யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/6/17

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 11 ஆயிரம் இடங்கள் காலி

சென்னை, ஜூன் 14 பள்ளிக் கல்வித் துறை நடத்தும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 90 சதவீத இடங்கள் காலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில், எஸ்.சி.இ. ஆர்.டி., என்ற, மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளது.

இவற்றின் கீழ், மாநிலம் முழுவதும், அரசு, அரசு உதவி மற்றும் தனியார் என, 463 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன.இவற்றில், இரண்டு ஆண்டு, டி.டி.எட்., என்ற, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பு நடத் தப்படுகிறது.

இந்தபடிப்பில் சேர்வதற்கான, ஒற்றை சாளர மாணவர் சேர்க் கைக்கு, இந்தாண்டு, ‘ஆன்லைன்’ முன்பதிவு அறிமுகமாகிறது. இதற்கு, இணையதளத்தில், வரும், 21 வரை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்தமுள்ள, 12 ஆயிரம் இடங்களுக்கு, நேற்று முன்தினம் வரை, 1,063 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.


இன்னும், 200 பேர்வரை மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப் புள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், இந்த ஆண்டு, 90 சதவீத மான, 11 ஆயிரம் இடங்கள் காலியாகும் அபாயம் ஏற் பட்டுள்ளது. டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தால், இடைநிலை ஆசிரியருக்கான, ‘டெட்’ தேர்வை எழுதலாம். அதில் தேர்ச்சி பெற் றாலும், இடைநிலை ஆசிரியர் களுக்கு, புதிய வேலைவாய்ப்புகள் இல்லை

ஓவியம் மூலம் கல்வி- கரூர் அரசு பள்ளி ஆசிரியை புரட்சி

கரூர்: தமிழகத்தில் தற்போது தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கருர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர்
கற்பிக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியதால் அங்கு அதிகப்படியான மாணவர்கள் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கும் கோடங்கிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.



அந்தப் பள்ளியில் பணிபுரியும்  ஆசிரியை  ஒருவர் சுவரில் ஓவியங்கள் வரைந்து, அதன்மூலம் பாடம் நடத்துகிறார்.   பள்ளியின் வகுப்பறைகளில் ஒழுக்கத்தைக் கற்பிக்கும் ஓவியம், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் ஓவியம், அளவீடுகளைப் புரியவைக்கும் ஓவியம், அடுத்த வகுப்புக்குச் செல்வதை பட்டாம்பூச்சிகளின் மகிழ்ச்சியாக வெளிப்படுத்தும் ஓவியம் என ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள், கண்களையும் மனதையும் கொள்ளையடிக்கிறது. ''இதையெல்லாம் அதே பள்ளியின் ஆசிரியை ஒருவர் தான்'' என மாணவர்கள் உற்சாகமாக சொல்கின்றனர். அந்த அரசுப் பள்ளியின் ஆசிரியை பெயர் சாந்தி.  இது தொடர்பாக அவர் கூறும் போது,

"2000-ம் வருஷம் இந்தப் பள்ளிக்கு வந்தேன். அப்போது நாற்பது மணவர்களே இருந்தாங்க. பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கணும் என்கிற ஆர்வமே இல்லாததை கவனிச்சேன். பசங்களும் பள்ளிக்கூடம் வராமல் சுத்திட்டிருந்தங்க. பலரிடமும் போய் பேசி பார்த்தாச்சு. படிக்கும் சூழ்நிலை மீது அவங்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கினால், தேடி வருவாங்கனு நினைச்சேன். பாடங்களை அவங்களுக்குப் புரிகிற மாதிரி நடத்த என்ன செய்யலாம்னு யோசிச்சேன். எனக்கு ஓவியம் வரையறது ரொம்ப பிடிக்கும். அதனால், ஆரம்பத்தில் மாணவர்களுக்கு சாக்பீஸால் பாடங்களை ஓவியங்களாக வரைஞ்சு நடத்தினேன்.

முன்பைவிட அவங்ககிட்டே ஆர்வம் அதிகமானதையும் பாடங்களைப் புரிஞ்சுக்கிறதையும் உணர்ந்தேன். என் யோசனைக்கு வெற்றியடைஞ்சதை நினைச்சு உற்சாகமானேன்.   அனைவருக்கும் கல்வித் திட்டத்தை அரசு ஆரம்பிச்சபோது, இந்த மாவட்டத்தில் பத்து பள்ளிகளைத் தேர்வுசெஞ்சாங்க. அதில் எங்கள் பள்ளியும் ஒண்ணு. அது இன்னும் உற்சாகத்தைக் கொடுத்துச்சு. பெற்றோர்களிடம் பேசினேன். அவங்களே பெயின்ட், பிரஷ் எல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க.
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து அடுத்த வாரத்துக்கான பாடங்களை ஓவியங்களாக வரைஞ்சுடுவேன். பள்ளி நாட்களில் அதைவைத்து பாடங்களா நடத்துவேன். தொடர்ந்து நான்கு வருஷங்கள் இப்படி பாடங்களை ஓவியங்களா வரைஞ்சேன். என்னுடைய உழைப்புக்குச் சரியான பலன் கிடைக்க ஆரம்பிச்சது. மாணவர்களின் கல்வி கற்கும் திறனில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுச்சு. தலைமை ஆசிரியையும் உற்சாகப்படுத்தினாங்க. 

2015-ம் வருஷம் இந்தியா முழுக்க இருக்கும் பள்ளிகளுக்கிடையே 'டிசைன் ஃபார் சேஞ்ச்' என்ற புராஜெக்ட் நடந்துச்சு. பாடங்களை வித்தியாசமான முறையில் கற்பிப்பது, மாணவர்களுடன் சேர்ந்து பள்ளியைப் புதிய நிலைக்கு கொண்டுச் சென்றது.

பள்ளிகளுக்கு இடையிலான போட்டி அது. அதில் எங்கள் பள்ளியும் கலந்துக்கிட்டோம். பரிசு கிடைக்கலைன்னாலும், அது எங்களை வெளியுலகுக்கு இன்னும் பெரிய அளவில் அடையாளம் காட்டிச்சு. தன்னார்வமிக்க மனிதர்களால் பள்ளியை மேம்படுத்தினோம். தரையில் மார்பிள் பதிச்சோம். மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க வீணான பொருள்களில் முகமூடி, அலங்கார பூஜாடிகள், பறவை கூடுகள் என தயாரிக்க சொல்லிக் கொடுத்தோம்.
இப்போ, பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்களும் எங்கள் பள்ளியைத் தேடிவந்து அவங்க பிள்ளைகளைச் சேர்க்க ஆரம்பிச்சிருக்காங்க. பாடக் கல்வியைத் தாண்டியும் பல விஷயங்களைச் சொல்லித்தர்றோம். நல்ல உணவு எது, கெட்ட உணவு என்று புரியவைக்கிறோம்.

விவசாயத்தின் மீது ஆர்வத்தை உண்டாக்க மண்புழு உரம் தயாரித்தல், ஆர்கானிக் முறை விவசாயத்தின் முக்கியத்துவம் என சொல்லிக்கொடுக்கிறோம். கல்வியில் மட்டுமின்றி, சமூக விஷயத்திலும் எங்கள் பள்ளி மாணவர்களை மேம்பட்டவர்களாக மாற்றிக் காட்டும் லட்சியத்தோடு எங்கள் பயணத்தைத் தொடர்ந்துட்டிருக்கோம்'' என்று புன்சிரிப்புடன் சொல்கிறார்
ஆசிரியை சாந்தி. 

மேலும் இது மட்டுமில்லாமல் பள்ளி வகுப்பறைக்கு செல்லும் முன் காலனிகளை ஒரு வரிசையாகவும், ஸ்கூல் பைகளை ஒருவரிசையாகவும் வைத்து பள்ளி மாணவ, மாணவிகளின் ஒழுக்கத்தையும் நன்கு விதமாக சொல்லித்தரும் அப்பள்ளியில் பேப்பர் கழிவுகளை கொண்டு முகமுடிகள், வித்யாசமான அலங்காரப் பொருட்கள் என்று சொல்லிக்கொண்டே கரூர் மாவட்டத்தின் முன்னோடி பள்ளியாகவே கோடங்கிப்பட்டி நடுநிலைபள்ளி நடுநிலையாகவே திகழ்கின்றது.



மேலும் அப்பள்ளியை அந்த ஊர் பொதுமக்கள் பல்வேறு ஊக்கங்களையும் அளித்து வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்து பள்ளிகளில் தினந்தோறும் படித்து வருகின்றனர்.

உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நாள் - இன்று

No automatic alt text available.

பேரூராட்சி பணியாளர் சங்கம் எதிர்ப்பு - ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த கூடாது.

NEET - 2017 Exam Official Key Answer Published.

பழைய ஓய்வூதிய திட்டம் ,அரசின் பரிசீலனை யில் உள்ளது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில் அறிவிப்பு

பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த   பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ,

ஓய்வூதிய திட்டம் ,அரசின் பரிசீலனை யில் உள்ளது.

ஆசிரிய ர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.

கணிணி ஆசிரியர்கள் நியமனம் குறித்து விரைவில் அறிவுப்பு.

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில்..

FLASH NEWS:தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்களுக்கான 2017-18 ஆண்டு செயல்திட்டம் (ஜூன் 2017 முதல் மே 2018 வரை) வெளியீடு

AIIMS - 2017 ENTRANCE EXAM RESULT Released

DSE : SCHOOL ACTION PLAN 2017 - 18 - DIR PROC

2017-18 பள்ளி வேலை / விடுமுறை நாள்கள் குறித்த நாள்குறிப்பு வெளியாகியுள்ளது.

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மீதமுள்ள 10 நாள்களுக்கு ஆசிரியர்களுக்கு ஏப்ரல்

 இறுதி வாரம் முழுவதும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

மே மாதம் மாணவர் சேர்க்கைகான செயல்பாடுகளைச் செய்யவும் 

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 277 உதவியாளர் வேலை தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 277 இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை வரைவு அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், தட்டச்சர், சர்வேயர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.



இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 277

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Assistant Engineer (AE) - 25
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,700

2. Surveyor - 19
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

3. Junior Drafting Officer (JDO) - 19
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

4. Technical Assistant - 76
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

5. Junior Assistant - 126
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

6. Typist - 12
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800



தகுதி: 10 வகுப்பு மற்றும் ஆங்கிலம், தமிழில் தட்டச்சு, பொறியியல் துறையில் டிப்ளமோ, பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.500ம், மற்ற பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் நாளை (10.06.2017) முதல் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2017

எழுத்துத் தேர்வு: ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் கூடுதல் விபரங்களை பெற www.tnhbrecruitment.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.


I Would like to share this with you. Here You Can Download This velai vaaippu (வேலை வாய்ப்பு )Application from PlayStorehttps://play.google.com/store/apps/details?id=com.akshayam.velaivaaippu

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை




 தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள பில் கிளார்க், உதவியாளர், பதிவேடு கிளார்க், துப்புரவாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 மொத்த காலியிடங்கள்: 48 

 பணியிடம்: நீலகிரி 

 பணி - காலியிடங்கள் விவரம்: 

 பணி: Bill Clerk - 27
 தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

 பணி: Packer,  Watch man, Office Assistant - 16
 தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300

 பணி: Record Clerk - 02
 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,400

 பணி: Sweeper - 03
 தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
 சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300

 வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 18 - 32க்குள் இருக்க வேண்டும். 

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Tamil Nadu Civil Supplies Corporation,
Regional Office, No.110,
Goodshed road, Udhagamandalam, Nilgiris.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.06.2017 

 மேலும் கூடுதல் விவரங்கள் அறிய http://nilgiris.nic.in/images/tncsc.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தமிழ்நாடு வனத்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் வேலை




 தமிழ்நாடு அரசு வனத்துறையில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கான அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 பணி: இளநிலை வரைதொழில் அலுவலர் 

 காலியிடங்கள்: 15 

 பணியிடம்: தமிழ்நாடு 

 தகுதி: பொறியியல் துறையில் சிவில் அல்லது மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

 வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும். 

 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 

 தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானாவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
 வன அலுவலர், சென்னை வனக்கோட்டம், 3வது தளம், டி .எம் எஸ் வளாகம், சென்னை - 600 006 

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.06.2017 

 மேலும் கூடுதல் விவரங்கள் அறிய www.forests.tn.nic.inhttp://www.forests.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வருமான வரித் துறையில் வரி உதவியாளர், MTS வேலை




 இந்திய வருமான வரி துறையில் 2017 ஆம் ஆண்டிற்கான 58 வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், ஸ்டேனோகிராபர் கிரேடு II, மல்டி பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  

 மொத்த காலியிடங்கள்: 58 

 பணியிடம்: இந்தியா முழுவதும் 

 பணி - காலியிடங்கள் விவரம்: 
 பணி: Income Tax Inspector - 09
 சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.4600

 பணி: Tax Assistant - 19
 சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.2400

 பணி: Stenographer Grade II - 01
 சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.1800

 பணி: Multi Tasking Staff (MTS) - 29  
 சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.1800

 தகுதி: +2, பட்டம் மற்றும் தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

 வயதுவரம்பு: 01.06.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். 

 தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

 விண்ணப்பிக்கும் முறை: www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
“The Asstt. Commissioner of Income-tax (Hqrs.-PersonneI) (Non-Gazetted),
Room No. 378, C.R. Building,
I.P. Estate, New Delhi-110002

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.06.2017 

 மேலும் கூடுதல் விவரங்கள் அறிய http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/06/Income-Tax-Department-Recruitment-2017-58-Tax-Assistant-MTS-Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

+2 தகுதிக்கு யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள 390 பணியிடங்கள்




 மத்திய அரசு சார்ந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை யு.பி.எஸ்.சி., செய்து வருகிறது. தற்போது தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியாக உள்ள 390 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

 தேசிய பாதுகாப்பு அகாடமியில் 335 இடங்களும் ( தரைப்படை 208, கப்பல்படை 55, விமானப்படை 72), 

 நேவல் அகாடமி (பிளஸ்-2 என்ட்ரி) தேர்வு மூலம் 55 இடங்களும் என மொத்தம் 390 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


 பாதுகாப்பு துறையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. 


 வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 2-1-1999 மற்றும் 1-1-2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். 


 கல்வித்தகுதி: பிளஸ் 2 படிப்பை முடித்த திருமணமாகாத ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


 வயது: விண்ணப்பதாரர்கள் 1999 ஜன., 2க்கு பின்பும் 2002 ஜன., 1க்கு முன்பும் பிறந்திருக்க வேண்டும். 


 தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு கணிதம் மற்றும் பொது அறிவு என இரண்டு தேர்வுகளை கொண்டது. இதற்குப்பின் எஸ்.எஸ்.பி., நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். 


 உடல்தகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 152 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 என்ற அளவிலும், கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவிலும் இருக்க வேண்டும். விரிவான விபரங்களுக்கு இணையதளத்தில் பார்க்கலாம். 


 விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 

 இத்தேர்வுக்கான விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய். (எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை). 


 விண்ணபிக்க கடைசி நாள்: 30-06-2017 .


 மேலும் கூடுதல் விபரங்களுக்கு _http://upsc.gov.in/sites/default/files/Notice_NDA_NA%20_II_%20Exam_2017_English_%20Final.pdf என்ற இணையபக்கத்தை பார்க்கவும்.

மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை இப்போது Active ஆக உள்ளது. 31.8.2017 வரை இதை ஆன்லைனில் விண்ண்ப்பிக்கலாம்.



📡விண்ணப்பிக்க வேண்டிய தளம் :

http://www.scholarships.gov.in

இதில் Students Login ல் அக்கவுண்ட் open செய்து கேட்கப்படும் அனைத்து சான்றிதல்களை ஸ்கேன் செய்து upload செய்ய வேண்டும். 

1ம் வகுப்பு முதல் PhD வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும். 


📡11ம் மற்றும் 12ம் வகுப்புக்கு ₹7000 முதல் 10000 கிடைக்கும்.

📡Engineering-க்கு ₹25000 முதல் ₹30000கிடைக்கும்.

(எவ்வாறு விண்ண்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து தகவல்களும் தளத்தில் உள்ளது)

மொத்தம் 60000 பேருக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.  முதலில் வருவோருக்கே முன்னுரிமை. ஆகையால் துரிதமாக விண்ணப்பிக்கவும். 
(ARN செய்திகள்:9094830243)

இந்த கல்வி உதவித் தொகை பற்றி தகவல் தெரியாததால் சென்ற வருடம் தமிழ்நாட்டில்  இருந்து 1075 முஸ்லீம்கள் மட்டுமே இதை பெற்றுள்ளனர். 

இந்த நலவாய்ப்பை பெற இந்த தகவலை அனைத்து சிறுபான்மையினருக்கும் அனுப்பவும். 
மிழ்நாடு வனத்துறையில் வேலை

தமிழ்நாடு வனத்துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் சிவில்/மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளோமோ படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு 32. 

வன அலுவலர், 
சென்னை வனக்கோட்டம், 
3வது தளம், DMS வளாகம், 
சென்னை - 6 
(ARN செய்திகள்:9094830243)
என்ற முகவரிக்கு 20.6.17 க்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்




சென்னை, ஜூன் 14 சென் னையில் உள்ள அரசினர் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல விடுதிகளில் சேர்க்கைக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப் பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட் டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் இயங்கும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், அய்டிஅய் படிப் புகளில் பயிலும் மாணவ, மாண வியர் சேர்க்கைக்கு விண்ணப் பிக்கலாம்.

விண்ணப்பங்களை உணவு மற்றும் இருப்பிட வசதியுடன் உள்ள விடுதிகளின் காப்பாளர் களிடமிருந்தோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத் தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர் களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை ஜூலை 15-ஆம் தேதிக் குள் விடுதிகளின் காப்பாளர் களிடமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத் தப்பட்டோர், மிக பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப் பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 044- 25241002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

14/6/17

CRC பயிற்சி நாட்களுக்கு வழங்கப்படும் ஈடுசெய்யும் விடுப்பு 6 மாதத்திற்குள் (அதாவது 180 நாட்களுக்குள் ) எடுக்கலாம்.

CRC பயிற்சியில் கலந்து கொண்டதற்கு ஈடுசெய்யும் விடுப்பு எடுத்தல் சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை 62 நாள்:13.03.15 என்பது 12.02.2008 ல் CRC பயிற்சிக்கு அனுமதித்த ஈடுசெய்யும் விடுப்பு சார்பாக வெளியிடப்பட்ட
அரசாணை 29 க்கு வெளியிடப்பட்ட திருத்த அரசாணை மட்டுமே.


*எனவே ,CRC பயிற்சிக்கு வழங்கப்படும் ஈடுசெயவிடுப்பானது, 180 நாட்களுக்குள் (அதாவது 6 மாதத்திற்குள்) துய்த்து கொள்ளலாம்

*ஈடுசெய் விடுப்பு அரசாணை எண் 2218 நாள் 14/12/81
எனவே,கடந்த கல்வியாண்டு CRC ஈடுசெய் விடுப்பை தற்போது துய்க்கலாம்.

*அரசாணை எண் 62 நாள் 13/3/15- ல் விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க உத்தரவு போடப்பட்டுள்ளது.அரசாணை எண் 62 என்பது அரசாணை 29 நாள் :12/2/2008 உள்ள மூன்றாம் பத்தியை மாற்றீடு செய்து வெளியிடப்பட்ட அரசாணை

* 28/01/17 அன்று நடைபெற்ற CRC - க்கு ஈடுசெய் விடுப்பை 26/7/17 க்குள் துய்க்கலாம்


* அதேபோல் 04/03/17 அன்று நடைபெற்ற CRC - க்கு ஈடுசெய் விடுப்பை 01/09/17 க்குள் துய்க்கலாம்

பணி நிரந்தரம் பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு