யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/12/17

CCE RESOURCE MATERIAL (STANDARD 1-9)

ஞாயிறு தவிர மற்ற நாட்களில் இனி மாவட்டம் வாரியாக மட்டுமே EMIS இணையதளம் இயங்கும்!!!

பொது வருங்கால வைப்பு நிதி- ஊதிய திருத்தம் - திருத்திய ஊதிய அடிப்படையில் பொது வருங்கால வைப்பு நிதி மாதாந்திர சந்தா பிடித்தம் செய்தல் அரசாணை எண் 362 நிதி( படிகள்) துறை நாள் : 11.12.2017

G.0 NO : 751 | 350 ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்குதல் திருத்தப்பட்ட அரசாணை!

வாக்காளர் வீடுகளில் வருமானவரி சோதனை-தேர்தல் ஆணையம் உத்தரவு*

அதிகாரியை செருப்பால் அடித்த ஆசிரியை!!!

EMIS Server முடங்குவதால் கிழமை வாரியாக மாவட்டங்கள் பிரிப்பு.

கல்வி மேலாண்மைத் தகவல் திட்டத்தின் கீழ் மாணவர் தரவுகள்
இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

☀மாநிலம் முழுமையும் பயன்படுத்தும் அளவிற்கு பிரதான கணினியின் செயல்திறன் இல்லாததால் பலநேரங்களில் இத்தளத்தின் பறிமாற்ற வேகம் குறைந்தவிடுகிறது.

☀நேற்று இரவிலிருந்து இயங்காமல் இருந்த EMIS தளம் தற்போது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

☀இதனையடுத்து கிழமை வாரியாக இணையத்தைப் பயன்படுத்தம் வகையில் மாவட்டங்களைப் பிரித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

☀கீழ்க்காணும் நாட்களில் மட்டும் சார்ந்த மாவட்டங்கள் EMIS தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

*☀ஞாயிறு :*

அனைத்து மாவட்டங்களும்

*☀திங்கள், புதன் & வெள்ளி :*

1. சென்னை
2. கடலூர்
3. கோயமுத்தூர்
4. தர்மபுரி
5. ஈரோடு
6. காஞ்சிபுரம்
7. கிருஷ்ணகிரி
8. நாமக்கல்
9. நீலகிரி
10. சேலம்
11. திருப்பூர்
12. திருவள்ளூர்
13. திருவண்ணாமலை
14. விழுப்புரம்
15. வேலூர்

 வியாழன் & சனி :*

1. அரியலூர்
2. திண்டுக்கல்
3. கரூர்
4. கன்னியாகுமரி
5.  கிருஷ்ணகிரி
6. மதுரை
7. நாகப்பட்டினம்
8. புதுக்கோட்டை
9. பெரம்பலூர்
10. இராமநாதபுரம்
11. சிவகங்கை
12. தஞ்சாவூர்
13. தேனி
14. திருச்சிராப்பள்ளி
15. திருவாரூர்
16. திருநெல்வேலி
17. தூத்துக்குடி
18. விருதுநகர்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 17லட்சம் பேர் விண்ணப்பம்,

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 17 லட்சம் பேர் 
விண்ணப்பித்துள்ளனர். 9351 காலி பணியிடங்களுக்கு இன்று மாலை வரை 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறும் தேர்வுக்கு இன்றிரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பகோளாறால் விண்ணப்பிக்க முடியாமல் போனால் தேர்வாணையம் பொறுப்பில்லை என்றும் டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது.*

ஒரு ரூபாய்க்கு விமானப் பயணம்!

                                   
2012 ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களால்
கிங்ஃபிஷர் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் ஏர் டெக்கான் சேவையும் தடைப்பட்டது. தற்போது, மீண்டும் ஏர் டெக்கான் விமான சேவையை தொடங்கவுள்ளதாக அதன் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏர் டெக்கான் விமான சேவையைத் தொடங்கினார். குறைந்த கட்டணமாக ஒரு ரூபாய் கட்டணத்தை அறிமுகப்படுத்தி, சிம்ஃபிளி ஃபிளை என்ற வாசகத்துடன் செயல்பட்டது.

பின்னர், இந்த விமான சேவை 2008ஆம் ஆண்டு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸுடன் இணைந்து செயல்பட தொடங்கியது. 2012 ஆம் ஆண்டு கிங்ஃபிஷர் சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் ஏர் டெக்கான் சேவையும் தடைப்பட்டது. தற்போது ஏர் டெக்கான் நிறுவனம் மீண்டும் தனது சேவையை வரும் டிசம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தனது முதல் சேவையை மும்பை- நாசி வழித்தடத்தில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் சிறுநகரங்களை இணைக்கும், மத்திய அரசின் உடான் சேவையை தற்போது பல விமான நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. இந்த உடான் சேவை சிறிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டணத்தில் விமான பயணம் மேற்கொள்வது. சாதாரண மனிதர்களை விமானத்தில் பயணிக்கச்செய்வதே இந்த உடான் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தின் படி ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 மட்டுமே. மீதமுள்ள தொகையை மத்திய அரசு மானியமாக வழங்கும்.

இந்த உடான் சேவையுடன் இணைந்து ஏர் டெக்கான் நிறுவனமும் தனது இரண்டாவது சேவையை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத் கூறுகையில், ''நாசிக்கில் இருந்து மும்பைக்குச் சாலை மார்க்கமாகச் செல்ல 4 மணி நேரமாகும். விமானத்தில் 40 நிமிடத்தில் சென்று சேரலாம். டிக்கெட் கட்டணம் ரூ.1400. சில அதிர்ஷ்டசாலி பயணிகளுக்கு ரூ.1 கட்டணத்திலும் டிக்கெட் கிடைக்கும். இவர்கள் முதலில் டிக்கெட் புக் செய்பவர்களாக இருக்க வேண்டும்.

2018, ஜனவரி மாதம் டெல்லியில் இருந்து ஆக்ரா, சிம்லா, லூதியானா, டேராடூன், குலு பகுதிகளை டெல்லியுடன் இணைக்கும் வகையில் விமான சேவை தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் பணியிடங்கள்.!!!

SABL TIME TABLE

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க டிச.31ஆம் தேதி கடைசிநாள் என்ற அறிவிப்பு ரத்து.

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை
இணைக்க புதிதாக காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க டிச.31ஆம் தேதி கடைசிநாள் என்ற அறிவிப்பு ரத்து 

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க புதிதாக காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை 

புதிய காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும்

- மத்திய அரசு

13/12/17

ML - ஓராண்டிற்கு குறைவான பணி - மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - இயக்குனர் விளக்க ஆணை

14 கோடி 'பான்' எண்கள் ஆதாருடன் இணைப்பு

புதுடில்லி : நாடு முழுவதும், நேற்று வரை, 14 கோடி, 'பான்' எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளன. 


அரசு உயரதிகாரிகள், டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும், 115 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. அதே போல், 33 பேரிடம், 'பான்' எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்கள் உள்ளன. ஆதாருடன், பான் எண்களை இணைக்க வேண்டும் என, அரசு கூறியுள்ளது. இதையடுத்து, நேற்று வரை, 14 கோடி பான் எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளன. மொத்த பான் எண்களில், இது, 41 சதவீதம். ஆதாருடன், பான் எண்களை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார். 

ஆதாருடன், பான் எண்களை இணைக்க, 2018 மார்ச், 31 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ரத்தாகிறது? : மதிப்பெண் குளறுபடியால் விசாரணை

அரசு பாலிடெக்னிக் தேர்வில், விடைத்தாள் மதிப்பீட்டில் பெரும் குளறுபடி நடந்துள்ளதால், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பாலிடெக்னிக்குகளில், விரிவுரையாளர் பணியில், 1,058 காலி இடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அமைப்பு, செப்., 16ல் போட்டி தேர்வை நடத்தியது.
இதில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வின் முடிவுகள், நவ., 7ல் வெளியிடப்பட்டன. மதிப்பெண் தரவரிசைப்படி, ஒரு காலியிடத்துக்கு, இரண்டு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில், இன்ஜினியரிங் இல்லாத பாடப்பிரிவு பணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பும் அறிவிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்காக, 4 சதவீத இடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோருக்கு, வேலை கிடைத்துள்ளதாக, புகார் எழுந்தது; நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனால், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், நவ., 7ல் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக, டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன் அறிவித்துள்ளார்.

அனைத்து விண்ணப்பதாரர்களின் விடைத்தாள் நகலையும், இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலையும், விடைக்குறிப்புகளையும், தேர்வர்கள் ஆய்வு செய்த நிலையில், பல தேர்வர்களுக்கு, மதிப்பெண்ணில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. 
பல தேர்வர்களுக்கு, ஏற்கனவே, டி.ஆர்.பி., பட்டியலில் குறிப்பிட்ட மதிப்பெண்ணை விட, 60 மதிப்பெண்கள் வரை அதிகரித்துள்ளது. சில தேர்வர்களுக்கு, 100 மதிப்பெண் வரை குறைவாக வருகிறது. இந்த குளறுபடி எப்படி நடந்தது என, தேர்வர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
ஒரே விடைத்தாளை திருத்தியதில், எப்படி வித்தியாசமான மதிப்பெண் வந்தது; இந்த குளறுபடியை செய்தது யார்; அரசியல் தலையீடு உள்ளதா; தேர்வர்களிடம் லஞ்சம் வாங்கி மதிப்பெண் வழங்கப்பட்டதா என, கல்வியாளர்களும், தேர்வர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே, டி.ஆர்.பி., நடத்திய தேர்வுகள் தொடர்பாக, பல பிரச்னைகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, உச்சபட்ச குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த தேர்வை ரத்து செய்து, புதிதாக மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

கூண்டோடு மாற்றம் வருமா? : 'பாலிடெக்னிக் தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடியால், டி.ஆர்.பி.,யின் மதிப்பீட்டு முறையிலும், தேர்வை நடத்துவதிலும் மாற்றம் செய்ய வேண்டும். ஒரே இடத்தில், பல ஆண்டுகளாக பணி புரியும், டி.ஆர்.பி., அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை, கூண்டோடு மாற்ற வேண்டும். அவர்கள் மீது விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீட்' தேர்வு வினாத்தாள் : சி.பி.எஸ்.இ., திட்டவட்டம்

புதுடில்லி: 'அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' தேர்வுக்கு ஒரே மாதிரி வினாத்தாள் வழங்கப்படும்' என, மத்திய கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், மருத்துவக் கல்வி சேர்க்கைக்காக, 'நீட்' எனப்படும், தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. கடந்த ஆண்டு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன; இதனால், பெரும் 
சர்ச்சைகள் எழுந்தன.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, சி.பி.எஸ்.இ., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:
'நீட்' தேர்வை, ஹிந்தி மற்றும் ஆங்கில வழியில் தான், பெரும்பாலோர் எழுதுகின்றனர். மாநில மொழிகளில், குறைவானவர்கள் தான் எழுதுகின்றனர். அதனால் தான், சில பிரச்னைகள் ஏற்பட்டன. இதை தவிர்க்க, அடுத்த ஆண்டு முதல், 'நீட்' தேர்வுக்கு, நாடு முழுவதும், ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

TPF ஆசிரியர்களுக்கு உங்கள் TPF கணக்கில் உள்ள இருப்புத் தொகை SMS செய்தியாக வந்துகொண்டிருக்கிறது

NEWS: TPF ஆசிரியர்களுக்கு 2017 செப் வரை 
உங்கள் TPF  கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறுஞ் செய்தியாக வந்துகொண்டிருக்கிறது.

சென்னை AG அலுவலகத்திலிருந்து TPF ஆசிரியர்களுக்கு 2017 செப் வரை உங்கள் TPF  கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறுஞ் செய்தியாக வந்துகொண்டிருக்கிறது.

*சரிபார்த்துக்கொள்ளவும்

வரவில்லையெனில் கைபேசி எண்ணை AG website - ல் பதிவு செய்ய வேண்டும்.
இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
http://www.agae.tn.nic.in/onlinegpf/

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு பயிற்சி வார்த்தைகள்!!!

14 இலட்சம் பேர் விண்ணப்பம்!!!

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுகள் ரத்து!!!

வங்கி டெபாசிட் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டு-ஜெட்லி உறுதி!!!

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தினமும் ரூ.10 லட்சம் அபராதம்

அங்கீகாரம் இன்றி பள்ளிகளை நடத்தினால், தினமும், 10 லட்சம் ரூபாய் 
அபராதம் விதிக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், 'செக்' வைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்படுகின்றன. அதேபோல், 700க்கும் மேற்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் இயங்குகின்றன. இந்த பள்ளிகளுக்கு, தமிழக பள்ளிக் கல்வி, தொடக்க கல்வி, மெட்ரிகுலேஷன் இயக்குனரகங்கள் மற்றும், சி.பி.எஸ்.இ., எனும் மத்திய கல்வி வாரியம் ஆகியவை சார்பில், தனித்தனியாக அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

சில பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ., மற்றும், ஐ.ஜி.சி.எஸ்.இ., எனும் கல்வி வாரியங்களின்அங்கீகாரம் பெற்றுள்ளன. இவை தவிர, 1,000க்கும் மேற்பட்ட பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும் செயல்படுகின்றன.

இந்த பள்ளிகள், அங்கீகாரம் பெற்றது போல், இயங்கி வருகின்றன. அதனால், பல பெற்றோர், பல லட்சம் நன்கொடை செலுத்தி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ளனர்.

இது குறித்து, பள்ளிக் கல்வித்துறைக்கு, பல்வேறு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

*அதில், அவர் கூறி உள்ளதாவது:*கட்டாய கல்வி சட்டத்தின்படி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் செயல்பட்டால், அவற்றுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மூட வேண்டும். எச்சரிக்கையை மீறி, மீண்டும் நடத்தினால், ஒரு நாளைக்கு, 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.

இதுகுறித்து, தமிழக பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமின்றி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தி, அங்கீகாரத்தை சோதனையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நிறுத்தப்படுமா ஆர்.கே.நகர் தேர்தல்???: தயாராகிறது தேர்தல் கமிஷன்!!!

சென்னை:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன், சுயேட்சையாக

நின்றாலும், பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். வெற்றிக்காக தினகரன் கடுமையாக உழைக்கிறார். அவரது ஆதரவாளர்கள், வீடு வீடாக சென்று பணம் தருவதாகவும் கூறப்படுகிறது.அதே நேரம், தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷும் தொகுதியில் பம்பரமாக சுழல்கிறார். இதையெல்லாம் கடந்து ஆளும்கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றால், மக்களை வெயிட்டாக கவனிக்க வேண்டும் என்று, மதுசூதனனை, கட்சியினர் பலரும் உசுப்பி வருகின்றனர்.இதையடுத்து, தொகுதியில் ஆளும்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் முகாமிட்டு, தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். பண விளையாட்டுக்களும் தங்கு தடையின்றி நடக்கிறது.இதையெல்லாம், பா.ஜ., தரப்பு, தீவிரமாக படம் பிடித்து ஆவணமாக்கி உள்ளது. இது தொடர்பாக, படமாக்கப்படும் விஷயங்களையெல்லாம், மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் பா.ஜ., தீவிரமாகி உள்ளது. இருந்த போதும், ஆர்.கே.நகர் தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லுவைத் தொடர்ந்து, மீண்டும் தேர்தலை நிறுத்திவிடும் யோசனைக்கு தேர்தல் ஆணையம் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

TET - சிறுபான்மை பள்ளிகளுக்கும் TET தேர்ச்சி கட்டாயம் இயக்குனர் ஆணை!!!

புற்று நோய் சிகிச்சைக்கு புதிய பாலிசி-- SBI அறிமுகம்!!!

ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு வேலை!!!

இதில், பல்வேறு, ’கார்ப்பரேட்’ நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று,
மாணவர்களிடம் நேர்காணல் நடத்தி, வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். இந்த வகையில், சென்னை ஐ.ஐ.டி.,யில், முதல் கட்ட கேம்பஸ் முகாம், டிச., 1ல் துவங்கி, நேற்று முடிந்தது.
இதில், 763 பேருக்கு, அதிகபட்சமாக, ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தில், வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம், 211 நிறுவனங்களில், சிட்டி வங்கி, இ.எக்ஸ்.எல்., பிலிப்கார்ட், ஹெச்.சி.எல்., ஆகிய நிறுவனங்கள், அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிஉள்ளன.

மாணவர்களின் அடையாள அட்டை பள்ளிகளில் வடிவமைக்க புது செயலி!!!

கோவை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட, பிரத்யேக செயலி மூலம், தலைமையாசி
ரியர்களே மாணவர்களின் அடையாள அட்டையை, உருவாக்கும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தனியார் பள்ளிகளை போல, அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும், அடையாள அட்டை வழங்கும் நோக்கில் 2012ல், பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளம் (எமிஸ்) உருவாக்கப்பட்டது.தொழில்நுட்ப குளறுபடிகளால், பள்ளிகள் சார்பில், இணையதளத்தில் உள்ளீடுசெய்த, தகவல்களை திரட்டுவதில், சிக்கல் நீடித்தது.
இதற்காக நடப்பாண்டில்,மேம்படுத்தப்பட்ட எமிஸ் இணைய பக்கம் உருவாக்கி, தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு, தீர்வு காணப்பட்டு வருகிறது.இதில், கடந்த செப்., 1ம் தேதி நிலவரப்படி, அனைத்து வகை பள்ளிகளும், மாணவர் வருகை சார்ந்த தகவல்களை, உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதோடு, நலத்திட்ட உதவிகள், உதவித்தொகை திட்டங்களை இணைக்க, ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு, பிரத்யேக மையங்கள் அமைத்து, பதிவு செய்யுமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இப்பணிகள் முடித்த பின், தகவல்களை ஒட்டுமொத்தமாக திரட்டுவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களே, மாணவர்களின் அடையாள அட்டை வடிவமைக்கும் வகையில், புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கூறுகையில்,”அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களே, அடையாள அட்டை வடிவமைக்கும் வகையில், புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
”ஸ்மார்ட் போன்களில், மாணவர்களை புகைப்படமெடுத்தால் போதுமானது. ஏற்கனவே வடிவமைத்த லே-அவுட்டில், புகைப்படத்திற்கான இடத்தில், மாணவர்களின் படம் பொருந்தி கொள்ளும். மாணவரின் பெயர், பள்ளி பெயர், முகவரி, ரத்தவகை உள்ளிட்ட, தகவல்களை மட்டும் உள்ளீடு செய்தால், அடையாள அட்டை தயாராகிவிடும்.
”இதுசார்ந்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, விரைவில் பணிகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.

குமரியில் முதல்வர்-நிவாரணம் அறிவிப்பு!!!

ஓகி புயலினால் உயிரிழந்த மீனவர்
குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று, கன்னியாகுமரியில் இன்று (டிசம்பர் 12) அறிவித்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு, காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் நிவாரண உதவிகள் பெறும் வகையில் சட்ட விதிகள் தளர்த்தப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

கடந்த நவம்பர் 30ஆம் தேதி ஓகி புயலினால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ரப்பர், வாழை, தென்னை மரங்கள் சாய்ந்ததால், அந்தப் பகுதி முழுவதும் விவசாயம் நசிந்தது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீனவர்களில் பலர் இன்னும் மீட்கப்படவில்லை; அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இதனால், குமரி மாவட்ட மீனவர் குடும்பங்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களாக, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட சில அமைச்சர்கள் கன்னியாகுமரியில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டம் சென்றிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டவர், மீனவர் சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினார்.

அப்போது, கடைசி மீனவர் கிடைக்கும்வரை, ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்களைத் தேடும் பணி தொடரும் என்றும், குமரி மாவட்டத்தில் ஹெலிபேட் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

”ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கான நிவாரணத்தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வீடிழந்த மீனவர்களுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், மீனவர்களுக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, அவரது கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்.

காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் நிவாரணம் பெறும் வகையில், சட்டவிதிகள் தளர்த்தப்படும். புயலில் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்; உலகவங்கி உதவியுடன் மீனவர்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு, புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் செய்த ஆய்வின் அடிப்படையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதனை அறிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இவற்றில் பல அம்சங்கள், பத்து நாட்களுக்கு முன்பு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிவிப்பை நினைவூட்டுகிறது.

இணைய வேகத்தில் இந்தியா பின்னடைவு!!!

சர்வதேச அளவில் அதிவேக இணையச்
சேவையில் மொபைல் பிரிவில் 109ஆவது இடத்தையும், பிராட்பேண்ட் பிரிவில் 76வது இடத்தையும் பிடித்துள்ள இந்தியா பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இணைய வேகம் குறித்த ஆய்வு மேற்கொண்டுள்ள ஊக்லா நிறுவனம், நவம்பர் மாதத்திற்கான சர்வதேச அளவிலான மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவையில் அதிவேக இணையச் சேவை பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 122 நாடுகள் அடங்கிய மொபைல் சேவையில் இந்தியா 109வது இடத்தையும், 133 நாடுகள் அடங்கிய பிராட்பேண்ட் சேவையில் இந்தியா 76வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தச் சோதனையின் முடிவில் இந்தியாவில் அக்டோபர் மாதம் வரை 8.83 Mbps வேகம் கொண்ட மொபைல் இணையச் சேவையானது நவம்பர் மாதம் 8.80 Mbps ஆகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கம் முதல் சராசரியாக கிடைத்த வேகத்தை (7.65 Mbps) விட அதிகமாகும். இந்தப் பட்டியலில் 62.66 Mbps மொபைல் இணைய வேகத்துடன் நார்வே முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து 53.01 Mbps வேகத்துடன் நெதர்லாந்து இரண்டாம் இடத்திலும், 52.78 Mbps வேகத்துடன் ஐஸ்லாந்து மூன்றாம் இடத்திலும், 51.50 Mbps வேகத்துடன் சிங்கப்பூர் நான்காவது இடத்திலும், 50.46 Mbps வேகத்துடன் மால்டா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

பிராட்பேண்ட் இணையச் சேவையில் இந்தியா 18.82 Mbps வேகத்துடன் 76வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 153.85 Mbps வேகத்துடன் சிங்கப்பூர் முதலிடத்திலும், 147.51 Mbps வேகத்துடன் ஐஸ்லாந்து இரண்டாம் இடத்திலும், 133.94 Mbps வேகத்துடன் ஹாங்காங் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மாநில அரசுப் பணியில் வெளிமாநிலத்தவர்: பின் வாங்கிய அரசு!

                                            
தமிழகத்திலுள்ள அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) 
காலியாக இருக்கும் 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.

ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு முடிவுகள் திரும்பப் பெறப்படுவது இதுவே முதன் முறையாகும்.

பல வகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர் நியமனத்திற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த 16.06.17 அன்று வெளியிடப்பட்டது. அப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 13.08.2017 அன்று எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு, 07.11.2017 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நவம்பர் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இத்தகைய சூழலில் தான் தேர்வு முடிவுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதுடன், தேர்வில் பங்கேற்ற 1,33,567 மாணவர்களின் விடைத்தாள்களும், தேர்வுக்கான சரியான விடைகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களின் விடைத்தாள் சரியாக திருத்தப்பட்டிருக்கிறதா? என்பதை விடைகளுடன் ஒப்பிட்டு, ஏதேனும் தவறு இருந்தால் அதை வரும் 18

ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், அதன்பின் திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி இன்று (டிசம்பர் 12) அறிக்கை வெளியிட்டிருக்கும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி,. ‘’அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளின் ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டதில் இன்னொரு நன்மையும் நடைபெற வாய்ப்பிருக்கிறது. இப்பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் 107 பேர் ஆந்திரம், தெலுங்கானா, கேரளம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வில் பிற மாநிலங்களும் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 107 தொழில்நுட்ப ஆசிரியர் பணியிடங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் கல்வி கற்றவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகமாகும்.

தேர்வு முடிவுகள் இப்போது ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், புதியப் பட்டியல் தயாரிக்கும் போது வெளிமாநிலத்தவரை தவிர்த்து விட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் சேர்க்கப்பட வேண்டும். இதன்மூலம் தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்பட்டிருந்த சமூக அநீதி சரி செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, புதிய பட்டியல் எந்த வித குளறுபடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் வாய்ப்பளிக்காமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

TNPSC வி.ஏ.ஓ.தேர்வு மாதிரி வினா-விடை!!!

தொடர் வாசிப்பு திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி???

எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான 1,581 கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கிரிமினல் 
வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

பாராளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அரசியல்வாதிகளுக்கு எதிரான 1,581 கிரிமினல் வழக்குகளை விரைந்து முடிக்க 12 சிறப்பு நீதிமன்றங்களை முடிக்க திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய நிதி அமைச்சகம் ரூ. 7.8 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது.

2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 8 மாநில சட்டசபைத் தேர்தல்களின் போது அரசியல்வாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்ட வழக்குகள்தான் இவையாகும். சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பான மத்திய அரசின் திட்டம் தொடர்பாக இரு பக்கங்கள் அடங்கிய அபிடவிட்டை மத்திய சட்ட அமைச்சக கூடுதல் செயலாளர் ரீட்டா வசிஷ்தா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளார். சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய நிதி அமைச்சகம் ரூ. 7.8 கோடியை ஒதுக்கி உள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது.

தேவை ஏற்பட்டால் சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணையை வியாழன் கிழமைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்து உள்ளது.


*வழக்கு தொடர்பான முந்தைய விபரம்*

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா தண்டனை பெற்ற எம்.பி., எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என பொதுநல மனுவகை தாக்கல் செய்தார். இவ்வழக்கில் தங்களையும் சேர்க்குமாறு பிறர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக ஜூலை 12-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்ற போது அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பாக தெளிவான நிலையை எடுக்காதது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்தது.

மத்திய அரசு தாக்கல் செய்த அபிடவிட்டில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை என்ற மனுதாரரின் கோரிக்கையானது ஏற்கப்பட முடியாதது, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் தொடர்ச்சியான விசாரணை கடந்த மாதம் ஒன்றாம் தேதி நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நாவின் சின்கா தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணை நடைபெற்றது. 2014 ஆம் ஆண்டு முதல் இப்போது வரையில் அரசியல்வாதிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகள் மற்றும் அவற்றில் எத்தனை விசாரணை முடிந்தது என்பது தொடர்பாக விபரங்களை அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் உத்தரவிட்டது. 1,581 வழக்குகளில் கடந்த ஒரு வருடங்களில் எத்தனை வழக்குகள் முடிக்கப்பட்டது, குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது மற்றும் விடுவிக்கப்பட்டது தொடர்பாக விபரங்களை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என்றது.

ஆறு வாரங்களில் இதுதொடர்பான விபரங்களை கோர்ட்டில் வழங்க வேண்டும் எனவும் டிசம்பர் இரண்டாவது வாரம் அடுத்தக்கட்ட விசாரணை எனவும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விரைவாக முடிக்க மத்திய அரசு விரும்புகிறதா? எனவும் கேள்வியை எழுப்பி இருந்தது. இப்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

ஆசிரியர்கள் பாடம் நடத்த நேரமில்லாமல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களாக உள்ளனர் - The New Indian Express-trichy Edition


ஆசிரியர்கள் பாடம் நடத்த நேரமில்லாமல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களாக உள்ளனர் - The New Indian Express-trichy Edition

12/12/17

TRB மூலம், சிறப்பாசிரியர் தேர்வினை (2017) பாடவாரியாக எழுதியவர்கள் விபரம் RTI பதில்




வானிலை, 'லைவ்' இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது!

ஆறு மாதங்களுக்கு பின், சென்னை வானிலை மையத்தின், 'லைவ்' 
தகவல் இணையதளம், மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னையில் செயல்படுகிறது. இங்கு செயற்கை கோள் வழி கண்காணிப்பு, மழை, வெப்பநிலை கண்காணிப்பு மையம், ரேடார் ஆய்வு மையம் ஆகியவை செயல்படுகின்றன. சென்னை துறைமுக கட்டடத்தில், ரேடார் அமைக்கப்பட்டுள்ளது. இது, சென்னையின், 500 கி.மீ., சுற்றளவை கண்காணித்து, தகவல்களை அளிக்கும்.

'வர்தா' புயலின் போது, ரேடார் தொழில்நுட்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. அதை, இந்திய வானிலை மையம், சில மாதங்களில் சரி செய்தது. ஆனாலும், சென்னைக்கான, 'லைவ்' வானிலை தகவல் அளிப்பதில், சில சிக்கல்கள் இருந்தன. அதனால், ஆறு மாதங்களாக, சென்னை வானிலை மையத்தின், சென்னை, 'லைவ்' வானிலை தகவல் பக்கம், செயல்படாமல் இருந்தது.

தற்போது, தொழில்நுட்ப பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, மீண்டும், 'லைவ்' வானிலை தகவல் பக்கம், செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் வழியே, ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் முந்தைய வெப்ப நிலை, பனி, காற்றில் உள்ள ஈரப்பத அளவு, மழை அளவு, காற்றின் வேகம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு இன்று பதிவு!

