யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/5/17

இணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்: செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன??

சமீபத்தில் உலகம் முழுவதும் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை சர்வர்களை பதம்பார்த்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழி முறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை 
(கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மால்வேர் டெக்’ என்னும் பாதுகாப்பு அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள், ஓரளவு இந்த வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று நடைபெறலாம் எனவும் அவர்கள் யூகித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதில்,

1. கணினியின் இயங்கு தளமான (ஆபரேடிங் சிஸ்டம்) விண்டோஸ் பழைய வெர்சனாக இருந்தால் அதை தற்போது உள்ள புதிய வெர்சனுக்கு (விண்டோஸ் 10) ஏற்றது போல அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

2. ஒருவேளை நீங்கள் பழைய ஆபரேடிங் சிஸ்டமை (விண்டோஸ் XP, 7, விஸ்டா) பயன்படுத்தி வந்தால், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அதற்கான அவசர பாதுகாப்பு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

3. கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் உள்ளிட்ட முக்கிய சாப்ட்வேர்களை தற்போது வரை சரியான அப்டேட்களை செய்து கொள்ள வேண்டும்.

4. கணினியில் இணைய வசதிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் முக்கியமாக பயர்வால் (firewall) வசதியை கண்டிப்பாக ஆக்டிவ் செய்ய வேண்டும். ஆக்டிவாக இருந்தாலும் இணைய வழி ஊடுருவலை தடுக்கும் வகையில் பயர்வால் அமைப்புகளை (setting) மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

5. சர்வரில் இருந்து தகவல்களை அனுப்பும் அமைப்பை தற்காலிகமாக செயலிழக்க செய்யுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

6. கணினியில் உள்ள தேவையான தகவல்களை பேக்அப் (Backup) செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தகவல்கல் இழப்பை தடுக்கலாம்.

7. முன் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் இ-மெயில் தகவல்களை திறந்து வாசிக்க முயற்சிக்க வேண்டாம். விளம்பரம் உள்ளிட்ட தேவையற்ற இ-மெயில்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.

கணினியை ஆன் செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டியவை:

1. கணினியின் சர்வர் மற்றும் நெட்வொர்க் ஸ்விட்சுகளின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

2. வை-பை இணைப்பு, லேன் (LAN) இணைப்பு, ரூட்டர்கள் ஆகியவற்றை துண்டித்து ஆப் செய்து வைக்க வேண்டும்.

3. ஸ்மார்ட் டி.வி, டேப்லட், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஆப் செய்து வைக்க வேண்டும்.

4. கணினி, மொபைல் ஆகியவற்றில் ப்ளூ டூத், ஹாட்ஸ்பாட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம்.

5. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறிது நாட்களுக்கு இணைய இணைப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம்.

மேற்கண்ட அனைத்தையும் செய்யாமல் உங்களது மொபைல், கணினி, ஸ்மார்ட் டி.வி, டேப்லட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் பள்ளிகல்வித்துறை செயலாலர் திரு. உதயசந்திரன் !!

எப்பொழுது வரும், எப்பொழுது வருமென்று விடியலுக்காய் ஏங்கித் தவம் கிடந்தவா்களுக்கு, பள்ளிக் கல்விச் செயலராய் பொறுப்பேற்ற நாள் முதல் நன்னம்பிக்கை முனையாக  நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சி வருகிறார்.  உயா்திரு. த.உதயசந்திரன் இ.ஆ.ப அவா்கள்.

 பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு இம் மேமாதத்தில் தலைசிறந்த எழுத்தாளா்கள், கல்வியாளா்கள், சிந்தனையாளர்கள் போன்ற ஆளுமைகளைக் கொண்டு பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளைப் பயனுற வழங்குதல், தமிழ் விக்கிப் பீடியாவை முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளுதல், பாடத்திட்டம் மாற்றப் பரிசீலனை, ஆசிரியா்கள் சங்கப்  பொறுப்பாளா்களுடன் கலந்துரையாடல், தினந்தோறும் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டம் நிகழ்த்த வலியுறுத்தல், ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் தனித்தனியே பத்திரிகைகளைத் துவக்குதல், பொதுத் தோ்வு முடிவுகளில் தரவரிசை ஒழிப்பு, அரசுப் பள்ளிகளின் தரமுயா்த்துவதில் சிறப்புக் கவனம் செலுத்துதல், கல்வி அதிகாரிகளைத் தானே நேரடியாகக் கண்காணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தல் போன்ற பல்வேறு ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள் மூலம் வரும் கல்வியாண்டை வளமான கல்வியாண்டாக வளா்ச்சிப் பாதையில் செலுத்திட செயல்திட்டங்களை வகுத்து வருகிறார்..

56,000 ஐ.டி ஊழியர்கள் வேலை பறிபோகும் அபாயம்" : என்னதான் காரணம்?

இந்தியாவைச் சேர்ந்த 7 முன்னணி ஐ.டி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 56,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளன.
இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களாக கருதப்படும் இன்போசிஸ், விப்ரோ,டெக் மகேந்திரா,காக்னிசண்ட்,டி.எக்ஸ்.சி டெல்னாலஜிஸ், கேப் ஜெமினி ஆகிய நிறுவனங்களில் சுமார் 1.24 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 4.5 சதவீத ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப அந்த நிறுவனங்கள் தற்போது முடிவெடுத்துள்ளன. அதாவது கிட்டத்தட்ட 56,000பேருக்கு லே ஆஃப் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 டி.எக்ஸ்.சி நிறுவனம் தங்களிடம் வேலை பார்க்கக் கூடிய 1,70,000 ஊழியர்களில் 10,000 பேருக்கு லே ஆஃப் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு லே ஆஃப் கொடுக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காகும். லே ஆஃப் கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பதிலாக, பிரஷர்ஸ் எனப்படும் புதிய, சம்பளம் குறைவாக பெறக் கூடிய பொறியியல் பட்டதாரிகள் வேலைக்கு எடுக்கப்பட உள்ளனர்.

இந்த வேலை நீக்க நடவடிக்கையின் முதல் கட்டமாக, லே ஆஃப் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ள ஊழியர்கள் ”பக்கெட் 4 ”என்ற பெயரில் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உயர் பதவிகளில் உள்ள 3000 மேலாளர்களும் அடக்கம்.ஆனால் இந்த வேலை நீக்க நடவடிக்கைகள் என்பது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடியது எனவும் பெர்பார்மென்ஸ் அடிப்படையில் வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மாறும் எனவும் ஐடி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் முன்னேறி வரும் தொழில் நுட்பம் மற்றும் வியாபார நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்ள, இந்த லே ஆஃப் நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என இந்திய ஐ.டி நிறுவனங்கள் காரணம் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 16 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.17-இல் (உள்ளூர் வரி தவிர்த்து) இருந்து ரூ.68.26-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் ரூ.60.71-இல் இருந்து, ரூ.58.07-ஆக விலை சரிந்துள்ளது.
இதேபோல், தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.68.09-இல் இருந்து ரூ.65.32-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.57.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் டீசல் தற்போது ரூ.54.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.72க்கும், டீசல் ரூ.60.47க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.68.21-க்கும், டீசல் ரூ.57.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைந்ததால், இந்த விலைக் குறைப்பை நடைமுறைப்படுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FLASH NEWS : போக்குவரத்து ஊழியர்கள் மீது "எஸ்மா" சட்டம் - ஐகோர்ட் உத்தரவு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.


பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒத்தக்கடையை சேர்ந்த செந்தில் குமரய்யா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று மாலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் சட்டவிரோதம் ஆனது. உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மாணவர் சேர்க்கை தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் தலைமையில் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் உடன் சென்னையில் இன்று (16.05.2017) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!!.

1. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த முடிவு. இதில் ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளையும் ஈடுபடுத்த முடிவு.

2. தொடக்க , நடுநிலைப்பள்ளிகளில் பதிவுத்தாள் (RECORD SHEET) பதில் மாற்றுச்சான்றிதழ் (TC) வழங்கப்படும் ( ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு).

3. வரும் ஆண்டுமுதல் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் சிறப்பான திட்டமிடலுடன் வழங்கப்படும்.

தகவல்:-பெ.பரமசாமி,
மாநில தலைவர்.
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை.

தமிழகத்தில் 7வது ஊதியக்குழு இன்று கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது

**7வது ஊதியக்குழு பரிந்துரை ஆலோசனைக்கூட்டம் நிதித்துறை கூடுதல் செயலர் சண்முகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

**இதில் தமிழக அரசின் தற்போதைய ஊதியம்,ஓய்வூதிய விகிதங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

**மேலும் வரும் மே 26,27 மற்றும் ஜூன் 2,3 ஆகிய தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட  மற்றும் அங்கிகரிக்கப்படாத அலுவலர் மற்றும் ஓய்வூதிய நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

7/5/17

GPF/TPF Account Statement-Now Available for the year 2014-15 & 2015-16

உங்கள்  TPF  கணக்கை  
நீங்களே   சரிபார்க்க  வேண்டும்.நீங்கள்உடனடியாக 
செய்யவேண்டியவை :



www.agae.tn.nic.in   என்ற   முகவரிக்குச்   சென்று ,

download TPF account statements for the year 2014-15 /2015-2016 என்ற option  ஐ  click  செய்யுங்கள் .


Log in page  வரும் ,  அதில்

GPF no : ( உங்கள்  TPF  எண் .)

Dob :(  உங்கள்   பிறந்த   தேதி ).

Suffix : PTPF

என   கொடுத்து  login  செய்யுங்கள் .


உங்கள்   பெயருடைய  AG  பக்கம்   தோன்றும் .  அதில்

view account slip  ஐ  click  செய்தால்  financial year கேட்கும் ,  அதில் 2014-15 / 2015-16 select  செய்து  view account slip ஐ  click  செய்தால் 2014-15 / 2015-16 ஆம்   ஆண்டிற்கான  account slip download ஆகிவிடும் .  அதை  print  எடுத்துக்கொள்ளுங்கள் .


Print out  செய்த  account statement  ல்  -

1)  உங்கள்   பெயர்

2) TPF  கணக்கு   எண்

3)  பிறந்த   தேதி

4)  கருவூலத்தின்   பெயர்

5)  வட்டிவீதம்

6) 12  மாத   சந்தா   பிடித்தம்   பதிவுகள் ,  கடன்  செலுத்தியபதிவுகள் ,  பெற்ற   கடன்   பதிவுகள்

7) opening/closing balance

8)  விடுபட்ட   சத்தா   விவரங்கள்

9)  கணக்கு   அதிகாரியின்   கையொப்பம் .

என   எல்லா   விவரங்களையும்  சரிபார்த்துக்கொள்ளுங்கள் .



Mobile update  சென்று   உங்கள்  mobile  எண்ணை  பதிவுசெய்யுங்கள் .   கடைசியாக  logout  கொடுத்து  வெளியேறுங்கள் .

நீட்’ தேர்வு; மூக்குத்தி, மோதிரம், பைஜாமாவுக்கு தடை

மருத்துவ படிப்பில் சேருவதற்கான, ’நீட்’ நுழைவுத் தேர்வு நாளை நடக்கிறது. இந்தத் தேர்வில் பங்கேற்போர், மூக்குத்தி, மோதிரம் போன்ற ஆபரணங்களும், குர்தா, பைஜாமா போன்ற உடைகளும் அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இந்த ஆண்டு முதல், ’நீட்’ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்நிலையில், ’நீட்’ தேர்வு நாடு முழுவதும், நாளை நடக்கிறது. 

தமிழகத்தில், 80 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும், 11.35 லட்சம் பேர், இந்தத் தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், வேலுார், திருநெல்வேலி உட்பட, நாடு முழுவதும், 103 நகரங்களில், ’நீட்’ தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

 காலை, 10:00 மணிக்கு தேர்வு துவங்கி, பகல், 1:00 மணிக்கு முடியும்; 9:30 மணி வரை மட்டுமே, தேர்வறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வருவோருக்கு அனுமதி இல்லை. தேர்வு மைய வாசலில், ’நீட்’ இணையதள நேரப்படி இயங்கும் கடிகாரம் இருக்கும். 

அந்த நேரப்படியே தேர்வுகள் நடக்கும் தேர்வறைக்குள், பாஸ்போர்ட் வடிவில் புகைப்படம் ஒட்டப்பட்ட, ஹால் டிக்கெட்; போஸ்ட்கார்டு வடிவில் புகைப்படம் ஒட்டப்பட்ட, ’புரோபர்மா’ படிவம் மற்றும் தேர்வறையில் பதிவேட்டில் ஒட்டுவதற்கு, ஒரு பாஸ்போர்ட் வடிவ புகைப்படம் மட்டுமே அனுமதிக்கப்படும்.

தேர்வறையில் பேனா வழங்கப்படும்  காலை, 7:30 மணி முதல், 9:30 மணி வரை, தேர்வறையில் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். 9:30 முதல், 9:45 மணி வரை, ஹால் டிக்கெட் சோதனை நடக்கும். 9:45க்கு வினா, விடைத்தாள் உறை வழங்கப்படும். 

9:55க்கு உறையை பிரித்து, 10:00 மணிக்கு தேர்வை எழுதலாம் 
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அசாமி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில், வினாத்தாள்கள் வழங்கப்படும். 

எந்த மொழிக்கு, தேர்வர்கள் விண்ணப்பித்தார்களோ, அதில் வினாத்தாள் வழங்கப்படும்; அதே மொழியில் பதில் எழுதலாம்.
பேனா, பென்சில், எழுத்தை அழிக்கும் ரப்பர், எந்த விதமான வெற்று அல்லது எழுத்துகள் கொண்ட காகிதம், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள். 

மொபைல்போன், பேஜர், இயர்போன், ஹெல்த் பேண்ட் உள்ளிட்ட மின்னணு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை 
தொப்பி, கைப்பை, தோள் பை, பெல்ட், கேமரா, வாட்ச், பிரேஸ்லெட், மோதிரம், காது வளையம், மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஜிமிக்கி உள்ளிட்ட அனைத்து வகை ஆபரணங்கள், தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள், பாக்கெட் வகை நொறுக்கு தீனி போன்றவற்றையும் கொண்டு செல்லக்கூடாது 
’ஹாப் ஸ்லீவ்ஸ்’ என்ற, அரை கை உடைய, மெல்லிய ஆடைகளை அணிந்து வர வேண்டும். 

பெரிய பொத்தான், பேட்ஜ், பூ போன்ற சிறப்பு அலங்காரம் கூடாது. சல்வார் மற்றும் பேன்ட் அணிந்து வர வேண்டும். ஹீல்ஸ் அதிகம் இல்லாத சாதாரண வகை, செருப்புகள் மட்டுமே அணிந்திருக்க வேண்டும். ஷூ, சாக்ஸுக்கு அனுமதி கிடையாது.

அடையாள அட்டை அவசியம்

’நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தோரில் சிலர், புகைப்படம் மற்றும் கையெழுத்தை மாற்றி பதிவேற்றியுள்ளனர். எனவே, ஹால் டிக்கெட்டில் புகைப்படம் மாறி வந்த தேர்வர்கள், தங்களின் அசல் ஆதார் அட்டை அல்லது அரசு வழங்கிய ஏதாவது ஒரு அடையாள அட்டையை, தேர்வு மையத்துக்கு கட்டாயம் எடுத்து வரவேண்டும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

ஏழை மாணவர்களுக்கு இலவச ’அட்மிஷன்’;அலட்சியத்தால் ரூ.320 கோடி நஷ்டம்

இலவச மாணவர் சேர்க்கையில், மத்திய அரசு உத்தரவை, தனியார் பள்ளிகள் பின்பற்றாததால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம், தமிழகத்தில், 2010 ஆகஸ்டில் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, ஏழை மாணவர்கள், தனியார் பள்ளிகளில்,கட்டணமின்றி சேர்க்கப்பட வேண்டும்.


தனியார் பள்ளியில் உள்ள இடங்களில், 25 சதவீதத்தை, இத்தகைய ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டியது கட்டாயம். ஐந்து வயது முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டணமின்றி கல்வி வழங்க வேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்கும். 

தமிழக அரசு, அந்த நிதியை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பிரித்து வழங்கும். மத்திய அரசு சட்டப்படி, ஐந்து வயது முடிந்த குழந்தைகள், ஒன்றாம் வகுப்பில், இலவசமாக சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இந்த சட்டத்தை செயல்படுத்துவதில், தமிழகத்தில் மட்டும் குளறுபடியான நடைமுறை உள்ளது.

அதாவது, தமிழக தனியார் பள்ளிகளில், மழலையர் வகுப்பு என்ற பெயரில், எல்.கே.ஜி.,யில், இலவசமாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதிலும், மூன்று வயது நிரம்பிய குழந்தைகள் தான் சேர்க்கப்படுகின்றனர். 

இது, மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக உள்ளதாக, மத்திய மனிதவள அமைச்சகம், பலமுறை எச்சரித்துள்ளது. ஆனாலும், தமிழக பள்ளிக் கல்வித் துறை கண்டுகொள்ளவில்லை. அதனால், 2011 முதல், மத்திய அரசு நிதி வழங்கு வதை நிறுத்தியது. எனவே, ஒவ்வொரு ஆண்டும், இலவச மாணவர் சேர்க்கைக்காக, தமிழக அரசுக்கு, 120 கோடி ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது. 

இது குறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது

மத்திய சட்டப்படி, ஒன்றாம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வகையில், தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதன்பின், இலவச மாணவர்சேர்க்கைக்கான நிதியை, மத்திய அரசிடம் இருந்து பெற முடியும். ஆனால், தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது. அதனால், இதுவரை, 320 கோடி ரூபாயை இழந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நல்ல புத்தகம் ஒரு வழிகாட்டி!

நான்காக பிரிந்திருக்கும் ஒரு சாலையின் நடுவே, ஒரு கை காட்டி நான்கு திசைகளையும் காட்டிக் கொண்டு நிற்கும்! இந்த திசையில் போனால் இந்த ஊருக்குப் போகலாம்; இந்த வழியில் போனால் அந்த ஊருக்குப் போகலாம் என்று, நமக்கு நான்கு திசைகளில் எங்கு, எங்கு போக முடியும் என்று நமக்கு வழி காட்டும்!


அது ஒரு தகவல் பலகை... நமக்கு வழி காட்டுவது தான் அதன் வேலை!  அதே, நம்மை அந்தந்த ஊர்களுக்கு கூட்டிக்கொண்டு போய் விடாது; அது போல் தான் புத்தகமும்!  நல்ல புத்தகம் ஒரு வழிகாட்டி! அதுவும் ஒரு தகவல் பலகை தான்!

மனிதன் சுயமாக எப்படி முன்னேறுவது என்று ஆயிரம் புத்தகங்கள் வந்து விட்டன. பல வீடுகளில் அலமாரி நிறைய இது போன்ற புத்தகங்கள் அடுக்கி வைத்திருப்பார்கள்.

கோடீஸ்வரன் ஆவது எப்படி?
சுலபமாக தொழிலதிபர் ஆக வேண்டுமா?
ஆட்சியைப் பிடிப்பது எப்படி?
நீங்கள் டாக்டர் ஆக வேண்டுமா?
என்ற பல தலைப்புகளில் புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். அந்தப் புத்தகங்களில் பல அறிஞர்கள் தங்கள் வாழ்நாளில் பட்ட அனுபவங்களை, நமக்கு வழி காட்ட எழுதி வைத்திருப்பார்கள். அது நிச்சயம் நமக்குப் பயன்படும்!

எவ்வளவு நல்ல புத்தகமாக இருந்தாலும், நாம் அதைப்  படிப்பதினால் மட்டும் எந்த பயனும் இல்லை. அந்த புத்தகத்தில், அறிஞர்கள் சொன்ன, நல்ல கருத்துகளை நாம் செயல்படுத்த தொடங்கினால் மட்டுமே, அது நமக்கு பலன் தரும்!

அதில் சொல்லப்பட்ட வழிகளைப் பின்பற்றி அயராது பாடுபட வேண்டும். எந்த தடை குறுக்கிட்டாலும் அஞ்சாமல் அதை தகர்த்து எறிந்து விட்டு முன்னேற வேண்டும். கோடிஸ்வரன் ஆக வேண்டுமா? என்ற புத்தகத்தை வாங்கி, அதைப்படித்து விட்டு அட்டை போட்டு புத்தக அலமாரியில் அடுக்கி வைத்து விட்டு, பக்கத்து தெருவில் இருக்கும் ஏ.டி.எம்., மிஷினில் போய் கார்டை சொருகி பணத்தை அள்ளிக் கொண்டு வந்து விட முடியாது!

அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழி முறைகளை கடைப் பிடிப்பதற்காக, நம்மையே நாம் அர்ப்பணிக்க வேண்டும். ‘ஏட்டுச் சுரைக் காய் கறிக்கு உதவாது’ என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அதைப் பலர் தவறாக இன்று வரை பொருள் கொண்டிருக்கிறார்கள். ‘இது போன்ற புத்தகங்கள் எல்லாம் நம் வாழ்க்கைக்கு உதவாது’ என்ற அர்த்தத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையான சுரைக்காய் மட்டும் கறி ஆகி விடுமா? அதே பொரியலாக மாறி உங்கள் தட்டிற்கு வந்து விடுமா? நிச்சயம் வராது. அதை சுத்தம் செய்து பொடிப் பொடியாக அரிந்து அதற்கு தேவையான பொருட்களைச் சேர்த்து அடுப்பில் வைத்து சமைத்தால் மட்டுமே அதை கறியாக, நம்மால் சாப்பிட முடியும்!

அது போல் தான் இந்த வகை புத்தகங்களும், நிச்சயம் கறிக்கு உதவும்! எப்பொழுது? அதைப் படித்தவுடன், அதில் சொன்ன விஷயங்களை, புரிந்து கொண்டு, செயல்படுத்தி பாருங்கள்! நிச்சயம் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக அமையும்! 

-துடுப்பதி ரகுநாதன்

இடைநின்ற குழந்தைகள் அதிகாரிகள் கள ஆய்வு

அருப்புக்கோட்டை வட்டார வளமையத்தில், 6-14 வயதுள்ள இடை நின்ற குழந்தைகள் மற்றும் மாற்று திறன் கொண்ட குழந்தைகள் கள ஆய்வு நடந்தது. 


பாலவநத்தம், குல்லுர்சந்தை, செம்பட்டி, பாலையம்பட்டி, பந்தல்குடி, சுக்கிலநத்தம் ஆகிய பகுதிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்பு திட்டம், சைல்டு லைன் (1098), உமன் தொண்டு நிறுவனம் இணைந்து ஆய்வு நடத்தியது.

இதுவரை 45 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, திட்ட அலுவலர் நல்லதம்பி, ஒருங்கிணைப்பாளர் ஜெயஅனிட்டா ஆலோசனை வழங்கினர். 

ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், சைல்டு லைன், உண்டு உறைவிட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சங்கீதா செய்தனர்.

முதுகலை மருத்துவ வழக்கு; 3வது நீதிபதி இன்று உத்தரவு

முதுகலை மருத்துவப் படிப்பில் சேர, அரசு டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் நடைமுறை குறித்த வழக்கில், மூன்றாவது நீதிபதி, இன்று உத்தரவு பிறப்பிக்கிறார்.


இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்த விதிகளின்படி, முதுகலை மருத்துவப் படிப்பில், அரசு டாக்டர்களை சேர்க்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது.

மனுக்களை விசாரித்த, நீதிபதிகள், சசிதரன், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, ’சிறப்பு பெஞ்ச்’ மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்தது. அதனால், இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு சென்றது.

நீதிபதி சத்தியநாராயணன், இந்த வழக்கை விசாரித்தார். நேற்று, மருத்துவப் கவுன்சில் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதாடினார். அனைத்து தரப்பு வழக்கறி ஞர்களின் வாதங்களும் நேற்று முடிந்தது. 

இதையடுத்து, மனுக்கள் மீதான உத்தரவை, இன்று பிறப்பிப்பதாக, நீதிபதி சத்திய நாராயணன் தெரிவித்தார்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரையில் பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் திவ்யநாதன் தலைமையில் நடந்தது.


செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் கணேசன், ஜான்சிராணி, ஜெசின்தாமேரி முன்னிலை வகித்தனர். 
தலைவர் பொன்செல்வராஜ், துணை தலைவர் முகிலன், பொருளாளர் தமிழ்மணியன் பேசினர். 

கூட்டத்தில், பொது மாறுதல் கலந்தாய்விற்கு முன் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் உள்ள சிக்கலுக்கு தீர்வுகாண வேண்டும், அரசாணை 720ல் மாற்றமோ, திருத்தமோ செய்யக் கூடாது, ஆசிரியர்களுக்கு தற்போதுள்ள தன் பங்களிப்பு திட்டத்திற்கு (சி.பி.எஸ்.,) பதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை (ஜி.பி.எஸ்.,) அமல்படுத்த வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதுகலை பட்ட படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவு தேர்வு

மதுரை காமராஜ் பல்கலையில் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படும்,‘ என பதிவாளர் (பொறுப்பு) ஆறுமுகம் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது: மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள முதுகலை பட்டப் படிப்புகளில், சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எம்.எஸ்.சி., பயோ டெக்னாலஜி, மரபணுவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.பி.ஏ., படிப்புகளுக்கு அதிக போட்டி ஏற்படுகிறது. திறமையான மாணவரை தேர்வு செய்யும் வகையில், 
அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மே 27, 28 ல் தேர்வு நடக்கும். மே 15க்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதுபோல் எம்.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், எம்.ஏ., ஆங்கிலம், தமிழ் உட்பட சில படிப்புகளுக்கு மாநில அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படும். 

இதற்கான தேர்வு ஜூன் 18 ல் நடக்கிறது. இதற்கு மே 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள படிப்புகளுக்கு நுழைவு தேர்வு இல்லை, என்றார்.

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நாளை மாலை தீர்ப்பு

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை வழக்கில் பின்பற்றும் விதிமுறை குறித்து நாளை (மே -6 ) மாலை 4.30 தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 


இதில் எம்.சி.ஐ விதிகளா ? தமிழக அரசு விதிகளா என்பது குறித்து நாளை மே 6 மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க கிராமப்புற பள்ளி அசத்தல்மே 06,2017,10:29 IST

அவிநாசி அருகே கிராமப்புற அரசு பள்ளி நிர்வாகத்தினர், அதிகளவில், மாணவரை பள்ளியில் சேர்க்க, ‘பிளக்ஸ்’ வைத்து, விளம்பரம் செய்து அசத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பஞ்சலிங்கம்பாளையத்தில், அரசு துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. கிராமப்புற பள்ளியாக உள்ளதால், குறைந்தளவிலேயே மாணவர் எண்ணிக்கை உள்ளது. 


இதை அதிகரிக்க, தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி வளர்ச்சிக்குழு, மேலாண்மை மற்றும் கிராமக்குழு உறுப்பினர்கள் திட்டமிட்டனர்.

அதற்காக, பள்ளியில் உள்ள சிறப்பம்சங்கள், கட்டமைப்பு வசதி உள்ளிட்டவை குறித்து, ‘பிளக்ஸ்’ பேனர் அச்சடித்து, அருகிலுள்ள கிராமங்களில் வைத்துள்ளனர். 

அதில், ‘திறமையான, கனிவான ஆசிரிய, ஆசிரியைகள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி, தமிழக அரசின், 14 நலத்திட்டங்கள், முற்றிலும் இலவச கல்வி, மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி வகுப்பு.

