யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/2/17

இன்றைய #TET வெற்றி டிப்ஸ்*

*பாடவாரியாக நாட்கள் ஒதுக்கி முழு முயற்சியுடன் படிக்கவும்
* தேர்வு காலம் அருகில் உள்ளதால் ஒரு நாளுக்கு அதிகபட்சம் 14-15
மணி நேரம் படிப்பது பயனளிக்கும்
* ஆன்லைனில் காலம் செலவழிப்பதை குறையுங்கள். காலை மாலை 1 மணி நேரம் மட்டும் மொபைலை பயன்படுத்தி படியுங்கள்
* முழு புத்தக வாசிப்பு அவசியம்
*எந்நிலை வந்தாலும் மனம் தளராதீர் . உழைபிற்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் உண்டு

*நன்றி*-Alla Baks

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணியிடங்கள், நிர்வாக அலுவலர் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதால் ஊக்க ஊதியம் வழங்க இயலாது என அரசு அறிவிப்பு

EMISல் மாணவர்களின் விவரங்கள் சரிப்பார்க்க கீழ்காணும் முறையைப் பயன்படுத்தலாம்.

Step-1.
ஒருபள்ளியை Open செய்த பிறகு அதில் வகுப்பு வாரியாக
மாணவர்களின் Total இருக்கும்.

Step-2.
அதில் ஒரு வகுப்பை Click செய்யவும்.
Open ஆன வகுப்பிற்கு மேலே Download Child Profile என்று இருக்கும்.

Step-3.
அதைClick செய்யவும்.
Save செய்யவா என்று கேட்கும் பிறகு OK கொடுக்கவும்.

Step-4.

Save ஆன File யை Open செய்யவும் Excel Format இருக்கும். அதில் ஒரு வகுப்பில் நாம் செய்த அனைத்து மாணவர்களின் தகவல்களும் இருக்கும். அதை சரி பார்த்து மீண்டும் Update செய்யலாம். இதேபோல் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வகுப்பையும் Print எடுத்து சரிபார்த்து Update செய்தால் நம்மால் சரியான புள்ளி விவரங்களை கொடுக்க முடியும்.

FLASH NEWS : 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி
* வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஒரு கோடி குடும்பங்களைஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்.
* இந்தியாவை தொழில்நுட்ப பலமிக்க நாடாக மாற்றுவதே அரசின் இலக்கு.
* விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டில் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்புக்காக நபார்டு மூலம் ரூ.8000 கோடி வழங்கப்படும்.
* கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ தூரத்துக்கு புதிய சாலை அமைக்கப்படும்.
* சிறுகுறு விவசாயிகள் தடையின்றி எளிதாக கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* 2018, மே ஒன்றாம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தப்படும்.
விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி
* நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 361 பில்லியன் டாலராக உள்ளது.
* ரயில்வேத்துறை சுதந்திரமாக இயங்கும்
* வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க வழி ஏற்படும்.
* விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்கு இலக்கு (கடந்த ஆண்டு சுமார் 9 லட்சம் கோடி)
* உலக பொருளாதார வளர்ச்சி 2017ல் 3.4 ஆக இருக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது.
* உலக பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும் இந்திய பொருளாதாரம் நிலையாக உள்ளது.
* பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13,000 கோடி இலக்கு.(கடந்த ஆண்டு ரூ.5,500 கோடி)
* கச்சா எண்ணெய் விலையில் நிச்சயமற்ற நிலை நிலவுவது சவாலாக உள்ளது.
* பல்லாண்டு வரி ஏய்ப்பை தடுக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கை உதவியுள்ளது.
* பணமதிப்பு நீக்க பாதிப்பை நீக்க புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.
* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 7.7 சதவீதம் அதிகரிக்கும்.

அமெரிக்காவால் பாதிப்பு
* அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
* இரண்டரை ஆண்டுகளில் பாஜக அரசு நிர்வாக சீர்திருத்தங்களை எடுத்துள்ளது.
* நாட்டின் முக்கியமான பொருளாதார காரணிகள் திருப்திகரமான உள்ளன.
* பணமதிப்பு நீக்கத்தின் விளைவு அடுத்த ஆண்டு தெரியவரும்.
* ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்தது.
* கறுப்புப் பணத்திற்கு எதிரான பணமதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது.
* வேலைவாய்ப்பை உருவாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம்.
* பணமதிப்பு நீக்கம் என்ற முக்கியமான முடிவை அரசு செயல்படுத்தியுள்ளது.
* ஜிஎஸ்டியில் ஒருமித்த கருத்தை எட்ட உதவிய அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி.
* பண  மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டிற்கு நீண்ட கால பலனளிக்கும்.
* கடந்த ஓராண்டில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
* அரசின் கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
* வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் 2016ல் 36 சதவீதம் உயர்ந்துள்ளது.
* இளைஞர் நலன், வேலைவாய்ப்புக்கு அரசு முக்கியவத்தும் கொடுத்து வருகிறது.
* மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
* உலகப் பொருளாதாரம் நிலையாக இல்லாத நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
* நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

2016-2017-ஆம் ஆண்டின் வருமான வரி விகிதங்கள் விவரம்..!

நடப்பு நிதியாண்டில், அதாவது 2016-17ஆம் ‌ஆண்டில் தனிநபர்
வருமான வரி விகிதங்களை தெரிந்து கொள்வோம். இதில் இன்று மாற்றம் செய்யப்பட்டால், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், அதாவது அடுத்த நிதியாண்டில் அமலுக்கு வரும். தற்போதைய நிதியாண்டில்,

*ஆண், பெண் இருபாலருக்கும் ஆண்டு வருமானம் இரண்டரை லட்ச ரூபாய் வரை வரி இல்லை.
*இரண்டரை லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை வருமானத்துக்கு 10 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. 5 லட்சத்தில் இருந்து 10 லட்ச ரூபாய் வரை வருமானத்துக்கு 20 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.

*10 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள வருமானம் முழுவதற்கும் 30 சதவிகித வரி செலுத்த வேண்டும்.

*இந்த 3 பிரிவுகளில் செலுத்தப்படும் வரித் தொகை மீது 2 சதவிகித கல்வி வரி, 1 சதவிகித கல்விக் கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது.

*60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை வரி இல்லை.

*3 லட்சத்துக்கு மேல் 5 லட்ச ரூபாய் வரை 10 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.

*5 லட்சத்துக்கு மேல் 10 லட்ச ரூபாய் வரை 20 சதவிகிதமும், 10 லட்ச ரூபாய்க்கு மேல் 30 சதவிகிதமும் வருமான வரி செலுத்த வேண்டும். வரித் தொகை மீது 2 சதவிகித கல்வி வரி, 1 சதவிகித கூடுதல் உயர்கல்வி வரி ஆகியவை மூத்த குடிமக்களுக்கும் பொருந்தும்

*80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கு 5 லட்ச ரூபாய் ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது

*5 லட்சம் முதல் 10 ‌லட்ச ரூபாய் வரை 20 சதவிகித வரியும், 10 லட்ச ரூபாய்க்கு மேல் 30 சதவிகிதமும் வரி செலுத்த வேண்டும். கல்விக்கான வரிவிதிப்புகள் இவர்களுக்கும் பொருந்தும்

வருமான வரி விகிதங்கள் இவ்வாறு இருப்பிலும், மொத்த வரித் தொகையில் 5 ஆயிரம் ரூபாய் வரை வரிக்கழிவு அனுமதிக்கப்படுகிறது. அதன் பிறகும் வரி செலுத்த வேண்டியிருப்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் ஒன்றரை லட்ச ரூபாய் வரை பல்வேறு சேமிப்பு மற்றும் செலவுக்கான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. காப்பீடு பிரீமியம், குழந்தைகளின் கல்விக் கட்டணம், மியூச்சுவல் ஃபண்ட், வருங்கால சேமிப்பு நிதி, பொது வருங்கால வைப்பு, அஞ்சலக பத்திரங்கள் மற்றும் வீட்டுக் கடனில் திருப்பிச் செலுத்தும் அசல் தொகை ஆகியவை இதில் அடங்கும்.

தவிர, மருத்துவக் காப்பீடு பிரீமியம், தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றுக்கும் முறையே 30,000 மற்றும் 50,000 வரை வரிவிலக்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும், வீட்டு வாடகையை கழித்துக் கொள்ளவும், வீட்டுக் கடன் வட்டிக்கு 2 லட்ச ரூபாய் வரையும் வரிவிலக்கு அனுமதிக்கப்படுகிறது.


இந்தவரிவிலக்குகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வோருக்கு 6 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டிய தேவையில்லாத நிலை உள்ளது.

RTI - IT - SCHOOL FEES DEDUCTION

கற்பிக்கும் வேலை செய்யவிடுங்கள்.. ஆசிரியர்கள் குமுறல்

தயவுசெய்து மாணவர்களுக்கு கற்பிக்க நேரம் கொடுங்கள்.

1)EMIS update செய்ய கணிணி செண்டர் செல்லவும்,போட்டோ


2)ஆதார் எண் எடுக்க அலையவும்

3) இரும்பு சத்து,குடற்புழு நீக்க மாத்திரைகளை தேடிய அலையவும் அனுப்பாதீர்.

4) SMC பயிற்சி,IED பயிற்சி, MATHS KIT பயிற்சி.. என்று பள்ளிக்கே செல்லாமல் பயிற்சிக்க்கே செல்லும் நிலை.

5) தினந்தோறும் அறிக்கை புகைப்பட நகலுடன் அனுப்பி ,எதை எதற்கு அனுப்புவது என்று குழப்பம் ஆகிவிட்டது.

6)இன்றாவது பள்ளியில் சென்று கற்பிக்கலாம் என்று அமர்ந்தவுடன் ,ஒரு SMS..உறுதிமொழி எடுத்து புகைப்படத்துடன் அறிக்கை அனுப்பவும் என்று.
. எல்லாவற்றையும் பொறுத்து பாடம் கற்பிக்கலாம் என்று அமர்ந்தால் இரண்டு தலை தெரிகிறது .

நாங்கள் other Union Aeeo+ BRT..84 பதிவேடுகள் ,வாசிப்பு பயிற்சி,அடிப்படை கணக்குகள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று ஒருநாள் முடிந்துவிடுகிறது..


அடுத்த நாள் அதே யூனியன்brt போனில் பயிற்சிக்கு ஆள் பத்தவில்லை உடனடியாக 2_பேரை அனுப்பவும்..இது என்ன வேலைக்கு ஆள் பற்றாக்குறையா ? என்ன கொடுமை சார்..

இதுஎல்லாவற்றையும்விட எங்கே போட்டி,தேர்வு நடத்தினாலும் பாடிகார்டு போல் மாணவன் பின்னால் சென்று,முடித்து விட்டு ,பத்திரமாக வீட்டிற்கு அனுப்பவேண்டும்..


இதைடைப் செய்த ஆசிரியரை தேடுகிறேன்..அவர்மூலமாவது விடியல் நமக்கு கிட்டுமா?

TAX NEWS-ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானத்திற்கு 5% வரி ஆக குறைப்பு

Image may contain: 2 people
5% ஆக ரூ.   2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை மாத ஊதியம் பெருவோருக்கான வருமான வரி 10%ல் இருந்து 5% ஆக 
குறைப்பு

#வருமான வரி தொகையில் மாற்றமில்லை

 தனிநபர் வருமன வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கத்தில் இருக்கும்.

2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

📘4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். (DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any)

📘housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

📘housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- மற்றும்
அசல் 80c ல் கழித்துக் கொள்ளலாம்.



📘housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

📘CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் NPS திட்டத்தில் சேர்ந்து தொகை செலுத்தி இருந்தால், செலுத்திய தொகையை அதிகபட்சமாக ரூ.50,000/- வரை கழித்துக் கொள்ளலாம்.

📘School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது.

📘LIC : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது.

📘PLI : பிரீமியம் தொகையுடன் service Tax யும் சேர்த்து கழித்துக் கொள்ளலாம்.

📘Taxable income 5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.5000/- கழித்துக்  கொள்ளலாம். பிரிவு 87A.

📘Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும் .

EMIS மற்றும் AADHAR பதிவு பற்றி தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலக மீளாய்வு கூட்டத்தில் கூறப்பட்ட விபரங்கள்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடத்த கோரிக்கை!!

அந்த பணியிடங்களை நிரப்பாததால் 1,060 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்ப ஆசிரியர்களை தேர்வு செய்து தருமாறு பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடந்த வருடம் கடிதம் அனுப்பினார்.



இந்த இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தித்தான் தகுதியானவர்களை நிரப்ப வேண்டும். ஆனால் இதுவரை எழுத்து தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் முதுநிலை படிப்புடன் பி.எட். முடித்து வேலைக்காக காத்திருக்கும் சிலர் நேற்று சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்தனர். அவர்கள் கூறுகையில், உடனடியாக முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை நடத்தவேண்டும் என்று தெரிவித்தனர்.

நாடு முழுவதும் பிப்ரவரி 28-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் !!

இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

பணம் எடுப்பதற்கான உச்ச வரம்ப்பை முழுவதுமாக நீக்க கோரியும், வங்கிகள் தனியார் மயமாக்கும் நடவடிக்கை முடிவை கைவிட 
கோரியும்,பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது..

அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு

எம்.பி.ஏ., - எம்.இ., உள்ளிட்ட, இன்ஜி., படிப்புகளுக்கான, 'டான்செட்' தேர்வுக்கு, பிப்., 20 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பு: 
அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்ற கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் போன்ற படிப்புகளில், வரும் கல்வி ஆண்டில் சேர விரும்புவோர், 'டான்செட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான, இத்தேர்வுக்கு, ஜன., 29ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. பிப்., 20 வரை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்.சி.ஏ., - எம்.பி.ஏ.,வுக்கு, மார்ச், 25லும், மற்ற படிப்புகளுக்கு, மார்ச், 26லும் தேர்வுகள் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

பிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு

பிளஸ் 2 தனித்தேர்வர்கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, கூடுதல் கால அவகாசம் தரப்பட்டு உள்ளது.தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவிப்பு:
வரும் மார்ச்சில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், தங்களின் ஹால் டிக்கெட்டை, ஜன., 25 முதல், 29 வரை, பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்படுகிறது. தேர்வர்கள், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா?

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்களுக்கு, அரசு கல்லுாரிகளில் தனி இட ஒதுக்கீடு கிடையாது,'' என, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் தெரிவித்து உள்ளார்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு, அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், கடந்த ஆண்டு மட்டும், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல், அனைத்து மாநில மாணவர்களும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இந்த தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்க முடியுமா என்பது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் கூறியதாவது: வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், இந்தியாவில் நடக்கும், 'நீட்' தேர்வில் பங்கேற்கலாம். அவர்களுக்கு, வெளிநாடுகளில் தேர்வு மையங்கள் கிடையாது.

அதில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றால், மத்தியஅரசின் ஒதுக்கீட்டிலோ, தமிழக ஒதுக்கீட்டிலோ இடங்கள் கிடையாது. ஆனால், அவர்களால், தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெற முடியும். அதற்கு, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.இவ்வாறு அவர் கூறினார்."

சி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 
தனியார் பள்ளிகள் இணைய, ஆன்லைன் முறையில், விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் கல்விஆண்டில், இணையும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் பணிகள் முடிந்து விட்டன.
இந்நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ.,யில் இணைய விரும்பும் பள்ளிகளிடம், ஆன்லைனில் விண்ணப்பம் பெறும் பணி, ஜன., 2 முதல், துவங்கி உள்ளது. 'பள்ளிகள், http://cbseaff.nic.in என்றஇணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம். ஜூன், 30 வரை, விண்ணப்ப பதிவு நடக்கும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

இன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது.

வரும் கல்வி ஆண்டில், இன்ஜி., மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், கல்வி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்க, அரசு பல்வேறு விதிமுறைகள் வகுத்துள்ளது. 
பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க, பள்ளிக்கல்வித் துறையிலும், கல்லுாரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்திலும், கல்வி கட்டண கமிட்டிகள் செயல்படுகின்றன.இந்த கமிட்டிகள், பள்ளி, கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு,மாணவர் எண்ணிக்கை, பாடத்திட்டம், கூடுதல் வசதிகள் அடிப்படையில், கட்டணம் நிர்ணயிக்கிறது. வரும் கல்வி ஆண்டில், இன்ஜி., மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், தற்போதுள்ளதை விட, அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதற்கான, கட்டண நிர்ணய பணி துவங்கி உள்ளது.

அனைத்து இன்ஜி., கல்லுாரிகள், முதுநிலை அறிவியல் படிப்பு நடத்தும் கலை, அறிவியல் கல்லுாரிகள், தங்கள் விண்ணப்பங்களை, பிப்., 28க்குள் அனுப்புமாறு, சுயநிதி கல்லுாரிகள் கட்டண நிர்ணய கமிட்டி அறிவித்துள்ளது. 'புதிய கட்டணம், மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்' என, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.

பள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: அமைச்சர் பாண்டியராஜன்

வரும் கல்வியாண்டில் இருந்து அரசின் பள்ளிப் பாடத் திட்டத்தில் காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபூபக்கர் பேசியது: எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அரசின் பள்ளி பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருந்த காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாறு எடுக்கப்பட்டுவிட்டது. எனவே, அரசு மீண்டும் அவரது வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அப்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் குறுக்கிட்டுக் கூறியது: வரும் கல்வியாண்டில் இருந்து அரசின் பாடத்திட்டத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்றார்.

997 சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள 997 சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இப்பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

கடலூர்
 மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 400 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 597 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பூர்த்திசெய்திட பிப்.1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 இந்தப் பணியிடங்கள் அனைத்துக்கும் விண்ணப்பிப்பதற்கு பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் ஆவர்.  

 சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் நகராட்சிகளில் இனச் சுழற்சி விவரம் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான வயது வரம்பு 40-க்கு மிகாமலும், கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
 பழங்குடியினருக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி போதுமானது. சமையல் உதவியாளர் பணிக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான வயது உச்ச வரம்பு 21-40. கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி போதுமானது.
 பழங்குடியினர் என்றால் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. மேற்கண்ட இரு பணியிடத்துக்கும் விண்ணப்பிப்போரது இருப்பிடம் காலிப்பணியிடத்திலிருந்து 3 கி.மீ. சுற்றளவுக்குள் இருக்க வேண்டும்.
 எனவே, தகுந்த சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகர்மன்ற அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பி வைக்கப்படும் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

TET-ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கணிதத்தை எப்படிப் படிக்கலாம்?

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகும் வாசக நண்பர்களே! இந்தப் பதிவில் கணிதப் பாடத்தை நாம் எவ்வாறு படிக்க வேண்டும் என்பதை காண்போம்!


மொழி, சமூகம், அறிவியல், பொருளாதாரம் என எதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும் அதற்கான புத்தகங்களைப் படித்தாலோ, ஒருவரிடமிருந்து விளக்கத்தைக் கேட்டாலோ நமக்குத் தேவையான தகவலைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், கணிதத்தை அப்படித் தெரிந்துகொள்ள முடியாது.

