யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/2/17

நீட் தேர்வைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் வருகிறது நுழைவுத் தேர்வு!

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் தேசிய பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
அதன்படி, வருகின்ற 2018-19 கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு, ஒற்றை நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகளை வகுக்க, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில், இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு, ஒரே நுழைவுத் தேர்வை நடத்த, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டலில் வாழ்க்கை சான்று சமர்ப்பிக்க பிப்., 28 கடைசி

ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற, ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், வைப்பு நிதி அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும், 
ஆதார் சேர்க்கை செயல்முறை முகாமில், பிப்., 28க்கு முன், தங்களது, ஆதார் எண் மற்றும் ஜீவன் பிரமாண பத்ரம் என்ற, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சான்றிதழை, வங்கியில் சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது அருகில் இருக்கும் பொது சேவை மையத்திற்கோ சென்று பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு அட்டை, பி.பி.ஓ., எண், மொபைல் எண் ஆகிய தகவல்கள் தேவைப்படும்.

வரும், 28க்குள் பதிவு செய்யாத ஓய்வூதியதாரர்களுக்கு, மார்ச் 1 முதல், ஓய்வூதியம் வங்கி கணக்கில், வரவு வைக்கப்பட மாட்டாது என, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி முதன்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர் களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' - பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை.

பள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர் களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

தமிழக பட்ஜெட், அடுத்த மாதம் தாக்கலாக உள்ளது. அதனால், கல்வித் துறை உட்பட அனைத்து துறைகளிலும், முன்னேற்பாடுகள் துவங்கி உள்ளன. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியம், பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தல்,
அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்புதல், தேர்வு பணிகள் உள்ளிட்டவற்றில், தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களுக்கு, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகளான,
டி.இ.ஓ.,க்களும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களும், பல கோப்புகளை, மாதக் கணக்கில் கிடப்பில் போட்டுள்ளது தெரிய
வந்தது. அதுபற்றி, சி.இ.ஓ.,க்களிடம், பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டு, நிர்வாகத்தில் சிக்கலை ஏற்படுத்தினால்,
சம்பந்தப்பட்ட ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதே போல, டி.இ.ஓ., மற்றும் சி.இ.ஓ.,க்கள் புகார்களுக்கு இடமின்றி செயல்படவும், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.

விளம்பர எண் குழப்பத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறதா : போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கலக்கம்.

சீருடை பணியாளர் தேர்வாணைய குழப்பத்தால், தமிழக காவல் துறையில் 15 ஆயிரத்து 711 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் பெரும்பாலான மனுக்கள் நிராகரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு மே 21 ல் நடக்கிறது. இரண்டாம்நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 4,615 இடங்களும், இரண்டாம்நிலை காவலர்(ஆயுதப்படை) பிரிவில் 8,568 இடங்களும், இரண்டாம்நிலை சிறை காவலர் 1,016 இடங்களும், தீயணைப்போர் 1,512 இடங்களும் என மொத்தம் 15,711 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை, தபால் அலுவலகங்களில் இளைஞர்கள், ஆர்வமுடன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஜன.,23ல் சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், விளம்பர எண் 116 என குறிப்பிடப்பட்டிருந்தது. விண்ணப்பத்தை நிரப்பும்போது, விண்ணப்பதாரர் இந்த எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த எண்ணை விண்ணப்பத்தின் 'ஓ.எம்.ஆர்.,' சீட்டில் எப்படி குறிப்பது என்பது குறித்து தேர்வாணையம் உதாரணமும் வெளியிட்டுள்ளது.

அதில், தேர்வுக்கான விளம்பர எண்:116 என கட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை விளம்பரத்தில் தெரிவித்தவண்ணம் 117 என பாவித்து, அதற்குரிய அடைப்பு குறிக்குள் கருமையாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், விண்ணப்பத்தில் '116' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எந்த எண்ணை குறிப்பிடுவது என்ற குழப்பத்தில் விண்ணப்பத்தாரர்கள் ஆளாகியுள்ளனர். தவிர, சான்றிதழ்களின் நகல்களில் விண்ணப்பத்தாரர்கள் சுயகையொப்பமிட வேண்டும் என விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுகுறித்து விண்ணப்பத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதனால் விண்ணப்பதாரர்களில் பலர் 'கெசட்' ஆபீசர்களின் கையொப்பம் பெற்று விண்ணப்பத்தை அனுப்பி வருகின்றனர். இதன்காரணமாகவும், விளம்பர எண் குழப்பத்தாலும் விண்ணப்பதாரர்களின் மனுக்கள் நிராகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து தெளிவான விளக்கத்தை சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட வேண்டும்.

11/2/17

ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்த கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதில் அவர்கள் நேர்முக உதவியாளர்கள் (பி.ஏ.,க்கள்) பங்கேற்க TRB உத்தரவு.

சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்த கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதில் அவர்கள் நேர்முக
உதவியாளர்கள் (பி.ஏ.,க்கள்) பங்கேற்க டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) ஏப்., அல்லது மே மாதம் நடத்த டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி பிப்.,13 முதல், அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறை சார்பில் டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இத்தேர்வு குறித்த, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள் ஆலோசனை கூட்டத்தை, பிப்.,3ல் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால் 'பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்கியதால் டி.ஆர்.பி., கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் பங்கேற்க வேண்டாம்,' என கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரின் வாய்மொழி உத்தரவால் அவர்கள் பங்கேற்கவில்லை. இதற்கு டி.ஆர்.பி., மற்றும் கல்வித்துறை அதிகாரிக்கு இடையே நிலவிய 'ஈகோ' யுத்தம் தான் காரணம் என தகவல் வெளியாகியது.

இந்நிலையில், சி.இ.ஓ.,க் களுக்கு பதில் நேர்முக உதவியாளர்களை அழைத்து கூட்டம் நடத்த டி.ஆர்.பி., முடிவு செய்தது. இதுதொடர்பான கூட்டம் சென்னையில் இன்று (பிப்.,10) நடக்கிறது. இதில் டி.ஆர்.பி., தலைவர் விபு நாயர், இயக்குனர்கள், உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கல்வித்துறை உயர் அதிகாரி கவனமின்றி சி.இ.ஓ.,க்கள் கூட்டத்தை டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது.


இதனால் அந்த அதிகாரி அதிருப்தி அடைந்து கூட்டத்தில் பங்கேற்க சி.இ.ஓ.,க்களுக்கு மறைமுக தடை விதித்தார். இதனால் சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்களை அழைத்து டி.ஆர்.பி., இன்று கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தது," என்றார்.

ஜியோ-வின் இலவசங்கள் ஜூன் 30 வரை தொடருமாம்..குறைந்த கட்டணத்தில்

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவைப் பிரிவான ஜியோ, வாடிக்கையாளர்களைப் பெறவும்,
தக்கவைத்துக்கொள்ளவும் வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃப்ர் ஆகியவற்றை அறிவித்துச் சுமார் 7 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் வருகிற மார்ச் 31ஆம் தேதி முதல் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் முடிவடைவதால், ஜூன் 30ஆம் தேதி வரையிலான புதிய இலவச திட்டத்தை வடிவமைத்துள்ளது ஜியோ.
இதன்மூலம் மார்ச் 31ஆம் தேதிக்குப் பின்னும் ஜியோ வாடிக்கையாளர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

TET - TRB தேர்வு அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது. தமிழகத்தில், நான்கு ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு,
நடத்தப்படவில்லை. நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதால், இத்தேர்வை நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


இதற்காக, 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இந்நிலையில், சி.இ.ஓ.,க்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவது தொடர்பாக, டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். தேர்வு தொடர்பாக, அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? Mr. Alla Baksh

தமிழ் வினாத்தாளில் முப்பது மதிப்பெண்களுக்கு வினாக்கள் அமைந்திருக்கும். செய்யுள், உரைநடை, துணைப்பாடம் ஆகிய
மூன்றிலிருந்தும் 15 மதிப்பெண்களுக்கு வினாக்கள் அமையலாம். இலக்கணத்திலிருந்து 15 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
செய்யுள் பகுதியில் நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்பு, எழுதிய நூல்கள், சிறப்புப் பெயர்கள் ஆகியவற்றை முழுவதுமாகப் படித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
சாகித்ய அகாதெமி, மத்திய, மாநில அரசு சார்பில் பெற்ற விருதுகள், பட்டங்கள், தபால்தலை வெளியிட்ட ஆண்டுகள், நூற்றாண்டு விழா பற்றிய தகவல்களை தெரிந்திருக்க வேண்டும்.
உரைநடைப் பாடத்தில் வரிக்கு வரி ஏதேனும் வினாக்கள் அமையும். ஆதலால் குறிப்பு எழுதிவைத்துப் படிக்கவும்.
துணைப் பாடத்தில் இடம்பெறும் சிறப்புப் பெயர்கள், வேற்றுமொழிப் பெயர்கள், வேற்று நாட்டில் - மாநிலத்தில் நடந்த செய்திகளை முக்கியமாகப் படிக்க வேண்டும்.
இலக்கணப் பகுதியில் ஒவ்வொரு பகுதியுமே இன்றியமையாத பகுதியாக நினைத்துப் படிக்கவும்.
படிப்பதைப் புரிந்துகொண்டு மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள சில எளிய உத்திகளை நீங்களே உருவாக்குங்கள்.
எ.கா: தமிழ் எண் உருக்களை நினைவில் கொள்ள
கடலைஉருண்டைய ஙவ்விச் சப்பி ருசித்து சாப்பிட்டு எடுத்து அதை கூடையில் கடாசு
வினாவிற்கு ஏற்ற விடையைத் தேர்வு செய்யும்போது தவறான விடைகள் இரண்டினைத் தேர்வு செய்து அதை மனத்திற்குள்ளே மறைத்து வைத்துவிட்டு மீதி இரண்டில் ஒரு சரியான விடையைத் தேர்வு செய்யவும். இவ்வாறு குறிக்கும்போது பெரும்பாலும் விடைகள் தவறாக இருக்காது.
இலக்கண வினாக்களைப் பொருத்தமட்டில் மரபுச் சொல், வழூஉச் சொல், இளமைப் பெயர்கள் ஆகியவற்றிலிருந்து 50 எடுத்துக்காட்டுகளைப் படித்தால் சரியான விடையைத் தேர்வு செய்து எழுத முடியும்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தமிழ்ப் பாடநூல்களையும் விட்டுவிடாது படிக்கவும். சொல்லுக்கேற்ற பொருள் விளக்கம் கேட்பதால் செய்யுள் பகுதிகளில் அமைந்துள்ள இன்றியமையாத சொல்லைக் கொடுத்துப் பொருள் கேட்பார்கள்.
பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல் போன்ற வினாக்களில் புதிதாக அமைந்துள்ள சொல்லையும் பொருளையும் தேர்வு செய்து படிக்கவும்.
எ.டு: ஈருருளி (சைக்கிள்), ஈரிருவர் (நால்வர்)

குறிஞ்சி முதலாக உள்ள ஐந்திணைகளின் முதற்பொருள் (நிலமும், பொழுதும்), உரிப்பொருள்கள் (உணர்ச்சி), கருப்பொருள்கள் ஆகிய மூன்று பொருள்களையும் ஆழ்ந்து படிக்கவும். புறப்பொருள் திணைகளையும் நன்கு படித்துக்கொள்ள வேண்டும்."

TNTET சமூக அறிவியல் பாடத்தில் 60 க்கு 60 பெறுவது எப்படி?Mr. Alla Baksh

TNTET சமூக அறிவியலில் 60 க்கு 60 எடுப்பது எப்படி

கலைபட்டய படிப்புகளான BA History, English, Tamil போன்ற படிப்புகள் படித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - II ல் பெருமளவு கேள்விகள் (60/150) சமூக அறிவியல் பாடத்திலிருந்தே
கேட்கப்படுகின்றன.
வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு இப்பகுதி மிகவும் எளிதாகப்பட்டாலும், தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற கலைத்துறை மாணவர்களுக்கு இது ஒரு சோதனையாகவே இருக்கிறது. கசப்பான மருந்தாக உள்ள சமூக அறிவியல் பாடத்தை இனிப்பாக மாற்றி வரலாறு படிக்காத பிற கலைத்துறை மாணவர்களையும் சமூக அறிவியல் பகுதியில் அதிக மதிப்பெண் பெறச்செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.
மேல்நிலைப்பள்ளியானாலும் சரி, கல்லூரிப் படிப்பானாலும் சரி பொதுவாக வரலாற்றுத்துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்களை மற்ற பிரிவு மாணவர்கள் "அசோகர் மரம் நட்டார் என்பதை படிக்க மூன்று வருடமா?" எனக் கேலி செய்வதை பார்த்திருப்பீர்கள். ஏன் இதை படிக்கும் நீங்களே உங்கள் நண்பர்களை கேலி செய்திருக்கலாம். ஆனால் இப்போது புரிந்திருப்பீர்கள் இங்கும் சில கடினமான விசயங்கள் இருக்கிறது என்று. B.A., B.Ed., ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு (+2 வில் கணிதம்-உயிரியல்) சென்ற முறை நல்ல மதிப்பெண்ணுடன் ஆசிரியர் தகுதித்தேர்வை முழுமை செய்து தற்போது வேலையில் இருக்கும் நண்பர் ஒருவருடன் சமீபத்தில் உரையாடும் போது, அவர் சில பயனுள்ள தகவல்களை தந்தார். அவற்றை கோர்வையாக சேர்ந்து இங்கே உங்களுக்கு வழங்குகிறேன்.
TNTET தேர்வுக்கு தயாராவதற்கான 6 வது முதல் 10 வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடம் கீழ்கண்ட நான்கு பிரிவுகளில் இருக்கும்.
வரலாறு (History)
புவியியல் (Geography)
குடிமையியல் (Civics or Polity)
பொருளாதாரம் (Economics)
1.இனிக்கும் வரலாறு :
"உங்கள் எதிர்காலத்தை நிங்களே தீர்மானிக்க வேண்டுமென்றால், வரலாற்றைப் படியுங்கள்" - கன்ஃபூசியஸ்
வரலாறு என்றாலே காலங்கள், நிகழ்வுகள் மற்றும் பெயர்கள் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். உண்மையும் அது தான். ஆனால் உண்மையான ஆர்வத்துடன் படித்தால் வரலாறு போல் இனிப்பது ஒன்றுமில்லை.
வரலாறு =கதை :
ஒருவரலாறு பாடப் பகுதியை படிக்க துவங்கும் முன்னர் "அதிலுள்ள வருடங்களையும், பெயர்களையும் எப்படி மனப்பாடம் செய்வது?" என்று பதட்டப்படாமல், ஒரு கதையை படிப்பது போல் படிக்கத் துவங்குங்கள்.
உதாரணமாக, 6 ஆம்வகுப்பிலுள்ள சிந்து சமவெளி நாகரிகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நாகரிகம் இருந்தது , அந்த மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களின் உணவு முறை, நகர வாழ்க்கை, கடவுள் வழிபாடு, வணிகம் இவைதான் சாராம்சம். மொத்தமாக ஒரு முறை வாசித்து விட்டு இப்போது ஒரு முறை வாசித்தவற்றை அசை போடுங்கள். இரண்டாவது முறை வாசிக்கும் போது "லோத்தல் - துறைமுக நகரம் - தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது" , "காளிபங்கன் -என்ன சிறப்பு ?" என பல உண்மைகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். இப்படியே பல்வேறு அரசுகள், அரசர்கள், போர்கள் போன்றவற்றையும் கதையைப் போல படிக்கத்துவங்கினால். வரலாற்றில் இன்னொரு M.A., பண்ணுவதற்கு கூட ஆர்வம் வருமளவிற்கு வரலாற்றை நீங்கள் ரசித்து ருசித்து படிப்பீர்கள்.
காலக்கோடுகளின் மந்திரம்
வரலாற்றில் வரும் வருடங்களை எளிதாக நினைவு கூற "காலக்கோடு முறை" மிக சிறந்தது. ஒவ்வொரு பகுதிக்கும் தனிதனி காலக்கோடுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். கடைசியாக பார்க்கும் போது "சிந்து சமவெளி முதல் அ.தி.மு.க ஆட்சி 2017 வரை" வருடங்களை மிகவும் எளிதாக உங்களால் கூற முடியும்.
உதாரணமாக 'இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை" கீழ்க்கண்ட காலக்கோட்டின் மூலம் விளக்கலாம்.
1885 - இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்
1905-வங்கப்பிரிவினை
1906 - முஸ்லிம் லீக் தோற்றம்
1907-சூரத் பிளவு (காங்கிரசுக்குள்)
1909-மின்டோ-மார்லி சீர்திருத்தம்
1919-மாண்டேக்-செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
1920 -கிலாபத் இயக்கம்
-- இப்படி நீங்களே ஒரு காலக்கோட்டை தயாரித்து, ஒவ்வொரு வருடத்தோடும் தொடர்புடைய நிகழ்வுகளை, பெயர்களை மிகவும் எளிதாக நினைவில் கொள்ளலாம்.
2. புதுமையாகும்புவியியல்
புவியியல் பாடப்பகுதியை பார்த்தாலே பலருக்கு கசப்பாக இருக்கும். ஆனால் சில முக்கியமான உபகரணங்களுடன் படிக்கும் போது அது மிகவும் எளிதாக மாறிவிடும். அந்த உபகரணங்கள் Atlas மற்றும் Maps தான். உதாரணமாக கண்டங்களைப் பற்றி படிக்கிறீர்கள் எனில், நிச்சயமாக ஒரு உலக வரைபடத்தை கையில் எடுத்துக்கொண்டு அமெரிக்கா, ஆசியா என ஒவ்வொரு கண்டங்களையும் நீங்களே கண்டுபிடியுங்கள். அது போல, எந்த ஒரு இடத்தின் பெயரை படிக்கும் போதும் அவற்றை உலக அல்லது இந்திய வரைபடத்தில் பாருங்கள். உலகில் உள்ள நாடுகள், நதிகள், கால நிலைகள் எல்லாமே இந்த வரைபடங்களில் உள்ளடக்கம். புவியியல் பகுதியில் நீங்கள் பெறவிருக்கும் மதிப்பெண்கள் உட்பட.
3.குடிமக்கள் அறிய வேண்டிய குடிமையியல் :
ஒருசாதாரண குடிமகன் அறிநதிருக்க வேண்டிய தகவல்களான, அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள், தேசிய சின்னங்கள், அரசியல் முறை, பாராளுமன்றம், சட்டமன்றம், குடியரசு தலைவர், பிரதமர் என அனைத்தும் ஆர்வமூட்டும் விசயங்களே இருப்பதால். குடிமையியல் பகுதிக்கு தயாராக உங்களுக்கு தனியே ஆலோசனைகள் தேவையில்லை.
4. புரிந்து படிக்க வேண்டியதுபொருளாதாரம் :
முதலில் பொருளாதாரத்தைப் பற்றிய அடிப்படை கருத்துக்களை சந்தேகமின்றி புரிந்து கொள்ளவேண்டும். உதாரணமாக Inflation, NDP, NGP, FDI போன்ற வார்த்தைகளை படிக்கும் போது சரியான புரிதல் இன்றி படிப்பீர்கள் எனில் உங்கள் மொத்த நேரமும் முயற்சியும் வீணாகி விடும். எனவே பொருளாதார பாடப்பகுதியை படிக்கும் போது அவற்றில் வரும் முக்கியமான concept ஐ புரிந்து கொண்டு படித்தாலே நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

British council English Training !!

 DISTRICT LEVEL TRAINING*

_UPPER PRIMARY TEACHERS_

1 Day 1 & 2     

Set I            16.02.2017 &17.02.217

2 .Set II            20.02.2017&21.02.207


3.Set III            22.02.2017 &   23.02.2017


DISTRICT LEVEL TRAINING:  PRIMARY TEACHERS

1 Day 1 & 2.   Set I   27.02.2017&28.02.2017

2 .  Set II                      01.03.2017&02.03.2017

3.  Set III                      06.03.2017&07.03.2017

4. Day 3 & 4   Set I      09.03.2017&10.03.2017

5.Set II                     13.03.2017&14.03.2017


&6. Set III                     15.03.2017&16.03.2017.

வாங்கும் சம்பளத்தை விட கூடுதலாக வரி கட்ட நேர்ந்தால் challan no 280 ஐ நிரப்பி வங்கியில் செலுத்திய பின் IT Formல் இணைக்கவும்.

ஒரு ஒன்றியத்தில் பல பேருக்கு வாங்கும் சம்பளத்தை விட கூடுதலாக வரி கட்ட challan no 281 ஐ நிரப்பி வங்கியில் செலுத்திய பின் IT Formல் இணைக்கவும்.

I.T : FORM 12 BB

2/2/17

வருகிற கல்வியாண்டிலாவது கணினிக் கல்வி அரசுப்பள்ளிகளில் கொண்டுவரப்படுமா.......?CM-CELL -REPLY

No automatic alt text available.

மாத ஊதியம் பெறுவோருக்கான

ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை
வருமான வரி 10%ல் இருந்து 5% ஆக குறைப்பு*

*ரூ. 3 லட்சம் வரையிலான மாத வருமானத்துக்கு வருமான வரி
விலக்கு*

*அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க ஜேட்லி அதிரடி அறிவிப்பு*

*ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலான மாத வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரி*

*ரூ. 1 கோடிக்கு அதிகமான மாத வருவாய் மீதான 15% கூடுதல் வரி தொடரும்*

*தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை*

*வருமான வரி விகிதம் குறைப்பு:*
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 சதவீதமாகஇ ருந்த வருமான வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருமான வரிச்சலுகைகளை கருத்தில் கொண்டால் ரூ.3 லட்சம் வருமானத்திற்கு வரி இருக்காது.

#ரூ.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு தலா ரூ.12,500 கழிவு அனுமதிக்கப்படும்.
வரிவிகித குறைப்பால் அரசுக்கு ரூ.15,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.


மேலும் ஒரே ஒரு பக்கத்தில் வருமான வரி விண்ணப்ப படிவம் வழங்கப்படும் .

IT - 12C FORM

TNPSC 2017 ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு

பள்ளிக்கல்வி செயல்முறைகள் நாள்:20/01/17- TET - சிறுபான்மையினர் பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்பு




பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்

நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த மத்திய பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்பினால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் போன் தயாரிப்பில் முக்கிய பணியாற்றும் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் மீது 2% கூடுதல் சுங்கத்தீர்வை விதிக்கப்படவுள்ளதால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கவுள்ளது.

இந்தபுதிய வரிவிதிப்பினால் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளின் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பயன் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட போர்டுகளைப் பயன்படுத்தும் மொபைல் போன்களின் விலை 1% வரை இதனால் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் இறக்குமதிசெய்யப்பட்ட சர்கியூட் போர்டுகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுசெல்போன்கள் தயாரிப்பு செலவில் 25-30% தாக்கம் செலுத்துவதாகும்.

மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரி காரணமாக புகையிலை உள்ளிட்ட சில பொருட்கள் விலை உயர உள்ளன. அதேநேரம் சூரிய மின்சக்தி தகடுகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான விலை குறைய உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:

விலைஉயரும் பொருட்கள்:

சிகரெட், பான் மசாலா, பீடி, சுருட்டு, புகையிலை.

எல்.இ.டி. விளக்குகள்

வறுத்த முந்திரி பருப்பு

அலுமினிய தாதுக்கள்

பாலிமர் எம்.எஸ். டேப்புகள்

வெள்ளி நாணயங்கள், பதக்கங்கள்

செல்போன் சர்க்கியூட் போர்டுகள்

விலைகுறையும் பொருட்கள்

ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள்

வீட்டு உபயோக ரிவர்ஸ்டு ஆஸ்மாசிஸ் தகடுகள்.

திரவஎரிவாயு

சூரிய மின் சக்தி தகடுகள்

காற்றாலை ஜெனரேட்டர்

பி.ஓ.எஸ். இயந்திரங்கள், விரல் ரேகை பதிவு இயந்திரங்கள்


பாதுகாப்பு துறை சேவைகளுக்கான குழு காப்பீடு

TNTET: ஆசிரியர் தகுதி தேர்வு எப்படி படிப்பது? எங்கு துவங்குவது?

TET தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ள இக்கால கட்டத்தில்
அனைவரின் கேள்வியும் அதுவே.

அதற்கான பதிவு பதில் இங்கே...
ஆசிரியர் தகுதி தேர்வு தயாராகும் முன் தெளிவாக பாட திட்டம் அறிதல் அவசியம்
பாடதிட்டம் :
தாள்1:
வகுப்பு 1 முதல் 8 வரைஅனைத்து சமச்சீர் புத்தக பாடம் + உளவியல் = 120 + 30
தாள்2 :
வகுப்பு 6 முதல் 10 வரை(தமிழ், அறிவியல் 12 வரை படிக்கலாம்)
தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பட்டதாரிகள்
தமிழ் : 30
ஆங்கிலம் : 30
ச.அறிவியல்: 60
உளவியல் : 30
அறிவியல், கணித பட்டதாரிகள் :
தமிழ்: 30
ஆங்கிலம் : 30
கணிதம் : 30
அறிவியல் : 30
உளவியல் : 30
இதற்கான தயாரிப்பு எங்கு எப்படி துவங்குவது?
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது பாட வாரியான தோராய கால அட்டவணை
உதாரணமாக
தமிழ் வகுப்பு 6 : அரை நாள்
7 : அரை நாள்
8 : ஒரு நாள்
9 : ஒரு நாள்
10: ஒரு நாள்
மொத்தமாக 4 அல்லது 5 நாட்கள். அனைத்து பாடத்திற்கும் மொத்த கால அளவு தோராயமாக 25 முதல் 30 நாட்கள்.
இந்த30 நாட்களும் தங்களது பங்களிப்பு உழைப்பு பொறுத்தே வெற்றி அமையும்.
மீதமுள்ள 30 நாட்களில் 2 திருப்புதலும் சில சுய தேர்வுகளும் நமக்கு நாமே செய்து கடின பகுதியை மீள்பார்வை செய்யலாம்
தமிழில் இலக்கண, செய்யுள் பகுதிகள்
கணிதம் நடைமுறை கணக்குகள்
அறிவியல் உயிரியியல் பகுதிகள்
சஅறிவியல் வரலாற்று பகுதிகள் கடினமானவை. இவற்றில் கூடுதல் பயிற்சி தேவை.

புத்தக வாசிப்பே சால சிறந்தது. சுய குறிப்புகளும் திருப்புதலில் உதவும். கூடுமான வரை மொபைல், கணினி வழி படிப்பதை தவிர்க்கவும். அவை உடல் சோர்வை உண்டாக்கும்.
மேலும் படிக்கும் போது மொபைல் பயன்பாட்டை குறைக்கவும். நேரத்தை அது உண்டுவிடும். வேண்டுமெனில் காலை மாலை அரை மணி நேரம் இணைய பகிர்வுகளை காணலாம்.
முக்கியமாக ஒரு பாடம் பாதியில் விட்டு விட்டு அடுத்த பாடம் செல்ல வேண்டாம். தொடர்ச்சியாக பாடங்களை தொடர்பு படுத்தி படியுங்கள்.

தேர்விற்கான கால இடைவெளி குறைவு . எனவே மற்ற அலுவல்களை தவிர்த்து முழு நேர பயிற்சியில் ஈடுபடுங்கள்.
கோச்சிங் செல்ல வேண்டுமா?
அதுஅவரவர் தனிப்பட்ட திறன் சார்ந்தது.
கோச்சிங் செல்வது அவசியமில்லை. எனினும் மற்றவரை காணும் போது தன்முனைப்பும் உத்வேகமும் உண்டாகும்.
எதிர் நிற்பது இறுதி வாய்ப்பு என நினைத்து முயலுங்கள் ....
முயலும் எந்த ஆமையும் இங்கு தோற்பதில்லை

வாழ்த்துக்களுடன் - பிரதீப் பட்டதாரி ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.