புரொஜெக்டர் முறையில் கற்றல் செயல்பாடு, யோகா மற்றும் கணிப்பொறி கல்வி, சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, காற்றோட்டமான வகுப்பறைகள், அறிவியல் அரங்கம், தரமான மதிய உணவு, குழந்தை நேயப்பள்ளி,’ உள்பட பல வசதிகள் குறி த்து விளக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், ‘கல்வித்துறையின் அறிவுரைப்படி, எங்களது பள்ளியில் மாணவர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதற்காக, அனைத்து வசதிகள் குறித்து, பேனரில் அச்சடித்து, பல இடங்களில் வைத்துள்ளோம். 

ஊர் மக்களின் ஒத்துழைப்போடு, சிறந்த முறையில் பள்ளியை செயல்படுத்தி வருகிறோம். பொதுத்தேர்விலும், 100 சதவீத தேர்ச்சி, நல்ல மதிப்பெண் பெற்று வருகிறோம்,’ என்றார்.

25/4/17

ரயில் பயணத்துக்கு உதவும் மெகா 'ஆப்' ஜூனில் அறிமுகம்.

ரயில் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவும், மெகா, 'ஆப்' வரும் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இது குறித்து, ரயில்வே வாரிய உறுப்பினர் முகம்மது ஜம்ஷெத், டில்லியில் நேற்று கூறியதாவது:
தற்போது பயன்பாட்டில் உள்ள, ரயில்வேயின் அனைத்து, 'ஆப்'களையும் உள்ளடக்கி, மெகா, 'ஆப்' ஒன்றை, ரயில்வே துறை உருவாக்கி வருகிறது. 'ஹைண்ட்ரயில்' எனப் பெயரிட திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆப் மூலம், ரயில்வே தொடர்பானஅனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், அதில் ஏற்படக்கூடிய தாமதம், ரயில் டிக்கெட் ரத்து, நடைமேடை எண், குறிப்பிட்ட ஒரு ரயிலின் தற்போதைய நிலை, ரயிலில், துாங்கும் வசதி இருக்கைக்கு வாய்ப்பு உள்ளதா, உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், இந்த ஆப் அளிக்கும்.டாக்சி சேவையை பதிவு செய்தல், போர்டர் சேவை,ஓய்வு அறை, ஓட்டல், சுற்றுலா பேக்கேஜ், இ - கேட்டரிங் போன்ற, சுற்றுலா தொடர்பான சேவைகளை, புதிய ஆப் மூலம் பெற முடியும். இந்த ஆப் மூலம், சேவை வழங்கும் நிறுவனங்களுடன், அதில் கிடைக்கும் வருவாயை, ரயில்வே பகிர்ந்து கொள்ளும்.

இதனால், ஆண்டுதோறும், ரயில்வேக்கு, 100 கோடி ரூபாய்வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.ரயில்கள் தாமதமாக வருவது பற்றி, பயணிகளுக்கு தகவல் கிடைக்காமை உள்ளிட்ட பல காரணங்களால், ரயில்வே துறைக்கு, பயணிகளிடம் இருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. அதுபோன்ற குறைபாடுகள், புதிய ஆப் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.இந்த புதிய ஆப், வரும் ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை: மத்திய அரசு விரைவில் அறிமுகம்.

அரசு மருத்துவர்களுடன், தொலைபேசி வழியாக, சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் வகையிலான திட்டம், விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னை, போரூர் ராமச்சந்திரா பல்கலையின், 25ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தங்கப் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.எம்.பி.பி.எஸ்., மாணவி உமா ரவிச்சந்திரனுக்கு, சிறப்பாகதேறியதற்காக, ஐந்து தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பல்கலையின் வேந்தர், பட்டம் பெற்ற, 365 மாணவர்களுக்கு, பட்டங்களை வழங்கினார்.

பதக்கங்களை வழங்கி, வெங்கையா நாயுடு பேசியதாவது:அரசு மருத்துவமனை இணையதளங்களின் வழியாக, மருத்துவர்களின் சந்திப்பு, மருத்துவ ஆய்வு அறிக்கைகள், தேவையான ரத்த வகைகளை அறிந்து கொள்ள, விரைவில் புதிய வசதிகள் செய்யப்படும். மேலும், சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை, தொலைபேசி வழியாக, டாக்டர்களிடம் தெரிந்து கொள்ளவுமான வசதிகளும், விரைவில் துவக்கப்படும். நம் மருத்துவர்கள், அமைதியாகவும், பொறுமையாகவும், மனிதாபிமானத்துடனும், மருத்துவம் செய்கின்றனர். அதனால், வெளிநாடுகளில் இருந்து பலர், மருத்துவ சுற்றுலாவுக்காக, சென்னை உள்ளிட்ட இந்திய பகுதிகளுக்கு வருகின்றனர்.ஆனாலும், நாட்டில், 1,668 பேருக்கு, ஒரு அலோபதி மருத்துவர் தான் உள்ளார். அதில், பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

பல்கலை துணைவேந்தர் மூர்த்தி பேசுகையில், ''இந்திய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில், 39வது இடம்; தேசிய தர மதிப்பீட்டு அங்கீகார கவுன்சிலின் தேர்வில், 3.62 புள்ளிகளுடன், 'ஏ கிரேடு' பெற்று, ராமச்சந்திரா பல்கலை முன்னிலையில் உள்ளது,'' என்றார்.

NEET' நுழைவு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில்,நீட் தேர்வை கட்டாயமாக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
ஆனால், தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

Download Admit  Card ::http://cbseneet.nic.in/cbseneet/Online/AdmitCardAuth.aspx

எனவே, கடந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளித்து, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த ஆண்டு, தமிழகம் தவிர மற்ற மாநிலங்கள், 'நீட்' தேர்வை ஏற்று கொண்டுள்ளன. தமிழகத்திற்கு விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

ஆனால், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வு, மே, 7ல் மாநிலம் முழுவதும் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 11.37 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, நேற்று, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. விண்ணப்ப எண்,பிறந்த தேதி மற்றும் ரகசிய குறியீடு மூலம், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு அறைக்கு வருவது குறித்த விபரங்களும், ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டு உள்ளது.

மதுரை காமராஜ் பல்கலை தேர்வு தேதி மாற்றம்.

மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட 72 கல்லுாரிகளில் பருவமுறைத் தேர்வுகள் ஏப்.,22ல் துவங்கின.இந்நிலையில் ஏப்.,29, 30ல் ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) நடக்க உள்ளது.
இதனால் ஏப்.,29ல் நடக்க இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அத்தேர்வுகள் ஜூன் ௨ அன்று நடத்தப்பட உள்ளது.மேலும், 'ஏப்.,25ல் அனைத்துக் கட்சி வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, வினாத்தாள்களை முன்கூட்டியே மையங்களுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது,'' என தேர்வாணையர் முத்துச்செழியன் தெரிவித்தார்.

பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு 'VISUAL' பாடப்புத்தகம்!

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, 'வீடியோ' பதிவுடன் கூடிய, பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாணவர்கள், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 'விஷுவல்' பாடப்புத்தகம் உருவாக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. 
ஏற்கனவே, முப்பரிமாண முறையில், பாடங்களை படத்துடன் படிக்கும், 'மொபைல் ஆப்' வசதியை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்தது.இந்நிலையில், அனைத்து பாடங்களையும், வீடியோ வடிவில் கொண்டு வர, பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. மாவட்ட வாரியாக, பாடத்தில் ஆர்வமும், அதை வீடியோவாக மாற்றும் திறனும் உடைய ஆசிரியர்களின் விபரங்களை அனுப்பி வைக்க,பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாநில கல்வியியல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்களை படித்து, அதை புரிந்து தேர்வு எழுதுவதில் சிரமம் உள்ளது; ஆசிரியர்களும் அனைத்து பாடங்களையும் நடத்துவதில்லை; நேரமின்மையால், சில பாடங்களை விட்டு விடுகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில், மாணவர்கள், வீடியோ காட்சியுடன் பாடத்தை கற்கலாம். அத்தகைய மாணவர்களுக்கான, சிறப்பு புத்தகமாக,இந்த வீடியோ பதிவுகள் இருக்கும். கோடை விடுமுறைக்கு பின், வீடியோ தயாரிப்பு பணி துவங்கி, அடுத்த கல்வியாண்டுக்குள் சோதனை பாடத்திட்டம் தயாராகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Teachers General Transfer 2017-18 :தொடக்கக்கல்வி இயக்குநரின் மூன்றாவது சுற்றறிக்கை

EMIS CORRECTION WORK - Announcement

*EMIS CORRECTION WORK*

வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து விலையில்லா திட்டங்களும் EMIS பதிவுகளைக் கொண்டே வழங்கப்படவுள்ளதால் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்களின் EMIS பதிவுகளில்

> இனம்
> பாட மொழி
> பஸ் பாஸ்
> சத்துணவு
> ஆதார் எண்போன்ற விவரங்களை சரி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- இணை இயக்குனர்  ( நிர்வாகம்)

பல்கலை.கள், உயர் கல்வி நிலையங்களில் விரைவில் ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் அமல்.

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும், உயர் கல்வி நிலையங்களும் விரைவில் பொதுவான ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளன. அத்திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வகுத்தளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் "மத்திய அமைச்சர்கள் ஹிந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும்' என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை நாடாளுமன்றக் குழு அண்மையில் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்தப் பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து விட்டார்.

இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் ஹிந்தி மொழி பயிற்றுவிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்க வேண்டும்.

மேலும், இது தொடர்பாக பொதுச் சட்டம் ஒன்றை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளைத் தொடங்குவதோடு, அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல், எந்தெந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் ஹிந்தி மொழிக்கான துறைகள் இல்லை என்பதை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கண்டறிய வேண்டும். அங்கு ஹிந்தி மொழிக்கான துறைகளை உருவாக்குமாறு ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

மேலும், அனைத்துக் கல்வி நிலையங்களிலும் குறைந்தபட்ச ஹிந்தி மொழி வழிக் கல்வி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டிருக்காத மாநிலங்களில், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் தேர்வுகளையும், நேர்முகத் தேர்வுகளையும் ஹிந்தி மொழியில் எழுதும் வாய்ப்பு இல்லாத பட்சத்தில், அவர்கள் தங்களின் தாய் மொழியில்

இத்தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட வேண்டும்.
உயர் கல்வித் துறையில் தன்னாட்சி அளிப்பதற்காக சில சட்டங்களை மத்திய அரசும், மாநில அரசுகளும் வகுத்து வந்தன. அவற்றின்படி சில பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக உள்ளது.

இந்நிலையில், அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் ஹிந்தி மொழி பயிற்றுவிப்பதற்காக சமச்சீரான ஒரு கொள்கை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களிடம் இருந்து எதிர்ப்பும், விமர்சனமும் எழலாம் என்று தெரிகிறது.

ஏற்கெனவே, கட்டாயமாக ஹிந்தி திணிக்கப்படுவதாகக் கூறி அதைத் தடுத்து நிறுத்துமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பல்வேறு மாணவர்கள் அமைப்புகள் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு சக்கர வாகன காப்பீடு பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

இரு சக்கர வாகன காப்பீடு, வாகனத்தை இழத்தல் அல்லது பல்வேறு காரணங்களால் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்புறுதியை அளிக்கிறது.

இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் இரண்டு வகைகளின் கீழ் வருகின்றன, அதாவது, விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்புறுதி திட்டம் என்பனவாகும்.

விரிவான காப்பீட்டுத் திட்டம்
ஒரு இரு சக்கர வாகன விரிவான காப்பீட்டுத் திட்டம் ஒருவேளை பின்வரும் எதிர்பாராத சம்பவங்கள் நேர்ந்தால் காப்பளிக்கிறது:
1. விபத்து அல்லது தீ விபத்து, மின்னல் வெட்டு, வெள்ளம் அல்லது நிலநடுக்கம் போன்ற காரணங்களால் வாகனம் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் காப்பீடளிக்கிறது.
2. தீங்கிழைக்கும் நோக்கத்துடன் தீவைக்கப்படுதல் அல்லது அந்நியர்களால் வன்முறையில் அழிக்கப்படுதல் அல்லது திருட்டு அல்லது கொள்ளை ஆகிய காரணங்களால் வாகனத்தை இழத்தல் போன்ற காரணங்களால் வாகனம் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் காப்பீடளிக்கிறது.

விபத்து
3. விபத்துக் காரணமாக மூன்றாம் தரப்பினரின் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுதல் அல்லது மூன்றாம் தரப்பினரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காப்பீடளிக்கிறது.
4. விபத்துக் காரணமாகக் காப்பீட்டுதாரரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காப்பீடு அளிக்கிறது.

இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டம் மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்புக்களுக்கு மட்டும் காப்புறுதி அளித்தால், பின்பு காப்பீட்டு நிறுவனர், மூன்றாம் தரப்பினரின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான செலவுகளுக்கு மட்டும் பணம் செலுத்தவும் அல்லது மூன்றாம் தரப்பினரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களில் ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பணம் செலுத்தவும் மட்டுமே பொறுப்புடையவராகிறார்.
  
உதிரிப் பாகங்கள்
மேலும் சில இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்கள் உதிரிப் பாகங்கள் மற்றும் துணைக் கருவிகள் போன்றவற்றிற்கான காப்புறுதிகள், பின்னிருக்கையில் சவாரி செய்யும் பயணிகளுக்கான விபத்துக் காப்பீடுகள், இது போன்ற மற்றும் பலவற்றிற்கும் கூடுதல் கட்டணம் செலுத்தினால் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட காப்புறுதிகளையும் வழங்குகிறது.
  
கணக்கீடு
காப்பீட்டுத் திட்டத்திற்கான முனைமத் தொகையானது, வாகன உரிமையாளரின் வயது, செய்யப்பட்ட காப்பீட்டின் அறிவிக்கப்பட்ட மதிப்பு, வாகனத்தின் கன திறன் மற்றும் வாகனம் பதிவு செய்யப்பட்ட மண்டலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
  
இணையச் சேவை
இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்கள் சிக்கல்களில்லாதது மேலும் இப்போதெல்லாம் இந்தக் காப்பீட்டுத் திட்டங்களை இணையத்திலேயே வாங்கிக் கொள்ளவும் வசதிகள் கிடைக்கப்பெறுகின்றன.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 6 இயக்குநர்கள் திடீர் பணியிட மாற்றம்.

G.O MS : 96 - தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம் -ஆணை வெளியீடு.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 6 இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளி கல்வித் துறை இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளி கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

1.பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், ஆர்எம்எஸ்ஏ இயக்குநராக மாற்றம்

2.தொடக்க கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன், பள்ளி கல்வித்துறை இயக்குநராக மாற்றம்

3.ஆர்.எம.எஸ்.ஏ இயக்குநர் அறிவொளி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக மாற்றம்

4.ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குநராக மாற்றம்

5.முறைசாரா கல்வி இயக்குநர் பழனிசாமி, பாடநூல் கழகத்தில் செயலராக மாற்றம்

6.பாடநூல் கழக செயலாளர் கார்மேகம், தொடக்க கல்வித்துறை இயக்குநராக மாற்றம்.

24/4/17

பள்ளிப் பாடத்தில் சங்கீத மும்மூர்த்திகள் வாழ்க்கை வரலாறு: வெங்கய்ய நாயுடு யோசனை

தியாகராஜ சுவாமிகள் உள்ளிட்ட சங்கீத மும்மூர்த்திகளின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் படைத்த கீர்த்தனைகள் பள்ளி பாடத் திட்டத்தில் இடம் பெற வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு யோசனை கூறினார்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் சேவா அறக்கட்டளை மற்றும் சேவா சமிதி சார்பில் கர்நாடக சங்கீத இசை மேதை தியாகராஜ சுவாமிகளின் 250-ஆவது ஜயந்தி விழா மற்றும் மும்மூர்த்திகள் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசியது: இளம் தலைமுறையினர் சங்கீதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். பல விதமான பாரம்பரியங்களைக் கொண்ட நாம் இந்தியர்களாக ஒன்றுபட்டு இருக்கிறோம். ஆனால் அந்நியர்களின் படையெடுப்பு, சுரண்டல் காரணமாக நமது பாரம்பரியத்தை இழந்திருந்தோம். தற்போது அதிலிருந்து மீண்டு பாரம்பரியத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

குற்றமாகப் பார்க்கப்படும் பாரம்பரியம்: நாட்டிலேயே தமிழகம் மட்டும்தான் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. ஹிந்து என்ற சொல் நமது பாரம்பரியத்தில் அங்கம் வகிக்கும் முக்கியமான சொல். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த வார்த்தை அரசியலுக்காக குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இசை மனதுக்கு ஆத்ம திருப்தியை வழங்குவதோடு, சாந்தம், பரவசம், ஆன்மிகம் போன்றவற்றை நமக்கு அளிக்கிறது. அத்தகைய சிறப்பு மிக்க சங்கீதத்தை தியாகராஜர், சியமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் நமக்கு வழங்கியுள்ளனர். இத்தகைய பாரம்பரிய சிறப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். தியாகராஜ சுவாமியின் அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசு ஆவன செய்யும் என்ற அமைச்சர் வெங்கய்ய நாயுடு விழா மலரையும் வெளியிட்டார்.

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் ஆகியோர், இசை பாரம்பரியமாக இருந்து வருகிறது. வட மாநிலத்தவரும் கற்றுக் கொள்ளும் வகையில் இத்தகைய சிறப்பு மிக்க சங்கீதத்தைப் பரப்ப வேண்டும். அத்துடன் பக்தி மார்க்கங்கள் வளர வேண்டும் என்றனர்.

தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை: அரசு இ-சேவை மையம் மூலம் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்க விரும்புவோர், அரசு இ-சேவை (இணைய சேவை) மையங்களை நாடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான கட்டணத்தைச் செலுத்தி உரிய முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது, ஆன்-லைன் முறை பின்பற்றப்படுகிறது.

என்னென்ன இணைப்பு: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது மாணவரின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் ஆவணம் 400 கே.பி.,க்கு மிகாமல் இருப்பது அவசியம்.
இதனை கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டில் இருந்தபடியே செய்வது சிரமம். இந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அரசு இ-சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கும் நடைமுறையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
என்ன செய்ய வேண்டும்: அரசு இ-சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பிப்பதற்கு முன்பாக, நாம் தேர்ந்தெடுத்துள்ள பள்ளிகளின் பட்டியலை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஐந்து பள்ளிகள் வரை விருப்பம் தெரிவிக்கலாம்.

எனவே, இணைய சேவை மையத்துக்குச் சென்று பள்ளிகளைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக, வீட்டிலேயே பள்ளிகளைத் தேர்வு செய்து பட்டியலிடுவது சிரமத்தைத் தவிர்க்கும்.
இ-சேவை மையங்களுக்கு தேவையான சான்றிதழ்களை எடுத்துச் சென்றால் அங்கேயே ஸ்கேன் செய்து, நிர்ணயிக்கப்பட்ட அளவில் அதனை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
மேலும், அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கும்போது நாம் சரியான முறையில் தகவல்களைத் தெரிவித்து அவை உரிய வகையில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்த பிறகே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்.

TNTET - 2017 தேர்வில் பிரிஸ்கிங் முறையில் சோதனை: தமிழகத்தில் முதன் முறையாக அமல்

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வருவோரை, முழுமையாக தடவி பார்த்து (பிரிஸ்கிங் முறை) பரிசோதித்த பிறகே, தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்,'' என்று, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் கூறினார்.

பள்ளி கல்வி இயக்ககம் சார்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில், தாள்-1 தேர்வுக்கு, 8,171 பேரும், தாள்-2 தேர்வுக்கு, 15 ஆயிரத்து, 671 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்காக, 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு கண்காணிப்பில், 1,300 ஆசிரியர்கள், பிற துறை அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு ஈரோட்டில் கடந்த, இரு நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் கூறியதாவது: தேர்வு எழுதுவோர், தங்கள் உடையில், உடலில் மறைத்து ஏதேனும் எடுத்து செல்கிறார்களா? என்பதை கண்டறியும் விதமாக, உடலை தடவி பார்த்து முழுமையாக பரிசோதனை (பிரிஸ்கிங்) செய்யப்படும். தமிழகத்தில் தேர்வுக்கு இம்முறையை பயன்படுத்துவது இதுவே முதல் முறை. ஆண்களுக்கு ஆண் போலீசாரும், பெண்களுக்கு பெண் போலீசார், ஊர்காவல் படையை சேர்ந்தவர்கள், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவியர் பயன்படுத்தப்படுவர்.

 தேர்வு எழுதுவோர் மட்டுமின்றி, அறை கண்காணிப்பாளர்களும் எலக்ட்ரானிக் வாட்ச், பேஜர், மொபைல்போன், கால்குலேட்டர் மட்டுமின்றி கர்சீப்பையும் அறைக்குள் எடுத்துச் செல்லக்கூடாது.ஹால் டிக்கெட் கிடைக்க பெறாதவர்கள், வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் கிடைக்கப் பெறாதவர்கள், வெள்ளைத்தாளில் போட்டோ ஒட்டி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடம் கையெழுத்து, பெற்று வந்தால் தேர்வு எழுதலாம். தேர்வு நடக்கும் அறைக்குள், மொபைல்போன் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

TET தகுதி தேர்வு அரசாணைக்கு முன்பு ஏற்பட்ட காலிப்பணியிடம்: ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு.

பிறப்பிப்பதற்குமுன்பே காலிப்பணியிடத்தை நிரப்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் நியமனத்துக்குகல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டுஉத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும்தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பதவி இடம் கடந்த 2011-ம்ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி காலியானது. இந்த பதவியை நிரப்ப அதேஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பள்ளி நிர்வாகம், உதவி தொடக்கப்பள்ளிஅதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பியது. இதையடுத்து அந்தபதவியை நிரப்ப, உதவி தொடக்கப்பள்ளி அதிகாரி கடந்த 2012-ம் ஆண்டுஜனவரி 31-ந்தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து வேலைவாய்ப்புமையத்தில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியல் கேட்கப்பட்டன. பள்ளிநிர்வாகமும் காலிப்பணியிடம் குறித்து பொது விளம்பரம் வெளியிட்டது. இதன்பின்னர் நடந்த நேர்முகத் தேர்வில், சரவணபாபு என்ற ஆசிரியர்கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி தேர்வு செய்யப்பட்டார். அன்றேஅவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார்.

ஒப்புதல் அளிக்கவேண்டும்.

இவரது பணி நியமனத்துக்கு ஒப்புதல் கேட்டு, மாவட்ட தொடக்கல்விஅதிகாரிக்கு, பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பியது. ஆனால், '2000-ம்ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, பள்ளிக்கூடத்தில் ஆண், பெண் விகிதாச்சாரம் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறி, அந்த பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மாவட்ட அதிகாரி மறுத்துவிட்டார்.இதை எதிர்த்து பள்ளி நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் வழக்குதொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் பணிநியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த மாவட்ட தொடக்கக் கல்விஅதிகாரியின் உத்தரவை ரத்து செய்தார். ஆசிரியர் பணி நியமனத்துக்குஒப்புதல் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தகுதி தேர்வு

இந்தஉத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தொடக்கக் கல்விஇயக்குனர், நாகப்பட்டினம் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ஆகியோர்மேல்முறையீடு செய்தனர்.இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள்சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் முன்புவிசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், 'மத்திய அரசுகடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி, தகுதி தேர்வு மூலமே ஆசிரியர்கள் நியமனம்நடைபெறவேண்டும் என்று தமிழக அரசு 2011-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. இதை தனி நீதிபதி கவனிக்கத்தவறிவிட்டார். எனவே, அவரது உத்தரவை ரத்து செய்யவேண்டும்' என்றுகூறியிருந்தார்.

நாடவில்லை

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ்.என்.ரவிசந்திரன், 'தகுதி தேர்வுமூலமே ஆசிரியரை தேர்வு செய்யவேண்டும் என்ற அரசாணை 2011-ம்ஆண்டு நவம்பர் மாதம்தான் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த காலிப்பணியிடம் அதற்கு முன்பே ஏற்பட்டு, அந்த இடத்தை நிரப்பஅரசிடம் அனுமதிக்கேட்டு அதே ஆண்டு அக்டோபர் மாதமே பள்ளிநிர்வாகம் மனு கொடுத்து விட்டது' என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-ஆசிரியர் சரவணபாபுவின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காததைஎதிர்த்துத்தான் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆசிரியர்தகுதி தேர்வு மூலம், இவரை தேர்வு செய்யவில்லை என்று இந்தஐகோர்ட்டை நாடவில்லை.

நிரப்பலாம்

அதுமட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று அரசுஉத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே, ஏற்பட்ட காலியிடத்தில்தான்ஆசிரியரை பள்ளிநிர்வாகம் நியமித்துள்ளது.மேலும், ஆண், பெண்ஆசிரியர்கள் விகிதாச்சாரம் தொடர்பாக பக்தவச்சலம் என்பவர்தொடர்ந்த வழக்கில், பெண்களை கொண்டு நிரப்பவேண்டிய அரசுபணியிடத்துக்கு தகுந்த பெண்கள் கிடைக்கவில்லை என்றால், ஆண்களை கொண்டு நிரப்பலாம்' என்று இந்த ஐகோர்ட்டு ஏற்கனவேஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.எனவே, சரவணபாபு நியமனத்துக்குதொடக்கக் கல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும். தனி நீதிபதியின்உத்தரவில் எந்த குறைபாடுகளும் இல்லை. அவரது உத்தரவை உறுதிசெய்கிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

23/4/17

ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2017 - 18 -தொடக்கக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை- 2



25ம் தேதி வேலை நிறுத்தம் அரசு பணியாளர்கள் ஆதரவு

சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 25ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில், ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

சங்கத்தின் மாநிலத் தலைவர், செல்வராஜ் விடுத்துள்ள அறிக்கை:

எட்டாவது ஊதியக் குழு பணிகளை முடித்து, ஊதிய உயர்வு ஆணைகளை வெளியிட வேண்டும். ஊதிய உயர்வு ஆணைகள் வெளியிடும் வரை, அனைத்துப் பணியாளர்களுக்கும், 20 சதவீத, இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.விவசாயிகளின் கோரிக்கைகளை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 25ம் தேதி, அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளோம். எனவே, அரசுப் பணியாளர்கள் அனைவரும், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் அடுத்த மாதத்தில் நடத்த திட்டம்

சென்னை:அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், அடுத்த மாதம் நடத்தப்படுகிறது. 


தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடத்தப்படும். இதில், இடமாறுதல் கவுன்சிலிங், கோடை விடுமுறை காலமான, மே மாதத்தில் முடிக்கப்படும். இடமாறுதல் பெற்றவர்கள், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் போது, புதிய பணியிடங்களில் சேருவர். 

ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், ஜூலை அல்லது ஆகஸ்டில் தான் நடத்தப்பட்டது. அதனால், மாணவர்களுக்கு பாதி பாடத்தை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொரு ஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது. மாணவர்களும் சரியான கற்பித்தல் இன்றி, தேர்வுக்கு திணறினர். 

இந்நிலையில், இந்த ஆண்டு முதல், மீண்டும் மே மாதத்தில், இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் புதிய செயலர், உதயசந்திரன் உத்தரவுப்படி, இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் கண்ணப்பன் மற்றும் இளங்கோவன் வெளியிட்டுள்ளனர். 

இதன்படி, ஏப்ரல், 24 முதல் மே, 5 வரை, இடமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். மே, 19ல் பொது மாறுதல் கவுன்சிலிங் துவங்குகிறது. தலைமை ஆசிரியர்கள் இட மாறுதல்; அந்த இடங்களில் பதவி உயர்வில் வருவோருக்கான மாறுதல்; பின், ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதற்கான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், இடமாறுதல் பெறுவோர், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் நாளிலேயே, புதிய பணியிடங்களில் சேருவர்.

சிபிஎஸ்இ இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

சிபிஎஸ்இ இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு | மே 7-ல் நடக்கும் நீட் தேர்வுக் கான ஹால்டிக்கெட் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோயம் புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில்

275 பொறியியல் கல்லூரிகளை மூட விருப்பம் தெரிவித்து விண்ணப்பம்: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் தகவல்.

இந்தியாவில் 275 பொறியியல் கல்வி நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தை மூட விருப்பம் தெரி வித்து விண்ணப்பித்துள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் டி.சஹஸ்ரபுத்தே தெரிவித்தார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில்சார்பில், ‘மின் னணு வழி கற்றல்: சவால்களும், வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத் தில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்த அனில் டி.சஹஸ்ர புத்தே செய்தியாளர்களிடம் கூறிய தாவது:சில கல்வி நிலையங்களில் 10 முதல் 15 ஆண்டுகளுக்குக்கூடபாடத்திட்டத்தை மாற்றாமல் வைத் துள்ளனர். தற்போதுள்ள சூழ லுக்கு ஏற்ற தரமான பாடத் திட்டங் களைக் கற்பிக்காததால், அந்த நிறுவனங்களில் படித்த மாணவர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்ப தில் சிரமம் ஏற்படுகிறது.எனவே, பாடத்திட்டத்தை அவ்வப்போது மாற்ற வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.இந்தியாவில் 275 பொறியியல் கல்வி நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தை மூட விருப்பம் தெரி வித்து விண்ணப்பித்துள்ளன. மாணவர்கள் சேர்க்கை குறை வாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.மின்னணு வழி கற்றல் முறைக் காக மத்திய அரசு உருவாக்கி யுள்ள ‘ஸ்வயம்’ என்ற ஆன்லைன் கல்வி முறையில் தற்போது 280பாடங்கள் உள்ளன. மேலும் 350 பாடங்கள் அதில் இணைக்கப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் பாடங்கள் ஆன்லைனில் இருக்கும்.

பொறியியல் கல்விக் கான பாடங்கள் மட்டுமின்றி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பாடங்களையும் ஆன்லைனில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.சில கல்வி நிறுவனங்களில் உரிய அனுமதி இல்லாத பாடங் களை நடத்துவது குறித்த புகார் கள் வந்துள்ளன. அந்தப் பாடப் பிரிவுகளை நடத்த தடை விதிக் குமாறு, அந்தந்த மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.சென்னை அல்லது கோவை யில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாடங்களைக் கற்பிக்க பிரத் தியேக மையம் உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.இந்த பயிற்சி முகாமில் ஏஐசிடிஇ இயக்குநர் மன்பரீத் சிங்மன்னா, கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, பிரிட்டிஷ் கவுன்சில்தலைமை நிர்வாகி பருல் குப்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இ-சேவை மையங்களில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்: மின் ஆளுமை முகமை அறிவிப்பு.

இ-சேவை மையங்களில் புதிய குடும்ப அட்டை பெற விண்ணப் பித்தல் மற்றும் திருத்தங்கள் செய் வதற்கான வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அறிவித் துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின்கீழ், கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள் வாயிலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை அவர்கள் வசிப்பிடத்துக்கு அருகிலேயே அளிப்பது இதன் நோக்கமாகும்.இச்சேவை மையங்கள் மூலம், வருமானம், சாதி, இருப்பிடம், கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கான சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள், பல்வேறு உதவித் திட்டங்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், இதில், தமிழ்நாடு மின்வாரியத்துக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம், மாநகராட் சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் வாரியத் துக்கு செலுத்த வேண்டிய குடி நீர் வரியையும் செலுத்தலாம்.இச்சேவை மையங்கள் வாயிலாக கூடுதல் சேவைகளை வழங்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வரும் 24-ம் தேதி முதல் அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், பெயர் நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற குடும்ப அட்டை தொடர்பான சேவைகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை தொடர்பான சேவைகள் பெற பொதுமக்கள் தங்கள் இல்லங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் : அடுத்த மாதத்தில் நடத்த திட்டம்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கவுன்சிலிங், அடுத்த மாதம் நடத்தப்படுகிறது. தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடத்தப்படும். 
இதில், இடமாறுதல் கவுன்சிலிங், கோடை விடுமுறை காலமான, மே மாதத்தில் முடிக்கப்படும். இடமாறுதல் பெற்றவர்கள், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் போது, புதிய பணியிடங்களில் சேருவர்.ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், ஜூலை அல்லது ஆகஸ்டில் தான் நடத்தப்பட்டது. அதனால், மாணவர்களுக்கு பாதி பாடத்தை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொரு ஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது. மாணவர்களும் சரியான கற்பித்தல் இன்றி, தேர்வுக்கு திணறினர்.

இந்நிலையில்,இந்த ஆண்டு முதல், மீண்டும் மே மாதத்தில், இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் புதிய செயலர், உதயசந்திரன் உத்தரவுப்படி, இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் கண்ணப்பன் மற்றும் இளங்கோவன் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, ஏப்ரல், 24 முதல் மே, 5 வரை, இடமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். மே, 19ல் பொது மாறுதல் கவுன்சிலிங் துவங்குகிறது. தலைமை ஆசிரியர்கள் இட மாறுதல்; அந்த இடங்களில் பதவி உயர்வில் வருவோருக்கான மாறுதல்; பின், ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதற்கான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால், இடமாறுதல் பெறுவோர், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் நாளிலேயே, புதிய பணியிடங்களில் சேருவர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு புறக்கணிப்பு : முதுநிலை ஆசிரியர்கள் முடிவு.

ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) பணியில், தகுதி குறைவான பணி ஒதுக்கீடு செய்துள்ளதால், தேர்வுப் பணியை புறக்கணிப்பதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு ஏப்.,29 அன்றும், 2ம்தாள்தேர்வு ஏப்.,30ம் தேதியும் நடக்கிறது.இத்தேர்வு பணியில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல முதுநிலை ஆசிரியர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களாக ஆசிரியர் தேர்வு வாரியம் நியமித்து உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு நியமனம் செய்யப்படுவதால், பல ஆண்டுகளாக முதுநிலை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் மூத்த முதுநிலை ஆசிரியர்கள், பணியில் இளையோரான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கீழ், துறை அலுவலர்களாக பணி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் துறை அலுவலர்களான பட்டதாரி ஆசிரியர்களின் கீழ் அறைக் கண்கணிப்பாளராகவும் செயல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆசிரியர் தகுதி தேர்வு பணிகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும், என மாநிலக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

சங்க மண்டலச் செயலாளர் கதிரேசன், மாவட்டத் தலைவர் சலேத்ராஜா கூறியதாவது: அனுபவத்திலும், தகுதியிலும் குறைந்தவர்களுக்கு கீழ் பணி செய்ய அறிவுறுத்துவது எந்த நிலையிலும் ஏற்பதற்குஇல்லை. அதனால் சங்க கூட்டத்தில் 'டெட்' தேர்வை புறக்கணிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, என்றார்.

தொடக்கக்கல்வி பொது மாறுதல் 2017 - 2018 | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தொடக்கக்கல்வி | பொது மாறுதல் 2017 - 2018 ஆம் கல்வி ஆண்டில் | | ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும்தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் | | பொது மாறுதல்- கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 
(நாள்: 20.04.2017) ||தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 20.04.2017) | | புதிய மாறுதல் விண்ணப்ப படிவம் விரைவில் வெளியிடப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

Lab Asst Appointment - Chennai District Selected Candidates List

DEE - Elementary Education Teachers Transfer Form - 2017 -18 (New)

தொடக்கக் கல்வி இயக்ககம் -2017-2018 ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /மாநகராட்சி /அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் /பட்டதாரி /இடைநிலை /உடற்கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும்புதிய விண்ணப்பம்.


பள்ளிகளுக்கு விடுமுறை பயறு வாங்க அவசரம் ஏன்?

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சத்துணவு மையங்களுக்கு, பயறு வகைகள் வாங்க, நுகர்பொருள் வாணிபக் கழகம் அவசரம் காட்டுகிறது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சத்துணவு மையங்கள் உள்ளன. இவற்றில், வாரத்துக்கு ஒரு நாள், ஒரு மாணவருக்கு, தலா, 20 கிராம் கருப்பு கடலை அல்லது பச்சை பயறு வழங்கப்படுகிறது. நுகர்பொருள் வாணிபக் கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, பயறு வகைகளை வாங்கி, சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்கிறது.

தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வாணிபக் கழகம், 600 டன் கருப்பு கடலை; 500 டன் பச்சை பயறு வாங்க அவசரம் காட்டி வருகிறது.

இது குறித்து, வாணிபக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பள்ளிகள் துவங்கும் சமயத்தில், பயறு வாங்கினால், சப்ளை செய்வதில் தாமதம் ஏற்படும். எனவே, தற்போது, ஐந்து கோடி ரூபாய்க்கு, இரு வகையான பயறு வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. அதில், நிறுவனங்கள் பங்கேற்க, மே, 19 கடைசி நாள். அடுத்த மாத இறுதிக்குள் பயறு வாங்கப்பட்டு, ஜூனில் பள்ளி திறக்கும் முன் சப்ளை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்லைன்' கல்வியில் மருத்துவ, சட்ட பாடங்கள்:ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் தகவல்.

ஆன்லைன் கல்வி திட்டத்தில், மருத்துவம் மற்றும் சட்ட பாடங்கள் சேர்க்கப்படும்,'' என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தார்.

'ஸ்வயம்' திட்டத்தில், தேசிய அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, கோவை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் நடந்தது. இதில் பங்கேற்ற, அனில் சஹஸ்ரபுதே, நிருபர்களிடம் கூறியதாவது:

சில கல்வி நிறுவனங்கள், 15 ஆண்டுகளாக பாடத்திட்டங்களை மாற்றிஅமைக்காமல் இருப்பது, மாணவர்களின் வேலைவாய்ப்புகளுக்கு சவாலாக அமைகிறது. தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப, கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்கள் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

ஏ.ஐ.சி.டி.இ., வரையறை செய்யும் பாடத்திட்டத்தை, 70 முதல், 80 சதவீதம் பயன்படுத்தி, மற்றதை, பல்கலைகளே நிர்ணயிக்கலாம். நாடு முழுவதும், 275 இன்ஜி., மற்றும் தொழில்
நுட்பக் கல்வி நிறுவனங்கள், தானாக முன்வந்து மூட விண்ணப்பங்கள் அளித்து உள்ளன.
'ஆன்லைன்' மூலம் கல்வி கற்பதற்காக, அமைக்கப்பட்ட, 'ஸ்வயம்' திட்டத்தில், 280 பொறியியல் பாடப்பிரிவுகள் மட்டும் சேர்க்கப்பட்டு உள்ளன.

மேலும், 350 பாடங்களுக்கான வரையறைகள் பதிவேற்றம் செய்யப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில், மருத்துவம், சட்டம் என, பல்வேறு துறைகளில், 2,000 பாடங்கள், 'ஸ்வயம்'
திட்டத்தில் கற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பெற்றோர் - ஆசிரியர் கழக முறைகேடுகள் கல்வி அதிகாரிகள் கண்டுகொள்ள மறுப்பு.

தமிழக அரசு பள்ளிகளில் செயல்படும், பி.டி.ஏ., என்ற பெற்றோர் - ஆசிரியர் கழகத்துக்கு, பல
ஆண்டுகளாக தேர்தல் இல்லாமல், முறைகேடாக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில், உறுப்பினர்கள் இடம் பெறுவர். மாணவர்களின் பெற்றோர் ஓட்டளிக்கும் வகையில், தேர்தல் நடத்தப்பட்டு, தலைவர், செய-லர், பொருளாளர் போன்றோர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், அரசியல்வாதிகள், செல்வாக்கான அதிகாரிகள், உள்ளூர் அரசியல் செல்வாக்கு கொண்ட தலைமை ஆசிரியர்கள் ஆகியோரின் பிடியில், பெற்றோர் -
ஆசிரியர் கழகம் சிக்கியுள்ளது.

எது நடக்கிறதோ இல்லையோ, பெற்றோர் - ஆசிரியர் கழகம் பெயரில், ரசீது அச்சடித்து, மாணவர்களிடம் வசூல் நடக்கிறது. வெளியில், நன்கொடையும் வசூலிக்கின்றனர்.இந்த தொகைக்கு, தணிக்கையும் இல்லை; கண்காணிப்பும் இல்லை. தலைமை ஆசிரியரும், பி.டி.ஏ., தலைவரும் என்ன கணக்கு சொல்கின்றனரோ, அதை பெற்றோர் நம்ப வேண்டும்.

அதேபோல், உள்ளூர் அரசியல்வாதிகள், செல்வாக்குமிக்கவர்கள், கவுரவ பதவிக்கு, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தை பயன்படுத்துகின்றனர்.விதிகளின்படி, அந்த பள்ளியில், தங்கள் பிள்ளை கள் படித்தால் மட்டுமே பதவி உண்டு. பேரன், பேத்தி பெற்ற பிறகும், பலர் பதவியை விடாமல் உள்ளனர்.

பெற்றோர் கூறுகையில்,'அரசு பள்ளிகளில் கல்வித் தரம் சரிவதற்கு,பெற்றோர்- ஆசிரியர் கழகம் சரியாக இயங்காதது தான், முதல் காரணம். பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்
படவில்லை. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை, பெற்றோர் - ஆசிரியர் கழகம், 'கவனிப்பதால்' அவர்களும் கண்டு கொள்வதில்லை' என்றனர்.

புதிய தொழில் பள்ளிகள் 30ம் தேதி கடைசி நாள்

புதிதாக தொழில் பள்ளிகள் துவங்கவும், அங்கீகார நீட்டிப்புக்கும், வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

தனியார் தொழில் பள்ளிகளில், பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத, 54 நீண்ட கால தொழில் பிரிவுகள்; 36 குறுகிய கால பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகின்றன.புதிதாக தொழில் பள்ளிகள் துவங்க, அங்கீகாரம் வழங்கவும், ஏற்கனவே உள்ள பள்ளிகளுக்கு, அங்கீகார நீட்டிப்பு வழங்கவும், ஒவ்வொரு ஆண்டும், ஜன., 2 முதல் ஏப்., 30 வரை, விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.

இந்த ஆண்டு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம், விண்ணப்பிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை RTGS, NEFT ,IMPS , UPI பற்றி தெரிந்து கொள்வோம்!!!

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்.

RTGS : Real Time Gross Settlement.

வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் RTGS மூலம் பணம் அனுப்பலாம். (வங்கிக் கிளைகளின் வேலை நேரத்தைப் பொறுத்து இது மாறுபடும்).

குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் அனுப்ப வேண்டும்.

தொகை அனுப்பிய உடனேயே பெறுநரின் வங்கிக்கு தகவல் தரப்படும். அடுத்த 30 நிமிடங்களுக்குள் தொகையை பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். எதுவும் பிரச்னை என்றால் உடனடியாக அனுப்புநரின் வங்கிக்கு பெறுநரின் வங்கி தொகையைத் திருப்பி அனுப்பி விட வேண்டும்.
_____

NEFT : National Electronic Fund Transfer

வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை. சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை.

இதில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு தடவை அனுப்பும் வங்கியிலிருந்து மும்பையில் உள்ள NEFT சர்வீஸ் செண்டருக்கு தகவல் அனுப்பும். அங்கிருந்து பெறுநரின் வங்கிக்கு தகவல் அனுப்பப்பட்டு பணம் பெறுநரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். Core banking சிஸ்டத்தில் செயல்படுவதால் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை செயல்பட்டாலும், இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை. உள்ளூர் விடுமுறை தினங்களிலும் கூட பாதிப்பு இருக்காது.

NEFT-ல் அனுப்பப்படும் தொகையை அடுத்த 2 மணி நேரத்துக்குள் பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்காவிட்டால் அனுப்புநரின் வங்கிக் கணக்கிற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் திருப்பி அனுப்பப்பட்டு விட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
_______

மேலே உள்ள இரண்டுமே வங்கி வேலை நாட்களில், வேலை நேரத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும்.


IMPS : Immediate Payment Service

24x7 எந்த நேரத்திலும் உடனடியாக பணம் அனுப்பும் முறை. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏ.டி.எம். ஆகிய வழிகளில் IMPS சர்வீஸ் வசதி உள்ள எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் எப்போது வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். அடுத்த நொடியில் பெறுநரின் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்.

UPI : Unified Payments Interface

இதுவும் IMPS போல தான். ஆனால் NEFT, RTGS, IMPS போன்றவற்றையெல்லாம் ஆன்லைனில் நான் உபயோகிக்கும் போது பெறுநரின் வங்கிக் கணக்கு விபரங்களை நாம் முதலில் பதிவு செய்து அதன் பிறகே தொகை அனுப்ப இயலும். புதிதாக பெறுநரைப் பதிவு செய்தால் சில வங்கிகளில் 30 நிமிடங்களில் தொகை அனுப்பும் வசதி செயல்படுத்தப்படும். சில வங்கிகளில் 24 மணி நேரமாகும். UPI-ஐயைப் பொறுத்தவரை பதிவு செய்து காத்திருக்கத் தேவையில்லை. நேரடியாக பெறுநரின் மொபைல் எண் (அவரும் upi-யில் பதிவு செய்திருக்க வேண்டும்), அல்லது ஆதார் எண், அல்லது வங்கிக் கணக்கு எண் + IFS கோடு (IFSC) ஆகியவற்றைக் கொண்டு உடனடியாக எப்போது வேண்டுமானாலும் தொகை மாற்ற முடியும். இதில் இன்னும் சில வங்கிகள் இணையவில்லை.

அந்தந்த வங்கியின் இண்டர்நெட் பேங்கிங்கிலும், மொபைல் செயலியிலும் UPI என்ற ஆப்ஷன் இருக்கும். அல்லது BHIM என்ற மொபைல் செயலியைத் தரவிறக்கிக் கொண்டும் இதனை உபயோகித்துக் கொள்ளலாம்.

பள்ளிக்கல்வி - கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த கூடாது என அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகள் / தனியார் பள்ளிகள் / மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் இதர வாரிய பள்ளிகளுக்கு இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்

தொடக்கக் கல்வி - 2017-18ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கால அட்டவணை

தொடக்கக் கல்வி 2017-18ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதலில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்