யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/8/16

பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு

பிளஸ் 2 துணை தேர்வில், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல்பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன், ஜூலையில் நடந்த துணை தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த வர்கள், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு மேல், scan.tndge.in என்ற இணையதளத்தில், தங்களின் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.

இதே இணையதளம் மூலம், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். ஆக., 9 காலை, 10:00 முதல், 10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 தலைமை ஆசிரி யர்களுக்கு, தலைமை பண்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், உயர்நிலை பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் திறனை வளர்த்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களின் தலைமை ஆசிரியர்கள், 1,000 பேருக்கு, சிறப்பு தலைமை பண்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் இந்த பயிற்சிக்கு, 30 தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்ட பயிற்சி துவங்கியுள்ளது.

நீட்' தேர்வு விடைத்தாள் 'ஆன்லைனில்' பார்க்கலாம்

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான, 'நீட்' விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு, மே 1 மற்றும் ஜூலை 24ல், இரு கட்டங்களாக நடந்தது; ஐந்து லட்சம் பேர் பங்கேற்றனர்.


இந்நிலையில், தேர்வரின் கணினி பயன்பாட்டு விடைத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள், இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. இன்று மாலை வரை, மாணவர்கள், தங்கள் உள்ளீட்டு எண்ணை பயன்படுத்தி, அவற்றை பார்க்கலாம். மேலும், நீட் இணையதளம் மூலம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,க்கு கருத்துக்களை தெரிவிக்கலாம். கூடுதல் விபரங்களை, http://www.aipmt.nic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

சித்தா, ஆயுர்வேத கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் சிக்கல்

அரசு கல்லுாரிகளுக்கு அனுமதி கிடைப்பது தாமதம் ஆவதால், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உடனே துவங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை, பாளையங்கோட்டை என, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. இதற்கு, 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.


எப்போது கலந்தாய்வு நடக்கும் என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர். கல்லுாரிகளை ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான, 'ஆயுஷ் கவுன்சில்' அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள, இந்திய மருந்துவம் சார்ந்த, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, இதுவரை ஆயுஷ் கவுன்சில் அனுமதி தரவில்லை. இதனால், கலந்தாய்வு தேதி அறிவிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்க, அக்., மாதம் வரை அவகாசம் உள்ளது. ஆயுஷ் கவுன்சில் முறையான ஆய்வு நடத்தி வருகிறது; விரைவில், அனுமதி கிடைத்து விடும். குறித்த காலத்திற்கு முன்னரே, கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்' என்றார். 

தணிக்கை - ஆசிரியர் சேம நலநிதிக் கணக்குகள் - 01.04.2014க்குப் பின்னர் அரசு தகவல் தொகுப்பு, விவர மைய அலுவலகத்திலிருந்து, மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு மாற்றம் செயதல் - 31.03.2014 வரை நிலுவை இருப்பின் நடவடிக்கை தொடர கோரி இயக்குனர் உத்தரவு Posted: 05 Aug 2016 10:55 PM PDT அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு: இலவச 'ஸ்நாக்ஸ்' கிடைக்குமா?

அரசு பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில, 'ரேங்க்' எடுக்கும் முயற்சியாக, காலை, மாலை நேரங்களில், ஒரு மணி நேரம் வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னை உட்பட மற்ற மாநகராட்சி பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த, பிஸ்கட், சுண்டல் போன்றவை வழங்கப்படுகின்றன.


அரசு பள்ளிகளில், சிற்றுண்டி வழங்கப்படுவது இல்லை. மேலும் காலை, 8:00 மணிக்கு சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்கள், வீட்டிலிருந்து, 7:00 மணிக்கே புறப்பட வேண்டும். மாலையில், சிறப்பு வகுப்பு முடித்து, 6:00 மணிக்கு தான் வீட்டுக்கு செல்ல முடிகிறது. இதனால், காலை உணவும் உண்ண முடியாமல், மாலையிலும் நீண்ட நேரம் பள்ளி யில் இருக்க வேண்டி யுள்ளதால், மாணவர்கள் மயங்கி விழும் சம்பவங்கள் நடக்கின்றன.

இதுகுறித்து, ஆசிரி யர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் கூறியதாவது: சிறப்பு வகுப்பு நடத்தும் முன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பிரதிநிதிகளிடம், கல்வி அதிகாரி கள் கருத்து கேட்டிருக்கலாம். மாணவர்கள் மயங்கி விழும் போது, ஆசிரியர்கள், தங்கள் பணத்தில் பிஸ்கட் வாங்கி கொடுக்கின்றனர். தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர், தரமான, 'ஸ்நாக்ஸ்' கொடுத்து அனுப்புகின்றனர். பள்ளி கேன்டீனில் வாங்க, பணமும் கொடுத்து அனுப்புகின்றனர். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இந்த வசதிகள் இல்லை. எனவே, அரசு பள்ளிகளில் நடக்கும் சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு, அரசு சிற்றுண்டி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

CPS-கருத்தரங்கம் -தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சார்பில் காஞ்சிபுரத்தில் இன்று (6.8.2016)சென்னை மண்டல பயிலரங்கில் -நடைபெற்றது .

இன்று(6.8.2016)-திரு.பிடரிக் ஏங்கல்ஸ்-திண்டுக்கல் அவர்கள் -பேசிய போது எடுத்த புகைப்படம்


தமிழ் எழுத்துக்களுக்கு இணையாக 'சைகை' முறை கண்டுபிடிப்பு : எளிதாக கற்பிக்க ஏற்பாடு

தொடக்கபள்ளிகளில் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை எளியமுறையில் உச்சரிக்கவும், பிழையின்றி எழுதுவதற்கும் 30 வகையான புதிய 'சைகை' முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான
'சிடி'க்கள் தொகுப்பைமாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சிநிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது. தமிழில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் 'மயங்கொலிகள்' எனப்படும் 'ல, ள, ழ, ர, ற, ந, ண, ன' ஆகிய எட்டு எழுத்துக்கள்அதிகம் பயன்படுகின்றன.
ஆனால் பேச்சு வழக்கில் இந்தஎழுத்துக்களின் தன்மை குறைந்து உச்சரிப்புமருவி விடுகிறது. இதன் காரணமாக தமிழ்எழுத்துக்களை உரிய ஓசை, ஏற்றஇறக்கத்துடன் உச்சரிக்க, எழுத மாணவர்கள் சிரமப்படுகின்றனர். சைகை முறை: இதை தவிர்க்கவும், தமிழ் எழுத்துக்களை உரிய வடிவில் எழுதுவதற்கும், 30 நாட்களில் சரியான உச்சரிப்புடன் பேசவும், பிழையின்றி எழுதும் வகையில் அரசுப்பள்ளி ஆசிரியர்களால் அனைத்து உயிரெழுத்து மற்றும்மெய் எழுத்துக்களுக்கு உரிய 'சைகை' முறைகள்உருவாக்கப்பட்டு வருகின்றன.
இப்பணியில்எஸ்.சி.இ.ஆர்.டி., யின் மொழிப்புல(லாங்குவேஜ் செல்) ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 1 - 5 வகுப்பு வரை உள்ள தமிழ்பாடநுாலின் அனைத்து பாடங்களையும் 'தாயெனப்படுவதுதமிழ்' என்ற தலைப் பில்சி.டி., தொகுப்பை ஆக.,2ல் முதல்வர் ஜெயலலிதாவெளியிட்டார். இவ்வாரத்தில் பள்ளிகளுக்கு 'சிடி'க்கள் வழங்கப்படஉள்ளன. தொழில்நுட்ப இயக்குனர் அமலம் ஜெரோம் கூறியதாவது:
எஸ்.சி.இ.ஆர்.டி., உதவியுடன் காதுகேளாத, வாய் பேசாத மாணவர்களுக்குகற்பித்தல், பரத நாட்டியத்தின் முத்திரைகள், உளவியல் மற்றும் உடல் மொழிரீதியிலான 'சைகைகளை' அடிப்படையாக கொண்டு சரியான உச்சரிப்புடன்எழுத்துக்களை எளிதில் புரிய வைத்துபிழையின்றி எழுதுவதற்கு 'சைகைகளை' உருவாக்கி உள்ளோம். எழுத்துக்களை மிக துல்லியமாக புரிந்துகொள்ளபின்னணி காட்சிகள், நவீன தொழில் நுட்பஉத்திகளுடன் 'சிடி' க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, என்றார்

ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துமிடம் ஏற்பாடுகள் ,பாதுகாப்பு பற்றிய இயக்குநர் செயல்முறைகள்



தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 தலைமை ஆசிரி யர்களுக்கு, தலைமை பண்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், உயர்நிலை பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் திறனை வளர்த்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களின் தலைமை ஆசிரியர்கள், 1,000 பேருக்கு, சிறப்பு தலைமை பண்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் இந்த பயிற்சிக்கு, 30 தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்ட பயிற்சி துவங்கியுள்ளது.

CPS account slip 2009. முதல் பிப்ரவரி 2016 வரை பதிவிறக்கம் செய்யலாம் Posted: 06 Aug 2016 05:36 AM PDT CLICK HERE இணையதளம் சென்றதும் உங்கள் CPS no மற்றும் பிறந்தநாள் பதிவு செய்து (உதாரணமாக 20/10/1971) login செய்யவும். பின் annual account slip ல் சொடுக்கவும் பின் 2014 -15 வருடத்தை select செய்து submit செய்யவும் . ஆசிரியர் பயிற்றுநர்கள் உயர்கல்வி பின்னேற்பு -பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தெளிவுரை

6/8/16

பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் தொடர்பான தகவல்:

RTE 2009-ன் படி, புதிய பணியிடம் தோற்றுவிக்க 

கணக்கு / அறிவியல் = 1

ஆங்கிலம் / தமிழ் = 1

சமூக அறிவியல் = 1

அறிவியல் / கணக்கு = 1

தமிழ் / ஆங்கிலம் = 1

சமூக அறிவியல் = 1

இவ்வாறு இருத்தல் வேண்டும்.  


பணிநிரவலுக்குக் கீழிருந்து செல்ல வேண்டும்.

ஒரு சமூகஅறிவியல் பணி இருக்க வேண்டும்.

மொழிப்பாடம் ஒன்று இருக்க வேண்டும். இதில் 2 மொழி பாடம் இருந்தால் அதில் இளையவர் பணிநிரவல் செய்ய வேண்டும்.

அதே போல், அறிவியல் மற்றும் கணக்கு பாடத்தில் இளையவர் பணிநிரவல் செய்யப்படுவர்.

நடுநிலைப் பள்ளியில் 6 - 8-ம் வகுப்பு வரை 30 - 130 மாணவர்கள் வரை இருப்பின் ஆசிரியர்கள் எண்ணிக்கை 1+3.

*அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்கள் -OBC-NON CREAMY LAYER -CERTIFICATE பெற மத்திய அரசின் தெளிவுரை கடிதம்

முக்கிய குறிப்புகள் -

1.அரசு ஊழியர்களின் ஊதியத்தை வருமானமாக கருதக்கூடாது.

2.விவசாயம் மூலம் வரும் வருமானத்தை வருமானமாக கணக்கிடக்கூடாது .

3.அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்களாக இருந்தால் நேரடியாக இருவரும்  Grade B  நிலையில் நியமனம் 
பெற்றிருக்கக் கூடாது.

4.ஒருவர் மட்டும் பணிபுரிந்தால்   நேரடியாக  Grade A  நிலையில் நியமனம் பெற்றிருக்கக் கூடாது. அல்லது Grade B-ல் நியமனம் பெற்று 40 வயதிற்குள்    Grade A நிலைக்கு பதவி உயர்வு பெற்றிருக்கக் கூடாது.

5.பொதுத் துறைகளில் பணிபுரிவர்களுக்கு இது பொருந்தாது 

5.இந்த கடிதத்தை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள் ....**

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் இயக்குநர் அறிவுறுத்தலின்படி பணி நிரவல் கட்டாயமாக செய்ய உள்ளார்கள்.அதில்

1)மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் கிடையாது.
2)பணி நிரவலில்  பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இருப்பின் ஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்வார்கள்.
3)பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இல்லை எனில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்வார்கள்.
4)ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்யும் நிலை ஏற்பட்டால் அந்த ஒன்றியத்தில் மிகவும் இளையவர் எவரோ (block level service junior) அவரையே பணி நிரவலில் அதே மாவட்டத்தில் பிற ஒன்றியத்திற்கு நிரவல் செய்ய வேண்டும்.
5)ஒன்றியத்திற்குள் பணி நிரவல் எனும்போது எந்த பள்ளியில் பணி நிரவல் ஏற்படுகிறதோ அந்த பள்ளியில் பணி ஏற்றதில் யார் இளையவரோ ( station junior ) அவரே பணி நிரவல் செய்யப்பட வேண்டும்.பணி நிரவல் செய்யப்பட வேண்டியவர் மாற்று திறனாளி எனில் அவரை விட்டுவிட்டு அந்த பள்ளியில் அவருக்குமுன் பணியில் சேர்ந்தவரை பணி நிரவல் செய்ய வேண்டும்.
6)பணி நிரவல் 30.09.2015 அன்று உள்ள மாணவர்கள் பதிவின் அடிப்படையில் செய்யப்பட உள்ளது.இதில் சிறு விதி தளர்வும் உள்ளது. உதாரணமாக ஒரு பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து 30.09.2015ல் மாணவர்கள் பதிவு 55 எனில் ஒரு ஆசிரியர் பணியிடத்தினை நிரவல் செய்வார்கள்.அதே பள்ளியில் 01.08.2016ல் 61 மாணவர்கள் பதிவு உள்ளது எனில் விதி தளர்வு தந்து பணியிடத்தினை நிரவல் செய்யக்கூடாது.அது போலவே ஒரு பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து 30.09.2015ல் 61 மாணவர்கள் பதிவு இருந்து 01.08.2016ல் 55 மாணவர்கள் பதிவு உள்ளது என்றாலும் பணி நிரவல் செய்யக்கூடாது

தொடக்கக் கல்வி - 2015-16ஆம் கல்வியாண்டில் மாறுதல் பெற்று பணியிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களை விடுவிக்க இயக்குனர் உத்தரவு

'வாட்ஸ் ஆப்' விவகாரம் : நடவடிக்கை நிறுத்தம்

'வாட்ஸ் ஆப்' பயன்படுத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பிய விவகாரத்தில், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் விவாதம் நடத்தியதற்காக, நான்கு ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான சி.இ.ஓ., நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டார்.

இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளிக் கல்வி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதையடுத்து, ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட உத்தரவிட்டுள்ளனர்.

5/8/16

தமிழக அரசு பட்ஜெட் ல் 7 வது ஊதிய குழு பற்றி ஆராய குழு அமைக்கப்படும்.என அறிவிக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே தமிழக 6 ஊதிய குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 158 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நிதித்துறை தெரிவித்துள்ளது.இந்த நிலையில் 6 வது ஊதிய குழு முறன்பாடு தீர்கப்பட வேண்டும்.அதன்பின் 7 வது ஊதிய குழு ஊதியம் நிர்னயம் செய்ய வேண்டும். எனவே தோழர்களே ஊதிய குழுகளை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் ,,,,,CPS. திட்டம் ரத்து குழுவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி தங்கள் மாவட்டத்தில் ,,,வட்டாரத்தில் ,,,,கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் சங்க பாகுபாடு இல்லாமல் நடத்திட ஆயத்தங்கள் செய்திடுங்கள்....இந்த பொண்னான காலத்தில் நாம் ஏனோ தானோ என்று இருந்தால் ஆயுள் முழுவதும் அவதியே......................

. தோழர்களே நமது உரிமைக்காக உரிமை மீட்கப்பட கருத்தரங்கம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்திடுவோம்

பொது தேர்வு மாணவர்கள் சுற்றுலா செல்ல தடை

பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்று, நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
காலாண்டு தேர்வுக்கு முன், மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்ல பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. சில தனியார் பள்ளிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களையும், சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்துள்ளன.
அது போன்ற பள்ளிகளுக்கு, 'பொதுத்தேர்வு மாணவர்கள், நல்ல முறையில் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும்; சுற்றுலா அழைத்துச் சென்று நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, அறிவுறுத்தியுள்ளனர். சுற்றுலா செல்லும் பள்ளிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை தொடக்கம்

அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பாசிரியர்களுக்கு 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 6) தொடங்குகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, திருவள்ளூர் முகமது அலி இரண்டாவது தெருவில் உள்ள ஸ்ரீலட்சுமி மேல்நிலை பள்ளியில் நடைபெறும்.
அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் குறித்த கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 6) நடைபெறும்.
ஆக. 7-இல் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு குறித்தும், 13-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் / மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) குறித்தும் கலந்தாய்வு நடைபெறும்.
20-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் மாறுதல்) குறித்த கலந்தாய்வும், 21-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாறுதல் குறித்த கலந்தாய்வும் நடைபெறும்.
22-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு குறித்தும், 23-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் குறித்தும் கலந்தாய்வு நடைபெறும்.
24-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் குறித்த கலந்தாய்வு நடைபெறும்.
27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் நடைபெறும்.
செப்டம்பர் 3-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்துக்குள்) குறித்தும், 4-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்), 6-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி, சிறப்பாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுதல் குறித்து கலந்தாய்வு நடைபெறும்.

ADW DEPARTMENT TRANSFER COUNSELING ANNOUNCED

கடந்தாண்டு பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாத ஆசிரியர்கள்*(ஈராசிரியர் பள்ளி ஆசிரியர்கள்)* 05.08.2016 முதல்விடுவிக்க அரசு உத்தரவு