யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/6/17

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 11 ஆயிரம் இடங்கள் காலி

சென்னை, ஜூன் 14 பள்ளிக் கல்வித் துறை நடத்தும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 90 சதவீத இடங்கள் காலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில், எஸ்.சி.இ. ஆர்.டி., என்ற, மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளது.

இவற்றின் கீழ், மாநிலம் முழுவதும், அரசு, அரசு உதவி மற்றும் தனியார் என, 463 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன.இவற்றில், இரண்டு ஆண்டு, டி.டி.எட்., என்ற, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பு நடத் தப்படுகிறது.

இந்தபடிப்பில் சேர்வதற்கான, ஒற்றை சாளர மாணவர் சேர்க் கைக்கு, இந்தாண்டு, ‘ஆன்லைன்’ முன்பதிவு அறிமுகமாகிறது. இதற்கு, இணையதளத்தில், வரும், 21 வரை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்தமுள்ள, 12 ஆயிரம் இடங்களுக்கு, நேற்று முன்தினம் வரை, 1,063 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.


இன்னும், 200 பேர்வரை மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப் புள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், இந்த ஆண்டு, 90 சதவீத மான, 11 ஆயிரம் இடங்கள் காலியாகும் அபாயம் ஏற் பட்டுள்ளது. டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தால், இடைநிலை ஆசிரியருக்கான, ‘டெட்’ தேர்வை எழுதலாம். அதில் தேர்ச்சி பெற் றாலும், இடைநிலை ஆசிரியர் களுக்கு, புதிய வேலைவாய்ப்புகள் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக