு கூலி வேலைக்குப் போறதுரொம்ப கஷ்டம இருக்கு.பி.எட் படிச்சிருந்த வேலைவாங்கித் தந்துடுவோம்னு சொல்லி பொண்ணு பாக்கவந்தாங்க .கம்ப்யூட்டர் சயின்ஸ்னு தெரிஞ்சதும் அதுக்கு எப்போ கிடைக்கிறதுனுரிஜெக்ட் பண்ணிட்டாங்க....

*கிருத்திகா, கோவை*

எனக்குகுடும்பத்தில பல சிக்கல்.அரசுவேலைதான் என்னை மீட்டெடுக்காணும் என்னுடையரெண்டு பெண் குழந்தைகளோட  எதிர்காலம் பத்தி ரெம்பக் கவலையாஇருக்கு.வாழ்க்கைய நகர்த்துறதுறதே பெரிய போராட்டம இருக்கு...
****
*சாய்  ஜானு, கரூர்*

நான் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகவேலை செய்கிறேன்.
என்க்குசில கேள்விகள் இருக்கு.

--->
வேலைகேட்டுபோராடும்போது அரசுக் கொள்கை முடிவுக்குஉட்பட்டதுன்னு சொல்றாங்க.அப்படினா அரசு கொள்கை பி.எட் முடிச்சவங்களுக்கு வேலைதரக்கூடாது என்பதா?

--->
அரசு வேலைக்கு எடுக்க முடியாத நிலையில்ஏன் இந்தப் படிப்ப நீக்காமவைச்சிருக்கங்கா?

--->
சபீதா மேடம் மத்திய அரசுகம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டுத்துக்காக கொடுத்த பணத்தைஏன் திருப்பிக் கொடுத்தார்கள்?

இதுக்கெல்லாம்என்ன பதில் வைத்திருக்கிறது அரசு?
என கேள்விகளை அடுக்குகிறார் சாய்ஜானு.

சுமார்40,000 வேலையில்லா பட்டதாரிகள் 27,000 பேர் பெண்கள் .இவர்களின்வாழ்க்கைக் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.தாயுள்ளம் கொண்ட தமிழக இவர்களின்மீது கருணை கண் காட்டுமா??

திரு வெ.குமரேசன்,
9626545446,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடுபி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014

உள்ளாட்சி 21: குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு- தனியாரிடம் இருந்து அரசுப்பள்ளிக்கு மாறும் குழந்தைகள்!

தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை நோக்கி பேருந்து விரைகிறது. காகங்களின் கரைதலில் கரைந்துக்கொண்டிருக்கிறது அதிகாலை இருட்டு. வாய்க்காலில் சிறுவர்கள் பாய்கிறார்கள். எங்கும் பசுமை. நெற்பயிர்கள் முளைவிட்டிருக்கின்றன. பெருகுமோ, கருகுமோ தெரியவில்லை. காவிரித் தாயை நம்பிக் காத்திருக்கிறார்கள் விவசாயிகள். ஒரு மணி நேரம் கடந்திருக்கும். படிப்படியாகக் குறைகிறது பசுமை. வயல்களில் முளைத்திருக்கின்றன திடீர் கட்டிடங்கள்.
குளங்கள் காய்ந்துக்கிடக்கின்றன. குளம் ஒன்றில் கழிவு நீர் பாய்கிறது. குப்பைகள் குவிந்துக்கிடக்கின்றன. பன்றிகள் மேய்கின்றன. பரபரப்பாக இயங்குகிறது பட்டுக்கோட்டை நகரம். இங்கிருந்து அரைமணி நேரப் பயணம். தென்னை மரங்கள் சூழ வரவேற்கிறது வேப்பங்குளம் பஞ்சாயத்து!

“வாங்க மைடியர், வாங்க...” ஓடி வந்து கட்டியணைத்து வரவேற்கிறார் சிங்கதுரை. வேப்பங்குளம் பஞ்சாயத்துத் தலைவர். உடல்மொழியில் ஊற்றெடுக்கிறது உற்சாகம். துள்ளல் நடை. வழியில் பெண்மணி ஒருவர் வேனில் அரசுப் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டிருந்த காட்சி வித்தியாசமாக இருக்கிறது. குழந்தையாக மாறிய சிங்கதுரை, ‘ஹாய் மைடியர்ஸ்... ஹாய் மைடியர்ஸ்...’ என்று குழந்தைகளின் கன்னம் வருடி அனுப்புகிறார். “நம்ம கிராமப் பஞ்சாயத்தைப் பத்தி நான் சொல்ல மாட்டேன் மைடியர். நிறையோ, குறையோ மத்தவங்கதான் சொல்லணும். நீங்க பத்திரிகையாளர்தானே, உங்கக் கடமையை நீங்க செய்யுங்க. ஊருக்குள்ள நீங்களே விசாரிச்சி தெரிஞ்சிக்கோங்க... என்ன சொல்றாங்களோ அதை எழுதுங்க” என்கிறார்.

ஊரில் இருந்து கொஞ்சம் தள்ளியிருக்கிறது வேப்பங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. காலை மணியடிக்கிறது. உற்சாகமாக ஓடுகிறார்கள் குழந்தைகள். தனது குழந்தையை அழைத்து வந்திருந்தார் வடிவழகி. அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம். “எனக்கு மூணு குழந்தைங்க. மூணு பேரும் தனியார் பள்ளியில்தான் படிச்சாங்க. இவளும் அங்கேதான் படிச்சா. சிங்கதுரை அய்யாதான் எங்கள்ட்ட பேசி அங்கிருந்து இவளை இந்த அரசுப் பள்ளியில் சேர்த்தார். கூடவே, குழந்தை பேருல அஞ்சாயிரம் ரூபாய் டெபாசிட் பண்ணியிருக்காரு...” என்கிறார். ஆச்சர்யமாக இருந்தது. பள்ளிக்குள் நுழைகிறோம்.

தனது குழந்தை ஹாசினியுடன் வடிவழகி

என்ன இல்லை எங்கள் பள்ளியில்?

“1944-ம் வருஷம் தொடங்குன பாரம்பரியம் மிக்க பள்ளிக்கூடம்ங்க இது. ஒருகாலத்துல இங்கிட்டு ஆயிரம் பேரு படிச்சாங்க. அப்ப எல்லாம் தனியார் பள்ளிகள் கெடையாது. எல்லாரும் இங்கிட்டுதான் படிக்கணும். சுத்து வட்டாரத்துலேயே பிரபலமாக இருந்துச்சு இந்தப் பள்ளிக்கூடம். 2000-களின் தொடக் கத்துலதான் பள்ளிக்கு ஆபத்து முளைச்சது. சுத்துவட்டாரத்துல அங்கிட்டும் இங்கிட்டுமா தனியார் பள்ளிகளைத் தொடங்குனாங்க.

ஊரெல்லாம் ‘இங்கிலீஷ் மீடியம்’னு போஸ்டர் ஒட்டுனாங்க. எங்க பள்ளியில் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைய தொடங்குனது. இப்போ சுத்துவட்டாரத்துல சுமார் 20 தனியார் பள்ளிகள் இருக்குது. பத்து வருஷத்துக்கு முன்னாடி 600 பேரு படிச்ச இந்த பள்ளியில் கடந்த வருஷம் மாணவர் எண்ணிக்கை 40-க்கும் கீழே போயிருச்சு. நெருக்கியடிச்சு உட்கார்ந்த வகுப்பறைகள் எல்லாம் வெறிச்சோடியிருச்சு.

நாங்க பல வருஷமா அர்ப்பணிப்பு உணர்வோடு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருப்போம். செயல்வழி கற்றலில் ஆடிப் பாடி சொல்லித் தந்திருக்கோம். ஆனால், ஒவ்வொரு முறையும் பெற்றோர் டி.சி-யைக் கேட்டு வரும்போதெல்லாம் எங்களுக்கு அழுகை வந்திடும். ஏதோ சொந்தக் குழந்தையைப் பிடுங்கிட்டு போற மாதிரி இருக்கும். நாங்க பெற்றோர்கிட்ட கெஞ்சுவோம். வாதாடுவோம்.

ஆனா, ஆங்கில மோகத்துக்கு முன்னாடி எதுவும் எடுபடலை. இத்தனைக்கும் ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் கீழ் செயல்படுகிற பள்ளிக்கூடம்ங்க இது. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு ஆசிரியர் வீதம் ஆறு ஆசிரியர்கள் இருக்காங்க. அதுல நாலு பேரு முதுநிலை பட்டதாரிகள். சுத்துவட்டாரத்திலேயே பெரிய வளாகம் எங்க பள்ளிக்கூடம்தான்.

கடந்த மூணு வருஷமா அறிவியல் கண்காட்சியில் தொடர்ந்து ‘இன்ஸ்பையர்’ விருது வாங்கிட்டு வர்றோம். தரமான கட்டி டங்கள் இருக்கு. தனித்தனி வகுப்பறைகள் இருக்கு. நூலகம் இருக்குது. சத்துணவுக் கூடம் இருக்கு. அதுக்கு காஸ் இணைப்பு இருக்கு. விதவிதமாக மதிய உணவு கொடுக் கிறோம். பஞ்சாயத்து சார்பில் கழிப்பறை சுத்தமாக பராமரிக்கிறாங்க. ஓடியாட மைதானம் இருக்கு. என்னங்க எங்க பள்ளிக்கு குறைச்சல்? ஆனா, தீப்பெட்டியாட்டம் இருக்குற தனியார் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் ஓடுறாங்க.

அரசுப் பள்ளியை சூழ்ந்த ஆபத்து!

இந்த சூழல்லதான் போன ஜூன் மாசம் திடீர் ஒரு தகவல் இடி மாதிரி வந்து இறங்குது. போதுமான எண்ணிக்கையில மாண வர்கள் இல்லாததால் எங்க பள்ளியை தொடக்கப் பள்ளியாக தரம் குறைக்க போறதா தகவல் வந்துச்சு. ஆசிரியர்களை யும் குறைச்சிடுவாங்களாம். என்ன செய்யற துன்னு தெரியாம தவிச்சு நின்னோம். இந்தத் தகவல் பஞ்சாயத்துத் தலைவர் சிங்கதுரைக் கிட்ட போனது. நேரடியா பள்ளிக்கூடத் துக்கே வந்தவர், எல்லாத்தையும் பொறுமையா கேட்டுக்கிட்டார். ‘கவலைப்படாதீங்க. பள்ளிக்கூடத்துக்கு நான் குழந்தைகளைக் கூட்டியாறேன். என்னை நம்புங்கன்னார். மறுநாளே தனியார் பள்ளிக்கூடத்து சீருடை யோட ரெண்டு குழந்தைகளைக் கூட்டியாந்தார். ரெண்டு மாசத்துல 10 பேரை சேர்த்துட்டார். தேவையான அளவு எண்ணிக்கையும் கூடுச்சு. தரம் குறைக்கறதுல இருந்து எங்க பள்ளிக் கூடம் தப்பிடுச்சு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.

உயர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை!

அரசுப் பள்ளிக்கு வரவழைக்க அப்படி என்ன செய்தார் சிங்கதுரை? கிராம சபைக் கூட்டத்தை கூட்டினார். மக்களை வரவழைத்தார். நமது குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை எடுத்துச் சொன்னார். குழந்தைகள் தாய்மொழியில் கற்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். குழந்தைகள் சுமையில்லாமல் சுதந்திரமாக படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனாலும், மக்கள் மனம் மாறவில்லை. இதனால் அதிரடியாக ஒரு திட்டத்தை அறிவித்தார்.

அரசுப் பள்ளியில் தங்களது குழந்தையைச் சேர்ப்பவர்களுக்கு அந்தக் குழந்தையின் பெயரில் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும் என்றார். இரண்டே மாதங்களில் 10 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு இடம்பெயர்ந்தார்கள். சொன்னபடியே பணத்தை குழந்தைகள் பெயரில் முதலீடு செய்தார். படிப்படியாக அரசுப் பள்ளியில் குழந்தைகள் சேரத் தொடங்கினார்கள். பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்திருக்கிறது. தொடக்கப் பள்ளியாக தரம் குறைக்கும் ஆபத்தும் நீங்கியது.

வரும் கல்வியாண்டில் பள்ளிக் கூடத்தின் மாணவர்கள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்துவதாக உறுதியளித் திருக்கிறார் சிங்கதுரை. இவ்வாறு சேர்க் கப்படும் குழந்தைகளுக்கு சீருடை, காலணி, இலவசம். தனியார் பள்ளிகள் வேன்கள் மூலம் குழந்தைகளை அழைத்துச் செல்வதை கவனித்தவர், அரசுப் பள்ளிக்கும் வாடகை வேனை அமர்த்தியிருக் கிறார். வேனில் குழந்தைகளைப் பொறுப்புடன் ஏற்றி அழைத்துச் செல்ல பெண்மணி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். காலையும் மாலையும் குழந்தைகளின் வீடு தேடி வருகிறது அரசுப் பள்ளி வேன். மகிழ்ச்சியோடு வருகிறார்கள் குழந்தைகள். இது மட்டுமா?

- பயணம் தொடரும்..

மீண்டும் முத்திரை பதித்த மூலத்துறை பள்ளி...


மேதகு வேண்டாம்; மாண்புமிகு போதும்'

சென்னை:'மேதகு என்பதற்கு பதிலாக, மாண்புமிகு என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே போதும்' என, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை, அவர்களது பெயருக்கு முன், மாண்புமிகு எனக்கூறி கவுரவப்படுத்துவர். அதே நேரத்தில், கவர்னரை அழைக்கும் போது, 'மேதகு ஆளுனர்' என, கவுரவமாக அழைப்பர்.

இந்நிலையில், தமிழக கவர்னரின் முதன்மை செயலர் ரமேஷ் சந்த் மீனா, நேற்று வெளியிட்ட அறிவிப்பு:அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், தமிழக கவர்னரை இதுவரை, 'மேதகு ஆளுனர்' என, குறிப்பிட்டு அழைத்து வந்தனர். இனி, 'மாண்புமிகு ஆளுனர்' என அழைத்தால் போதும் என்று, கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். அதே நேரம், கவர்னரை, வெளிநாட்டு பிரதிநிதிகள் சந்திக்கும் போது, மேதகு ஆளுனர் என்றழைப்பது கடைபிடிக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேரில் வந்தால் உடனே வேலை:டாக்டர்களுக்கு அரசு சிவப்பு கம்பளம்

நேரில் வந்தால் போதும்; உடனே வேலை' என, சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கு, தமிழக அரசு, சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது; 414 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக அரசு மருத்துவமனைகளில், எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர்கள் புதிதாக சேர்க்கப்பட்டாலும், எம்.எஸ்., - எம்.டி., என்ற முதுநிலை பட்டம் பெற்ற, அறுவை சிகிச்சை சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் போதிய அளவில் இல்லை. அதனால், சிறப்பு பிரிவு டாக்டர்களை, கூடுதலாக தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மயக்கவியல் - 91; பொது மருத்துவர் - 30; மகப்பேறு மருத்துவர் - 130, ரேடியாலஜி - 22 பேர் உட்பட, 414 சிறப்பு பிரிவு, உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை தற்காலிக பணியில் நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. எம்.ஆர்.பி., எனப்படும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.'போட்டி தேர்வுகள் இல்லை; நேரில் வந்தால் போதும், வேலையில் சேரலாம். இதற்கு, நவ., 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. 
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:உயர் சிறப்பு மருத்துவம் படித்தோருக்கு, தனியார் மருத்துவமனைகளில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எதிர்பார்த்ததை விட சம்பளமும் கிடைக்கிறது; இதனால், அரசு பணியில் ஆர்வம் காட்டுவது குறைந்துள்ளது. எனவே, நிலைமையை உணர்ந்த அரசு, நேரில் வந்தால் வேலை என, சிவப்புக் கம்பளம் விரிந்துள்ளது. இதற்கு உரிய பலன் கிடைக்குமா என, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதுதவிர, முதுநிலை மருத்துவம் படித்து, அரசு மருத்துவமனைகளில் நிபந்தனை அடிப்படையில் பணியாற்றி வரும், 1,800 டாக்டர்களையும், அரசு பணி வரன்முறை செய்யஉள்ளது.

புதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன?

புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டம் குறித்து, தமிழக அரசின் நிலையை, பள்ளிக் கல்வி அமைச்சர், டில்லியில் நாளை அறிவிக்கிறார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை, ஜூலையில் வெளியானது. அறிக்கை குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வித் துறையினரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அத்துடன், மாநில அரசுகளும், தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என, மத்திய அரசு கூறியது. கருத்துக் கேட்பு, செப்., 30ல் முடிந்தது.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து மாநில கல்வி அமைச்சர்களுடன், கல்விக்கான மத்திய அரசு குழு, நாளை ஆலோசனை நடத்துகிறது. எட்டாம் வகுப்பு வரை அமலில் உள்ள, 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது, 10ம் வகுப்பில், சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து பாடத் திட்டத்திலும், கட்டாய பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.இதில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபீதா உள்ளிட்டோர் பங்கேற்று, புதிய கல்விக் கொள்கை குறித்து, தமிழக அரசின் நிலையை தெரிவிக்க உள்ளனர்.

'செட்' தேர்வு: இன்று 'ரிசல்ட்'

பேராசிரியர் பணி தகுதிக்கான, 'செட்' தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.நாடு முழுவதும், பல்கலை மற்றும் கல்லுாரி களில் பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள கல்லுாரி, பல்கலைகளில் மட்டும் பேராசிரியராக, தமிழக அரசு நடத்தும் செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். தமிழகத்தில், தெரசா பல்கலை, பிப்ரவரியில் இத்தேர்வை நடத்தியது. எட்டு மாதங்களாகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. 

உயர் கல்வி துறை:செட் தேர்வுக்கு பின், ஜூலையில் ஒரு நெட் தேர்வு முடிந்து, அடுத்த தேர்வு, ஜனவரியில் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு, அக்., 17ல் துவங்கியது. 'செட் தேர்வு முடிவை வெளியிட்டால், அதில் தேர்ச்சி பெறாதோர், நெட் தேர்வு எழுதுவர். எனவே, செட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும்' என, நெட், செட் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்; நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்தனர். இந்நிலையில், '10 நாட்களுக்குள், செட் தேர்வு முடிவை வெளியிட, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது' என, நமது நாளிதழில், அக்., 20ல், செய்தி வெளியானது. 
தெரசா பல்கலை :இதைத் தொடர்ந்து, இன்று காலை, 10:00 மணிக்கு, செட் தேர்வு முடிவு வெளியாகும் என, தெரசா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வு முடிவை, http://www.motherteresawomenuniv.ac.in, www.setresult2016.in என்ற இணையதளங்களில் - நமது நிருபர் -அறியலாம்

சித்தா கலந்தாய்வு நடக்குமா?வரும் 31ல் முடியுது அவகாசம்

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து, நான்கு மாதங்களாக தவம் கிடக்கின்றனர். ஒரு வாரத்தில், சேர்க்கை அவகாசம் முடிவதால், கலந்தாய்வு நடக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை, பாளையங்கோட்டை என, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதிக் கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன; இதற்கு, 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

விண்ணப்பித்து, நான்கு மாதங்களுக்கு மேலாகியும், தர வரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை. வழக்கமாக, அக்., இறுதிக்குள் கலந்தாய்வு முடிந்து, கல்லுாரிகள் துவங்க வேண்டும்; இதுதான் விதிமுறை. இதன்படி, அவகாசம் ஒரு வாரத்தில் முடிகிறது. அதனால், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடக்குமா என, விண்ணப்பித்தோர் புலம்புகின்றனர். தனியார் கல்லுாரிகளில் இடங்கள் நிரம்ப வசதியாக, இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள், காலம் தாழ்த்துகின்றனரோ என்றும் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:கல்லுாரிகளில் ஆய்வு நடத்தி, மாணவர் சேர்க்கைக்கு, 'ஆயுஷ்' கவுன்சில், அனுமதி அளிக்கும். ஆய்வுகள் முடிவடையாததால், மாணவர் சேர்க்கை அனுமதி இன்னும் கிடைக்கவில்லை; அதனால், கலந்தாய்வு நடத்த முடியவில்லை. மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்க, இம்மாதம் வரை அவகாசம் உள்ளது. அதற்குள் அனுமதி கிடைக்குமா என்று தெரியவில்லை. முறையான அனுமதி கிடைக்காத நிலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்படும். அடுத்த மாதம் கலந்தாய்வு நடக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Atm Card இல் பின் நம்பர் மாற்றப் படவேண்டியவர்கள் விவரம் வெளியீடு இதில் உங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள் யார் a/c என்பதை நீங்கள் search இல் உங்களது district விவரம் தந்தால் போதும் உங்களது district இல் உள்ளவர்கள் விவரம் தோன்றும் அல்லது mobile no கொடுத்து search செய்து கொள்ளவும் இவர்கள் உடனடியாக தங்களது a/c pin no change செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது..

30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் atm card pin no திருடப்பட்டவர்கள்  விவரம் வெளியீடு ...
இதில் நீங்கள் அல்லது உங்களது குடுமப்த்தில் உள்ளவர்களது a/c  atm card pin no கூட திருடப்பட்டிருக்கலாம் 
Atm Card இல் பின் நம்பர் மாற்றப் படவேண்டியவர்கள் விவரம் வெளியீடு இதில் உங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள் யார் a/c என்பதை நீங்கள் search இல் உங்களது district விவரம் தந்தால் போதும் உங்களது district இல் உள்ளவர்கள் விவரம் தோன்றும் அவர்களது atm pin no   உடனடியாக மாற்ற படவேண்டும்.
அல்லது உங்களது வங்கியில் கொடுத்த mobile பதிவு செய்து உங்களது a/c திருடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்....

23/10/16

கல்வி கொள்கை கூட்டத்தில் தமிழகம் பங்கேற்க முடிவு

புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக, டில்லியில் நடக்கும் கூட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பங்கேற்கிறார்.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி அறிக்கையின் படி, மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ளது. 
அதன் முக்கிய அம்சங்களை, மூன்று மாதங்களுக்கு முன், மத்திய அரசு வெளியிட்டது;
அதற்கு, எதிர்ப்பு எழுந்தது.இந்நிலையில், கல்விக் கொள்கை குறித்த முதல் ஆலோசனை கூட்டம், டில்லியில், வரும், 25ல் நடக்கிறது. இதில், அனைத்து மாநில பள்ளிக்கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபிதா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

*2011-12ம் ஆண்டுகளில் பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு தகுதிதேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை*

TNGTF பொதுச்செயலாளர் செய்தி;

*2011-12ம் ஆண்டுகளில் பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு தகுதிதேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை*

2011-12 ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2000 கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறையில் நியமனம் செய்ய பட்டனர்.இவர்கள் 5 ஆண்டிற்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனையுடன் பணியில் சேர அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 2000கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பெரிதும் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.
ஆசிரியர் பணி நியமனத்துக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், அந்தாண்டில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2011-க்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. அதன் பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி
2011-இல் பணி நியமனம் செய்யப்பட்ட இந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆசிரியர்களின் 5 ஆண்டு பணிக் காலம் அரசு உத்தரவுப்படி இந்த ஆண்டு, நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் பெற்றும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாமல் தமிழகம் முழுவதும் சுமார் 2000கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் உத்தரவில் இதுகுறித்து தெளிவான விளக்கம் இல்லாததால், அந்தப் பள்ளிகளில் பணி யாற்றுவோரும் குழப்பத்தில் உள்ளனர்.
இது குறித்து அரசு எதுவும் தெளிவான அறிவிப்பு வெளியிடாத நிலையில் சில மாவட்ட அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் இம்மாதம் வழங்க வேண்டிய ஆண்டு ஊதிய உய்ர்வை தன்னிச்சை யாக நிறுத்தி வைத்துள்ளனர்.இது ஆசிரியர்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்வே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு *தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும*் என கேட்டுக்கொள்கிறோம்.
*பீ.பேட்ரிக் ரெய்மாண்ட்*
_பொதுச்செயலாளர_
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*

சி.பி.எஸ்.இ., 10 ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு

கிராமமா, நகரமா? கல்வி அதிகாரிகள் குழப்பம்

அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு

முன் அரையாண்டுத் தேர்வால் பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு

வினாவங்கி புத்தகம் வினியோகம்

22/10/16

முடக்கப்பட்ட டெபிட் கார்டு: புதிய அட்டை எப்போது கிடைக்கும்? எஸ்பிஐ பதில்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், பாதுகாப்புக் காரணங்களுக்காக அதனுடைய ஏடிஎம்களை மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏடிஎம் கார்டுகளின் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் எஸ்பிஐ வங்கியின் 6 லட்சம் டெபிட் கார்டுகள் உட்பட 30 லட்சத்துக்கும் மேற்பட்ட டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டன்.


இது குறித்து எஸ்பிஐ வங்கி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டிருப்பதாவது, வங்கி வாடிக்கையாளர்கள், பாதுகாப்புக் காரணங்களுக்காக, பணம் எடுத்தல் மற்றும் பண பரிவர்த்தனைகளை, அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் மட்டும் மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் முடக்கப்பட்ட 6 லட்சம் டெபிட் கார்டுகளுக்கு பதிலாக புதிய டெபிட் கார்டுகள் இன்னும் 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடும்ப அட்டை கோரி ஆன்லைன் விண்ணப்பம்!

தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடுமப அட்டை கோரி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது விநியோகத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:


கடந்த சில வருடங்களாக புதிய குடும்ப அட்டைகள் வழங்க இயலாத நிலையில் உள்தாள் ஒட்டப்பட்டு பொருட்கள் வழங்கப் படுகின்றன.இவ்வாறு கால நீட்டிப்பு செய்யப் பட்ட குடும்ப அட்டை கள் மூலம் டிசம்பர் மாதம் வரை மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.

இனி கையடக்கமான புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்க அரசு திட்டமிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜனவரி மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்க அனைத்து ரேஷன் கடை களிலும் நவீன எலக்ட்ரானிக் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 1-ந்தேதி முதல் புதிய குடும்ப அட்டை களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அதற்குரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து விண் ணப்பிக்க வேண்டும்.

பொது விநியோகத்துறை அதிகாரிகள் வீடுகளில் கள ஆய்வு செய்து, புதிய குடும்ப அட்டை 2 மாதத்தில் வழங்கப்படும். குடும்ப அட்டை வழங்கும் போது ஒரிஜினல் சான்று கள் சேகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பான பணிகளும் இனி ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும்

டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி: ட்ராய் அறிவிப்பு.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி என்று, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.


ஜியோ வழங்கும் இலவச அழைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று, இந்திய தொலைத்தொடர்பு சேவை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ட்ராய் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: - தொலைத்தொடர்புச் சேவை விதிமுறைகளை மீறும் வகையில் ஜியோ செயல்படுவதால், அதனை 90 நாள் சலுகை அறிவிப்பு என்ற காலத்தை கடந்து, அனுமதிக்க முடியாது.

ஜியோ நிறுவனம், தனது 4ஜி இலவச சேவைகளை நீட்டிப்பதற்கான பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், டிராய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

710 (210 BTs AND 500 PGs) POST PAY AUTHORIZATION




சி.பி.எஸ்.இ வகுத்துள்ள விதிகள் அனைத்தும் மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும் ?

தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு தலைவர் நீதிபதி சிங்காரவேலு ஓய்வு பெற்று 10 மாதங்களாகியும் புதிய தலைவரை நியமிப்பதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை. புதிய தலைவரை நியமிப்பதில் தாமதம் அரசு நிர்வாக முடக்கத்தையே உணர்த்துகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.


108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கு அழைப்பு

பெரியார் மன்றத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி 108 ஆம்புலன்ஸில் பணியாற்ற மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு, பி.எஸ்ஸி நர்சிங், விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், உயிரியல் உள்ளிட்ட அறிவியல் படிப்புகள் அல்லது செவிலியர் படிப்புகள், மருந்தாளுநர், பரிசோதனை நுட்புநர் உள்ளிட்ட படிப்புகளை முடித்த ஆண், பெண் இரு பாலரும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.


எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், மனிதவளத் துறை நேர்முகம் ஆகியவற்றின்படி தேர்வு செய்யப்படுவோருக்கு 50 நாள்கள் முழுமையான பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுப் படியாக ரூ. 100 வழங்கப்படும்.

ஓட்டுநர் பணியிடத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில் தவறியவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் 23 முதல் 35 வயதுக்கு மிகாத ஆண்கள் தேர்வு செய்யப்படுவர். 162.5 செ.மீ. உயரம், இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும்.

இந்தத் தகுதிகளைக் கொண்டோர் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். மாத ஊதியம் ரூ. 11,100. தேர்வு செய்யப்படுவோருக்கு அன்றைக்கே பணிநியமன ஆணை வழங்கப்படும்.

முகாமில் பங்கேற்க வருவதற்கான படிகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 73974 44158, 73977 24804 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியத்தின் கீழ் படிக்கும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மீண்டும் போர்டு தேர்வு முறை கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு, 2010ல் நீக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்துவது குறைந்துள்ளது.
அதே நேரத்தில், மாணவர்களின் கல்வித்திறன் குறைந்து வருவதாக பெற்றோரும், கல்வியாளர்களும் கூறி வந்தனர். இது தொடர்பாக, பல்வேறு தரப்பிடமிருந்து மத்திய அரசு கருத்து கேட்டது. '10ம் வகுப்புக்கு, பொது தேர்வை மீண்டும் அறிமுகம் செய்யலாம்' என, பலர் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம், 25ல் டில்லியில் நடக்க உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த கூட்டத்துக்கு பின், 10ம் வகுப்புக்கு, பொது தேர்வை மீண்டும் நடத்துவது குறித்து, பிரகாஷ் ஜாவடேகர் அறிவிப்பார் என, எதிர் பார்க்கப்படுகிறது. வரும், 2018 முதல் பொதுத்தேர்வு நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிற வங்கி ஏ.டி.எம்., பயன்படுத்தாதீங்க!'

கோல்கட்டா: 'எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பாதுகாப்பு காரணம் கருதி, பிற வங்கி ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டாம்' என, அந்த வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 
வெளிநாட்டு மோசடி பேர்வழிகளின் கைவரிசையால், எஸ்.பி.ஐ., உள்ளிட்ட சில வங்கி வாடிக்கையாளர்களின், 'டெபிட்' கார்டுகளில் தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களின், 6.5 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், மற்ற பொதுத் துறை வங்கிகளும், தங்கள், வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகளை முடக்கி உள்ளன. அந்த வகையில், மொத்தம், 32 லட்சம் கார்டுகள் முடக்கப்பட்டு உள்ளன. தவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு, 'பின்' நம்பரை உடனடியாக மாற்றுமாறு, சில தனியார் வங்கிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. எனினும், நாட்டில் பயன்பாட்டில் உள்ள மொத்த கார்டுகளில், 0.5 சதவீத கார்டுகளின் தகவல்கள் மட்டுமே திருடப்பட்டு உள்ளதாகவும், 99.5 சதவீத கார்டுகளின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், வங்கிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளன. இந்நிலையில், 'எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பிற வங்கி, ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டாம்; பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே, இந்த அறிவுரை வழங்கப்படுகிறது; வாடிக்கையாளர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்' என, அந்த வங்கியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மவுனம்! ஏ.டி.எம்., கார்டு எண்கள் திருட்டு விவகாரத்தில் ஆர்.பி.ஐ. புலனாய்வு செய்யாததால் வாடிக்கையாளர்கள் கோபம்

சென்னை:பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த, 32 லட்சத்திற்கும் அதிகமான, ஏ.டி.எம்., கார்டு தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி செய்யப் பட்டது குறித்து, ரிசர்வ் வங்கி மவுனம் காப்பது, 

வங்கி வாடிக்கையாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம், சில வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் இருந்து, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் பணம் எடுக்கப்பட்டதாக, புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, என்.பி.சி.ஐ., எனப்படும், தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் விசாரணை மேற்கொண்டது. 


அதில், யெஸ் பேங்கிற்கு, பணப் பட்டுவாடா சேவைகளை மேற்கொண்டு வரும், ஹிட்டாச்சி 
பேமன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின், 'சர்வர்' மூலம், வங்கி வாடிக்கையாளர்களின், ஏ.டி.எம்., கார்டு, ரகசிய, 'பின்' எண் உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. 

யெஸ் பேங்கின், ஏ.டி.எம்.,மை பயன்படுத்திய, பிற வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களும் திருடப்பட்டு உள்ளன. இந்த வகையில், 19 வங்கிகளைச் சேர்ந்த, 32 லட்சம், ஏ.டி.எம்., கார்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. அவற்றில், 26 லட்சம், 'மாஸ்டர், விசா' கார்டுகள்; ஆறு லட்சம், 'ரூபே' கார்டுகள். திருடப் பட்ட, ஏ.டி.எம்., கார்டு விபரங்கள் மூலம், 641 வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து, 1.30 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஆறு லட்சம், 'டெபிட்' கார்டுகளின் தகவல்கள் திருடப் பட்டதாக கூறியுள்ளது. அந்த கணக்கு களை உடனடியாக முடக்கி, வாடிக்கையாளர் களுக்கு புதிய கார்டுகள் வழங்குவதாக தெரிவித்து உள்ளது. 

தனியார் துறையைச் சேர்ந்த, ஆக்சிஸ் பேங்க், சில லட்சம் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு, 'பின்' எண்களை மாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளது. இதே போல, பல வங்கிகள், வாடிக்கையாளர் களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை அனுப்பியுள்ளன. 

இந்நிலையில், ஏ.டி.எம்., கார்டு தகவல் திருட்டை தடுப்பதற்கான நடவடிக்கைகளை,மாஸ்டர், விசா, ரூபே கார்டு நிறுவனங்கள் இணைந்து மேற் கொண்டு வருவதாக, என்.பி.சி.ஐ., தெரிவித்து உள்ளது.

ஆனால், இந்திய வங்கி வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில் நடைபெற்றுள்ள தகவல் திருட்டு குறித்து, அனைத்து வங்கிகளை யும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ரிசர்வ் வங்கி, எதுவும் கூறாமல் மவுனம் காப்பது,வங்கி வாடிக்கையாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

'பலவங்கிகள், ஏ.டி.எம்., கார்டு தகவல் திருட்டு குறித்து, அதிகாரபூர்வமான எண்ணிக்கையை வெளியிடவில்லை. அவை வெளியானால், தகவல்கள் திருடப்பட்ட, ஏ.டி.எம்., கார்டுகளின் எண்ணிக்கை, மேலும் அதிகமாக இருக்கும்' என, வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


கண்காணிக்க வேண்டும்


ஏ.டி.எம்., கார்டு விபரம் திருடு போகும் சம்பவங் கள், வளர்ந்த நாடுகளிலும் நடக்கின்றன. இது, ஒரு குற்ற செயல்.வங்கிகளை நம்பி தான், வாடிக்கையாளர்கள் பணம், டெபாசிட் செய் கின்றனர். ஏ.டி.எம்., கார்டு விபரம் திருடு போவதால், வாடிக்கையாளர்கள், வங்கி மீது வைத்துள்ள நம்பிக்கையை இழப்பர். வங்கி களில், பணத்தை தொடர்ந்து டெபாசிட் செய்ய மாட்டர் என்பதால், அவற்றின் லாபமும் குறையும். 

எனவே, வாடிக்கையாளரின் விபரங்களை பாதுகாப்பதில், வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவற்றை, வங்கிகள் முறையாக செய்கின்றனவா என்பதை, ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் இணைந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். 

ஷியாம் சேகர் பொருளாதார நிபுணர்


விபரம் கேட்பு


ஏ.டி.எம்., கார்டு தகவல் திருடு குறித்த அனைத்து விபரங்களையும் வழங்குமாறு, மத்திய நிதி அமைச்சகம், அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இணையதளத்தில் கட்டண விபரம் : இன்ஜி., கல்லூரிகளுக்கு உத்தரவு

இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் சுயநிதி பல்கலைகள், பாட வாரியான கட்டண விபரத்தை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.நாட்டில் பல மாநிலங்களில், இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி வசதிகள் இல்லை.
இந்த மாநில மாணவர்கள், மற்ற மாநில கல்லுாரி மற்றும் பல்கலைகளில் சேர்கின் றனர். சில நேரங்களில், படிப்பில் சேர வரும் மாணவர்களை, கட்டணம் தொடர்பான, அடிப்படையில்லாத காரணங்களை கூறி, திருப்பி அனுப்புகின்றனர். இது குறித்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், தொழில் நுட்பக் கல்வி இயக்குனர் ராஜேந்திர ரத்னு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் உத்தரவு படி, அனைத்து கல்லுாரிகளும், முக்கிய பாடவாரியாக, மாணவர்களின் கட்டண பட்டியலை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. அதே போல், சுயநிதி பல்கலைகளுக்கும், மத்திய அரசின் சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது

பொம்மலாட்டம் ஆடும் ஆசிரியர்கள் : அடிப்படை கல்விக்கு 'டாட்டா!'

அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் போன்ற நடனப் பயிற்சிகள் தரப்படுவதால், மாணவர்களுக்கான அடிப்படை கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடிப்படை கல்வியை வலுப்படுத்த வேண்டிய, எஸ்.எஸ்.ஏ., என்ற, மாநில திட்ட அமைப்பு, மத்திய அரசிடம் பெறும், பல கோடி ரூபாய் நிதியில், ஆசிரியர்களுக்கு பல பயிற்சிகளை அளிக்கிறது.
இதற்காக வரும் ஆசிரியர்களுக்கு, போக்குவரத்து செலவு, உபசாரம், விடுமுறை என, சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. சென்னையில், இரு நாட்களாக, நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் கற்பித்தல் பயிற்சி நடந்தது. பொம்மலாட்ட பயிற்சி முடித்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த துவங்கும் முன், அடுத்த பயிற்சிக்கு அழைக்கப்படுகின்றனர். 'மாணவர்களுக்கு உதவாத, இது போன்ற ஆட்டம் காட்டும் பயிற்சி களை வைத்தே, பல ஆசிரியர்கள் பள்ளிகளில் இருப்பதில்லை' என, தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர். மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ., பாடம் நடத்துகிறது. பாடம் கற்க வேண்டிய மாணவர்களோ, வகுப்புகளில், ஆசிரியர்கள் இன்றி தடுமாறுகின்றனர் என, கல்வியாளர்கள் குமுறுகின்றனர்.
இது குறித்து, ஆசிரியர் கள் சிலர் கூறுகையில், 'பாடங்களை முறையாக நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும். பின், இது போன்ற நடனங்களை கற்று தரலாம்.
'எஸ்.எஸ்.ஏ., நடத்தும் மதிப்பீட்டு தேர்வில், மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். அதன் பின்னும், இது போன்ற பயிற்சிகள் கைகொடுக்க வில்லை என்பதை, அவர்கள் உணரவில்லை' என்றனர். 

உடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம் : கல்வி தகுதி நிர்ணயித்தது அரசு

சென்னை: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான, கல்வி தகுதியை நிர்ணயம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது. 'ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு முன் மற்றும் பின் பெறும் உயர்கல்வி தகுதிகளுக்கு ஏற்ப, இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம்' என, அரசு ஆணை உள்ளது. அதே போல், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்க, அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

l உடற்கல்வி ஆசிரியர்கள், பி.பி.எட்., - பி.பி.எஸ்., - பி.எம்.எஸ்., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கல்வி தகுதிக்கு, முதலாவது ஊக்க ஊதிய உயர்வும், முதுகலை பட்டம் பெற்றால், இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படும்l இந்த படிப்புகளை முடிந்து, உடற்கல்வி ஆசிரியர்களாக உள்ளோர், முதுகலை பட்டம் பெற்றால், முதலாவது ஊக்க ஊதிய உயர்வும், எம்.பில்., அல்லது பிஎச்.டி., படித்தால், இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படும்l முதுகலை பட்டம் பெற்று, உடற்கல்வி ஆசிரியராக உள்ளோர், எம்.பில்., அல்லது பிஎச்.டி., பட்டம் பெற்றால், தலா, ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும்.மேலும், யோகா டிப்ளமோ படிப்பு, உடற்கல்விக்கான படிப்பில் சேர்க்கப்பட்டு, ஊக்க ஊதியம் பெறும் வகையில், அரசாணை ெவளியிடப்பட்டு உள்ளது.

தீபாவளிக்கு முன் சம்பளம் : ஆசிரியர்கள் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை கொண்டாட, பொதுத்துறை ஊழியர்களுக்கு, போனஸ் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பண்டிகை முன்பணம் என்ற பெயரில், 5,000 ரூபாய் தரப்படும். இந்த ஆண்டு, பெரும்பாலான மாவட்டங்களில், முன்பணத்திற்கான விண்ணப்பமே பெறப்படவில்லை.
இந்நிலையில், தீபாவளி, 29ல் வருகிறது. எனவே, இம்மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர், சாமி.சத்திய மூர்த்தி, கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.

அரசு ஊழியர் அகவிலைப்படி தீபாவளிக்கு முன் அறிவிப்பு?

ஆண்டு அகவிலைப்படி உயர்வு, தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படுமா' என, அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள், ஜூலையில் அமலுக்கு வந்தன; ஜனவரியிலிருந்து கணக்கிடப்பட்டு, பணப்பலன்கள் வழங்கப்பட்டன.
இதே போல், தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும், சம்பள குழு நியமிக்கப்பட வேண்டும்; ஆனால் இல்லை. ஆண்டுதோறும், ஜனவரி மற்றும் ஜூலையில், 5 - 7 சதவீதத்திற்குள், அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். இந்த ஆண்டு, ஜனவரியில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது; ஜூலைக்கான உயர்வு இன்னும் வரவில்லை. தீபாவளி பண்டிகைக்கு முன், அறிவிப்பு வருமா என, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இன்ஜி., கல்லூரி பேராசிரியர் பணிக்கு இன்று தேர்வு

சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு, இன்று நடக்கிறது.அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு, இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கி, பகல், 1:00 மணிக்கு முடிகிறது. தேர்வுக்கு, 48 ஆயிரத்து, 286 பேர் விண்ணப்பித்தனர்; 2,336 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன; மீதமுள்ள, 45 ஆயிரத்து, 950 பேர், இன்று தேர்வில் பங்கேற்கின்றனர். 

தமிழகம் முழுவதும், 11 மாவட்டங்களில், 113 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு, 2014ம் ஆண்டு அறிவிக்கைபடி விண்ணப்பித்த பலருக்கு, 'ஹால் டிக்கெட்' வரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஆனால், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தவிர, மற்ற அனைவருக்கும், ஹால் டிக்கெட் வழங்கப்பட்டதாக, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் நிதி முறைகேடுக்கு முற்றுப்புள்ளி

தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., செலவுகளை, ஆன்லைன் முறையில் மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளில், மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்துவதை தவிர்க்க, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம், 2009ல் அமலுக்கு வந்தது.
திட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும், ஆன்லைன் கணக்குக்கு மாற்றவும், மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, மத்திய அரசு நிதித் துறையின், பி.எப்.எம்.எஸ்., என்ற, பொது நிதி மேலாண்மை திட்டம் மூலம், கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், செய்யாத திட்டப் பணிகளுக்காக, போலி ரசீதுகள் மூலம், பணம் பெறுவது போன்ற முறைகேடுகள் முற்றிலும் ஒழிக்கப்படும். 

பள்ளிகளில் கேமரா : பெண்கள் சங்கம் மனு

சென்னை: 'பள்ளி, கல்லுாரிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என, சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சங்கத் தலை வர், கலைச்செல்வி கொடுத்த மனு: பல கல்லுாரி மற்றும் பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு எதிராக, வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
மாணவ, மாணவியர் கொலை, பாலியல் தொந்தரவு, தற்கொலை போன்ற அவலங்கள் நடக்கின்றன. இவற்றை தடுக்க, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அரசு நடுநிலைப் பள்ளி யில், மாணவ, மாணவியரை, கழிப்பிடத்தை துாய்மைப்படுத்த கட்டாயப்படுத்திய, தலைமை ஆசிரியை மற்றும் துணைத் தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

கல்வி கொள்கை கூட்டத்தில் தமிழகம் பங்கேற்க முடிவு

புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக, டில்லியில் நடக்கும் கூட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பங்கேற்கிறார்.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி அறிக்கையின் படி, மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ளது. அதன் முக்கிய அம்சங்களை, மூன்று மாதங்களுக்கு முன், மத்திய அரசு வெளியிட்டது;
அதற்கு, எதிர்ப்பு எழுந்தது.இந்நிலையில், கல்விக் கொள்கை குறித்த முதல் ஆலோசனை கூட்டம், டில்லியில், வரும், 25ல் நடக்கிறது. இதில், அனைத்து மாநில பள்ளிக்கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபிதா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து, அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர் ஆரோக்கியதாஸ் கூறுகையில், ''ஆல் பாஸ் திட்டத்தை நிறுத்தினால், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள், எட்டாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல் இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே, ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்ய, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

21/10/16

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.



 Visit : www.tnguru.com /

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் "Combined Higher Secondary Level Examination, 2016" தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Postal Assistant, Sorting Assistant 

காலியிடங்கள்: 3,281 

பணி: Data Entry Operator 

காலியிடங்கள்: 506 

பணி:  Court Clerks 

காலியிடங்கள்: 26 

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: 2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஸ்கில்டு, தட்டச்சு தேர்வு மற்றும் சான்றிதவ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சி, திருநெல்வேலி 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு  

நடைபெறும் தேதி: 07.01.2017 - 05.02.2017 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2016 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssconline.nic.in என்ற இணையதளத்தை அல்லது Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai - 600006 என்ற விலாசத்தில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

முக்கியச் செய்தி

பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரை வரை தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் டூ தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணிக்கு முடிகிறது. அதேபோல் மார்ச் 15-ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்கு முடிகிறது. 

பிளஸ் டூ தேர்வுகள் விவரம்:

மார்ச் 4-ம் தேதி மொழித் தாள்-1
மார்ச் 7-ம் தேதி மொழித் தாள்-2
மார்ச் 9-ம் தேதி ஆங்கிலத் தாள்-1
மார்ச் 10-ம் தேதி ஆங்கிலத் தாள்-2
மார்ச் 14-ம் தேதி வேதியியல், கணக்குவியல் 
மார்ச் 18-ம் தேதி கணக்கு, உயிரியல், சத்துணவு
மார்ச் 17-ம் தேதி வணிகம், வீட்டுப்பாடம், புவியியல்
மார்ச் 21-ம் தேதி தொடர்பு வழி ஆங்கிலம், இந்தியக் கலாச்சாரம்
மார்ச் 28-ம் தேதி பௌதீக அறிவியல், வரலாறு, வணிக கணக்கு

10-ம் வகுப்பு தேர்வு விவரம்:

மார்ச் 15-ம்  தேதி தமிழ் முதல்தாள்
மார்ச் 16-ம்  தேதி தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 22-ம்  தேதி ஆங்கிலம் முதல்தாள்
மார்ச் 29-ம்  தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4-ம் தேதி கணிதம் 
ஏப்ரல் 7-ம் தேதி அறிவியல்
ஏப்ரல் 11-ம் தேதி சமூகஅறிவியல்

அண்ணா பல்கலை தேடல் குழு; இடம் பிடிக்க கடும் போட்டி!

அண்ணா பல்கலை துணைவேந்தர் பணியிடம், ஐந்து மாதங்களாக காலியாக உள்ளது; புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடல் குழு அமைப்பதில், இழுபறி ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த ராஜாராம், மே மாதம் ஓய்வு பெற்றார். புதிய துணை வேந்தரை நியமிக்க, தேடல் குழுவை அரசு அமைக்க வேண்டும். ஆனால், தேடல் குழு அமைப்பதில், பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.


இதுகுறித்து, உயர்கல்வி துறை வட்டாரம் கூறியதாவது: தேடல் குழுவில், பல்கலை சிண்டிகேட் பிரதிநிதி, அரசுபிரதிநிதி மற்றும் கவர்னரின் பிரதிநிதி என, மூன்று பேர் இடம்பெற வேண்டும். புதிய துணைவேந்தருக்கான விண்ணப்பங்களை பெற்று, அவற்றில் ஒருவரை தேர்வு செய்யும் பொறுப்பு, தேடல் குழுவிற்கே உள்ளது.

அண்ணா பல்கலையானது, தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு இணைப்பு வழங்கும் அதிகாரம் உடையது. அதனால், துணை வேந்தர்பதவிக்கு விண்ணப்பிப்போர், செல்வாக்கு மிக்கவர்களாகவே இருப்பர். எனவே, தேடல் குழுவில் இடம்பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பரிந்துரைகள் வருவதால் தேடல் குழுவில் யாரை நியமிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது. இதுகுறித்து, பல்கலை வட்டாரத்தினர் கூறுகையில், இன்னும், இரு தினங்களில், தேடல் குழு பிரதிநிதிகள் முடிவு செய்யப்படுவர் என்றனர்.

கல்வித்தரத்தை மேம்படுத்த அரசு ஆசிரியர்களுக்கு பயிற்சி

தலைவாசலில், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் மற்றும் ஒழுக்கத்திறனை மேம்படுத்தும் பொருட்டு, அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பயிற்சி முகாம், நேற்று நடந்தது. 


தெற்கு மணிவிழுந்தானில் உள்ள மாருதி பாலிடெக்னிக் கல்லூரியில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் நடந்த, ஐந்து நாள் பயிற்சி முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது. 

மாணவ, மாணவியர் மத்தியில், பெரிய பிரச்னையாக விளங்கும் பாலின வேறுபாட்டை களைவது; பாலியல் சமநிலை ஏற்படுத்துதல்; மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை; புதிய கற்றல் முறை மற்றும் கணினி வழி மூலம் கல்வி கற்பிக்கும் புதிய மென்பொருட்களை கையாளுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை, மாணவர்கள் சலிப்படையாமலும், ஆர்வத்துடனும் கற்க, பலவித யுக்திகள், ஆசிரியர்களுக்கு கற்றுத்தரப்பட்டன. தலைவாசல் ஆண்கள் அரசு பள்ளி தலைமையாசிரியர் வீராச்சாமி, ஐந்து நாள் பயிற்சியை, ஒருங்கிணைத்து நடத்தினார். 

இதில், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் மற்றும் கெங்கவல்லியில் உள்ள, அரசு பள்ளிகளை சேர்ந்த, ஒன்பது, பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள், 160 பேர் பங்கேற்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு அக்டோபர் 25 ஆம் தேதி அன்று முதல் வழக்காக விசாரணைக்கு வருகிறது!

ADVANCE LIST FOR Tuesday 25th October 2016

Sr. No. Case No. Party Petitioner Advocates Respondent Advocates
1. SLP(C) No. 29245/2014 V. LAVANYA & ORS.
Vs.
THE STATE OF TAMIL NADU & ORS. MR. T. HARISH KUMAR MR. M. YOGESH KANNA
MR. SUMIT KUMAR
MR. V. RAMASUBRAMANIAN

 0615
WITH
  SLP(C) No. 29353-29354/2014 K CHANDRASEKARAN AND ORS
Vs.

STATE OF TAMIL NADU & ORS. MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
  SLP(C) No. 29634/2014 P.K.KARTHI AND ORS
Vs.

STATE OF TAMILNADU AND ORS MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
  SLP(C) No. 29715/2014 I SASIKALA
Vs.

STATE OF TAMIL NADU & ORS. MR. ANANDH KANNAN N.MR. M. YOGESH KANNA
  SLP(C) No. 32238-32239/2014 P RADHA & ORS.
Vs.

STATE OF TAMIL NADU & ORS. MR. ANANDH KANNAN N.
  SLP(C) No. 32240/2014 N.SETHURAMAN AND ORS
Vs.

STATE OF TAMILNADU AND ORS MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
  SLP(C) No. 32241/2014 K. VENKADESAN & ORS.
Vs.

STATE OF TAMIL NADU & ORS. MR. L. K. PANDEYMR. M. YOGESH KANNA
  SLP(C) No. 34978/2014 R SIVAPRIYA AND ORS
Vs.

STATE OF TAMIL NADU AND ORS MR. N. RAJARAMAN
  SLP(C) No. 32160/2014 N. KAYALVIZHI & ORS.
Vs.

THE STATE OF TAMIL NADU & ORS. MR. N. RAJARAMAN
  SLP(C) No. 34568/2014 A. CHITHRA AND ORS
Vs.

SECRETARY. TO GOVT. SCHOOL EDUCATION.(TRB) DEPARTMENT., CHENNAI AND ORS MR. SATYA MITRA GARGMR. M. YOGESH KANNA
MR. R. NEDUMARAN
  SLP(C) No. 33127-33130/2014 N. VANMATHI AND ORS. ETC.
Vs.

THE STATE OF TAMIL NADU AND ORS. ETC. MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
  SLP(C) No. 6543/2015 K.V. PARAMANANTHAM AND ORS.
Vs.

STATE OF TAMIL NADU AND ORS. MR. ANANDH KANNAN N.
  SLP(C) No. 26461-26463/2015 S. VIJAYAN & ETC. ETC.,
Vs.

THE STATE OF TAMIL NADU & ETC., ETC., G.SIVABALAMURUGAN
MR. L. K. PANDEY
  SLP(C) No. 26464/2015 P. SELVI & ORS.,
Vs.

THE STATE OF TAMIL NADU & ORS., G.SIVABALAMURUGAN
MR. L. K. PANDEY
  SLP(C) No. 26256-26257/2015 STATE OF TAMIL NADU, REP. BY ITS SECRETARY TO GOVT., SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT AND ORS.
Vs.

S. VINCENT AND ORS MR. M. YOGESH KANNAG.SIVABALAMURUGAN

  SLP(C) No. 31629-31642/2014 P. MEKALA & ORS. ETC. ETC.
Vs.

THE STATE OF TAMIL NADU & ORS. ETC. ETC.

8ம் வகுப்புக்கு தனித்தேர்வு கட்டாயம்கல்விக்குழு பரிந்துரை.

8ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு கட்டாயம் என்றும் ஆல் பாஸ் செய்யக் கூடாது என்றும் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வதற்கு கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய துணைக் குழு ஒன்றை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியது. இந்தக் குழுவிற்கு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் தல்ஜித் சிங் சீமா தலைமை ஏற்றுள்ளார்.இந்தக் குழு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் 189 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

கல்வியின் தரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட இந்த குழு, சில பரிந்துரைகளை அதில் அளித்துள்ளது.8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்க கூடாது என்று இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் தனித் தேர்வை அறிமுகம் செய்து நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.கல்விக்கான நிதி ஒதுக்கீடு மற்ற நாடுகளில் உள்ளது போன்று, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் ஆரம்ப பள்ளி மற்றும்துவக்கப் பள்ளிகளுக்கான செலவை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளன.மேலும், கிராமங்களில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பை அதிகரிப்பதும், கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவதும் மிக அவசியம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

பொதுத்தேர்வு மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. 

இதற்காக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடந்த மாதம் காலாண்டு தேர்வு நடந்து முடிந்தது. 

 மேலும் டிசம்பர் மாதத்திற்குள் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான பாடங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு கற்பித்து முடிக்கவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதியும், பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்காகவும், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் பள்ளி நாட்களில் விடுப்பு எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பொதுத்தேர்வு வருவதற்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பாடங்களையும், முடித்து, மாணவர்களை தேர்விற்கு தயார்படுத்தவேண்டும். முழுப்பாடங்களை கொண்டுதான் அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இதை வைத்து மாணவர்களின் தேர்ச்சியை ஓரளவிற்கு அறியமுடியும். இதனால் அரையாண்டு தேர்வு முடிந்தவுடன், நன்கு பாடம் கற்பிக்கும் மாணவர்கள் மற்றும் மெல்ல பாடம் கற்பிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஏற்றார்போல், சிறப்பு பயிற்சிகள் மற்றும் எழுத்து தேர்வுகளை நடத்தப்படும். இதனால் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆசிரியர்கள் அடிக்கடி விடுப்பு எடுக்க பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது’ என்றனர்.

ஏழு மாவட்ட ஆசிரியர்க்கு மூன்று நாள் பயிற்சி !!

சென்னை உள்ளிட்ட, ஏழு மாவட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, சென்னை அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகத்தில், மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து, மண்டல அளவிலான, பள்ளிகளுக்கான தர மேம்பாட்டு பயிற்சி முகாமை நடத்திவருகின்றன.
மூன்று நாள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமை, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா துவக்கி வைத்தார்.

இப்பயிற்சியில், உதவி கல்வி அலுவலர், ஆசிரிய பயிற்றுனர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.பள்ளிகளில் தரத்தை மேம்படுத்தவும், மதிப்பீட்டு முறைகள் சார்ந்த புதிய அணுகுமுறைகளை தெரிந்து கொள்ளவும் இந்த பயிற்சி நடந்தது. இன்றுடன், நிறைவுபெறும் இந்த பயிற்சி முகாமில், சென்னை,காஞ்சிபுரம், கடலுார், வேலுார், திருவண்ணாமலை,விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த, 143 பேர் பங்கேற்றனர்.

MINORITY SCHOLARSHIP விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - விண்ணப்பிக்கும் வழிமுறைகள், அறிவுரைகள் - செயல்முறைகள்



32 லட்சம் DEBIT CARD PIN NO. களவு - உடனடியாக உங்கள் ATM. PIN நம்பரை மாற்றுங்கள்? வங்கிகளின் #HighAlert!

சில சமயங்களில் வங்கிகளிடம் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். உங்கள் ஏ.டி.எம் பின்கோட் எண்ணை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இந்த செய்தி பாதுகாப்பை மேம்படுத்த மட்டுமே என வந்திருக்கும். 
நம்மில் பலர் அந்த செய்தியை ''ஜஸ்ட் லைக் தட்''  கடந்து செல்வதையே வாடிக்கையாக வைத்திருப்போம். ஆனால் அதன் விளைவு எவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறது தெரியுமா? 32 லட்சம் டெபிட் கார்டுகளின் பின் நம்பர்கள் களவு போய்யுள்ளதாகவும், இதில் பெருமபாலான கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் பின் நம்பரை மாற்ற சொல்வது ஏன்?
இந்தியாவில் 32 லட்சம் டெபிட் கார்டுகளை மாற்றித் தரவோ அல்லது  வாடிக்கையாளர்களை பின் நம்பரை மாற்றவோ சொல்ல வங்கிகள் முடிவெடுத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் சீனாவில் அங்கீகாரமற்ற முறையில் இந்த எண்கள் பயன்படுத்தப்பட்டு கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுகிற‌து என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.  இந்த பரிமாற்றங்கள் சீனாவில் ஏ.டி.எம், பொருட்களை பர்சேஸ் செய்யும் இடம் போன்ற இடங்களில் பதிவாகியுள்ளது.

வாடிக்கையாளரின் தகவல்கள் திருடப்பட்டு அதே போன்ற கார்டுகள் க்ளோனிங் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. மொத்தமுள்ள 32 லட்சம் கார்டுகளில் 26 லட்சம் கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டு வகைகளை சேர்ந்தது என்றும், மீதமுள்ள 6 லட்சம் கார்டுகள் ரூ-பே கார்டுகள் என்றும் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான  கார்டுகள் எஸ்.பி.ஐ மற்றும் ஹச்.டி.எஃப்.சி வங்கிகளைச் சேர்ந்த கார்டுகளாக உள்ளன.
எஸ்.பி,ஐ 6 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இந்த விஷயம் தொடர்பாக புதிய கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறது. வங்கிகள் எண்களை மாற்ற சொல்கிறது என்பதை சாதாரண விஷயமாக கருதாமல் அதனைக் கொஞ்சம் சீரியசாக அணுகுங்கள். வங்கிகள் அடிக்கடி பின் நம்பரை மாற்றுவது நினைவில் வைத்துக் கொள்ள கடினமாக தான் இருக்கும் ஆனால் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுங்கள் என்கின்றன வங்கிகள்.
உங்கள் எண்கள் இந்த 32 லட்சம் எண்களில் இருக்கறதோ? இல்லையோ? பாதுகாப்புக்காக உங்கள் ஏ.டி.எம்  பின் நம்பரை உடனடியாக மாற்றி விடுங்கள்.
தகவல்கள் எப்படி திருடப்படுகின்றன?
நமக்கு மட்டுமே தெரிந்த நமது பின் நம்பர், கார்டு எண்கள் எப்படி திருடப்படுகின்றன. அதுவும் சீனாவில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு பின்வரும் காரணங்கள் முக்கியமானவையாக கூறப்படுகின்றன.
1. பர்சேஸ் செய்ய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தும் இடத்தில் ''ஸ்கிம்மர்கள்'' எனும் கருவி ஸ்வைப் செய்யும் கருவியுடன் இணைக்கப்பட்டு மொத்த தகவலும் எடுக்கப்படலாம்.
2. ஏ.டி.எம் நிலையங்களிலேயே ஸ்கிம்மர்கள் பொருத்தப்பட்டு அனுமதியற்ற முறையில் தகவல்கள் திருடப்படலாம்.
3. போலியான இணையதளங்களில் பணப்பரிவர்த்தனை செய்வது முறையற்ற முறையில் ஸ்க்ரீன் கேப்சர் செய்யப்படுவது.
4. அதிகாரபூர்வமற்ற வங்கி ஆப்ஸ்கள் மூலமாகவும் தகவல்கள் திருடப்படுகிறது.
இப்படியெல்லாம் திரட்டப்படும் தகவல்கள் குறிப்பிட்ட பெரிய தொகைக்கு  விற்கப்படுகிறது. இப்படித் தான் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு பணம் திருடுபோகிறது.

என்ன செய்ய வேண்டும்?
1. வங்கிகளின் இணையதளங்களை நீங்களே டைப் செய்து செல்லுங்கள். இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்-ல் வரும் லின்க்களை க்ளிக் செய்யாதீர்கள்.
2.வங்கிகளின் முறையான ஆப்ஸை மட்டுமே பயன்படுத்துங்கள்.
3. பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இங்கெல்லாம் டெபிட் கார்டை பயன்படுத்தும்போது அந்த கருவிகளில் வித்தியாசமாக ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.
4. ஆன்லைன் ஆர்டர்களை கூடியமட்டில் கேஷ் ஆன் டெலிவரியாக செய்யுங்கள்
5. ப்ரெளசிங் சென்டர்களில் பணப்பரிவர்த்தனை செய்வதை தவிருங்கள்.

8ம் வகுப்புக்கு தனித்தேர்வு கட்டாயம்..கல்விக்குழு பரிந்துரை.

8ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு கட்டாயம் என்றும் ஆல் பாஸ் செய்யக் கூடாது என்றும் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வதற்கு கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய துணைக் குழு ஒன்றை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியது. இந்தக் குழுவிற்கு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் தல்ஜித் சிங் சீமா தலைமை ஏற்றுள்ளார்.இந்தக் குழு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் 189 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

கல்வியின் தரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட இந்த குழு, சில பரிந்துரைகளை அதில் அளித்துள்ளது.8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்க கூடாது என்று இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் தனித் தேர்வை அறிமுகம் செய்து நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.கல்விக்கான நிதி ஒதுக்கீடு மற்ற நாடுகளில் உள்ளது போன்று, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் ஆரம்ப பள்ளி மற்றும்துவக்கப் பள்ளிகளுக்கான செலவை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளன.மேலும், கிராமங்களில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பை அதிகரிப்பதும், கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவதும் மிக அவசியம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.