யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/2/17

மத்திய அரசு பணியாளர்களுக்கு நிகரான ஊதியம் மாநில அரசு பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்-எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு 7 வது ஊதியக்குழு நியமித்து அதன் பரிந்துரைகளை நடைமுறைக்கு உட்படுத்திய பிறகும், மத்திய
அரசு பணியாளர்களுக்கு நிகரான ஊதியம் மாநில அரசு பணியாளர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை;

அரசுபோக்குவரத்து தொழிலாளர்களின் 13 வது ஊதிய ஒப்பந்தம் இன்னும் நடைமுறைக்கு வந்திடவில்லை;

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை;

சத்துணவு பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று 2011 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றீர்கள். அது என்ன ஆயிற்று என்ற கேள்வியை தான் நான் கேட்க விரும்புகிறேன்;

அதேபோல மக்கள் நலப்பணியாளர்களுக்கு மறு நியமனம் வழங்க மனம் வரவில்லை;

அரசுதுறையில் 4 லட்சம் காலிப் பணியிடங்களை வைத்துக் கொண்டும், வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க ஆக்கப்பூர்வமான அணுகுமுறை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக