யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/1/18

ஜனவரி 29-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்க உள்ளது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.


அப்போது நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், தற்போது உள்ள உச்சவரம்பானது ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளதாகவும், ஐந்து லட்ச ரூபாய் முதல் பத்து லட்ச ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத வரி விதிக்கவும். மேலும், பத்து லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத வரியும். 20 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீத வரியும் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச் 5 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை இரண்டாவது பகுதி நடைபெறவுள்ளது.

6/1/18

சென்னை பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜெ.இ.இ பயிற்சி வகுப்பு தொடக்கம்

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நீட், ஜெ.இ.இ பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், சுப்பராயன் தெரு, சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோடம்பாக்கம் மண்டலம், 
சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று ஸ்பார்க் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் சென்னை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைக்கப்பட்டன.பின்னர், சுப்பராயன் தெரு சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் நவீன வசதிகளுடன் கூடிய 120 படுக்கைகள் கொண்ட அறைகளும் திறந்து வைக்கப்பட்டன.இது பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறியதாவது:''சென்னை பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க செயல்பாடாக, சுப்பராயன் தெரு சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி, சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கானஉண்டு உறைவிடப்பள்ளி என இரண்டு உண்டு உறைவிடப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.அதேபோன்று, சென்ற ஆண்டு ஸ்பார்க் ப்ரோகிராம் என்ற திட்டத்தின் வாயிலாக பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 70 பள்ளிகளில் இருந்து 25 மாணவர்களும், 45 மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளிப் பாடத்திலிருந்து அவர்களுக்கு சிறப்புப்பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் வாயிலாக மாணவ, மாணவிகளுடைய ஒட்டுமொத்த அடைவுத்திறன் அதிகரிக்கப்பட்டது.

இக்கல்வியாண்டில் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளிலும் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் சேரும் விதமாக 60 மாணவர்கள் மற்றும் 60 மாணவியர்கள் திறனறிவுத் தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இம்மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில்40 மாணவர்கள் மற்றும் 40 மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.மேலும், 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகளுக்கு ’ஜி மெயின் இங்கிலிஷ்’ ஆங்கில வழியில் மட்டும் இரண்டு பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியானது காலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கி திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது.காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பாடத்திட்டத்திலும், சனி மற்றும் விடுமுறை நாட்களில் நீட் மற்றும் ஜெஈஈக்கு சிறப்புப்பயிற்சியாக புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தின் வாயிலாகவும், திங்கள் முதல் வெள்ளி வரை முறைப்படுத்தப்பட்ட அட்டவணையின்படி மாஸ்டர் அகாடமி என்ற நிறுவனத்தின் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இரண்டு மையங்களையும் கல்வித்துறையில் உள்ள கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர் மற்றும் அனைத்து உதவிக்கல்வி அலுவலர்களும் சுழற்சி முறையில் மாணவர்களுடைய அடைவுத்திறன் மேம்படவும் மற்றும் சூநுநுகூ,துநுநு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும் மேற்பார்வையிடப்படுகிறது''.இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையார் கார்த்திகேயன் தெரிவித்தார்.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான அரசு இலவச பயிற்சிமையம் தொடக்கம்: ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள்

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி மையத்தை தமிழக அரசு சென்னையில் தொடங்கியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயா கல்லூரி வளாகத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி மைய தொடக்க விழா நேற்று நடைபெற்றது.


இந்த விழாவில், பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான கையேடுகளை வழங்கி மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:ரயில்வே பணியாளர் வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம், மத்திய வங்கி பணியாளர்களுக்கான தேர்வு வாரியம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரூ.1.53 கோடி செலவில் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி மையத்துக்காக ஆண்டுதோறும் ரூ.1.25 கோடியை தமிழக அரசு ஒதுக்கவுள்ளது. 3 மாதங்களுக்கு 500 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள். பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 மதிப்பிலான பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும். இந்தவாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தற்காலிகமாக தியாகராயா கல்லூரி வளாகத்தில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிரந்தர உண்டு, உறைவிட வசதிகளுடன் கூடிய பயிற்சி மைய கட்டிடம் வடசென்னையின் ஒரு இடத்தில் கட்டி முடிக்கப்படும். அடுத்தகட்டமாக கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இதே போன்று பயிற்சி மையங்களை தொடங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பயிற்சித் துறை தலைவர் கே.ஞானதேசிகன், கூடுதல் இயக்குநர் ஏ.சண்முகசுந்தரம், பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் டாக்டர் எஸ்.ஸ்வர்ணா, சர் தியாகராயா கல்லூரியின் தாளாளர் பி.குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Flash News : போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்புங்கள் - ஹைகோர்ட் உத்தரவு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கையை அரசு எடுக்கலாம் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர், நடத்துனர்கள் உடனடியாக பணிக்கு வராவிட்டால் பணிநீக்கம் உள்ளிட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊதியம் திருப்தி இல்லை என்றால் வேறு பணிக்கு செல்லலாம் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். மேலும் வேலைநிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் பதில் அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜன.8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிரான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எகிறியது நீதிபதிகளின் சம்பளம்! - மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு

உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்பளம் இருமடங்காக உயர
உள்ளது. இதற்கான மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
நீதிபதிகளுக்கான 7 வது சம்பள கமிஷனின் சிபாரிசு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. 7வது சம்பள கமிஷனை அமல்படுத்தி, நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான மசோதா, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அடுத்து குடியரசுத் தலைவரின் கையெழுத்தைப் பெற்று சட்டமாகிவிடும். இந்த மசோதாவின்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சம்பளம், தற்போதைய ரூ.1,00,000-லிருந்து ரூ.2 ,80,000-மாக உயரும். உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சம்பளம் ரூ.90,000-லிருந்து ரூ.2,50,000-மாக உயருகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.80,000-லிருந்து ரூ.2.25,000-மாக உயருகிறது.

2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய சம்பள உயர்வு அமலுக்கு வரும். ஓய்வு பெற்ற 2,500 நீதிபதிகளும் சம்பள உயர்வால் பலனடைவார்கள்.

TNPSC- ANNUAL RECRUITMENT PLANNER 2018



EMIS பணிகளை விரைந்து முடிப்பதற்காக (06.01.2018) பள்ளிகளுக்கு வேலை நாள் - CEO உத்தரவு :

PILOT கல்வி முறையில் வண்ணக் குறியீடுகளின் செயல்பாடுகள் :

5/1/18

BIG BREAKING NEWS தடைகளை தகர்த்து 2009&TET போராட்டக்குழு பெற்ற 10.01.2018 பின்பும் நமது பழைய ஊதியத்தினை தொடர்ந்து பெற்று கொள்ளலாம் என நிதித்துறை செயலாளர் ஆணை கடிதம் எண்-58863/CMPC/நாள் -30.12.2017 நகல்.

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்.பணியில் சேர ஆணை பிறப்பிப்பு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் - மாண்புமிகு நீதியரசர் திரு. கிருபாகரன் அவர்களின் கருத்துக்கு எதிராக செயல்பட்டதாக நீதிமன்ற அவமதிப்பு 
வழக்கில் சம்பந்தப் பட்ட  ஆசிரியர்கள்  அனைவரும் நாளை வெள்ளிக்கிழமை பணியில் சேர பள்ளிக்கல்வித் துறை ஆணை வழங்கியுள்ளது

ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்கள் வேலையிழக்கும் அபாயம்!

தொடக்கப் பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி முடிக்காவிட்டால் வேலையிழக்க
நேரிடும்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கட்டாயக் கல்வி சட்டம் 2009இன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சியைக் கட்டாயம் முடிக்க வேண்டும். இரண்டாண்டு டிப்ளோமா ஆசிரியர் (டிஎல்ஈடி) பயிற்சியை முடிக்காதவர்கள் வேலையிழக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தேசிய திறந்தநிலைப் பள்ளி மண்டல இயக்குநர் ரவி, “தேசிய திறந்தநிலைப் பள்ளி மூலம் ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஸ்வயம் பிரபா என்கின்ற சேனல் மூலம் இதற்கான பாடங்களை கற்க முடியும். பணியில் இருந்துகொண்டே ஆசிரியர்கள் பயிற்சிக்கான டிப்ளோமா படிப்பை பயில முடியும். மேலும், மொபைல் ஆப் மூலமாகவும் படிக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

நாடுமுழுவதும் 15 லட்சம் ஆசிரியர்களும், தமிழகத்தில் 25,600 பேரும் டிஎல்ஈடி பயிற்சியில் சேர்ந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களுக்குத் தேர்வு நடக்க இருக்கிறது. அதில் தேர்ச்சி பெறாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குரூப் - 2 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு!!!

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 2 முதன்மை தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 2ல் அடங்கிய, துணை வணிக வரி அதிகாரி, சார் பதிவாளர் நிலை- - 2, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்பட, 18 வகை பதவிகளுக்கு, 2016 ஆக., 21ல் முதன்மை தேர்வு நடந்தது.
தமிழகம் முழுவதும், 1,094 காலியிடங்களை நிரப்ப, இந்த தேர்வு நடந்தது. தேர்வில், 9,833 பேர் பங்கேற்றனர். அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதிபடி, 2,166 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஜன., 22 - பிப்., 19 வரை நேர்காணல் நடக்கும். தேர்வர்களின் விபரங்கள் www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

நிர்வாக இடமாறுதல் துவக்கம் : கோட்டையில் ஆசிரியர்கள் முகாம்!!!

அரசுபள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட
இடமாறுதல் நடவடிக்கை, மீண்டும் துவங்கிஉள்ளது. தமிழக அரசு பள்ளிகளில்,
ஆண்டு தோறும் மே மாதம், விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு
நடத்தப்படும். இதில், அனைத்து காலியிடங்களும் அறிவிக்கப்பட்டு, அவற்றில், ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, இடமாறுதல் வழங்கப்படும்.
பின், காலியாக உள்ள இடங்களுக்கு, விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், ஜூன் முதல் செப்., வரை இடமாறுதல் ஜரூராக நடந்தது. பள்ளிகளில் வகுப்புகள் நடக்கும் நிலையில், ஆசிரியர்களை மாற்றுவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால், இடமாறுதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து, பருவ தேர்வு விடுமுறையில் மாறுதல் வழங்கி, வகுப்புகள் துவங்கும் போது, ஆசிரியர்களை மாற்ற, அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, இடமாறுதல் நடவடிக்கை துவங்கி உள்ளது.
இந்தமுறை இடமாறுதல் நடவடிக்கை, நேரடியாக பள்ளிக்கல்வி அமைச்சகம் மற்றும் முதன்மை செயலரின் மேற்பார்வையில் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதனால், இடமாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் வழியே, நேரடியாக செயலகத்தில் மனுக்களை குவித்து வருகின்றனர்.

ஆங்கிலம் கற்பித்து அசத்தும் பார்வையற்ற பெண் ஆசிரியை!!!

பெரம்பலுார் : பார்வையற்ற பெண் ஆசிரியை
, அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு ஆங்கில பாடம் கற்பித்து அசத்தி
வருகிறார்.


பெரம்பலுார் மாவட்டம், பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள யூனியன் நடுநிலைப் பள்ளியில், ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, 107 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை உட்பட, எட்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு, பாப்பாத்தி, 29, என்பவர், ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக, 2012 முதல், பணியாற்றி வருகிறார். ஆங்கிலத்தில், எம்.ஏ., - பி.எட்., முடித்துள்ள பாப்பாத்தி, பார்வையற்றவர். துவக்கப் பள்ளி முதல், 'பிரெய்லி' முறையில் படித்தவர். தற்போது, எம்.பில்., பட்டப் படிப்பும் படித்து வருகிறார். ஆறு ஆண்டுகளாக, இங்கேயே பணியாற்றி வருகிறார்.

பாப்பாத்தி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆங்கில பாடம் நடத்துகிறார். மாணவ - மாணவியருக்கு எளிதில் புரியும் படியும், ஆடிப் பாடியும் எளிமையாக பாடம் நடத்துகிறார். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், உரையாடவும் பயிற்சி அளிக்கிறார்.

'தனியார் பள்ளி மாணவர்களுடன், அரசு பள்ளி மாணவர்கள் போட்டியிடும் வகையில், இவரது ஆங்கிலம் போதிக்கும் திறன் உள்ளது' என, அவருடன் பணியாற்றும் சக ஆசிரியர்களே பெருமிதம் கொள்கின்றனர்.

ஆசிரியை பாப்பாத்தி கூறியதாவது: எனக்கு ஒன்றரை வயதில், மூளைக் காய்ச்சலால் பார்வை பறிபோனது. கலெக்டராக வேண்டும் என்பதே என் ஆசை. பார்வையற்றவர், ஐ.ஏ.எஸ்., ஆக முடியாது என்பதால், என் ஆசிரியை ரூபி என்பவரின் வழிகாட்டுதலின்படி, ஆங்கில பாடப்பிரிவு எடுத்து படித்தேன். பெற்றோர் இறந்து விட்டனர். இரண்டு அண்ணன், அக்கா உள்ளனர். என் முயற்சிக்கு, பெரிய அண்ணன் குடும்பத்தினர், மிகவும் உறுதுணையாக இருந்தனர்.

பாடப் புத்தகங்களை, பிரெய்லி முறையில் தான் வைத்துள்ளேன். ஆங்கிலம் வாசித்தல் மற்றும் உச்சரிப்பு, உரையாட பயிற்சி கொடுக்கிறேன். மதிய உணவு இடைவேளை உட்பட, நேரம் கிடைக்கும் போதெல்லாம், மாணவர்களுக்கு, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்பும் எடுக்கிறேன். என் ஊரிலிருந்து, 15 கி.மீட்டரில் உள்ள பள்ளிக்கு, பஸ்சில் தனியாகவே வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



பாடம் நடத்துவதில் மட்டுமின்றி, பள்ளிக்கு சரியான நேரத்தில், வந்து செல்வதையும் பாப்பாத்தி வழக்கமாக வைத்து உள்ளார்.

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் பாடத்திட்டம்! : பள்ளி கல்வி துறை அமைச்சர் உறுதி

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், தொழில் கல்வியுடன் கூடிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்,'' என,பள்ளி கல்வித்துறை அமைச்சர்,
செங்கோட்டையன் தெரிவித்தார்.


 கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்த அறிவியல் கண்காட்சியை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். நிருபர்களிடம், அமைச்சர் கூறியதாவது:படித்து முடித்ததும், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.மூன்று ஆண்டுகளுக்குள் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.

 இதில், 72 பாடங்கள், தொழில்கல்வி கற்றுத்தரும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும். இந்த புதிய பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தைவிட சிறந்ததாக இருக்கும்.அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாக, பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு நிதியிலிருந்து அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரத்து500 பேர் நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பணி நிரந்தரம் என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர்களுக்கு, அரசு உதவி செய்யும் வகையில், பகுதி நேர ஆசிரியர்களை அருகேயுள்ள பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர்நிலை முடித்தவர்கள் மேல்நிலையில் என்ன படிக்கலாம் என்றும், மேல்நிலை முடித்தவர்கள், கல்லுாரியில் என்ன படிக்கலாம் என ஆலோசிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்த பள்ளிகளில், 'படிக்காலம் பாடங்களை' என்ற தலைப்பில், 256 பாடங்களை பெயர் பலகையில் எழுதி ஒரு வார காலம் வைக்கப்படும்.


பெற்றோர், மாணவர்கள் கலந்து பேசி படிப்பதில் ஏற்படும்சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, ஒரு வழிகாட்டியாக இந்த பெயர் பலகை வைக்கப்படும்.மரக்கன்றுகளை நட்டு, ஓராண்டுக்கு பராமரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஆசிரியர்களை குழப்பும் எமில் (EMIS) செயலி -ஸ்மார்ட் -சோதனையால் தவிப்பு -போட்டோ -ரத்த குரூப் விவரம் மாயம்

2018 ஆம் ஆண்டிற்கான தொடர் விடுமுறை காலண்டர்

ஜனவரி - 2018    (13-16),(26-28)
ஜனவரி 13 - சனி
ஜனவரி 14 - பொங்கல்
ஜனவரி 15 - மாட்டுப்பொங்கல்
ஜனவரி 16 - உழவர் திருநாள்
ஜனவரி 26 - 69 வது குடியரசு தினம்
ஜனவரி 27 - சனி
ஜனவரி 28 - ஞாயிறு

மார்ச் - 2018 (01-04),(29-1)
மார்ச் 01 - ஹோலிப் பண்டிகை
மார்ச் 02 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
மார்ச் 03 - சனி
மார்ச் 04 – ஞாயிறு



மார்ச் 29 - மஹாவீர் ஜெயந்தி
மார்ச் 30 - புனித வெள்ளி
மார்ச் 31 - சனி
ஏப்ரல் 01 - ஞாயிறு

ஏப்ரல் - 2018 (13-25),(28-01)
ஏப்ரல் 13 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
ஏப்ரல் 14 - தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 15 – ஞாயிறு

ஏப்ரல் 28 - சனி
ஏப்ரல் 29 - ஞாயிறு
ஏப்ரல் 30 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
மே 01 - மே தினம்

ஜூன் - 2018  (14-17)
ஜூன் 14 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
ஜூன் 15 - ரம்ஜான் பண்டிகை
ஜூன் 16 - சனி
ஜூன் 17 - ஞாயிறு

செப்டம்பர் - 2018 (13-16),(21-23)
செப்டம்பர் 13 - விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 14 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
செப்டம்பர் 15 - சனி
செப்டம்பர் 16 – ஞாயிறு

செப்டம்பர் 21 - முஹரம்
செப்டம்பர் 22 - சனி
செப்டம்பர் 23 - ஞாயிறு

அக்டோபர் - 2018  (SEP29-02) (18-21)
செப்டம்பர் 29 - சனி
செப்டம்பர் 30 - ஞாயிறு
அக்டோபர் 1 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி

அக்டோபர் 18 - ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை
அக்டோபர் 19 - விஜயதசமி
அக்டோபர் 20 - சனி
அக்டோபர் 21 - ஞாயிறு

நவம்பர் - 2018  (03-06)
நவம்பர் 03 - சனி
நவம்பர் 04 - ஞாயிறு
நவம்பர் 05 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
நவம்பர் 06 - தீபாவளி                                                                                      

டிசம்பர் - 2018  (22-25)
டிசம்பர் 22 - சனி
டிசம்பர் 23 - ஞாயிறு
டிசம்பர் 24 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்

அண்ணாமலைப் பல்கலையில் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் :



4/1/18

வருமானவரி சில குறிப்புகள்

1.வருமானவரி படிவம் 16
மே மாதம் 31 ஆம் தேதிக்குள் சம்பளப்பட்டுவாடா அலுவலரிடமிருந்து பெறப்பட வேண்டும்.
============

2.ஜுலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி படிவங்களை இணைய தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
==============
3.ஜூலை 31 ஆம் தேதிக்குப் பின்னர் ரூ5000 அபராதம் கட்டிய பின்னரே சமர்ப்பிக்க முடியும்
=============
4.ரூ 2,50,000 க்கு மேல் வருமானம் பெறுபவர்கள் கண்டிப்பாக வருமான வரி படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.
==============
5. 80 c....1,50,000 கழித்தபின்னர் cps  தொகை அதிகம் இருந்தால் ரூ 50,000 வரை 80 CCD (1B)   யில் மேலும் கழித்துக்கொள்ளலாம்.
==============
6.வீட்டுவாடகைப்படி மாதத்திற்கு ரூ 8333 வீதம் ஆண்டிற்கு ஒரு இலட்சம் வரை கழிக்கலாம்.அதற்கு மேல் கழிக்க வீட்டு உரிமையாளரின்  PAN NO
RECEIPTS
முதலியன சமர்ப்பிக்க வேண்டும்.
===============
7.உங்கள் பெற்றோருக்கு வீட்டு வாடகை தருவதன் மூலம் HRA படியை கழித்துக்கொள்ளலாம்.
=============
8. வரி விபரம்
ரூ 2,50,000-NIL
........................
2,50,001முதல் 5,00,000 முடிய
5%
அதிகபட்சம்
(ரூ 12,500)
........................
5,00,000 முதல்
10,00,000 முடிய
20%
அதிகபட்சம் (ரூ1,00,000)
.........................
ரூ 10,00,000 மேல் 30%
இதற்கு மேல் தாங்காது சாமி.
============
9. TAXABLE INCOME: ரூ வரை 3,50,000 வரை ரூ 2500 கழித்துக்கொள்ளலாம் .
==============
10.வழக்கம்போல் தொழில்வரி முழுவதையும் கழித்துக்கொள்ளலாம்.

DEE - ஊராட்சி / நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் வருங்கால வைப்பு கணக்குகள் அரசு தகவல் தொகுப்பு மையத்திலிருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது-நிலுவைகள் விவரங்கள் சார்பு!

மொபைல் எண்னுடன் ஆதார் எண் இணைக்க டோல் - ஃபீரி 14546

மொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மூன்று புதிய வழிமுறைகளை வருகின்ற ஜனவரி 1 முதல் செயற்படுத்த மத்திய தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.


மொபைல்-ஆதார்

மத்திய அரசின் அறிவிப்பின் படி பயன்பாட்டில் உள்ள அனைத்து மொபைல் எண்களுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆதார் கார்டு எண்ணை இணைக்க அருகாமையில் உள்ள தொலைத்தொடர்பு ரீடெயிலரிடம் சென்று இணைக்கும் வகையிலான வழிமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வருகின்ற ஐனவரி 1 முதல், ஆதார் எண்ணை இணைக்க மூன்று விதமான சுலபமான வழிமுறைகளை செயற்படுத்த உள்ளது. அதன் விபரம் பின் வருமாறு ;-

1 . மொபைல் எண் வாயிலாக ஐவிஆர்எஸ் ((IVRS)) எனப்படும் அழைப்பு வாயிலாக ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
2 . OTP எனப்படுகின்ற ஒரு முறை கடவுச்சொல் கொண்டு மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட உள்ளது.
3. இறுதியாக, ஆதார் எண்ணை இணைக்க பிரத்தியேக ஆப் ஒன்றை செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்என்எல், வோடபோன், ஏர்டெல், ஏர்செல்,ஐடியா போன்ற பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரிடம் ஆதார் எண் இணைக்க மேலே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற உள்ளது.
இதுவரை அருகாமையில் உள்ள ஸ்டோர்களுக்கு சென்று ஆதார் எண்னை இணைக்க வேண்டிய நிலை இருந்த சூழ்நிலையில், முதற்கட்டமாக ஆதார் இணைக்கப்பட வேண்டிய மொபைலில் இருந்து அழைக்கும் முறையை அறிந்து கொள்ள பினபற்ற வேண்டிய வழிமுறை பின் வருமாறு ;-
1 . உங்கள் மொபைலில் இருந்து 14546 என்ற ஐவிஆர்எஸ் (IVRS) எனண்ணுக்கு அழையுங்கள்
2.அழைத்த பின்னர் மொழி தேர்ந்தெடுத்த பிறகு இந்திய பிரஜையா அல்லது வெளிநாட்டவரா என்ற கேள்விக்கு பதிவு செய்ய வேண்டிய எண்னை அழுத்திய பிறகு ஆதார் எண் இணைக்க என்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.
3. உங்கள் ஆதார் எண் பதிவு செய்த பிறகு உங்கள் ஆதார் எண் உறுதி செய்யப்பட உங்களது மொபைல் எண்னுக்கு OTP மெசேஜ் வந்து சேரும் அதனை உறுதிப்படுத்திய பிறகு ஆதார் எண் இணைக்கப்பட்ட எஸ்எம்எஸ் வந்து சேரும்.

உச்சநீதிமன்றம் அறிவித்தபடி ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைக்க வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

அனைத்துவகை ஆசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும்பணியாளர்கள் நிழற்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து வர - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

ஜாக்டோ ஜியோ -தொடர் முழக்க போராட்டம்- 06.01.2018- கோரிக்கைகள்



'நெட்' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை, பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டுக்கான நெட் தேர்வு, நவம்பரில் நடந்தது; 9.30 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இவற்றை, cbsenet.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

பிளஸ் 2 தேர்வுக்கு இன்று 'தத்கல்' பதிவு

சென்னை, பிளஸ் 2 பொது தேர்வுக்கு, இன்று முதல், 'தத்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துஉள்ளது.பிளஸ் 2 பொது தேர்வை, நேரடியாக தனித்தேர்வர்கள் எழுதும் முறை, இந்த கல்வி ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.
அடுத்த ஆண்டு முதல், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 1 பொது தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்ற பிறகே, பிளஸ் 2 தனித்தேர்வை எழுத முடியும்.அதனால், இந்த கல்வி ஆண்டில், வரும் மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 பொது தேர்வில் மட்டுமே, தனித்தேர்வர்கள், நேரடியாக பங்கேற்க முடியும். இதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது.அதில், விண்ணப்பிக்க தவறியோர், 'தத்கல்' முறையில், இன்று முதல், 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார். பதிவு செய்வதற்கான ஆன்லைன் மையங்களின் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

வேலூரில் ஜனவரி 6-ம் தேதி நடக்கிறது பாஸ்போர்ட் மேளா!

வேலூரில் ஜனவரி 6-ம் தேதி அன்று சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடைபெறுகிறது. இந்த மேளா, வேலூரில் அமைந்துள்ள அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் நடைபெறும். சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இந்தச் சிறப்பு பாஸ்போர்ட் மேளாவை நடத்துகிறது.


வேலூர் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம், மற்ற வார நாள்களைப் போல் ஜனவரி 6-ம் தேதி அன்று இயங்கும். பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் விண்ணப்பங்கள் வழக்கம் போல் பெற்றுக் கொள்ளப்படும். இந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கேற்க, விண்ணப்பதாரர்கள் அனைவரும், பாஸ்போர்ட் அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.passportindia.gov.in மூலம் ஆன்லைனில் பதிவு செய்து, விண்ணப்ப பதிவு எண்ணை (ஏ.ஆர்.என்.) பெற்றுக் கொண்டு, ஆன்லைனிலேயே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி சந்திப்பு முன்பதிவு நேரத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த மேளாவில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது சந்திப்பு முன்பதிவு விவரம் கொண்ட ஏ.ஆர்.என். பதிவு எண் தாளை அச்சிட்டு எடுத்து வரவேண்டும். மேலும் தேவையான அனைத்து ஆவணங்களை அசலுடன், சுய சான்றளிக்கப்பட்ட ஒரு நகலுடன் கொண்டு வரவேண்டும். புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். இந்த மேளாவிற்கான சந்திப்பு முன்பதிவு ஜனவரி 03, 2018 (புதன்கிழமை) மதியம் 2.30 மணிக்குத் தொடங்கியது.

பாஸ்போர்ட் மேளா நாளன்று, குறித்த நேரத்திற்கான முன்பதிவு நேரம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள். காவல்துறை தடையின்மை சான்றிதழ் (பி.சி.சி.) விண்ணப்பங்கள், நிறுத்திவைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் விண்ணப்பதாரர்கள் மற்றும் மறுக்கப்பட்ட டோக்கன்கள் வைத்திருப்போர் மற்றும் மையத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பம் செய்ய வருபவர்கள் இந்த மேளாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக்: தேர்ச்சி பெறாதோர் தேர்வு எழுத சிறப்பு அனுமதி

தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் தேர்வு எழுத தொழில்நுட்பக் கல்வித் துறை சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தொழில்நுட்பக் கல்வித் துறை சார்பில் வருகிற ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் பட்டயத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். அதனுடன் மதிப்பெண் பட்டியல் கட்டணம் ரூ. 30, பதிவுக் கட்டணம் ரூ. 25 கட்டணங்களையும் சேர்த்து மாணவர்கள் படித்த கல்லூரி முதல்வர் மூலமாகச் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும். 
அவ்வாறு தேர்வுக்குப் பதிவு செய்ய பிப்ரவரி 7 கடைசி நாளாகும். அபராதத் தொகை ரூ. 100 செலுத்தி, பிப்ரவரி 14 வரை தேர்வுக்குப் பதிவு செய்யலாம். 
அதன் பிறகு, தட்கல் முறையில் ரூ. 500 அபராதம் செலுத்தி மார்ச் 9-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி குறைந்தது ஏன்? – அரசுப் பள்ளி ஆசிரியர்களை வருத்தெடுத்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து, அந்தப் பள்ளியின் ஆசிரியர்களை ஆட்சியர் கந்தசாமி சரமாரியாக கேள்வி எழுப்பி எச்சரிக்கை விடுத்தார்.


▪ராந்தம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி திடீரென ஆய்வு நடத்தினார். பின்னர் செய்யாறு அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஏன் குறைந்தது என அவர் கேள்வி எழுப்பியதற்கு ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டியதால் ஆட்சியர் ஆத்திரம் அடைந்தார். 6ஆம் வகுப்பில் இருந்தே முறையாக கற்றுக் கொடுத்து இருந்தால் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு ஏன் இந்த நிலை ஏற்படுகிறது என்று அவர் கடிந்து கொண்டார்.

▪ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளியில் சேர்த்து விட்டு விட்டு, அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளை சரியாக கவனித்துக் கொள்வதில்லை என்று கூறிய அவர், இதனால் தான் தனியார் பள்ளிகள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் கண்டித்தார். ஆசிரியர்கள் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.

▪இதையைடுத்து செய்யாறு கல்வி மாவட்ட மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விழிப்பணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட நகைச்சவை நடிகர் தாமு கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்

3/1/18

டெபிட் கார்டு, பீம் செயலி சலுகை அமலுக்கு வந்தது

டெபிட் கார்டு, பீம் செயலி மூலம் ரூ.2,000 வரை பொருள்களை வாங்கினால் அதற்கு வர்த்தகர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டாம் என்ற சலுகை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய
நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

 பொருள்கள் விற்பனையில் டெபிட் கார்டு, பீம் செயலி வாயிலான பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய சலுகையை வழங்க மத்திய அரசு கடந்த வாரம் முடிவு செய்தது. அதன்படி, ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு, வங்கிகளுக்கான எம்டிஆர் கட்டணத்தை வர்த்தகர்கள் செலுத்த வேண்டியதில்லை; அதனை, அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டது.

 இந்நிலையில், மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலாளர் ராஜீவ் குமார் சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள பதிவில், "டிஜிட்டல் 2018 மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. டிசம்பருடன் முடிந்த காலாண்டில் பீம் செயலி மூலம் நடைபெற்ற பரிமாற்றம் 86 சதவீதம் அதிகரித்து ரூ.13,174 கோடியாக உள்ளது' என்று கூறியுள்ளார்.
 பொருள்கள் விற்பனையின்போது, டெபிட், கிரெடிட் கார்டு, பீம் செயலி உள்ளிட்ட மின்னணு பரிவர்த்தனை சேவையை வழங்குவதற்காக வர்த்தகர்களிடம் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இக்கட்டணம், எம்டிஆர் என்றழைக்கப்படுகிறது.


 பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில், பொருள்களின் வர்த்தகத்தில் டெபிட் கார்டு, பீம் செயலி பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் புதிய சலுகையை வழங்குவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கான எம்டிஆர் கட்டணத்தை வர்த்தகர்கள் செலுத்த வேண்டியதில்லை; அதனை, அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி வரை இச்சலுகையை வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.

750 தனி ஊதிய முரண்பாடுகளை களைய முதல்வர் தனிப்பிரிவில் மனு

வருமான வரி கணக்கு உதவி மைய எண் மாற்றம்

ஆண்டு வருமான வரி கணக்கை, 'ஆன்லைன்' வாயிலாக தாக்கல் செய்வோருக்கான உதவி மைய எண் மாற்றப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கை, 'இ - பைலிங்' எனும், 'ஆன்லைன்' வழியில் தாக்கல்
செய்வோருக்காக, தனி உதவி மையத்தை வரித்துறை அமைத்துள்ளது. அதற்கு, புதிய எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வருமான வரித்துறையின்,www.incometaxindiaefiling.gov.inஎன்ற இணையளத்தில், ஆண்டு வரி கணக்கை தாக்கல் செய்வோர், 1800 103 0025 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் விளக்கம் பெறலாம். அது போல், 8049 612 2000 என்ற எண்ணிலும், 'இ - பைலிங்' தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

அனுமதியின்றி சுற்றுலா : பள்ளிகளுக்கு தடை

தமிழகத்தில், அரையாண்டு தேர்வு முடிந்து, வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர, மற்ற வகுப்பு
மாணவர்களை, சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கான பணிகளை, பல பள்ளிகள் துவக்கியுள்ளன.

இதையடுத்து, 'அனுமதியின்றி மாணவர்களை, சுற்றுலா அழைத்து செல்லக் கூடாது' என, பள்ளிகளுக்கு, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள அனுப்பியுள்ள கடிதம்: மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து, முன்அனுமதி பெற வேண்டும்.
கல்வித்துறை வகுத்துள்ள விதிகளை பின்பற்றி, மாணவர்களின் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஆபத்தான இடங்களுக்கு, சுற்றுலா அழைத்து செல்லக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதிய உணவு திட்டத்தில் பால் வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை!!

மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!
டெல்லி : அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்துடன் பாலையும் சேர்த்து வழங்க மத்திய வேளாண் அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையை போக்கும் விதமாக மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை அளித்துள்ளது.



அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சார்பில் இலவச மதிய உணவுத் திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. ஏழை மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் கல்வி, கற்கவும், பசி இல்லாமல் கல்வியறிவு பெறவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


மதியஉணவுத் திட்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மாணவர்களுக்கு வாரம் இரு முறை சத்துணவில் முட்டை, காய்கறிகள், சுண்டல் மற்றும் கலவை சாதங்கள் என்று ஒரு பட்டியலையே ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.


குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

இந்நிலையில் நாடு முழுவதும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், குழந்தைகள் நல அமைச்சகம் ஆய்வு நடத்தியது. இதில் பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதால் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.




மாநிலங்களுக்கு கடிதம்

பால்வழங்க கடிதம்

இதன்அடிப்படையில் மத்திய வேளாண் அமைச்சகம் இன்று அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில் மதிய உணவு திட்டத்தின் கீழ் சத்துணவு வழங்கப்படும் மாநிலங்களில் மாணவர்களுக்கு பாலும் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



சத்துணவில் பால்

சத்துணவோடு பால்

சத்துணவுடன் பாலையும் சேர்த்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக இதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மாநிலங்களை மத்திய வேளாண் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.




மதியஉணவுத் திட்டத்திலே குறை

மதியஉணவே சரியாக தரப்படுவதில்லை

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மதிய உணவுத் திட்டமே சரியாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாவட்ட ஆட்சியர்!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி ப்ரியா, அரசு மருத்துவமனையில் குடல்
வால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 1500க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளை பெற்று     வருகின்றனர். இந்நிலையில் உடல்நலக் குறைவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


தனக்கு அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதை அடுத்து அவருக்கு நேற்றிரவு குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியராக உள்ளவர் தனியார் மருத்துவமனையில் சேராமல், அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றது பாராட்டுகளை பெற்றுள்ளது.

அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

24/12/17

TRB : விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு? விசாரணையை துவக்கியது போலீஸ்

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, ஆசிரியர் 
தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், முறைகேடு நடந்துள்ளதா என, போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர் பணிக்கு தேர்வு நடத்தி, நவ.,7ல் முடிவு வெளியிட்டது. தேர்ச்சி பெற்றவர்களில், இன்ஜினியரிங் அல்லாத பாடப்பிரிவினருக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், பல தேர்வர்களுக்கு விடைத்தாளில் உள்ளதை விட, அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக, சிலர் ஆதாரங்களுடன், டி.ஆர்.பி.,க்கு புகார் மனுக்கள் அனுப்பினர். டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன், உறுப்பினர் செயலர், உமா மற்றும் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது, பல தேர்வர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, டி.ஆர்.பி., சார்பில், சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர், விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார். போலீசார் முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர்.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்ற, 1.33 லட்சம் பேர், இந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது முதல், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர்.

குறுக்கு வழியில் பணியில் சேர முயற்சி செய்ததாக, 200 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும், டி.ஆர்.பி., அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு; முக்கிய புள்ளிகளுக்கு பணம் கைமாறி இருக்கிறதா என்பது குறித்தும், போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.

புகார் மீது வழக்கு பதிவு செய்து, குற்றம் செய்தோரை கைது செய்து, சிறையில் அடைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

பிளஸ் 1 பொது தேர்வுக்கான விடைத்தாள் விபரம் அறிவிப்பு!!!

பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு, எத்தனை பக்கங்களில் விடைத்தாள் வழங்கப்படும் 
என்பது குறித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு மட்டுமே, பொதுத்தேர்வு நடந்தது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கும், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்படி, செய்முறை தேர்வு, அகமதிப்பீட்டு முறை, தேர்வுக்கான மொத்த மதிப்பெண் ஆகியவை குறித்து, ஏற்கனவே அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்ந்து, முதன்மை விடைத்தாள்களில் எத்தனை பக்கங்கள் இருக்கும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கு, 90 மதிப்பெண்களுக்கு, 30 பக்கங்களில் கோடிட்ட விடைத்தாள்கள் வழங்கப்படும். உயிரியலில், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு, தலா, 35 மதிப்பெண்களுக்கு, தனித்தனியாக எழுத, தலா, 22 பக்கங்களில், இரண்டு முதன்மை விடைத்தாள்கள் வழங்கப்படும்.

கணக்கியல் என்ற அக்கவுன்டன்சி பாடத்துக்கு, 90 மதிப்பெண்களுக்கு, தலா, 15 பக்கங்கள் கோடிட்டும், கோடிடப்படாமலும், மொத்தம், 30 பக்கங்கள் வழங்கப்படும். கணினி அறிவியல் உள்பட மற்ற பாடங்களுக்கு, 30 பக்கங்கள் கோடிடப்படாமல் வழங்கப்படும் என, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மாணவர் மன அழுத்தம் தீர 'ஹெல்ப் லைன்' அறிமுகம்!!

பள்ளி மாணவர்களுக்கு, உயர் கல்வி 
ஆலோசனை கூறவும், மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கவும், '14417' என்ற, கட்டணமில்லா தொலைபேசி, அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 1.98 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.


ஆலோசனை மையம்

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், அவர்களுக்கு உயர் கல்வி செல்வதற்கான வழிமுறைகளை விவரிக்கவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், கட்டணமில்லா தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கப்பட உள்ளது.
இனிமேல், '14417' என்ற எண்ணில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் பள்ளிக் கல்வி ஊழியர்கள் தொடர்பு கொள்ளலாம்.

ரூ.1.98 கோடி

அவற்றில், உயர் கல்வி படிப்பதற்கான தகவல்கள், தேர்வு விபரங்கள், பாடத்திட்ட சந்தேகங்கள், பள்ளிகளின் கட்டமைப்பு பிரச்னைகள்... நலத்திட்டம் கிடைக்காமை, மன அழுத்த பிரச்னைகள் போன்றவை குறித்து, மாணவர், பெற்றோர், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
இந்த திட்டத்துக்காக, தமிழக அரசு, 1.98 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், மாணவர்களுக்கு உடல்நலம், உளவியல் ஆலோசனைகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் விபரங்கள் குறித்த தகவல்களையும் வழங்க, திட்டமிடப்பட்டு உள்ளது.

செவிலியர்களுக்கு முறையான ஊதியம் தர வேண்டும்!

அரசு மற்றும் தனியார் 
மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கான முறையான ஊதியத்தைத் தருமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு முறையான ஊதியம் தரப்படவில்லை என்று தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் செவிலியர் சங்கங்களின் சார்பில் சமீபகாலமாகப் போராட்டங்கள் நடைபெற்றன. ஏழாவது ஊதிய ஆணைக்குழு பரிந்துரையின்படி செவிலியர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்பது இவர்களின் போராட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்நிலையில், மக்களவையில் நேற்று(டிசம்பர் 22) உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை முறைப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்திந்திய செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான ஊதியம் தொடர்பாக, தேவைப்பட்டால் மாநில அரசுகள் தனியாக சட்டம் இயற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் ஜே.பி.நட்டா குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பு யூனியன் வங்கியில் பணி!

                                   

யூனியன் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 100

பணியின் தன்மை :: Forex Officer , Integrated Treasury Officer

சம்பளம்: ரூ.31,705 - 45,950

வயது வரம்பு: 23 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

கடைசி தேதி: 13.01.2018

மேலும் விவரங்களுக்கு யூனியன் வங்கி என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மாவட்டந்தோறும் சிறந்த 4 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருது.தகுதியான பள்ளிகளை தேர்வு செய்ய தேர்வுக்குழு!!!

புதிய வாக்காளர் பட்டியல் ஜனவரி10 ஆம் தேதி வெளியீடு!!!

விடைத்தாள் வெளிட்ட விவகாரம்; டி.என்.பி.எஸ்.சி., அதிகாரி கைது!!!

சென்னை: கடந்த 2015ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., விடைத்தாளை வெளிட்ட விவகாரத்தில் 
டி.என்.பி.எஸ்.சி., அதிகாரி பெருமாள் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விடைத்தாள் வெளியீடு தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இடைநிலை கல்வியில் பின் தங்கிய ஏழு மாவட்டங்கள்!!!

சேலம் DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர் வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி மற்றும் பயிற்சி நடைபெறும் மையங்கள் விவரம்!!





விஸ்வரூபம் எடுக்கும் அரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு : 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

அரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் 
மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் புகாரின் பேரில் 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதம் 7ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், பல தேர்வர்களுக்கு விடைத்தாளில் உள்ளதை விட, அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக, தேர்வு எழுதியோர் பலர், தேர்வு முடிவுகள் தொடர்பாக தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனுக்கள் கொடுத்தனர்.

டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன், உறுப்பினர் செயலர், உமா மற்றும் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் தேர்ச்சி பெற்ற 2000க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண்களில் முறைகேடு நடந்துள்ளது. முதலில் வெளியிட்ட மதிப்பெண் பட்டியலுக்கும் பணி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்களுக்கும் மாற்றம் இருக்கிறது என்று தெரிவந்தது. இதனால் தேர்வு முடிவு ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 11ம் தேதி அறிவித்தது.

இதையடுத்து, டி.ஆர்.பி., சார்பில், சில தினங்களுக்கு முன், சென்னை கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் முறைகேடு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் தேர்வு பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர். குறுக்கு வழியில் பணியில் சேர முயற்சி செய்ததாக, 200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முக்கிய புள்ளிகளுக்கு பணம் கைமாறி இருக்கிறதா என்பது குறித்தும், போலீசார் தீவிரவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களை மாற்ற கோர்ட் உத்தரவு!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மாதத்திற்குள் தனியார் மருத்துவக் கல்லூரி 
மாணவர்களை சேர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரியை நிர்வகிப்பதில் நிர்வாகிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்களுடைய கல்வி பாதிக்கப்படுவதாக அக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 17 மாணவர்கள் தங்களை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் தலைமையில் நேற்று(டிசம்பர் 22) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்தபோது, வழக்கறிஞர் என்ற போர்வையில் சிலர் கல்லூரி நிர்வாகத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

வழக்கின் உத்தரவில் கூறியிருப்பது: "இந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டால் அதற்கு அரசு அதிகாரிகள் தான் பொறுப்பு ஏற்க நேரிடும். மேலும் ஒரு கல்லூரி சரியாக இயங்கவில்லை என்றால் அந்தக் கல்லூரிக்கு அனுமதியளித்த அரசு தான் அங்குப் பயிலும் மாணவர்களின் கல்விக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

தனியார் நிர்வாகத்தின் குளறுபடி காரணமாக இந்தக் கல்லூரியில் 2017-18, 2018-19 ஆகியஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு தடை விதித்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

அன்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 144 மாணவர்களையும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கவேண்டும். இதற்கு ஏதுவாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை உயர்த்த ஒரு மாதத்திற்குள் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த மாணவர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து கல்லூரிக்கு செல்லவில்லை என்பதால் அவர்களின் வருகைப்பதிவேட்டை கருத்தில் கொண்டு அவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும்.

மாணவர்களின் சான்றிதழ்களை அக்கல்லூரி நிர்வாகம் உடனடியாக அவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 2ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். மாணவர்களின் நலன் கருதி காணொலி காட்சி மூலமாக ஜனவரியில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை ,தற்கொலைக்கு தூண்டப்பட்டு இறந்த போன மாணவ மாணவிகளின் விபரங்கள் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

                                          

TNHB JUNIOR ASSISTANT RESULT 2017 TYPIST EXAM RESULT PUBLISHED

                                               


CLICK HERE TO CHECK YOUR RESULTS

பொறியியல் கல்லூரிகளில் 2500 பேராசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: ஏஐசிடிஇ சலுகை எதிரொலி

பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதத்தில் அகில இந்திய 
தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அளித்துள்ள சலுகை காரணமாக, குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 பேராசிரியர்கள் வேலை இழக்க வாய்ப்பு உள்ளதாக பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஏஐசிடிஇ-யின் இந்தச் சலுகை, பொறியியல் கல்வியின் தரத்தை மேலும் குறைக்கவே வழிவகுக்கும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நாடு முழுவதும் 3 ஆயிரத்து 224 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 927 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை 523 பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 78 ஆயிரத்து 845 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தக் கல்லூரிகளை ஏஐசிடிஇ கட்டுப்படுத்தி வருகிறது. இந்தக் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெற்ற பின்னரே, மாணவர் சேர்க்கையை நடத்த முடியும். இதற்கென ஒவ்வொரு ஆண்டும், அனுமதி வழிகாட்டுதலை ஏஐசிடிஇ வெளியிடும்.
அதுபோல, 2018-19 கல்வியாண்டுக்கான அனுமதி நடைமுறைகளை ஏஐசிடிஇ இப்போது தொடங்கியுள்ளது. இதற்காக அண்மையில், அனுமதி வழிகாட்டுதலை வெளியிட்டது. அதில், கல்லூரிகளின் கோரிக்கைகளை ஏற்று ஆசிரியர்-மாணவர் விகிதத்தை 1:20 ஆக நிர்ணயித்து, ஏஐசிடிஇ அறிவித்திருந்தது. இதற்கு, பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில், பொறியியல் கல்லூரி பேராசிரியர்களும், கல்வியாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியரும், தனியார் கல்வி நிறுவன ஊழியர் சங்க நிர்வாகியுமான கார்த்திக் கூறியது:-

பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் இதுவரை 1:15 என்ற அளவில் இருக்க வேண்டும் என ஏஐசிடிஇ நிர்ணயித்த போது, பெரும்பாலான கல்லூரிகள் அதைப் பின்பற்றவில்லை. பல கல்லூரிகள் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், சில கல்லூரிகள் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவிலேயே விகிதத்தை அமல்படுத்திவந்தன.
இப்போது இந்த விகிதாசாரத்தை 1:20 ஆக ஏஐசிடிஇ குறைத்து சலுகை அளித்துள்ளது. இது கல்லூரிகளின் நிலையை மேலும் மோசமடையச் செய்யும். இதனால், மாணவர்களை கவனிக்கும் அளவு குறைந்து, கல்வித் தரம் பாதிக்கப்படும்.

இப்போது தமிழகத்தில் உள்ள 523 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் படிப்படியாக மூடப்பட்டு, ஒருசில ஆண்டுகளில் 300 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே நிலைத்திருக்கும். எனவே, ஏஐசிடிஇ-யின் இந்தச் சலுகையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்றார்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் கூறுகையில், ஏஐசிடிஇ ஏற்கெனவே 1:15 என்ற அளவில் ஆசிரியர்-மாணவர் விகிதத்தை நிர்ணயித்திருந்தபோதே, பெரும்பாலான பொறியில் கல்லூரிகள் 30 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் (1:30) என்ற அளவில்தான் நிர்ணயித்து வந்தன.
எனவே, ஏஐசிடிஇ இப்போது இந்த விகிதத்தை 1:20 ஆக நிர்ணயித்திருப்பதால், எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. பொறியியல் கல்வியின் தரம் இப்போது உள்ளதைப் போலவேதான் நீடிக்கும் என்றார்.

கல்வித் தரம், ஆராய்ச்சி நிச்சயம் பாதிக்கும்

ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:20 ஆக ஏஐசிடிஇ குறைத்திருப்பது, பொறியியல் கல்வியின் தரத்தை மட்டுமின்றி, உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மேம்பாட்டையும் கடுமையாகப் பாதிக்கும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறினார்.

இதுகுறித்து தொலைபேசி மூலம் அவர் அளித்த பேட்டி:

பொறியியல் கல்லூரிகளை, மாணவர் சேர்க்கை எண்ணிக்கையின் அடிப்படையில் ஏ,பி,சி என பிரித்து, அதில் -சி- பிரிவில் வரும் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும் ஆசிரியர்-மாணவர் சேர்க்கை விகிதத்தை 1:20 ஆக அறிவித்திருக்க வேண்டும். ஏ, பி பிரிவில் வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு முன்பிருந்தது போல 1:15 என்ற விகிதத்தையே நிர்ணயித்திருக்க வேண்டும்.

ஆனால், ஒட்டுமொத்தமாக அனைத்து கல்லூரிகளுக்கும் 1:20 என ஏஐசிடிஇ அறிவித்திருப்பது துரதிஷ்டவசமானது. ஒரு சில தனியார் பொறியியல் கல்லூரிகளின் அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவே தெரிகிறது. இந்தச் சலுகை காரணமாக, பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு மட்டுமே நேரம் இருக்கும். ஆராய்ச்சி அல்லது ஆராய்ச்சி ஊக்குவிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு பேராசிரியர்களுக்கு நேரம் இருக்காது. எனவே, பொறியியல் கல்லூரியின் தரம் மேலும் மோசமடையும் என்பதோடு, ஆராய்ச்சி மேம்பாடும் பாதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் பலர் வேலை இழக்க நேரிடும் என்றார் அவர்.

தேர்வு முறைகேடு :156 பேர் மீது வழக்குப் பதிவு!

                                                  
பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன தேர்வில் நடைபெற்ற 
முறைகேடு குறித்த விவகாரத்தில் 100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத் தேர்வை நடத்தியது.

இந்தத் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதன்பேரில் தேர்வு முடிவுகள் திறம்ப பெறப்பட்டது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2200 பேரில் பெரும்பாலானோருக்கு மதிப்பெண் வேறுபாடு இருந்தது தெரியவந்தது.

தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகல், இணையதளத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து பலருக்கு நிறைய மதிப்பெண் வித்தியாசம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து,மதிப்பெண் குளறுபடிகள் ஏற்பட்ட தேர்வர்கள் தேர்வு வாரியத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் முறைகேடு தொடர்பாக 196 பேர் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த டிசம்பர் 20 அன்று தெரிவித்திருந்தது.

இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த , மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

முதல் கட்டமாக . விடைத்தாள் திருத்தம் செய்தவர்கள், முறைகேடாக வேலையில் சேர முயன்றவர்கள் என 156பேர் மீது 6 பிரிவுகளில் குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விசாரணை ஆணையம் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடு பின்னணி குறித்து தெரியவரும் என்றும் மற்ற அரசு பணி நியமனங்களிலும் ஊழல் குறையும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியள்ளார்.

16/12/17

RTI-மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப்படி ரூ 2500 க்கு தெளிவுரை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட பதில் நன்றி திரு.இரவிச்சந்திரன்-கரூர்



TRB Exam - தகுதியற்ற 300 பேருக்கு போலி மதிப்பெண் வழங்கியது அம்பலம். தேர்வை ரத்து செய்ய கோரிக்கை!!!

பொது தேர்வு தேதியில் மாற்றம் இல்லை : மீண்டும் அட்டவணை வெளியீடு

சென்னை: 'தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், ஏற்கனவே அறிவித்த தேதிகளில், எந்த மாற்றமும் இன்றி நடத்தப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், பொதுத் தேர்வு தேதியை, ஒவ்வொரு ஆண்டும், டிசம்பரில், அரசு தேர்வுத் துறை அறிவிக்கும். இந்த ஆண்டு, பள்ளிக் கல்விச் செயலர், உதயசந்திரன் உத்தரவில், இறுதி தேர்வு விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே, பொது தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டது. அதனால், தேர்வு நாளை, முன்கூட்டியே கணக்கிட்டு, ஆசிரியர்கள் பாடம் நடத்தவும், மாணவர்கள் படிக்கவும் வசதியாக இருந்தது. இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, அதே தேதிகளில், திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடக்கும் என, தேர்வுத்துறை, நேற்று அறிவித்துள்ளது



ஸ்காலர்ஷிப்' பெற இன்று திறன் தேர்வு

சென்னை: உயர்கல்வி வரை அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி திறன் தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 1.45 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு, அரசின் பல்வேறு திட்டங்களில், உதவித்தொகை வழங்கப்படுகிறது. சில திட்டங்களுக்கு, திறன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, மாநில அளவில் இன்று நடக்கிறது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், 503 மையங்களில் நடக்கும் தேர்வில், ௧.௪௬ லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை, 9:30 மணி முதல் பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் தர ரூ.4.63 கோடி

சென்னை: அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, 4.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடத்தில், 3,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.
ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் நிதியில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இதில், 2016 ஆசிரியர்கள், ஜூலை முதல் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாத சம்பளமாக, 7,500 ரூபாய் வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், 4.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, ஆசிரியர்கள் பணியாற்றிய நாட்களுக்கு மட்டும், சம்பளம் வழங்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இணை இயக்குனர், உமா உத்தரவிட்டுள்ளார்.

குரூப் - 4' தேர்வு பதிவுக்கு 20ம் தேதி வரை அவகாசம்

சென்னை: 'குரூப் - 4' தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, வரும், 20ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. 

அரசுத்துறைகளில், குரூப் - 4 பதவிகளில், 9,351 காலி இடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., பிப்., 11ல் போட்டி தேர்வை நடத்துகிறது. இதில், பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு, நவ., 14ல் துவங்கி, டிச., 13ல் முடியும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆன்லைன் பதிவுக்கான அவகாசம், வரும், 20 வரையும், தேர்வு கட்டணம் செலுத்துவது, 21ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயக்குமார் அறிவித்துள்ளார். நேற்று வரை, இத்தேர்வுக்கு, 18.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை நடந்த, குரூப் - 4 தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களில், இதுவே அதிகபட்சம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும், இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளை விட, அதிக விண்ணப்பங்கள், இந்த முறை பதிவாகி உள்ளன.'ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். தேர்வு நடக்கும் தேதியில், எந்த மாற்றமும் இல்லை' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

STATE TEAM VISIT - கோயம்புத்தூர் மாவட்ட பள்ளி குழு பார்வை குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் !



மார்கழி : _ மாதம்

மார்கழி :

மார்கசீர்ஷம் – வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் சொல். ‘மார்கம்’ என்பது ‘வழி’ என்று பொருள்படும். ‘சீர்ஷம்’ என்பது ‘தலை சிறந்தது, உயர்ந்தது’ என்ற பொருளைத் தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி உள்ளது என்பதே  ‘மார்கசீர்ஷம்’ என்பதன் உண்மைப் பொருளாகும்.


மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக சிலர் மார்கழி மாதம் என்பது பீடை மாதம் என்ற கருத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு மார்கழி மாதமானது பீடை மாதமாக இருந்தால், அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதா உபதேசத்தில் ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ணபரமாத்மா கூறியிருப்பாரா? என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அதிகாலை அற்புதம்

மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாளில் வைகறைப் பொழுது என்று  அழைக்கப்படும் அதிகாலை நேரம்தான் மார்கழி. தெளிவான உள்ளத்துடன், உடலில் சுறுசுறுப்பும் குடிகொண்டிருக்கும் அந்த  அதிகாலை நேரமே தேவர்களை வழிபடுவதற்கு சிறந்ததொரு நேரமாக கருதப்படுகிறது. அந்த அதிகாலை நேரத்தில் இறைவனை துயிலில் இருந்து எழுப்பும் விதமாகவே கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றன. இதனால் தான் ‘திறக்காத கோவில்களுக்கு திறக்கும் மாதம்’ என்று மார்கழியின் மாண்பை எடுத்துரைக்கும் வகையில் கூறிவைத்தார்கள்.

இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை வைத்தால், இறைவழிபாட்டில் இடையூறு ஏற்படும் என்பதற்காகவே அந்த காலத்தில் நமது  பெரியவர்கள் மார்கழியில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை வைக்கவில்லை. இது தவிர மற்றொரு காரணமும் உள்ளது. மார்கழிக்கு அடுத்து வரும் தை மாதத்தை சிறப்புடன் கொண்டாட ஏதுவாக, கரும்பு, நெல், உளுந்து, வாழை, மஞ்சள் போன்றவற்றை வீட்டில் சேர்த்து வைப்பார்கள். இதற்கே அந்த மாதத்தின் பொழுது  சரியாக இருக்கும் என்பதாலும் தான் மார்கழி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளை வைப்பது இல்லாமல் போனது.

சரணாகதியே வழி

பொதுவாக ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங் களில்தான் சுப நிகழ்ச்சிகள் இருக்காது. ஆடியில் அம்மன் வழிபாட்டிற்காகவும்,  புரட்டாசி பெருமாள் வழிபாட்டிற்காகவும், மார்கழி மாதம் அனைத்து தெய்வ வழிபாட்டுக்கும் உரியது. இந்த மூன்று மாதங்களும் தெய்வ வழிபாட்டிற்காகவே பக்தர்களால் ஒதுக்கப்பட்ட மாதங்களாகும். இதில் அனைத்து தெய்வ வழிபாடு உள்ள மார்கழி மாதமே மாதங்களில் மிகவும் உயர்ந்த மாதமாக கருதப்படுகிறது.

இறைவனை சுலபமாக அடையும் வழியானது சரணாகதி. ‘உன்னை தவிர என் வாழ்க்கை துணை வேறுயாரும் இல்லை. என்னை  சீக்கிரம் வந்து ஆட்கொள்’ என்று ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளும், பாண்டிய அரசவையில் அமைச்சர் பதவி வகித்தும்,  ‘அரச பணியை விட, ஆண்டவன் பணியே சிறந்தது’ என்று இறைவழி சென்று அவன் புகழ்பாடி தொழுத நாயன்மார்களில்  ஒருவரான மாணிக்கவாசகரும் மேற்கொண்டது இந்த சரணாகதியைத்தான். அதன் வாயிலாகவே அவர்களின் வாழ்வு உயர்வு  பெற்றது.

மதிப்புக்குரிய மார்கழி

மார்கழி மாதத்தை மதிப்புக்குரியதாக மாற்றியதில் பெரும் பங்கு கொண்டவர்கள் ஆண்டாளும், மாணிக்கவாசகரும் என்றால் அது  மிகையாகாது. மார்கழி மாதத்தில் பாராயணம் செய்யும்  பாடல்களில் ஆண்டாள் பாடிய திருப்பாவை, மாணிக்க வாசகர்  பாடிய திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி, தொண்டரடி ஆழ்வார் எழுதிய திருப்பள்ளியெழுச்சி ஆகிய நான்கும் தான் இடம்பெற்றுள்ளன. பாவை நூல்கள் எனப்படும் இந்த நூல்களை பாராயணம் செய்யத் தொடங்கியதும் விண்ணை முட்டி நின்ற  மார்கழியின் சிறப்பு, விண்ணைத் தாண்டியும் வளரத் தொடங்கி விட்டது.

15/12/17

டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

                                            
பொதுவாக நாம் அடையாள ஆவணங்களான ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், 
ஆதார், பான் கார்டு போன்றவற்றை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்வது வளக்கமாக வைத்துள்ளோம்.


அதே நேரம் இந்தக் கார்டுகளின் அசலை எப்போதும் தங்களுடன்வைத்து இருக்கும் போது அதனைத் தொலைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

*எனவே பான் கார்டினை தொலைத்துவிட்டால் என்ன செய்வது?*


வருமான வரி தாக்கல் செய்ய, வங்கி கணக்குகளுடன் இணைக்க எல்லாம் ஆதார் கார்டு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இவ்வளவு முக்கியமான பான் கார்டு தொலைந்து போனால் எப்படி டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.


உங்களது பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால் அவற்றை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதால் முதலில் அது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது நல்லது.அதற்காகக் காவல் நிலையத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என்பது இல்லை. தமிழ்நாட்டில் இதுபோன்ற காரணங்களுக்காகப் புகார் அளிக்க என்பதற்காகவே eservices.tnpolice.gov.in இணையதளம் ஒன்றும் உள்ளது.



பான் கார்டில் உங்களது பெயர், புகைப்படம், தந்தை பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல் இருப்பதால், அதனைப் பயன்படுத்திப் பிற சேவைகளில் உங்களது விவரங்களை முறைகேடாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையாகப் புகார் அளிப்பது நல்லது.



டூப்ளிகேட் பான் கார்டுக்கு என்எஸ்டிஎல்(NSDL) அல்லதுயூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) ஏஜன்சிகள் மூலமாக விண்ணப்பித்து வருமான வரித் துறை அனுமதியுடன் பான் கார்டினை பெறலாம்.இந்த இரண்டு ஏஜன்சிகள் மூலமாகவும் புதிய பான் கார்டு, பான் கார்டில் திருத்தங்கள் அல்லது டூப்ளிகேட் பான் கார்டு போன்றவற்றைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்திற்கான இணைப்பு: https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html டூப்ளிகேட் அல்லது ரீபிர்ண்ட் பான் கார்டு தேர்வை தேர்வு செய்து விண்ணப்பிக்கும் போது உங்களஹ்டு பெயர், பிர்றந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பான் எண் உள்ளிட்டவையினை உள்ளிட வேண்டும். அடிப்படை விவரங்கள் உள்ளிட்ட பிறகு அடுத்தப் பக்கத்தில் ஆதார் எண் அல்லது ஆதார் விண்ணப்ப ஐடி உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.

பின்னர் அடையாள மற்றும் முகவர் சான்றிதழ் போன்றவற்றைத் தேர்வு செய்து அவற்றினைப் பதிவேற்ற வேண்டும். இதுவே தபால் மூலம் விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்றால் விண்ணப்பம், அடையாள ஆவண நகல் போன்றவற்றை இணைத்து, புகைப்படத்தினை ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும்.



இதுவே பேப்பர் இல்லாமல் விண்ணப்ப முறையினைத் தேர்வு செய்தால் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச் சொல் வரும்.

அதனை உள்ளிட்டு எளிதாக விண்ணப்பத்தினைச் சரிபார்த்துப் பூர்த்திச் செய்துவிடவும் முடியும்.மேலும் இப்படிச் செய்யும் போது உங்களது கையெழுத்து மற்றும் புகைப்படம் போன்றவற்றையும் விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டியது அவசியமாகும்.


யூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) http://www.myutiitsl.com/PAN_ONLINE/CSFPANApp இணையதளம் மூலமாகவும் மேலே கூறியது போன்றே விவரங்கள் அளித்துப் பான் கார்டினைரீபிரிண்ட் செய்திட முடியும்.

பேஸ்புக், டுவிட்டரில்' காஸ் சிலிண்டர் பதிவு!!!

வீட்டு சமையல் காஸ் சிலிண்டரை, 'பேஸ்புக், டுவிட்டர்'
போன்ற, சமூக வலைதளங்கள் வாயிலாக, பதிவு செய்யும் சேவையை, இந்தியன் ஆயின் நிறுவனம் அதிகார பூர்வமாக துவக்கியுள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள், வீடு மற்றும் வணிக பயன்பாடு என, இரண்டு வகை, சமையல் காஸ்சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன. தற்போது, வீட்டு வாடிக்கையாளர்கள், எண்ணெய் நிறுவனங்களின், கட்டணமில்லா தொலைபேசி, இணையதளம் வாயிலாக, சிலிண்டருக்கு பதிவு செய்யலாம்.

இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம், வீட்டு சமையல் காஸ் சிலிண்டரை, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற, சமூக வலைதளம் வாயிலாக, பதிவு செய்யும் சேவையை, அதிகார பூர்வமாக துவக்கியுள்ளது.
தற்போது, இந்த சேவை, டில்லி உட்பட, வட மாநிலங்களில் மட்டுமே உள்ள நிலையில், ஓரிரு தினங்களில், தமிழகத்திலும் செயல்பாட்டுக்குவருகிறது.

இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சமூக வலைதளத்தில், சிலிண்டர் பதிவு செய்வது எப்படி என்ற விபரம், நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது' என்றார்.

நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் சத்தம் போடக் கூடாது-உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டணம்!!

ஆகஸ்டில் மக்களவைத் தேர்தல்???

தென் மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்-வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

ஆசிரியர் பயிற்றுனர்களில் 350 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் !!!

சிறப்பு 'இம்ப்ரூவ்மெண்ட்' தேர்வு!!

மார்ச் 4ல் செட் தேர்வு!

அரசு வக்கீல்கள் நீக்கமா?

+2 க்கு பிறகு என்ன படிக்கலாம்?

                                       
                                               

Click here

சட்டப்படி உங்களை தற்காத்து கொள்ளுவது எப்படி?



ஊழியர்களை வெளியேற்றும் வெரிசோன்!!!

                                              
அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்டு 
செயல்படும் வெரிசோன் நிறுவனத்தின் ஒருபகுதியான Verizon Data Services India தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு இந்தியாவின் ஐதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் கிளைகள் உள்ளன. இந்தியாவில் சுமார் 7,000 பேர் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வெளியேற்ற வெரிசோன் முடிவு செய்துள்ளதாக ஐடி (IT) மற்றும் ஐடிஇஎஸ் (ITES) ஊழியர்களின் சங்கம் (UNITE) தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அழகுநம்பி வெல்கின், “வெரிசோன் நிறுவனத்தில் 7 முதல் 3 வரையிலான பிரிவில் உள்ள 993 ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி பணியில் இருந்து நீக்க முயற்சி செய்வதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. மேலும், நேற்று முன்தினம் (டிசம்பர் 12) மூத்த ஊழியர்களை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பாதுகாவலர்களின் உதவியுடன் அவர்கள் அப்புறப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தொழிலாளர் ஆணையர் தலையிட்டு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி பணியில் இருந்து நீக்குவதைத் தடுக்க வேண்டும் என ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வெரிசோன் நிறுவன செய்தி தொடர்பாளர், “சர்வதேச சந்தையில் போட்டியிடவும், வெற்றி பெறவும் சில மாறுதல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். அந்த மாறுதல்கள் ஊழியர்களின் எண்ணிக்கையில் பிரதிபலித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐடி ஊழியர்களின் உரிமைகளுக்காகப் போராடிவரும் ஃபோர்ம் ஆஃப் ஐடி எம்ப்ளாய்ஸ் (FITE)யிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, “ஆம், இந்தத் தகவல் உண்மையானதுதான். சென்னை, பெங்களூரு, ஐதராபாத்தில் உள்ள தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் 1,000 பேரை வெளியேற்ற வெரிசோன் முடிவு செய்துள்ளது. இதற்கான செயல்பாடுகள் நேற்று முன்தினமே தொடங்கிவிட்டது. டிசம்பர் 12ஆம் தேதி பணிக்கு வந்த ஊழியர்களை அவர்களின் இடத்துக்கே டெலிவரி மேனேஜர், செக்யூரிட்டி ஆகியோர் போய் அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு மாத ஊதியம் தருகிறோம். கையெழுத்துப் போட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.

பின்னர் அவர்கள் பிரச்சினை செய்யக் கூடாது என்பதற்காக வாசல் வரையில் செக்யூரிட்டி உடன் சென்றுள்ளார். முன்பின் அறிவிக்காமல், திடீரெனப் பணியிலிருந்து நீக்குவதால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் அச்சத்தில் உள்ளனர்” என்று நிலைமையை விளக்கினார்.

‘இது தொடர்பாக உங்கள் சங்கம் சார்பாக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?’ என்று கேட்டபோது, “தொழிலாளர் ஆணையர், சி.எம். செல் ஆகியவற்றுக்குப் புகார் அனுப்பியுள்ளோம். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகத் தொழிலாளர் ஆணையர் உறுதியளித்துள்ளார்” என்ற பதில் கிடைத்தது.

‘எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கும் இந்த முயற்சியைத் தொழிலாளர் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்பதே ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு இனி ஆதார் அட்டை கட்டாயம்: பள்ளிக்கல்விக் கல்வித்துறை!!!

                                         

தமிழ்நாடு BHEL நிறுவனத்தில் 1080 வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது

வேலையின் பெயர் :  Engineer Trainee

சம்பளம் : Rs. 40000

Apply Now: https://goo.gl/Ks4jPR

கல்வி: B.E/B.Tech

கடைசி நாள்: 03.02.2018

இடம் :Tamilnadu

More details Click Here: https://goo.gl/Ks4jPR

இந்த வேலை தகவலை மற்ற வாட்ஸாப்ப் Groupkum ஷேர் பண்ணவும்

silent letters in english

                                                    
Click here

ஏன் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது?

பொருளாதார ரீதியில் 
பின்தங்கியிருக்கும் முன்னேறிய வகுப்பினருக்கு ஏன் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 14) கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. மீதமுள்ள 31 சதவீதப் பொதுப்பிரிவு இடங்களை, மற்ற பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யத் தடை கோரி ஹரி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுப் பிரிவில் மற்ற பிரிவினரும் போட்டியிடுவதால் சிறந்த கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கு இடம் கிடைப்பதில்லை என்றும், பெரும்பாலான இடங்கள் பிற பிரிவினருக்கே ஒதுக்கப்படுகின்றன என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இட ஒதுக்கீட்டு முறையால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் அடைந்த முன்னேற்றம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

Icici Bank நிறுவனத்தில் 9011 வேலைக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளது

*வேலையின் பெயர்:* Business Development

சம்பளம் :INR 50,000 - 2,00,000 Per month

*தேர்வு முறை*: Written test

Apply Link: https://goo.gl/5LguHq

*கல்வி:*Degree

*கடைசி நாள்*: 30.01.2018

மேலும் தகவலுக்கு Click Here=>https://goo.gl/5LguHq

TRB Exam - 220 ஆசிரியர்கள் தேர்வில் ஊழல் - ரூ.50 கோடி கைமாறியதாக குற்றச்சாட்டு