யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/9/16

7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கண்டிப்பு !

புதுச்சேரி பிரதேசம் மத்திய அரசின் நேரடிபார்வையில் இருந்து வருகிறது. மத்தியஅரசு அமல்படுத்திய ஏழாவது ஊதிய உயர்வைக்கடந்த மூன்று மாதங்களாக புதுச்சேரிஅரசு கிடப்பில் போட்டுவிட்டது.

இதுதொடர்பாக, புதுச்சேரி அரசு ஊழியர்கள், மத்தியஉள்துறைக்கு புகார்கள் அனுப்பியுள்ளார்கள். செப்டம்பர் 8ஆம் தேதி மத்தியஉள்துறை  அமைச்சகத்திலிருந்து, துணைநிலை ஆளுநருக்கும், தலைமைச்
செயலருக்கும் கடுமையானகண்டிப்புடன் போன்கால் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, துணைநிலைஆளுநர், முதல்வர் நாராயணசாமியை அவசரமாக அழைத்து கலந்துபேசினார். இதையடுத்து, இரவோடு இரவாக அமைச்சரவைக்கூட்டம் நடத்தினார் முதல்வர்.

அதைத் தொடர்ந்து, ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்துவதுசம்பந்தமாக, செப்டம்பர் 9ஆம் தேதி சட்டமன்றக்கூட்டத்தில், ‘ஏழாவது ஊதிய உயர்வுஅமல்படுத்தப்படுகிறது’ என்று அறிவித்தார் முதல்வர்நாராயணசாமி. அந்த தகவல்களைத் தலைமைச்செயலரும், துணைநிலை ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்குதெரியப்படுத்தியுள்ளார்கள். ‘மத்திய அரசு நேரடியாக தலையீட்டுகண்டிப்பு செய்தது இதுதான் முதன்முறை’ என்கிறார்கள் அமைச்சரவையில் உள்ளவர்கள்.

கிடைத்த பரிசுத்தொகையில் தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் நிதி

ரியோ பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றமாரியப்பன் வரும் 22ம் தேதிசேலம் திரும்புகிறார். மத்திய, மாநில அரசுகள்அறிவித்துள்ள பரிசு தொகையில் இருந்து, தான் படித்த அரசு பள்ளிக்குநிதியுதவி செய்ய அவர் முடிவுசெய்திருப்பதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். பிரேசில்
நாட்டின் ரியோ டி ஜெனிரோநகரில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில், சேலம் மாவட்டம் ஓமலூர் தீவட்டிப்பட்டி அடுத்தபெரியவடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன், உயரம்தாண்டுதல் போட்டியில், 1.89 மீட்டர் தாண்டி தங்கபதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு தமிழக அரசு ரூ.2 கோடியும், மத்திய விளையாட்டு அமைச்சகம்ரூ.75 லட்சமும் பரிசு அறிவித்துள்ளன. மாரியப்பன்பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். ஆரம்ப காலத்தில், மாரியப்பனுக்கு பயிற்சி அளித்தவரான அந்தபள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் கூறியது:

வரும்22ம் தேதி மாரியப்பன் தங்கவேலுசேலம் திரும்புகிறார். அவர் சொந்த ஊர்திரும்புகையில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளோம். மாரியப்பன் தங்கவேலுவுக்கு மத்திய, மாநில அரசுகள்பரிசுகள் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக அவரிடம் பேசினேன். பரிசுபணத்தில் ரூ.20 முதல் ரூ.30 லட்சம் வரை, அவர் படித்தபெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்குஅளிக்க முடிவு செய்துள்ளார். பள்ளியின்தரத்தை உயர்த்தவும், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தவும் இந்த நிதி செலவிடப்படும்என்றார். சொந்த ஊரில் சொந்தவீடு: மாரியப்பன் தங்கவேலுவின் தாய் சரோஜா கூறுகையில், நாங்கள் மிகவும் சிறிய வாடகைவீட்டில் வசித்து வருகிறோம். பரிசாககிடைத்துள்ள பணத்தில், இதே கிராமத்தில் சொந்தவீடு ஒன்றை கட்ட முடிவுசெய்துள்ளோம் என்றார்.

கணினி அறிவியலுக்கு அங்கீகாரம் இல்லை:குளறுபடியால் பட்டதாரிகள் கண்ணீர்

*'ஆன்லைன்' வகுப்புகள் அதிகரிக்கும் நிலையில்*, கணினி ஆசிரியர்களை நியமிக்காமலும், *கணினி அறிவியல் பட்டத்திற்குஅங்கீகாரம் வழங்காமலும்*💥 பள்ளிக்கல்வியில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

*💥தமிழக அரசுபள்ளிகளில், 1992 முதல், பிளஸ் 1 மற்றும்பிளஸ் 2வில்,
கணினி அறிவியல்படிப்பு அறிமுகமானது. கணினி பற்றிய அடிப்படை தகவல்களை மட்டும் அறிந்தோர், பட்டப்படிப்பு படிக்காவிட்டாலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின், கணினி படிப்புமுடிக்காதோர், 2008ல் நீக்கப்பட்டனர்.*

💥பல்கலைகளில், 1992 முதல், கணினி அறிவியல் பாடத்தில், பி.எஸ்சி.,
பிறகு பி.எட்., படிப்புகள்துவங்கப்பட்டன. இது வரை, *40 ஆயிரம்பேர், கணினி அறிவியலில் பி.எஸ்சி., - பி.எட்., பட்டமும்; 20 ஆயிரம் பேர், எம்.எஸ்சி., - எம்.எட்., பட்டமும் முடித்துள்ளனர்.*💥 இவர்களுக்கு, *📚தமிழகபள்ளிகளில்பல ஆயிரம் காலிப் பணியிடங்கள்இருந்தும் பணி வாய்ப்புகள் வழங்கவில்லை😍*.

வேலை வாய்ப்புக்கு ஆட்களை தேர்வு செய்யும்தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், *கணினிஅறிவியல் படிப்பை இன்னும் அங்கீகரிக்கவில்லை.* பள்ளிக்கல்வி துறையினர், மெத்தன மாக உள்ளனர்.

ஆன்லைன்படிப்புக்கும், ஐ.சி.டி., எனப்படும் கணினி வழி தொழில்நுட்பக்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க, தமிழக அரசுக்கு, மத்தியஅரசு அறிவுறுத்த உள்ளது.

*தமிழகஅதிகாரிகள், மெத்தனத்தால், ஐ.சி.டி., கல்விபடிப்பில் தமிழகம் பின்னடைவை சந்திக்கும்* அபாயம் உள்ளது. *பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் கம்யூ., சயின்ஸ் பாடத்தை, கணிதம், வணிகவியல் பாடங்களுடன்இணைத்து, புதிய பாடப்பிரிவுகளும் துவக்கப்பட்டுஉள்ளன;* அவற்றுக்கு சரியான ஆசியர்கள் இல்லை. இந்த முரண்பாடுகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை கடும்குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

இதுகுறித்து, வேலையில்லாத கணினி பட்ட தாரிஆசிரியர் சங்க மாநில துணைஅமைப் பாளர் *ஏ.முத்துவடிவேல்* கூறுகையில், ''மற்ற மாநிலங்களில், ஆசிரியர்தகுதித் தேர்விலும், ஆசிரியர் நியமனத்தில் *கணினி அறிவியல் பாடங்கள்சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டுமே கணினி அறிவியல்பாடத்தை புறக்கணித்திருப்பது வேதனையாக உள்ளது,''*😂 என்றார்.

*தினமலர்*

NHIS-HOD NUMBERS FOR ALL DEPARTMENTS

புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர் சங்கத்திடம் கருத்து கேட்ட முடிவு

வாய் துர்நாற்றம்

வாழைப்பூ

வாழ்க்கையில் எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்-

விண்வெளி திட்டங்கள் பற்றிய சில தகவல்கள்

விமானத்தில் பயணிக்கும் போது எவற்றையெல்லாம் எடுத்துச் செல்லக்கூடாது

விருந்தோம்பலை உலகிற்கு உரைத்தவன் இன்று

வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டுஇருப்பது திருஷ்டி கயிறு அல்ல

ஜெயித்த வாழ்க்கையும் ஜெயிக்காத வாழ்க்கையும்

11/9/16

பிஎஸ்என்எல் : 75 பைசாவிற்கு 1ஜிபி டேட்டா பெறுவது எப்படி..?

 'பிஎஸ்என்எல் : 75 பைசாவிற்கு 1ஜிபி டேட்டா பெறுவது எப்படி..?


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க
    ஷேர் செய்ய   ட்வீட் செய்ய   ஷேர் செய்ய    கருத்துக்கள்   மெயில்
பிஎஸ்என்எல் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு பிபி249 என்ற மின்னல் வேக பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வெறும் 75 பைசாவில் 1 ஜிபி அளவிலான டேட்டாவை பெற முடியும்.

பிஎஸ்என்எல்-லின் இந்த திட்டத்த்தின் முழு விபரம் என்ன..? இதை எப்படி பெறுவது..? இதை பெற என்ன என்ன ஆவணங்கள் தேவை..? போன்ற தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். உடன் பிஎஸ்என்எல்-ன் பிற பிராட்பேண்ட் திட்டங்கள், 3ஜி / 4ஜி திட்டங்கள், மற்றும் பிஎஸ்என்எல் அன்லிமிடட் திட்டங்கள் சார்ந்த விளக்கப்படமும் தொகுக்கப்பட்டுள்ளது.
பிபி249 திட்டத்தை பெறுவது எப்படி.?
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


வழிமுறை #01
18 வயதுக்கு மேல் நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் சரியான அடையாள அட்டை வேண்டும் (வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை , நிரந்தர கணக்கு எண் அட்டை)

வழிமுறை #02
உங்களுடைய ஆவணங்களை எடுத்துக்கொண்டு அருகாமையில் உள்ள உள்ளூர் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பிராந்திய அலுவலகத்திற்கு சென்று, உங்கள் வீட்டிற்கு பிபி249 திட்டம் பெற வேண்டும் என்று கூறி உங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கவும், பின் அது சரிபார்க்கப்படும்.

வழிமுறை #03
இறுதியாக, 6 மாதங்களுக்கு ரூ.249 என்ற கட்டண தொகையை செலுத்த வேண்டும், ஆக்டிவேஷன் நிகழ 1 வார காலம் ஆகக்கூடும்.

வரம்பற்ற பிபி249 திட்டத்தின் நன்மைகள் :
1. வெறும் ரூ249-ல் 6 மாதங்களுக்கு வரம்பற்ற இணைய தரவு
2. 6 மாதங்கள் இந்தியா மூக்குக்கு வரம்பற்ற இலவச லேண்ட்லைன் மற்றும் மொபைல் அழைப்புகள்.


பிற தகவல்கள் :
1. இந்த திட்டம் செப்டம்பர் 9, 2016-ல் இருந்து கிடைக்கப்பெறும்.
2. முக்கியமாக புதிய பயனர்கள் மட்டும் தான் இந்த திட்டத்தை பெற முடியும்.

பிபி 249 திட்டத்தின் முக்கிய விதிமுறைகளும்,
நிபந்தனைகளும் :
1. இரண்டு எம்பிபிஎஸ் (MBPS) வேகத்தில் வரம்பற்ற 2ஜி தரவு பயன்பட்டை பெறுவீர்கள்.
2. 6 மாதங்களுக்கு பிறகு, நீங்கள் இதே திட்ட நன்மைகளை பெற ரூ.799 பிபி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
3. ஞாயிறன்று மட்டுமே வரம்பற்ற இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
4. திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலாக இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையிலாக மட்டுமே இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

விளக்கப்படம் :
பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்கள்.





விளக்கப்படம் :
பிஎஸ்என்எல் 3ஜி / 4ஜி திட்டங்கள்.





விளக்கப்படம் :
பிஎஸ்என்எல் 3ஜி / 4ஜி திட்டங்கள்.





Share ...

Departmental Examinations - MAY 2016 Results (Updated on 09 September 2016)

Results of Departmental Examinations - MAY 2016
(Updated on 09 September 2016)
Enter Your Register Number :                                                         
 

பள்ளிகளில் பழத்தோட்டம் : தோட்டக்கலை துறைக்கு உத்தரவு

தமிழக அரசு பண்ணைகளில் உருவாகும் மரக்கன்றுகளை மழைக்காலம் துவங்கும் முன் விவசாயிகளிடம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பழத்தோட்டம் அமைக்க குழு ஏற்படுத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது. 


தமிழக அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நாற்று நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு கன்றுகள் வளர்ந்துள்ளன. தோட்டக்கலைத் துறையினர் மழைக் காலம் மற்றும் சீசன் முடிந்த பின், நாற்றுகளை விவசாயிகளிடம் கொடுக்கின்றனர். அதனால் அவற்றை பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது.

பள்ளிகளில் பழத்தோட்டம் : இந்த நிலையில், தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாவது: இந்தாண்டு பழக்கன்றுகளையும், நிழல் தரும் மரக்கன்றுகளையும் அதிகளவு நட வேண்டும். விவசாயிகளிடம் முன்கூட்டியே எவ்வளவு கன்றுகள் தேவை என்பதை அறிந்து செயல்பட வேண்டும். கன்றுகளை மழைக்காலம் துவங்குவதற்குள் வழங்க வேண்டும்.
பள்ளி, கல்லுாரிகளில், பழத்தோட்டம், மூலிகை பண்ணை அமைப்பது; நிழல் தரும் மரங்கள் வளர்ப்பதற்கு தலைமை ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., திட்ட அதிகாரிகள், மாணவ, மாணவியர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மாணவன் தற்கொலை : ஆசிரியை மீது வழக்கு

சேலம், நங்கவள்ளி அடுத்த, வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில், 10ம் வகுப்பு படித்து வந்த, 15 வயது மாணவன், நேற்று முன்தினம் காலை, அவனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். 

விடைத்தாள் மாயமான சம்பவத்தில், பள்ளி ஆசிரியை நாராயணி, மாணவனை திட்டினார்; அதனால் தான், மாணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் என, அவனது தந்தை பழனி சாமி, போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, தற்கொலைக்கு துாண்டியதாக, நாராயணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு செல்ல தடை

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், மாற்று ஆசிரியர் வரும்வரை பிற பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் 6ம் தேதி கலந்தாய்வு தொடங்கி கடந்த வாரம் முடிந்தது. இதில் இடஒதுக்கீடு பெற்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு இடமாறி வருகின்றனர். ஆசிரியர்கள் புதிய இடங்களுக்கு மாற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


ஒரே பள்ளியில் இருந்து அதிக ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால் அவர்களை உடனே மொத்தமாக இடம்மாற்ற செய்ய அனுமதிக்கக்கூடாது. 3ல் 2 பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும். இதுகுறித்து முடிவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்கவேண்டும். தெலுங்கு, மலையாளம், உருது போன்ற பிறமொழி கற்றுத்தரப்படும் அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால், மற்றொரு தமிழ் ஆசிரியர் வரும் வரை அவரை விடுவிக்கக்கூடாது. அனைத்து பள்ளிகளிலும் மாற்று ஆசிரியர்கள் வந்த பின்பே ஆசிரியர்கள் இடமாற அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தெரிவித்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். 

உள்ளாட்சி தேர்தல் பணிகளிலிருந்து தங்களை விடுவிக்க ஆசிரியர்கள்... கோரிக்கை!

உள்ளாட்சி தேர்தலில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதக் கூடிய மாணவர்களுக்கான பாட நேரங்கள் பாதிக்கப்படும் என்பதால், தங்களை அப்பணியிலிருந்து விடுவிக்குமாறும், தேர்தலுக்கென நிரந்தர பணிக் குழுவை உருவாக்கி, செயல்படுத்துமாறும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


தமிழகத்தில், அடுத்த மாதம், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், சப் - கலெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.

லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளுக்கும், சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளுக்கும், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்படுவர். எனவே, சப் - கலெக்டர்களை நியமித்தால் போதுமானதாக இருந்தது.

ஆனால், உள்ளாட்சி தேர்தலில், 12 ஆயிரத்து, 524 ஊராட்சி தலைவர்; 99 ஆயிரத்து, 324 ஊராட்சி வார்டு; 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு; 655 மாவட்ட ஊராட்சி வார்டு; 919 மாநகராட்சி வார்டு; 3,613 நகராட்சி வார்டு; 8,280 பேரூராட்சி வார்டு ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும், தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏராளமானோர் மனு தாக்கல் செய்வர். எனவே, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி வாரியாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும்.

அனைத்திற்கும், வருவாய் துறையினரை நியமிக்க முடியாது என்பதால், பெரும்பாலான 
இடங்களில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்கு, 
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை, ஒவ்வொரு துறை வாரியாக கேட்டு பெற, காலதாமதமாகும். மேலும் துறை அதிகாரிகள், தங்களுக்கு வேண்டிய நபர்களை, தேர்தல் பணிக்கு பரிந்துரை செய்யாமல் விட வாய்ப்பு அதிகம் என்பதால், கருவூலத் துறையில் இருந்து, நேரடியாக அரசு சம்பளம் வாங்குவோர் பட்டியலை பெற்று, அவர்களை தேர்தல் பணிக்கு அழைக்க, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஆனால், ஆசிரியர்கள், 
தங்களை இந்தப் பணிக்கு அழைத்தால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் எனக் 
கூறுகின்றனர்.

பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

காலாண்டு தேர்வு விடுமுறையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால், இந்த நேரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவது, மாணவர்களின் இரண்டு நாட்கள் படிப்பு வீணாகும். 

இதனால், எங்களை தேர்தல் பணியிலிருந்து விடுவித்தல் நலம்.தமிழகத்தில், இரண்டு 
ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஏதாவது, ஒரு தேர்தல் நடந்தபடி இருக்கிறது. தேர்தல் பணிக்கு, ஒவ்வொரு துறையிலிருந்தும் ஆட்களை தேர்வு செய்து பணியில் ஈடுபடுத்துவதை விட, 
குறிப்பிட்ட ஆட்களைக் குழுவாக அமைத்து, நிரந்தரமாக தேர்தல் பணியில் ஈடுபட வைத்தால், பண விரயத்தையும், நேர விரயத்தையும் தவிர்க்கலாம். முறைகேடுகள் நடைபெறா வகையில் கண்காணிக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் பொறுப்பு.இவ்வாறு அவர் கூறினார்.

2 கல்வி அதிகாரிகளின் இடமாறுதல் உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

போலி கடிதத்தை ஆதாரமாக வைத்து கல்வித் துறை அதிகாரிகள் இருவரை இடமாறுதல் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஆர்.கணேசன், கல்வி அதிகாரி யு.ராஜன் ஆகிய 2 பேரையும் பணியிட மாறுதல் செய்து மே மாதத்தில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம் எனும் பெயரில் வந்த கடிதத்தின்பெயரில் பிறப்பித்த இடமாறுதல் உத்தரவு சட்ட விரோதமானது. ஆகவே, இதை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் டி.ஆனந்தி, "குற்றச்சாட்டு கடிதம் மனுதாரர்களுக்கு வரவில்லை. பார்க்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து கூட விசாரிக்காமல், இருவரையும் இடமாறுதல் செய்துள்ளனர்' என்றார்.
இதையடுத்து, கூடுதல் அரசு வழக்குரைஞர், "இதுபோல் எந்தவொரு கடிதத்தையும் லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பவில்லை' என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:-
புகார் கடிதம் வந்தால், உண்மைத் தன்மையைக் கூட ஆராயாமல், குறைந்தபட்சம் விசாரணையும் நடத்தாமல் இடமாறுதல் செய்திருப்பது சட்டப்படி தவறு. போலி கடிதத்தை ஆதாரமாக வைத்து இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருவரும் விடுப்பில் இருந்த நாள்களையும் பணியில் இருந்ததாகக் கருதி அதற்கான பலன்களை வழங்க வேண்டும். போலி கடிதம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் சட்டத்துக்குள்பட்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.