யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/1/18

தூய்மை விருதுக்கு பள்ளிகள் தேர்வு!!!

மத்திய அரசின் துாய்மைப்பள்ளி விரு துக்கு, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட
பள்ளிகளை, ஆய்வு செய்ய, பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், கடந்தாண்டு முதல், தேசிய துாய்மைப்பள்ளி விருது வழங்கப்படுகிறது. நாடு முழுக்க, 118 பள்ளிகளுக்கு, கடந்தாண்டு, இவ்விருது வழங்கப்பட்டது.


தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன. இதேபோல், நடப்பாண்டிலும், ஆன்லைன் வாயிலாக, அனைத்து வகை பள்ளிகளும், இவ்விருது பெற விண்ணப்பிக்குமாறு, அழைப்பு விடுக்கப் பட்டது. மாவட்ட வாரியாக சிறந்த, 42 பள்ளிகள், மாநில அளவிலான சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இப்பள்ளிகளை, நேரில் ஆய்வு செய்ய, அனைவருக்கு கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் தலைமையில், பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது.இதில், இணை இயக்குனர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட, 17 பேர் இடம்பெற்றுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பள்ளிகளை ஆய்வு செய்ய, இக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Details of Number of Important Questions in +2

SSLC- SECOND REVISION COMMON EXAMINATIONS 2018 (TIME TABLE)

DEE PROCEEDINGS-Teacher Profile-பதிவிடப்பட்ட விவரங்களை பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரிபார்க்க AEEO க்களுக்கு உத்தரவு!!!

கட்டாயக்கல்வி சட்டத்தின்படி இனி 8 ஆம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி கிடையாது!!!

வரும் கல்வியாண்டில் புதிய முடிவு 
அமலுக்கு வருகிறது - பள்ளி கல்வித் துறை

"கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி 8ஆம் வகுப்பில் மட்டும் கட்டாய தேர்ச்சி கிடையாது"

* இதுவரை 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருந்து வருகிறது

ரூ 20 லட்சம் டெபாசிட் செய்த 2 லட்சம் பேருக்கு நோட்டீஸ்!!!

பஸ்கட்டண உயர்வு மாணவ -மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.-பஸ் சிறைபிடிப்பு-மறியல்!!!



DSE PROCEEDINGS-EMIS மாணவர்கள் விவரங்களை 29-01-2018 க்குள் பதிவேற்றம் செய்யும் பணியினை நிறைவு செய்தல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்




JACTTO GEO - ஆசிரியர்கள் போராட்ட காலத்திற்கு ஈடு செய்யவேண்டிய நாட்கள் - சிவகங்கை மாவட்ட DEEO உத்தரவு!!!

19/1/18

பள்ளி மாணவர்களின் EMIS விவரங்களை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவம் : இங்கு கிளிக் செய்யவும்



17.01.2018 ) மாலை 4.00 மணியளவில் மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலர் அவர்களும் , மதிப்புமிகு அனைவருக்கும் கல்வி இயக்கக திட்ட இயக்குநர் அவர்களும் காணொலிக் காட்சி மூலம் சில தகவல்களை நமக்குத் தந்துள்ளார்கள் அவற்றின் விபரம்..

1, மொபைல் அப்ளிகேசன் மேம்படுத்தப்பட்டு மாணவர் அடையாள அட்டை        (STUDENT SMART CARD ) எளிதில் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப் பட்டுள்ளது.. மேலும் இப்பணியைத் துரிதப்படுத்த மொபைல் அப்ளிகேசனுடன் கணினி மற்றும் லேப்டாப் மூலமும் பதிவேற்றவும் வசதி செய்யப்பட உள்ளது..
2, ஆதார் எண் இணைக்கும் பகுதியில் ஆதார் எண் இல்லாதவர்களுக்கு E I D நம்பர் இணைக்கும் வசதி மொபைல் அப்ளிகேசனில் மட்டும் இருந்தது. தற்போது கணினி மற்றும் மடிக்கணினி மூலமும் E I D நம்பர் இணைக்க வசதி செய்யப்பட உள்ளது..
3, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் பொதுக்குழுமத்தில் உள்ள மாணவர்கள் விபரங்கள் எக்செல் வடிவில் நமக்கு நாளை கிடைத்துவிடும் . அதனை வைத்து மாணவர்களை எளிதில் கண்டறிந்து விரைவில் நம் பள்ளிக்கு ஈர்க்க வழிவகை கிட்டும் வகையில் வசதி செய்யப்படும்..

4, ஒரே மாணவனின் ஆதார் எண்ணை பல பள்ளிகளில் இணைப்பதாக எழுந்த புகாரையடுத்து மாநிலம் முழுதும் உள்ள எமிஸ் பதிவுகளில் , கண்டறியப்பட்ட டூப்ளிகேட் ஆதார் எண்கள் திரட்டப்பட்டு , எக்செல் வடிவில் நமக்கு நாளை அனுப்பப்படும், அதனை வைத்து சரியான ஆதார் விபரங்களை உறுதி செய்து மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது..

5, எமிஸ் மாணவர் விபரங்களின் எண்ணிக்கை தற்போதைய வருகைப்பதிவேட்டில் உள்ள எண்ணிக்கைக்குச் சமமாக இருக்குமாறு சரி செய்யவேண்டும்..

6, வேறு ஒன்றியம் , மாவட்டப் பள்ளிகள் அனுப்பாத விபரங்களை எளிதில் ஈர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுளது ( மேலும் விபரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை அணுகவும்)

7, எமிஸில் ஆதார் இணைத்தது போக மீதமுள்ளவை ஆதார் புகைப்படம் எடுக்காத மாணவர்கள் விபரங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அளவுக்கு பணிகளை முடித்திட வேண்டும்.

6, எல்லாவற்றிற்கும் முதன்மையாக அனைத்துப் பணிகளையும் வரும் 25.01.2018 மாலைக்குள் முடித்திட வேண்டும் என்று மதிப்புமிகு முதன்மைச் செயலர் அவர்கள் கால நிர்ணயம் செய்திருக்கிறார்கள்

01.01.2018 முதல் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் :

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தையும் பரிசீலித்து வினாத்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு

டெல்லி: நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தையும் பரிசீலித்து வினாத்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்கள பயனடைவர்  என தகவல்கள் தெரிவிக்கின்றன . நீட் எனப்படும் தேசிய தகுதி காண் தேர்வின் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான முறையில் மருத்துவ படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதனால் ஏழை மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி பயின்றோர் பாதிக்கப்படுவர் என்று கூறியும் மத்திய அரசு  பரிசீலனை செய்யவில்லை.

இதனால் தமிழகத்தில் போராட்டங்களும், உயிரிழப்புகளும் நடைபெற்றன. அரியலூர் மாணவி அனிதா தற்கொலை விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியது.மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வினாத்தாள் தயாரிக்கப்படுவதால் மாநில பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வரும் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் இந்தாண்டாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர்.

கடந்த முறையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு வினாத்தாளை தயாரிக்காமல் மாநில பாடத்திட்டத்தையும் சேர்க்க வேண்டும் என்று நீதியரசர்கள் யோசனை தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் நீட் தேர்வுக்கான வினாத்தாளில் மாநில பாத்திட்டங்களையும் சேர்த்து பரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தயாரிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.!

NAS Test 2017 - Rank of District :

இடைநிலை ஆசிரியர்களுக்கான சிறப்பு படி CM cell:

CPS பிடித்தம் உள்ளவர்களுக்கு...! CPS AMOUNT TO INCOM TAX CALCULATION:

இந்த ஆண்டு CPS பிடித்தம் 50,000 க்கு மேலே இருந்தால், உதாரணமாக ரூ. 65,000 என வைத்துக் கொண்டால், ரூ. 50,000 CPS தொகையை80 CCD  ( 1 B )  பிரிவிலும்,மீதித் தொகை ரூ. 15,000/= ஐ80 C ( அதிக பட்ச சேமிப்பு ரூ. 1,50,000 ) பிரிவிலும்கழித்துக் கொள்ளலாம்.CPS பிடித்தம் உள்ளவர்களுக்கு...

INCOME TAX CALCULATION | 2017 - 2018 நிதியாண்டு வருமான வரி செய்திகள்:

ரூ 2,50,000 வரை வரி இல்லை

💥 ரூ 2,50,001 முதல் 5,00,000 வரை - 5%

💥 ரூ 5,00,001 முதல் 10,00,000 வரை - 20%  + ரூ12500

💥 அனைத்து பிரிவுகளில் உள்ள இனங்களை கழித்து பின்னர் வரும் ஆண்டு நிகர வரி வருமானம் (net taxable income) 3,50,000க்கு கீழ் இருந்தால் பிரிவு 87A கீழ் செலுத்த வேண்டிய வரியில் ரூ.2500 கழித்துக் கொள்ளலாம்.

💥 80C+ 80CCC+ 80CCD பிரிவுகளில் ரூ 1,50,000 வரை கழித்துக் கொள்ளலாம்

💥 80CCD (1B) படி CPS ரூ.50,000 வரை தனியாக கழித்துக் கொள்ளலாம்

💥 ( 80C 1,50,000 +CPS 50,000)

💥 1.4.1999,க்கு பிறகு பெறப்பட்ட வீட்டுகடன் வட்டி ரூ 2,00,000 கழித்துக் கொள்ளலாம்.

(18.01.2018 முதல் 25.01.2018 வரை -1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் புதிதாக மாணவர்களை விவரங்களை பதிவேற்ற இயலும்)