யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/10/18

மாணவர் விவரத்தை கல்வித்துறை வெப்சைட்டில் பதிவு முடியாததால் காலதாமதமாகும் ஸ்மார்ட் கார்டு திட்டம் :

அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஸ்மார்ட் கார்டு திட்டம் காலதாமதமாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்தாக பள்ளி கல்வி மேலாண்மை இணையதளம்(இஎம்ஐஎஸ்) என்ற திட்டத்தை கடந்த 2012ம் ஆண்டு அரசு தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் ஒன்று முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவர்களின் பெயர், முகவரி, பள்ளி விவரம், பெற்றோர் விவரம் உள்ளிட்ட பொதுவான தகவல்கள் மற்றும் ரத்த வகை, எடை உயரம் உள்ளிட்ட விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்வியாண்டிலும் கூடுதலாக ஒவ்வொரு விவரமும் இந்த பட்டியலில் சேர்ந்து கொண்டே இருக்கும். அதை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. அதற்கான பணிகள் தொடர்ந்து பல மாதங்களாக நடந்து வருகிறது. இந்த விவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் தனித்தனியாக ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் உடனுக்குடன் இஎம்ஐஎஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த கல்வியாண்டு தொடங்கி 3 மாதங்கள் முடிந்து தற்போது 4வது மாதம் தொடங்கியுள்ளது. இருப்பினும் பல மாவட்டங்களில் மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்வது தொடர் காலதாமதமாவதாக புகார் எழுந்துள்ளது. அதாவது பெரும்பாலான அரசு தொடக்கப்பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள், இன்டர்நெட் வசதியும் இல்லாமல் ஆசிரியர்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் விவரங்கள் கடந்த ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் எங்களுக்கு என்று தனியாக கணினி ஆசிரியர்கள் இல்லை. இங்கிருக்கும் ஓரிரு ஆசிரியர்களும் கணினி தெரிந்த ஆசிரியர்கள் இல்லை. இதனால் நாங்கள் அருகில் உள்ள வேறு பள்ளி ஆசிரியர்களிடம் கொடுத்து பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

மேலும் கணினி தெரிந்த ஆசிரியர்கள் இருந்தாலும் பள்ளியில் கம்ப்யூட்டர்கள், இன்டர்நெட் வசதி இல்லை. இதனால் தனியார் இன்டர்நெட் மையத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டி உள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 90 லட்சம் மாணவர்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 90 சதவீதமாகும். இந்த பணி நூறு சதவீதம் முடியாமல் உள்ளதால் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடர்ந்து காலதாமதமாகிறது. இந்த பணி முடிந்தவுடன், ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஸ்மார்ட் கார்டால் என்ன பயன்?

இந்த திட்டம் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையாக மட்டும் அல்லாமல்  கல்வித்துறையில் டிஜிட்டல் வளர்ச்சிக்கான நகர்வாகவும் கருதப்படுகிறது. இந்த கார்டில் பயிலும் மாணவர்களின் புகைப்படம், ரத்த வகை, முகவரி, குடும்ப விவரம், ஆதார் விவரம் இடம் பெற்று இருக்கும். ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். மேலும் ஆசிரியர்கள் குறித்த விவரம் உள்ளிட்டவை குறித்தும் அறிந்து கொள்ளலாம். பள்ளிகளில் மாற்று சான்றிதழ் முறைக்கு தேவை இருக்காது. ஒருங்கிணைக்கப்படும் தகவல்கள் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு தீர்வு காண வழிவகை ஏற்படும்

200 கோடி செலவில் 111 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை வசதி :

200 கோடி செலவில் 111 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை வசதி,  குடிநீர் வசதி செய்து தரப்படவுள்ளது. இதற்காக, விரைவில் டெண்டர் விட பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாணவர்களின் கல்வி கற்பிக்கும் தரத்தை உயர்த்தும் வகையில், தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பள்ளிகளில் புதிதாக ஆய்வகம், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டிய பள்ளிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டது. அதன்பேரில், மாவட்ட வாரியாக அதிகாரிகள் அளித்தனர். அந்த அறிக்கையின் பேரில் தமிழகம் முழுவதும் 111 மேல்நிலை பள்ளிகளில் நபார்டு வங்கியின் நிதியுதவியின் பேரில் 200 கோடி செலவில் கூடுதல் வகுப்பறை, கழிப்பறை, ஆய்வகம், தளவாட பொருட்கள், சுற்றுச்சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டது. 885 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், 111 பள்ளிகளில் ஆய்வகம், தளவாட பொருட்கள், 104 இடங்களில் குடிநீர் வசதிகள், 255 இடங்களில் கழிப்பறை, 39478 மீட்டர் சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது.

இதற்காக தற்போது தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் விரைவில் டெண்டர் விடப்படுகிறது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் 1 பள்ளியிலும், கடலூர் மாவட்டத்தில் 2 பள்ளியிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 1ம், தர்மபுரி மாவட்டத்தில் 10ம், ஈரோடு மாவட்டத்தில் 6ம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1ம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2ம், கரூர் மாவட்டத்தில் 2ம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5ம், மதுரை மாவட்டத்தில் 5ம், நாமக்கல்லில் 1ம், நாகையில் 2ம், நீலகிரி, பெரம்பலூரில் தலா 1ம், புதுக்ேகாட்டையில் 21ம், ராமநாதபுரத்தில் 1ம், சேலத்தில் 14ம், சிவகங்கை 1ம், நெல்லையில் 3ம், திருப்பூரில் 2ம், திருவண்ணாமலை 3ம், திருச்சி 2ம், திருவள்ளூர் 2ம், தேனி 2ம், திருவாரூர் 1ம், தூத்துக்குடி 2ம், வேலூரில் 7ம், விழுப்புரத்தில் 10ம், விருதுநகர் 1 பள்ளி என மொத்தம் 111 பள்ளிகளில் அமைக்கப்படவிருக்கிறது. இதற்காக, 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் வகுப்பறை கேட்ட 14.13 லட்சம், ஆய்வகள் 39.27 லட்சம், தளவாட பொருட்கள் 24.24 லட்சம், குடிநீர் வசதி 2.52 லட்சம், கழிப்பறை 5.59 லட்சம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு 10 நாட்களுக்குள் டெண்டர் விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டவுடன் அந்த பள்ளிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது’ என்றார்

இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை :

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் நடைபெற்று வரும் நான்காவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் வாழைப்பழத்தில் இருந்து டிஎன்ஏவை பிரித்தெடுக்கும் நிகழ்வில் பள்ளி மாணவர்கள் 550 பேர் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்தனர் .
லக்னெளவில் கடந்த ஐந்தாம் தேதி முதல் இந்திய சர்வதேச அறிவியல் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திராகாந்தி பிரதிஷ்டானில் நடைபெற்று வரும் இந்த விழாவின் ஒரு பகுதியாக டிஎன்ஏவை தனியாகப் பிரித்து எடுக்கும் நிகழ்ச்சி ஜிடி கோயங்கா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அப்பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுமார் 550 பேர் பங்கேற்று வாழைப்பழத்தில் இருந்து டிஎன்ஏவை பிரித்தெடுக்கும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வை கின்னஸ் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் அமைப்பின் கல்வியாளர் ரிஷிநாத், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சரோஜா காந்த் பாரிக் ஆகியோர் பார்வையிட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் டாக்டர் ரேணு ஸ்வரூப் தொடங்கிவைத்தார். அவர் கூறுகையில், இந்த நிகழ்வானது இந்திய அறிவியல் வரலாற்றில் ஒரு பொன்னான தருணம் ஆகும். மேலும், மாணவர்களின் அறிவியல் உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மாணவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை இது காட்டுவதாக உள்ளது. நகர்ப்புற மாணவர்கள் மட்டுமின்றி கிராமப்புற மாணவர்களிடமும் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், ஊக்கமளிக்கவும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் மாணவர்கள், பெண்கள், ஆராய்ச்சியாளர்கள் என 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது 12,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும் என்றார்.
தேசிய தாவரவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் சரோஜ் காந்த் பாரிக் கூறுகையில், சியாட் நகரில் நடைபெற்ற டிஎன்ஏவை பிரித்தெடுக்கும் கின்னஸ் நிகழ்வில் சுமார் 302 மாணவர்கள் பங்கேற்றனர். தற்போது நடைபெற்ற நிகழ்வில் 550 மாணவர்கள் பங்கேற்று சாதனை நிகழ்த்தி உள்ளனர் என்றார்.
திட்ட மாதிரிகள் கண்காட்சி: லக்னெள அன்சல் பிளாசா பகுதியில் உள்ள ஜிடி கோயங்கா பள்ளி வளாகத்தில் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக மாணவர்கள் பொறியியல் மாதிரி போட்டி நடைபெற்றது.
இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது நவீன கண்டுபிடிப்பு மாதிரிகளை காட்சிப்படுத்தியிருந்தனர். தமிழகம், ஆந்திரம், உத்தர பிரதேசம், தில்லி என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது 100 நவீன படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதில் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சர்பீன், பிரதீப் ஆகியோர் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடிய இரண்டு சக்கரங்களில் செயல்படும் ரோபோ இயந்திரத்தை வடிவமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். கோயம்புத்தூர் கே. பி.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவ, மாணவிகள் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் கழிவுகளை அகற்றும் நவீன இயந்திரத்தை வடிவமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஈ.சந்திரகுமார், எஸ்.ஹரிபிரசாத் ஆகியோர் பார்வையற்றவர்கள் பயன்படுத்தக் கூடிய நவீன ஊன்றுகோலை வடிவமைத்திருந்தனர்.
இது குறித்து அந்த மாணவர்கள் கூறுகையில், பார்வையற்றவர்கள், செல்லிடப்பேசியின் வாயிலாக இணைக்கப்பட்ட கருவிகள் மூலம் தங்களது முன்னே உள்ள பொருள்களை உணரும் வசதி இந்தக் கருவியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

தேசிய திறனாய்வுத் தேர்வில் சென்னை மாணவர் முதலிடம்!

உயர் படிப்புகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வில், தமிழக அளவில் சென்னையைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

கடினமான தேர்வாகக் கருதப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் நிலைத் தேர்வு கடந்தாண்டு நவம்பர் 18ஆம் தேதியன்று மாநில அரசால் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாவது கட்டத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்கள் ஆவர். கடந்த மே 13ஆம் தேதியன்று, இது என்சிஇஆர்டியால் நடத்தப்பட்டது.இந்த தேர்வை நாடு முழுவதும் 12 லட்சம் பேர் எழுதினர். இதில், 1,000 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் பொதுப் பிரிவைச் சேர்ந்த 54 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் தமிழக அளவில் சென்னையைச் சேர்ந்த ஆதித்யாஎன்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசு சார்பில் ஆராய்ச்சிப் படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்பு போன்ற உயர் படிப்புகள், மருத்துவ உயர்படிப்புகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்

ஆசிரியர்களின் சான்றிதழ் உண்மைத் தன்மை கண்டறியும் முகாம் !

கடலுாரில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ் உண்மைத் தன்மை கண்டறியும் முகாம் நடந்தது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எஸ்.எஸ்.எல்.சி., - பிளஸ் 2 பாட பிரிவு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் உண்மைத் தன்மையை கண்டறியும் பணியை மாவட்டம் வாரியாக முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மேற்கொண்டு வருகிறது.அதன்படி, கடலுார் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எஸ்.எஸ்.எல்.சி., - பிளஸ் 2 பாட பிரிவு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 3,800 பேரின் மதிப்பெண் சான்றிதழ்கள் உண்மையானவை என, கண்டறிந்து ஏற்கனவே சான்றிதழ் வழங்கப்பட்டது.மீதமுள்ள 400 பேரின் மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மையைக் கண்டறியும் சிறப்பு முகாம் கடலுார் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.


இதற்காக ஆசிரியர்கள், பணியாளர்கள் சான்றிதழ்களுடன் வந்தனர்.அவர்களின் மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவெண், பிறந்த ஆண்டு, தேதியை, தேர்வுத் துறையின் ஆன்-லைன் மூலமாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் கடலுார் செல்வராஜ், வடலுார் திருமுருகன், விருத்தாசலம் செல்வகுமார், சிதம்பரம் ஆஷா கிறிஸ்டின் ஆகியோர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, உண்மையானவ என, சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆசிரியர்கள் போராட்டம் மீண்டும் விஸ்வரூபம் :

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதியக்குழு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்ட களத்தில் குதித்துள்ள நிலையில் நவம்பர் 27 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த இருப்பதாக அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக கடந்த 21 மாதங்களாக ஜாக்டோ - ஜியோ என்ற கூட்டமைப்பாக போராடி வருகின்றனர்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். முடக்கப்பட்டுள்ள 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஊதிய குறைப்பினை சரி செய்வதுடன் அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் காலம் காலமாக இருந்து வருகின்ற பணியிடங்களை ஒழித்தல், நியமனங்களுக்கு தடை, 5 ஆயிரம் பள்ளிகளை மூடி பொது கல்வியை பாழடிப்பது போன்ற கொள்கைகளை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.



கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொண்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் நீதிமன்றம் வேலை நிறுத்தத்திற்கு அப்போது தடை விதித்தது.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை செப்டம்பர் 11 முதல் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களால் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று செப்டம்பர் 15ல் நீதிமன்றம் மற்றொரு உத்தரவிட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.


பின்னர் இந்த வழக்கு விசாரணை முடிவில் தமிழக அரசு கடந்த அக்ேடாபர் 13ம் தேதிக்குள் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் அல்லது இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தவறினால் நீதிமன்றமே ஊதியக்குழுவை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உத்தரவு வழங்கியது.

மேலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான தமிழக அரசின் தலைமை செயலாளர், பென்ஷன் திட்ட குழுவின் அறிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதிக்குள் தாக்கல் செயப்பட்டு அந்த அறிக்கையின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் வாக்குறுதியை நீதிமன்றத்தில் அளித்தார். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெறப்பட்டு தமிழக அரசு முடிவெடுக்கும் என்று அறிவித்த வாக்குறுதிக்கு மாறாக அக்குழுவிற்கு கால நீட்டிப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கால நீட்டிப்பு காலம் 8 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் அக்குழுவின் நிலை என்ன என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த வாக்குறுதியின் நிலை என்ன என்பதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனாலேயே தொடர்ந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக கூறி மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.



கடந்த 4ம் தேதி நடைபெற்ற தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் தமிழக அரசின் போராட்டத்திற்கு எதிரான உத்தரவுகள், கெடுபிடிகளை மீறி பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்து சென்றுவிட்டதுடன் போராட்டங்களிலும் பங்கேற்றனர். இதனால் பல பள்ளிகளிலும் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன. அரசு துறை அலுவலகங்களும் மூடப்பட்டதால் பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்தன.

இந்தநிலையில் மீண்டும் வரும் 13ம் தேதி சேலத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படுவதுடன் நவம்பர் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளதால் அரசு மட்டத்திலும், கல்வித்துறையிலும் பணிகள் மீண்டும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

5 மாநில தேர்தல் அட்டவணை :

மாநில அளவிலான இலக்கியப் போட்டிகள்: மாணவர்களுக்கு ரூ.2.20 லட்சம் பரிசு :

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அளவில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை,  பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாணவ,  மாணவிகளுக்கு ரூ.2.22 லட்சம் பரிசுத் தொகையை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்

பள்ளி,  கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை  சார்பில் மாநில அளவில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


விழாவுக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் தலைமை வகித்தார். இதில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்

ஒவ்வொரு போட்டிகளிலும்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம்,  இரண்டாம் பரிசாக ரூ.12 ஆயிரம்,  மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது

பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ,  மாணவிகள்


கவிதைப் போட்டி :

முதல் பரிசு- பீ.ஜோசி அபர்ணா,  வித்யாகிரி மேல்நிலைப்பள்ளி,  சிவகங்கை மாவட்டம்,

இரண்டாம் பரிசு- செ.சுகசஞ்சய்,
ஸ்ரீசரஸ்வதி மேல்நிலைப் பள்ளி,  தருமபுரி மாவட்டம்,

மூன்றாம் பரிசு- மா.சண்முகநந்தா,  பி.எம்.வி. மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி,  தூத்துக்குடி.

கட்டுரைப் போட்டி :

முதல் பரிசு- ம.திவ்யா,  புனித மரியண்ணன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  சிவகங்கை மாவட்டம்,

இரண்டாம் பரிசு-
ரா.திவ்யதர்சினி,  நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேலம்,

மூன்றாம் பரிசு-

ஆ.ராஜலட்சுமி,  பா.தொ.ந.உ.க. மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி மாவட்டம்.

பேச்சுப் போட்டி :

முதல் பரிசு-

சை.புவனேஸ்வரி,  எஸ்.ஆர்.எம். மேல்நிலைப்பள்ளி,  அம்பத்தூர்,  சென்னை,

இரண்டாம் பரிசு- ரோஷிணி,
கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி,  தாம்பரம், சென்னை,

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006-ன் படி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மார்ச் 2019 , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1-ல் தமிழில் எழுதுதல் - சில அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு!



7/10/18

உள்ளேன் ஐயா! 'ஸ்மார்ட் போனில்' வருகைப்பதிவு

கோவை : பள்ளி துவங்கிய முதல் பாட வேளையில், அனைத்து வகுப்பறைகளில் இருந்தும் கேட்பது, 'உள்ளேன் ஐயா...' என்ற ரீங்காரம் தான். சிவப்பு மையால், வருகைப்பதிவேட்டில் எடுக்கப்பட்ட, வருகைப்பதிவு நடைமுறையை, இனி ஸ்மார்ட் போன் பார்த்துக்கொள்ளும்.

பல அரசுப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரித்து காண்பிக்கும் நோக்கத்துடன், இல்லாத மாணவர்களை இருப்பதாக கணக்கு காண்பித்து, நலத்திட்ட நிதியை அமுக்கும் நிலை உள்ளது. போலியாக காண்பிக்கப்படும் இந்த கணக்கால், விதிமுறைகளின்படி பள்ளியை மூடுவதும் தவிர்க்கப்படுகிறது. இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் இனி நடக்காது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர், ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளும் விதமாக, 'Tn Attendance' என்ற பிரத்யேக 'ஆப்' வந்து விட்டது. இதை ஆசிரியர்கள் பதிவிறக்கி, அந்தந்த பள்ளிக்கான பயனர் எண், பாஸ்வேர்டு உள்ளீடு செய்தால், மாணவர்களின் விபரங்கள் திரையில் தோன்றும்.

தினசரி காலை, 9:30 மணியளவிலும், மதியம் உணவு இடைவேளைக்கு பின்பும், மாணவர்களின் வருகையை இதில், உள்ளீடு செய்ய வேண்டும்.விடுப்பு எடுத்த மாணவர்களின், பெயருக்கு அருகில் மட்டும், 'கிளிக்' செய்தால், 'ஆப்சென்ட்' ஆகிவிடும். ஒருமுறை தகவல்களை உள்ளீடு செய்த பின், வருகைப்புரிந்தவர்கள், பள்ளிக்கு வராதோர் குறித்த தகவல்கள், மாணவர்கள் மற்றும் மாணவிகள் என, தனித்தனியே திரையில் தோன்றும். இதை சமர்ப்பித்தவுடன், இயக்குனரகத்தில் உள்ள தொழில்நுட்ப குழுவினர் பார்வையிடலாம்.

கோவை பள்ளிகளில், பரீட்சார்த்த முறையில், இம்மாதம் இறுதிவரை, ஸ்மார்ட் போனில் அட்டெண்டென்ஸ் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய நடைமுறை வாயிலாக, வருகைப்பதிவு எடுப்பதால், பள்ளிக்கு வருவோர் குறித்த தகவல்களை, எந்நேரத்திலும் அதிகாரிகளால் இருந்த இடத்தில் இருந்தபடி பார்வையிட முடியும்.



ஆசிரியர்களுக்கும் உண்டு!

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் அருளானந்தம் கூறுகையில்,''ஸ்மார்ட் போன் பயன்படுத்தி, வருகைப்பதிவு எடுக்கும் முறையை, ஆசிரியர்கள் வரவேற்கின்றனர். இதே நடைமுறை, ஆசிரியர்களுக்கும் உள்ளது. குறித்த நேரத்தில் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் குறித்த தகவல்களை, சி.இ.ஓ., முதல் அனைத்து அதிகாரிகளும் அறிந்து, ஆய்வு நடத்த முடியும்,'' என்றார்

அரசு பள்ளிகள் மூடப்படும் ?? நிதியை நிறுத்திய மத்திய அரசு இந்த வார ஜூ.வியில்


No automatic alt text available.

ஊதியம் பிடித்தம் செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

நவம்பருக்குள் 6-8ம் வகுப்புகளுக்கு 3000 ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

மேலும், "மத்திய அரசின் உதவியோடு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 1000 பள்ளிகளில் அட்டல் டிங்கர் லேப் அமைக்கப்படும்" என்றார்.

P.T.A., மூலம் 1,474 முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்ப கல்வித்துறை சுற்றறிக்கை

நடப்பு கல்வியாண்டில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில், 1,474 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

சுற்றறிக்கை விபரம்: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் பெறப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப, கால அவகாசமாகும். இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் நலன் கருதி, தொகுப்பூதிய அடிப்படையில், காலிப்பணியிடம் நிரப்ப அனுமதி வழங்கப்படுகிறது. ஆறு மாத காலத்துக்கு மட்டும், தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலை பிரிவுக்கான உதவி தலைமை ஆசிரியர், மூத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் கொண்ட குழு மூலம், நிரப்பலாம். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய, 11 பாடங்களுக்கு மட்டும் நிரப்ப வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பி, மாதம், 7,500 ரூபாய் வீதம் தொகுப்பூதியம் வழங்க வேண்டும். எவ்வித புகாருக்கும் இடமின்றி, நியமனம் நடக்க வேண்டும். இதை பள்ளி தலைமை ஆசிரியர் கண்காணித்து, உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாவட்டம் - ஆசிரியர் எண்ணிக்கை
அரியலூர் - 21
சென்னை - 14
கோவை - 45
கடலூர் - 35
தர்மபுரி - 17
திண்டுக்கல் - 21
ஈரோடு - 61
காஞ்சிபுரம் - 77
கன்னியாகுமரி - 17
கரூர் - 23
கிருஷ்ணகிரி - 33
மதுரை - 15
நாகை - 135
நாமக்கல் - 30
பெரம்பலூர் - 20
புதுக்கோட்டை - 46
ராமநாதபுரம் - 28
சேலம் - 30
சிவகங்கை - 12
திருவண்ணாமலை - 117
தஞ்சை - 60
நீலகிரி 67
தேனி - 11
திருநெல்வேலி - 35
திருப்பூர் - 36
திருவள்ளூர் - 106
திருவாரூர் - 97
திருச்சி - 31
தூத்துக்குடி - 32
வேலூர் - 120
விழுப்புரம் - 62
விருதுநகர் - 20
மொத்தம் - 1,474

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006-ன் படி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மார்ச் 2019 , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1-ல் தமிழில் எழுதுதல் - சில அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு!



CM CELL - அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு காரணமாக ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களை தமிழ் வழிக்கல்விக்கு மாற்றி கல்வி கற்பிக்க முடியுமா?

விலைபோட்டு வாங்கவா முடியும் கல்வி?

ஓவ்வொருவரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த கல்வியின் நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது? பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகி வேதனையான கட்டத்தில் பரிதவித்துக்கொண்டு அல்லவா இருக்கிறது.
விலைபோட்டு வாங்கவா முடியும் கல்வி?
கல்வி...! ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று. கல்வி என்ற அளவுகோலே ஒருவரின் அறிவு, ஆற்றலை நிர்ணயிக்கிறது. அந்த அறிவு, ஆற்றலே வாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தருகிறது. காரணம், கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே வேலை, அதை வைத்தே ஊதிய அளவும் மாறுபடுகிறது.இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த கல்வியின் நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது? பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகி வேதனையான கட்டத்தில் பரிதவித்துக்கொண்டு அல்லவா இருக்கிறது.

ஆங்கிலம் தெரிந்திருந்தால்தான் கல்லூரியிலும், அதன் பின்பு பணிதளத்திலும் ஜொலிக்க முடியும் என்ற நிலையில், பள்ளி மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை வசதியாக பயன்படுத்திக்கொண்ட தனியார் பள்ளிகள் கட்டணம் என்ற பெயரில் பெரும் தொகை வசூல் செய்து கல்வித்துறையில் கல்லாக்கட்டத் தொடங்கிவிட்டன.

இன்னொருபுறம், தாய் மொழியிலான தமிழ் வழிக்கல்வியை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் விருப்பம் ஆங்கில வழிக் கல்வியை நோக்கி இருப்பதால், புற்றீசல் போல தனியார் பள்ளிகள் முளைக்கின்றன. தமிழ் வழியிலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் படிப்படியாக மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நேரத்தில் ஆங்கில கல்வியை மாணவர்களும், பெற்றோரும் விரும்புவதற்கான காரணங்களை புறந்தள்ளிவிடவும் முடியாது. இதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன. அதாவது, 12-ம் வகுப்புக்கு பிறகு, உயர்கல்வி படிக்க மாணவர்கள் கல்லூரிகளை நாடும்போது, அனைத்து வகை பட்டயப்படிப்பு, பட்டப்படிப்புகளிலும் பெரும்பாலும் ஆங்கிலமே மேலோங்கி நிற்கிறது.

உயர் கல்வியில் தமிழ் மங்கிப்போய் விடுவதால், தமிழ் வழி மாணவர்கள் ஆங்கிலத்தில் பாடங்களை படிக்க கஷ்டப்படுகிறார்கள். இதை உணர்ந்த பெற்றோர், என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை என்று, கடன் வாங்கியாவது பிள்ளைகளை ஆங்கில வழி பள்ளிகளில் சேர்க்க துணிகிறார்கள். இதுதான் தனியார் பள்ளிகளின் எழுச்சிக்கும், அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கும் காரணம் ஆகும்.

இது தொடர்பாக, தமிழக பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசின் குழு ஒன்று, தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது நமக்கெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் தரும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் 820 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்களை அவர்களே சொல்லிக் கொடுப்பதாகவும் அந்த குழுவின் அறிக்கை தகவல் தருகிறது.

ஆரம்ப பள்ளிகளை எடுத்துக்கொண்டால், 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், நடுநிலைப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் இருக்க வேண்டும் என்று மத்திய குழந்தைகள் கட்டாய கல்வி உரிமை சட்டம் கூறுகிறது. ஆனால், ஒரு ஆசிரியரே பள்ளி முழுவதையும் கவனித்துக்கொள்ளும் நிலை வந்ததற்கான காரணம், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துபோனது தான்.

தமிழக அரசும் இதே காரணத்தை சொல்லி, இன்றைக்கு 3 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு மூடு விழா நடத்த தயாராகிவிட்டது. காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 1,053 பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும், மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டதால், 1,950 பள்ளிகளின் கதவுகளை அடைக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சீட்டுக்கட்டு போல ஆண்டுதோறும் சரிந்துகொண்டே செல்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 30 ஆயிரம் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

அதாவது, இங்கு சேர வேண்டிய மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியை பெறுவதற்காக தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை தான் இந்த புள்ளி விவரம் காட்டுகிறது.

நிலைமை இவ்வாறு இருக்க, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களும், பெற்றோரும் விரும்பும் ஆங்கில வழிக்கல்வியை தொடங்குவதற்கு அரசு தயங்கிக் கொண்டு இருக்கிறது. காரணம், தமிழகத்தில் கல்வியும் அரசியல் என்ற மாய வலைக்குள் சிக்கிக் கிடக்கிறதே!

ஒருவேளை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை தொடங்கினால், இங்குள்ள எதிர் கட்சிகளும், அரசியல்வாதிகளும் போர்க்கொடி தூக்கிவிடுவார்கள். ‘தமிழ் மடிந்துபோகுமே...!’ என்றெல்லாம் அவர்கள் கவலை தெரிவிக்க தொடங்கிவிடுவார்கள். தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க களம் அமைத்துக்கொள்வார்கள். அதை தடுத்து நிறுத்தும் செயலிலும் அவர்கள் குதித்துவிடுவார்கள்.

ஆனால், அவர்களின் பிள்ளைகள் தமிழ் வழிக்கல்வியில் தான் படித்தார்களா?, படிக்கிறார்களா? அல்லது படிப்பார்களா? என்று பார்த்தால், அப்படி எதுவும் இல்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

எனவே, முதலில் அரசியல் வலையில் சிறைபட்டு கிடக்கும் கல்வியை மீட்டெடுக்க வேண்டும். தாய் மொழி கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் பிரதானம் என்றாலும், உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் ஆங்கில வழிக்கல்வியும் அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மேலும், ஆங்கில வழிக்கல்வி படிப்பதால் தமிழ் அழிந்துவிடும் என்றில்லை. தமிழை பாதுகாத்து ஆங்கில அறிவையும் ஊட்ட அரசு முன்வர வேண்டும்.

தமிழக அரசுக்கு ஆங்கிலத்தின் அவசியம் தெரிந்தாலும், தமிழை காப்பதாக நினைத்துக் கொண்டு கண்டும் காணாமல் இருந்து வருகிறது. பெற்றோருக்குத்தான் பிள்ளைகளின் கல்வி பாரமாகிக் கொண்டிருக்கிறது. ‘நாம் அரசு பள்ளிகளில் படித்து, கல்லூரிகளில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தது வரை செலவான தொகையை, இன்றைக்கு நம் பிள்ளைக்கு எல்.கே.ஜி.யிலேயே செலவழிக்க வேண்டியது இருக்கிறது’ என்று அவர்கள் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். பிள்ளைகளை மேற்படிப்பு படிக்க வைக்கவும் பணத்திற்கு என்ன செய்வது? என விடை தெரியாமல் தினமும் திகைக்கிறார்கள்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது, தனியார் வங்கிகள் எல்லாம் அரசுடமையாக்கப்பட்டு, பொதுத்துறை வங்கிகளாக அறிவிக்கப்பட்டன. அந்த வங்கிகள் எல்லாம் இன்றைக்கு மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன. அதுபோல், தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என்று பாகுபாடு பார்க்காமல், அனைத்து பள்ளிகளையும், கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கி, ஆங்கில வழியில் கல்வியை இலவசமாக மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

அதற்கான நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும். அதே நேரத்தில், தாய் மொழியான தமிழ் மொழியை காட்டாய பாடமாக்கி, பாகுபாடின்றி அனைவரும் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ், நம் இனத்தின் அடையாளம். ஆங்கிலம், நிகழ் காலத்தின் கட்டாயம். எனவே, தாய்த்தமிழை காத்து, ஆங்கிலத்தையும் கற்பிக்க அரசு முன்வர வேண்டும்.

-ஆர்.கே. 

6/10/18

பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை: வட்டாரக் கல்வி அலுவலர் எச்சரிக்கை

பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது தெரியவந்தால் பள்ளி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்.ஆர்.பால்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பருவத்துக்கான இலவச சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், நோட்டுப் புத்தகங்களை அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்.ஆர்.பால்ராஜ் வழங்கினார்.
பின்னர், தினமணி நிருபரிடம் அவர் கூறியதாவது: தற்போது அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள 79 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இரண்டாம் பருவத்துக்கான இலவச சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், இரண்டாம் பருவ தொடங்க நாளான புதன்கிழமையே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன.
மேலும், கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி வளாகங்கள் பிளாஸ்டிக் இல்லா வளாகங்களாக மாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் எந்த வகையிலாவது பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது தெரியவந்தால் தலைமை ஆசிரியர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தி அதை தடுக்க செய்ய வேண்டும். மேலும், பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு இருப்பது ஆய்வுகளின் போது தெரியவந்தால் பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வளாகங்கள் புகையிலை இல்லா வளாகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு அருகில் புகையிலை பயன்பாடு குறித்து தெரியவந்தால், அது குறித்த விவரத்தை காவல் துறைக்கு நிர்வாகிகள் தெரியப்படுத்தி அவற்றை அகற்ற வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வெண்ணிலா தலைமை வகித்தார். இதில் ஆசிரியர் வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

11-ம் வகுப்பில் அனைத்து பாடங்களும் முழுமையாக கற்பிக்கப்படுகிறதா? அதிகாரிகள் கண்காணிக்க பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-


10, 11 மற்றும் 12-ம் வகுப்பு என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளும் அரசு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்கும் விதமாக, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 600 மதிப்பெண்கள் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 600 மதிப்பெண்கள் என பதிவு செய்து தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என ஆணை வழங்கப்பட்டது.


ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு பதிலாக தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறதேயன்றி, கற்றல் கற்பித்தலில் எவ்வித மாற்றமும் இல்லை. சில தனியார் சுயநிதி பள்ளிகளில் 11-ம் வகுப்பு பாடங்கள் முழுமையாக கற்பிக்கப்படாத நிலை உள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இதனால் மாணவர்களின் கற்றல் திறன் குறைவுபடுவதோடு அல்லாமல் அவர்களின் எதிர்கால வளர்ச்சியினையும் பாதிக்கும். எனவே 11-ம் வகுப்பிலுள்ள அனைத்து பாடங்களும் கருத்தியல் பாடத்திட்டத்தின் அடிப்படையில் முழுமையாக கற்பிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு எந்த வகையிலும் குறைவில்லாத நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நடைபெறுவதை ஆய்வு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

தனியார் சுயநிதி பள்ளிகளின் வகுப்பறைகளில் 11-ம் வகுப்பு பாடங்கள் பாடத்திட்டத்தின்படி கற்பிக்கப்படாதபோது மட்டுமே ஒரு மாணவனின் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அந்த மாணவன் பெற்ற 11-ம் வகுப்பு மதிப்பெண்களை விட அதிக வேறுபாட்டுடன் இருக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அந்த பள்ளியில், 11-ம் வகுப்பு பாடங்கள் கற்பித்தலில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது.

இதனால் மாணவர்களின் தரம் குறையும் நிலை ஏற்படும். எனவே, அத்தகைய நிலையில் கண்காணிக்க தவறிய பள்ளியின் மீது உரிய விதிகளின்படி விளக்கம் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளி பார்வையின்போது இதனை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

மாநிலம் முழுவதும் நாளை /( 6/10/2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

அடுத்த 5 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் மிதமான மழை இருக்கும். வரும் 7 ஆம் தேதி அதிகபட்சமாக தமிழகத்தில் 25 செ.மீ வரை வரை அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் தெரிவித்தது.


தமிழகம், புதுச்சேரியில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், புதுச்சேரி மாநில முதல்வர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் நாளை அரசு விடுமுறை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மொஹரம் விடுமுறையை ஈடுசெய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நாளை விடுமுறை என முதல்வர் நாராயண சாமி அறிவித்துள்ளார்.

வரும், ஏழாம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் விடுப்பு எடுக்காமல் பணியில் இருக்க வேண்டும் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.

2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள் (RL LEAVE)

*அக்டோபர்:*
1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.
 *நவம்பர்:*
1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.
2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.
3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.
  *டிசம்பர்:*
1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.
2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.
3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.
4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.