யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/9/16

கிடைத்த பரிசுத்தொகையில் தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் நிதி

ரியோ பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றமாரியப்பன் வரும் 22ம் தேதிசேலம் திரும்புகிறார். மத்திய, மாநில அரசுகள்அறிவித்துள்ள பரிசு தொகையில் இருந்து, தான் படித்த அரசு பள்ளிக்குநிதியுதவி செய்ய அவர் முடிவுசெய்திருப்பதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். பிரேசில்
நாட்டின் ரியோ டி ஜெனிரோநகரில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில், சேலம் மாவட்டம் ஓமலூர் தீவட்டிப்பட்டி அடுத்தபெரியவடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன், உயரம்தாண்டுதல் போட்டியில், 1.89 மீட்டர் தாண்டி தங்கபதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு தமிழக அரசு ரூ.2 கோடியும், மத்திய விளையாட்டு அமைச்சகம்ரூ.75 லட்சமும் பரிசு அறிவித்துள்ளன. மாரியப்பன்பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். ஆரம்ப காலத்தில், மாரியப்பனுக்கு பயிற்சி அளித்தவரான அந்தபள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் கூறியது:

வரும்22ம் தேதி மாரியப்பன் தங்கவேலுசேலம் திரும்புகிறார். அவர் சொந்த ஊர்திரும்புகையில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளோம். மாரியப்பன் தங்கவேலுவுக்கு மத்திய, மாநில அரசுகள்பரிசுகள் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக அவரிடம் பேசினேன். பரிசுபணத்தில் ரூ.20 முதல் ரூ.30 லட்சம் வரை, அவர் படித்தபெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்குஅளிக்க முடிவு செய்துள்ளார். பள்ளியின்தரத்தை உயர்த்தவும், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தவும் இந்த நிதி செலவிடப்படும்என்றார். சொந்த ஊரில் சொந்தவீடு: மாரியப்பன் தங்கவேலுவின் தாய் சரோஜா கூறுகையில், நாங்கள் மிகவும் சிறிய வாடகைவீட்டில் வசித்து வருகிறோம். பரிசாககிடைத்துள்ள பணத்தில், இதே கிராமத்தில் சொந்தவீடு ஒன்றை கட்ட முடிவுசெய்துள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக