யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/11/16

வீட்டில் உள்ள தரை பளிச்சிட

DSR (Digital Service Register) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை

*அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு*
மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு "பணிப்பதிவேட்டை. DSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை:: 

1) அனைத்து SR ஐயும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்.

2) SR DISTRICT TREASURY யில் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக ஃபோன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்,


3)மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்

4)ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்

5)ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்

6)அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR அந்தந்த மாவட்டத்தில் மட்டுமேயிருக்கும்,.வேறு மாவட்டப பதிவில் சென்று தேடினால் இருக்காது..

7) ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி வைக்கப்படும்.

8) RETIREMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது, மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்

9)ஒருவரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளி SR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்


  8) SR SCAN செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்,,அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...

9)SR DETAILS ம் WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்., இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...

10)N.O.C,
ஆதார்எண். சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..

11)எதிர்காலத்தில் MANUAL SR MAINTENANCE இருக்காது்

12) DSR ல் NEXT INCREMENT ,
HRA SLAp அனைத்துமிருக்கும்

13)SCANE முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,,

அதன்பின் நாம் ஏதேனும் மிழை திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,அவ்வுயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்கு உட்பட வேண்டியிருக்கும்...

புதிய வசதியை அறிமுகம் செய்த வாட்ஸ் ஆப்..!! வரவேற்ற பயன்பாட்டாளர்கள்

புதிய வசதியை அறிமுகம் செய்த வாட்ஸ் ஆப்..!! வரவேற்ற பயன்பாட்டாளர்கள்

மும்பை: வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்தியா உட்பட சுமார் 180 நாடுகளில் வீடியோ கால் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், 
தனது பயனாளர்களுக்காக ஏற்கனவே வாய்ஸ் கால் வசதியை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது விடியோ கால் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது.

ஐபோன், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் என மூன்று தளங்களில் இந்த விடியோ கால் வசதி இயங்கும். இதற்கு நீங்கள் ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோர்க்கு சென்று உங்கள் வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

உங்கள் மொபைலில் உள்ள காண்டாக்ட் லிஸ்டிற்கு சென்று நீங்கள் பேச விரும்பும் நபரை தேர்வு செய்தால் வாய்ஸ் கால், விடியோ கால் என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும்.

அதில் நீங்கள் விடியோ கால் வசதியை தேர்வு செய்தால் நீங்கள் பேச விரும்பும் நபருக்கு விடியோ கால் இணைக்கப்படும். இந்த விடியோ கால் வசதியைப் பொறுத்தவரை நீங்கள் பேச விரும்பும் நபரும் வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும்.

உங்கள் மொபைலில் இருந்து நீங்கள் பேச விரும்பும் நபருக்கு விடியோ கால் வசதி இணைக்கப்படவில்லை என்றாலோ அல்லது உங்கள் மொபைலில் இந்த வசதி சப்போர்ட் செய்யாது என்று காட்டினாலோ, தயங்காமல் உடனடியாக வாட்ஸ் ஆப் பீட்டா வெர்ஷனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் இந்த விடியோ கால் வசதி மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

17/11/16

எமிஸ் (EMIS)தகவல் தொகுப்பில் உள்ள விபரங்கள் மூலம் sslc மற்றும் +2 அரசு பொதுத் தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல் தயாரிக்க உத்தரவு.

TNPSC Result Published for ELCOT துணை மேலாளர்-II பதவிக்கான 12 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC RESULT | ELCOT துணைமேலாளர்-II பதவிக்கான 12 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வெளியிடப்பட்டுள்ளது.
| தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடுமின்னணுவியல் கழகத்தின் (ELCOT) துணை மேலாளர்-II
பதவிக்கான12 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வுகள் 02.07.2016 மு.ப. & பி.ப. மற்றும் 03.07.2016 மு.ப. ஆகிய நாட்களில்நடத்தப்பட்டன.

அவற்றில்மொத்தம் 608 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டுவிதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில்வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ்சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 35 விண்ணப்பதாரர்களின்பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணையவலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ்சரிபார்ப்பு 28.11.2016 அன்று தேர்வாணைய அலுவலகத்தில்நடைபெறும். வெ. ஷோபனா, இ.ஆ.ப., தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examinations for the post of Deputy Manager-II (ELCOT) was held on 02.07.2016 FN & AN and 03.07.2016 FN. Totally 608 candidates have appeared for the said Examinations. Based on the marks obtained in the above said Examinations, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 35 candidates those who have been provisionally admitted to Certificate Verification for Oral Test to the said post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Certificate Verification will be held on 28.11.2016 at the Commission's office. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS

தொடக்கக்கல்வி - ஆண்டுமுழுவதும் விடுப்பு எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அரசின் பாராட்டு சான்றிதழ் - மாண்புமிகு தமிழகமுதலமைச்சரின் ஆனைபடி வழங்கப்படும் - இயக்குனர் செயல்முறைகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குநவம்பர் முதல் ஜனவரி மாதம்வரையில் மாத ஊதியத்தை வங்கிகணக்கில் வரவு வைக்காமல், ரொக்கமாகவழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்துதமிழ்நாடு தலைமை செயலக சங்கதலைவர் ஜெ.கணேசன்
நேற்றுமுதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
மத்தியஅரசு கடந்த வாரத்தில் அறிவித்ததிட்டத்தால், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் வசமுள்ள 500, 1000 ரூபாய்நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளில் தவம் கிடக்க வேண்டியகட்டாயத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால்வெகுவாக அலுவலக பணியும் பாதித்துள்ளது.
சென்னைபோன்ற பெருநகரங்களில் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்குடியிருப்பதற்கு போதிய அரசு வாடகைகுடியிருப்புகள் இல்லாததால், பெரும்பான்மையோர் தனியார் வீடுகளில்தான் குடியிருந்துவருகின்றனர். இந்த குடியிருப்புகளுக்கான வாடகையானது ஒவ்வொருஅரசு ஊழியரின் ஊதியத்திலும் ஏறத்தாழ 25 சதவீதம் அளவிற்கு உள்ளது.
இதைத்தவிர, மாதந்தோறும் தங்களது குழந்தைகளுக்கான கல்விகட்டணம், வீட்டிலுள்ள பெரியவர்களுக்கான மருத்துவ செலவு, வீட்டு மளிகைபொருட்களை வாங்குவதற்கான செலவு உள்ளிட்ட செலவுகளைசெய்ய இயலாமல் உள்ளனர். தற்போது, சம்பளம் உள்ளிட்ட அனைத்து பணப்பட்டுவாடாக்களும் ஊழியர்களின் வங்கிகணக்கில்தான் வரவு வைக்கப்படுகின்றன.

தற்போதுள்ளவங்கி கட்டுப்பாடுகளால், மத்திய அரசின் வருமானவரித்துறைக்கு கணக்குக்களை முறையாக சமர்ப்பித்து, ஊதியத்தைபெற்றுவரும் ஊழியர்கள் தங்களது பண இருப்பைபெற இயலாமல் போகும் நிலைஉருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நவம்பர் மாதம் முதல்ஜனவரி மாதம் வரையில் மாதஊதியத்தை வங்கி கணக்கில் வரவுவைக்காமல், ரொக்கமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.

DSE PROCEEDINGS- 2012-13 English BT Regularsation Order

CCE Worksheet Exam Guidelines Proceeding - 4 க்கு குறைவான விடையளித்த மாணவர்களுக்கு குறைதீர்கற்பித்தல் உறுதி செய்ய வேண்டும் !!!*

சம்பளத்தை ரொக்கமாக கொடுங்க! : கோவா அரசு ஊழியர்கள் கோரிக்கை

பனாஜி: கோவா மாநில அரசு ஊழியர்கள், நடப்பு மாதத்துக்கான சம்பளத்தை, ரொக்கமாக தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, பிரதமர் மோடி அறிவித்தார். பழைய நோட்டுகளை மாற்ற, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. இருப்பினும், பழைய நோட்டுகளை மாற்றவும்,
ஏ.டி.எம்.,களில் பணம் பெறவும், வங்கிகள் முன், நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருப்பதால், மக்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுகிறது. இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் லஷ்மிகாந்த் பர்சேகர் தலைமையிலான ஆட்சி நடக்கும் கோவாவில், அரசு ஊழியர்கள், நடப்பு மாதத்துக்கான சம்பளத்தை, வங்கியில், 'டிபாசிட்' செய்வதற்கு பதில், ரொக்கமாக தரும்படி கோரியுள்ளனர். இது தொடர்பாக, முதல்வர் லஷ்மிகாந்த் பர்சேகருக்கு, கோவா அரசு ஊழியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதே சமயம், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக வெளியான அறிவிப்புக்கு, அரசு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

9ம் வகுப்பு வரை புதிய வகை வினாத்தாள் : போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் முயற்சி

போட்டி தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களை சிந்திக்க வைக்கும் வகையிலான வினாத்தாள்களை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க, பல விதமான தேர்வுகளை மத்திய, மாநில அரசுகள் நடத்துகின்றன. அத்துடன், பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், உயர்கல்வியில் சேர, 'ஜே.இ.இ., - நீட் - கேட்' என, பல நுழைவுத் தேர்வுகளும் உள்ளன.
இந்த நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் பின்தங்கியிருப்பதாக, கல்வியாளர்கள் பலர் புகார் தெரிவித்தனர். அதனால், நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களை தொடக்கப் பள்ளியில் இருந்தே தயார் செய்ய, புதிய வினாத்தாள் முறையை, தமிழக பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பை, குழந்தைகள் தின விழாவிலேயே, பள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, அனைத்து அரசு பள்ளிகளிலும், புதிய வினாத்தாளை பயன்படுத்தி, சிறப்பு தேர்வுகள் துவங்கியுள்ளன.
இது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியதாவது: மாணவர்கள் ஒவ்வொரு வினாவையும் புரிந்து, சிந்தித்து, விடையை தேர்வு செய்யும் வகையில், புதிய வினாத்தாளில், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் இடம் பெற்றுஉள்ளன. இந்த நடைமுறை, மூன்று பருவ தேர்வுகள் மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை தேர்வுகளுக்கும் பின்பற்றப்படும். இந்த வினாத்தாளுக்கு, மாணவர்கள் தொடக்கப்பள்ளி முதலே பழகிவிட்டால், உயர்கல்விக்கு வரும் போது, போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எளிதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

சென்னை பல்கலை தேர்வு டிசம்பர் 10ல் துவக்கம்

சென்னை: 'தொலைநிலை கல்வி தேர்வுகள், டிசம்பர், 10ல் துவங்கும்' என, சென்னை பல்கலையின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பல்லை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, திருமகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில்,
இளநிலை, முதுநிலை, தொழில் படிப்பு, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள், டிச., 10ல் துவங்கும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், தேர்வுகள் நடக்கும். டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். ஹால் டிக்கெட், டிச., 3ல், பல்கலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வுக்கான முழு கால அட்டவணை மற்றும் தேர்வு மைய விபரத்தை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSA-CRC மையம் மூலமாக இரண்டு கட்டமாக அறிவியல் கண்காட்சி 23.11.2016. & 24.11.2016- ல் நடைபெற உள்ளது. தொடக்கப் பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்ய வேண்டும்.

தங்கள் பள்ளி எந்த நாட்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை உங்கள் BRT அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தொடக்கப் பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்ய வேண்டும்.

நடுநிலைப் பள்ளிகள் நான்கு மாடல் செய்ய வேண்டும். 1 - 5. (2)  6 - 8. (2).


மாடல்கள் மாணவர்கள் செய்ய வேண்டும். செய்ததை கண்காட்சி அன்று மாணவர்கள் செய்து காட்டு விளக்குதல் வேண்டும்.

ஒரு மையத்துக்கு 10 பள்ளிகள் வீதம் கலந்து கொள்வார்கள்.

சிறப்பாக செய்த மாணவர்க்கு பரிசு உண்டு. பள்ளிக்கும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

ஒரு மாடலுக்கு ரூபாய் 180. லிருந்து  300. வரை மைய தலைமை ஆசிரியர் வழங்குவார்.

CCE - worksheet important guide lines வழங்குதல் சார்பு.4 க்கு குறைவான விடையளித்த மாணவர்களுக்கு குறைதீர்கற்பித்தல் உறுதி செய்ய வேண்டும்

CCE- 1,2,4 science English medium question paper..


16/11/16

நிரந்தர ஆசிரியர் இல்லாவிட்டால் அங்கீகாரம் கிடையாது!’ பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை.

நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காவிட்டால்,அங்கீகாரம் கிடையாது‘ என, அனைத்து பி.எட்., கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை விடுத்துள்ளது.கலை மற்றும் அறிவியலில்,இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள், பள்ளி ஆசிரியராக சேர,பி.எட்., என்ற ஆசிரியர் கல்வியியல் படிப்பை முடிக்க வேண்டும்.கடந்த கல்வி ஆண்டுக்கு முன் வரை, இந்த படிப்பு, ஓராண்டு காலமாக நடத்தப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் புதிய பாடத்திட்டத்தின் படி, கடந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு, இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் பல கல்லுாரிகளில்,எம்.எட்., படிப்பும் நடத்தப்படுகிறது.‘இரண்டு ஆண்டு படிப்புகளை நடத்தும் வகையில்,

பல கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை; நிரந்தரகல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை‘ என,ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து,அனைத்து கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் கலைச்செல்வன் எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார்.கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில்,நிரந்தரமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியது கட்டாயம். கல்லுாரிகளில்,

இரண்டு பிரிவு வகுப்புகள் என்றால், தலா, 50மாணவர் வீதம், இரு ஆண்டுகளுக்கு, 200மாணவர்களை சேர்க்கலாம். இதற்கு, 16ஆசிரியர்கள் கண்டிப்பாக நிரந்தர நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோல்,ஒரு பிரிவு வகுப்பு என்றால், 50 மாணவர் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு, 100மாணவர்களை சேர்க்கலாம். இந்த கல்லுாரிகளில், எட்டு பேர் நிரந்தர ஆசிரியர்களாக இருக்க வேண்டும்.இந்த ஆசிரியர்களின் பட்டியலை, பல்கலையில் ஆவணங்களுடன் அளித்தால் மட்டுமே,கல்லுாரிகள் மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்படும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் 4,000 -க்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணி நியமனம் எப்போது?

அரசுப் பள்ளிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 30 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழக முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் புதியப் பாடத் திட்டம் கொண்டுவரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். இதைத் தலைமையாசிரியர்கள் சங்கம் வரவேற்கிறது. மாற்றியமைக்கப்படும் புதியப் பாடத் திட்டம் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு (நீட்) போன்ற போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் அமையும் என நம்புகிறோம். 

இதுபோல், பள்ளிகளில் நிர்வாகப் பணிகளும், கல்விப் பணிகளும் தொய்வின்றி நடைபெற ஏதுவாக அனைத்து காலிப் பணியிடங்களையும் விரைவாக நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முன்வரவேண்டும். பள்ளிகளில் 4,265 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 30க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் காலிப் பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

CPS NEWS : ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிக்கை.

ஆணையரக அதிகாரிகள் ஆலோசனை
கடந்த 2003 ஏப்ரல் முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில்,

அரசு ஊழி யர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய, முதல்வர் அலு வலக சிறப்பு பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமை யில் நிபுணர் குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்தார். இக்குழுவினர் அரசு பணியாளர் சங்கங்களை அழைத்து கருத்துகளை கேட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்பு, தங்கள் கருத்துகளையும் கேட்க வேண்டும் என ஓய்வூதிய ஆணையரகம் தெரிவித்திருந்தது. இதன்படி, நிபுணர் குழுவினரை ஓய்வூதிய ஆணையரக அதிகாரிகள்நேற்று சந்தித்தனர்.ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிக்கையை நிபுணர் குழுவினர் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

EMIS ல் COMMON POOLல் எவரும் இல்லை, எந்த மாணவரும் பதியாமல் இல்லை. பதிவுகள் சரியானவை. என்று கல்வித்துறைக்கு தலைமையாசிரியர் சான்று அளித்து தரவேண்டிய படிவம்.

CCE Worksheet result analysis