யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/2/17

வருகிற கல்வியாண்டிலாவது கணினிக் கல்வி அரசுப்பள்ளிகளில் கொண்டுவரப்படுமா.......?CM-CELL -REPLY

No automatic alt text available.

மாத ஊதியம் பெறுவோருக்கான

ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை
வருமான வரி 10%ல் இருந்து 5% ஆக குறைப்பு*

*ரூ. 3 லட்சம் வரையிலான மாத வருமானத்துக்கு வருமான வரி
விலக்கு*

*அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க ஜேட்லி அதிரடி அறிவிப்பு*

*ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலான மாத வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரி*

*ரூ. 1 கோடிக்கு அதிகமான மாத வருவாய் மீதான 15% கூடுதல் வரி தொடரும்*

*தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை*

*வருமான வரி விகிதம் குறைப்பு:*
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 சதவீதமாகஇ ருந்த வருமான வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருமான வரிச்சலுகைகளை கருத்தில் கொண்டால் ரூ.3 லட்சம் வருமானத்திற்கு வரி இருக்காது.

#ரூ.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு தலா ரூ.12,500 கழிவு அனுமதிக்கப்படும்.
வரிவிகித குறைப்பால் அரசுக்கு ரூ.15,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.


மேலும் ஒரே ஒரு பக்கத்தில் வருமான வரி விண்ணப்ப படிவம் வழங்கப்படும் .

IT - 12C FORM

TNPSC 2017 ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு

பள்ளிக்கல்வி செயல்முறைகள் நாள்:20/01/17- TET - சிறுபான்மையினர் பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்பு




பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்

நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த மத்திய பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்பினால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் போன் தயாரிப்பில் முக்கிய பணியாற்றும் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் மீது 2% கூடுதல் சுங்கத்தீர்வை விதிக்கப்படவுள்ளதால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கவுள்ளது.

இந்தபுதிய வரிவிதிப்பினால் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளின் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பயன் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட போர்டுகளைப் பயன்படுத்தும் மொபைல் போன்களின் விலை 1% வரை இதனால் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் இறக்குமதிசெய்யப்பட்ட சர்கியூட் போர்டுகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுசெல்போன்கள் தயாரிப்பு செலவில் 25-30% தாக்கம் செலுத்துவதாகும்.

மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரி காரணமாக புகையிலை உள்ளிட்ட சில பொருட்கள் விலை உயர உள்ளன. அதேநேரம் சூரிய மின்சக்தி தகடுகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான விலை குறைய உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:

விலைஉயரும் பொருட்கள்:

சிகரெட், பான் மசாலா, பீடி, சுருட்டு, புகையிலை.

எல்.இ.டி. விளக்குகள்

வறுத்த முந்திரி பருப்பு

அலுமினிய தாதுக்கள்

பாலிமர் எம்.எஸ். டேப்புகள்

வெள்ளி நாணயங்கள், பதக்கங்கள்

செல்போன் சர்க்கியூட் போர்டுகள்

விலைகுறையும் பொருட்கள்

ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள்

வீட்டு உபயோக ரிவர்ஸ்டு ஆஸ்மாசிஸ் தகடுகள்.

திரவஎரிவாயு

சூரிய மின் சக்தி தகடுகள்

காற்றாலை ஜெனரேட்டர்

பி.ஓ.எஸ். இயந்திரங்கள், விரல் ரேகை பதிவு இயந்திரங்கள்


பாதுகாப்பு துறை சேவைகளுக்கான குழு காப்பீடு

TNTET: ஆசிரியர் தகுதி தேர்வு எப்படி படிப்பது? எங்கு துவங்குவது?

TET தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ள இக்கால கட்டத்தில்
அனைவரின் கேள்வியும் அதுவே.

அதற்கான பதிவு பதில் இங்கே...
ஆசிரியர் தகுதி தேர்வு தயாராகும் முன் தெளிவாக பாட திட்டம் அறிதல் அவசியம்
பாடதிட்டம் :
தாள்1:
வகுப்பு 1 முதல் 8 வரைஅனைத்து சமச்சீர் புத்தக பாடம் + உளவியல் = 120 + 30
தாள்2 :
வகுப்பு 6 முதல் 10 வரை(தமிழ், அறிவியல் 12 வரை படிக்கலாம்)
தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பட்டதாரிகள்
தமிழ் : 30
ஆங்கிலம் : 30
ச.அறிவியல்: 60
உளவியல் : 30
அறிவியல், கணித பட்டதாரிகள் :
தமிழ்: 30
ஆங்கிலம் : 30
கணிதம் : 30
அறிவியல் : 30
உளவியல் : 30
இதற்கான தயாரிப்பு எங்கு எப்படி துவங்குவது?
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது பாட வாரியான தோராய கால அட்டவணை
உதாரணமாக
தமிழ் வகுப்பு 6 : அரை நாள்
7 : அரை நாள்
8 : ஒரு நாள்
9 : ஒரு நாள்
10: ஒரு நாள்
மொத்தமாக 4 அல்லது 5 நாட்கள். அனைத்து பாடத்திற்கும் மொத்த கால அளவு தோராயமாக 25 முதல் 30 நாட்கள்.
இந்த30 நாட்களும் தங்களது பங்களிப்பு உழைப்பு பொறுத்தே வெற்றி அமையும்.
மீதமுள்ள 30 நாட்களில் 2 திருப்புதலும் சில சுய தேர்வுகளும் நமக்கு நாமே செய்து கடின பகுதியை மீள்பார்வை செய்யலாம்
தமிழில் இலக்கண, செய்யுள் பகுதிகள்
கணிதம் நடைமுறை கணக்குகள்
அறிவியல் உயிரியியல் பகுதிகள்
சஅறிவியல் வரலாற்று பகுதிகள் கடினமானவை. இவற்றில் கூடுதல் பயிற்சி தேவை.

புத்தக வாசிப்பே சால சிறந்தது. சுய குறிப்புகளும் திருப்புதலில் உதவும். கூடுமான வரை மொபைல், கணினி வழி படிப்பதை தவிர்க்கவும். அவை உடல் சோர்வை உண்டாக்கும்.
மேலும் படிக்கும் போது மொபைல் பயன்பாட்டை குறைக்கவும். நேரத்தை அது உண்டுவிடும். வேண்டுமெனில் காலை மாலை அரை மணி நேரம் இணைய பகிர்வுகளை காணலாம்.
முக்கியமாக ஒரு பாடம் பாதியில் விட்டு விட்டு அடுத்த பாடம் செல்ல வேண்டாம். தொடர்ச்சியாக பாடங்களை தொடர்பு படுத்தி படியுங்கள்.

தேர்விற்கான கால இடைவெளி குறைவு . எனவே மற்ற அலுவல்களை தவிர்த்து முழு நேர பயிற்சியில் ஈடுபடுங்கள்.
கோச்சிங் செல்ல வேண்டுமா?
அதுஅவரவர் தனிப்பட்ட திறன் சார்ந்தது.
கோச்சிங் செல்வது அவசியமில்லை. எனினும் மற்றவரை காணும் போது தன்முனைப்பும் உத்வேகமும் உண்டாகும்.
எதிர் நிற்பது இறுதி வாய்ப்பு என நினைத்து முயலுங்கள் ....
முயலும் எந்த ஆமையும் இங்கு தோற்பதில்லை

வாழ்த்துக்களுடன் - பிரதீப் பட்டதாரி ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.

1/2/17

EMIS -LATEST NEWS..... (30/01/2017)

மருத்துவ நுழைவு தேர்வுக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

மருத்துவ படிப்பிற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ‛நீட்' எனப்படும் அகில
இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மே-7 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் நடத்தப்படும் இத்தேர்வில் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதனிடையே நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TET தேர்வு என்றால் என்ன?யார் எழுதலாம்?எப்படி படிக்கலாம்? விரிவான பதில் பதிவு

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயம் முடித்த பட்டதாரிகள் அம்மாநில அரசால் நடந்தபடும்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

இவ்வகையில் ஆசிரிய பணியில் சேர்ந்த ஆசிரியர் எதிர்வரும் 7 ஆண்டுகளில் இத்தேர்வில் வெற்றி பெற வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இவ் விதி பொருந்தும்.

ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை இத்தேர்வு மாநில / மத்திய அரசால் நடத்தபடும்
(சட்ட சிக்கல் காரணமாக தமிழகத்தில் 2 வருடமாக தேர்வு நடத்தப்படவில்லை )

அரசுபணி இவ்வகையில் தேர்ச்சி பெறும் தேர்வரை கொண்டு நிரப்பப்படும்

TET தேர்வு முறை என்ன?
தேர்வு முறை:
கோள்குறி வினாக்கள் 150 இடம்பெறும். தவறான வினாவிற்கு மதிப்பெண் குறைக்கபடாது
* DTEd முடித்தவர் தாள் 1
* B.Ed. முடிந்தவர் தாள் 2 எழுத வேண்டும்
பாடதிட்டம் யாது?
பாடதிட்டம் :
தாள்1: 1 முதல் 8 வரை
அனைத்து பாடம் -120
உளவியல் - 30
தாள்2: 6 முதல் 10 வரை
தமிழ், ஆங்கில, சமூக அறிவியல் பட்டதாரிகளுக்கு
தமிழ் - 30
ஆங்கிலம் - 30
சமூகஅறிவியல் - 60
உளவியல் - 30
கணித, அறிவியல் பட்டதாரிகளுக்கு
தமிழ் - 30
ஆங்கிலம் - 30
அறிவியல் - 30
கணிதம் -30
உளவியல் - 30
B.Ed. இரண்டாம் ஆண்டு படிப்பவர் இத்தேர்வை எழுதலாம் ( அதிகார பூர்வ தகவல் தேர்வாணய தகவலில் தெரியும்)
B.E., B.Sc. (CS) , M.Com., B.Ed பட்டதாரிகள் இத்தேர்வை எழுத முடியமா?
தேர்வாணய அறிவிப்பில் அறிவிக்கப்படும்
எப்படி படிக்கலாம்?
சமச்சீர் புத்தகம் 1 முதல் 10 வரையில் வரி வரியாய் புரிந்து படித்தல் அவசியம்
உளவியல் - நகராஜன், மீனாட்சி சுந்தரம் புத்தகம் 95% துணை புரியும்
குறிப்பேடுகளை (மெடி ரியல் ) சார்ந்து மட்டுமே இருப்பதை தவிர்க்கவும். இவை துணை கருவியே.
சுயகுறிப்புகள், நாள் தோறும் திருப்புதல், புத்தக முழு வாசிப்பு இவையே வெற்றி இரகசியம்
தேர்ச்சி மதிப்பெண்:
தேர்ச்சி பெற 90 மதிப்பெண் தேவை
MBC /BC / SC / ST 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி
தேர்வு செய்யும் முறை :
தமிழகத்தில் வெயிடேஜ் முறை அடிப்படையில் அரசு பணியில் தேர்வர் தெரிவு செய்யபடுவர்
டெட்மதிப்பெண் x 60%
HSC×10%
Degree×15%
B.ed×15%
மாற்றத்திற்கு உரியது *
விண்ணப்பம் மாவட்டம் தோறும் வழங்கபட்டு முறைப்படி வாங்கப்படும். இந்த ஆண்டு 2017 TET தேர்வு ஏப்ரல் இறுதியில் நடக்க இருக்கிறது. இதற்கான அறிவிக்கை ஆசிரிய தேர்வாணயம் மூலம் அறிவிக்கபடும்.
மேலும் தகவலுக்கு www.tn.trb.nic.in
வலைதளத்தை பார்வையிடலாம்
முயற்சி செய்பவர் அனைவரும் வெற்றி பெறுவதில்லை
ஆனால் ஒவ்வொரு முயற்சிக்கும் பின்னும் ஒரு கடின முயற்சி உள்ளது

வாழ்த்துகளுடன் - பிரதீப் பட்டதாரி ஆசிரியர், பூங்குளம்

2017-2018 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி /மேல் நிலைப்பள்ளிகளில் முதுகலையாசிரியர் பதவி உயர்வு மூலம் நியமனம் -01.01.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியாராகப் பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்த உதவியாசிரியர்கள் ,ஆசிரியர் பயிற்றுநர்கள் & பள்ளி துணை ஆய்வாளர்கள் -முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் விவரங்கள் கோருதல்

PAY ORDER FOR THREE MONTHS FROM 01.01.2017 FOR VARIOUS GO'S

TNTET-வெற்றி உங்களுக்கே! உங்களால் முடியும்....Mr-Alla Baksh-Article

முதல் தாளாக இருந்தாலும் சரி, இரண்டாம் தாளாக இருந்தாலும் சரி, இரண்டுக்குமே அரசின் பாடப்புத்தகங்களை யாரெல்லாம் முழுமையாகப் படித்துக் கொள்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவது நிச்சயம். முதல் தாளுக்காக படித்துக்
கொண்டிருப்பவர்கள், ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை ஒரு வரி விடாமல் முழுமையாகப் படித்துக் கொள்ள வேண்டும். இப்பாடங்கள் எல்லாம் குழந்தைகள் படிக்கும் பாடங்கள் என்பதால், படிப்பதில் சிரமம் ஏதும் இருக்காது. புரிந்து கொண்டு, குழந்தைகளைப் போல் மகிழ்ச்சியாக படித்துக்கொண்டாலே, பாடங்கள் அனைத்தும் மனதில் பசுமரத்தாணி போல் பதியும். முக்கியமான வாக்கியங்களை, வார்த்தைகளை தனியே குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பாடத்திலிருந்தும் இதுபோல குறிப்பெடுத்து வைத்துக்கொண்டால், உங்களுக்கென்று தனி நோட்ஸ் தயார். அதை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டால். எளிதில் மறக்காது. எப்போதும் மறந்து போகாது. டீச்சர் டிரெயினிங்கின்போது, படித்துக்கொண்ட சைக்காலஜி பாடங்களை மீண்டும் படித்துக்கொள்ளுங்கள். முதல் தாளை வெற்றிகரமாக எழுதி விடலாம்.

இரண்டாம் தாளுக்காக தயாராகிக் கொண்டிருப்பவர்கள் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பாடப் புத்தகங்களையும் முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும். பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களை ஓரளவு பார்த்துக் கொள்வதும் பலன் தரும்.

தமிழ் பாடத்தைப் பொருத்தவரை, இலக்கணத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்க வாய்ப்புள்ளது. வேர்ச் சொல், வினைச்சொல், குற்றியலிகரம், குற்றியலுகரம் போன்றவற்றைப் படித்துக்கொள்ள வேண்டும். செய்யுள் எழுதிய ஆசிரியர்கள் பெயர், அடைமொழிகள் போன்றவற்றைப் படித்துக்கொள்ள வேண்டும். பாடலின் வரியைக் கொடுத்து, இப்பாடலை எழுதியவர் யார் என்றும் கூட கேட்பார்கள். உரைநடைப்பகுதிகள், துணைப்பாடக் கதைகள் போன்றவற்றையும் படித்துக் கொள்ளுங்கள். கதை எழுதிய ஆசிரியர் யார்? இந்த ஆசிரியர் எழுதிய கதை பெயர் என்ன என்றும் கேட்க வாய்ப்புண்டு. தமிழ் எண்கள் பற்றி படித்துக்கொள்ளுங்கள்.

ஆங்கிலப் பாடத்தைப் பொருத்தவரை, பாடல் எழுதிய ஆசிரியர்கள் பெயர், அவர்கள் எழுதிய நூல்கள் போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்பார்கள். பாடத்தின் பின்புறம் உள்ள பொருள் தருக, எதிர்ச்சொல், முன் சேர்க்கும் சொல், பின் சேர்க்கும் சொல் போன்றவற்றைப் படித்துக்கொள்ளுங்கள். அடிப்படை இலக்கணத்திலிருந்து கேள்விகள் கேட்பார்கள்.

குழந்தைகள் மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் பாடத்தைப் பொருத்தவரை பி.எட். படித்தபோது இருக்கும் புத்தகத்தைப் படித்துக்கொள்ளுங்கள். ஒரு சூழ்நிலையைக் கொடுத்து, நீங்கள் அந்நிலையில் என்ன செய்வீர்கள் என்பது போலவும் கேள்விகள் கேட்பார்கள். அதற்கு தர்க்க ரீதியாக சிந்தித்து பதிலளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.சைக்காலஜி பாடங்களில் உள்ள கோட்பாடுகள், அதை வரையறுத்துச் சொன்ன ஆசிரியர்கள் போன்றவற்றைப் படித்துக்கொள்ளுங்கள்.

ஆறுமுதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல் பாடங்களை ஒருவரிவிடாமல் தரவாகப் படித்துக் கொள்ள வேண்டும். 11, 12-ஆம் வகுப்புப் பாடங்களை ஓரளவு பார்த்துக்கொள்ள வேண்டும். வரலாறு என்பது நம் முன்னோர்களைப் பற்றிய பாடம் ஆகும். ஆதலால், விருப்பத்தோடு, புரிந்து கொண்டு படிக்க வேண்டியது அவசியம். கலிங்கப்போர் நடைபெற்ற ஆண்டு? முதலாம் பானிபட் போர் யார் யாருக்கு இடையே நடந்தது? என்று கேள்விகள் அமையும். ஆகவே, முக்கியமான போர்கள் நடைபெற்ற ஆண்டு, யார் யாருக்கு இடையே நடைபெற்றது, அதன் விளைவுகள் என்ன? போன்றவற்றையெல்லாம் தனியே எழுதி வைத்துக் கொண்டுகூட படிக்கலாம். இப்படிப் படித்தால் போதும்.

செய்தித்தாள்கள், வார இதழ்கள் போன்றவற்றில் வருகின்ற டெட் மாதிரி வினாக்களைப் படித்துக் கொள்ளலாம். அதுவும் நமக்கு தேர்வு நேரத்தில் உதவும்.


அரசுவழங்கியிருக்கும் பாடப் புத்தகங்களை புரிந்துகொண்டு முழுமையாகப் படித்தாலே போதும், தேர்வில் வெற்று பெற்றுவிடலாம். இதற்காக கைடும் தேவையில்லை. பயிற்சி வகுப்பும் தேவையில்லை. உங்களால் முடியும் என்று நம்பிப் படியுங்கள், வெற்றி உங்களுக்கே!

ஆசிரியர் தகுதி தேர்வு, மூன்று ஆண்டுகளாக நடத்தப் படவில்லை ,''சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி

ஏப்., 29, 30ல் 'டெட்' தேர்வு
சென்னை: ''தமிழகத்தில், ஏப்ரல், 29, 30ம் தேதிகளில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், நேற்று பேசும்போது, ''ஆசிரியர்
தகுதி தேர்வு, மூன்று ஆண்டுகளாக நடத்தப் படவில்லை,'' 

அதற்கு, பதில் அளித்த அமைச்சர், ''தமிழகத்தில், ஏப்ரல், 29, 30ம் தேதிகளில், 'டெட்' தேர்வு நடத்தப்படும்,'' என்றார்.

TNTET-இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பின்பற்றக்கூடிய சமூக நீதிக்கு எதிரான வெயிட்டேஜ் முறையை கைவிட வேண்டும் -சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்

ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் தரவு வழங்குதல், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்
நியமனத்தில் பின்பற்றக்கூடிய சமூக நீதிக்கு எதிரான வெயிட்டேஜ் முறையை கைவிடுதல், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வாய்ப்பு போன்றவற்றை அக்கறையோடு கவனிக்கவில்லை.

மத்திய அரசு பணியாளர்களுக்கு நிகரான ஊதியம் மாநில அரசு பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்-எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு 7 வது ஊதியக்குழு நியமித்து அதன் பரிந்துரைகளை நடைமுறைக்கு உட்படுத்திய பிறகும், மத்திய
அரசு பணியாளர்களுக்கு நிகரான ஊதியம் மாநில அரசு பணியாளர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை;

அரசுபோக்குவரத்து தொழிலாளர்களின் 13 வது ஊதிய ஒப்பந்தம் இன்னும் நடைமுறைக்கு வந்திடவில்லை;

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை;

சத்துணவு பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று 2011 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றீர்கள். அது என்ன ஆயிற்று என்ற கேள்வியை தான் நான் கேட்க விரும்புகிறேன்;

அதேபோல மக்கள் நலப்பணியாளர்களுக்கு மறு நியமனம் வழங்க மனம் வரவில்லை;

அரசுதுறையில் 4 லட்சம் காலிப் பணியிடங்களை வைத்துக் கொண்டும், வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க ஆக்கப்பூர்வமான அணுகுமுறை இல்லை.

முறைப்படுத்தப்படாத SSA, RMSA பள்ளி கல்வி துறையில் உள்ள பணியிடங்கள் : சம்பள பிரச்னையால் நிதித்துறை அதிருப்தி

 முறைப்படுத்தப்படாத எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும்
பள்ளி கல்வி துறையில் உள்ள பணியிடங்கள் : சம்பள பிரச்னையால் நிதித்துறை அதிருப்தி

தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் புதிதாக உருவாக்கப்பட்ட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, சம்பளம் வழங்குவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இப்பணியிடங்கள் முறைப்படுத்தப்படாததால், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்குவதற்கு, அரசாணை நீட்டிப்பு (எக்ஸ்பிரஸ் பே ஆர்டர்) வழங்க வேண்டியுள்ளதால், நிதித்துறை அதிருப்தி தெரிவித்துள்ளது. மாநிலத்தில் வருவாய், கல்வி, பொதுப்பணி, மருத்துவம், கூட்டுறவு உட்பட பல்வேறு அரசு துறைகளில் தேவைக்கு ஏற்ப 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள், புதிதாக உருவாக்கப்பட்டன.


இவற்றில் மாற்றுப்பணி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு, நிதித்துறை சார்பில் தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை ஒப்புதல் வழங்கிய நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒப்புதல் வழங்க நிதித்துறை உத்தரவிட்டது. இதனால் 'பே ஆர்டர்' பெற்று உரிய மாதத்தில் சம்பளம் பெற முடியாமல், 10 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இதுகுறித்து நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள் குறித்து, பல்வேறு குளறுபடிகள் நீடிக்கின்றன. குறிப்பாக திட்டப் பணிகளுக்கு தற்காலிக அடிப்படையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாற்றுப்பணியாக நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு சம்மந்தப்பட்ட திட்ட நிதி மூலம் சம்பளம் வழங்க வேண்டும். குறிப்பாக கல்வி துறையில் 875 உருவாக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் பள்ளி கல்வி துறையில் உள்ளவர்களுக்கு, எந்த திட்டங்கள் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது என்பதில், பல்வேறு நடைமுறை குளறுபடிகள் நீடிப்பதாக, நிதித்துறை சார்பில் தொடர்ந்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வருகிறது.


ஆனால் திட்ட நிதியை மாநில அரசுக்கு ஒப்படைப்பு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. நிதித்துறை ஒப்புதலும் விரைவில் கிடைப்பதில்லை. அதேபோல் மாற்றுப்பணி நியமிக்கப்பட்டவர்களின் பழைய பணியிடங்கள் 'சரண்டர்' செய்யப்படாமலும் இழுத்தடிக்கப்படுகின்றன, என்றார். புதிய உருவாக்கப்பட்ட பணியிடங்களை முறைப்படுத்தவும், அரசு துறைகளில் தேவை அடிப்படையிலான தற்காலிக பணியிடங்களை நிரந்தரப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி
ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், வங்கி ஊழியர்கள் சம்மேளனம் ஆகியவை சார்பில் 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யவிருப்பதாக அறிவித்து இருந்தது.

இந்தநிலையில் 9 வங்கி ஊழியர்கள் சங்கம் இதே கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 28-ந்தேதி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதனால் 7-ந்தேதி நடக்க இருந்த வேலைநிறுத்தம் 28-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.


இவ்வாறு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தில் தமிழ்நாடு பொதுசெயலாளர் கிருஷ்ணன், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுசெயலாளர் வெங்கடாச்சலம் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

வருமான வரி விலக்கு உயருமா ?