யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/9/16

புதிய கல்வி கொள்கையில் முடிவெடுக்கஆசிரியர் சங்கத்திடம் அரசு கருத்து கேட்பு

ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, புதிய கல்விக் கொள்கை குறித்து முடிவு எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்குமான புதிய கல்விக் கொள்கை உருவாக்கி உள்ளது. அதன் வரைவு அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்,

http:/mhrd.gov.in/nep-new என்ற, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. பொதுமக்கள், மாநில அரசுகள், கல்வியாளர்களின் கருத்துக்களை,
nep.edu@gov.in என்ற இணையதளத்தில், செப்., 30க்குள் அனுப்பலாம்.

புதிய கல்விக் கொள்கைக்கு, ஒரு தரப்பில் ஆதரவும், ஒரு தரப்பில் எதிர்ப்பும் உள்ளது. இதில், தமிழக அரசு எந்த மாதிரியான நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து, உயர்மட்ட ஆலோசனையில் வல்லுனர்களின் கருத்துகளை பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியில், ஆசிரியர் சங்கங்களின் கருத்துகளை கேட்க, அரசு முடிவு செய்துள்ளது.'கருத்துகளை மனுக்களாக வழங்கலாம்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார். ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அமைச்சரை நேரில் சந்தித்து, மனு அளித்து வருகின்றனர்

பள்ளிக்கு இனி 'கட்' அடிக்க முடியாது; பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., பறக்கும்

புதுடில்லி : நாடு முழுவதும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால், பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இணையதளம் துவக்கம் டில்லியில் நேற்று, உயரதிகாரிகள் கூறியதாவது:கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் சிலர், ஏதாவதொரு காரணத்துக்காக, பள்ளிக்கு வராமல், 'கட்' அடிப்பதாக புகார்கள் வருகின்றன. பல சந்தர்ப்பங்களில், தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் பற்றி, பெற்றோருக்கு எதுவும் தெரியாமல் போகிறது. ஆசிரியர்களுடன் நேரடியாக பேசும்போது மட்டுமே, குழந்தைகள் பற்றி, பெற்றோருக்கு தெரிய வருகிறது.

இதற்கு தீர்வாக, மாணவர்களின் வருகைப்பதிவு, வீட்டுப்பாடம், வகுப்பு தேர்வு முடிவுகள், உடல் நலன் தொடர்பான தகவல்கள், தேர்வு அட்டவணை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை, இணையம் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம், பெற்றோருக்கு தெரிவிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 'ஷால தர்பண்' என்ற பெயரில் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் நுழைவதற்கான, 'லாக்இன்' குறியீடும், 'பாஸ்வேர்ட்'டும், மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

எஸ்.எம்.எஸ்., அனுப்பும் பணிகள், அடுத்த மாதம் முதல் துவங்கும். காலையில் பள்ளிக்கு வராத மாணவர் பற்றிய தகவல், பெற்றோருக்கு அன்றைய தினமே, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும். கேந்திரிய வித்யாலயாவின் புதிய இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி என்பதை, மின்னணுவியல் முறையில் விளக்கும், 'இ - டுடோரியல்ஸ்' வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

'டிஜிட்டல்'மயமாகிறது:
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த தகவல்கள், 'டிஜிட்டல்' முறையில் மாற்றும் பணிகள் ஏற்கனவே முடிந்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகளால், தனியார் பள்ளிகளை தவிர்த்து, அரசு பள்ளிகளில், குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

12 லட்சம் மாணவர்கள்
நாடு முழுவதும், 1,100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, மத்திய அரசு நடத்தி வருகிறது. இவற்றில், 12 லட்சம் பேர் படிக்கின்றனர். பல மாணவர்கள், பள்ளிகளுக்கு வராமல், அடிக்கடி, 'கட்' அடிப்பது, பெரும் பிரச்னையாக உள்ளது. இதைத் தடுக்கும் நோக்கில், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது

பென்ஷன் திட்ட ஆலோசனை:'ஜேக்டோ'வுக்கு அரசு அழைப்பு

சென்னை;பழைய பென்ஷன் திட்டத்தை தொடர்வது குறித்து முடிவு எடுக்க, ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், வரும், 15ம் தேதி, அரசு பேச்சு நடத்துகிறது.தமிழக அரசு அமல்படுத்திய, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,
பல கட்ட போராட்டங்களை நடத்தினர். புதிய பங்களிப்பு திட்டம் குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசு, சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.இந்தக் குழு, பல அமைப்புகளிடம், வரும், 15ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது. ஆசிரியர் சங்க கூட்டமைப்பான, 'ஜேக்டோ'வில் இருந்து மூன்று நிர்வாகிகள் பங்கேற்குமாறு, நிதித்துறை செயலர் கிருஷ்ணன் சார்பில், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்ட முரண்பாடுகள்: அரசு குழுவிடம் ஆசிரியர்கள் மனு

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட முரண்பாடுகளை நீக்க வேண்டும்' என, அரசு சிறப்புக் குழுவிடம், ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர்.புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆசிரியர் சங்கங்கள், பல போராட்டங்களை நடத்தின. இதையடுத்து, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய, தமிழக அரசின் சார்பில், முதல்வரின் தனிப்பிரிவு செயலரும், திட்டக் குழு முன்னாள் தலைவருமான, சாந்தஷீலா நாயர் தலைமையில், நான்கு பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.


வழங்குவது குறித்துஇந்த குழுவுக்கு, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் மனு அனுப்பியுள்ளார். அதன் விபரம் வருமாறு:
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், பல குறைகள் உள்ளன. மாநில அரசு விரும்பினால் மட்டும், இத்திட்டத்தை அமல்படுத்தலாம் என, ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது; எனவே, முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

புதிய திட்டத்தில், ஓய்வூதியம் எவ்வளவு என்பது சரியாக குறிப்பிடப்படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பிடிக்கப்பட்ட தொகையை, மத்திய அரசின் ஆணையத்திற்கு, தமிழக அரசு இன்னும் செலுத்தவில்லை. குடும்ப உறுப்பினர்களுக்கு, ஓய்வூதியம் வழங்குவது குறித்து, எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

திட்டத்தில் இல்லை:அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலோ, பணியின்போது மரணம் அடைந்தாலோ, அவர்களுக்கு, மூன்று வித பணிக்கொடைகள் உண்டு; புதிய திட்டத்தில், இந்த அம்சம் இல்லை. பழைய திட்டத்தில் உள்ளது போன்று, அகவிலைப்படி உயரும்போது, ஓய்வூதியமும் உயரும் என்ற பலன், புதிய திட்டத்தில் இல்லை. இப்படி பல முரண்பாடுகள் உள்ளதால், திட்டம் குறித்து, ஆசிரியர்களிடம் கருத்து கேட்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு ஆசிரியர்களில் 20.13 % பேருக்கு "டிகிரி' கிடையாது!

பத்தாம் வகுப்பு ஆசிரியர்களில் 20.13 சதவீதம் பேர் பட்டப் படிப்பு (டிகிரி) முடிக்காதவர்கள் என்பது என்.சி.இ.ஆர்.டி. ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
2009 செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான புள்ளி விவரங்களின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த 8-ஆவது ஆய்வு அறிக்கையை என்.சி.இ.ஆர்.டி. (தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்) தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி, 12,99,902 பள்ளிகளில் 10,94,510 பள்ளிகள் கிராமப்புறங்களிலும், 2,05,392 பள்ளிகள் நகர்ப்புறங்களிலும் செயல்படுகின்றன. இவற்றில் 59 சதவீதம் தொடக்கப் பள்ளிகள், 27 சதவீதம் நடுநிலைப் பள்ளிகள், 9 சதவீதம் உயர்நிலைப் பள்ளிகளும், 5 சதவீதம் மேல்நிலைப் பள்ளிகளும் ஆகும்.
மொத்த பள்ளிகளில் 66 சதவீதம் அரசுப் பள்ளிகள், 14 சதவீதம் மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள், 7 சதவீதம் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள், 13 சதவீதம் சுயநிதி தனியார் பள்ளிகள்.
ஆசிரியர்களின் தகுதிகள்: நாட்டில் 67,47,466 ஆசிரியர்கள் உள்ளனர். இது கடந்த 7 ஆவது ஆய்வு அறிக்கை எண்ணிக்கையை விட 22.01 சதவீதம் கூடுதலாகும்.
இவர்களில் தொடக்கப் பள்ளிகளில் 26,41,943 முழு நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 4.7 சதவீதம் பேர் பத்தாம் வகுப்புகூட முடிக்காதவர்கள்.
அதுபோல, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 15,44,322 முழுநேர ஆசிரியர்களில், 83.72 சதவீதம் பேர் மட்டுமே உரிய கல்வித் தகுதியும் பயிற்சியையும் பெற்றவர்கள். 13.06 சதவீதம் ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தகுதியை மட்டும் பெற்றவர்கள்.
உயர்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் முழு நேர ஆசிரியர்கள் 12,67,000 பேர் ஆகும். இவர்களில் 20.13 சதவீதத்தினர் பட்டப் படிப்புகூட முடிக்காதவர்கள். இந்த எண்ணிக்கை 7 ஆவது ஆய்வு அறிக்கையில் 12.03 சதவீதமாக இருந்தது.
அதே போன்று மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 வரை பாடம் நடத்தும் 4,00,695 முழுநேர ஆசிரியர்களில் 24.56 சதவீதத்தினர் பட்டப் படிப்பு அல்லது அதற்கு இணையான தகுதியை மட்டும் பெற்றவர்கள். இதுவும் கடந்த முறையைவிட கூடுதலாகும். 7-ஆவது ஆய்வு அறிக்கையில் இந்த எண்ணிக்கை 18.83 சதவீதமாக இருந்தது.
தமிழகம் இரண்டாமிடம்: பிளஸ் 2 வரையிலான மேல்நிலை வகுப்புகளில் மாணவிகள் சேர்க்கையில் 53.83 சதவீத சேர்க்கையுடன் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. 53.22 சதவீதத்துடன் தமிழகம் இரண்டாம் இடத்திலும், கேரளம் 52.85 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
பத்தாம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சேர்க்கையில் 52.86 சதவீதத்துடன் மேகாலயா முதலிடத்திலும், சிக்கிம் இரண்டாம் இடத்திலும், அஸ்ஸôம் மூன்றாமிடத்திலும் உள்ளன. நடுநிலைப் பள்ளி மாணவிகள் சேர்க்கையைப் பொருத்தவரை சிக்கிம் முதலிடத்திலும், மேகாலயா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
இடைநிற்றல்: பள்ளி இடைநிற்றலில், ஐந்தாம் வகுப்பில் 15.84 சதவீத மாணவர்களும், 16.08 சதவீத மாணவிகளும் படிப்பை பாதியில் கைவிடுகின்றனர். எட்டாம் வகுப்புப் பொருத்தவரை 13.42 சதவீத மாணவர்களும், 14.64 மாணவிகளும் இடைநிற்கின்றனர்.

2.74 லட்சம் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகள் படிக்கும் வசதி!

நாடு முழுவதும் உள்ள 13 லட்சம் பள்ளிகளில் 2,74,445 பள்ளிகளில் மட்டுமே மாற்றுத்திறனாளி மாணவர்களும் படிக்கக் கூடிய வகையில் ஒருங்கிணைந்த கல்வி வசதி உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 8,35,287 மாற்றுத்திறனாளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த மொத்தமுள்ள 60 லட்சம் ஆசிரியர்களில் 80,942 பேர் மட்டுமே ஒருங்கிணைந்த கல்விக்கான பயிற்சியைப் பெற்றிருக்கின்றனர்.
2002 முதல் 2009 வரையிலான கால கட்டத்தில் பள்ளிகளில் சேரும் காது கேளாத, கை, கால்கள் ஊனமுள்ளவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
காது கேளாத மாணவர்களின் எண்ணிக்கை 3.98 சதவீதம் என்ற அளவிலும், கை, கால்கள் ஊனமுற்ற மாணவர்களின் எண்ணிக்கை 68.05 சதவீத அளவிலும் குறைந்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றன. இதே நேரம், பார்வைக் குறைபாடு உடைய மாணவர்களின் எண்ணிக்கை 17.36 சதவீதமாக அதிகரித்துள்ளது.

CPS : பென்ஷன் திட்ட ஆலோசனை:'ஜேக்டோ'வுக்கு அரசு அழைப்பு

TET GENUINENESS : ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மை கோரும் படிவம்

7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கண்டிப்பு !

புதுச்சேரி பிரதேசம் மத்திய அரசின் நேரடிபார்வையில் இருந்து வருகிறது. மத்தியஅரசு அமல்படுத்திய ஏழாவது ஊதிய உயர்வைக்கடந்த மூன்று மாதங்களாக புதுச்சேரிஅரசு கிடப்பில் போட்டுவிட்டது.

இதுதொடர்பாக, புதுச்சேரி அரசு ஊழியர்கள், மத்தியஉள்துறைக்கு புகார்கள் அனுப்பியுள்ளார்கள். செப்டம்பர் 8ஆம் தேதி மத்தியஉள்துறை  அமைச்சகத்திலிருந்து, துணைநிலை ஆளுநருக்கும், தலைமைச்
செயலருக்கும் கடுமையானகண்டிப்புடன் போன்கால் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, துணைநிலைஆளுநர், முதல்வர் நாராயணசாமியை அவசரமாக அழைத்து கலந்துபேசினார். இதையடுத்து, இரவோடு இரவாக அமைச்சரவைக்கூட்டம் நடத்தினார் முதல்வர்.

அதைத் தொடர்ந்து, ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்துவதுசம்பந்தமாக, செப்டம்பர் 9ஆம் தேதி சட்டமன்றக்கூட்டத்தில், ‘ஏழாவது ஊதிய உயர்வுஅமல்படுத்தப்படுகிறது’ என்று அறிவித்தார் முதல்வர்நாராயணசாமி. அந்த தகவல்களைத் தலைமைச்செயலரும், துணைநிலை ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்குதெரியப்படுத்தியுள்ளார்கள். ‘மத்திய அரசு நேரடியாக தலையீட்டுகண்டிப்பு செய்தது இதுதான் முதன்முறை’ என்கிறார்கள் அமைச்சரவையில் உள்ளவர்கள்.

கிடைத்த பரிசுத்தொகையில் தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் நிதி

ரியோ பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றமாரியப்பன் வரும் 22ம் தேதிசேலம் திரும்புகிறார். மத்திய, மாநில அரசுகள்அறிவித்துள்ள பரிசு தொகையில் இருந்து, தான் படித்த அரசு பள்ளிக்குநிதியுதவி செய்ய அவர் முடிவுசெய்திருப்பதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். பிரேசில்
நாட்டின் ரியோ டி ஜெனிரோநகரில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில், சேலம் மாவட்டம் ஓமலூர் தீவட்டிப்பட்டி அடுத்தபெரியவடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன், உயரம்தாண்டுதல் போட்டியில், 1.89 மீட்டர் தாண்டி தங்கபதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு தமிழக அரசு ரூ.2 கோடியும், மத்திய விளையாட்டு அமைச்சகம்ரூ.75 லட்சமும் பரிசு அறிவித்துள்ளன. மாரியப்பன்பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். ஆரம்ப காலத்தில், மாரியப்பனுக்கு பயிற்சி அளித்தவரான அந்தபள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் கூறியது:

வரும்22ம் தேதி மாரியப்பன் தங்கவேலுசேலம் திரும்புகிறார். அவர் சொந்த ஊர்திரும்புகையில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளோம். மாரியப்பன் தங்கவேலுவுக்கு மத்திய, மாநில அரசுகள்பரிசுகள் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக அவரிடம் பேசினேன். பரிசுபணத்தில் ரூ.20 முதல் ரூ.30 லட்சம் வரை, அவர் படித்தபெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்குஅளிக்க முடிவு செய்துள்ளார். பள்ளியின்தரத்தை உயர்த்தவும், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தவும் இந்த நிதி செலவிடப்படும்என்றார். சொந்த ஊரில் சொந்தவீடு: மாரியப்பன் தங்கவேலுவின் தாய் சரோஜா கூறுகையில், நாங்கள் மிகவும் சிறிய வாடகைவீட்டில் வசித்து வருகிறோம். பரிசாககிடைத்துள்ள பணத்தில், இதே கிராமத்தில் சொந்தவீடு ஒன்றை கட்ட முடிவுசெய்துள்ளோம் என்றார்.

கணினி அறிவியலுக்கு அங்கீகாரம் இல்லை:குளறுபடியால் பட்டதாரிகள் கண்ணீர்

*'ஆன்லைன்' வகுப்புகள் அதிகரிக்கும் நிலையில்*, கணினி ஆசிரியர்களை நியமிக்காமலும், *கணினி அறிவியல் பட்டத்திற்குஅங்கீகாரம் வழங்காமலும்*💥 பள்ளிக்கல்வியில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

*💥தமிழக அரசுபள்ளிகளில், 1992 முதல், பிளஸ் 1 மற்றும்பிளஸ் 2வில்,
கணினி அறிவியல்படிப்பு அறிமுகமானது. கணினி பற்றிய அடிப்படை தகவல்களை மட்டும் அறிந்தோர், பட்டப்படிப்பு படிக்காவிட்டாலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின், கணினி படிப்புமுடிக்காதோர், 2008ல் நீக்கப்பட்டனர்.*

💥பல்கலைகளில், 1992 முதல், கணினி அறிவியல் பாடத்தில், பி.எஸ்சி.,
பிறகு பி.எட்., படிப்புகள்துவங்கப்பட்டன. இது வரை, *40 ஆயிரம்பேர், கணினி அறிவியலில் பி.எஸ்சி., - பி.எட்., பட்டமும்; 20 ஆயிரம் பேர், எம்.எஸ்சி., - எம்.எட்., பட்டமும் முடித்துள்ளனர்.*💥 இவர்களுக்கு, *📚தமிழகபள்ளிகளில்பல ஆயிரம் காலிப் பணியிடங்கள்இருந்தும் பணி வாய்ப்புகள் வழங்கவில்லை😍*.

வேலை வாய்ப்புக்கு ஆட்களை தேர்வு செய்யும்தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், *கணினிஅறிவியல் படிப்பை இன்னும் அங்கீகரிக்கவில்லை.* பள்ளிக்கல்வி துறையினர், மெத்தன மாக உள்ளனர்.

ஆன்லைன்படிப்புக்கும், ஐ.சி.டி., எனப்படும் கணினி வழி தொழில்நுட்பக்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க, தமிழக அரசுக்கு, மத்தியஅரசு அறிவுறுத்த உள்ளது.

*தமிழகஅதிகாரிகள், மெத்தனத்தால், ஐ.சி.டி., கல்விபடிப்பில் தமிழகம் பின்னடைவை சந்திக்கும்* அபாயம் உள்ளது. *பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் கம்யூ., சயின்ஸ் பாடத்தை, கணிதம், வணிகவியல் பாடங்களுடன்இணைத்து, புதிய பாடப்பிரிவுகளும் துவக்கப்பட்டுஉள்ளன;* அவற்றுக்கு சரியான ஆசியர்கள் இல்லை. இந்த முரண்பாடுகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை கடும்குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

இதுகுறித்து, வேலையில்லாத கணினி பட்ட தாரிஆசிரியர் சங்க மாநில துணைஅமைப் பாளர் *ஏ.முத்துவடிவேல்* கூறுகையில், ''மற்ற மாநிலங்களில், ஆசிரியர்தகுதித் தேர்விலும், ஆசிரியர் நியமனத்தில் *கணினி அறிவியல் பாடங்கள்சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டுமே கணினி அறிவியல்பாடத்தை புறக்கணித்திருப்பது வேதனையாக உள்ளது,''*😂 என்றார்.

*தினமலர்*

NHIS-HOD NUMBERS FOR ALL DEPARTMENTS

புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர் சங்கத்திடம் கருத்து கேட்ட முடிவு

வாய் துர்நாற்றம்

வாழைப்பூ

வாழ்க்கையில் எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்-

விண்வெளி திட்டங்கள் பற்றிய சில தகவல்கள்

விமானத்தில் பயணிக்கும் போது எவற்றையெல்லாம் எடுத்துச் செல்லக்கூடாது

விருந்தோம்பலை உலகிற்கு உரைத்தவன் இன்று

வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டுஇருப்பது திருஷ்டி கயிறு அல்ல

ஜெயித்த வாழ்க்கையும் ஜெயிக்காத வாழ்க்கையும்