யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/2/18

பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் பொருள்கள்!!!

                                    2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி 20 சதவிகிதமாக அதிகரித்துள்ளதால் மொபைல்போன்
மற்றும் டிவி போன்ற மின்சாதனப் பொருள்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல்போன்களுக்கான சுங்க வரி முந்தைய 15 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். டிவி உதிரிப் பாகங்களுக்கான சுங்க வரியும் முந்தைய 7.5 - 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனால், மொபைல், டிவி மற்றும் ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றின் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனையாகும் மொத்த மொபைல்போன்களில் சுமார் 81 சதவிகித அளவானது உள்நாட்டில் தயாரிக்கப்படுபவையாக உள்ளது. இந்த அளவு 2018ஆம் ஆண்டில் 90 சதவிகிதத்தைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல்போன்களின் விலையில் உயர்வு இருக்காது. வீடியோ கேம் சாதனங்களின் சுங்க வரி முந்தைய ஆண்டின் 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உணவு பதப்படுத்துதல், மின்னணு சாதனங்கள், கார் பாகங்கள், காலணி மற்றும் மரச்சாமான்கள் போன்ற பொருள்களுக்கான உள்நாட்டு மதிப்புக் கூட்டுதலும் சிறப்பாக உள்ளது.

அதிகக் கட்டணம்: மாணவர்கள் போராட்டம்!

                                            
கும்பகோணத்தில் அதிகக் கட்டணம் கேட்பதாக நிர்வாகத்தின்
மீது குற்றம்சாட்டி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று (பிப்ரவரி 1) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம் அருகே உடையாளூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சுமார் 750 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு இறுதியாண்டு மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்புக்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.2,200 கட்டணமாகச் செலுத்த கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், தேர்வு எழுதாமல் இருந்தாலும், தேர்வு எழுதித் தோல்வியடைந்தாலும் அபராதம் செலுத்த வேண்டும் என்பது போன்ற விதிகள் கல்லூரியில் இருப்பதைக் கண்டித்து வகுப்புகளைப் புறக்கணித்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

முன்னதாக கடந்த ஜனவரி 31 அன்று தமிழகத்தில் பேருந்துக் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரி நிர்வாகத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்குச் சென்றனர்.

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!!!

                                                 
ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள உதவியாளர் 
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 27

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.13,150 - 34,990/-

வயது வரம்பு: 20 -28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் மொழியியல் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

கடைசித் தேதி: 19.02.2018

மேலும் விவரங்களுக்கு https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTE30012018C4BD15E84BF7477D927549B329231E9B.PDF என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

சம்பளதாரர்களுக்கு ஏமாற்றம்-கழிவு மட்டுமே மிஞ்சியது!!!

நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்​!!!

தமிழகத்தில் 'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இது தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிவதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி வந்தார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- கல்வித்துறையில் வரி உயர்வுஎன்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தந்துள்ளது. 'நீட்' தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

 இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பின்னர் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உரிய முடிவு எடுப்பார்கள். இருப்பினும் 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து, 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'நீட்' தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களில் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேரை பொதுத்தேர்வுக்கு பின்னர் தேர்வு செய்து 20 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி பெறுவார்கள். அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் 'நீட்' தேர்வை தடுக்க முடியுமா? என்றால் முடியாது.

 இது தொடர்பாக கடந்த முறை முதல்-அமைச்சர் 3 முறை டெல்லி வந்து பிரதமரை சந்தித்து முயற்சி மேற்கொண்டார். அப்போது கோப்புகள் நகர்ந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உருவானது. தற்போது, 'நீட்' தேர்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தமிழக அரசு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

EMIS-Report as on 02.02.2018 - All Districts

கூடுதலாக வழங்கப்பட்ட(பி.எட்) ஊக்க ஊதியம் திருப்பி செலுத்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கிய ஆணைக்கு தடையாணைக்கு விளக்கம் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!!

2018 வருமான வரி விண்ணப்பம் தாக்கல் செய்வது தொடர்பாக சார்நிலை கருவூலம் தெளிவுரை!!


CPS NEWS: தமிழக அரசு ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய (PFRDA)த்திடம் செய்து கொண்ட ஒப்பந்த நகலினை RTI சட்டப்படி பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் உத்தரவு!!!

2/2/18

NHIS திட்டத்தில் தொடரும் குளறுபடியும், மருத்துவமனைகளின் பித்தலாட்டமும்
எதிர்த்து களமிறங்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாரம் TNPTF வட்டாரத் தலைவர் திரு.பிரிட்டோ அவர்கள் கடந்த 23.1.2018 அன்று எலும்பு முறிவிற்காக மதுரையில் புகழ் வாய்ந்த மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். சிவகங்கை மாவட்ட பொருளாளர் குமரேசன் அவர்கள் உடன் இருந்து அனைத்து உதவிகளையும் செய்தார். தனக்கு NHIS திட்டத்தில் சிகிச்சையளிக்க கோரியபொழுது முன் பணம் கட்ட வற்புறுத்திய மருத்துமனை நிர்வாகம் 50 ஆயிரம் செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளது. வேற வழியில்லாமல் தன்னிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயை தோழர் செலுத்தியுள்ளார். இந்நிலையில் காப்பீட்டு நிறுவனம் தங்களுக்கு 23.1.2018 அன்று 32ஆயிரம் ரூபாய்தான் அனுமதித்துள்ளது, மேலும் சிகிச்சையளிக்க வேண்டுமானால் 40 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என  மருத்துமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில் தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறுவதாக 31.1.2018 அன்று மருத்துமனை நிர்வாகம் எழுத்து பூர்வமான கடிதம் கோரியுள்ளது.
 இது குறித்து மாவட்ட மையத்தை தோழர் பிரிட்டோ தொடர்பு கொண்டபொழுது நாம் இத்திட்டத்தினால் எழும் பிரச்சனைகளுக்காக மாநில மையத்தால் நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகனேஷ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இது குறித்து விரிவாக ஆலோசிக்க திருப்பரங்குன்றம் வட்டாரச் செயலாளர் திரு.ஸ்ரீனிவாசகன் மருத்துமனைக்கே நேரடியாக சென்று பிரிட்டோ அவர்களை சந்தித்து சில ஆலோசனைகளை வழங்கினார். அதன் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் அனுமதித்த தொகை சரிதானா என தகவல் சேகரித்தபொழுது 26.1.2018 அன்றே மருத்துமனையில் இருந்து விடுவிப்பு செய்யப்பட்டதாக பதிவு இருந்ததை கண்ட தோழர் பிரிட்டோ அதிர்ச்சிக்குள்ளானார். 26.1.2018 அன்று விடுவிப்பு செய்ததாக பதிவேற்றிவிட்டு 31.1.2018 அன்று சொந்த விருப்பத்தின் பேரிலேயே சிகிச்சை பெறுவதாக கடிதம் கோரிய மருத்துவமனையின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தோழர் பிரிட்டோ மாவட்ட மையம் மற்றும் தோழர் செல்வகனேஷ் அவர்களின் வழிகாட்டுதலின் படி தற்பொழுது மதுரை மாவட்ட சுகாதரத்துறை இணை இயக்குனர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் மருத்துமனையின் உள்நோக்கம் குறித்தும், தனக்கு முழுமையான பணத்தை விடுவிப்பு செய்வதோடு ஏற்கனவே மருத்துமனையில் செலுத்திய 20 ஆயிரத்தையும் மீட்டு தரவேண்டும் என மனு அளித்துள்ளார். மேலும் முழு தொகை விடுவிப்பு செய்யும் வரை மருத்துமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறவும் முடிவாற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட உரிமை மீட்பில் தொடர்ந்து உதவி வரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையத்திற்கும், விருதுநகர் மாவட்டப் பொருளாளர் திரு.செல்வகனேஷ் அவர்களுக்கும் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரச் செயலாளர் திரு.ஸ்ரீனிவாசகன் அவர்களுக்கும் சிவகங்கை மாவட்ட கிளை நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.
'பாதகம் செய்பவரை கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா – அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
என்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மட்டுமல்ல நாங்கள்
'நெஞ்சினை பிறந்தபோதும் நீதி கேட்க அஞ்சிடோம்
நேர்மையற்ற பேர்களின் கால்களை வணங்கிடோம்' என்ற வரிகளை நெஞ்சில் தாங்கும் சமரசமற்ற போராளி இயக்கமான தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அக்னி குஞ்சுகள் என்பதை அதிகார வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து இயக்க பணியில்
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மாவட்டம்

10ம் வகுப்புக்கு தேசிய கற்றல் அடைவுத்தேர்வு : பிப்., 5ல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது!!!

நாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனை பரிசோதிக்க, தேசிய 
கற்றல்அடைவுத்தேர்வு, வரும் 5ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் இருந்து, 2,560 பள்ளிகளை
சேர்ந்த மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்கின்றனர்
.
மாநில வாரியாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், மாநில வாரியாக, மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்க, அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இத்தேர்வு நடத்தப்படுகிறது. 2015க்கு பின், வரும் 5ம் தேதி, தேசிய கற்றல் அடைவுத்தேர்வு, அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது. மாநில வாரியாக, ஒரு மாவட்டத்துக்கு, தலா, 80 பள்ளிகளில் இருந்து, அதிகபட்சம், 45 மாணவர்கள் மட்டுமே, இத்தேர்வை எழுதுகின்றனர். அனைத்து பாடங்களுக்கும், 'ரேண்டம்' முறையில், மாணவர்களை தேர்ந்தெடுத்து, மூன்று வகையான வினாத்தாள் வினியோகிக்கப்படும். ஒரு பாடத்தில் இருந்து, தலா 60 கேள்விகள் இடம்பெறும்.
குறைவான மதிப்பெண் இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாநிலத்தின் கல்வி குறியீடு தரவரிசைப்படுத்தப்படும். இதில், அந்தந்த மாநில பாடத்திட்டத்தின் படி, ஒவ்வொரு பாடத்தில் இருந்தும், 'அப்ஜெக்டிவ்' முறையில், 60 கேள்விகள் இடம்பெறும். ஓ.எம்.ஆர்., ஷீட்டில், விடைக்குறிப்புகள் அடையாளப்படுத்த வேண்டும். ஒரு மாணவன், ஒரு பாட வினாத்தாளுக்கு மட்டுமே விடையளிக்க முடியும். தமிழகத்தை பொறுத்தமட்டில், 2015ல், மாணவர்கள் சராசரியை விட, குறை வான மதிப்பெண் பெற்று இருந்தது தெரியவந்துள்ளது.
மொழிப்பாடங்களில் சராசரியாக, 500க்கு 225 மதிப்பெண் மட்டுமே, மாணவர்கள் பெற்று இருந்தனர். கணிதத்தில், 226; அறிவியலில், 229 மற்றும் சமூக அறிவியலில், 500க்கு, 215 மதிப்பெண், சராசரியாக பெற்றிருந்தனர்.

எந்த வங்கியிலும் ஆதாரை பதிய வசதி!!!

'வங்கிகளில் செயல்படும், ஆதார் மையங்களில், வேறு வங்கி வாடிக்கையாளர்கள், 
வங்கிக் கணக்கே இல்லாத பொதுமக்களும், ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை செய்யலாம்.

ஆதார் எண்ணை, வங்கிக் கணக்கு, மொபைல் போன், பான் கார்டு போன்றவற்றுடன் இணைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், ஆதார் பதிவு மையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்டத்தை சமாளிப்பதற்காக, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலும், ஆதார் பதிவு மையங்களை துவக்க, மத்திய அரசு, நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, வங்கிக் கணக்குடன், ஆதார் இணைப்பது கட்டாயம் ஆகியுள்ளதால், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், தங்களின், 10 கிளைகளுக்கு, ஒரு கிளை வீதம், ஆதார் பதிவு மையங்களை அமைத்துள்ளன. ஆனால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு, எந்த கிளையில், ஆதார் மையம் செயல்படுகிறது என, தெரியாத நிலை உள்ளது. இதை, மக்கள் எளிதில் கண்டறியும் வசதியை, ஆதார் பதிவை மேற்கொள்ளும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனும், தனித்துவ அடையாள எண் மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது. இதன்படி, //appointments.uidai.gov.in/easearch.aspx என்ற வலைதள முகவரியை, 'டைப்' செய்தால், ஒரு திரை தோன்றும். அதில், எந்த மாநிலம், மாவட்டம், ஊர் போன்ற விபரங்களை குறிப்பிட்டதும், எந்த வங்கிக் கிளையில் ஆதார் மையம் செயல்படுகிறது, யாரை தொடர்பு கொள்வது என்பது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், பதிவு மையம் அமைந்துள்ள வங்கியில், கணக்கு வைத்திருக்காதவர்களும், வங்கிக் கணக்கே இல்லாதவர்களும் கூட, எந்த வங்கிக் கிளையிலும், ஆதார் விபரங்களை பதிவு செய்யலாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியரை ஒழுக்க குறைவாக பேசக்கூடாது' : ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை!!!

மாணவ - மாணவியரை ஒழுக்க குறைவாக பேசினால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை 
எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

புகார் :
பள்ளி, கல்லுாரிகளில் குருகுல கல்வி முறை காலம் மாறி, குருவையே மாணவர்கள் மிஞ்சும் அளவுக்கு, கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.பள்ளிகளில் பாடம் நடத்தும் முறை, மாணவர்களிடம் பழகும் தன்மை ஆகியவையும் மாறியுள்ளது. மாணவர்களை பிரம்பால் அடிப்பது, கடுமையான வார்த்தைகளால் பேசுவது போன்றவற்றுக்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது. நண்பர்களாக பழகி, மாணவர்களை நல்வழிப்படுத்துமாறு, கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், அரசு பள்ளிகள் சிலவற்றில், ஆசிரியர்களே, மாணவர்களிடத்தில் கோஷ்டியை உருவாக்கி, தவறாக வழிநடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தங்களுக்கு வேண்டாத பெற்றோரின் பிள்ளைகள், தங்களுக்கு பணிவிடை செய்யாத மாணவ - மாணவியரை, குறிப்பிட்ட மாணவர்களுடன் இணைத்து, ஒழுக்க குறைவாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. சென்னை, கோடம்பாக்கம், பதிப்பகச் செம்மல் கணபதி அரசு மேல்நிலை பள்ளியில், பட்டதாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர், மாணவ - மாணவியர் சிலரை தவறாக பேசி, அடித்துள்ளனர்.

நடவடிக்கை :

தேர்வுகளில், அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட, இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். மனதளவில் பாதிக்கப்பட்ட சில மாணவியர், தேர்வு துவங்க உள்ள நிலையில், பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளனர். இதுகுறித்து, பெற்றோர், சில தினங்களுக்கு முன், பள்ளியில் முற்றுகையிட்டு, ஆசிரியர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய ஆசிரியர்கள் சிலர், தரக்குறைவாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது.இதையடுத்து, ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

'மாணவர்கள், இளம் வயதினர் என்பதால், அவர்களை பக்குவமாக கையாண்டு, திருத்த வேண்டும். அதை செய்ய முடியாத ஆசிரியர்கள், பாடம் நடத்தி விட்டு, பெற்றோருக்கோ, தலைமை ஆசிரியரிடமோ, மாணவர்களின் நடத்தை குறித்து தகவல் அளிக்கலாம். 'மாறாக, மாணவ - மாணவியரை கிண்டல் செய்வது, அவர்களின் மனம் புண்படும்படி, தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. 'மீறினால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்துள்ளனர்.

தொழிற்கல்விக்கான உதவி ரூ.50 ஆயிரமாக உயர்வு!!!

தொழிற்கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி
உதவித்தொகை, 25 ஆயிரம்ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசாணை : தொழிற்கல்வி கற்கும்ஏழை மாணவர்கள், தங்கள் படிப்பை தொடர, முதல்வர் பொது நிவாரணநிதியிலிருந்து, நிதியுதவிவழங்கும் திட்டம், 2003ல், துவக்கப்பட்டது. இதன்படி, ஆண்டு தோறும், 100 மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் காலத்தில், ஒரு முறை மட்டும், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. பின், இந்த எண்ணிக்கை, 200 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின், பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு, 2015 - 16ல், 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம்ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வு : முதல் பட்டதாரி சலுகை பெற்றிருந்தும், தொழிற்கல்வி படிக்க முடியாமல், மிகவும் வறிய நிலையில் உள்ளோரும், தொழிற்கல்வி உதவித்தொகை பெறலாம். இந்த உதவித்தொகை, மாவட்ட கலெக்டரால் பரிந்துரைக்கப்பட்டு, சிறப்பினமாக கருதப்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, வழங்கப்படும்.

இன்ஜி., படிப்புக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங் உறுதி : பெட்டி, படுக்கையுடன் சென்னைக்கு வரவேண்டாம்!!!

இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும்' 
என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இனி, மாணவர்களும், பெற்றோரும், பெட்டி, படுக்கையுடன், சென்னைக்கு வர தேவையில்லை.

அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், தமிழக அரசின் சார்பில், பொது கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஒற்றை சாளர முறையில் நடக்கும் இந்த கவுன்சிலிங்கில், மாணவர்களின் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இதற்காக, சென்னையில் அண்ணா பல்கலை வளாகத்தில், கவுன்சிலிங் மையம் அமைக்கப்பட்டு, மாணவியர், அவர்களின் பெற்றோர் தங்குவதற்கு, இலவச விடுதி வசதி செய்யப்படும். மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் ஒரு நபருக்கு, அரசு பஸ்சில் சென்னைக்கு வர, இலவச கட்டண சலுகை தரப்படும்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைனுக்கு மாற்றப்படுகிறது. இதை, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன், நேற்று உறுதி செய்தார். இதற்கான ஏற்பாடுகள், முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவர் கூறினார்.

அண்ணா பல்கலையின் கணினி அறிவியல் துறை தலைவரும், ராமானுஜன் கணினி மைய இயக்குனருமான, பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ், கவுன்சிலிங் கமிட்டி உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில், கவுன்சிலிங் பணிகள் நடந்து வருகின்றன. ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களின் வசதிக்காக, 32 மாவட்டங்களிலும், கவுன்சிலிங் உதவி கணினி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த மையங்களில், கணினியுடன், உயர்தர இணையதள வசதி செய்யப்பட்டிருக்கும். மாணவர்கள் அங்கு சென்று, சேர்க்கையில் பங்கேற்கலாம். மேலும், வீட்டில் இணையதளத்துடன் கூடிய, கணினி வசதியுள்ள மாணவர்கள், வீட்டில் இருந்தவாறே கல்லுாரியையும், பாட பிரிவையும் தேர்வு செய்யலாம்.

கவுன்சிலிங் மையத்தில், தனியார் கல்லுாரி தரகர்கள் முகாமிட்டு, மாணவர்களை தங்கள் கல்லுாரிகளில் சேர வைக்கும் பிரச்னைகளுக்கு, இனி இடம் இருக்காது. கவுன்சிலிங்கிற்காக, அண்ணா பல்கலையில் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளுக்கான செலவுகளும் குறையும் என, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கால நீட்டிப்பிலே காலம் தள்ளும் வல்லுநர் குழு போராட தயாராகும் ஊழியர்கள்!!!

போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் கட்!!!

FLASH:2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்

*விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும்
வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது*

*விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டம் மீனவர்கள், கால்நடை வளர்ப்போருக்கும் விரிவாக்கம்*

*விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் மீனவர்களுக்கும் வழங்கப்படும்*

*மூங்கில் பயிரிடுவோருக்கும் மத்திய அரசின் உதவிகள் நீட்டிக்கப்படும்*

*ஆபரேசன் க்ரீன் என்ற பசுமையாக்கும் திட்டத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு*


*இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை*

*விவசாயிகள் உற்பத்தி செலவில் 1.5 மடங்கு லாபம் ஈட்ட நடவடிக்கை*

*விவசாயிகளின் விளை பொருட்களுக்கான விலையை 150 விழுக்காடு உயர்த்த திட்டம்*

*உணவு பதப்படுத்தல் துறைக்கான முதலீடு 2 மடங்காக்கப்பட்டுள்ளது*

*இந்தியா முழுவதும் 42 ஹைடெக் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்*

*பட்ஜெட் இதுவரை: இதுவரை அருண் ஜேட்லி சமர்பித்த பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம்*

*விவசாயிகள் தங்கள் செலவை விட 1.5 மடங்கு அதிகமாக பணம் ஈட்ட வகை செய்துள்ளோம்*

*விவசாயிகளுக்கு ''அச்சே தின்'' வந்து கொண்டுள்ளது*

*விவசாயத்துறையின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும்*

*உணவு தானிய உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது*

*விவசாயத்துறையின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும்*

*மாநில அரசுகளுடன் இணைந்து கல்வியின் தரம் உயர்த்த நடவடிக்கை*

*விளை பொருட்களுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது*

*2020ல் விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக்குவோம்*

*விவசாயத்துறையின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும்*

*இந்தியாவின் நேரடி வரிவிதிப்பு முறை உலகளவில் பேசப்படுகிறது*

*உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று*

*2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாய் 2 மடங்காக உயரும்*

*- அருண் ஜெட்லி*

மாற்றுத்திறனாளி, கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டம்: அருண் ஜெட்லி உரை!!!

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் 
அருண் ஜெட்லி, மாற்றுத்திறனாளிகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டம் அறிமுகம் செய்யப்படும். வருங்கால வைப்பு நிதிக்கு பணியில் சேர்ந்த முதல் 3 ஆண்டுகளில் பெண்கள் 8% செலுத்தினால் போதும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.*

FLASH NEWS:வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை!!!



தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை; வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 
லட்சமாக தொடரும்-

* கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செஸ் வரி 4% அதிகரிப்பு- நிதியமைச்சர் அருண் ஜெட்லி*