யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/6/18

பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : CEO க்களை கண்காணிக்க இணை இயக்குனர்கள்


பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது

முதன்மை கல்வி அதிகாரிகளை கண்காணிக்கும் பணியில், இணை இயக்குனர்கள் ஈடுபடுவர்

தமிழக பள்ளிக்கல்வியில், 40 ஆண்டுகளுக்கு பின், மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்திருத்தம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, தொடக்க கல்வி மற்றும் மெட்ரிக் இயக்குனரகத்தின் மாவட்ட அலுவலகங்கள் மூடப்பட்டன

அந்த நிர்வாகத்தில் இருந்த பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனரத்தின் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வந்தன

அதிகாரம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.க்கள், கூடுதல் அதிகாரம் மிக்கவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்

பணி நியமனம், பணி மாறுதலுக்கான அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது

அடுத்த சீர்திருத்தமாக, சென்னையில், தலைமையகத்தில் பணியாற்றும் இணை இயக்குனர் பதவிகள், மண்டல இணை இயக்குனர் பதவியாக மாற்றப்பட உள்ளது

இதன் படி, பள்ளிக்கல்வி தலைமையகத்தில், சில இயக்குனர்கள் மட்டும் பணியில் இருப்பர்

மற்ற இணை இயக்குனர்கள், மண்டல வாரியாக, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், வேலுார், தஞ்சாவூர், நாமக்கல் என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளன

இவற்றில், ஒவ்வொரு மண்டல தலைமையகத்திலும், அருகில் உள்ள மாவட்டங்கள் இணைக்கப்படும்.அந்த மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள், நேரடியாக, இணை இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும்

அரசாணைஇணை இயக்குனர்களுக்கு உதவியாக, துணை இயக்குனர்களும், மண்டல அலுவலகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்வர்

இதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சட்ட ஆய்வு நடத்தி, அமைச்சர் மற்றும் செயலரின் மேற்பார்வையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன

விரைவில், அரசாணை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது

ALM, TLM, MINDMAP முறையாக பயன்படுத்தவில்லை - 4 ஆசிரியர்களுக்கு MEMO - விளக்கம் அளிக்காதபட்சத்தில் மேல்நடவடிக்கை - CEO செயல்முறைகள்



அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள்: அரசாணை வெளியீடு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 264 புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்கவும், 270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை புதிதாகத் தோற்றுவிக்கவும் நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கல்லூரி கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்று, 2018-19-ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும், இந்தப் பாடப் பிரிவுகளை கையாள புதிதாக உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி, 61 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 75 இளநிலை, 53 முதுநிலை, 65 எம்.பில்., 71 பி.எச்டி. என மொத்தம் 264 புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்கவும், இந்தப் பாடப் பிரிவுகளைக் கையாள 270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிர்வாக அனுமதி வழங்கியும் தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்' என்ற தலைப்பில் அஞ்சல் துறை நடத்தும் கடிதப் போட்டி: ரூ.50,000 முதல் பரிசு:

பொதுமக்கள் மத்தியில் குறைந்துவிட்ட கடிதம் எழுதும் பழக்கத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கில், என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்' என்னும் தலைப்பில் கடிதம் எழுதும் போட்டியை இந்திய அஞ்சல் துறை நடத்துகிறது.
பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு முதன்முறையாக அகில இந்திய அளவில் கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட்டது. மகாத்மா காந்திக்கு எழுதும் கடிதம்' என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில், அகில இந்திய அளவில் 5 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் 4 பிரிவுகளில் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகழாண்டுக்கான கடிதப் போட்டி, இந்திய அஞ்சல் துறை சார்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டது. ரபீந்திரநாத் தாகூரின் ஆமார் தேஷேர் மாதி' என்ற பெங்காலி மொழி தேசபக்திப் பாடலின் அடிப்படையில் என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்' என்ற தலைப்பு தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான கடிதத்தை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதலாம். கடிதத்தை, முதன்மை அஞ்சல் துறைத் தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உறையின் மேல், அஞ்சல் துறைக் கடிதப் போட்டி என்று தவறாமல் குறிப்பிட வேண்டும்.
4 பிரிவுகளில்: இந்தப் போட்டி 4 பிரிவுகளாக நடைபெறும். 18 வயது வரையில், இன்லாண்டு லெட்டர் பிரிவு (உள்நாட்டு கடிதம்), என்வலப்பிரிவு (கடித உறை) என்ற இரண்டு பிரிவுகளும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இன்லாண்டு லெட்டர் பிரிவு (உள்நாட்டு கடிதம்), என்வலப் பிரிவு (கடித உறை) ஆகிய இரண்டு பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறும்ய
கடிதத்தின் அளவு: என்வலப் பிரிவில் எழுதுவோர் ஏ-4 அளவு வெள்ளைத் தாளில் 1,000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். இன்லாண்டு லெட்டர் பிரிவில் எழுதுவோர் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அஞ்சலகங்களில் விற்கப்படும் கடித உறை அல்லது வேறு உறைகள், தேவையான அளவு அஞ்சல் தலை ஒட்டப்பட்டவை மற்றும் இன்லாண்டு கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கூரியர் மூலம் அனுப்பப்படும் தபால்களோ, நேரில் தரப்படும் கடிதங்களோ ஏற்கப்பட மாட்டாது.
ரூ.50,000 பரிசு: மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ.25,000-மும், இரண்டாவது பரிசாக ரூ.10,000-மும், மூன்றாவது பரிசாக ரூ.5,000-மும் வழங்கப்படும். அகில இந்திய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாவது பரிசாக ரூ.25,000, மூன்றாவது பரிசாக ரூ.10,000 அளிக்கப்படும்.
வயது சான்றிதழ் அவசியம்: இதுகுறித்து சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஆர்.ஆனந்த் கூறியது:
இந்தப் போட்டிக்கான கடிதங்களை செப்டம்பர் 30 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். போட்டியில் பங்கு பெறுவோர், கடிதத்தின் மேல், 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1 -ஆம் தேதியன்று, தங்களின் வயது 18 -க்கு மேல், 18 -வயதுக்குகீழ் என்று சான்றளிக்கிறேன்' என்று வாசகத்தை எழுதி கையெழுத்திட வேண்டும். வெற்றி பெறும் போட்டியாளர்களின் வயதுச் சான்றிதழ் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பரிசுக்கு பரிந்துரைக்கப்படும். கட்டுரைகள் புலமை வாய்ந்த நபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் படித்து, சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்வர்.
கடிதம் எழுதும் போட்டியில் கடந்த ஆண்டு தமிழகத்திலிருந்து மொத்தம் 99,513 பேர் பங்கேற்றனர். இதில், சென்னை மண்டலத்தில் மட்டும் 29, 407 பேர் பங்கேற்றனர். இவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் 3 பேர் வீதம் மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாநில அளவில் பரிசு தொகை வழக்கப்பட்டது. மேலும், அகில இந்திய அளவில் 12 பேரின் கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களில் நாகை மாவட்டத்தை சேர்ந்த சௌந்தரராஜன், ரங்கநாயகி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றனர் என்றார் அவர்

11,12ஆம் வகுப்பு வினாத்தாளில் 20 விழுக்காடு Creative கேள்விகள் : மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் சுற்றறிக்கை:

11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில்20 விழுக்காடு வினாக்கள் சிந்தனை மற்றும் உயர் திறன் சார்ந்து சிந்தித்து விடையளிப்பவையாக இருக்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 இதுதொடர்பாக அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கு வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலையில், புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்கள், கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாக்கள், மற்றும் பாடம் சார்ந்து கேட்கப்படும் உயர்திறன் சார்ந்த சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமையும் வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் மாணவர்களை ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு கேள்வித் தாள் நடைமுறையில் மாற்றமில்லை.

11ம் வகுப்பு தமிழ் புத்தக அட்டை படத்தில் செங்கீரை மண் குதிரை தேர்வானது எப்படி?

                                                         
அரிமளம் அருகே உள்ள கிராம கோயில் மண் குதிரை 11ம் வகுப்பு தமிழ்ப்பாட புத்தகத்தில் அட்டைப் படமாக வந்துள்ளது. இது எங்கள் கிராம திருவிழாவுக்கு கிடைத்த அங்கீகாரம் என அப்பகுதி மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

 புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம், திருமயம் பகுதியைச் சுற்றியுள்ள அரண்மணைபட்டி, விராச்சிலை, பனையப்பட்டி, சாஸ்தார்கோவில், செங்கீரை, ராயவரம், நம்பூரணிபட்டி, கீழாநிலைக்கோட்டை, புதுநிலைப்பட்டி, கே.புதுப்பட்டி, ராயவரம், புலிவலம், மிரட்டுநிலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அய்யனார் கோயில்களில் வருடம் தோறும் குதிரை(புரவி) எடுப்பு திருவிழா நடத்துவது வழக்கம். வருடம் தோறும் குதிரை எடுப்பு திருவிழா நடத்தி இரவு நேரங்களில் கோயில் அருகிலேயே புராண நாடகம், கலை நிகழ்ச்சி நடத்தி அய்யனாரை வழிபட்டு வருகின்றனர்.

இதனிடையே நடப்பு வருடம் தமிழக அரசு 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து புதிய பாடப் புத்தகங்களை வெளியிட்டது. இதில் 11ம் வகுப்பு பொதுத் தமிழ் பாடப் புத்தகத்தில் உள்ள அட்டை படம் அரிமளம் அருகே உள்ள செங்கீரை தலைகுடை அய்யனார் கோயில் மண் குதிரை அச்சிடப்பட்டிருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இது எங்கள் கிராம கோயில் விழாக்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுவதாக அப்பகுதி மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். இது பற்றி செங்கீரையைச் சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, எங்கள் ஊரில் நடைபெறும் விழாக்களில் ஊர் காவல் தெய்வமான தலைகுடை அய்யனார் கோயில் குதிரை எடுப்பு திருவிழா மிக முக்கியமானது. பெரும்பாலும் திருவிழா வைகாசி மாதம் கடைசி தேதிகளில் நடைபெறும். திருவிழா தொடங்குவதற்கு 2 மாதம் முன்னர் மண் குதிரை செய்யும் வேளார் இனத்தவர்களிடம் அய்யனார் குதிரை செய்து தர வேண்டி பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.


அதன்படி அரண்மனை மற்றும் 5 ஊர் சார்பில் 1 குதிரையும் செய்வதோடு பக்தர்கள் நேர்த்திக்கடனுக்கு ஏற்ப குதிரைகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனை தொடர்ந்து விழாவுக்கு முதல் நாள் ஊரார்கள், பக்தர்கள் வேளார் வீட்டுக்கு சென்று அங்குள்ள குதிரைகளை தோளில் சுமந்து வந்து செல்லாயி அம்மன் மந்தையில் வைத்து புஜை செய்து, சாமியாட்டம் நடைபெறும். அடுத்த நாள் குதிரை எடுப்பு விழா நடைபெறும். அப்போது ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் குதிரைகள் செங்கீரையில் உள்ள தலைகுடை அய்யனார், செல்லாயி அம்மன், முன்னோடி கருப்பர், அடைகலம்காத்தான் ஆகிய கோயில்களுக்கு குதிரைகள் பிரித்து அனுப்பட்டு கோயில் வாசலில் காவலுக்கு வைக்கப்படும். இந்நிலையில் எங்கள் கிராம கோயில் மண் குதிரை தமிழக அரசு பாடப் புத்தகத்தில் வந்தது பெருமையாக உள்ளது என்றனர்.

இதுபற்றி புதுக்கோட்டை கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வனிடம் கேட்டபோது, 11ம் வகுப்பு பொதுத் தமிழ் பாடப் புத்தகத்தில் தமிழர்களின் கலாசாரம், மரபு, பாரம்பரியம், வாழ்க்கை முறைகளை பிரதிபலிக்கும் விதமாக அட்டை படம் இருக்க வேண்டும் என தமிழ்நாடு பாடநூல் துணை இயக்குனர் அருள்முருகன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடமும் தெரிவித்தார். மேலும் கிராமங்களில் நடைபெறும் முக்கிய திருவிழாவான குதிரை எடுப்பு திருவிழாவில் உள்ள சுட்ட மண் குதிரை படம் இருந்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள சுட்ட மண் குதிரையை போட்டோ எடுத்து அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதனடிப்படையில் திருமயம், அரிமளம் பகுதி கிராமங்களில் அய்யனார் கோயில் வாசலில் உள்ள சுட்ட மண் குதிரைகளை போட்டோ எடுத்து சுமார் 150க்கும் மேற்பட்டவை  அனுப்பப்பட்டது. இதில் அரிமளம் அருகே உள்ள செங்கீரை கிராம அய்யனார் கோயில் குதிரை சிலை தேர்வு செய்யப்பட்டு பாடப்புத்தகத்தில் அட்டை படமாக அச்சிடபட்டுள்ளது மகிழ்ச்சி அளித்தது. செங்கீரை அய்யனார் கோயில் குதிரை தேர்வு செய்ததற்கு அதன் ஆபரணம் போன்ற வடிவமைப்பு, வர்ண பூச்சு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார்

11ஆம் தமிழ் பாடம் சம்மந்தமான அனைத்து காணொளி காட்சிகள் (66 கானொளிகள்)

மருத்துவ படிப்பில் கூடுதல் இடங்கள்!!

சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு,
 3,355; தனியார் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 517 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.

அதேபோல, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,095; தனியார் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 690 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 5,657 மருத்துவ இடங்களுக்கு, 43 ஆயிரத்து, 935 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இதற்கான தரவரிசை பட்டியல், வரும், 28ல் வெளியிடப்படுகிறது. முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 5ம் தேதி வரை நடைபெறுகிறது.மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு, 5 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு, ஏழு, எம்.பி.பி.எஸ்., - ஒரு, பி.டி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, ஐந்து, எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தன. நடப்பாண்டில், 10, எம்.பி.பி.எஸ்., - ஒரு, பி.டி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிறுவயதிலேயே பெண் குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டியவைகள் :

யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ,மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.

குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.


உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.

சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது

குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள்,நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.

மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.

குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.

அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.

அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.

ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.

பிளஸ் 1 துணை தேர்வு 'ஹால் டிக்கெட்' தயார்

பிளஸ் 1 பொதுதேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 5 முதல் 14 வரை சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 28ல் 'ஹால்டிக்கெட்' வழங்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 28 பிற்பகல் முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாத அனைவரும், மீண்டும் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.

பாடம் நடத்தும் போதே 'நீட்' தேர்வுக்கு பயிற்சி: அரசு பள்ளிகளில் புதிய திட்டம்

பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே, 'நீட்' தேர்வுக்கான பயிற்சி வினாக்களுக்கு, மாணவர்களை தயார்படுத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் 
மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு கட்டாயமானதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி முறையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.வெறும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இதுவரை மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள், திடீரென, பிளஸ் 2 அல்லாத, நீட் நுழைவு தேர்வு வினாக்களை சந்திக்கவும், சிறப்பு பயிற்சி பெற வேண்டியுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 2017-18ல்,தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக, நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக அரசின் இலவச பயிற்சி பெற்ற, 1,300 மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 20 பேர் மட்டுமே, மருத்துவ படிப்புகளில் சேரும் நிலை உள்ளது.இந்த ஆண்டு, மருத்துவ படிப்பில் சேரும், அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, நீட் சிறப்பு பயிற்சி மட்டுமின்றி, கல்வி ஆண்டு துவக்கம் முதலே, வகுப்புகளில் இருந்தே, மாணவர்களை தயார்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்தும் போதே, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், நீட் தேர்வுக்கான பழைய வினாக்கள் இடம் பெற்று இருந்தால், அது பற்றி சிறப்பு கவனம் எடுத்து, மாணவர்களுக்கு விளக்கம் தர வேண்டும்.
நீட் தேர்வு வினா வங்கியை பயன்படுத்தியும், அதிலுள்ள, எம்.சி.க்யு., என்ற, பல்வகை விடைக்குறிப்பு அடங்கிய வினாக்களின் மாதிரியை பயன்படுத்தியும், பள்ளியின் மாதிரி தேர்வுகளில் வினாக்களை இடம் பெற செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நடைமுறையை, தனியார் பள்ளிகள் ஏற்கனவே பின்பற்றுகின்றன.

பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : சி.இ.ஓ.,க்களை கண்காணிக்க இணை இயக்குனர்கள்

பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகளை கண்காணிக்கும்
பணியில், இணை இயக்குனர்கள் ஈடுபடுவர்.தமிழக பள்ளிக்கல்வியில், 40 ஆண்டுகளுக்கு பின், மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்திருத்தம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, தொடக்க கல்வி மற்றும் மெட்ரிக் இயக்குனரகத்தின் மாவட்ட அலுவலகங்கள் மூடப்பட்டன.அந்த நிர்வாகத்தில் இருந்த பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனரத்தின் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வந்தன. அதிகாரம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.க்கள், கூடுதல் அதிகாரம் மிக்கவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பணி நியமனம், பணி மாறுதலுக்கான அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.அடுத்த சீர்திருத்தமாக, சென்னையில், தலைமையகத்தில் பணியாற்றும் இணை இயக்குனர் பதவிகள், மண்டல இணை இயக்குனர் பதவியாக மாற்றப்பட உள்ளது. இதன் படி, பள்ளிக்கல்வி தலைமையகத்தில், சில இயக்குனர்கள் மட்டும் பணியில் இருப்பர்; மற்ற இணை இயக்குனர்கள், மண்டல வாரியாக, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், வேலுார், தஞ்சாவூர், நாமக்கல் என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளன. இவற்றில், ஒவ்வொரு மண்டல தலைமையகத்திலும், அருகில் உள்ள மாவட்டங்கள் இணைக்கப்படும்.அந்த மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள், நேரடியாக, இணை இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும். அரசாணைஇணை இயக்குனர்களுக்கு உதவியாக, துணை இயக்குனர்களும், மண்டல அலுவலகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்வர்.
இதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சட்ட ஆய்வு நடத்தி, அமைச்சர் மற்றும் செயலரின் மேற்பார்வையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில், அரசாணை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

பள்ளிப்பட்டில் மாணவர்கள் பாசப்போராட்டத்தின் எதிரொலி: ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் தொடர கல்வித்துறை அனுமதி

ஒரு அரசுப்பள்ளி ஆசிரியருக்காக மாணவர்கள் நடத்திய பாசப்போராட்டம் நாடு முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர் நிலைப் பள்ளியில்  ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்த  பகவான்  பணி நிரவலில் திருத்தணி அருகே அருங்குளம் உயர் நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். 
பகவான்  பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகள் 280 ேபர், 19ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

20ம் தேதி பள்ளி விடுப்புச் சான்று பெற பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவானை  மாணவர்கள் சுற்றிக்கொண்டு  கதறி அழுத சம்பவத்தால் நெகிழ்ந்து போன ஆசிரியரும்  பாசம் காட்டும் மாணவர்களை  விட்டுச் செல்ல மனமின்றி  கண்ணீர் விட்டு அழுதார். மாணவர்களின் இந்த பாசப்போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிரியர் பகவானுக்கு பிரபலங்கள் பலரும்  ஆதரவு தெரிவித்து வாழ்த்து கூறியிருந்தனர். இதனால் ஆசிரியர் பகவான்  பணிநிரவல்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  கல்வித் துறை அதிகாரிகள்  பகவான்  வெளியகரம் பள்ளி பணியில் தொடர அனுமதி வழங்கியுள்ளனர். இதனை அடுத்து பள்ளி ஆசிரியர் வருகை பதிவேட்டில் மீண்டும் பெயர் சேர்க்கப்பட்டு தொடர்ந்து அவர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TRB - TNTET 2017 Paper -II Mark Certificate Published.

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017
PUBLICATION OF CERTIFICATE OF MARKS

Dated: 25-06-2018

Chairman

2018-19 கல்வி ஆண்டில் = தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டம்

26/6/18

MBBS - நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் 28-ல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், 
 பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில்கடந்த 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை வரை நடைபெற்றது. அரசு இடங்களுக்கான விண்ணப்பத்தை ரூ.500-க்கான கேட்பு வரைவோலை (டிடி) கொடுத்தும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான விண்ணப்பத்தை ரூ.1,000-க்கானகேட்பு வரைவோலை (டிடி) கொடுத்தும் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் வாங்கினர்.
அரசு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகள் சாதிச் சான்றிதழ் நகல் கொடுத்து விண்ணப்பத்தைப் பெற்றனர். 8 நாட்கள் நடந்த விண்ணப்ப விநியோகத்தில் அரசு இடங்களுக்கு 24,933 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 13,338 விண்ணப்பங்கள் என மொத்தம் 38,271 விண்ணப்பங்கள் விற்பனையாகின.
இவைதவிர www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற சுகாதாரத்துறையின் இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்தனர். மொத்தம் 43,935 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

TRB - சிறப்பாசிரியர் தேர்வுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிட்ட நிலையில் கல்வி, சான்றிதழ்கள் சரிபார்ப்பு எப்போது?

சிறப்பாசிரியர் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்படாததால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவியில் 1,325 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர்.
தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) கடந்த அக்டோபர் 13-ம் தேதி வெளியிடப்படவில்லை. வழக்கமாக உத்தேச விடைகள் வெளியிடப்பட்டதும் அடுத்த சில நாட்களிலேயே தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுவிடும்.
ஆனால், முதல்முறையாக நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வில், உத்தேச விடைகள் வெளியிட்டு 8 மாதங்கள் கடந்தும் தேர்வு முடிவு வெளியிடப்படாத நிலையில், தேர்வெழுதியவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம், பள்ளிக் கல்வி அமைச்சரை சந்தித்து முறையிடுவது என தொடர்ந்து பல்வேறு நிலைகளில் போராடி வந்தனர்.
ஆன்லைனில் விடைத்தாள் நகல்
இந்த தொடர் போராட்டத்துக்குப் பின்னர் கடந்த ஜூன் 14-ம் தேதி மதிப்பெண் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதற்கு முன்பு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் விடைத்தாள் நகலை யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் பார்க்கலாம் என்றிருந்த நிலையில், சிறப்பாசிரியர் தேர்வில், அதுபோன்று இல்லாமல் அவரவர் தங்களின் விடைத்தாள் நகலை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு நேரில் வந்து கணினியில் பார்க்க மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆன்லைனில் பார்க்கக்கூடிய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில், மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை வெளியிடாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் செய்துவருவதாக தேர்வெழுதியவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டால் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்றும் விரைவில் வரும் என்று சொன்ன பதிலையே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள் என்று தேர்வர்கள் ஆதங்கத்துடன் கூறுகிறார்கள்.
பொதுவாக, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கான முடிவுகள் 3 மாதங்கள் அல்லது 5 மாதங்களில் வெளியிடப்பட்டுவிடும். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், தேர்வு முடிவடைந்து 9 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாதது தேர்வர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘ஒரு காலியிடத்துக்கு 2 பேர்’
சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு ‘ஒரு காலியிடத்துக்கு 2 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட வேண்டும்.
அப்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு ஏற்ப மதிப்பெண் (அதிகபட்சம் 5) அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து, எழுத்துத்தேர்வு மதிப்பெண், பதிவுமூப்பு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு இறுதி தெரிவுபட்டியல் வெளியிடப்படும்.
மதிப்பெண் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதிபெற்றவர்கள் பட்டியலே வெளியிடப்படாத நிலையில் எப்போது இறுதி தேர்வுபட்டியல் வெளியிட்டு பணிநியமனம் வழங்கப்போகிறார்களோ? என்று தேர்வெழுதியவர்கள் அச்சத்தில் உள்ளனர். இனியும், காலதாமதம் செய்யாமல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வுசெய்யப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி!

வீடுகளில் சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக,
மானிய விலையில் மேற்கூரை அமைக்கும் திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 வரும் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதியாகும்.இதுகுறித்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்பில்,மின்கட்டமைப்புடன் கூடிய சோலார் மேற்கூரை திட்டத்தின்கீழ், வீடுகளில் சோலார் மேற்கூரை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. வீடுகள், மருத்துவமனைகள், அறக்கட்டளைகள், என்ஜிஓ-க்கள் ஆகியோருக்கும் இச்சலுகை பொருந்தும். ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க ரூ.60,000 செலவாகும்.
இதில், ரூ.18,000 மானியமாக வழங்கப்படும்.ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க தேவையான சோலார் மேற்கூரை அமைக்க குறைந்தபட்சம் 100 சதுர அடி இடம் தேவைப்படும். ஒருகிலோ வாட் மேற்கூரை அமைத்தால் மாதம் ஒன்றுக்கு 250 யூனிட் வரை சோலார் மூலம் மின்னுற்பத்தி செய்ய முடியும்.5 ஆண்டு இலவச பராமரிப்புஇந்த சூரியஒளி மின்சாரத்தைக் கணக்கீடு செய்வதற்காக இருவழி பயன்பாடு மீட்டர் பொருத்தப்படும். சோலார் மேற்கூரை மின் கட்டமைப்புகள் கிரிட்டுடன் இணைக்கப்படும். மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 வரை மின்சார கட்டணம் மிச்சமாகும். அத்துடன், சோலார் மேற்கூரைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் 5 ஆண்டுகள் வரை இலவசமாக பராமரிக்கப்படும்.
இத்திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், கடந்த 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு 12 மெகாவாட் அளவுக்கு சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு, வரும் 30-ம் கடைசி தேதியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பதவி உயர்வு கலந்தாய்வு திடீர் ரத்து : இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம்

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகலந்தாய்வு திடீரென நிறுத்தப்பட்டதால், ஏமாற்றமடைந்தனர்.

இப்பள்ளிகளில் 2003 பிப்., வரை இடைநிலை ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர். அதன்பின் பட்டதாரி ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர். இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதலுக்கு சிக்கல் ஏற்பட்டது.தொடர் போராட்டத்தையடுத்து தமிழ் பாடத்திற்கு 66.6 சதவீதம், மற்ற பாடங்களுக்கு 50 சதவீதம் என, இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் 21 ல் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவித்த நிலையில், திடீரென நிறுத்தப்பட்டதால், இடைநிலை ஆசிரியர்கள் கொதிப்படைந்தனர்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சங்கர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் காலிப்பணியிடம் இல்லை என கூறி, கலந்தாய்வை நிறுத்திவிட்டனர்.தவறான விதிமுறை மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குறைத்ததால் இப்பிரச்னை. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கனவாகிவிட்டது. இதன்மூலம் 5 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.
தொகுப்பூதியத்தில் நியமனமான 42 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் 2006 ல் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர்.அப்போதே 50 சதவீத இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்திருந்தால், இந்த குழப்பம் வந்திருக்காது.இதேபோல் அரசுஉதவி பெறும் பள்ளிகளிலும் பதவி உயர்வின்றி 13 ஆயிரம் பேர் தவிக்கின்றனர், என்றார்.

கூடுதலாக வசூலிக்கும் இன்ஜி., கல்லூரிகள் : நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை

பள்ளிகளை போல், கல்லுாரிகளின் கட்டண விபரங்களை, இணைய தளத்தில் வெளியிட வேண்டும்; அதிகமாக வசூலிக்கும் கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உயர் கல்வித் துறைக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளின் கல்வி கட்டணத்தை, தமிழக அரசின் கல்வி கட்டண கமிட்டி நிர்ணயித்துள்ளது. கட்டண விபரங்களை, அந்தந்த பள்ளி களின் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிக கட்டணம் வசூல்அதுபோல, இன்ஜினி யரிங் சுயநிதி கல்லுாரிகளின் கட்டணத்தை நிர்ண யிக்கும் பணியை, உயர்கல்வி கட்டண நிர்ணய கமிட்டி மேற்கொள்கிறது. ஆனால், இந்த கமிட்டி, எந்தெந்த கல்லுாரிக்கு எவ்வளவு கட்டணம் நிர்ண யித்துள்ளது, அதற்கான உத்தரவுகள் என்ன என்ற விபரம், மாணவர்களுக்கோ, பெற்றோருக்கோ தெரிவது இல்லை.இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஏமாற்றி, பல கல்லுாரிகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங் வழியாக, அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெறும் மாணவர்களிடம், எவ்வளவு கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என, இன்ஜி., கவுன்சிலிங் குழு, குறிப்புகளை வழங்குகிறது.ஆனால், பெரும்பாலான கல்லுாரிகள், கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றன. சில கல்லுாரிகள், மாணவர்களிடம் வசூலிக்கும் வைப்பு தொகையை, மாணவர்கள் படித்து முடிக்கும் போது, திருப்பிவழங்குவதில்லை எனவும், புகார்கள் எழுந்துள்ளன.புகார்மேலும், பொருளாதார சூழல், குடும்ப பிரச்னை, தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக, படிப்பை சிலர் பாதியில் கைவிடுகின்றனர். சிலர் வேறு கல்லுாரிகளுக்கு மாறுகின்றனர். இவர்களிடம், முழுமை யாக, நான்கு ஆண்டுகளுக்கான கட்டணத்தை கட்டாய மாக வசூலிப்பதாகவும், கட்டணத்தை செலுத்தும் வரை, தற்காலிக சான்றிதழை நிறுத்தி வைப்பதாகவும், புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது:கவுன்சிலிங் வழியே, இன்ஜி., கல்லுாரிகளில்மாணவர்களை சேர்க்கும், உயர் கல்வித்துறை, தனியார் கல்லுாரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். மாணவர்களிடம் அத்துமீறி வசூலிக்கும் கல்லுாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க ேண்டும்.கட்டண பிரச்னையால் பல மாணவர்கள், உரிய நேரத்தில் தேர்வை எழுத முடியாமல், நிறுத்தி வைக்கப்படுகின்றனர். பல மாணவர்கள், தங்களின் மாற்று சான்றிதழ்களை கூட பெற முடியாமல் தவிக்கின்றனர்.எனவே, கட்டண பிரச்னைக்கு, தமிழக உயர் கல்வித்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.