யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/7/18

லோக் ஆயுக்தா அமைப்பு மற்றும் அதன் பணி என்ன?

 லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தெரிவுக்குழு அமைக்கப்படும். தெரிவுக் குழு தலைவராக முதல்–அமைச்சரும், உறுப்பினர்களாக சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரும் இருப்பார்கள். அந்த தெரிவுக் குழுவுக்கு பெயர் பட்டியலை
தயாரித்து வழங்க 3 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்படும். தெரிவுக்குழு தேர்ந்தெடுக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பார்.

* லோக் ஆயுக்தா அமைப்புக்கு நீதிபதியோ, ஊழல் தடுப்பு கொள்கையில், பொது நிர்வாகத்தில், விழிப்புணர்வில், நிதியில், சட்டத்தில் 25 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவரோ தலைவராக நியமிக்கப்படுவார். ஏனைய 4 உறுப்பினர்களில் 2 பேர் நீதித்துறையை சார்ந்தவராக இருப்பார்கள். மீதமுள்ள 2 பேர் ஊழல் தடுப்பு உள்ளிட்ட கொள்கையில் 25 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றவர்கள் நியமிக்கப்படுவார்கள். தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்கும்போது அவர்களின் வயது 45–க்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும்.

* மேலும், அரசின் துணை செயலாளர் நிலைக்கு குறையாதவர் லோக் ஆயுக்தா அமைப்பின் செயலாளராக நியமிக்கப்படுவார். அவரை அமைப்பின் தலைவர் தேர்வு செய்வார்.

* எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள், ஊராட்சி – நகராட்சி உறுப்பினர்கள், மத்திய – மாநில பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தேர்ந்தெடுக்க முடியாது.

* லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது. இதில், எது முதலில் வருகிறதோ அதுவரை பொறுப்பில் இருப்பார்கள்.

* லோக் ஆயுக்தா அமைப்பின் நீதிபதிக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படித்தொகையும், உறுப்பினர்களுக்கு ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மற்றும் படித்தொகையும் வழங்கப்படும். இதற்கான நிதியை மாநில அரசு வழங்கும்.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக லோக் ஆயுக்தா இயங்கும். அதன் அதிகார வரம்புக்குள் முதல்–அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் வருவார்கள்.

* குற்றம் நடைபெற்றதாகக் கருதப்படும் தேதியில் இருந்து 4 ஆண்டுகளுக்குள் அது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட வேண்டும்.

* அளிக்கப்படும் புகார்கள் மீது, புகார் பெறப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்.

* பொய் புகார் அளித்தது நிரூபிக்கப்பட்டால், புகார் அளித்தவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன?: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!!!

சென்னையில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சுபாஷ் சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பள்ளிகளில் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. உலக சுகாதார அமைப்பு உடற்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 9,000 பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் இருப்பது விதிமீறல். ஆனால், இதனை மாநில அரசும் , சிபிஎஸ்இ நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. எனவே, உடற்கல்வியை பயிற்றுவிப்பது தொடர்பாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உரிய விதிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்தமனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சிபிஎஸ்இ நிர்வாகத்தையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டனர். மேலும், சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட உடற்கல்வி தொடர்புடைய வசதிகள் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: இனி பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்கு இனி பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் க.அறிவொளி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (DIET), ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம்(BIET), ஆரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (GTTI)ஆகியவற்றில், தொடக்கக் கல்விப் பட்டயப்படிப்பு 2018-19 -ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு கடந்த ஜூன் 18 -ஆம் தேதி முதல் ஜூன் 30 -ஆம் தேதி வரை இணையதளத்தில்  (www.tnscert.org)விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கு 821 பேர்விண்ணப்பித்தனர். பெறப்பட்ட விண்ணப்பங்களில் 713 தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டதில், 413 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதை அரசு ஆய்வு செய்ததில், கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களை தொடக்கப் பள்ளிகளில் பணியமர்த்தினால், இப்பள்ளிகளில் கற்றல் விளைவுகள் மேம்பட வாய்ப்புள்ளது என முடிவெடுக்கப்பட்டது.

எனவே, இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு முடித்து, ஒன்றாம் வகுப்பு முதல் 5 -ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த விருப்பமுள்ளவர்கள் இரண்டாண்டு (D.EI.Ed- Diploma in Elementary Education)  பட்டயப் படிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE)  வகுத்துள்ள விதிமுறைகளின்படி சேர்க்கை நடைபெறும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதள முகவரியில்(www.tnscert.org)   ஜூலை 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வேளாண் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது: வழக்கம்போல பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கு கடும் போட்டி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக திங்கள்கிழமை தொடங்கிய ஆன்லைன் கலந்தாய்வில் பி.எஸ்சி. வேளாண் 
படிப்புக்கான பெரும்பாலான இடங்கள் முதல் நாளிலேயே நிரம்பியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கடந்த 7-ஆம்தேதி நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 67 இடங்கள் பூர்த்தியாகின. இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. பல்கலைக்கழக வரலாற்றிலேயே மாணவர்கள் நேரில் வராமலேயே மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். எனவே, குளறுபடிகள் ஏதும் நடைபெறாமல் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இருப்பினும் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது முதல் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கலந்தாய்வுக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் பிற்பகலுக்குள் அது சரி செய்யப்பட்டது.

இதுகுறித்து மாணவர் சேர்க்கைப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
ஆன்லைன் மூலம் கலந்தாய்வு என்றாலும் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில்தான் இடங்களைப் பூர்த்தி செய்ய முடியும். இடங்களைத் தேர்வு செய்து வைத்திருக்கும் மாணவர்கள் அதை 11-ஆம் தேதிக்குள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 12-ஆம் தேதி எத்தனை காலி இடங்கள் உள்ளன, அவற்றுக்கு 2-ஆம் கட்ட கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது போன்ற விவரங்கள் அறிவிக்கப்படும். வழக்கம்போலவே இந்த ஆண்டும் பி.எஸ்சி. வேளாண்மைப் படிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதிலேயே மாணவர்கள் ஆர்வம் காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

நெல்லை மாவட்டத்திற்கு வரும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் சில்பா அறிவிப்பு

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலய ஆடிதபசை முன்னிட்டு 27ம் தேதி நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு அலுவலங்கள் மற்றும் அனைத்து கல்வி
நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

CPS-அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் நெருக்கடியையும் தந்து கொண்டிருக்கும் -CPS திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். -திண்டுக்கல் எங்கெல்ஸ்.

ரூ.22,891கோடியை PFRDA-விடம் செலுத்தக்கோரி அல்ல! மாநில
நிதிச்சுமை குறைய CPS-ஐ முற்றாய் நீக்க வேண்டியே!

CPS-ல் பிடித்த பங்குத் தொகை ரூ.22,891 கோடியை PFRDA-விடம்செலுத்தக்கோரி போராடவில்லை.

அரசிற்கும், ஊழியர்களுக்கும் ஒருசேர பாதிப்பை ஏற்படுத்தும் *CPSதிட்டத்தையே முற்றாய் நீக்கிவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும்நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே கோரிக்கை.

CPS-ஆல் ஊழியருக்குப் பாதிப்பா? அரசிற்கு பாதிப்பா?என்றால்இரண்டிற்கும் ஒரே பதில்,

*ஆம்!* என்பதே.

பழையஓய்வூதிய திட்டத்தின்படி அரசு தனது பங்காக எவ்விதத் தொகையும்
செலுத்த வேண்டிய அவசியமில்லை._

ஆனால், *CPS திட்டத்தில் பணியேற்கும் ஊழியருக்கான 10% தொகையைஊழியர்
பணியேற்ற மாதம் முதல் ஓய்வு பெறும் மாதம் வரை அரசு செலுத்தியாக
வேண்டும்.*

இப்படியாக 2003-ல் இருந்து கடந்த 2017 மார்ச் மாதம் வரை CPSதிட்டத்திற்காகத் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் & ஆசிரியர்களிடம் பிடித்தம்செய்த தொகை ரூ.11,000 கோடி.

இதற்கு ஈடாக தமிழக அரசு செலுத்திய பங்கு ஈடுத் தொகை ரூ.11,000 கோடி.

அரசு& அரசு ஊழியர்களின் CPS பங்குத் தொகைகளின் கூடுதலான இந்தரூ.22,891 கோடியை இன்னும் ஏன் PFRDA-விடம் செலுத்த வில்லை எனக்கேட்டுப் போராடவில்லை.

மாறாக,

CPS திட்டத்தால் அரசு தரப்பு செலுத்த வேண்டிய கட்டாயப் பங்குத்தொகையால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையிலிருந்து அரசு விடுபட,

CPS-ஐ முற்றிலுமாக நீக்கிவிட்டு, எங்களின் ரூ.,000 கோடியை வருங்காலவைப்பு நிதியில் சேர்த்து கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை எங்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் .TET, TRB, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளால் அரசுப் பணியேற்கும்நபர்களின்
சராசரி பணிக்காலம் என்பது 35 ஆண்டுகள்.

அதேநபர்கள் பணி ஓய்வு பெற்ற பின்னான ஆயுட்காலம் என்பது சராசரியாக10 - 15 ஆண்டுகளே.

CPS திட்ட நடைமுறையில் ஊழியருக்காக *35 ஆண்டுகளும் மாதாமாதம் அரசுபெரும் தொகையை வழங்க வேண்டிய கட்டாயம்* உள்ளது.

ஆனால்,

பழையஓய்வூதியத் திட்டத்தில் ஊழியரின் ஓய்வுக்காலத்திற்குப்பின்னான 10 - 15 ஆண்டுகள் நிதி* ஒதுக்கினாலே போதுமானது.

இவ்வாறு ஒதுக்கும் நிதியானது 7 ஊதியக்குழுக்களை கடந்துள்ள நிலையிலும்ஒட்டுமொத்த செலவினத்தில் 14% மட்டுமே ஆகும்.

மேலும்,

NHIS உள்ளிட்ட திட்டங்களில் திருமணத்திற்குப் பின் ஊழியர்களின்
பெற்றோர்கள், அதன் பயன்களைத் துய்க்க இயலாத அனாதைகளாக அரசே
கொள்கை வகுத்துள்ளது.

இந்நிலையில் CPS-ல் இருந்து ஓய்வுபெறும் ஒரு நபருக்கு,

*குடும்பநலநிதி*
*மருத்துவக் காப்பீடு*
*பணிக்கொடை*
*மாதாந்திர ஓய்வூதியம்*
*உள்ளிட்ட எதுவுமே இல்லாத சூழலில்*
அவரிடமிருந்து பிடித்த தொகையிலும்100%-தையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது என்பது,

இந்நாட்டில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அதன்பின் உயிருடன் வாழத்தகுதியற்றோர் என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.


இவ்வாறாக, அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள்
நெருக்கடியையும் தந்து கொண்டிருக்கும்,

CPS திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு,

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் தேர்தல்கால & சட்டசபை அறிவிப்பின்படி,அரசின் நிதிச்சுமையை மேலும் அதிகரிக்கும்
படியாகத் தொடர்ந்து காலம் கடத்தாது

*அரசையும் அரசு ஊழியரையும் காக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனேநடைமுறைப்படுத்திட வேண்டும் .

அண்ணனான ஆசிரியர் திரு.விஜயராஜ்

Image may contain: 3 people, people smiling

தினம் ஒரு கதை மாணவர்களுக்கு கூற தினம் ஒரு கதை.!தென்கச்சி கோ சுவாமிநாதன்




ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .

அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்


வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முயன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முயன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முயன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்


திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்

" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது


எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமாவதில்லை "


அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது


அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது


உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு 

கல்வி தரத்தை உயர்த்த பாடப்பொருள் மேம்பாட்டு மையம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்

தமிழகத்தில் கல்வித்தரத்தை உயர்த்த பாடப்பொருள் மேம்பாட்டு மையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தார்.



தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையான பாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள் மற்றும் மின்னணு மதிப்பீடு மையங்கள்) அமைக்கப்பட்டுள்ளது.



 இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெற்றது.



 விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.




பள்ளிக்கூடங்களில் அமல்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டங்களில் ‘கியூ ஆர்’ கோடு இணைக்கப்பட்டுள்ளது.



 இந்த ‘கியூ ஆர்’ கோடுவை செல்போனில் ‘ஸ்கேன்’ செய்தால், இணையதளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ தெரியும்.



 அதாவது உதாரணமாக 6–ம் வகுப்பு தமிழ் பாடத்தில் கும்மி அடி என்று தலைப்பில் உள்ள பாடத்தில் ‘கியூ ஆர்’ கோடு இருந்து, அதை ‘ஸ்கேன்’ செய்தால், கும்மி அடிப்பது மற்றும் சத்தம் ஆகியவை வீடியோ மற்றும் ஆடியோவாக தெரியும். அதை மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிப்பார்.



 இப்படி அனைத்து பாடப்புத்தகங்களிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் ‘கியூ ஆர்’ கோடு இடம் பெற்றுள்ளது. 



இவற்றை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார்.
இதையடுத்து முதன்மை கல்வியாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.


 அந்த பயிற்சியின் நிறைவு விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது


முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.


 அதற்கு காரணம் இணை இயக்குனர், இயக்குனர் மூலம் எதையும் தீர்க்க நாட்கள் அதிகமாகும். அதனால் தான் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.



 அதை மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும். நான் 8 முறை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன்.



 அதற்கு காரணம், யார் எதை கூறினாலும் அதை காது கொடுத்து கேட்பேன். அவர்களை தட்டிக்கொடுப்பேன். அதேபோல நீங்களும் செயல்படுங்கள்.



உங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளை பார்வையிட்டு அந்த பள்ளிகளில் கழிப்பறை மற்றும் ஏதாவது குறை இருந்தால் தெரியப்படுத்துங்கள்.



 பள்ளிகளுக்கு அனைத்து கட்டமைப்புகளும் செய்து கொடுக்கப்படும்.



 பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் சேவை மனப்பான்மை உள்ளவர்களை சேருங்கள். சிறப்பாக பணியாற்றுங்கள். பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளுக்கு இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.


 பிளஸ்–2 படித்து முடித்த உடன் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அனைத்து பாடங்களும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

(மின்னல் கல்வி செய்தி குழுவில் இணைய MKS என type செய்து   6380815982 க்கு  whatsapp இல் அனுப்பவும்)

பின்னர் அவர் புதுமை பள்ளி விருதுகளையும், கனவு ஆசிரியர் விருதுகளையும் ஆசிரியர்களுக்கு வழங்கினார்


பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது



புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பது குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு.


 ஆனால் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுவதால் தமிழகத்தில் 412 மையங்களில் நீட் பயிற்சி நடத்தப்படும்.


 அந்த பயிற்சி விடுமுறை நாட்களிலும், பள்ளிக்கூட வேலைநேரம் போக மற்ற நேரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு பள்ளிக்கு கல்விச்சீர்: அள்ளி கொடுத்த மக்கள் :

அரசு துவக்கப் பள்ளிக்கு, ஐந்து டிராக்டர்களில், கிராம மக்கள் கல்விச்சீர் வழங்கினர்.

சேலம் மாவட்டம், முத்தானுாரில், 64 ஆண்டு களாக, அரசு துவக்கப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 127 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு முத்தானுார், கட்டபுளியமரம், விநாயகர் நகர், கட்டியப்பன்புதுார் உள்ளிட்ட கிராம மக்கள், நேற்று கல்விச்சீர் வழங்கினர்.
மேள தாளம் முழங்க, வகுப்பறைக்கு தேவையான ஐந்து பீரோ, டேபிள், சேர், மின் விசிறி, ஸ்டாண்ட், நோட்டு, புத்தகங்களை, ஐந்து டிராக்டர்களில், மக்கள் ஏற்றிச் சென்றனர். பனமரத்துப்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். 

தொடர்ந்து, பள்ளியில் விழா நடந்தது. மாணவ - மாணவியர் பங்கேற்ற, பேச்சு போட்டி, பழமொழி ஒப்புவித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வீரபாண்டி வட்டார கல்வி அலுவலர் மாதவராஜன், பள்ளி புரவலர் திட்டத்தை துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர்கள் நிதி வழங்கினர்.
சீர் வழங்கிய சிலர் கூறியதாவது: தனியார் பள்ளிகளை விட, இங்கு ஆங்கிலம், கையெழுத்து பயிற்சி சிறப்பாக கற்றுத் தரப்படுகிறது. இதனால், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, குழந்தைகள் அதிகம் சேர்கின்றனர். பள்ளியில் இரு வகுப்பறை மட்டுமே உள்ளது. இதில் தான், அனைத்து, மாணவ - மாணவியரும் நெருக்கடியாக அமர்ந்து படிக்கின்றனர். பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறை கட்டித் தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதுமை பள்ளி விருது :

அரியலுார் மாவட்டம், சோழன்குடிகாடு கிராமத் தில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி, 10 ஆண்டுகளாக, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 2017 - 18 கல்வியாண்டில், இப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வெழுதிய, 81 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இதனால், தமிழக அரசு, 2017 - 18 கல்வி ஆண்டுக்கான, புதுமைப் பள்ளி விருதுக்கு, சோழன்குடிகாடு பள்ளியை தேர்வு செய்தது. 'இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்' என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்; பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்:

டெல்லியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்பொழுது, நீட் தேர்வானது பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் கணினி முறையில் நடத்தப்படும் என கூறினார்.
தொடர்ந்து அவர், பாடத்திட்டம், தேர்வுகள் கட்டணத்தில் மாற்றம் இல்லை. தேர்வுகள் வெளிப்படையானதும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். கணினி முறையில் தேர்வு நடந்தாலும் இது ஆன் லைன் தேர்வு இல்லை.
தேர்வுகளுக்கான தேதிகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும்.  மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் இணையதளம் மூலம் பயிற்சிகள் வழங்கப்படும்.
மாணவர்கள் கணினி அறிவுடன் இருப்பதால் தேர்வுகள் நடத்துவதில் சிரமம் இருக்காது.   தேர்வுகள் இரண்டு கட்டமாக நடப்பதால் மாணவர்கள் மொத்தமாக தேர்வு எழுதுவது தடுக்கப்படும் என கூறினார்.
இந்த நிலையில், ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு நடத்துவது பற்றி தமிழக அரசுக்கு கடிதம் வரவில்லை.
ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.  இதுபற்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என தெரிவித்துள்ளார்.

பிளஸ் 1 தொழிற்கல்வி புத்தகங்கள் தட்டுப்பாடு :

தொழிற்கல்வியில் புதிய பாடத்திட்ட புத்தகங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறையில், அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. 

ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும், பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதில், பிளஸ் 1 வகுப்புக்கு மட்டும், புதிய பாட புத்தகங்கள் தாமதமாகவே வினியோகம் செய்யப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கான புத்தகங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தொழிற்கல்வியில், 14 பாடங்களுக்கான புத்தகங்களுக்கு, மாநிலம் முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. 

அதனால், தொழிற்கல்வி பாடப்பிரிவு வகுப்புகளில், பாடம் நடத்துவது பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தொழிற்கல்வி மாணவர்கள் கூறியதாவது:தொழிற்கல்வியில், பாடத்திட்டம் முழுவதும் மாற்றப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில், 14 பாடங்களுக்கு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த புத்தகங்கள், பெரும்பாலான பாடநுால் கழக விற்பனை மையங்களில் இருப்பு இல்லாததால், புத்தகங்களை எங்கே வாங்குவது என, தெரியவில்லை.

தொழிற்கல்வி பாட மாணவர்களுக்கு, குறைந்த எண்ணிக்கையில் தான் பாடங்கள் உள்ளன. அவற்றுக்கும், புத்தகங்கள் வழங்குவதை தாமதம் செய்வதால், வரும் பொது தேர்வுக்குள் முழுமையாக தயாராகி, அதிக மதிப்பெண் பெற முடியுமா என்ற, அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக பள்ளி கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, பாட புத்தகங்களை வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேர்வை கணினி வழியில் நடத்துவது சரியா? ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு அவசியமா? கல்வியாளர் - மாணவர்கள் கருத்து

ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்துவது அவசியமா?, தேர்வை கணினி வழியில் நடத்துவது சரியா? என்பதற்கு கல்வியாளர், தொழில்நுட்ப வல்லுனர், மாணவர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘நீட்’ தேர்வு
மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்த நாளில் இருந்தே தமிழகம் அதை எதிர்த்து வருகிறது. ஆனாலும், 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு, மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வும் முடிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், மத்திய அரசு ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்றும், கணினி வழியில்தான் தேர்வை எழுத முடியும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு இருக்கும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு மேலும் அந்த எதிர்ப்பை வலுவடைய செய்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘நீட்’ தேர்வை கணினி வழி நடத்தினால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ‘நீட்’ தேர்வை நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பை கல்வியாளர்களும், மாணவர்களும் எவ்வாறு கருதுகிறார்கள்? என்பதை இனி பார்ப்போம்.
கல்வியாளர்
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியதாவது:-
போட்டித்தேர்வு என்பது மட்டும் மாணவர்களின் திறமையை வெளிக்கொணருவது கிடையாது. வலுவான பாடத்திட்டம், நல்ல ஆசிரியர்கள், நூலகம் சென்று படித்தல், பாடத்திட்டத்துக்கு தொடர்புடைய கள ஆய்வு செய்தல் என கல்வியை மேம்படுத்த வேண்டும். தற்போது ‘நீட்’ தேர்வில் தகுதி பெற்றவர்களில், மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் ஓராண்டு பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள்.
தற்போது பிப்ரவரி மாதம் ஒரு தேர்வும், ஏப்ரல் மாதம் மற்றொரு தேர்வும் என ஆண்டுக்கு 2 தடவை ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி மாதம் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படும். எனவே மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தங்களை தயார் படுத்துவார்களா? இல்லை, இந்த தேர்வுக்கு தங்களை தயார் படுத்துவார்களா? என்ற கடினமான சூழ்நிலை உள்ளது. நிச்சயம் இது மாணவர்களுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும்.
பயிற்சி கட்டணம் தவிர்த்து ‘நீட்’ தேர்வு கட்டணம் ரூ.1,400 ஆகும். தற்போது 2 முறை தேர்வு நடத்தப்பட்டால் 2 தடவை கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏழை-எளிய மாணவர்களுக்கு இது மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும். அவர்களால் ஒரு தேர்வு மட்டுமே எழுத முடியும். வசதி படைத்த மாணவர்கள் 2 தேர்வையும் எழுதுவார்கள். இதில் ஒரு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் கூட அவர்களுக்கு மருத்துவக்கல்லூரி சீட் கிடைத்துவிடும்.
ஏழை-எளிய மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக காமராஜர் 6 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தார். ஆனால் தற்போது மத்திய அரசு நீட் தேர்வால் ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து வருகிறது. ‘நீட்’ தேர்வு என்பது வியாபாரம் மட்டுமே. எனவே அதனை ரத்து செய்யவேண்டும். ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்தி கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொழில்நுட்ப வல்லுனர்
தொழில்நுட்ப வல்லுனர் கார்த்திக் கூறியதாவது:-
ஆன்லைனில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டால் தேர்வு நேரம், அதன் முடிவு அறிவிக்கும் காலம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் தேர்வுக்காக ஒரு சிஸ்டம் தொடங்கினால், ஒரு வருடம் அல்லது 3 வருடங்கள் வரை கடினமாக இருக்கும். தொடர்ந்து நடைபெறும் வரும் சூழலில், தேர்வு எளிதாகிவிடும். தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேலும் சான்றிதழும் உடனடியாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுபோன்று பல்வேறு நன்மைகள் இருக்கின்றன.
அதே சமயத்தில் தீமைகள் என்று சொன்னால் நிறைய கேள்விகள் தேவைப்படும். எடுத்துக்காட்டாக 500 கேள்விகள் இருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். 5 பேர் தேர்வு எழுத செல்கிறார்கள் என்றால், அந்த 500 கேள்விகளை ரேண்டமாக அச்சிட்டு, விடைகளை இணைக்கும்போது, கேள்விகள் எளிதாக தெரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் அதிகப்படியான கேள்விகள் தேவைப்படும் நிலை இருக்கிறது. அதிகமானோர் தேர்வு எழுதுவதற்கான ‘சிஸ்டம்’, அதற்கான இணையதள இணைப்பு உள்ளிட்டவை தேவைப்படும். ஒரே நேரத்தில் அதிகமானோர் தேர்வு எழுதும்போது இணையதள ‘சர்வர்’ முடங்குவதற்கு வாய்ப்பும் இருக்கிறது. மேலும் வினாத்தாள்களை இணையதளத்தில் இருந்து திருடுவதற்கு (ஹேக்) அதிக வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்
ஏற்கனவே, ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத நிலையில், மீண்டும் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை மேற்கொண்டு வரும் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மாணவர் கவுசிக் (வயது 19) இதுகுறித்து கூறியதாவது:-
ஆன்லைன் மூலம் ‘நீட்’ தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு சாதகமான ஒன்றுதான். ஏனென்றால், ஆன்லைனில் தேர்வு எழுதும்போது, ஒரு கேள்விக்கான பதிலை தவறாக ‘கிளிக்’ செய்துவிட்டாலும், உடனே அதை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், பேப்பரில் தேர்வு எழுதும்போது திருத்திக்கொள்ள முடியாது. அதேபோல், தேர்வு எழுதும் நாள், தேர்வு எழுதும் மையம் ஆகியவற்றை மாணவர்களே தேர்வு செய்ய முடியும் என்பதும் நல்ல விஷயம்தான். ஆனால், கேள்வித்தாள் தான் எவ்வாறு இருக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு என்பதும் வரவேற்கக்கூடிய அம்சமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. காரணம், 2 முறை தேர்வு நடத்தப்பட்டாலும், அதில் அதிகமாக பெற்ற மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வதால் அதுவும் மாணவர்களுக்கு சாதகமானதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி
சிதம்பரத்தை சேர்ந்த மாணவி பவிதா கூறுகையில், தமிழக மாணவிகள் திறமையானவர்கள். அவர்களுக்கு தகுதித்தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. ஒரு நீட் தேர்வு எழுதுவதற்கே பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதில் ஆண்டுக்கு 2 நீட் தேர்வு என்பது இப்போது படிக்கிற மாணவிகளுக்கு ஆறுதலாக இருந்தாலும் கூட இதில் அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கே, முன்னுரிமை என்பது வருத்தம் அளிக்கிறது.
இந்த முறையால் ஆண்டு முழுவதும் நீட் தேர்வுக்காக படிக்க வேண்டிய நிலை ஏற்படும். அடுத்த மேல் படிப்பை எப்படி படிப்பது. நீட் தேர்வே வேண்டாம் என்ற நிலையில், 2 தேர்வு தேவையில்லை. இது மாணவர்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படுத்தும் என்றார்.

சென்னை மாணவிக்கு அமெரிக்க நிறுவனம் ஊக்க விருது!!

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் உள்ள தியேல் அறக்கட்டளையின் 2018 ம் ஆண்டிற்கான தியேல் பெல்லோஷிப் விருது , சென்னையைச் சேர்ந்த 21 வயதான மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேர் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகசிய குறியீடு ஆராய்ச்சி


சென்னையிலும் மும்பையிலும் இளமைக் காலத்தை கழித்த அபர்ணா, பள்ளிப்படிப்பிலேயே சாதனை புரிபவராக விளங்கினார். கணிதத்தில் ஆர்வம் கொண்ட இவர் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்; மேலும் படிப்பில் மட்டுமல்லாமல், விளையாட்டுத் துறையிலும் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளார். ரகசிய குறியீடுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பிளாக்செயின் கிளப்பில் முன்னோடியாக திகழ்ந்த இவர், இந்த தொழில் நுட்பத்தை மாணவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியல் ஈடுபட்டார். மேலும் ரகசிய குறியீடு மற்றும் பொருளாதார ஆராய்ச்சிக்கான முதல் சோதனை நிலையத்தையும் ( மெக்கானிசம் லேப்) இவர் ஏற்படுத்தினார். ஓமன், மெக்சிகோ, இந்தியா, ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் பிளாக் செயின் பயிற்சி அளித்துள்ளார்.

ஒரு லட்சம் டாலர் உதவி


தற்போது தியேல் அறக்கட்டளை ஊக்கவிருதைப் பெறுவதன் மூலம், உலகின் தலைசிறந்த ரகசிய குறியீடு நிபுணர்கள் வரிசையில் இடம் பெறுகிறார். இளம் வயதிலேயே நிறுவனங்களைத் தொடங்கவும், சிறந்த பெரிய வழிமுறைகளைக் கண்டறியும் திறமையுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பெல்லோஷிப் வழங்கப்படுகிறது.
பே பால் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பேஸ்புக் அமைப்பின் துவக்க கால முதலீட்டாளருமான பீட்டர் தியேல் என்ற கோடீஸ்வரரின் ஆதரவுடன் ஒரு தனியார் அறக்கட்டளையாக தியேல் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இதன் பெல்லோஷிப் பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் டாலர் உதவித் தொகையும், தியேல் அறக்கட்டளையைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோரின் வழிகாட்டுதலும் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும்.

SCERT- தொடக்க/நடு/உயர்/மேல்நிலை ஆசிரியர்களுக்கு காணொலி மூலம் பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள் :


ஆசிரியர் பணி நிரவல்: ஒரு மாற்று யோசனை

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணி நிரவல் காரணமாக பல்வேறு பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 
அதனால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தனியார் பள்ளிகளில் சேரும் 25 சதவீத மாணவர்களுக்கு அரசாங்கமே கட்டணம் செலுத்துவது என்ற கொள்கை முடிவு காரணமாக பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். தனியார்பள்ளிகளில் கற்பிக்கப்படும் ஆங்கில வழிக் கல்வியின்மீது பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள மோகம் காரணமாக தனியார் பள்ளிகளை நோக்கி பொதுமக்களின் பார்வை திரும்பியதின் விளைவாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது.

அரசு பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, பெற்றோர்களுக்குப் புரிய வைப்பதில் கல்வியாளர்கள் மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய சிந்தனையாளர்களின் உதவி தேவைப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பல குறைகள் உள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டி, அத்தகைய தவறுகளை சீரமைத்து வழி நடத்திச் செல்ல வேண்டியது கல்வியாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் ஆகியோரின் கடமையாகும். இல்லையெனில், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவசக் கல்வி எட்டாக்கனியாகிவிடும்.150 மாணவர்கள் வரை பயிலும் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 6 ஆசிரியர்கள், ஒரு தலைமையாசிரியர், ஓர் உடற்கல்வி ஆசிரியர், ஓர் இளநிலை உதவியாளர், ஓர் ஆய்வக உதவியாளர், ஓர் அலுவலக உதவியாளர், ஓர் இரவுக் காவலர் கட்டாயம் தேவை. ஆயினும் பல இடங்களில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் கிடையாது. அலுவலகப் பணி செய்ய இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள்இல்லை. கல்வித்துறை இணையச் செயல்பாடுகளைச் செய்யவோ, கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தவோ எவரும் இல்லை. மேலும் பள்ளி சார்ந்த பலவிதமான அலுவலகப் பணி, கருவூலப் பணி, கல்வி அலுவலங்களுக்கு நேரில் சென்று கடிதங்களை ஒப்படைத்தல் பணி என பல்வேறு பணிகளையும் ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளது. தற்போதுள்ள ஆசிரியர்கள் கல்வி கற்பித்தல் பணியோடு இத்தகைய செயல்பாடுகளிலும் ஈடுபடவேண்டிய சூழ்நிலை உள்ளதால் அவர்களுடைய கற்பித்தல் பணி தொய்வடைகிறது. அவற்றைச் செய்யும் ஆசிரியர்கள் அமையாத பள்ளியும், தலைமையாசிரியரும் படும்பாடு சொல்லி மாளாது.இத்தகைய சூழ்நிலையில் குறிப்பாக, கிராமப்புறங்களில்உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பணி நிரவலை முறைப்படுத்தி மாணவர்களின் கல்வித் தரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

150 மாணவர்கள் வரை பயிலும் உயர்நிலைப் பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் போதும் என்ற கணக்கிடப்பட்டு மற்ற ஆசிரியர் பணியிடங்கள் உபரியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் நகர்ப்புறங்களைவிட்டு வெகு தொலைவில் உள்ள பெரும்பாலான கிராமப்பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் இல்லை.பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட்டு வரப்படுகின்றனர். அவர்களுக்கான மாற்றுப் பள்ளி தேடுவதைவிட, தற்போது பணியாற்றும் பள்ளியிலேயே உரிய வகையில் பணியை பின்வருமாறு மாற்றியமைக்கலாம்.புதிய உயர்தர பாடத் திட்டத்தில், சிறப்பான வகையில் பல தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. அவற்றை நன்முறையில் வெற்றிகரமாக பயிற்றுவிக்கும் தொழில்நுட்ப ஆசிரியராக அவர்களை மிளிரச் செய்யலாம். அவர்களுக்கு கூடுதலாக பயிற்சி அளித்து அதை செயல்படுத்தலாம்.

தங்கள் பாடம் சார்ந்த கற்பித்தல் பணியோடு, கணினியை நிர்வகித்தல், கணினியை பயன்படுத்துதல், கணினியைப் பயன்படுத்த மற்ற ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துஅனைத்து ஆசிரியர்களையும் ஸ்மார்ட் டீச்சராக மாற்றுதல், கணினியை கல்வி கற்பிக்க சிறப்பாகப் பயன்படுத்துதல், மூவகைச் சான்றிதழ்களைப் பெற உதவுதல், பள்ளியின் கடிதப் போக்குவரத்துகளை இணையவழியில் செயல்படுத்துதல், பாடம் சார்ந்த ஒலிஒளி கோப்புகளை உருவாக்கி கற்றல் கற்பித்தல் நிகழ்வினை எளிமையாக்குதல், கல்விசார் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளை செயல்படுத்துதல், பள்ளி தொடர்பான அரசின் விலையில்லா திட்டங்களை திட்டமிட்டு குறையில்லாமல் பள்ளியில் செயல்படுத்துதல், பள்ளிக் கல்வி முடித்தபின் மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன மேல்படிப்புகள் உள்ளன, அவற்றை எங்கு கற்பது, தொழிற்கல்வி,என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன அவற்றிற்குரிய கல்வியை எங்கு பயில்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளிக்கும் சமூகத்திற்கும் ஒரு தொடர்பாளராக செயலாற்றி, மாணவ, மாணவியர்களுக்கு நல் ஆலோசகராக விளங்க முடியும்.இத்தகைய ஆசிரியர்களை உருவாக்கினால் அரசு பள்ளிகளும்பன்முக வளர்ச்சியை பெறும். உபரி ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் பணி நிரவல் தேவையிராது. இனிவரும் காலங்களில் பணி நிரவல் இல்லாமலாக்குவது அரசு, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கையிலும்தான் உள்ளது.

DGE-Internal mark proceedings for +1 and +2 Exams

பள்ளிக்கல்வி இயக்குனர்களின் பொறுப்பு மாற்றம் : தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு அதிகாரம் குவிப்பு

தமிழக அரசின் புதிய சட்டப்படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன. மெட்ரிக் பள்ளி இயக்குனர், தனியார் பள்ளி இயக்குனர் என, பெயர் மாற்றப்பட்டு, கூடுதல் அதிகாரங்கள்
வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க பள்ளி இயக்குனர் கவனித்து வந்தார்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் நிர்வாகத்தை, பள்ளிக்கல்வி இயக்குனரும், மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகத்தை, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரும் கவனித்து வந்தனர்.இந்நிலையில், தமிழக அரசு இயற்றியுள்ள, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம், 2018ன் படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டு உள்ளன.தனியார் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரிக் இயக்குனர் பதவி நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கான பொறுப்புகள், தனியார் பள்ளிகள் இயக்குனர் வசம் மாற்றப்பட்டுள்ளன.மாற்றம் என்ன?

= தமிழக அரசின் புதிய சட்டப்படி, ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் எட்டாம் வகுப்பு வரையுள்ள நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க கல்வி இயக்குனர் கவனிப்பார்
= 10ம் வகுப்பு வரை செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள், பிளஸ் 2 வரை செயல்படும், மேல்நிலை பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கவனிப்பார்
= மெட்ரிக் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனர் கிடையாது. மாறாக, தனியார் பள்ளிகள் இயக்குனர் என்ற, புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இவரே, தனியார் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள்,சி.பி.எஸ்.இ., பள்ளிகள்,ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.பி., என்ற சர்வதேச பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற, பிறவகை பாடத்திட்ட பள்ளிகளின் நிர்வாகத்தை கவனிப்பார்
= தனியார், 'பிளே ஸ்கூல்' என்ற மழலையர் பள்ளி, பிரைமரி பள்ளிகள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றின் நிர்வாகங்களையும், தனியார் பள்ளிகள் இயக்குனரே கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 

7/7/18


இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன்உள்ளதகவல்#



1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது  நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு  சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.

10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு   கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.

11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.

13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் 
ஜலதோஷம் போய்விடும்.

14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். 
இருமலை போக்கும்.

15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா 
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?

 அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.

அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். 

உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

19. சீரக தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை. 

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....

நன்றி

தேர்வுக்கான பாடப்பகுதிகள் என்ன? பிளஸ் 1 மாணவர்கள் குழப்பம்

பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில், காலாண்டு, அரையாண்டு தேர்விற்கான பாடப்பகுதிகளை வெளியிடாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

பாடத்திட்டம் மாற்றம்
தமிழக பள்ளிக்கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழக பாடத்திட்ட மாணவர்கள் நுழைவு தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பிளஸ் 1ல், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வு வினாத்தாளில், 20 சதவீத அளவுக்கு, மாணவர்களின் சிந்தனை திறனை பரிசோதிக்கும் கேள்விகள் இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுத்தேர்வுக்கான, வினாத்தாள் கட்டமைப்பு என்ற, 'ப்ளூ பிரின்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நுழைவு தேர்வுகளுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களும் மாற்றப்பட்டுள்ளன.

இதன்படி, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம், இந்த ஆண்டு முதல் அறிமுகமாகி உள்ளது. இந்த பாடத்திட்டப்படி, பாடம் நடத்தும் முறைகள் குறித்து, சமீபத்தில் தான், கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோரிக்கை
இந்த கருத்தாளர்கள், வரும் வாரங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். இதுவரை பயிற்சி இல்லாததால், பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே, புதிய பாடத்திட்டத்தில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான பாடப்பகுதிகள் என்னவென்று, பள்ளி கல்வித்துறை இன்னும் அறிவிக்கவில்லை.அதனால், சரியான வழிகாட்டுதல் இல்லாமல், எந்த பாடங்கள் வரையிலும் தேர்வுகள் நடத்தப்படும்; அதற்கான வினாக்கள் எப்படி இருக்கும் என, மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பள்ளி வந்ததும் தோப்புக்கரணம் மாணவருக்கு சூப்பர் பயிற்சி

கோபி:வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருக்க, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தோப்புக்கரணம் போட்டு, பயிற்சி அளிக்கப் படுகிறது.

ஈரோடு, கோபி கல்வி மாவட்டத்தில், வேங்கம்மையார் நகரவை உயர்நிலைப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியை அலமேலு தலைமையில், எட்டு ஆசிரியர்கள் உள்ளனர். 6 - 10ம் வகுப்பு வரை, 155 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
காலை, 9:30 மணிக்கு, பள்ளி துவங்கியதும், மாணவர்கள் சுறுசுறுப்பாக இருக்க, தோப்புக்கரணம் பயிற்சி அளிக்கின்றனர். ஒவ்வொரு மாணவரும், 10 தோப்புக்கரணம் போடுகின்றனர்.ஆசிரியர்கள் கூறியதாவது:அனைத்து பயிற்சிக்கும் முன்னோடியாக, தோப்புக்கரணம் திகழ்கிறது. இதை செய்வதால், அனைத்து நரம்பு மண்டலத்துக்கும், சீரான ரத்த ஓட்டம் கிடைத்து, மாணவர்கள் சுறுசுறுப்படைவர். காதை பிடித்து, உட்கார்ந்து எழும்போது, மூளை நரம்புகள் துாண்டப்படும்.இதனால், மூளை செயல்பாட்டை ஒருநிலைப்படுத்த முடியும். ஆட்டிசம் குறைபாடு தவிர்க்கப்படும்; கற்றல் குறைபாடு நிவர்த்திஆகும். 
தொடர் பயிற்சியால், வகுப்பு துவங்கும் முன்பே, அவரவர் வகுப்பறையில், மாணவர்கள், தாங்களாகவே ஆர்வமாக தோப்புக்கரணம் போடுகின்றனர். உடல்நிலை சரியில்லாவிடில், கட்டாயப் படுத்துவதில்லை. இதேபோல், நகம் வெட்டுதல், கைகளை சுத்தமாக கழுவுதல், என சுகாதாரத்துக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இதனால், எங்கள் மாணவர்களுக்கு, தலைவலி, வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் அறிகுறி ஏற்படுவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசு தேர்வுகள் தனியாரிடம் ஒப்படைப்பு

டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசு தேர்வு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க  நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் ஆன்லைனில் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மாநில அளவில் நிர்வாகத்தில் மாவட்ட துணை கலெக்டர், காவல்துறை துணை கண்காணிப்பாளர்(டிஎஸ்பி), வணிக வரித்துறை உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அதிகாரி உள்ளிட்ட குரூப் 1 பதவியையும், குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ., உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது.

முதலில் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு வந்தது. அந்த முறை மாற்றப்பட்டு ஆன்லைன் மூலம் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்கும் புதிய முறை கொண்டுவரப்பட்டது. தற்போது அனைத்து தேர்வுகளும் ஓஎம்ஆர் தாளில் கொள்குறி (டிக் அடிக்கும் முறை) வகையில் தேர்வர்கள் எழுதி வருகின்றனர். 

இந்த நிலையில் அதிரடியாக எழுத்து தேர்வை கணினி மூலம் நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான முயற்சியில் டிஎன்பிஎஸ்சி மும்முரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தேர்வு நடத்தும் பணிகளை தனியாரிடம் அளிக்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.

கணினி மூலம் நடத்தப்படும் தேர்வுகளை நடத்துவதற்காக தனியாரிடம் ஒப்பந்த புள்ளியை டிஎன்பிஎஸ்சி கோரியுள்ளது. ஒப்பந்தபுள்ளியை ஆகஸ்ட் 2ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். டெண்டர் குறித்த விவரங்களை www.tenders.tn.gov.in, www.tnpsc.gov.inல் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவிப்புக்கு தேர்வு எழுதுவோர் மற்றும் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்விலும் அதிகரித்து வருகிறது. குறைந்தப்பட்சம் ஒவ்வொரு தேர்வுக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.



ஒரு பதவிக்கே சுமார் 250 பேர் போட்டியிடும் சூழ்நிலை நிலவி வருகிறது. எப்படியாவது அரசு பணியை பிடித்து விட வேண்டும் என்ற எண்ணமே ஒவ்வொரு தேர்வுக்கும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காட்டி வருகிறது. இந்த நிலையில் தனியாரிடம் ஒப்படைப்பது முறைகேடுக்கு வழிக்கும்.

அப்படி தனியாரிடம் ஒப்படைத்தால் தேர்வு எழுதி அரசு பதவியை பெற நினைப்பவர்களின் எண்ணம் கானல் நீராக போய் விடும் என்றும் சமூக ஆர்வலர்கள், தேர்வு எழுதுபவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, தேர்வு நடத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்று டிஎன்பிஎஸ்சிக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிராமப்புற மாணவர்களுக்கு சிக்கல்: டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் 20 முதல் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வழக்கம் ெகாண்டவர்கள். கிராமங்கள், புறநகர்களில் இந்த வசதி இல்லை. எனவே, கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் இதற்காக பல ஆயிரங்களை செலவழித்து தேர்வு எழுத வேண்டியிருக்கும். காரணம் சில நூறு ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கவே முடியாதநிலையில்தான் பல மாணவர்கள் தேர்வில் தோல்வி தழுவும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. முழு அளவில் கம்ப்யூட்டர் அறிவு இல்லாத மாநிலமான தமிழகத்தில் இதுபோன்ற திடீர் அறிவிப்புகள் மாணவர்கள், தேர்வர்கள், போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

என்ன விபரீதம் நடக்கும்?

வட மாநிலங்களில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வினா தாள்கள் நெட் சென்டர்களில் சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது. குறிப்பாக மத்திய அரசு பணிகளான ரயில்வே, ஐசிஎப், தபால் துறை பணிகளுக்கான வினாத்தாள்கள் ெடல்லியில் உள்ள சில இன்டர்நெட் சென்டர்களில் விற்கப்படுகிறது. சமீபத்தில் கூட சென்னையில் நடந்த தபால் துறை தேர்வில் பீகார் மாணவர்கள் தமிழில் 100 சதவித மதிப்பெண் ெபற்றனர்.

ஆனால் தமிழகத்தை சேர்ந்த தமிழை தாய் மொழியாக கொண்ட தேர்வர்களால் இந்த மதிப்பெண்ணை பெற முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் சில தனியார் இன்டர்நெட் மையங்கள் ேதர்வு நடத்தும் மையங்களில் உள்ள ஊழியர்களிடம் ரகசிய கூட்டணி வைத்து வினாத்தாள்களை லீக் செய்வதுதான். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த தனியாரிடம் ஒப்படைத்தால் வினாத்தாள் எளிதாக லீக்காகும் வாய்ப்பு உள்ளது

பிளஸ்1 வகுப்புக்கு 3 விதமான கம்ப்யூட்டர் புத்தகம் அறிமுகம் பணிச்சுமையால் ஆசிரியர்கள் அதிருப்தி

🔴பிளஸ்1 வகுப்புக்கு 3 விதமான கம்ப்யூட்டர் புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பணிச்சுமை அதிகரிப்பால் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்*

*🔴தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்1 வகுப்புகளுக்கு புதிய பாடதிட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது*

*🔴ஒவ்வொரு பாடத்தின், புதிய பாடதிட்ட புத்தகங்கள் அதிக பக்கங்களை கொண்டதாகவும், தரமாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்*

*🔴அதன்படி பிளஸ்1 வகுப்புக்கு இந்த ஆண்டு 3 விதமான கம்ப்யூட்டர் பாடபுத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது*

*🔴கணிதம், கம்ப்யூட்டர் பிரிவுக்கு கம்ப்யூட்டர் அறிவியல் தொடர்பான பாடங்கள், கலைப்பிரிவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடுகள், தொழிற்கல்வி பிரிவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தொடர்பான பாடங்களும் இடம்பெற்ற புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது*

*🔴இதற்கு முன் பிளஸ்1, பிளஸ்2 வகுப்புக்கு ஒரே மாதிரியான புத்தகங்கள் தான் இருந்தது*

*🔴தற்போது அது 3 ஆக மாற்றப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பிரிவில் உள்ள 2 செய்முறை பாடத்தில் ஒரு பாடம் நீக்கப்பட்டு, அதற்கு பதில் கம்ப்யூட்டர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்*தெரிவித்தனர*

சிபிஎஸ்இ சர்வாதிகார அமைப்பா? வவ்வாலுக்கு வாவால் என்று கேள்வி கேட்பீர்களா? ஹைகோர்ட் சரமாரி கேள்வி

மதுரை: நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இக்கு மதுரை ஹைகோர்ட் கிளை சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.


நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஹைகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ''நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதியபோது, அதில் 49 வினா-விடைகள் தவறாக இருந்தன. இதனால் 196 மதிப்பெண் குறைவாக கிடைப்பதால், தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி தவறான 49 வினா-விடைகளுக்குரிய 196 மதிப்பெண்களை வழங்கவும், நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

எங்கே டிக்ஷனரி 
டிக்ஷனரி எது
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டுவந்தது. சிபிஎஸ்இ தரப்பில், அறிவியல் பாடத்திலுள்ள ஆங்கில வார்த்தைகளை மொழி மாற்றம் செய்தபோது சரியான தமிழ் வார்த்தையை கண்டறிந்து அவற்றை பயன்படுத்த என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது, என்ன டிக்ஷனரி பயன்படுத்தப்பட்டது என்பது பற்றி சிபிஎஸ்இ விளக்கம் தர உத்தரவிட்டனர்.



சிபிஎஸ்இ 
கண்டுக்காதீங்க

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கு தொடராத நிலையில், இந்த வழக்கை பெரிதாக எடுக்க வேண்டாம் என்றார்.



சர்வாதிகாரமா 
சர்வாதிகாரியா

அப்போது நீதிபதிகள் கோபமடைந்தனர். நீங்கள் தவறு செய்தாலும், அதை எதிர்த்து யாரும் வழக்கு தொடர கூடாது என்கிறீர்களா? நீட் விஷயத்தில் சிபிஎஸ்இ அமைப்பு சர்வாதிகாரி போல செயல்படுகிறதா? என்றனர்.



என்ன கொடுமை 
வவ்வாலுக்கு வாவால்

மேலும், பீகாரில் தேர்வு எழுதியவர்களைவிட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறதே எப்படி? என்று சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இதய நாளங்கள் என்பதற்கு பதிலாக இருதய நலங்கள் என்றும், வவ்வால் என்பதற்கு பதில், வாவால் என்றும், கடை நிலை, இடை நிலை போன்ற வார்த்தைகள் மாற்றி, மாற்றியும் கேட்கப்பட்டுள்ளதே, இதை எப்படி மாணவர்கள் புரிந்து கொள்வார்கள். இதற்காக கருணை மதிப்பெண் தர முடியாதா என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். மேலும், வழக்கு விசாரணை முடிவடைந்ததாக கூறிய நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர்.

நீட் தேர்வு: எழுதியவர்களை விட பாஸ் ஆனவர்கள் அதிகம் உள்ளது எப்படி?

2018ம் ஆண்டுக்கான நீட் தோவு நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மருத்துவ கலந்தாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயாக்கப்பட்ட நீட் வினாத்தாளின் 49 கேள்விகளில் பிழை உள்ளது. இதனால் தமிழிழ் நீட் தோவு எழுதியவாகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தவறாக கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் மாாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன் உயாநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடாந்திருந்தாா.

இந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது நீதிபதிகள் சில கேள்விகளை முன்வைத்துள்ளனா. அதன்படி பிகாா மாநிலத்தில் தோவெழுதிய மாணவாகளை காட்டிலும் அதிகப்படியான மாணவாகள் வெற்றி பெற்றிருப்பது பெற்றது எப்படி? மேலும் நீட் தோவு தொடாபாக வழக்கு தொடரப்பட்டிருந்த தருணத்தில் தோவு முடிவுகளை அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாகவே வெளியிட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீட் தோவு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. சாவாதிகார போக்குடன் செயல்படுவதாக கண்டனம் தொிவித்துள்ளனா.

மேலும் வழக்கு நடைபெற்று வருவதால் மருத்துவ கலந்தாய்விற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றாலும், வழக்கின் தீாப்புக்கு கட்டுப்படும் என்று தொிவித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளனா.

Flash News : TRB - PG Assistant Physical Education Directors Grade I - 2016 - 2017 | Provisional Selection List Phase II Published!

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of PG Assistants/Physical Director - I 2016 - 17
School Education and Other Departments
Phase - II

Dated: 06-07-2018

Chairman

DIKSHA - New Syllabus QR code - Downloading Video - All Guide & Tutorial

                                                              

QR GUIDE PPT DIRECT MOBILE VIEW LINKS



3. SCREEN CAST MOBILE - PROJECTOR - HOW?









QR CODE SCANNING YOUTUBE VIDEO PLAYLIST


SYSTEM DOWNLOAD - DRIVE LINKS

சரியாகப் படிக்காதவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள்

சரியாகக் கற்காத மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது என்பது உள்பட தனியார் பள்ளிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
 இதற்கான சட்ட மசோதாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
 தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தொல்லை கொடுக்கக் கூடாது. பாலியல் தொல்லையில் இருந்து மாணவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

 தனியார் பள்ளிகளில் நல்ல அறிவுடைய பாடத்திட்டம் சார்ந்தவை, இணையான பாடத் திட்டம் சார்ந்தவை மற்றும் பிற பாடத் திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
 விடைத்தாள் மதிப்பீடு: அரசின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை நடத்துவதற்காகவும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காகவும் தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றும் அதனுடைய கட்டடங்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பிற உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும். அரசின் சார்பாக நடத்தப்படும் தேர்வுகள், விடைத்தாள்கள் மதிப்பீடு போன்ற பணிகளுக்காக தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை மாற்றுப் பணிக்காக அனுப்பிட வேண்டும்.
 அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்புகள் சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி ஆகியன மேற்கொள்ளப்படும். தேவைப்படும்பட்சத்தில், தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்களை அதில் ஈடுபடுத்த அனுப்பிட வேண்டும்.
 கட்டணத்தை முறைப்படுத்த...தனியார் பள்ளிக் கட்டணங்கள் முறைப்படுத்தப்பட்டு அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தைத் தவிர வேறு எந்தப் பெயரிலும் கட்டணத்தை பெறக் கூடாது.
 சரியாகப் படிக்காதவர்கள்: தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் யாரையும் சரியாகப் படிக்கவில்லை எனக் காரணம் கூறி பொதுத் தேர்வுகள் எழுதுவதில் இருந்து தடுக்கக் கூடாது. தனியார் பள்ளிகளுக்குள் நலன்களைக் கெடுக்கும் வகையிலான போட்டிகளை நடத்தக் கூடாது.
 வெளிப்படையான சேர்க்கை: தனியார் பள்ளி ஒவ்வொன்றிலும் கல்வி ஆண்டின் சேர்க்கையைத் தொடங்குவதற்கு முன்பாக குறைந்தபட்சம் 30 நாள்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சேர்க்கை குறித்த அறிவிப்பை, பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும், இணையதளத்திலோ அல்லது தகவல்களைத் தெரிவிக்கும் பள்ளி தொடர்பான பிற அம்சங்களின் வாயிலாகவோ வெளியிட வேண்டும்.
 பெற்றோர்-ஆசிரியர் சங்கம்: அரசுப் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளிலும் கல்வி மற்றும் கற்பித்தல் சூழலின் தரத்தை மேம்படுத்தவும், அதில் பெற்றோரை பங்கெடுக்கச் செய்யவும் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தை அமைக்க வேண்டும்.
 அனுமதி பெறாமல் மூடக் கூடாது: தனியார் பள்ளியையோ அல்லது பள்ளியில் தொடங்கப்படும் பாடப் பிரிவையோ உரிய அரசு அமைப்பின் ஒப்புதலைப் பெறாமல் மூடக் கூடாது. அவ்வாறு மூடும் போது படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உரிய தகுந்த ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.
 ஆசிரியர்களுடன் ஒப்பந்தம்: தனியார் பள்ளியைச் சேர்ந்த நிர்வாகக் குழு தேவைப்படும் ஆசிரியர்களை பணியமர்த்தம் செய்யலாம். இவ்வாறு நியமனம் செய்யப்படும் பணியாளருடன், பள்ளி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஏற்கெனவே பணியிலுள்ள பணியாளருடன் சட்டம் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் ஒப்பந்தத்தைச் செய்து செயல்படுத்திட வேண்டும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தங்கம் தென்னரசு கேள்வி: இந்த மசோதா தொடர்பான விவாதம் வியாழக்கிழமையே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மசோதாவில் உள்ள அம்சங்களை திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் சூழல் இல்லாமல் நீட் தேர்வுக்கு பயற்சி அளிக்கும் மையங்களாக மாறி வருகின்றன. அதைத் தடுப்பதற்கு விதிமுறைகள் வகுக்க வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள
...

அண்ணா பல்கலை, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு இ.மெயில், செல்போன் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை-2018 இணையதளத்திலும் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு
மாற்றுத்திறனாளிகள் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு காலை 9, 10.30, பிற்பகல் 12, 2 மணி என 4 நிலைகளாக நடத்தப்பட உள்ளது. நாளை (சனிக்கிழமை) முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் பிரிவுக்கு காலை 9, 10.30, பிற்பகல் 2 மணி என 3 நிலைகளில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு காலை 9, 10.30, பிற்பகல் 12, 2, 3 மணிக்கு நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு பிரிவு மாணவர் கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். இதில் மாணவர்கள் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொது கலந்தாய்வு
சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, மருத்துவ படிப்பு கலந்தாய்வு முடிந்ததும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 10-ந்தேதிக்கு பின்னர் பொது கலந்தாய்வு நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இணையதளத்தில், மதிப்பெண்ணுக்கு ஏற்ற வகையில் கல்லூரியை தேர்வு செய்வது எப்படி? என்பது குறித்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. அதை கலந்தாய்வுக்கு செல்ல இருக்கும் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

பிளஸ் 1 தேர்வுக்கான பாடப்பகுதிகள் என்ன?

பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில், காலாண்டு, அரையாண்டு தேர்விற்கான பாடப்பகுதிகளை வெளியிடாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழக பாடத்திட்ட மாணவர்கள் நுழைவு தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பிளஸ் 1ல், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வு வினாத்தாளில், 20 சதவீத அளவுக்கு, மாணவர்களின் சிந்தனை திறனை பரிசோதிக்கும் கேள்விகள் இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுக்கான, வினாத்தாள் கட்டமைப்பு என்ற, 'ப்ளூ பிரின்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நுழைவு தேர்வுகளுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களும் மாற்றப்பட்டுள்ளன.
இதன்படி, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம், இந்த ஆண்டு முதல் அறிமுகமாகி உள்ளது. இந்த பாடத்திட்டப்படி, பாடம் நடத்தும் முறைகள் குறித்து, சமீபத்தில் தான், கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த கருத்தாளர்கள், வரும் வாரங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். இதுவரை பயிற்சி இல்லாததால், பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே, புதிய பாடத்திட்டத்தில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான பாடப்பகுதிகள் என்னவென்று, பள்ளி கல்வித்துறை இன்னும் அறிவிக்கவில்லை.அதனால், சரியான வழிகாட்டுதல் இல்லாமல், எந்த பாடங்கள் வரையிலும் தேர்வுகள் நடத்தப்படும்; அதற்கான வினாக்கள் எப்படி இருக்கும் என, மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
எனவே, புதிய பாடத்திட்டத்தில், பருவ தேர்வுகளுக்கான பாடப்பகுதிகளை, பள்ளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என, மாணவர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளன

இன்றைய கல்வி மாற்றத்தின்சவால்களும் - சவால்களைஎதிர்கொள்ளும் வழிகளும்

இன்றைய கல்வி செயல்முறையில்ஒவ்வொரு நாளும் ஒவ்வொருமாற்றமும், செயல்திட்டமும் அமல்படுத்திவருகின்றனர், இத்தகைய சூழலில்தனியார் மற்றும் அரசு பள்ளி  என்றவேறுபாடின்றி செயல்படுதல் வேண்டும். அப்போது தான் நல்ல முறையில் நமதுபள்ளியின் நிர்வாகத்தை நிர்வகிக்கமுடியும். எனவே இத்தகைய மாற்றங்கள்யாவும் நமக்கு புதிதாகவும் ஒருசவாலாகவும் உள்ளது.

இந்த சவால்களை சாதனையாக மாற்றQB365 நமக்கு மிகவும் பயனுள்ளவகையில் அமைந்துள்ளது. QB365 மூலம்மாணவர்களுக்கு தேவையானவினாக்கள் மற்றும் விடைகள் மேலும்கணக்கிற்கு தேவையான தீர்வுகள்  ( Questions, Answerkeys, Solutions ) எனஅனைத்தையும் மாணவர்களின்தன்மைக்கு ஏற்ப வழங்கலாம். மேலும்அவர்கள் பின்தங்கிய பகுதியைஉணர்ந்து மீண்டும் மீணடும் பயிற்சிஅளிக்கலாம்.
Online Tests  மூலம் எழுத்து தேர்வுகளைதவிர்த்து இணைய வழி மூலம்தேர்வுகள் நடத்தலாம், இதனால் எதிர் வரும் காலங்களில் நுழைவுத்தேர்வினை சிறப்பாக எழுதஅவர்களுக்கு ஏதுவாக அமையும். மேலும் பல்வேறு வகையானமேற்படிப்புகள் பற்றிய தகவல்களும், அவற்றின் தேர்வு முறைகள் போன்றஅனைத்தையும் மாணவர்கள் பெறலாம்.
எனவே இத்தகைய சாதனை சாப்ட்வேரை அனைவரும் பெற
Visit Qb365.in  [ OR ] 86083 91000 , 86083 92000, 86083 93000 இந்த எண்ணிற்கு Missed call கொடுக்கவும் நன்றி..

Flash News : TET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

டெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : 


அமைச்சர் செங்கோட்டையன்
வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு டெட் தேர்வு எழுதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

தமிழ்நாட்டில் 2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடைக்கான அரசாணை வெளியிடப்பட்டது. 2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று  முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் ஜூன் 5-ம் தேதி அறிவித்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உலக சுற்றுசூழல் தினமான ஜூன் 5-ம் தேதி உலகம் முழுவதும் பிளாஸ்டிக் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வா் பழனிசாமி சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய வகையில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுசூழல் மிகவும் பாதிப்டைகிறது.
 இதனால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட வேண்டும். மேலும் பிளாஸ்டிக்கால் நிலத்தடி நீா் பாதிக்கப்படுகிறது. விலங்குகள் பிளாஸ்டிக்கை உட்கொண்டு பாதிப்படைகின்றன. எனவே தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.
பொதுமக்களின் நலன் கருதி வருகிற 2019 ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் பாரம்பரிய முறையான வாழையிலை, பாக்கு மட்டைகளினாலான தட்டு, தாழம்பூ இலை, துணிப் பை உள்ளிட்டவற்றை பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்

அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்-உத்தரவுகள்!!



அரசு அரசு உதவிபெறும் கல்லூரியில் பணி புரியும் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு -அரசாணை வெளியீடு :

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரியில் பணி புரியும் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு -அரசாணை வெளியீடு :
7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று தமிழக அரசு பேராசியர்களுக்கு ஊதிய விகிதத்தை மாற்றி வெளியிட்டுள்ளது .இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.