யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/1/19

பள்ளிக்கல்வி துறை 'டிவி' ஜன.21 முதல் ஒளிபரப்பு:

தமிழக பள்ளி கல்வி துறையின் 'டிவி' சேனல் ஒளிபரப்பு வரும் 21ம் தேதி முதல் துவங்குகிறது.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டு உள்ளது. பள்ளி 
கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் மேற்பார்வையில், இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர், 'டிவி' பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், தொலைக்காட்சிக்கான, 'ஸ்டுடியோ' அமைக்கப்பட்டுள்ளது. நவீன வகை கேமராக்கள், படப்படிப்பு கருவிகள், ஆளில்லாவிமானம் ஆகிய வசதிகளுடன், படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றன.தினமும், 15க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், எட்டு மணி நேரம் ஒளிபரப்பாகும். தினமும், இரண்டு முறை மறு ஒளிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சிகள், 'யூ டியூப்'பிலும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.
பள்ளிகளின் பராமரிப்பு, சிறந்த உள்கட்டமைப்பு உள்ள பள்ளிகள், அரசு பள்ளிகளில் ஜொலிக்கும் ஆசிரியர்கள், சிறந்த திறன்களை வெளிப்படுத்தும் மாணவர்கள், கல்வி உதவி தொகை விபரம், அரசு திட்டங்கள், கல்வி செய்திகள் என, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசு கேபிள், 'டிவி'யில், 200ம் எண் ஒதுக்கப்பட்டுள்ளது.வரும், 21ம் தேதி முதல் ஒளிபரப்பை துவங்க, பள்ளி கல்வி துறை திட்டமிட்டுஉள்ளது.

தொழிற்கல்விக்கு மாறிய மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பதில் சிக்கல்:

பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த 28 ஆயிரம் பேரில் பலர் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,க்கு மாறியதால், அவர்களை பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில் தனித்தேர்வர்களை தவிர்த்து 8.47 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் 7.74 லட்சம் பேர் தேர்ச்சி, 73 ஆயிரத்து 800 பேர் தோல்வி அடைந்தனர். தோல்வி அடைந்தவர்களும் தொடர்ந்து பிளஸ் 2 படிக்க கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் பல பள்ளிகள் பின்பற்றவில்லை. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியலில் 28 ஆயிரத்து 167 பேர் விடுபட்டனர். அவர்களை பள்ளிகளில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றியது தெரிந்தது.
இதையடுத்து, 'அனைவரையும் பள்ளி மாணவர்களாகவே பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வை எழுத வைக்க வேண்டும்' என தேர்வுத்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் வெளியேறிய மாணவர்களில் சிலர் தனித்தேர்வர்களாகவும் மாறிவிட்டனர். பலர் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,யில் சேர்ந்துள்ளனர். சிலர் வேலை செய்கின்றனர்.
இதில் தனித்தேர்வர்களையும், வேலைக்கு சென்றோரையும் அழைத்து பள்ளிகள் மூலம் தேர்வு எழுத வைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., யில் படிப்போரை தேர்வு எழுது வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அவர்களை பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பது குறித்து தேர்வுத்துறைதான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் எப்போது?

இன்று சட்டப்பேரவையில் இன்பசேகரன் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவடைந்த உடன் பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறை நிர்வாக சீர்திருத்த தகவல்கள் உண்மையா? வதந்தியா?

2019-20 ஆம் கல்வியாண்டு முதல்
தொடக்கக்கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கப்படுகிறது.

*3 முதல் 5 கி மீ சுற்றளவில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் அருகில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளோடு இணைக்கப்படுகிறது.

*தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதி ஆகின்றன.(DEEO post ஒழிக்கப்பட்டது போல்)

*நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாற்றம் செய்யப்படக் கூடும்.

*படிப்படியாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக் உட்படுத்தப்படுவர்

.*(காலிப்பணியிடத்திற்கு ஏற்ப, பட்டதாரி பணியிடத்திற்கு ஏற்ப தகுதி மற்றும் பதிவு மூப்பு இருப்பின்)

*மீதம் உள்ளவர் நிலை இறக்கம் செய்யப்படலாம்.


*ஆனால் தற்போது பெறும் ஊதியத்தில் மாற்றம் இராது.


*அனைவரின் முன்னுரிமையும் மாநில அளவில் பேணப்பட உள்ளதாக தெரிகிறது.

*BEO க்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக மாற்றப்பட உள்ளனர்.

*BE0 பணியிடங்களில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

*BEO அலுவலகம் பார்வை மற்றும் ஆய்வு அலுவலகமாக் மாற்றப்படுகிறது.

*தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நீக்கப்படக் கூடும்.

*உதவி பெறும் பள்ளிகளுக்கு 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் தான், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

தலைமை ஆசிரியர் பதவி

*மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே இருப்பர்.

உதவி ஆசிரியர்கள் வகை:

*இடைநிலை ஆசிரியர், பட்டதாரிஆசிரியர்,முதுகலை ஆசிரியர்
ஆகிய வகைகள் மட்டுமே

அனைத்து ஆசிரியர்களும், அமைச்சுப் பணியாளர்களும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளனர்.


*அனைத்து ஆசிரியர்களுக்கும் இனி சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே.

*வட்டாரத்தை கவனிக்க BE0

*கல்வி மாவட் டத்தை கவனிக்க DE0

*மாவட்ட கல்வி நிர்வாகத்தை கவனிக்க CEO

*மேற்கண்டோரின் பணியை மேற்பார்வையிட, 1 அல்லது 2 மாவட்டத்திற்கு ஒரு JD

*இதனை கண்காணிக்க, மண்டல வாரியாக (சுமார்5 அல்லது 6 மாவட்டங்கள்) இயக்குநர்

என்ற வகையில் கண்காணிப்பு வளையம் இருக்கும் என கூறப்படுகிறது.

*பள்ளிக் கல்வி இயக்குநர் மட்டுமே, பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இருப்பார்.

*பிற இயக்குநர்கள் மண்டல இயக்குநர்களாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டல அலுவலகத்தில் பணியாற்றுவர் எனவும் கூறப்படுகிறது.

*இவை அனைத்தும் வாட்ஸ் அப் பகிர்வுகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவை. அரசாணை நடைமுறைக்கு வந்தால் தான், உண்மையான மாற்றங்கள் என்னவென்று தெரிய வரும்.

தகுதி தேர்வை முடிக்காத 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து... THANKS TO THANTHI TV


Science Fact - இறப்புக்குப் பின்னர் மனிதர்கள் விழிக்கொடை அளிப்பது போன்று குருதிக் கொடை அளிக்க இயலாதது ஏன் ?

மனித உடலிலுள்ள திசுக்களில் (tissues) இறப்பு, நீக்கவியலாத மாற்றங்களைத் தோற்றுவித்து விடுகிறது. இறப்புக்குப் பிந்தைய இம்மாற்றங்களுக்குக் காரணம் உடல் அணுக்களில் பொதிந்துள்ள அழிவு நொதிகள் (destructive enzymes) மற்றும் நுண்ணுயிரிகள் (microbes) ஆற்றும் வினை; அடுத்த காரணம் உயிர்வாழ்வதற்கு முக்கியத் தேவைகளான உயிர்வளி மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியன நின்றுபோவது. ஆனால் இம்மாற்றங்கள் உடலின் எல்லா உறுப்புகளிலும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை; உறுப்புக்கு உறுப்பு இம்மாற்றங்கள் நிகழ்வதற்கான காலம் வேறுபடும். இறப்புக்குப் பிந்தைய மாற்றங்கள் குருதியில் உடனடியாக உண்டாகின்றன. சாவுக்குப்பின் இதயத்தில் குருதி ஓட்டம் நின்றுபோவதால், இறந்த உடலில் இருந்து வலிந்து குருதியை வெளிக்கொணர வேண்டும். அப்போது நுண்ணுயிரிகளின் (micro organisms) தொடர்பால் குருதி மாசடைந்து போகும். மாசடைந்த குருதியைப் பயன்படுத்த இயலாதல்லவா ? இவையனைத்தையும் விட முக்கியமான காரணம் ஒருவர் உடலில் குருதிக் கொடையளித்த சில நாட்களுக்குள் மீண்டும் புதுக்குருதி ஊறிவிடும். குருதிக் கொடையளிக்கும் நல்ல உள்ளம் கொண்ட பலர் உலகில் உள்ளனர்; எனவே பிணத்தில் இருந்து அதனைப் பெறவேண்டிய கட்டாயம் இல்லை. அடுத்து சிறுநீரகம், இதயம், விழிகள் ஆகிய உறுப்புகளில் இறப்புக்குப் பிந்தைய மாற்றங்கள் சற்று தாமதமாக நிகழும். எனவே இறந்த உடனே அவற்றை எடுத்துத் தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு பதப்படுத்தி வைத்தால் வேறோர் உடலில் பொருத்திட இயலும். மேலும் உயிரோடிருக்கிற ஒருவர் கண்களைக் கொடுத்தால், அது அவருக்கு நிரந்தர இழப்பாக அமைந்துவிடும். எனவே தான் இறந்தவர் உடலில் இருந்து அதனைப் பெறுகிறோம்.

பணியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெறும் போது இனி 5% பங்குத் தொகை கட்டினால் போதும் என்பதற்கான உத்தரவு...

Flash News : அங்கன்வாடி மையத்துக்கு ஆசிரியர் ஒதுக்கீடு, ஒன்றிய அளவில் இளையவரான ஒருவரை, அல்லது அருகில் உள்ள ஒன்றியத்தில் இருந்து ஒருவரை ஒதுக்க இயக்குநர் பட்டியல் கேட்பு.

4/1/19

நீதிக்கதை---சிந்தனை கதைகள்



ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தார்..

அவர் மிகப்பெரிய பணக்காரர்.. ஆனால் யாருக்கும் உதவ மாட்டார்..

ஆனால், ஒரு ஆசை மட்டும் வெகுநாட்களாக இருந்தது..

தான் உயிருடன் இருக்கும்போதே.. சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தான் அது..

ஒருநாள், அவரது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்..

அவரின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறினார்..
அவரை அழைத்துக் கொண்டு சென்றார்.முதலில் அவரை நரகத்திற்கு கூட்டி சென்றார்.._

அங்கு உணவு நேரத்தில் பெரிய, பெரிய அண்டாக்களில் சாதம்.. குழம்பு.. மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன..
அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது..

எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது..

ஆனால், அந்தோ பரிதாபம்..

அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி வாய்க்கு உணவை கொண்டு செல்ல முடியவில்லை..

எனவே, அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை.. அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.. அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு.. அவற்றில் உள்ள உணவை கொட்டித் தள்ளினர்.. பின்னர் தாங்க முடியாத பசியினால் அழுது கொண்டே இருந்தனர்.. அது ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது..

அதன் பின்னர், அந்த பெரியவர் கருமியை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்.. அங்கும், அதே போல.. நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டுருந்ததது.. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது.. ஆனால் தங்கள் வாய்க்கு அருகில் கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை..

ஆனால், அவர்களில் ஒருவர் தனது கையினால் இனிப்பு வகைகளை எடுத்து மற்றொருவர் வாய் அருகே நீட்டினார்..

கையை மடக்கத்தானே முடியாது.. கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாமல்லவா..

இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.. அனைவரின் வயிறும் நிரம்பியது..

கனவில் இருந்து மீண்ட கருமி.. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை புரிந்து கொண்டார்.. தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தார்.. அன்றிலிருந்து அவர் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தார்..

குரூப்-1 பதவிக்கு 21ம் தேதி நேர்காணல்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான நேர்காணல் வருகிற 21ம் தேதி தொடங்கும்  என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது


இது குறித்து டி.என்.பிஸ்.சி. நேற்று வெளியிட்ட அறிவிப்பு


 குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு சென்னையில் உள்ள  தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது


இது தொடர்பான தகவல்  விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் (இ-மெயில்) வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது


  மேலும், நேர்முகத்தேர்வுக்கான குறிப்பாணையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


விண்ணப்பதாரர் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நாளில் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.  குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்து கொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது


 நேர்காணல் தேர்விற்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும்,  முழுத் தகுதி பெற உறுதி  அளிக்கப்பட்டதாகவும் கருத இயலாது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

ஜனவரி 23, 24ம் தேதிகளில் பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் தட்கலில் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித் தேர்வர்களாக எழுத விரும்பும் மாணவர்கள் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்


 இந்த தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்கள் 23 மற்றும் 24ம் தேதிகளில் சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது


 தமிழகத்தில் மார்ச் மாதம் நடக்க இருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்


நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் பகுதி 1ல் மொழிப்பாடத்தை தேர்வு செய்யும்போது கண்டிப்பாக தமிழ் மொழியை முதல் மொழிப்பாடமாக எழுத வேண்டும்


முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 2019 மார்ச் 1ம் தேதி பதினான்கரை வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்


 மத்திய, மாநில அரசுப் பள்ளிகளில் 8ம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர், 9ம் வகுப்பு வரை படித்து இடையில் நின்றவர்கள், பிற துறையால் நடத்தப்படும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


 பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல் பாடத் தேர்வு இருப்பதால், செய்முறைப் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பித்து செய்முறைத் தேர்வு எழுதிய பிறகே அறிவியல் பாடத் தேர்வை எழுத முடியும். செய்முறை பயிற்சி வகுப்பில் சேர கடந்த 8.6.18 முதல் 30.6.2018 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது


மேற்படி தேதிகளில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் தற்போது அறிவிக்கப்படும் தேதியில் பதிவு செய்து 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை பயிற்சி பெற்று செய்முறைத் தேர்வு எழுத வேண்டும்


ஏற்கெனவே அறிவியல் பாடத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் செய்முறை அல்லது எழுத்து தேர்வு இதில் எந்த பகுதியில் தோல்வி அடைந்தார்களோ அதற்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்


 தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். சேவை மையங்கள் குறித்த விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்


 பத்தாம் வகுப்புக்கு தனித் தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணம் ₹125, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ₹50 சேர்த்து செலுத்த வேண்டும். தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்


 மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறுவோர், சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் 23ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில் ஆன்ைலனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்

அண்ணா பல்கலை வினாத்தாள், 'லீக்' : போலீஸ் விசாரணைக்கு முட்டுக்கட்டை

சென்னை: அண்ணா பல்கலையின் வினாத்தாள், 'லீக்' விவகாரத்தில், பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை விசாரிக்க, போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையில், தேர்வுத் துறை முறைகேடு, பேராசிரியர்கள் நியமனம், நிர்வாக பிரச்னை என, பல்வேறு விதிமீறல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரங்கள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு மற்றும் சி.பி., - சி.ஐ.டி., போலீசார், விசாரித்து வருகின்றனர். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முதல், தேர்வு துறையின் பெண் ஊழியர் வரை, முறைகேடு விவகாரங்களில் சிக்கியுள்ளனர்.ஏற்கனவே, விடைத்தாள் மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்கிய விவகாரம், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், டிச., 3ல், பருவத் தேர்வுக்கான கணித வினாத்தாள், லீக் ஆன விவகாரம், அண்ணா பல்கலைக்கு, மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.இந்த பிரச்னையில், இன்ஜி., கல்லுாரிகளின் இரண்டு மாணவர்களும், தேர்வு துறை தலைமை அலுவலக ஊழியர் ஒருவரும், சி.பி., - சி.ஐ.டி., போலீசிடம் சிக்கியுள்ளார். அவர்களிடம், போலீசார் நடத்திய விசாரணையில், பல தேர்வுகளுக்கு வினாத்தாள் லீக் ஆனதாக, தகவல் வெளியாகியுள்ளது.முந்தைய தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தாலும், அவை ரகசியமாக வைக்கப்பட்டதால், ஊழியர்கள் யாரும் சிக்கவில்லை என்றும், இந்த முறை, 'வாட்ஸ் ஆப்'பில் பகிர்ந்ததால் சிக்கியதும், தெரிய வந்துள்ளது. எனவே, இந்த பிரச்னையில், தேர்வுத் துறையின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என, போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து, சந்தேகத்துக்குரிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்களை விசாரிக்க, அண்ணா பல்கலை தரப்பில் ஒப்புதல் அளிக்கவில்லை என, கூறப்படுகிறது.இதனால், வினாத்தாள், லீக் ஆன வழக்கு விசாரணையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. உண்மையை கண்டறிய, போலீஸ் விசாரணைக்கு, அண்ணா பல்கலை நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துஉள்ளது.

குறைந்த மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களை வெளியேற்ற தடை

சென்னை: 'அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற, பிளஸ் 1 மாணவர்களை, பள்ளிகளில் இருந்து வெளியேற்ற முயற்சிக்க கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், பள்ளிக் கல்விப் பாடத் திட்டத்தில், அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டது. நேற்று, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாடங்கள் துவங்கியுள்ளன. மற்ற வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என, தனியார் பள்ளிகள் இலக்கு நிர்ணயித்துள்ளன. இந்த தேர்ச்சி சதவீதம் அடிப்படையில், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கையை நடத்தவும், கட்டணம் நிர்ணயிக்கவும், பல பள்ளிகள் முடிவு செய்துள்ளன.எனவே, 100 சதவீத தேர்ச்சி பெற, மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அதேநேரம், அரையாண்டு தேர்வில், மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை, டி.சி., கொடுத்து வெளியேற்ற, சில பள்ளிகள் முயல்வதாக, புகார்கள் எழுந்துள்ளன. அவர்களை, பொதுத் தேர்வு எழுத விடாமல் முடக்கவும், சில பள்ளிகள் முயற்சிக்கின்றன.கடந்த ஆண்டுகளில், பல பள்ளிகளில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' வழங்கப்படாமல் பிரச்னை ஏற்பட்டது. இந்த ஆண்டு, அது போல பிரச்னை ஏற்படாமல், தனியார் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த மாணவருக்கும், டி.சி., கொடுத்து, கட்டாயமாக வெளியேற்றக் கூடாது என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஜனவரி 8,9 இருநாட்கள் நடைபெறும் வேலைநிறுத்தப் பேராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பு - பொதுச்செயலாளர் தகவல்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 16.12.2018 மாநிலச் செயற்குழு தீர்மானத்தின்படி 2019 ஜனவரி 8,9 இருநாட்கள் நடைபெறும் அகில இந்தியப் பொது வேலைநிறுத்தப் பேராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்கிறது.
*மேற்படி வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக அனைத்து மாவட்டக் கிளைகளும் துண்டுப்பிரசுரம் மற்றும் வால்போஸ்டர் வெளியிட மாதிரி இத்துடன் அனுப்பப்பட்டுள்ளது.விரைந்து துண்டுப்பிரசுரம்,வால்போஸ்டர் வெளியிட்டு களப்பணியாற்ற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

*தோழமையுடன்
*ச.மயில்
*பொதுச்செயலாளர்
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

8,909 அரசுப் பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர் : குறைவான மாணவர்கள் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் 8 ஆயிரத்து 909 அரசுப் பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், மிகக் குறைவான மாணவர்கள் கொண்ட மாவட்டங்களில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
சத்துணவு சாப்பிடும் 10-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறித்து சமூக நலத்துறை மூலம் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 8 ஆயிரத்து 909 அரசுப் பள்ளிகளில், 25-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் பட்டியலில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 821 பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர். இரண்டாவது இடத்தில் வேலூர் (451), மூன்றாவது இடத்தில் ராமநாதபுரம் (420), நான்காவது இடத்தில் சிவகங்கை (417), ஐந்தாவது இடத்தில் திருப்பூர் (409) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
அதேபோன்று ஆறாவது இடத்தில் திண்டுக்கல் (385), ஏழாவது இடத்தில் திருநெல்வேலி (371), எட்டாவது இடத்தில் ஈரோடு (355) ஆகிய மாவட்டங்களும் உள்ளன.
தலைநகரான சென்னையில் மொத்தம் 55 பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதேபோன்று தமிழகத்தின் 32 மாவட்டங்களின் விவரங்களும் வெளியாகியுள்ளன. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது, மீண்டும் ஒரு முறை சமூகநலத்துறை மேற்கொண்ட ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ தேர்வு இணைப்பு இல்லை' :

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளை இணைக்கும் எவ்வித திட்டமும் இல்லை
இரு தேர்வுகளும் ஒரே மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என, டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்
டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வு திட்ட அட்டவணை, நேற்று முன்தினம் வெளியானது
இதில், குரூப் 1, 2, 2ஏ, 4 உள்ளிட்ட அனைத்து முக்கிய தேர்வுகளும், இந்த ஆண்டுக்கான அட்டவணையில் வந்திருப்பது, தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒரே மாதத்தில் குறிப்பிட்டிருப்பது, தேர்வர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது
கடந்தாண்டு, குரூப்4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகள் ஒருங்கிணைத்து நடத்தியதும், இக்குழப்பத்துக்கு முக்கிய காரணம்
இது தொடர்பாக, சமூகவலைத்தளங்களில், குரூப் 2, 2ஏ தேர்வுகள் இணைக்கப்பட்டு விட்டதாகவும், முதன்மை தேர்வுகளுக்கு பதிலாக இரண்டுக்கும் பொதுவாக முதல்நிலை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் தகவல் பரவியுள்ளது
டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமாரிடம்கேட்டபோது, ''இரண்டு தேர்வுகளையும் ஒரே மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்
ஆனால், தேர்வுகளை ஒருங்கிணைக்கும் எவ்வித திட்டமும் தற்போது இல்லை. மாற்றம் இருப்பின், முன்கூட்டியே தெரிவிப்போம்,'' என்றார்

53 தலைமையாசிரியர் பணியிடம் கேள்விக்குறி: வருகிறது பள்ளிகள் ஒருங்கிணைப்பு திட்டம் :

கோவையில், 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுவதால், அங்குள்ள தொடக்கப்பள்ளி
தலைமையாசிரியரை, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது
தமிழகம் முழுக்க, ஒரே வளாகத்தில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் திரட்டப்பட்டுள்ளது
இதில், 3 ஆயிரத்து 133 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன
இங்கு, தொடக்க வகுப்புகளுக்கு தனியாகவும், உயர்நிலை அல்லது மேல்நிலை வகுப்புக்கு தனியாகவும் என, இரு தலைமையாசிரியர்கள் உள்ளனர்
ஒரே வளாகத்தில் செயல்படும் இரு பள்ளிகளுக்கு, இரு தலைமையாசிரியர்கள் இருப்பதால், நிர்வாக ரீதியாக, சில சிக்கல்கள் இருப்பது தெரியவந்துள்ளது
எனவே, ஒரு தலைமையாசிரியரின் கீழ், அனைத்து வகுப்புகளையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது
கோவையில், 53 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன
இங்குள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது
இதோடு, ஒரே தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மூலம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது
சி.இ.ஓ.,க்கள் கருத்துசென்னையில் சமீபத்தில் நடந்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில், முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் இது குறித்து விவாதித்துள்ளார்
தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், இனி ஒரு தலைமையாசிரியர் பணியிடம் மட்டுமே உருவாக்கலாம் என, இக்கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
இதை கல்வித்துறை பின்பற்ற முடிவெடுத்துள்ளது*l
அதிகாரபூர்வ தகவல் வந்தால் தெரியும்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது,''கோவையில் 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன
இதன் பட்டியலை, வட்டார வாரியாக, இயக்குனரகத்துக்கு சமர்ப்பித்துள்ளோம்
தலைமையாசிரியர்களை கற்பித்தல் பணிகளில், ஈடுபடுத்துவது குறித்து, அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டால் தான் தெரியவரும்,'' என்றார்

கல்வித்துறை உதவியுடன் 27 பள்ளிகளில் மாணவர் காவல் படை துவக்கம்:

திருவள்ளூரில் முதற்கட்டமாக 27 பள்ளிகளில், கல்வித்துறை உதவியுடன்நேற்று மாணவர் காவல் படை துவக்கப்பட்டது. இதனால், சமூகத்தில் நடக்கும் பல சீர்கேடுகள் களையப்பட வாய்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளில், செடிகளை பாதுகாப்பதற்கு பசுமை படை, சுகாதாரம் மேம்பாட்டிற்கு நாட்டு நலப்பணி திட்டம், மருத்துவம் தொடர்பாக ‘’ஜூனியர் ரெட் கிராஸ்’’’’,அறநெறி தொடர்பான விழிப்புணர்விற்கு பாரத சாரண சாரணியர் இயக்கம் போன்ற அமைப்புகள் உள்ளன.

இந்நிலையில், சட்டம் - ஒழுங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, கல்வித்துறையுடன் சேர்ந்து மாவட்டம் முழுவதும், 132 பள்ளிகளில், மாணவர் காவல் படை துவக்கப்பட உள்ளது. நேற்று திருவள்ளூரில் 27 பள்ளிகளில் மாணவர் காவல் படை துவக்கப்பட்டது. விழாவிற்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி சிலம்பரசன், டிஎஸ்பிக்கள் கங்காதரன், சர்தார், மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி முன்னிலை வகித்தனர். 
இதில், மாவட்ட எஸ்.பி., பொன்னி கலந்துகொண்டு பேசுகையில், ‘’எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியரை ஒரு வகுப்புக்கு தலா 22 மாணவர்கள் வீதம், 44 பேர் தேர்வு செய்யப்பட்டு, சாலை பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்ட 15 தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.  இவர்களுக்கு, வாரத்திற்கு ஒரு நாள் சிறப்பு வகுப்பு மூலம், காவல், தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள், சிறப்பு வகுப்பில் பங்கேற்று விழிப்புணர்வு பயிற்சி அளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை மேற்கொள்ள உள்ளது’’’’ என்றார். இதில், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், தமிழ்வாணன், ரஜினிகாந்த், முருகன், முரளிதரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேணுகோபால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்வு பயிற்சிகள்
மாணவர் காவல் படையில் உள்ள மாணவர்களுக்கு குற்றம் தடுப்பு சார்ந்த நற்பண்புகள், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு, வரதட்சணை, பாலியல் துன்புறுத்தல், ஜாதி வன்கொடுமை உள்ளிட்ட சமுதாயத்திற்கு எதிரான தீய பழக்கங்களை களைதல், நல்ல தொடுதல், தீய தொடுதல் என குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு, நல் ஒழுக்கத்துடன் நற்போதனை, சகிப்பு தன்மை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் பிறரிடம் நடந்துக் கொள்ளும் முறை குறித்த விழிப்புணர்வு, மனம் மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்தும் முறைகள், பெரியவர்களை மதித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

கோவை: அரசு வேலை வாங்கி தருவதாக, தன்னிடம் படித்த மாணவர் மற்றும் அவரது தந்தை, நான்கு லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக, பாதிக்கப்பட்டவர், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்:

கோவை: அரசு வேலை வாங்கி தருவதாக, தன்னிடம் படித்த மாணவர் மற்றும் அவரது தந்தை, நான்கு லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக, பாதிக்கப்பட்டவர், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.கரூர், சின்னதாராபுரம், நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 31. இவர் நேற்று, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:எங்கள் ஊரில், பைப் கம்பெனி நடத்தி வருகிறேன். 2015ம் ஆண்டு, கோவை, தனியார் இன்ஜி., கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினேன். அப்போது, என்னிடம் கோவைபுதுாரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 50, என்பவரின் மகன் ஹரிநாராயணன், 23, படித்தார்.தன் தந்தை அரசியலில் மேலிட செல்வாக்கு உடையவர் எனவும், பொதுப்பணித் துறையில் வேலை வாங்கி தருவதாகவும், ஹரிநாராயணன் தெரிவித்தார். பின், அவரது தந்தையை அறிமுகம் செய்து வைத்தார். 'அரசு வேலைக்கு, 4 லட்சம் ரூபாய் செலவாகும்; பணம் கொடுத்தால் உடனடியாக பணி வாங்கி தருகிறோம்' என, தெரிவித்தனர்.இதை நம்பி, 4 லட்சம் ரூபாய் கொடுத்தேன். மூன்று ஆண்டுகளாக வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் உள்ளனர். கேட்டால், 'பணத்தை கொடுக்க முடியாது; வெளியே சொன்னால், குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம்' என, மிரட்டல் விடுக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர், சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர்-மாணவர் குறை தீர்க்க தீர்ப்பாயம் நாடு முழுவதும் ஒரே பாட திட்டம்: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு:

பெற்றோர் - மாணவர் குறை தீர்க்க தீர்ப்பாயம் போன்ற அமைப்பை ஏற்படுத்தவும், நாடு முழுவதும் ஒரே பாடதிட்டம் கொண்டுவரவும் அரசு பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது
*நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், மாயமான தனது மகளை ஆஜர்படுத்தக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். விசாரணையின் போது, அந்த மாணவி ஆஜர்படுத்தப்பட்டார்
*அப்போது, தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், தந்தை கண்டிப்பார் என்ற பயத்தில் வீட்டிலிருந்து வெளியேறியதாகக் கூறியுள்ளார்
*இதையடுத்து, ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்த நீதிபதிகள், மாணவர்களின் உளவியல் ரீதியான மன அழுத்தத்திற்கு தீர்வு காணவேண்டும்.
எனவே, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தலைமையிலான குழுவினர் தற்ேபாதைய கல்வி மற்றும் தேர்வு முறை, பெற்றோர்-ஆசிரியர் உறவு, மாணவர்-ஆசிரியர் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்
இதன்படி, அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அளித்த உத்தரவு
மாணவர்கள் நல்ல மனநிலையில்தான்  இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வட்டார அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்
பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களில் பங்கேற்காதவர்களின் கருத்துக்கள் மற்றும் குறைகளை தொலைபேசியில் தெரிவிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். மாணவர்களின் உடல் நலம், கல்வி திறன் உள்ளிட்ட விபரங்களை பதிவேட்டில் அந்தந்த ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும்
நாடு முழுவதும் ஒரே பாடதிட்டத்தை கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்கவேண்டும். மாணவர்களின் கல்வி திறன், மனநிலையை மேம்படுத்த தேவையான வழிகாட்டுதல்களை கையேடாக மாவட்ட நூலகத்தினர் வெளியிட வேண்டும்
மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் கல்வி முறையை அவ்வப்போது தெரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்களிடையே வாட்ஸ்அப் குழு ஏற்படுத்த வேண்டும்
மாணவர்களுக்கு ஒழுக்கம், நன்னெறி, வழிகாட்டுதல்கள் வழங்க கருத்தரங்குகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வேண்டும். மேல்படிப்பிற்கு வழிகாட்டும் வகையில் ஆண்டுதோறும் கண்காட்சி நடத்த வேண்டும்
பாடங்கள், அரசு உதவிகள், விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்டவற்றை மாணவர்கள் சிரமமின்றி அறிந்து கொள்ள ஒருங்கிணைந்த வெப்சைட் ஏற்படுத்த வேண்டும்
மாணவர்கள், பெற்றோரின் குறைகள், பரிந்துரைகள், கருத்துக்களை தெரிவிக்க தீர்ப்பாயம் போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும்
எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மேற்படிப்பிற்கு வழிகாட்டும் பொறுப்பை தலைமை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்