யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/1/17

பட்டதாரிகளுக்கு கோல் இந்தியா நிறுவனத்தில் 1319 காலி பணியிடங்கள் !

https://www.yoyojobs.com/coal-india-limited-recruitment-2017-1319-management-trainee-mt-posts-apply-online/

*கல்வி தகுதி:* Degree

*காலியிடங்கள்:* 1319

Mining – 191
Electrical – 198
Mechanical – 196

Civil – 100
Chemical/Mineral – 04
Electronics & Tele – 08
Industrial Egg – 12
Environment – 25
System/IT – 20
Geology – 76
Material Management – 44
Finance & Accounts – 257
Personal & HR – 134
Sales & Marketing – 21
Rajbhasha – 07
Community Deve – 03
Public Relations – 03
Legal – 20

*சம்பளம்:* Rs.20600 - 46500

*தேர்வு செய்யப்படும் முறை:* Written & Interview

*கடைசி தேதி:* 03.02.2017

*More Info:* https://goo.gl/Itl4O3

*Exam Center:* Chennai, Coimbatore, Namakkal, Trichy, Madurai, Nagapattinam, Tiruvannamalai and Pondicherry.

தமிழக பள்ளி கல்வித்துறையில் என்ன நடக்கிறது ?

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி. ' அமைச்சருக்கும் துறையின் உயர் அதிகாரிக்கும் சமீப நாட்களாக முட்டல் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அதன் ஒருபகுதியாகவே, பாண்டியராஜனின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் வளர்மதியின் கைக்கு அதிகாரம் சென்றது '

என்கின்றனர் அதிகாரிகள் வட்டாரத்தில்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சகராக பொறுப்பேற்கின்றவர்களே, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராகவும் பதவி வகித்து வந்தனர். முந்தைய காலங்களில் அரசியல் தலைவர்கள் பலர் இந்தப் பதவியை அலங்கரித்துள்ளனர்.

 அ.தி.மு.கவின் அமைப்பு செயலாளராக இருந்த சுலோசனா சம்பத், பாடநூல் கழகத் தலைவராக பதவி வகித்துள்ளார்.
' அமைச்சர் பதவி ஒருவரிடமும் பாடநூல் கழக தலைவர் வேறு ஒருவரிடமும் இருப்பதால், நிர்வாகரீதியான சிக்கல்கள் ஏற்படுகின்றன' என்பதால், துறை அமைச்சரிடமே இந்தப் பதவி ஒப்படைக்கப்பட்டு வருகிறது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வளர்மதியிடம் பாடநூல் கழகத் தலைவர் பதவி சென்று சேர்ந்துள்ளது.

 " தமிழக அமைச்சர்களில் மாஃபா. பாண்டியராஜனின் செயல் திட்டங்கள் முற்றிலும் மாறுபட்டவை. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டம் உள்பட கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். தன்னுடைய கருத்தை பொதுவெளியில் சொல்வதற்கு யாருடைய அனுமதியையும் அவர் கேட்பதில்லை. அதேபோல், சீனியர் அமைச்சர்களையே பெயர் சொல்லித்தான் அழைக்கிறார். இவையெல்லாம் சேர்ந்து பாடநூல் கழகப் பதவியை பதம் பார்த்துவிட்டன.

பள்ளிக் கல்வித்துறையில் அவர் மேற்கொள்ளும் சீர்திருத்தத்தில் யாருக்கும் உடன்பாடில்லை. அடுத்த மாதம், விலையில்லா பொருட்களான மிதிவண்டி, புத்தகப் பை, புத்தகம், கிரேயான்ஸ், காலணிகள், உல்லன் சுவெட்டர்கள், செயல்வழிக் கற்றல் உபகரணங்கள் என ஆயிரம் கோடி ரூபாய்க்கான பிரமாண்ட திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட உள்ளன. ' இந்த நேரத்தில் பாண்டியராஜன் இருப்பது அவசியமற்றது' என அதிகாரிகள் நினைக்கிறார்கள்" என விவரித்த கல்வி அதிகாரி ஒருவர்,


" பள்ளிக் கல்வித்துறையின் உயர் அதிகாரிக்கும் அமைச்சர் பாண்டியராஜனுக்கும் இடையில் சமீப காலங்களாக உரசல்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.

ஜெயலலிதா மறைவுக்கு முன்பு வரையில், ' ஆன்ட்டியிடம் பேசிக் கொள்கிறேன்' என அமைச்சர்களை அடக்கி வைத்திருந்தார் அந்த அதிகாரி. இதனாலேயே, பள்ளிக் கல்வி அமைச்சர்கள் துறை அதிகாரியிடம் பவ்யத்தோடு வலம் வந்தனர். ஆனால் பாண்டியராஜனோ, ' நான் சொல்வதை செயல்படுத்துங்கள்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனை துறையின் உயர் அதிகாரி ரசிக்கவில்லை. இதைவிட, மிக முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், ஏழைக் குழந்தைகள் கணிப்பொறி கல்வி கற்பதற்காக ஐ.சி.டி எனப்படும் ஒருங்கிணைந்த கணிப்பொறி பயிற்சி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு 900 கோடி ரூபாயை ஒதுக்கியது. ஐந்தாண்டுகளாக நிதியை செலவிடாமல் தள்ளாட்டத்தில் வைத்திருந்தனர் அதிகாரிகள். இந்தப் பணியை எடுத்துச் செய்வதற்காக வந்த நிறுவனங்கள், அதிகாரியின் அழுத்தத்தால் பின்வாங்கிவிட்டன. ஒருகட்டத்தில், நிதியைத் திருப்பி அனுப்பும் வேலைகள் தொடங்கின.
இதனை அறிந்த அமைச்சர் பாண்டியராஜன், ' ஐ.சி.டி திட்டத்தால் ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியும்' என மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் பேசி திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வாங்கிவிட்டார். '

கணிப்பொறி தொடர்பான கல்வி என்பதால், எல்காட் வசம் பணிகள் ஒப்படைக்கப்படுவதைவிட, பள்ளிக்கல்வித்துறையே எடுத்துச் செய்தால் நன்றாக இருக்கும்' என அதற்கான பணிகளில் இறங்கினார். மீண்டும் ஐ.சி.டி கொண்டு வரப்படுவதை அதிர்ச்சியோடு கவனித்தார் துறை அதிகாரி. ' ஐ.சி.டியை முன்வைத்து நடந்த விஷயங்கள் தெரிந்துவிடும்' என்பதால், சில ஐ.ஏ.எஸ்கள் துணையோடு கார்டன் வட்டாரத்துக்கு தகவல் அனுப்பினார். ' யாரைக் கொண்டு வருவது' என பல பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன. ' அ.தி.மு.கவில் சீனியராக வளர்மதி இருப்பதால், பாண்டியராஜனால் எதிர்த்துப் பேச முடியாத நிலை ஏற்படும்' என்பதை உணர்ந்தே, அவருக்குப் பதவியைக் கொடுக்க வைத்துள்ளனர்" என்றார் விரிவாக.


" கடந்த ஐந்தாண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை எந்த முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை. அனைவருக்கும் கல்வித் திட்டம், இடைநிலைக் கல்வித் திட்டம் போன்றவற்றில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளன. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு ஆதாரபூர்வமாக தகவல் சென்றாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

லஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அதிகாரிகள் பலரும், ஒரே துறையில் நீண்டகாலம் அமர்ந்து கோலோச்சுகின்றனர். கடகடந்த இரண்டு ஆண்டுகளில் விலையில்லா புத்தகப் பை, காலணி தொடர்பான ஒப்பந்தங்கள் அனைத்தும், மறு டெண்டர் என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் விரயமாக்கினர்.

பாடநூல்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் இடம்பெற்றுவிட்டது என்பதற்காக, மூன்று கோடி ரூபாய் செலவில் மறு அச்சடிப்பு பணிகளைச் செய்தார்கள். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தம் கொடுப்பதற்காகவும் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் டெண்டரை வழிநடத்தும் முடிவில்தான் இதுபோன்று முடிவு எடுத்திருக்கிறார்கள்" என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்.

" அ.தி.மு.க அரசு பதவியேற்றதில் இருந்து வாரியம் உள்பட பல்வேறு பதவிகளுக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. பாடநூல் கழகத்துக்கு புதிதாக ஒருவரை நியமிப்பதன் மூலம், அமைச்சரின் பணி எளிதாக்கப்பட்டுள்ளது. எந்தவித முறைகேட்டுக்கும் இடம் கொடுக்காத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விதிமுறைகளின்படியே டெண்டர்கள் கோரப்படுகின்றன. தகுதியில்லாத நிறுவனங்கள் தேர்வாகும்போதுதான் மறுடெண்டர் கோரப்படுகிறது. மற்றபடி, வளர்மதியின் நியமனத்தை அரசியல் ஆக்குவது அர்த்தமற்றது" என்கிறார் பள்ளிக் கல்வி அதிகாரி ஒருவர்.

- ஆ.விஜயானந்த்..
விகடன் இணையம்...

2009. க்கு பின் நியமனம் பெற்ற இ.ஆ ஊதியம் எவ்வளவு ?? இதனை பெற்றுத்தந்த போராளிகள் கவனத்திற்கு ?

புதிய ஆட்சி அமைந்திருக்கிறது
உங்களோடு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியவர் தான் இன்றைய முதல்வர்.
நிச்சயம் அவருக்கு
Cps ஐ பற்றியும் இடைநிலையாசிரிகளின் ஊதிய முரண் பற்றியும் மிகத்தெளிவாக தெரியும்.ஆதலால் இனியும் தாமதிக்க வேண்டாம்....

இடைநிலையாசிரியர்களின் கஷ்டத்தை புரிந்துக் கொண்டு தொடர்ந்து எங்கள் ஊதிய இழப்புக்காக குரல் கொடுங்கள்
7 ஆண்டுகள் பணிபுரியும் இ.ஆ ஊதியம்
BASIC  & G.P
6300+2800+750=9850
DA = 13002


ஆக
 9850+13002=22852
பிடித்தம்
2285 +220

கைக்கு வருவது
20347


இது போதாதா என்று நீங்கள் கேட்பீர்களானால் உரிமையை மீட்பதில்  உங்களை தவிர இயலாதவர்கள் வேறு யாருமில்லர்..
இன்று போக்குவரத்து ஊழயர்களுக்கான ஊதிய பேச்சு வார்த்தை.அவர்கள் அவர்களின் ஊதியத்திற்காக எள்ளளவும் விட்டுக்கொடுக்காமல் பேச போகிறார்கள்
நீங்கள் எப்போது????

மேல உள்ள வருமானத்தில்
சொஸைட்டி 1000
(உறுப்பினர் சந்தா)
வீட்டு வாடகை 3000
வீட்டுச் செலவு 7000
(மாதம் ஒன்றுக்கு)
பெட்ரோல் மாதம் 2000
மருத்துவ செலவு 3000
(மனைவி,அம்மா,
தங்கை)
பேப்பர்,பால்,இதர
தினசரி செலவுகள் 2000

மீதமிருக்கிற இரண்டாயிரத்தை வைத்து மனைவியை பிள்ளைகளை
உறவினர்களை
நண்பர்களை திருப்த்தி செய்தாக வேண்டும்.
இதனாலயே பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்களுக்கு புதிய உடுப்புகள் கூட கனவு தான்...

ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி அளிக்காவிட்டால் பிரதமருக்கு சம்மன் - பிஏசி!

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி அளிக்காவிட்டால் பிரதமர் மோடியை விசாரணைக்கு அழைப்போம் என்று பாராளுமன்ற பொது கணக்கு குழுத் தலைவர் கூறினார்.பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட தாக்கம் குறித்து 22 எம்.பி.க்களை கொண்ட பாராளுமன்ற பொது கணக்கு குழு ரிசர்வ் வங்கியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி

இருக்கிறது.அவற்றில் முக்கிய கேள்விகளாக, பண மதிப்பு நீக்கம் குறித்த முடிவை எடுத்ததில் யார் யார், ஈடுபட்டனர்? தற்போது எவ்வளவு பணம் வங்கிக்கு வந்துள்ளது? தங்களது பணத்தை வாடிக்கையாளர்கள் எடுப்பதற்கு தடை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா? கருப்பு பண பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதா? ஏழைகள் மற்றும் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்ட தாக்கம் என்ன? என்று கேட்கப்பட்டு இருந்தது.இது தொடர்பாக வருகிற 20–ந்தேதி பாராளுமன்ற பொது கணக்கு குழுவின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல், நிதித்துறை செயலாளர் அசோக் லாவசா, பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். இதுபற்றி பொது கணக்கு குழுவின் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான கே.வி. தாமஸ் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் அளிக்கும்படி கேட்டு கொண்டிருந்தோம். அதற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஜனவரி 20–ந்தேதி கூட்டத்துக்கு சில நாட்கள் முன்பாகவே அவர்கள் பதில் அளிக்கவேண்டும். இந்த பதில்கள் பொது கணக்கு குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்’’ என்றார்.ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி அளிக்காவிட்டால், பொது கணக்கு குழு பிரதமரை அழைத்து விசாரிக்குமா? என்ற கேள்விக்கு தாமஸ் பதில் அளிக்கையில், ‘‘இப்பிரச்சினையில் தொடர்புடைய அத்தனை பேரையும் அழைத்து விசாரிக்க இக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. அதேநேரம் 20–ந்தேதி கூட்டத்தில் எந்த மாதிரியான முடிவுகள் வெளியாகின்றன என்பதை பொறுத்தே இதுபற்றி தீர்மானிக்கப்படும். பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக இக்குழுவின் உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவு செய்தால் பிரதமர் மோடி மற்றும் நிதிமந்திரி அருண்ஜெட்லி இருவரையும் அழைத்து விசாரிப்போம்’’ என்றார். 50 நாட்களில் இயல்பு நிலை திரும்பிவிடும் என்றார் பிரதமர் மோடி. ஆனால் தற்போது நிலைமை அப்படி தெரியவில்லை. எனவேதான் இந்த முடிவை எடுத்த அதிகாரிகளை அழைத்து விசாரிக்க பொதுக் கணக்கு குழு முடிவு செய்தது’’ என்று அவர் குறிப்பிட்டார்.

வங்கிக்கு திரும்பிய 14 லட்சம் கோடி!!

செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளில் ரூ.14 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், இது அரசு எதிர்பார்த்ததைவிட மிகமிக அதிகம் என்றும் அரசு அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணத்தை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி உயர்மதிப்பு நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1000 ஆகியவற்றை செல்லாதவைகளாக அறிவித்தது. மொத்த ரூபாய் நோட்டுகளில் 86 சதவிகித அளவிலான இந்த மதிப்பிழந்த நோட்டுகள் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி வரையில் வங்கிகளில் செலுத்தப்பட்டன. அரசின் கணிப்புப்படி இந்த ரூ.15.4 லட்சம் கோடி அளவிலான மதிப்பிழந்த நோட்டுகளில் சுமார் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிக்கு வராது என்றும், இந்த நோட்டுகள் கறுப்புப் பணமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதுவரையில் ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. எனவே இன்னும் ரூ.75,000 கோடி மட்டுமே செலுத்தப்படாமல் உள்ளது. இது அரசு கணித்திருந்த தொகையைவிட (கறுப்புப் பணம்) மிகமிகக் குறைவாகும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து மதிப்பிழந்த நோட்டுகளின் டெபாசிட் அளவு குறித்து எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

போலீஸ் திடீர் சோதனை - ஒரே இரவில் 1,513 பேர் கைது!

சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் தினம் தினம் கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. ஜெயலலிதா ஆட்சி நடைபெற்றால், குற்றச் செயல்கள் நடைபெறாமல் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கும் என கருத்து நிலவி வந்தது. ஆனால், அவர் ஆட்சியில் இருந்தபோதும் சென்னை மாநகரில் ஒரேநாளில் பல கொலைகள் மிக சர்வசாதரணமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு நடந்த அதிரடி சோதனையில் சுமார் 1513 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் அதிகரித்துவரும் குற்றச் செயல்களை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இரவு சோதனைக்கு உத்தரவிட்டிருந்தார்.

அவரின் உத்தரவின்படி, போலீஸார் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தங்கும் விடுதிகள்,ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், சந்தேகத்தின் அடிப்படையில்,1463 பேரும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 41 பேரும் பழைய குற்றவாளிகள் 6 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் என மொத்தம் 1,513 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

இதைத் தவிர்த்து, புத்தாண்டு தினத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டிய 83 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஒருநாளில் நடத்தப்படும் திடீர் சோதனைகள் மூலம் குற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் தொடர் சோதனைகள், காவலர்களுக்கு சோதனை வாகனங்கள் கொடுப்பது உள்ளிட்ட செயல்கள் மூலமே குற்றச்செயலகளைக் கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் காவலர்கள் கூறுகின்றனர்.

5G நெட்வொர்க் முதல் முயற்சி!!

Qualcomm நிறுவனம் ஸ்மார்ட்போன்களுக்கு Processor தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக இயங்கி வருகின்றது. அதன்வரிசையில் இந்தாண்டின் தொடக்கத்திலே தனது Snapdragon Processor சீரிஸில் 835 Processorஐ அறிமுகப்படுத்தியது. இந்த புராசஸரால் 5 நிமிடம் சார்ஜ் செய்தால் ஸ்மார்ட்போன் 5 மணிநேரத்துக்கு சார்ஜ் நிற்க்கும் தன்மையுடன் தயாரித்திருந்தது Qualcomm.

புதுமைகளை கையாண்டு வரும் இந்த நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற எலக்ட்ரானிக் சன்ஸ்யூமர் கண்காட்சியில் 5G தொழில்நுட்பம் குறித்து பேசியது.

இந்த நிகழ்ச்சியில் புது புராசஸரான Snapdragon 835, அறிமுகப்படுத்திப் பேசிக் கொண்டிருந்த செயளாலர் ஸ்டீவ் மெல்லோன், 5G நெட்வொர்க் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கூடிய விரைவிலே வந்துவிடும் என்று கூடினார். அதற்காக மிக அதிகமான பணத்தை இன்வெஸ்ட் செய்ய இருக்கின்றோம். அதற்கான முதல்படி எடுத்து வைத்துவிட்டோம். 5G நெட்வொர்க் மூலம் 1GB-க்கான ஃபைலை வெறும் 3 வினாடிகளில் பதிவிறக்கம் செய்துவிடலாம். மேலும், 4K தொழில்நுட்பம் கொண்ட வீடியோவை 18 வினாடிகளில் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் கூறியிருக்கிறார்.

இண்டெர்நெட் தனது வளர்ச்சியின் அடுத்தக்கட்டத்தை அடந்துகொண்டிருக்கிறது. 2G நெட்வொர்கை ஆச்சரியத்துடன் பார்த்த, 3G 4G என பலகிக் கொண்டனர். மக்களுக்கு வேகமான நெட்வொர்க் தான் தேவைப்படுகின்றது. ஸ்மார்ட்போன்களும் 4G, அதிக சக்தி கொண்ட பேட்டரி, புராசஸர் என தன்னை தான் வருகின்றன. Snapdragon 835 Processor வேகமாக சார்ஜ் ஆகும் தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன்களுக்கு வேகம் கொடுப்பது என 5G நெட்வொர்க்கின் முதல்படியாக அமைந்திருக்கிறது.

9/1/17

CPS NEWS:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம்
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து,
ஊதிய குழு அமைத்தல்,
இடைக்காலநிவாரணம் 20%

உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற
வேலைநிறுத்தப் போராட்ட ம் அறிவிப்பு

TNGEA மாநில மாநாடு அறைகூவல் தீர்மானங்கள்:

1. CPS ரத்து

2. 8 வதுஊதியக்குழு அமைக்க

3. இடைக்காலநிவாரணமாக 20% வழங்க

4. சிறப்புகாலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்குவரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க

5. Outsourcing,  daily wages முறை ஒழித்து காலி பணியிடங்களில்நிரப்ப

6. சாலைப்பணியாளர்களின்41 மாத பணிநீக்க காலத்திற்கு ஊதியம் வழங்க

தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.

மேற்கண்டகோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்க்கண்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

02.02.2017 மாவட்டதலைநகரங்களில் உண்ணாவிரதம்

05.03.2017 மாவட்டதலைநகரங்களில் பேரணி


18.03.2017 /25.03.2017 வேலைநிறுத்த ஆயத்த மாநாடு


25.04.2017 காலவரையற்றவேலை நிறுத்தம்

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு வரும் ஜனவரி 23ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

இந்த ஆண்டு முதல் மருத்துவப்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுநடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க www.cbseneet.nic.in என்ற
இணையதளத்தில் ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம். மேலும் வரும் மே7ம் தேதி இந்த தேர்வுநாடெங்கிலும் பல பகுதிகளில் நடைபெறும்.

இதற்கானவிண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.1400ம் பிற்படுத்தப்பட்ட மற்றும்பழங்குடியினருக்கு ரூ.750ம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்தக் கட்டணங்களை செலுத்தபிப்ரவரி 1ம் தேதியே கடைசியாகும்.

இந்த தேர்வு முடிவுகள் வரும்ஜூன் மாதம் முதல் வாரத்தில்வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.

வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள்தங்களின் ‘பான் கார்டு’ எண்ணைவரும் அடுத்த மாதம் பிப்ரவரி28-
ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய வருமான வரித்துறைஉத்தரவிட்டுள்ளது.


கருப்புபணத்தை தடுக்கும் விதமாக, செல்லாத ரூபாய்நோட்டு  அறிவிப்புவெளியான கடந்த ஆண்டு நவம்பர்8ந் தேதிக்கு முந்தைய வங்கி , தபால்நிலையடெபாசிட்களையும் ஆய்வு செய்ய வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது.

அதாவது2016ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியில்இருந்து நவம்பர் 8-ந்தேதிக்கு முன்பு வரை வங்கிகள், தபால் நிலையங்களில் செய்யப்பட்ட டெபாசிட்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

நாட்டில்கருப்பு பணத்தையும், கள்ளநோட்டுகளையும் ஒழிக்க பிரதமர் மோடிகடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதிரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாதுஎன அறிவித்தார். அதைத் தொடர்ந்து கருப்புபணத்தைபிடிக்கும் நடவடிக்கைகளை வருமான வரித்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதில் ரூபாய் நோட்டு தடைஅறிவிப்பு காலத்தில் ஜன்தன் வங்கிக் கணக்குகளில்லட்சக்கணக்கில் திடீரென செய்யப்பட்ட டெபாசிட்கள், சேமிப்பு கணக்குகளில் நவம்பர் 9-ந்தேதிக்கு பின் டிசம்பர் 30ந்தேதிவரை ரூ.2.5 லட்சம் வரைசெய்யப்பட்டடெபாசிட்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கருப்புபணம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி, விரைவுப்படுத்தும் விதமாக  வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்கள் கணக்கில் நவம்பர் 9-ந்தேதிக்கு பின் ரூ.2.5 லட்சம்வரை டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால் அவர்களின் கணக்கில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நவம்பர்9 ந்தேதி வரை செய்யப்பட்ட டெபாசிட்குறித்தும்ஆய்வு செய்ய வருமான வரித்துறைதிட்டமிட்டுள்ளது.

இதற்காகவங்கிகள், தபால்நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களின் பான்கார்டுஎண், படிவம் 60 ஆகியவற்றை கேட்டு வருமான வரித்துறைஉத்தரவிட்டுள்ளது. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவரும்வரும் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் தங்களின் பான்கார்டு எண்ணை அளிக்கவும் வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் செல்லாத ரூபாய்நோட்டு அறிவிப்புக்கு பின் ஒருவர் கணக்கில்செய்யப்பட்ட டெபாசிட் குறித்தும், செல்லாத ரூபாய் அறிவிப்புக்குமுன் அவர்கள் கணக்கில் இருப்பில்இருந்த பணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறைமுடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து வங்கிகள் , தபால்நிலையங்களுக்கும்கடந்த 6-ந்தேதி நிதி அமைச்சகத்தின்ேநரடி வரிகள் வாரியம் அதிகாரப்பூர்வஉத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, வங்கி, தபால்நிலையங்களில் பான்கார்டு எண் கொடுக்காதவர்கள் தங்கள்பான்கார்டு எண்களை உடனடியாக கொடுக்கவேண்டும். சில வங்கியில் கணக்குதொடங்கும்போது, பான்கார்டு முறை அறிமுகம் இல்லாதநிலையில் இருந்தாலும், அவர்களும் இப்போது தங்களின்  பான்கார்டு எண்களை உடனடியாக வங்கியில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் பற்றி ஆய்வு.

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள், எந்த பள்ளிகளில்
படிக்கின்றனர்என்பது குறித்த விவரங்களை சேகரிக்ககேரள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


 அரசு சம்பளத்தை வாங்கும், அரசு பள்ளி மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுபள்ளிகளில்தான் படிக்க வைக்கவேண்டும் என்றுஅலகாபாத்உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை பின்பற்றிகேரளாவிலும் நடவடிக்கை மேற்ெகாள்ள மாநில அரசு தீர்மானித்துள்ளது.


இதையடுத்துஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர்என்பது குறித்த விவரங்களை சேகரிக்கமாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாநில கல்வித்துறை இயக்குனர்உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த உத்தரவுக்குகேரளாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குழந்தைகளை இந்த பள்ளியில்தான் படிக்கவைக்கவேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தசட்டத்தில்இடம் இல்லை. தங்கள் குழந்தைகள்எந்த பள்ளியில் படிக்க வைப்பது என்பதுபெற்றோரின் உரிமையாகும் என்று அரசு பள்ளிஆசிரியர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

How To » 1ஜிபி தினசரி வரம்பை மீறி ஜியோ ஹை-ஸ்பீட் தரவு பயன்படுத்துவது எப்படி?

1ஜிபி தினசரி வரம்பை மீறிஜியோ ஹை-ஸ்பீட் தரவுபயன்படுத்துவது எப்படி? ரிலையன்ஸ் ஜியோவின்ஹேப்பி நியூ இயர் சலுகையின்கீழ்
மார்ச் 31 வரை இலவச டேட்டாவைவாடிக்கையாளர்கள் தினசரி பயன்பாடு எல்லையுடன்பெற்று வருகிறார்கள்.


2016- நமக்கெல்லாம்பொதுவாக நடந்த ஒரு நல்லவிடயம் தான் - ரிலையன்ஸ் ஜியோஅறிமுகம். இதுவரை ஜியோ 4ஜிசிம் கார்ட் ஒன்றை கையில்பெறாதவர்கள் தவிர்த்து பிற அனைவருமே ஜியோ2016-ஆம் ஆண்டில் நடந்த ஒருநல்ல விடயம்என்பதை ஒற்றுக்கொள்வார்கள். அதிலும் மிக முக்கியமாகஜியோ வெல்கம் ஆபர் முடிவடையும்நேரத்தில் மேலும் 3 மாதங்களுக்கான அதன் இலவச சலுகைகளைநீட்டிக்கும் (மார்ச் 31, 2017 வரை) வண்ணம் ஹேப்பிநியூ இயர் ஆபர் வழங்கியது.2017-ஆம் ஆண்டிற்க்கும் சேர்த்தேஒரு நல்ல விடயமாக அமைந்ததுஆனால் பயனர்கள் அனைவருக்கும் ஜியோவின் ஹேப்பிநியூ இயர் ஆபரில் ஒருசின்ன வருத்தம் காத்திருந்தது. அதுதான் 1ஜிபி என்ற தினசரிடேட்டா லிமிட் அதாவது ஒருநாளைக்கு இவ்வளவுதான் அதிவேக இண்டர்நெட் என்றதரவு எல்லை. ஆனாலும் கூட1ஜிபி என்று வழங்கப்பட்டுள்ள தினசரிரிலையன்ஸ் ஜியோ 4ஜி வரம்பைமீறி ஜியோ ஹை-ஸ்பீட்தரவு பயன்படுத்த ஒரு வழி இருக்கிறது. அதெப்படி என்பதை பற்றிய தொகுப்பேஇது.

பூஸ்டர்பேக் 1ஜிபி என்ற தரவுஎல்லையை மீறி அதிக வேகத்தில்மீண்டும் உலவ நீங்கள் ரிலையன்ஸ்ஜியோ வழங்கும் பூஸ்டர் பேக்குகளை பயன்படுத்தமுடியும். இதற்கான செலவாக நிறுவனம்6ஜிபி பேக் ரூ.301/- என்றும்மற்றும் 1ஜிபி பேக் ரூ.51/- என்றும் நிர்ணயித்துள்ளது. இதை ஆக்டிவேட் செய்வதும்மிகவும் எளிமையே.!

வழிமுறை#01

உங்கள்மொபைலில், மைஜியோ பயன்பாட்டை திறக்கவும். உள்நுழைந்து லாக்-இன் அல்லதுரிஜிஸ்டர் செய்யவும். உங்கள் ஜியோ தொலைபேசிஎண் தான் உங்கள் பயனர்பெயராகும். இப்போது, நீங்கள் ஜியோ பயன்பாடுகளின்ஒரு பட்டியலை பார்ப்பீர்கள் இப்போது மை ஜியோஎன்பதற்கு அருகிலுள்ள ஓபன் என்பதை டாப்செய்யவும்.

வழிமுறை#02

யூஸேஜ்என்பதை டாப் செய்து - டேட்டாஎன்பதை டாப் செய்யவும். நீங்கள்1ஜிபி என்ற டேட்டா எல்லைகடந்து விட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்த இதைசெய்ய வேண்டும். ஜியோ வேகம் எப்போதுமேநிலையானதாக இருக்காது ஏனெனில் மெதுவான இணைப்பில்இருக்க முடியும். ஆக டேட்டா எல்லையைசோதிப்பது அவசியமாகிறது.

வழிமுறை#03


நீங்கள்வரம்பை கடந்து விட்டீர்கள் என்றால், பேக் ஐகானைடாப் செய்து மீண்டும் மெயின்ஸ்க்ரீனுக்கு திரும்பி போகவும். ரீசார்ஜ் ஐகானை டாப் செய்யவும், பின்னர் பூஸ்டர் ஐகானை டாப்செய்யவும். நீங்கள் விரும்பும் திட்டத்தைதேர்வு செய்து வலது பக்கத்தில்விலை ஆப்ஷனை டாப் செய்யவும். அதன் வழியாக நீங்கள் ஜியோமணிஆப்பிற்குகொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு கிரெடிட், டெடிபிட்அல்லது நெட் பேங்கிங் வழியாககட்டணம் செலுத்த முடியும்.வழக்கமான4ஜி வேகம் அவ்வளவு தான்இப்போது நீங்கள் வழக்கமான 4ஜிவேகத்தில் உலவ முடியும். 6ஜிபிபேக் மூலம்நீங்கள் ரூ.4 சேமிக்க முடியும், அதன் தரவு எல்லை தினமும்மறுகட்டமைக்கப்படும் மற்றும் இந்த பேக்28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நமக்குத் தேவை புள்ளிவிவரம் மட்டுமே,வகுப்பறை அல்ல!

'நமதுவகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவர வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம் எவ்வளவு, எத்தனைபேர் நூற்றுக்கு
நூறு, ஸ்டேட் ரேங்க்எத்தனை பேர், கடந்த வருடத்தைவிடஎத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி... எனஎண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.


இந்தப்புள்ளிவிவரப் பட்டியலில் முந்திச் செல்லும் பள்ளியை நோக்கி பெற்றோர்கள்ஓடுகின்றனர். ஒரு வகுப்பறை என்பது, புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல; அது ஒருதலைமுறை தன் சிந்தனையை உருவாக்கிக்கொள்ளும்உயரிய இடம்.

அதற்குமனிதம் சார்ந்த வகுப்பறைகளே தேவை. அப்படி ஒரு வகுப்பறை இருந்தால்10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வுமுடிவுகள் வரும்போது இத்தனை வெற்றுக்கூச்சல்கள் கேட்காது.

உலகின்எந்த நாட்டிலும் பள்ளித் தேர்வு முடிவுகளின்போதுஇத்தனை ஆரவாரக் கூச்சல்கள் ஒலிக்காது.

 மாணவர்கள், இந்தப் புள்ளிவிவர வகுப்பறையைஅடியோடு வெறுக்கின்றனர். அதனால்தான் ஆண்டு இறுதித் தேர்வுமுடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து வீசுகிறார்கள்.

அந்த மனப்பான்மையே, அதன் பிறகு அவர்களிடம்புத்தக வாசிப்புப் பழக்கத்தையே அடியோடு ஒழிக்கிறது. ஆண்டுமுழுவதும் தன் மகிழ்ச்சியை, சுதந்திரத்தை, குழந்தைத்தன்மையைக் காவு வாங்கிய புத்தகத்தைஅவமதிக்கும் அந்தக் கணம், அவன்பழிவாங்கியவனைப்போல் உணர்கிறான்.


 இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டுநமது பாடத்திட்டத்தை, வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்கவேண்டும். இல்லையெனில், யாரோ 10 மாணவர்கள் ரேங்க்வாங்கியது கொண்டாடப்படும் சத்தத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் மன அழுத்தம் கண்டுகொள்ளாமல்விடப்படும்!''

RMSA POSTS PAY ORDER FOR 6872 BT & 1590 PG POSTS FOR 3 MONTHS ( FROM JAN'17 TO MARCH'17)

13ம் தேதி வரை கிரெடிட், டெபிட் கார்டு ஏற்கப்படும்: பெட்ரோல் முகவர்கள் சங்கம்!!!

கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்கப்படாதுஎன்ற முடிவை பெட்ரோல்
முகவர்கள்சங்கம் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.

அதன்படி, ஜன., 13 ம் தேதி வரைகிரேடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்திபெட்ரோல், டீசல் பெறலாம்.

1 சதவீதவரி

ரூபாய்நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பிறகுமத்திய அரசு ரொக்கமில்லா பரிவர்த்தனைஅதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. பெட்ரோல் பங்குகளில் வங்கி கிரெடிட், டெபிட்கார்டுகளை பயன்படுத்தினால் 0.75 சதவீதம் விலை குறைப்புஅளிக்கப்படும் என அறிவித்தது. இதற்கிடையே, ஹச்.டி.எப்.சி., ஆக்சிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்டசில வங்கிகள் பெட்ரோல் பங்குகளின் மின்னணு பரிவர்த்தனைக்கு 1 சதவீதவரியை விதித்தன. மேலும், அவர்களின் வங்கிகணக்கில் பணத்தை தாமாதமாக பரிமாற்றம்செய்தன. இதனால், தங்கள் வருமானம்பாதிக்கப்படுவதாக கூறிய பெட்ரோல் முகவர்கள்சங்கம் இன்று முதல் கிரெடிட், டெபிட் கார்டுகளை வாங்க மாட்டோம் எனஅறிவித்தது. இந்நிலையில், அந்த முடிவு தற்காலிகமாகஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முடிவுஒத்திவைப்பு

இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலிய முகவர்கள் சங்க தலைவர், கே.பி.முரளி கூறியதாவது:

மின்னணுபரிவர்த்தனைக்கு விதிக்கப்படும் 1 சதவீத வரியால் பெட்ரோல்பங்கு முகவர்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பான, எங்கள்பிரச்னைகளை எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம்தெரிவித்தோம். அவர்கள் மத்திய அமைச்சருடன்பேசினார்கள். பின்னர், ஜன.,13 வரை 1 சதவீதவரி பிடித்தம் செய்யப்படாது என அவர்கள் உறுதிஅளித்துள்ளனர். அதை ஏற்று எங்கள்முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். ஜன.,13ம் தேதிவரை கார்டுகள் ஏற்கப்படும். அதற்குள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவுகாண முயற்சிப்போம். பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாவிட்டால் கிரெடிட், டெபிட் கார்டுகள் வாங்கமாட்டோம்.

இவ்வாறுஅவர் கூறினார்.

SERVICE REGISTER - ல் (SR) விடுபட்ட விபரங்களை பதிவு செய்வது போல் இதுவரை பதியப்பட்ட விபரங்களை சரிபார்பது மிகவும் முக்கியமானது

*பணிப்பதிவேட்டில் விடுபட்ட விபரங்களை பதிவு செய்வது போல் இதுவரை பதியப்பட்ட விபரங்களை சரிபார்பது மிகவும் முக்கியமானது*
பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ள பதிவுகளில் உள்ள
1. ந.க. எண் / தேதி
2. வரிசை எண்
3. பதிவு எண்
4. வழங்கப்பட்ட தேதி
5. தேர்ச்சி பெற்ற தேதி
6.பணியேற்ற தேதி மற்றும் மு.ப/பி.ப
7.விடுவித்த தேதி மற்றும் மு.ப/பி.ப
*மேற்கண்ட அனைத்தையும் உங்களிடம் உள்ள சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பது மிகவும் அவசியம் ஆகும்*
💥 அதே போல் துறை சார் அலுவலரின் கையொப்பம் முத்திரை இல்லாத பதிவுகளை சுட்டிக்காட்டவும்.
💥 வாரிசுதாரர் பெயர்களை பதிவு செய்யும் பொழுது பின்புறம் இரண்டு ஆசிரியர்களிடம் சாட்சிக் கையெழுத்து வாங்கிய பின் தங்களின் கையொப்பத்தையும் செய்யவும்.
💥 ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு பெற்றதற்கான பதிவுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டுள்ளதா?
💥 பணி நியமனம் பெற்றது முதல் 31.12.2016 வரை பணிப்பதிவேடு சரிபார்த்தல் என்ற பதிவு தொடர்ச்சியாக உள்ளதா...?
💥 ஈட்டிய விடுப்பு கையிருப்பை கணக்கீடு செய்ததில் தவறுகள் ஏதேனும் உள்ளதா..? (365÷21.47=?)
💥 அதே போல் உயர் கல்வி பயின்ற அனைத்து படிப்பிற்கும் பட்டயச்சான்றினை (கான்வகேசன்) பதிவு செய்வது அவசியம் ஆகும்.
📡📡📡📡📡📡📡📡
🔴 *பணிப்பதிவேட்டினை சரிபார்ப்பதற்கான check list -ஐ கொண்டு சரிபார்க்கும் பொழுது*
10th, 12th,
DTEd,
UG degree,
PG degree,
B.Ed,
M.phill/M.Ed,
போன்ற சான்றிதழ்களின் நகல்கள் (அனைத்திற்கும் பட்டயச்சான்று அவசியம்)
*{ இதுவரை பதிவு செய்யாத கல்வித் தகுதியினை பதிவு செய்ய ஒரிஜினல் சான்றிதழையும், பதியப்பட்டதை சரிபார்க்க நகலினையும் கொண்டுசெல்லவும் }*
🔴 துறை தேர்வு தேர்ச்சி பெற்ற ஆணை,
🔴 CPS / TPF எண்,
🔴 துறை முன் அனுமதி /பின் அனுமதி,
🔴 உண்மைத்தன்மை சான்றிதழ்கள்,
🔴 பணியேற்பு ஆணை,
பணிவிடுப்பு ஆணை,

8/1/17

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக பா.வளர்மதி நியமனம்

RTI - CPS-ல் செலுத்திய தொகையினை வரம்பைத்தாண்டி 80CCD(1B)-ல் கூடுதலாகவும் கழிக்கலாம்!

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு தீவிரம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட தலைமைஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வி ஆண்டில்காலியாக உள்ளன. இவற்றை
பதவிஉயர்வு மூலம் நிரப்புவதற்கு, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, நேரடி நியமனத்தில் வந்த ஆசிரியர்கள் மற்றும்ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர்கள் என, இரண்டு பட்டியல்தயாரிக்கப்படுகிறது. எனவே, விதிகளின்படி பணிமூப்புவிபரங்களை, வரும், 30க்குள், பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்குஅனுப்ப, மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


பட்டியல்தயாரிப்பு பணியில் விதிமீறல்கள், பிழைகள்ஏற்படக் கூடாது எனவும், சி.இ.ஓ.,க்கள்எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டங்களில் இருந்து வரும் பெயர்விபரங்களை, தலைமை அலுவலக ஆவணங்களுடன்ஒப்பிட்டு, பதவி உயர்வுக்கான தோராயபட்டியல், மூன்று மாதங்களில் இறுதிசெய்யப்படும். மார்ச் இறுதியில், இறுதிபட்டியல் தயாராகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.