தொடர்மொழி

உதாரணமாக, 8-ம் வகுப்பு அறிவியலையோ, சமூக அறிவியலையோ புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நேரடியாகப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், 8-ம் வகுப்புக் கணிதத்தைத் தெரிந்துகொள்வதற்காக நேரடியாகப் படித்தால் நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடியாது. அதற்கு முன்பு 7-ம் வகுப்பு வரை உள்ள கணிதப் புத்தகங்களைப் படித்திருந்தால் மட்டுமே 8-ம் வகுப்புக்கான கணிதப் புத்தகம் புரியும். ஏனெனில், 7-ம் வகுப்பு வரை படித்த கணிதத்தின் தொடர்ச்சியே 8-ம் வகுப்பில் தொடரும். எனவே, கணிதத்தை ஒரு தொடர்மொழி (Sequential Language) என அழைக்கலாம்.

இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதால்தான் நாம் 9-ம் வகுப்பு படிக்கும்போதும், 11-ம் வகுப்பு படிக்கும்போதும் அதைப் படிக்காமல் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புப் பாடங்களை நேரடியாகப் படிக்க மாணவர்களை வற்புறுத்துகிறோம். இதனால்தான் அவர்கள் மனப்பாடம் செய்து படிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவரால்கூடக் கணிதத்தில் அதிக மதிப்பெண்களை வாங்க முடியவில்லை. ஏனெனில் அது ஒரு தொடர்மொழி என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.
பள்ளியில், குறிப்பாக 10-ம் வகுப்பில் 100 க்கு 100 எடுக்கும் மாணவர்கள் 12-ம் வகுப்பில் தேர்ச்சிகூடப் பெற முடியவில்லை. 12-ம் வகுப்பில் சிறப்பாக மதிப்பெண் பெற்றவர்களால் கல்லூரி வரும்போது குறைந்தபட்ச மதிப்பெண்கள் கூட எடுக்க முடியவில்லை.
திடீரென்று மாணவர்கள் எதிர்கொள்ளும் கணிதப் பாடங்கள் மிகவும் கடினமான சூழ்நிலைக்குள் தள்ளிவிடுகின்றன.

கணிதம் தனித்திறன்

கணிதம் கற்பது மற்ற பாடங்களைக் கற்பது போன்று அல்ல. இதற்கென்று வித்தியாசமான கற்கும் திறன் தேவைப்படுகிறது. மற்ற பாடங்களுக்கு அவற்றுக்கான புத்தகங்களைப் படித்து, புரிந்துகொண்டு பின்பு தேர்வில் எழுதினாலே போதும். ஆனால், கணிதத்தில் வெற்றிபெற இன்னும் சில உத்திகளைக் கையாள வேண்டும்.
கணிதம் ஒரு வேற்று மொழி போன்றது. முக்கோணவியல் ஒரு மொழி; அதில் Sin ,Cos போன்றவை மொழியின் புது வார்த்தைகள். இந்தப் புது வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளாமல், மொழியைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு நிலைகளைத் தெரிந்துகொண்டாலே போதும், நீங்கள் கணிதத்தில் சிறந்து விளங்கலாம்.
1. புரிந்துகொள்ளுதல்
2. புரிந்துகொண்டதை வெளிப்படுத்துதல்
3. கற்றுக்கொண்டதைப் பயன்படுத்துதல்
4. மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தல்
உதாரணத்துக்குச் சிலவற்றை பார்க்கலாம்.

இமயமலையைப் பற்றிப் படிக்கிறோம், அதன் நீளம், உயரம் முதலான அதன் தன்மைகளைத் தெரிந்துகொள்கிறோம். பின்பு தேர்வில் மீண்டும் நினைவுகூர்ந்து எழுதுகிறோம். நீங்கள் இமயமலையைப் பற்றிப் படித்தது உன்மையா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள நேரில் சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கணிதப் பாடத்தில் நீங்கள் மேற்கண்ட முறையில் தேர்ச்சி பெற முடியாது.

பயன்படுத்தும் திறன் இல்லை யெனில், அதனைக் கணிதத்துக்கான அறிவாகச் சொல்ல முடியாது.
இசை, ஓவியம், பிற மொழிகளைக் கற்றல் ஆகியவை போன்றுதான் கணிதமும் ஒரு தனித்திறன்.