யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/9/16

ஊராட்சிகளில் போட்டியிடுவோர் எவ்வளவு செலவிடலாம்

சென்னை: ஊராட்சிகளில் போட்டியிடும், வேட்பாளர்களின் செலவு உச்சவரம்பு விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 1.70 லட்சம் ரூபாய்; ஊராட்சி

ஒன்றிய உறுப்பினர், 85 ஆயிரம் ரூபாய் செலவு செய்யலாம். மேலும், ஊராட்சி தலைவர், 34 ஆயிரம்; ஊராட்சி வார்டு உறுப்பினர், 9,000 ரூபாய் வரை செலவு செய்யலாம். இதை, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

விளை நிலங்களை வீட்டு மனைகளாக்க தடை: நீதிமன்ற உத்தரவை மாற்ற முடியாது - தலைமை நீதிபதியை கொண்ட அமர்வு மறுப்பு.

விளை நிலங்களை வீட்டு மனைகளாக்க தடை: நீதிமன்ற உத்தரவை மாற்ற முடியாது - தலைமை நீதிபதியை கொண்ட அமர்வு மறுப்பு.
விளை நிலங்களை அங்கீகாரமில் லாத வீட்டு மனைகளாக மாற்றக்கூடாது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மறுப்பு 
தெரிவித்தது.தமிழகம் முழுவதும் உள்ள விளை நிலங்களைஅங்கீகார மில்லாத வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்தால் அந்த மனைகளையோ, அவற்றில் உள்ள கட்டிடங்களையோ பத்திர மாக பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பு உத்தர விட்டது.
அதன்படி, சென்னையில் பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சிஎம்டிஏ), பிற மாவட்டங்களில் நகர ஊரமைப்பு இயக்குநரகத்தின் (டிடிசிபி) ஒப்புதல் பெற்றால் மட்டுமே மனை இடங்களைப் பதிவு செய்ய முடியும் என பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், அகில இந்திய ரியல் எஸ்டேட் அதிபர்கள் நலச் சங்கத்தின் தலைவர் கே.குல சேகரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:எங்களது சங்கத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர் களாக உள்ளனர். கடந்த 9-ம் தேதி, விளைநிலங்களில் அங்கீகாரமில்லாமல் உள்ள வீட்டுமனைகளை பதிவு செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு ஸ்தம்பித்துப் போய் உள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு செய்ய மறுப்பு

இந்த உத்தரவை ஒவ்வொரு சார் பதிவாளரும் ஒவ்வொருவிதமாக எடுத்துக்கொண்டு கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன்பு வாங்கிய மனைகளைக்கூட தற்போது பதிய மறுக்கின்றனர். லட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக வீட்டுமனைகளை வாங்கி அதற்கு பட்டா, சிட்டா அடங்கல் பெற்று வீட்டு வரிகூட செலுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது இந்த உத்தரவால் மனைகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு மேலாக தரிசாக கிடக்கும் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றிக்கொள்ள எந்தத் தடையும் இல்லை என விதிகள் உள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் சொந்தமாக வீட்டு மனை வாங்கி அதில் குடியிருக்க வீடு கட்ட வேண்டும் என்பது கனவு. பலர் தங்களின் எதிர்காலத்தைக் கருத் தில் கொண்டு வீட்டு மனைகளில் முதலீடு செய்கின்றனர். வெள்ள அபாயம் மற்றும் விளை நிலங்களைக் காக்க வேண்டு மென்பதற்காக மட்டுமே தற் போது உயர் நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவைப்பிறப் பித்துள்ளது.எனவே இந்த வழக்கில் எங்களையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும். கடந்த 9-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைத்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கோரி யிருந்தார்.

முன்னதாக இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசா ரிக்கக் கோரி மனுதாரரின் வழக்கறிஞர் ஜீனசேனன், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகி யோரைக் கொண்ட முதல் அமர்வில் முறையிட்டார். அதற்கு நீதிபதிகள், ‘‘இதுதொடர்பாக எந்த உத்தரவும் தற்போது பிறப் பிக்க முடியாது. ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவையும் மாற்றி யமைக்க முடியாது. இந்தப் பிரச்சினை குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இந்த மனு மீதான விசாரணை பிரதான வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்படும்’’ எனக் கூறி அக்டோபர் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

இ - சேவை மையங்களில் இனி வரி செலுத்தலாம்!

இ - சேவை மையங்களில் இனி வரி செலுத்தலாம்!
சென்னை உள்ளிட்ட, 12 மாநகராட்சிகள் மற்றும், 51 நகராட்சிகளுக்கான வரிகளை, அரசின், இ - சேவை மையங்களில் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இ - சேவை மையங்களில், 'ஆன்லைன்' மூலமாக, அரசின் சேவைகள் வழங்கப்படுகின்றன.
அவற்றுடன், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வசிப்பவர்களுக்காக, புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது.

அதன்படி, அவர்கள், தங்களது சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி போன்றவற்றை, இ - சேவை மையங்கள் மூலமாக செலுத்தலாம். இந்த சேவையை பெற, குறைந்த அளவிலான சேவை கட்டணம் உண்டு. தற்போது, 12 மாநகராட்சி மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட, 51 நகராட்சிகளில், ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன; அதனால், அங்கு வசிப்போர் மட்டும், இவ்வசதியை பெறலாம். மற்ற நகராட்சிகளில், ஆவணப்படுத்தும் பணி நிறைவடைந்ததும், இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம்

..எஸ்அதிகாரிகள்பேரை பணியிட மாற்றம் செய்துதமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சென்னைமாநகராட்சி துணை ஆணையராக அன்புச்செல்வம்வருவாய் மற்றும் நிதி )  நியமனம்செய்யப்பட்டுள்ளார்.

சென்னைமாநகராட்சி சுகாதார துணை ஆணையராகஎம்.விஜயலட்சுமி
நியமனம் செய்யப் பட்டுள்ளார்.  


தூத்துக்குடிமாநகராட்சி ஆணையராக கே.ராஜாமணிநியமிக்கப்பட்டுள்ளார்

CPS- புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மற்றும் 6-வது ஊதிய குழு பாதிப்பில் உள்ள ஆசிரியர்களே -குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களே தயவு செய்து இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்

1.       ரூ. 5200 + 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கும்,
2.       1.86 பெருக்கத்துடன் ரூ.2800/- பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கும்,
3.       CPS வேண்டாம்; OPS வாழ்வூதியம் மட்டுமே எங்களுக்கு உயிர்நாடியாய்வேண்டுமென்று உறுதியாய் நிற்கும் அனைத்துவகை சுமார் 55 ஆயிரம்
ஆசிரியர்களுக்கும்,

                                                - “இயக்கங்கள் கடந்து, கூட்டு நடவடிக்கைக்குழுக்கள் கடந்து, முகம் & முகவரிகடந்து; ஏன் அனைத்து மாச்சரியங்களும்கடந்து” – மிகவும் ஆக்கப்பூர்வமாக பாதிக்கப்பட்டநீங்கள் மட்டும் ஓர் அணியில்இணைந்து நின்று வெற்றிவாகை சூடிட
மனதார வாழ்த்தி வணங்குகிறேன்.
  - உங்கள் வாய்மை வழிகாட்டி,
 ம. சேவியர் ஜோசப் கென்னடி,
 துணைப் பொதுச் செயலாளர்,
  தமிழக ஆசிரியர் மன்றம்.
                                                                                 

                                    உங்களுடைய வலியும், வேதனையும், சகல சௌகரிய ஓய்வூதியத்தலைவர்களுக்கோ (அல்லது) உங்கள் பிரதானமாய்முன்னிறுத்தி உங்களை வைத்துப் போராடிஉங்களுக்கு ரூ.750/- ம், தங்களுக்கு ரூ.1100/- முதல் ரூ.1300/- (அதாவது GP ரூ.5400/- மற்றும் ரூ.5700/-) பெற்றுக்கொண்ட தலைவர்களுக்கோ ஒருவேலை புரிந்தாலும்கூட,
·         அவர்களின் ஈகோ மட்டும், ஒருநாளும்அவர்களை விட்டுப் போகப்போவதும் இல்லை.

·         அனைவரும் ஒரு குடையின்கீழ் நின்றுபிரச்சனை தீரும்வரை, தொடர்ந்து போராடி வெல்லப்போவதும் இல்லை. இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அரசா காரணம்?

·         உங்கள் வலியும், வேதனையும்நீங்கப் போவதும் இல்லை.
·         இதனால் அவர்களுக்கு ஒருகஷ்டமும் இல்லை, நஷ்டமும் இல்லை. மாறாக இலாபமே !

·         இந்த நிதர்சனத்தை நீங்கள்அறிவார்த்தமாய் உணரச் செய்யவே இம்மடல்என்று எண்ண வேண்டாம். அதையும்தாண்டி சரியான வழிகாட்டும் செயலேயாகும்!

“பாதிக்கப்பட்டமூன்று பிரிவு ஆசிரியர்களையும் பார்த்துநான் மிகவும் வெளிப்படையாக சிலவற்றைக்கேட்டாக வேண்டும்.”

1.     மாநில அரசின் அனைத்துவகை ஊதிய விகித நிலையினருக்கும்(ஏன் இன்னும் சிலருக்கு உயர்த்திக்கூடவழங்கிய நிலையில்) மத்திய அரசு ஊழியர்களுக்குஇணையான ஊதிய விகிதம் வழங்கிவிட்டுஉங்களுக்கு மட்டும் வழங்காதது;
                                      i.        சமூகநீதிக்கு எதிரானது
                                     ii.        நியாயமற்றசெயல்
- என்றுஉண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?

2.  அப்படியானால், செய் அல்லது செத்துமடிஎன்னும் தத்துவத்தின் அடிப்படையில் நான் எனக்கெதிரான இந்தஅநீதியைக் களையாமல் ஓயமாட்டேன் என்று மிகவும் வாய்மையாய்உறுதியேற்கிறீர்களா?

3. பாராளுமன்றமும், சட்டமன்றமும் தங்களுக்கு OPS வைத்துக் கொண்டு எங்களுக்கு CPS-ஐகொடுக்காமல் இரத்து செய்வது,
                                      i.        தவறு
                                     ii.        அநீதி
                                    iii.        எந்தவிதியின் கீழும் நியாயப்படுத்த முடியாது.
                                    iv.        OPS என்பதுஎனது வாழ்வுரிமை,
                                     v.        அதுகொடுபடா ஊதியம்,அதை அடையாமல்நான் ஓயமாட்டேன்
-       என்று உறுதியாய் சபதம்ஏற்கிறீர்களா?

4.காலத்தே, அறவழி போராடி, குறைந்தபட்சம் முக்கியஅரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் தேர்தல் அறிக்கையில்,

                          i.   மத்திய அரசுஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசுஊழியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டைச்சரிசெய்வோம்,

                                                   ii.        CPS – ஐ இரத்து செய்து, OPS-ஐ அமல்படுத்துவோம்- என்ற வாக்குறுதி இடம்பெறவில்லையெனில்நாம் ஆட்சி அமைப்பது கடினம்.- என்ற நிலையை ஏற்படுத்தாமல் விடமாட்டேன்என்று உறுதி கொண்ட நெஞ்சினராய்இருக்கிறீர்களா? அப்படியானால், இந்த வாய்மை வழிகாட்டிசொல்வதை மனதில் போட்டு வீருநடைபோடத் தவறாதீர்கள். ஆம், முதலில் “Rescue Equality Justice” – என்ற சமூக வலைதளக்குழுவை உருவாக்குங்கள்.
5.     அதில் பாதிக்கப்பட்ட மேற்சொன்னமூன்று பிரிவினர் சுமார் 55000 பேரை மட்டும் ஒன்றிணையுங்கள். நான் உட்பட, பாதிக்கப்படாத எவரையும்கட்டாயம் உள்ளே சேர்க்காது விலக்கிவையுங்கள்.வேண்டுமானால், வெளியில் இருந்து வழிகாட்ட மட்டும்சொல்லுங்கள்.
6. காலாண்டு  விடுமுறையைப்போராட்ட நாளாகத் தேர்ந்தெடுங்கள். முற்றுகை, மறியல், வேலைநிறுத்தம் என்று யாருக்கும் இடையூறுசெய்யாது அரசு உள்ளிட்ட அனைவரின்கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓரிடத்தில் 55000 பேரையும்தொடர்ச்சியாகப் பல நாட்கள் கூட்டுவதுமட்டுமே இலக்காக இருக்கட்டும்.

7.     இடம், சென்னைக் கடற்கரையைமக்கள் கடற்கரையாக மாற்றுவதாகவோ அல்லது  திண்டுக்கல்மலைக் கோட்டையை மக்கள் கோட்டையாக மாற்றுவதாகவோஅல்லது சிறை நிரப்புவதற்குப் பதிலாகஸ்டேடியத்தை நிரப்புவதாகவோ இருக்கட்டும்.

8.     அங்கே, வாயில் கருப்புத்துணிகட்டியபடி பதாகைகளை ஏந்தி ஒரு மவுனப்புரட்சியை மட்டும் நிகழ்த்துவதாக அமையட்டும்.

9.     அரசு உட்பட, யார்யாரெல்லாம் இந்தக் வேள்வியின் நியாயத்தைஉணர்கிறார்களோ அவர்கள் யாவரும் வாழ்த்துரைவாருங்கள் என்று பொது அழைப்புமட்டும் விடுங்கள்.
10.  
                      i.        இப்போராட்டத்தால், மாணவர்கிளின்கல்வி பாதிக்கப் போவதில்லை.
                     ii.        அரசு எந்திரம்முடங்கப் போவது இல்லை.
                    iii.        பொதுமக்களுக்குஇடையூறு இல்லை.

ஆகவே, இப்போராட்டம் அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் ! நிச்சயம் வெற்றிபெறும் !!

Ø  செய்வீர்களா ? அல்லது
Ø  அறுப்பவன் பின்னால் செல்லும் ஆடுபோல் இருப்பீர்களா ? அல்லது
Ø  “Satisfied with what you have” என்று வசனம் பேசப் போகிறீர்களா?
சிந்திப்பீர்! செயல்படுவீர் !!
                        - இவ்வாறு எழுதுவது விரக்தியின் விளிம்பிநின்று என எண்ண வேண்டாம். நம்பிக்கை ஒளிக்கீற்றிநின்றேயாம் !!
நன்றி!
                                                                                                            இவண்,
                                      ம. சேவியர் ஜோசப் கென்னடி.
                                      துணைப்பொதுச் செயலாளர்,

                                  தமிழக ஆசிரியர் மன்றம்.திண்டுக்கல்

JACTTA NEWS- CPS வல்லுந‌ர் குழுவிடம் ஜாக்டா அளித்த மனு

ஓய்வூதியத்தை வழக்காடிப் பெற்றிட இயலுமா?*

📮நாடு முழுவதும்நிலுவையில் உள்ள குடிமையியல் & குற்றவியல்வழக்குகள் *2.7 கோடி*
📮10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளவழக்குகள் *20 லட்சம்*
📮5 - 10 ஆண்டுகள் நிலுவை - *35 லட்சம்*

📮2 - 5 ஆண்டுகள் நிலுவை - *59 லட்சம்*
📮2 ஆண்டுகளுக்கும் குறைவாகநிலுவையில் உள்ளவை *82 லட்சம்*
*📮மூத்த குடிமக்கள்சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5,84,273*
_ம.பி மற்றும் டெல்லிமாநில விவரங்கள் தேசிய தகவல் தொகுப்புக்குமாற்றப்பட்டு வந்ததால் அந்த விவரங்கள் இதில்இடம்பெறவில்லை. இது சென்ற ஆண்டுநிலை மட்டுமே_ (தி இந்து)
*📮ஏப்ரல் (2016) = 2.18 கோடி.* (இந்தியன்எக்ஸ்பிரஸ்)
மேற்கண்டதரவுகளின் படி மட்டுமல்ல, நீங்கள்நாள்தோறும் கேள்விப்படும் அரசு சார் வழக்குகளிலும், தீர்ப்பு அரசின் கொள்கை முடிவில்தலையிட முடியாது என்றோ; நீதிமன்றத் தீர்ப்பைஅரசே புறம் தள்ளுவதாகவோ தான்இருக்கும் (சாலைப்பணியாளர், மக்கள் நலப் பணியாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் வழக்கு போன்று). இவைஎல்லாவற்றையும் தாண்டி அத்தி பூத்தாற்போல்சில தீர்ப்புகள் நடைமுறைப் படுத்தப்டுகிறது என்பதும் மறுப்பதற்கில்லை.
ஆனால், இன்றைய சூழலில் *நாம் துய்த்து வரும்பலன்கள், 100% நமது முன்னவர்களின் வலுவானபோராட்டங்களின் பயனே!* நமக்கான முறையானஉரிமை தொடர்பான முன்மொழிவுகள், மீட்புகள் உள்ளிட்ட அனைத்துமே போராட்ட வீச்சின் அடிப்படையில்ஆட்சியாளர்களிடம் இருந்து பெறப்பட்டவையே.
எனவே, *கோடிக்கைகள் ஒன்றிணைந்தால் தான் கோரிக்கைகள் வென்றிடமுடியும்.*
ஆனால், ஓய்வூதியப் போராட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் பங்கெடுப்பு மிகக் குறைவாகவே இருந்துவந்துள்ளது. இந்நிலை மாற,
*உரிமைபறிபோன வழியையும்*
*உடைமைபலியான வலியையும்*
*உற்றவர்உணர்ந்தாக வேண்டும்.*
எப்படியெனில்,
_வாசித்தல், அறிய வைக்கும்!_
_அறிதல், தெளிய வைக்கும்!_
_தெளிதல், உணர வைக்கும்!_
_ உணரல், வினவ வைக்கும்!_
_வினவல், கூட வைக்கும்!_
_கூடல், கோர வைக்கும்!_
_கூடிக்கோரல், அதிர வைக்கும்!_
_அதிர்வுறலே, கொடுக்க வைக்கும்!_
_எனவே, *பறித்திட்ட ஓய்வூதியத்தை*க்_
_கொடுக்கவைக்கும் நோக்கில்,_
_*கானலானஓய்வூதியம்* நூலினை_
_வாசிப்போம்! *வாசிக்க வைப்போம்!!*_

*66 பக்கங்களுக்கானஅச்சுக்கூலி ரூ.25/-*

23/9/16

அனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம்விடுப்பு: ராஜ்யசபாவில் மகப்பேறு மசோதா நிறைவேற்றம் !

அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் கர்ப்பிணிபெண்களுக்கு 6 மாதம் விடுப்பளிக்க வகை செய்யும் மகப்பேறு மசோதா இன்று ராஜ்யசபாவில் ஒருமனதாக நிறைவேறியது.

தனியார் நிறுவனங்கள் உள்பட அனைத்துத் துறைகளிலும்பணியாற்றும் பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும்3 மாத மகப்பேறு விடுப்பை 6 மாதங்களாக அதிகரிக்க வகை செய்யும் மகப்பேறு ஆதாய சட்டத் திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.


இதன்படி,அனைத்துத் துறையில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் மகப்பேறு கால விடுப்பு கிடைக்கும்50க்கும் மேற்பட்ட ஊழியர் பணியாற்றும் நிறுவனத்தில் குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும்பச்சிளம் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் தாய்மார்களுக்கு 3 மாதம் விடுப்பு கிடைக்கும்மசோதா நிறைவேறியதால் 10.80 லட்சம் பேர் பயன்பெறுவர்.

10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, செப்., 28ல், துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:செப்., 28ல், தமிழ் முதல் தாள்; 29ல், தமிழ் இரண்டாம் தாள்; 30ல், ஆங்கிலம் முதல் தாள்; அக்., 1ல், ஆங்கிலம் இரண்டாம் தாள்; அக்., 3ல், கணிதம்; அக்., 4ல், அறிவியல்; அக்., 5ல், சமூக அறிவியல் மற்றும் அக்., 6ல், விருப்ப மொழி பாடத் தேர்வுகள் நடக்கும்.
காலை, 9:15 மணி முதல், 9:25 வரை வினாத்தாள் படிக்க நேரம் வழங்கப்படும். ஐந்து நிமிடங்களில், தேர்வு எழுதுவோரின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, 9:30 மணி முதல், நண்பகல், 12:00 வரை தேர்வு நடக்கும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா?

ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல், அமல்படுத்தப்பட்டது. இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என, அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.


இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான நிபுணர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. இக்குழு, தலைமைச் செயலகத்தில், இம்மாதம், 15, 16ல், கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. நேற்று மூன்றாவது நாளாக, கருத்து கேட்பு கூட்டம் தொடர்ந்தது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, ஜாக்டா, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் உட்பட, பல சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, நிபுணர் குழுவிடம் மனுவும் அளித்தனர்.

இது குறித்து, ஜாக்டா ஒருங்கிணைப்பாளர் இளமாறன் கூறியதாவது:
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின், இதுவரை, ஓய்வூதியம் வழங்க விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்திற்கும் உத்தரவாதம் இல்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மன உளைச்சல் இன்றி வாழ, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Cumulative Register From 1St STD To 8th STD மாணவர் திரள் பதிவேடு

புத்தகப் பையால் ஆபத்து: சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

மாணவர்கள் தோளில் தொங்கும்படி, புத்தகப் பைகளை கொண்டு சென்றால், முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்படும்' என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவுரை:

அதிக சுமை உள்ள பள்ளி புத்தகப் பைகளை, நீண்டகாலம் மாணவர்கள் சுமப்பது, அவர்களின் உடல் நலனில் எதிர் விளைவை ஏற்படுத்தும். இளம் குழந்தைகள் வளர வேண்டிய நிலையில், அவர்களுக்கு, முதுகு தண்டுவடத்தில் வலி, தசை வலி, தோள் வலி, மயக்கம் உட்பட, பல பிரச்னைகளை ஏற்படுத்தும்
முடிந்த அளவுக்கு அன்றைய வகுப்புக்கான, பாடப் புத்தகங்களை மட்டுமே மாணவர்கள் கொண்டு செல்ல வேண்டும். பள்ளி பயன்பாட்டு புத்தகம் மற்றும் நோட்டுகளை, பள்ளியிலேயே வைத்துக் கொள்வது நல்லது
பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு எடை குறைந்த, இரு தோள்களிலும் மாட்டக்கூடிய, பெல்ட் உடைய பைகளையே வாங்க வேண்டும்
பள்ளிக் குழந்தைகள், தங்களின் புத்தகப் பைகளில், விளையாட்டு பொருட்கள் மற்றும் தாங்கள் விரும்பும் பல பொருட்களை வைத்துக் கொள்வது வழக்கம். அதனால், எடை கூடும் என்பதால், பெற்றோர், தினமும் சோதிக்க வேண்டும்
குழந்தைகளின் தோளில், பைகள் இறுக்கமாக இருக்க வேண்டும்; அங்கும், இங்கும் தொங்கினால், தோள்களை பாதிக்கும்.இவ்வாறு அறிவுரையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு கூடுதலாக 1,000 எம்.பி.பி.எஸ்., இடம்

சென்னை: தமிழகத்தில், ஏழு சுய நிதி கல்லுாரிகளில், 1,000 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளின் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான, மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூனில் நடந்தது. அரசு கல்லுாரிகளில், 2,379 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; அரசு பல் மருத்துவக் கல்லுாரிகளில், 85; சுயநிதி கல்லுாரிகளில், 470 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின.

ஒதுக்கீடு பெற்ற, 143 பேர், இன்ஜினியரிங் உட்பட, பிற படிப்புகளில் சேர்ந்ததால், அந்த இடங்கள் காலி இடங்களாக மாறின. அவற்றுக்கும், சுயநிதி கல்லுாரிகளின், 970 பி.டி.எஸ்., இடங்களுக்கும் சேர்த்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, ஏழு சுயநிதி கல்லுாரிகளில், 1,000 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது; இதில், மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கு, 593 இடங்கள் கிடைத்துள்ளன. மேலும், மூன்று சுயநிதி கல்லுாரிகளில், பி.டி.எஸ்., படிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளதால், மாநில ஒதுக்கீட்டிற்கு, 275 பி.டி.எஸ்., இடங்களும் கிடைத்துள்ளன. இதையடுத்து, கலந்தாய்வில் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன; வரும், 24ம் தேதி வரை கலந்தாய்வு நடக்க உள்ளது. கூடுதலாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் கிடைத்துள்ளது, காத்திருந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியை
அளித்துள்ளது.

வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

தேனி:உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தும் வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தவிர்த்து ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

இதனை பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை அலுவலர் மற்றும் 6 பேரை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. அதன்படி அடையாளம் காணும் அலுவலர், விரலில் மை வைக்கும் அலுவலர், ஊராட்சி தலைவருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், வாக்குப்பெட்டி பொறுப்பாளர் என ஆறுபேர் நியமிக்கப்பட உள்ளனர். சில ஊராட்சிகளில் பெரிய வார்டில் இரண்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதுபோன்ற வார்டு வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு அலுவலருடன் 8 பேர் பணியாற்றுவர். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதால், அந்த வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், அடையாளம் காணும் அலுவலர், விரல் மை வைக்கும் அலுவலர், கன்ட்ரோல் யூனிட்
அலுவலர் என 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். வாக்குச்சாவடி அலுவலர்களாக
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளது.

உள்ளூரில் தேர்தல் பொருட்கள் கொள்முதலில் புதிய நடைமுறை

சிவகங்கை: உள்ளூரில் தேர்தல் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, சில விதிறைகளை கடைபிடிக்க வேண்டுமென, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு பெறுவதில் இருந்து, ஓட்டுப்பதிவு முடியும் வரை, 72 வகையான பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் படிவங்கள், உறைகள் போன்றவை மாநில தேர்தல் ஆணையமே அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் ஜெம் கிளிப், குண்டூசி, பிளேடு, சணல் கயிறு, துணி, மை குப்பி வைக்கும் கோப்பை, தள்ளுகோல், தாள், சுவரொட்டி, முத்திரை மை என, 40க்கும் மேற்பட்ட பொருட்களை உள்ளூரில் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில் கடந்த காலங்களில் விலை நிர்ணயத்தில் மாறுபாடுகள் காணப்பட்டன. இதனால் அவற்றை கொள்முதல் செய்வதில் சில நடைமுறைகளை கடைபிடிக்க தேர்தல் நடத்தும் அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளது. கொள்முதல் செய்யும் பொருட்களின் அதிகபட்ச விலையை கலெக்டர், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், மாவட்ட கருவூல அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ஆகியோர் அடங்கிய குழுக்களே நிர்ணயிக்க வேண்டும். இந்த தொகைக்கு மிகாமல் தேர்தல் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்; இதில் எந்த குழப்பமும் இருக்க கூடாது என, ஆணையம் தெரிவித்துள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை

* மாணவர்கள் உணவு உண்ணும் முன், இரு கைகளையும் சோப்பால் சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

* வகுப்பறை மற்றும் கழிவறையை சுற்றியோ, பள்ளி வளாகத்திலோ நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்; குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்
* கொசு உற்பத்தியாகும் குப்பை, பொருட்களை சேர்க்காமல், பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
* மாணவர்கள், காய்ச்சி வடிகட்டிய குடிநீரையே பருக அறிவுறுத்த வேண்டும்
* காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தாவுடன், ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மூன்று வகையான வாய்ப்புகள்

ராமநாதபுரம்: உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க, மூன்று வகையான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவு: உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் செப்.,19ல் வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்குபின் செப்.,26ல் வாக்காளர் துணை பட்டியல் வெளியிடப் படுகிறது. இதில் சேர்க்கப்பட்டவர்களும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும்.
மேலும், கடந்த சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் ஆர்.டி.ஓ., அலுவலகங் களுக்கு செல்ல வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பித்தால் போதும். பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் பெயர் வார்டு மாறி இடம்பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம். புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் மட்டும் ஆர்.டி.ஓ., மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா : சிறப்பு குழு 3ம் நாளாக கருத்துக்கேட்பு

ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல், அமல்படுத்தப்பட்டது. இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என, அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான நிபுணர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. இக்குழு, தலைமைச் செயலகத்தில், இம்மாதம், 15, 16ல், கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. நேற்று மூன்றாவது நாளாக, கருத்து கேட்பு கூட்டம் தொடர்ந்தது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, ஜாக்டா, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் உட்பட, பல சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, நிபுணர் குழுவிடம் மனுவும் அளித்தனர்.
இது குறித்து, ஜாக்டா ஒருங்கிணைப்பாளர் இளமாறன் கூறியதாவது:
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின், இதுவரை, ஓய்வூதியம் வழங்க விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்திற்கும் உத்தரவாதம் இல்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மன உளைச்சல் இன்றி வாழ, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, மனு கொடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி

அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை (மே, டிசம்பர்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 2-வது துறைத்தேர்வு டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அல்லது நாளை வெளியாகும்.

உள்ளாட்சித் தேர்தல் தேதி, இன்று அல்லது நாளை வெளியாக உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் அக்., 24 ல் முடிகிறது. அதற்குள் தேர்தலை நடத்தி முடித்து புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். முதற்கட்டமாக செப்.,17 மற்றும் செப்., 19 ல் வார்டு வாரியாக பிரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன.
மேலும் ஊரகம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் 50 சதவீதம் பெண்கள், இனசுழற்சி பட்டியல், சென்னையில் சில தினங்களாக அச்சடிக்கப்பட்டன.

பூர்வாங்க பணிகள் முடிந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்று அல்லது நாளை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், இன்று காலை முக்கிய ஆலோசனை நடக்கிறது. மாநில தேர்தல் கமிஷனர் சீதாராமன், செயலர் ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் முடிவு எடுக்கப்பட்டு, தேதி அறிவிக்கப்படும்.