யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/10/16

சிறுபான்மை மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்'

சென்னை: மவுலானா ஆசாத் நினைவு கல்வி உதவித்தொகைக்கு, 10ம் வகுப்பு முடித்த, சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய சிறுபான்மையினர் நலத்துறை, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
மவுலானா ஆசாத் நினைவு உதவித்தொகை என்ற இத்திட்டத்தில், 10ம் வகுப்பில், 55 சதவீத மதிப்பெண் பெற்று, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, தனியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, அக்., 1ல் துவங்கியது; நவ., 30 வரை பதியலாம். மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின், http://www.maef.nic.in இணையதளத்தில், நேரடியாக விண்ணப்பித்து, அதன் நகலை, கல்வி அறக்கட்டளை முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கூகிள் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் பரவும் வைரஸ்!

கூகிளின் ப்ளே ஸ்டோரில் உள்ள 400-க்கும்  மேற்பட்ட செயலிகள் 'ட்ரஸ்கோட்' என்னும் மால்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

'ட்ரஸ்கோட்' என்னும் மால்வேரினால்  பாதிக்கப்பட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்யும்பொழுது, அவற்றின் மூலமாக நமது அலைபேசி அல்லது மற்ற கருவிகளில் 'த்ரெட் ஆக்டர்ஸ்கள்' உட்புகுகின்றன.
இத்தகைய கருவிகள் அலுவலக வலைப்பின்னலில் இணைக்கப்படும் பொழுது, அங்கிருக்கும் உட்புற சர்வர் கணினியை தாக்கும் அல்லது முக்கியமான தகவல்களை திருடும்.
இந்த தகவலை மென்பொருள் பாதுகாப்பு சேவை நிறுவனமான 'ட்ரெண்ட் மைக்ரோ' தெரிவித்துள்ளது. 
கூகிள் ப்ளே ஸ்டோரில் அதிகமாக தரவிறக்கப்படும், விளையாட்டுகள், ஸ்கின்ஸ் மற்றும் அலைபேசியை மேம்படுத்த உதவும் பல்வேறு வகையான 'தீம்'கள்  ஆகியவையே இந்த மால்வேரின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. 
செயலியின் ஒரு சிறு பகுதியாக மட்டுமே இந்த மால்வேர்கள் செயல்படுவதால் அவற்றை அடையாளம் காண்பது அத்தனை எளிதானதாக இல்லை.

தற்போது பெரும்பாலான அலுவலகங்கள், தங்கள் ஊழியர்களின் அலைபேசி மற்றும் டேப்லெட் உள்ளிட்ட கருவிகளை அலுவலக கணினி வலைப்பிபின்னலில் இணைத்து
பயன்படுத்த அனுமதி அளித்து வருவதால், இந்த மால்வேர் தாக்குதலின் பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
இது பற்றி 'ட்ரெண்ட் மைக்ரோ' நிறுவனம் கூகிளுக்கு தெரியப்படுத்தி விட்டதால், கூகிள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் !

புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை முதல்வர் வி.நாராயணசாமி அறிவித்துள்ளார்.

கடந்த 4-ம் தேதி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் தீபாவளி போனஸ் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.


அதன்படி புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அதாவது பிரிவு சி மற்றும் டி மறறும் பிரிவு பி யைச் சேர்ந்த அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு போனஸாக அவர்களுக்கு ரூ.6908 வழங்கப்படும்.

மேலும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.1184 போனஸ் வழங்கப்படும். ஓராண்டு பணிநிறைவு செய்த மற்றும் 3 ஆண்டுகளுக்குள் பணி செய்த தற்காலிக பகுதி நேர மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.1000 தரப்படும்.

மேலும் உற்பத்தி சார்ந்த போனஸாக அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.11 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஒரே அளவு சீருடை - புலம்பும் பெற்றோர்

ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, ஒரே அளவு இலவச சீருடை வழங்கப்பட்டுள்ளதால்,பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


ஈரோடு மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளும் காலாண்டு தேர்வுக்கு விடுமுறைக்கு பின் கடந்த, 3ம் தேதி துவங்கின.

 அப்போது மாணவ,மாணவியருக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது. 

மேலும், அவர்களுக்கு இலவச சீருடையும் வழங்கப்பட்டன. வழக்கமாக, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு ஒரு அளவிலும், மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு ஒரு அளவிலும், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு அளவிலும், 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு ஒரே அளவிலான சுடிதார் மற்றும் பேன்ட் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. 

இந்த ஆண்டுக்கான இரண்டு செட் சீருடைகள், முதல் பருவத்திலேயே வழங்கப்பட்டன. இரண்டாம் பருவம் துவங்கிய நிலையில், மூன்றாவது செட் சீருடை வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள சீருடைகள் அனைத்தும்,ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான அளவில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறியதாவது: இவற்றை மாணவர்களால் அணிய முடியாது. அனைத்து சீருடையும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அளவிலேயே உள்ளது. இதே போல தான் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் காலணிகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

பல்வேறு அளவுகளில் இவற்றை தயார் செய்து வினியோகம் செய்ய வேண்டும் அல்லது மாவட்டம் தோறும் சீருடை தைப்பதற்கான மையங்களை ஏற்படுத்தி மாணவ, மாணவியரின் அளவுக்கு ஏற்ப சீருடைகளை தைத்து வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை ரத்து

முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அரசு அலுவலகங்களில், இந்த ஆண்டு ஆயுத பூஜை இல்லை. அரசு ஊழியர்கள், தங்களுக்குள் நிதி திரட்டி, ஆண்டுதோறும் ஆயுத பூஜையை கொண்டாடுவது வழக்கம். தற்போது, மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், ஆயுத பூஜை ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. 

இதுகுறித்து, அரசு ஊழியர்கள் கூறியதாவது: வரும், 10ல், ஆயுத பூஜை வருகிறது; அன்று அரசு விடுமுறை. இதனால், அரசு அலுவலகங்களில், 7ம் தேதி, ஆயுத பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதால், ஆயுத பூஜை கொண்டாடு வதை தவிர்த்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

6/10/16

TNTET:ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள் பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தரவு.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை புதன்கிழமை (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


இது தொடர்பாக ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வாகாத விண்ணப்பதாரர்களில் ஒரு பிரிவினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிவ கீர்த்திசிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, நளினி சிதம்பரம், அஜ்மல் கான் ஆகியோர் ஆஜராகி, "தமிழகத்தில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் 2013-இல் நடந்தது. அதன் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் வழங்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகள் நியமன விதிகளுக்கு எதிரானது' என்று வாதிட்டனர்.ஆனால், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவ், "அனைத்து சட்ட நடைமுறைகளின்படியே தமிழக அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன' என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியது: தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகளால் மனுதாரர்களுக்கு ஆசிரியர் பணியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என பலர் முறையிட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, தற்போதைய சூழலில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை தமிழக அரசும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மனுதாரர்கள் தரப்பும் நீதிமன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 5) தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து புதன்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பின்னணி:

 தமிழக அரசு சார்பில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) நடத்தப்பட்டது. இதில் குறைந்த நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, இடஒதுக்கீடு முறையின்படி தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் சலுகை அளிக்க ஓர் அரசாணையையும், பிளஸ்-2, பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மற்றொரு அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெறாமல் பாதிக்கப்பட்டதாகக் கூறி சுமார் 600 பேர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளைத் தொடுத்தனர். இதில் இரு நீதிமன்றங்களும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படி அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்.

புதுச்சேரி : வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படியும், மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி பட்டியல்படியும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜஹான், தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, பல்வேறு துறை செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தொடர்ந்து வலியுருத்தும்.  மழைக்காலத்திற்கு முன்பாக  வெள்ளத்தடுப்பு குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் குடிநீர் மற்றும் புதை சாக்கடை திட்டத்திற்காக பிரான்ஸ் நாட்டு நிதியுதவியுடன் மத்திய அரசு ரூ.2400 கோடி வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.

இதில் ரூ.1400 கோடியை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 20 ஆண்டுகளுக்கு கடனாக பெறுவது என்றும் மத்திய உள்துறை மூலம் பெறப்படும் மீதமுள்ள ரூ.900 கோடியை மாணியமாக பெற மத்திய அரசை வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு செய்வதில் மத்திய அரசு ஆசிரியர்ர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தரவரிசை பட்டியல்படியும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையிலும் தான் இனிமேல் தேர்வு செய்யப்படும் என்ற கொள்கை முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகைக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்க வேண்டி உச்சநீதி மன்றத்தில் புதுச்சேரி அரசு தொடர்ந்து வலியுருத்தும் என்றார் நாராயணசாமி.

பிளஸ்2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறையை அடுத்த ஆண்டு முதல் கைவிட சிபிஎஸ்இ முடிவு !

சிபிஎஸ்இ அதிகாரிகள் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2014ம் ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் 10 பாடங்களில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு வந்தது.  இதற்கு 1.8 சதவீத மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கின்றனர். ஆனால் இதில் பயனடைவர்கள் மிகவும் குறைவு.


இதனால் விடைத்தாள் மறுமதிப்பீடு முறையை கைவிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. உண்மையான சில பேரின் குறைகளை தீர்க்க சில நடைமுறைகள் மட்டும் அமலில் இருக்கும்’’ என்றார்.

 இதுகுறித்து சிபிஎஸ்இ தலைவர் ஆர்.கே.சதுர்வேதி கூறியதாவது:  ஆசிரியர் தகுதி தேர்வை(சிடிஇடி) ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பள்ளி சான்றிதழ்களை ஆன்லைன் மூலமே சரிபார்க்கும் வகையில் டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மாணவர்கள் விரைவில் டிஜிட்டல் சான்றிதழ்களை பெறுவர். பல பள்ளிகளின் ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றனர். அது சம்பந்தமான தகவல்களை அவர்களின் பள்ளி வெப்சைட்களில் வெளியிட கேட்டுக் கொண்டுள்ளோம். மாணவர்களுக்கு பாடங்கள் சம்பந்தமான ஆடியோ-வீடியோ தகவல்கள் ஆன்லைன் மூலமே கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்

எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்'

எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' என்ற அடிப்படையிலான புதிய திட்டத்தை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதில், செயல்வழி கற்றல் உள்ளிட்ட, பல பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தில், புதிதாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளி மாணவர்களை இணைத்து, புதிய கற்றல் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள, தலா ஒரு பள்ளி, ஒரு குழுவாக இணைக்கப்படுகிறது. கிராமப்புற பள்ளியின், எட்டாம் வகுப்பு மாணவர்கள், நகர்ப்புற பள்ளிக்கு சென்று, அங்குள்ள மாணவர்களுடன் சேர்ந்து படிப்பர். பின், பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றி பார்ப்பர். நகர்ப்புற மாணவர்களும், தங்களுடன் இணைந்த கிராமப்புற பள்ளிக்கு சென்று, கிராமத்தை சுற்றி பார்ப்பர்.
'மாணவர்களுக்குள் நட்புறவு ஏற்படுத்துதல், நகரம் மற்றும் கிராமப் புறங்கள், அங்குள்ள பள்ளிகளின் வசதிகளை மாணவர்கள் தெரிந்து கொள்வதே இத்திட்டத்தின் நோக்கம்' என, ஆசிரியர்கள் கூறினர். இதற்கு, 'எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' என, ஆசிரியர்கள் பெயர் வைத்துள்ளனர். 

பேராசிரியர் பணி : டி.ஆர்.பி., அறிவுரை

சென்னை: அரசு இன்ஜி., கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து, புகைப்படம் இணைக்காதோர், நாளைக்குள் புகைப்படம் இணைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதற்கான விண்ணப்பங்கள், செப்.,7 வரை பெறப்பட்டன. விண்ணப்பங்களில், புகைப்படம் இணைக்காமல் தாக்கல் செய்தோரின் பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இணையதளத்தில் இணைக்கப்பட்டு உள்ள விண்ணப்பத்தை, பதிவிறக்கம் செய்து, புகைப்படம் ஒட்டி, அத்தாட்சி பெற்ற, அரசு அதிகாரியின் கையெழுத்துடன், நாளைக்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

நிரந்தர அங்கீகாரத்திற்கு தனித்தனி மனு : தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை

பத்து ஆண்டுகளை தாண்டிய பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து, தனியார் பள்ளிகள் தனித்தனியாக விண்ணப்பிக்க, மெட்ரிக் இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.அரசு உதவிபெறும் தனியார் மெட்ரிக் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகம், அங்கீகாரம் வழங்குகிறது. புதிய பள்ளிகளுக்கு, ஆண்டுக்கு ஒருமுறையும், மூன்று ஆண்டுகள் கடந்த பள்ளிகளுக்கு,
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், அங்கீகாரம் தரப்படும். 10 ஆண்டுகள் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு, உள்கட்டமைப்பு வசதிகளின் படி, நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படும். நான்கு ஆண்டுகளாக, நிரந்தர அங்கீகாரம் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. பள்ளிகளுக்கு, ஓராண்டு அங்கீகாரம் தரப்படுகிறது; ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். இது, தனியார் பள்ளிகளுக்கு, கடும் அவதியாக உள்ளதால், 10 ஆண்டுகளை தாண்டிய பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் கோரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தார். இந்த மனு, மெட்ரிக் இயக்குனரின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. மனுவை பெற்ற மெட்ரிக் இயக்குனர் கருப்பசாமி, மனுதாரருக்கு பதில் அனுப்பி உள்ளார். அதில், 'நிரந்தர அங்கீகாரம் தொடர்பாக, தனியார் பள்ளிகள், தனித்தனியாக மனு செய்ய வேண்டும்' என, கூறியுள்ளார். அதனால், அனைத்து தனியார் பள்ளிகளும், தனியாக மனு அனுப்ப முடிவு செய்துள்ளன. 

கல்வி கட்டணம் : சி.பி.எஸ்.இ., உத்தரவு

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அனைத்தும், கல்வி கட்டண விபரங்களை, அக்., 31க்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, அதிகமாக, சில பள்ளிகள் வசூலிப்பதாக, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு புகார்கள் வந்துள்ளன.
பல பள்ளிகள், உள்கட்டமைப்பு வசதிகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதையடுத்து, சி.பி.எஸ்.இ., புதிய தலைவர், ஆர்.கே.சதுர்வேதி உத்தரவுப்படி, துணை செயலர், ஜே.பி.சதுர்வேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 'அனைத்து பள்ளிகளும், தங்களின் உள்கட்டமைப்பு வசதி மற்றும் கல்வி கட்டண விபரங்களை, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில், அக்., 31க்குள் வெளியிட வேண்டும்; தங்கள் பள்ளி இணையதளத்திலும், இந்த தகவலை வெளியிட வேண்டும்' என, குறிப்பிட்டு உள்ளார். 

வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்

தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம். 

இது குறித்து, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, இ - சேவை மையங்களில், தற்போது, 100 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன; இந்த ஆண்டுக்குள், சேவைகளின் எண்ணிக்கை, 300 ஆக உயர்த்தப்படும். அதன் ஒரு பகுதியாக, வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வழங்கப்பட உள்ளது. அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின் கீழ், 486 இ - சேவை மையங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் சார்பில், சென்னையில், சில இடங்களில், இந்த சேவை நேற்று துவங்கியது. அதற்காக, வாக்காளர்களின் புகைப்படம் உள்ளிட்ட முழு விபரங்கள், தகவல் தொழில்நுட்ப துறையிடம், தேர்தல் துறை வழங்கி உள்ளது.வாக்காளர்கள் மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்; 25 ரூபாய் செலுத்த வேண்டும். வாக்காளர் அட்டை தொலைந்தாலும், இந்த மையத்தில், அடையாள அட்டை எண்ணை தெரிவித்து, புதிய அட்டை பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அழகாக தெரிய வேண்டுமா? : வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படங்கள், மிக மோசமாக தெரிவதாக புகார்கள் உள்ளன. இ - சேவை மையங்களில், வாக்காளர்களை புகைப்படம் எடுத்து, அதை, வண்ண அடையாள அட்டையில் பதிந்து தர வசதிகள் உள்ளன. தேர்தல் கமிஷன் தந்த அட்டையில் உள்ள புகைப்படத்தை, விருப்பம் உள்ளோர், இந்த மையங்கள் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம். 

சிமேட்' நுழைவுத்தேர்வு : 10 முதல் ஆன்லைன் பதிவு

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிப்புகள் உள்ளன. அதில், முதுநிலை டிப்ளமோ மேலாண் நிர்வாகம்; முதுநிலை டிப்ளமோ நிறுவன நிர்வாகம் போன்ற படிப்புகளில் சேர, 'சிமேட்' நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுக்கு, இரு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது.
நடப்பு கல்வி ஆண்டு முதல், ஒரு முறை மட்டுமே தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜன., 28, 29ம் தேதிகளில், 'ஆன்லைன்' தேர்வு நடத்தப்படும்; வரும், 10ம் தேதி முதல், ஆன்லைன் பதிவு துவங்குகிறது; டிச., 10 வரை விண்ணப்பிக்கலாம். அனைத்து இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்களும், இளங்கலை இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, www.aicte-cmat.in/college/faq.aspx என்ற இணையதளத்தில் அறியலாம்.

உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் 'அப்பீல்'

சென்னை:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை யை ரத்து செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கிடையில், தி.மு.க.,தரப்பிலும், 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
டிசம்பருக்குள் தேர்தல்

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த, உயர் நீதி மன்ற நீதிபதி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப் பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். புதிதாக அறிவிப்பாணை யை வெளியிட்டு, டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் நேற்று முறை யீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப் பட்டது. தி.மு.க., வழக்கறிஞர்களும், தேர்தல் ஆணையம் தரப்பில் முறையீடு செய்யப்படுகி றதா என்பதை கவனித்தனர். 
மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் பி.குமாரிடம் கேட்ட போது, ''மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்காக, பதிவுத் துறைக்கு வழக்கறிஞர்கள் சென்று உள்ளனர்; இன்று தாக்கல் ஆகிவிடும்,'' என்றார்.
அதன்படி, பதிவுத் துறையில் மேல்முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது; அதற்கு, வரிசை எண் தான்கொடுக்கப்பட்டது.
நாளை விசாரணை

பதிவுத்துறை, சில ஆவணங்களை கோரி இருப்பதால், மனுவுக்கான மேல்முறையீட்டு எண், நாளை கிடைக்கும் என, வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இம்மனுவை அவசர மாக விசாரிக்க கோரி,தலைமை நீதிபதி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் அல்லது இரண்டாவது, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நாளை முறையிட வாய்ப்புள்ளது. அதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், நாளையே மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடக்கக் கூடும்.
இதற்கிடையில், 'இந்த வழக்கில், எங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது' என, தி.மு.க., தரப்பில், 'கேவியட்' மனு தாக்கல் செய்திருப்பதாக, மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.
தேர்தல் பணிகள் தற்காலிக நிறுத்தம்
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்குமாறு, கலெக்டர்கள் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டு உள்ளது. 'மறு உத்தரவு வரும் வரை, தேர்தல் பணிகளை தொடர வேண்டாம்' என, மாநில தேர்தல் கமிஷனர், சீதாராமன் அறிவுறுத்தி உள்ளார்.

60 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா

ராமநாதபுரம்:அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறமையை வளர்க்கவும், அறிவியல் கற்கும் ஆர்வத்தை துாண்டவும் அறிவியல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் 2,000 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்டத்திற்குள் உள்ள அறிவியல் ஆய்வகங்கள், மீன் ஆராய்ச்சி நிலையங்கள், விவசாய,
தோட்டக்கலை பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர். அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் செல்லலாம். சுற்றுலா செல்ல வாகன வசதி, உணவு இலவசமாக வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 7.42 லட்சம் ரூபாய் வீதம் அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படும் 30 மாவட்டங்களுக்கு 2 கோடியே 22 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகள் தற்காலிக நிறுத்தம்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் பணிகளை, தற்காலிமாக நிறுத்தி வைக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில், உள்ளாட்சி பதவிகளுக்கு, வரும், 17, 19ம் தேதிகளில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம், அதற்கு தடை போட்டு விட்டது; டிச., 31க்குள் தேர்தலை நடத்த அறிவுறுத்தி உள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து,
மாநில தேர்தல் கமிஷன், மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்குமாறு, கலெக்டர்கள் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 'மறு உத்தரவு வரும் வரை, தேர்தல் பணிகளை தொடர வேண்டாம்' என, மாநில தேர்தல் கமிஷனர், சீதாராமன்
அறிவுறுத்தி உள்ளார்.

29/9/16

சட்டத்தை மதிக்காத சி.பி.எஸ்.இ., பள்ளிகள்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டப்படி, மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என, தெரியவந்துள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத சேர்க்கை நடக்க வேண்டும். 
ஏழை குடும்பங்களை சேர்ந்த, ஐந்து வயது முதல், 14 வயது வரையுள்ள மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை, மாநில அரசுகளின் வழியாக, மத்திய அரசு வழங்கும். அதன்படி, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், 85 ஆயிரம் குழந்தைகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர்க்க முடிவதில்லை. இதுகுறித்து, கல்வி உரிமை சட்ட கண்காணிப்பு அமைப்பான, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆணைய விசாரணையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், விதிகளை மீறியது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, ஆணைய உறுப்பினர் ரேவதி கூறுகையில், ''எங்கள் விசாரணையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 25 சதவீத ஏழை மாணவர்கள் சேர்க்கப்படவில்லை என்பது தெரியவந்தது. அந்த பள்ளிகளின் பட்டியலை சேகரித்து வருகிறோம்; மேல் நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரைக்க உள்ளோம்,'' என்றார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பு தேதி மாற்றம் குறித்து முதன்மை கல்வி அலுவலரின் தகவல் Posted: 28 Sep 2016 09:05 AM PDT தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத்தொகை அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும். மேலும் சம்பள உச்சவரம்பை தளர்வு செய்து சி, டி பிரிவு தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ.8,400 முதல் அதிகபட்சமாக ரூ.16,800 வரை தரப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. 

லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் அறிவித்துள்ளார். ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம். 8.33 சதவீதம் போனஸ், 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படு்கிறது.

27/9/16

பள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வு: மத்திய அரசு முடிவு

பள்ளிகளின் கல்வித் தரமறிய, மாணவர்களிடையே மத்திய அரசு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

கோழிக்கோட்டிலுள்ள வேதவியாசர் வித்யாலயம் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டில் அதிகம் பேருக்கு கல்வியை சென்று சேர்ப்பதில் குறிப்பிட்ட அளவு வெற்றி கண்டுள்ளோம். இதையடுத்து, அந்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
எனவே, பள்ளிகளின் தரத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களிடையே மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் கணிதம், மொழி, எழுத்து மற்றும் படிப்புத் திறனை அறிவதற்கான தேர்வுகளை மத்திய அரசு நடத்தும்.
அரசுப் பள்ளிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பல்வேறு வகையான பள்ளிகளிலும் பயிலும் 3 சதவீத மாணவர்களிடம் இந்தத் தேர்வு நடத்தப்படும். அதன் மூலம், அந்தப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து தெளிவான விவரத்தைப் பெறலாம் என்றார் அவர்.