சென்னை: பிளஸ் 2 பொது தேர்வில், நேரடியாக பங்கேற்க விரும்பும் 
தனித்தேர்வர்களுக்கான பதிவு, இன்று துவங்குகிறது. இந்த ஆண்டே கடைசியாக, நேரடி தேர்வு எழுத முடியும்.
வரும் மார்ச்சில் நடக்கவுள்ள பிளஸ் 2 பொது தேர்வில், தனித்தேர்வர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுத, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதன் விபரங்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு நிறைந்தவர்கள், இந்த தேர்வை எழுதலாம். இந்த ஆண்டில் இருந்து, பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், அடுத்த ஆண்டில் இருந்து, தனித்தேர்வர்களும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிளஸ் 2 தேர்வை எழுத முடியும். எனவே, 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 2 வை நேரடியாக எழுத, இந்த ஆண்டே கடைசி வாய்ப்பு என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ள சேவை மையங்களில், இன்று முதல் வரும், 16 வரையிலும், பின், 18 முதல், 20ம் தேதி வரையில், அபராத கட்டணத்துடனும் விண்ணப்பிக்கலாம்.

பாடத்திட்டத்தில் பாரதியார் பாடல்கள் : துணை ஜனாதிபதி விருப்பம்!

சென்னை: ''பாரதியார் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்,''
என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.


வானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதி விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது.
விழாவில், சி.பி.ஐ., முன்னாள் முதன்மை இயக்குனர், கார்த்திகேயனுக்கு, பாரதி விருதை, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு வழங்கி பேசியதாவது: பாரதியாரின் பாடல்கள் அனைத்தும் கருத்துக்கள் செறிந்தவை. மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு கூடாது என, அவர் வலியுறுத்தி உள்ளார். பாரதியாரின் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
தமிழும், தமிழகமும் எனக்கு நெருக்கமானவை. அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்ட போது, எனக்கு தமிழை கற்க நேரமில்லை. அனைவரும், அவரவர் தாய்மொழியில், பேசுவதே சிறப்பு. நான் தற்போது எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நாம் முயற்சி கண்டால், பாரதி கண்ட புதுமை தேசத்தை அடையலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் பாண்டியராஜன், இல. கணேசன் எம்.பி., - ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்முறை தேர்வு : சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,
பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு செய்முறை தேர்வு, ஜன., 16 முதல் துவங்குகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 2009க்கு பின், முதல் முறையாக, 10ம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச்சில் துவங்கி, ஏப்ரலில் முடியும்.
இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, அறிவியல் செய்முறை தேர்வுகளை நடத்த, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதன்படி, ஜன., 16ல் செய்முறை தேர்வு துவங்கி, 25ல் முடிகிறது.

பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றம்!!!

                                             
வங்கி கிளைகளை அடையாளம் காண்பதற்கு வசதியாக அவற்றுக்கு ‘ஐ.எப்.எஸ்.சி.’
குறியீடு தரப்பட்டுள்ளது. 11 இலக்க எண்களை கொண்ட இந்த ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு, ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி, தனது 1,300 கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடுகளை மாற்றி உள்ளது.

அதன்படி சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பாட்னா, லக்னோ என பல்வேறு இடங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றப்பட்டுள்ளது.

இதுபற்றி வாடிக்கையாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றப்பட்டுள்ள வங்கி கிளைகளின் பட்டியல், பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் சார்பு வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்துதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரேண்டம் முறையில் வாக்குபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு!

மறுமதிப்பீடு,விடைத்தாள் நகல் வழங்கும் முறை அடுத்த ஆண்டில் அறிமுகம்-தொழில்நுட்ப கல்வித்துறை முடிவு!!!

முனைவர் மற்றும் பட்டதார்களுக்கு யுஜிசி சலுகை!!!

10,000 மீனவர்கள் மீது வழக்கு

கல்வி நிறுவனங்களில் கல்வி சாராத பிற நிகழ்ச்சிகளுக்கு ஐ கோர்ட் தடை!!!

கல்வி ஊழியர் போராட்டம்!!!

DSE - உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்துக்கு எவரேனும் பெயர் விடுபட்டால் சேர்க்க சொல்லி இயக்குநர் உத்தரவு!!!




EMIS ENTRY THROUGH YOUR SMARTPHONE"

ஓய்வூதியர்களுக்கு அதிர்ச்சி!

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ICT பயிற்சி!!!

6,7,8 பணியிடங்களை கையாளாத , அறிவியல் , ஆங்கிலம் , கணித பாடங்கள் படிக்காத , குறைவான தர ஊதியம் பெறும் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக தகுதி இல்லை ..வழக்கின் அபிடவிட்

10/12/17

உத்தர பிரதேசத்தில் அரசு துவக்க பள்ளிகளுக்கு காவி வர்ணம் பூச்சு!!!

                                               
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு பதவி ஏற்றதில் இருந்து,
அங்குள்ள அரசு கட்டிடங்களுக்கு காவி வர்ணம் பூசப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த நிலையில்,   மாநிலத்தில் உள்ள  100 தொடக்கப்பள்ளிகளுக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. பிலிபட் மாவட்டத்தில் உள்ள 100 துவக்க பள்ளிகளுக்கு காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது. போராட்டத்தையும் மீறி கிராம தலைவர்கள் காவி நிற வர்ணத்தை பூசியதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

தொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளிகளில் தாய் மொழியாம் தமிழில் எளிதில் மாணவர்கள் பேசுகிறார்கள். 
அதேநேரம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்-மாணவிகள் குறைந்த எண்ணிக்கையில்தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

எல்லா மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேச அனைவருக்கும் கல்வி திட்டம் முன்வந்து தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது, அதன்படி முதல் கட்டமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைக்க முடிவு எடுக்கப்பட்டது.

முதலில் 1-ம் வகுப்பு முதல் 5-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் ‘லிப்ட் யுவர் ஹேண்ட்ஸ்’ என்று ஆங்கிலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கூறினால் உடனே மாணவர்கள் தங்களின் கைகளை உயர்த்தவேண்டும். இதுபோல் சிறு சிறு வார்த்தைகளை மாணவர்களுக்கு கற்பிப்பார்கள். மேலும் பாட்டு மூலமும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஆங்கிலத்தை கற்பிப்பார்கள்.

இவ்வாறு தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி ஒரு நாள் நடத்தப்பட்டது. பயிற்சி முடிந்ததும் தலைமை ஆசிரியர்கள் அவர்கள் பெற்ற பயிற்சியை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிப்பார்கள். அந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதில் ஆங்கிலத்தில் பேச வைப்பார்கள்.

ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது குறித்து 90 வகையான புத்தகங்கள், 4 சி.டி.க்கள் ஆகியவை அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை புதிய பாடத்திட்டவரைவிலும் ஆங்கிலத்தில் மாணவர்களை எளிதில் பேச வைப்பது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட தகவலை கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரேஷன் அதிகாரிகளுக்கு லேப்-டாப்

                                        

12 நேரடி தேர்வுக்கு டிசம்பர் 11ல் பதிவு துவக்கம்!!!

சென்னையில் சர்வராகப் பணிபுரியும் ரோபோக்கள்!

                                        
இந்தியாவில் முதன்முறையாகச் சென்னையில் ரோபோக்கள் சர்வராகப்
பணிபுரியும் ஹோட்டல் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் செம்மஞ்சேரியில் 747 என்ற பெயருடன் ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஹோட்டலின் உரிமையாளர்கள் கார்த்திக் கண்ணன் மற்றும் வெங்கடேஷ் ராஜேந்திரன், இந்த ஹோட்டலை விமானம் போன்ற வடிவத்தில் வடிவமைத்துள்ளனர்.

இதுகுறித்து உரிமையாளர் கார்த்திக் கண்ணன் கூறுகையில், “சீனா போன்ற நாடுகளில்தான் இந்த மாதிரியான ஹோட்டல்கள் உள்ளன. இதுபோன்று இந்தியாவில் இல்லை. அதனால், ஜப்பான் மற்றும் சீனாவிலிருந்து ரோபோக்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டு, ஹோட்டல்களில் பயன்படுத்த முடிவு செய்தோம்.

வாடிக்கையாளர்களின் மேஜையில் டாப்லெட்டுகள் வைக்கப்படும். வாடிக்கையாளர்கள் அந்த டாப்லெட்டில் அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்யலாம். அந்த ஆர்டரை ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். ரோபோக்களுக்கு புரோகிராம் செய்யப்பட்ட சில வாக்கியங்களைக் கொண்டு வாடிக்கையாளரிடம் உரையாடும். இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த ஹோட்டல் திறந்தவுடனே அதிகமான மக்கள் முன்பதிவு செய்தனர். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இதுபோன்று, வேறொரு இடத்தில் இதனுடைய கிளை ஆரம்பிக்கப்படும். அதில் ரோபோக்கள், வாடிக்கையாளர்களை மேஜைக்கு அழைத்துச் செல்லுதல், அடிக்கடிவரும் வாடிக்கையாளர்களை அடையாளம் காணும் வசதிகளுடன் ரோபோக்கள் பணியமர்த்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

G.O 202 NEW HEALTH INSURANCE SCHEME- 2016

                                                 
                                                 

Click here more reads... Download pdf

வேலைவாய்ப்பு வேலைக்கு அழைக்கிறது இந்திய அஞ்சல் துறை: 2088 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

                                       
இந்திய அஞ்சல் துறையின்
மதுரை, கொல்கத்தா, சந்திராபூர், ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி, கோரபுட், கார்பூடண்டாபாத், ராஞ்சி, கிரிடிஹ், புராபி சிங்ன்பம், ஹஜாரிபாக், கம்மம், அஜ்மீர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்ளி்ட்ட அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள Gramin Dak Sevaks, எம்டிஎஸ், கார் ஓட்டுநர், பணியாளர் கார் ஓட்டுர், வாகன பழுது நீக்குபவர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Motor Vehicle Mechanic
காலியிடங்கள்: 01
பணியிடம்: மதுரை
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 33,000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
முகவரி: Manager, Mail Motor Service, C.T.O Compound, Tallakulam, Madurai 625002
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2018

பணி: பணியாளர் கார் ஓட்டுநர்
பணியிடம்: கொல்கத்தா
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் 5,200 - 20,200
பணி அனுபவம்: 3 - 5 ஆண்டுகள்
முகவரி: Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata-700015
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2017

பணி: Gramin Dak Sevak
பணியிடம்: சந்திராபூர்
காலியிடங்கள்: 284
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2017
மேலும் விவரங்கள் அறிய https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பணி: பணியாளர் கார் ஓட்டுநர்
பணியிடம்: மும்பை
காலியிடங்கள்: 16
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
முகவரி: Senior Manager, Mail Motor services, 134-A, s. K. AHIRE MARG, Worli, MUMBAI-400018
பணி அனுபவம்: 3 முதல் 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.12.2017

பணி: Gramin Dak Sevak
பணியிடம்: கோராப்பூர்
காலியிடங்கள்: 284
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2017

பணி: Gramin Dak Sevak
காலியிடங்கள்: 1236
பணியிடம்: Dhanbad, Ranchi, Giridih, Purbi Singhbhum, Hazaribagh
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2017
மேலும் விவரங்களுக்கு http://appost.in/gdsonline என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பணி: Gramin Dak Sevak
பணியிடம்: Koraput
காலியிடங்கள்: 93
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2017

பணி:  Gramin Dak Sevak
காலியிடங்கள்: 190
பணியிடம்: Rajahmundry, Visakhapatnam, West Godavari
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2017
மேலும் விவரங்கள் அறிய https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பணி: Gramin Dak Sevak
பணியிடம்: Khammam
காலியிடங்கள்: 127
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2017

பணி: Skilled Artisan
காலியிடங்கள்: 04
பணியிடம்: மும்பை
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து 1 முதல் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2017

பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 33
பணியிடம்: Ajmer, Jaipur, Jodhpur
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ,400
விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.doprajrecruitment.in அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2017

OTP மூலம் செல்போனை ஆதாருடன் இணைக்கும் வசதி-ஜனவரி 1முதல்..

குமரியில் 25,000 மீனவர்கள் மீது வழக்குப் பதிவு!!!

ஆசிரியர் கல்வி கவுன்சிலில் பணியிடங்கள்!!!

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் பணியிடங்கள்

மெட்ரோ ரயில் கழகத்தில் பணிகள்!

DSE PROCEEDINGS- அங்கீகாரமின்றி தொடங்கி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு!!!




வீடு-மனைகளுக்கான பத்திரப்பதிவு நடைமுறை

வீடு மற்றும் மனை ஆகியவற்றை விற்பது 
அல்லது வாங்குவது போன்ற வர்த்தக பரிமாற்றத்திற்கான ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறைகள் பற்றி இங்கே காணலாம். குறிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட புல எண்கள் அமைந்துள்ள இடங்களுக்கு, அவற்றின் சந்தை மதிப்புகளை பொறுத்து அரசின் வழிகாட்டி மதிப்பு (Guide line value) வெவ்வேறு விதங்களில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கலாம். அந்த மதிப்பிற்கேற்ப ஆவணங்களை தயார் செய்யும்போது, முழு மதிப்பிற்கும் முத்திரைத்தாள் வாங்க முடியாத நிலையில், குறிப்பிட்ட மதிப்புக்கு வாங்கிவிட்டு மீதி உள்ள மதிப்பை சார்பதிவாளர் அலுவலகத்திலும் செலுத்தலாம்...!*

*பதிவு கட்டணம்*

*▪மேற்கண்ட கட்டணத்தை செலுத்த 41 என்ற படிவத்தில் வாங்கப்பட்ட முத்திரைத்தாள் மதிப்பு, வாங்க வேண்டிய முத்திரைத்தாள் மதிப்பு, மீதி செலுத்த வேண்டிய கட்டணம் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து பத்திரத்துடன் இணைத்து தாக்கல் செய்யவேண்டும். மீதி கட்டணம் ரூ. ஒரு ஆயிரத்துக்கும் மேற்பட்டிருந்தால் ‘கேட்பு வரைவோலையாக’ (DEMEND DRAFT) மீதி தொகையை செலுத்த வேண்டும். அரசு வழிகாட்டி மதிப்பிலிருந்து பதிவுக் கட்டணம் ஒரு சதவிகிதம் மற்றும் கணினி கட்டணம் ரூ. 100 ஆகியவற்றையும் சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். அந்த தொகையில் ரூ. ஒரு ஆயிரம் வரை பணமாகவும், அதற்கு மேற்பட்ட கட்டணத்தை ‘கேட்பு வரைவோலையாகவும்’ செலுத்தவேண்டும்...!*

*பத்திர பதிவு*

*▪முத்திரை தாள்கள் அடங்கிய ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்தின் கீழ்ப்புறம் சொத்து வாங்குபவர் மற்றும் சொத்து விற்பவர் ஆகியோர் கையெழுத்திட வேண்டும். சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவர் புகைப்படம், அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரி பார்த்தபின்னர், சார்பதிவாளர் பத்திரத்திற்கான பதிவு எண்ணை குறிப்பிடுவார். பின்னர் விற்பவர் மற்றும் வாங்குபவர் புகைப்படங்கள் முதலாவது முத்திரைத்தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு, கையொப்பம், முகவரி, கைரேகை ஆகியவை பெறப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவதோடு, ஆவணத்திற்கான சாட்சிகள் இருவரது கையொப்பமும் பெறப்பட்டு, பதிவு நிறைவு பெறும்...!*

 *பத்திரம் பெறுதல்*

*பதிவுக் கட்டணம் செலுத்திய ரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் ஆகியோர் கையொப்பமிட்டு, குறிப்பிட்ட நாள்கள் கழித்து, இரசீதை சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து தமது பத்திரத்தை சொத்து வாங்கியவர் பெறலாம். வேறொருவர் வாங்க வேண்டியதிருந்தால், ரசீதில் அவர் கையொப்பமிட வேண்டும்...!*

*‘பெண்டிங் டாக்குமெண்ட்’*

*▪பத்திரப்பதிவின் போது அரசு வழிகாட்டி மதிப்பிற்கேற்ப முத்திரைத்தாள் வாங்குவது அவசியம் என்றாலும், அரசு நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பு அதிகம் என்று கருதுபவர்கள் அவர்களே சொத்திற்கான மதிப்பை நிர்ணயம் செய்து அதன் மதிப்பிற்கேற்ப குறிப்பிட்ட சதவிகிதத்தை கணக்கிட்டு முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அந்த ஆவணத்தை சார்பதிவாளர் பதிவு செய்த பின்னர் ‘pending document' என்று முத்திரை இடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ஒரு பிரிவின் அலுவலர் மூலம் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தையும், சுற்றிலும் அமைந்துள்ள மற்ற சர்வே எண்களின் மதிப்பையும் கணக்கிட்டு, முன்னர் குறிப்பிட்டிருந்த அரசு வழிகாட்டி மதிப்பில் வித்தியாசம் உள்ளதா..? என்பதை முடிவு செய்வார் அல்லது அவரே மதிப்பை நிர்ணயம் செய்வார்...!*

*வித்தியாச கட்டணம்*

*▪ஒரு வேளை அரசு வழிகாட்டி மதிப்பு சரியாக இருப்பதாக தெரியும் பட்சத்தில் அந்த தொகைக்கும், நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாச தொகையில் குறிப்பிட்ட சதவிகித தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாச தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டணமாக செலுத்தவேண்டும். அதன் பிறகு பத்திரம் சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47-கி பிரிவு என்று சொல்லப்படும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தை பெற வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பத்திரம் அனுப்பப்பட்டு, அங்கு சென்று வித்தியாச கட்டணத்தை செலுத்தி பத்திரத்தை பெற்று கொள்ளலாம்...!*

R.K.நகர் தொகுதி Ballot paper

                                                 
Click Here
https://drive.google.com/file/d/11UjomBsIHhn2r_jlzBfXcrZ8vHlQH9Si/view?usp=drivesdk