யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/1/18

Paediology method(குழந்தை நேயக் கற்றல் முறை)

Paediology method(குழந்தை நேயக் கற்றல் முறை)

1. ஏணிப்படி,அடைவுத்திறன் அட்டவணை இல்லை

2.ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளுக்குரியது

3. நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு SALM method


4. முழுமையான பாடம் பல அலகுகளாக(Unit) பிரிக்கப்படுகிறது

5.ஒரு  பாடவேளைக்கு 90 நிமிடங்கள்.காலையில் இரண்டு பாடவேளைகளும்,மதியம் ஒரு பாடவேளையுமாக பிரித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

6.அட்டைகளை கற்பித்தல் துணைக்கருவிகளாக பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு குழந்தைக்கும் பயிற்சி ஏடுகளின் தொகுப்பாக ஒரு புத்தகம் கொடுக்கப்படும்

7.Low level,கம்பிப் பந்தல்,புத்தகப் பூங்கொத்து,வீட்டுப்பாடம்,காலநிலை அட்டவணை இவைகளில் மாற்றம் இல்லை

8.பொதுவாகக் குழந்தைகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தாலும்,வகுப்பறை நிலைமைக்கேற்ப மெதுவாகக் கற்போருக்காக ஒரு குழு,மீத்திறன் குழந்தைகளுக்காக ஒரு குழு ஆசிரியர் அமைத்துக் கொள்ளலாம்

9.Long leave முடிந்து குழந்தை வரும்போது குழந்தையின் கற்றல் திறனுக்கேற்ப அக்குழந்தையினை பொருத்தமான அலகிலிருந்து தொடங்கச் சொல்லலாம்

10.இரண்டாம் பருவத்திலேயே பரீட்சார்த்த முறையில் சென்னை,காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 16 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது

இடியும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை கணக்கெடுக்க உத்தரவு: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: இடியும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை கணக்கெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் எம்எல்ஏ அபுபக்கர் கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் விரைவில் சீரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சி.பி.எஸ்.இ., தேர்வு மார்ச் 5ல் துவக்கம்

சென்னை: 'சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 5ல் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு, தேசிய அளவில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான தேதியை, சி.பி.எஸ்.இ., வாரியம், நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அதன்படி, பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 5ல் துவங்கி, ஏப்., 12ல் முடிவடைகின்றன. முதல் தேர்வாக, ஆங்கிலம் நடத்தப்படுகிறது. 10ம் வகுப்புக்கு பள்ளி அளவிலான தேர்வு, ரத்து செய்யப்பட்டு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு, மார்ச், 5ல் துவங்கி, ஏப்., 4ல் முடிவடையும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. முதலில், விருப்ப பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு, சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில், மொத்தம், 20 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

பாலிடெக்னிக் தேர்வில் தோல்வியுற்றவர்கள் பட்டயத் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு

புதுச்சேரி:பாலிடெக்னிக் தேர்வில், சில பாடங்களில் தோல்வியுற்ற முன்னாள் மாணவர்களுக்கு, பட்டயத் தேர்வு எழுத மீண்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாலிடெக்னிக் தேர்வில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத முன்னாள் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வித்துறை, வரும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதத்தில், பட்டய தேர்வை மீண்டும் எழுத வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது.இத்திட்டத்தின்படி, இக்கல்லுாரியில் 2010ம் ஆண்டு வரை முழு நேர மூன்று ஆண்டு பட்டயப்படிப்பில் சேர்ந்து படித்த அனைவரும் தேர்வு எழுதலாம்.தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.500 தேர்வு கட்டணம், ரூ.30 மதிப்பெண் பட்டியல் கட்டணம், ரூ.25 பதிவு கட்டணமாக இக்கல்லுாரி மூலம் செலுத்த வேண்டும்.அபராதமின்றி கட்டணம் செலுத்த கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி. ரூ.100 அபராதத்துடன் செலுத்த கடைசி நாள் 14ம் தேதி. தட்கல் முறையில் ரூ.500 அபராதத்துடன் கட்டணம் செலுத்த கடைசி நாள் மார்ச் 9ம் தேதி ஆகும்.

நாளை முதல், 'லீவ்' மாணவர்களுக்கு, 'ஜாக்பாட்'

சென்னை : பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு கூடுதலாக, ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல், 'லீவ்'  மாணவர்களுக்கு, 'ஜாக்பாட்'

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பொங்கல், மாட்டு பொங்கல் என கூறப்படும், திருவள்ளுவர் தினம் மற்றும் காணும் பொங்கல் என்ற உழவர் திருநாள் என, மூன்று நாட்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
இந்த ஆண்டு, 14ல், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அரசின் விடுமுறை பட்டியலின்படி, ஜன., 14 முதல், 16 வரை, மூன்று நாட்களுக்கு, பள்ளிகள் விடுமுறை என, அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், பஸ் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால், குறித்த நேரத்தில், பொங்கல் 

பண்டிகைக்கு செல்ல முடியுமா என, பலர் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அவர்கள்முன்கூட்டியே ஊருக்கு செல்லும் வகையில், பள்ளிகளுக்கு, நாளை ஒரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்த உத்தரவில், 'பள்ளி மாணவர்கள், பெற்றோருடன் பொங்கல் பண்டிகை கொண்டாடி, இளம் வயது முதல், தமிழர் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணி காக்கும் வகையில், சிறப்பு நிகழ்வாக, ஜன., 12ல் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 29-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்க உள்ளது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.


அப்போது நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், தற்போது உள்ள உச்சவரம்பானது ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளதாகவும், ஐந்து லட்ச ரூபாய் முதல் பத்து லட்ச ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத வரி விதிக்கவும். மேலும், பத்து லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத வரியும். 20 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீத வரியும் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச் 5 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை இரண்டாவது பகுதி நடைபெறவுள்ளது.

6/1/18

சென்னை பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜெ.இ.இ பயிற்சி வகுப்பு தொடக்கம்

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நீட், ஜெ.இ.இ பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், சுப்பராயன் தெரு, சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோடம்பாக்கம் மண்டலம், 
சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று ஸ்பார்க் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் சென்னை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைக்கப்பட்டன.பின்னர், சுப்பராயன் தெரு சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் நவீன வசதிகளுடன் கூடிய 120 படுக்கைகள் கொண்ட அறைகளும் திறந்து வைக்கப்பட்டன.இது பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறியதாவது:''சென்னை பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க செயல்பாடாக, சுப்பராயன் தெரு சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி, சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கானஉண்டு உறைவிடப்பள்ளி என இரண்டு உண்டு உறைவிடப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.அதேபோன்று, சென்ற ஆண்டு ஸ்பார்க் ப்ரோகிராம் என்ற திட்டத்தின் வாயிலாக பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 70 பள்ளிகளில் இருந்து 25 மாணவர்களும், 45 மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளிப் பாடத்திலிருந்து அவர்களுக்கு சிறப்புப்பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் வாயிலாக மாணவ, மாணவிகளுடைய ஒட்டுமொத்த அடைவுத்திறன் அதிகரிக்கப்பட்டது.

இக்கல்வியாண்டில் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளிலும் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் சேரும் விதமாக 60 மாணவர்கள் மற்றும் 60 மாணவியர்கள் திறனறிவுத் தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இம்மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில்40 மாணவர்கள் மற்றும் 40 மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.மேலும், 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகளுக்கு ’ஜி மெயின் இங்கிலிஷ்’ ஆங்கில வழியில் மட்டும் இரண்டு பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியானது காலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கி திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது.காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பாடத்திட்டத்திலும், சனி மற்றும் விடுமுறை நாட்களில் நீட் மற்றும் ஜெஈஈக்கு சிறப்புப்பயிற்சியாக புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தின் வாயிலாகவும், திங்கள் முதல் வெள்ளி வரை முறைப்படுத்தப்பட்ட அட்டவணையின்படி மாஸ்டர் அகாடமி என்ற நிறுவனத்தின் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இரண்டு மையங்களையும் கல்வித்துறையில் உள்ள கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர் மற்றும் அனைத்து உதவிக்கல்வி அலுவலர்களும் சுழற்சி முறையில் மாணவர்களுடைய அடைவுத்திறன் மேம்படவும் மற்றும் சூநுநுகூ,துநுநு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும் மேற்பார்வையிடப்படுகிறது''.இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையார் கார்த்திகேயன் தெரிவித்தார்.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான அரசு இலவச பயிற்சிமையம் தொடக்கம்: ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள்

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி மையத்தை தமிழக அரசு சென்னையில் தொடங்கியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயா கல்லூரி வளாகத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி மைய தொடக்க விழா நேற்று நடைபெற்றது.


இந்த விழாவில், பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான கையேடுகளை வழங்கி மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:ரயில்வே பணியாளர் வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம், மத்திய வங்கி பணியாளர்களுக்கான தேர்வு வாரியம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரூ.1.53 கோடி செலவில் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி மையத்துக்காக ஆண்டுதோறும் ரூ.1.25 கோடியை தமிழக அரசு ஒதுக்கவுள்ளது. 3 மாதங்களுக்கு 500 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள். பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 மதிப்பிலான பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும். இந்தவாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தற்காலிகமாக தியாகராயா கல்லூரி வளாகத்தில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிரந்தர உண்டு, உறைவிட வசதிகளுடன் கூடிய பயிற்சி மைய கட்டிடம் வடசென்னையின் ஒரு இடத்தில் கட்டி முடிக்கப்படும். அடுத்தகட்டமாக கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இதே போன்று பயிற்சி மையங்களை தொடங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பயிற்சித் துறை தலைவர் கே.ஞானதேசிகன், கூடுதல் இயக்குநர் ஏ.சண்முகசுந்தரம், பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் டாக்டர் எஸ்.ஸ்வர்ணா, சர் தியாகராயா கல்லூரியின் தாளாளர் பி.குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Flash News : போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்புங்கள் - ஹைகோர்ட் உத்தரவு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கையை அரசு எடுக்கலாம் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர், நடத்துனர்கள் உடனடியாக பணிக்கு வராவிட்டால் பணிநீக்கம் உள்ளிட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊதியம் திருப்தி இல்லை என்றால் வேறு பணிக்கு செல்லலாம் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். மேலும் வேலைநிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் பதில் அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜன.8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிரான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எகிறியது நீதிபதிகளின் சம்பளம்! - மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு

உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்பளம் இருமடங்காக உயர
உள்ளது. இதற்கான மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
நீதிபதிகளுக்கான 7 வது சம்பள கமிஷனின் சிபாரிசு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. 7வது சம்பள கமிஷனை அமல்படுத்தி, நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான மசோதா, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அடுத்து குடியரசுத் தலைவரின் கையெழுத்தைப் பெற்று சட்டமாகிவிடும். இந்த மசோதாவின்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சம்பளம், தற்போதைய ரூ.1,00,000-லிருந்து ரூ.2 ,80,000-மாக உயரும். உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சம்பளம் ரூ.90,000-லிருந்து ரூ.2,50,000-மாக உயருகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.80,000-லிருந்து ரூ.2.25,000-மாக உயருகிறது.

2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய சம்பள உயர்வு அமலுக்கு வரும். ஓய்வு பெற்ற 2,500 நீதிபதிகளும் சம்பள உயர்வால் பலனடைவார்கள்.

TNPSC- ANNUAL RECRUITMENT PLANNER 2018



EMIS பணிகளை விரைந்து முடிப்பதற்காக (06.01.2018) பள்ளிகளுக்கு வேலை நாள் - CEO உத்தரவு :

PILOT கல்வி முறையில் வண்ணக் குறியீடுகளின் செயல்பாடுகள் :

5/1/18

BIG BREAKING NEWS தடைகளை தகர்த்து 2009&TET போராட்டக்குழு பெற்ற 10.01.2018 பின்பும் நமது பழைய ஊதியத்தினை தொடர்ந்து பெற்று கொள்ளலாம் என நிதித்துறை செயலாளர் ஆணை கடிதம் எண்-58863/CMPC/நாள் -30.12.2017 நகல்.

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்.பணியில் சேர ஆணை பிறப்பிப்பு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் - மாண்புமிகு நீதியரசர் திரு. கிருபாகரன் அவர்களின் கருத்துக்கு எதிராக செயல்பட்டதாக நீதிமன்ற அவமதிப்பு 
வழக்கில் சம்பந்தப் பட்ட  ஆசிரியர்கள்  அனைவரும் நாளை வெள்ளிக்கிழமை பணியில் சேர பள்ளிக்கல்வித் துறை ஆணை வழங்கியுள்ளது

ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்கள் வேலையிழக்கும் அபாயம்!

தொடக்கப் பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி முடிக்காவிட்டால் வேலையிழக்க
நேரிடும்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கட்டாயக் கல்வி சட்டம் 2009இன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சியைக் கட்டாயம் முடிக்க வேண்டும். இரண்டாண்டு டிப்ளோமா ஆசிரியர் (டிஎல்ஈடி) பயிற்சியை முடிக்காதவர்கள் வேலையிழக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தேசிய திறந்தநிலைப் பள்ளி மண்டல இயக்குநர் ரவி, “தேசிய திறந்தநிலைப் பள்ளி மூலம் ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஸ்வயம் பிரபா என்கின்ற சேனல் மூலம் இதற்கான பாடங்களை கற்க முடியும். பணியில் இருந்துகொண்டே ஆசிரியர்கள் பயிற்சிக்கான டிப்ளோமா படிப்பை பயில முடியும். மேலும், மொபைல் ஆப் மூலமாகவும் படிக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

நாடுமுழுவதும் 15 லட்சம் ஆசிரியர்களும், தமிழகத்தில் 25,600 பேரும் டிஎல்ஈடி பயிற்சியில் சேர்ந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களுக்குத் தேர்வு நடக்க இருக்கிறது. அதில் தேர்ச்சி பெறாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குரூப் - 2 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு!!!

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 2 முதன்மை தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 2ல் அடங்கிய, துணை வணிக வரி அதிகாரி, சார் பதிவாளர் நிலை- - 2, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்பட, 18 வகை பதவிகளுக்கு, 2016 ஆக., 21ல் முதன்மை தேர்வு நடந்தது.
தமிழகம் முழுவதும், 1,094 காலியிடங்களை நிரப்ப, இந்த தேர்வு நடந்தது. தேர்வில், 9,833 பேர் பங்கேற்றனர். அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதிபடி, 2,166 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஜன., 22 - பிப்., 19 வரை நேர்காணல் நடக்கும். தேர்வர்களின் விபரங்கள் www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

நிர்வாக இடமாறுதல் துவக்கம் : கோட்டையில் ஆசிரியர்கள் முகாம்!!!

அரசுபள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட
இடமாறுதல் நடவடிக்கை, மீண்டும் துவங்கிஉள்ளது. தமிழக அரசு பள்ளிகளில்,
ஆண்டு தோறும் மே மாதம், விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு
நடத்தப்படும். இதில், அனைத்து காலியிடங்களும் அறிவிக்கப்பட்டு, அவற்றில், ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, இடமாறுதல் வழங்கப்படும்.
பின், காலியாக உள்ள இடங்களுக்கு, விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், ஜூன் முதல் செப்., வரை இடமாறுதல் ஜரூராக நடந்தது. பள்ளிகளில் வகுப்புகள் நடக்கும் நிலையில், ஆசிரியர்களை மாற்றுவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால், இடமாறுதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து, பருவ தேர்வு விடுமுறையில் மாறுதல் வழங்கி, வகுப்புகள் துவங்கும் போது, ஆசிரியர்களை மாற்ற, அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, இடமாறுதல் நடவடிக்கை துவங்கி உள்ளது.
இந்தமுறை இடமாறுதல் நடவடிக்கை, நேரடியாக பள்ளிக்கல்வி அமைச்சகம் மற்றும் முதன்மை செயலரின் மேற்பார்வையில் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதனால், இடமாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் வழியே, நேரடியாக செயலகத்தில் மனுக்களை குவித்து வருகின்றனர்.

ஆங்கிலம் கற்பித்து அசத்தும் பார்வையற்ற பெண் ஆசிரியை!!!

பெரம்பலுார் : பார்வையற்ற பெண் ஆசிரியை
, அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு ஆங்கில பாடம் கற்பித்து அசத்தி
வருகிறார்.


பெரம்பலுார் மாவட்டம், பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள யூனியன் நடுநிலைப் பள்ளியில், ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, 107 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை உட்பட, எட்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு, பாப்பாத்தி, 29, என்பவர், ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக, 2012 முதல், பணியாற்றி வருகிறார். ஆங்கிலத்தில், எம்.ஏ., - பி.எட்., முடித்துள்ள பாப்பாத்தி, பார்வையற்றவர். துவக்கப் பள்ளி முதல், 'பிரெய்லி' முறையில் படித்தவர். தற்போது, எம்.பில்., பட்டப் படிப்பும் படித்து வருகிறார். ஆறு ஆண்டுகளாக, இங்கேயே பணியாற்றி வருகிறார்.

பாப்பாத்தி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆங்கில பாடம் நடத்துகிறார். மாணவ - மாணவியருக்கு எளிதில் புரியும் படியும், ஆடிப் பாடியும் எளிமையாக பாடம் நடத்துகிறார். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், உரையாடவும் பயிற்சி அளிக்கிறார்.

'தனியார் பள்ளி மாணவர்களுடன், அரசு பள்ளி மாணவர்கள் போட்டியிடும் வகையில், இவரது ஆங்கிலம் போதிக்கும் திறன் உள்ளது' என, அவருடன் பணியாற்றும் சக ஆசிரியர்களே பெருமிதம் கொள்கின்றனர்.

ஆசிரியை பாப்பாத்தி கூறியதாவது: எனக்கு ஒன்றரை வயதில், மூளைக் காய்ச்சலால் பார்வை பறிபோனது. கலெக்டராக வேண்டும் என்பதே என் ஆசை. பார்வையற்றவர், ஐ.ஏ.எஸ்., ஆக முடியாது என்பதால், என் ஆசிரியை ரூபி என்பவரின் வழிகாட்டுதலின்படி, ஆங்கில பாடப்பிரிவு எடுத்து படித்தேன். பெற்றோர் இறந்து விட்டனர். இரண்டு அண்ணன், அக்கா உள்ளனர். என் முயற்சிக்கு, பெரிய அண்ணன் குடும்பத்தினர், மிகவும் உறுதுணையாக இருந்தனர்.

பாடப் புத்தகங்களை, பிரெய்லி முறையில் தான் வைத்துள்ளேன். ஆங்கிலம் வாசித்தல் மற்றும் உச்சரிப்பு, உரையாட பயிற்சி கொடுக்கிறேன். மதிய உணவு இடைவேளை உட்பட, நேரம் கிடைக்கும் போதெல்லாம், மாணவர்களுக்கு, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்பும் எடுக்கிறேன். என் ஊரிலிருந்து, 15 கி.மீட்டரில் உள்ள பள்ளிக்கு, பஸ்சில் தனியாகவே வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



பாடம் நடத்துவதில் மட்டுமின்றி, பள்ளிக்கு சரியான நேரத்தில், வந்து செல்வதையும் பாப்பாத்தி வழக்கமாக வைத்து உள்ளார்.

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் பாடத்திட்டம்! : பள்ளி கல்வி துறை அமைச்சர் உறுதி

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், தொழில் கல்வியுடன் கூடிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்,'' என,பள்ளி கல்வித்துறை அமைச்சர்,
செங்கோட்டையன் தெரிவித்தார்.


 கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்த அறிவியல் கண்காட்சியை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். நிருபர்களிடம், அமைச்சர் கூறியதாவது:படித்து முடித்ததும், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.மூன்று ஆண்டுகளுக்குள் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.

 இதில், 72 பாடங்கள், தொழில்கல்வி கற்றுத்தரும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும். இந்த புதிய பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தைவிட சிறந்ததாக இருக்கும்.அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாக, பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு நிதியிலிருந்து அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரத்து500 பேர் நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பணி நிரந்தரம் என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர்களுக்கு, அரசு உதவி செய்யும் வகையில், பகுதி நேர ஆசிரியர்களை அருகேயுள்ள பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர்நிலை முடித்தவர்கள் மேல்நிலையில் என்ன படிக்கலாம் என்றும், மேல்நிலை முடித்தவர்கள், கல்லுாரியில் என்ன படிக்கலாம் என ஆலோசிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்த பள்ளிகளில், 'படிக்காலம் பாடங்களை' என்ற தலைப்பில், 256 பாடங்களை பெயர் பலகையில் எழுதி ஒரு வார காலம் வைக்கப்படும்.


பெற்றோர், மாணவர்கள் கலந்து பேசி படிப்பதில் ஏற்படும்சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, ஒரு வழிகாட்டியாக இந்த பெயர் பலகை வைக்கப்படும்.மரக்கன்றுகளை நட்டு, ஓராண்டுக்கு பராமரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.