யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/9/16

7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கண்டிப்பு !

புதுச்சேரி பிரதேசம் மத்திய அரசின் நேரடிபார்வையில் இருந்து வருகிறது. மத்தியஅரசு அமல்படுத்திய ஏழாவது ஊதிய உயர்வைக்கடந்த மூன்று மாதங்களாக புதுச்சேரிஅரசு கிடப்பில் போட்டுவிட்டது.

இதுதொடர்பாக, புதுச்சேரி அரசு ஊழியர்கள், மத்தியஉள்துறைக்கு புகார்கள் அனுப்பியுள்ளார்கள். செப்டம்பர் 8ஆம் தேதி மத்தியஉள்துறை  அமைச்சகத்திலிருந்து, துணைநிலை ஆளுநருக்கும், தலைமைச்
செயலருக்கும் கடுமையானகண்டிப்புடன் போன்கால் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, துணைநிலைஆளுநர், முதல்வர் நாராயணசாமியை அவசரமாக அழைத்து கலந்துபேசினார். இதையடுத்து, இரவோடு இரவாக அமைச்சரவைக்கூட்டம் நடத்தினார் முதல்வர்.

அதைத் தொடர்ந்து, ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்துவதுசம்பந்தமாக, செப்டம்பர் 9ஆம் தேதி சட்டமன்றக்கூட்டத்தில், ‘ஏழாவது ஊதிய உயர்வுஅமல்படுத்தப்படுகிறது’ என்று அறிவித்தார் முதல்வர்நாராயணசாமி. அந்த தகவல்களைத் தலைமைச்செயலரும், துணைநிலை ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்குதெரியப்படுத்தியுள்ளார்கள். ‘மத்திய அரசு நேரடியாக தலையீட்டுகண்டிப்பு செய்தது இதுதான் முதன்முறை’ என்கிறார்கள் அமைச்சரவையில் உள்ளவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக