யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/11/18

லோக்சபா தேர்தல் பணி கலெக்டர்களுக்கு கடிதம்

லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. தமிழகத்தில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரங்களை, தயார் செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடிதம் எழுதி உள்ளார்.
மத்தியில் ஆட்சியில் உள்ள, பா.ஜ., அரசின் பதவி காலம், 2019 மே மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே, 2019 ஏப்ரல் அல்லது அதற்கு முன், லோக்சபா தேர்தல் நடப்பது உறுதியாகி உள்ளது.லோக்சபா தேர்தலுக்கு, அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதேபோல், தேர்தல் கமிஷனும், தேர்தலை நடத்த தயாராகி வருகிறது.அதன்படி, தமிழகத்திலும் தேர்தல் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளை கண்காணிக்க, மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், மாஜிஸ்ட்ரேட் அந்தஸ்துள்ள அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.அதே போல, ஒவ்வொரு தொகுதிக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள்நியமிக்கப்படுவர். அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும், அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.இப்பணியில், மாநில, மத்திய அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.அவ்வாறு, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள் குறித்த விபரங்களை, தயார் செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடிதம் அனுப்பி உள்ளார்.அதன் அடிப்படையில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள் பெயர், பணிபுரியும் துறை, அலுவலக முகவரி போன்ற விபரங்களோடு, புகைப்படத்தையும், உடனடியாக, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பும்படி, அனைத்து துறை தலைவர்களுக்கும், மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கஜா' புயல் எதிரொலிபயிர் காப்பீடு சுறுசுறு

கஜா' புயல் எதிரொலி யாக, டெல்டா மாவட்டங் களில், பயிர் காப்பீடு செய்ய, வேளாண் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ நெல் சாகுபடி காலம் துவங்கிஉள்ளது.
இம்மாவட்டங்களில், 12 லட்சம் ஏக்கர் வரை சாகுபடியை அதிகரிக்க, வேளாண் துறையினர் திட்டமிட்டுள்ளனர். சம்பா சாகுபடி பாதித்தால், ரேஷன் அரிசி வினியோகத்தில் சிக்கல் ஏற்படும். இந்நிலையில், கஜா புயலால், டெல்டா மாவட்டங்களில், அதிக மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக, இம்மாவட்டங்களில் சாகுபடி செய்துள்ள, சம்பா பயிர்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயிகளை பாதிப்பில் இருந்து காப்பதற்காக, பயிர் காப்பீடு செய்ய, வேளாண் துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சம்பா சாகுபடி செய்துள்ள, டெல்டா விவசாயிகள் அனை வரையும், பயிர் காப்பீடு செய்ய வைப்பதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட வேளாண் துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.பயிர் காப்பீடு செய்த விபரங்களை, அறிக்கையாக வழங்கும்படி, வேளாண் இணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது

அரசு வாகனங்களில் அவசர கால பட்டன் ஜனவரி முதல் கட்டாயமாகிறது

அனைத்து மாநிலங்களிலும், 2019 ஜன., ௧ முதல் பதிவாகும் பொதுத்துறை வாகனங்களில், அவசர கால பட்டன்கள் மற்றும், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்துவது கட்டாயம் ஆகிறது.
டில்லியில், 2012ல், ஓடும் பஸ்சில், கல்லுாரி மாணவி ஒருவர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக இறந்தார். பாதுகாப்புஇது தொடர்பான வழக்கில், பொதுமக்கள் பயன்படுத்தும், பொதுத்துறை வாகனங்களில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, அரசு பஸ்களில், கண்காணிப்பு கேமரா; பஸ்களின் இயக்கத்தை கண்காணிக்க, ஜி.பி.எஸ்., கருவி; அவசரகால பட்டன்கள் போன்றவை பொருத்தப்படும் என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உறுதி அளித்தது.இதன்படி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், அக்., 31ல், இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுஉள்ளது. அதில், அனைத்து மாநிலங்கள் மற்றும், யூனியன் பிரதேசங்களில், 2019 ஜன., ௧ முதல் பதிவாகும் பொதுத்துறை வாகனங்களில், அவசர காலபட்டன்கள் மற்றும், ஜி.பி.எஸ்., கருவிகளை, கட்டாயம் பொருத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசின் இந்த உத்தரவு, பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும். அச்சுறுத்தல் ஏற்படும் போது, பஸ்களில் பொருத்தப்படும் அவசர கால பட்டன்களை அவர்கள் அழுத்தினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சென்று விடும். பஸ்சில் உள்ள, ஜி.பி.எஸ்., கருவி உதவியால், பஸ் செல்லும் இடத்தை, போலீசார் கண்டறிவர்.கண்காணிப்புபஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் வழியே, அங்கு நடக்கும் குற்றங்களையும், குற்றவாளிகளையும், காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள திரையில், நேரடி காட்சிகளாக பார்க்க முடியும். மேலும், பஸ், வேறு பாதையில் கடத்தப்பட்டாலும், கண்டுபிடிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீதிக்கதை

பான்யாவின் பயணம்!

பான்யா பறக்க ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு. அதிகச் சோர்வு காரணமாக, உடம்பு தளர்ந்திருந்துச்சு. இறக்கைகள் பிய்ந்துவிடுமோனு பயமும் வந்துச்சு.

எல்லாம் ஆன்யாவை நம்பி வந்ததன் பலன். ‘நகரத்துக்குக் குடிபெயர்ந்தே ஆகணும். அங்கேதான் நல்லா வாழமுடியும். சாப்பாட்டுக்குப் பஞ்சமே இருக்காது. வயித்தை நிரப்ப, விதவிதமான தின்பண்டங்கள் கிடைக்கும். நிறைய நண்பர்களின் பழக்கம் கிடைக்கும்’ என்றெல்லாம் சொல்லி, பான்யாவின் ஆசையைத் தூண்டிவிட்டது ஆன்யா.

யார் இந்த பான்யா, ஆன்யா?

ரெண்டுமே ஈக்கள். பொறந்ததிலிருந்தே நட்போடு பழகி, இணைபிரியாத நண்பர்களா இருக்காங்க. போன வாரம் ஒருநாள், திடீர்னு ஆன்யா காணாமப்போயிட்டா. மாட்டுத் தொழுவம், கடைவீதிக் குப்பை, கசாப்புக் கடை வாசல்ன்னு தேடிப் பார்த்துக் களைச்சுப் போச்சு பான்யா.

ஆனால், வெளியூர் போயிருந்த ஆன்யா, ஒரு வாரம் கழிச்சு உற்சாகமாகத் திரும்பி வந்துச்சு. சுத்திப் பார்த்துட்டு வந்த ஊர்கள் பற்றி கதை கதையா சொல்லிச்சு.

“வா, நம்ம நகரத்துக்குப் போகலாம். பால், பழங்கள், சக்கரை, பலகாரம் எல்லாம் கிடைக்குது. ஜனத்தொகை அதிகம் உள்ள ஊர்களில் சுகமா வாழலாம். பிரச்னையே இருக்காது” என்று தேன் பூசிய வார்த்தைகளால் நண்பன் பான்யாவை மயக்கிருச்சு.

பேசிவெச்ச மாதிரியே, ரெண்டு ஈக்களும் வெளியூர் பயணத்துக்குக் கிளம்பினாங்க. வேர்த்து விறுவிறுக்கப் பறந்து பறந்து நகரத்துக்கு வந்து சேர்ந்தாங்க. குட்டியூண்டு உடம்பைத் தூக்கிட்டிப் பறக்கமுடியாத பான்யாவைப் பார்த்துச் சமாதானம் செஞ்சு பேசிச்சு ஆன்யா.

“இன்னும் கொஞ்ச தூரம்தான். பெரிய பஜாருக்குள்ளே நுழைஞ்சுடலாம். ம்ம்ம்.. சோர்ந்து போகாதே பான்யா”

“நிறுத்து, ஆசைகாட்டி ஆசைகாட்டியே பகல் முழுக்க அலைய விட்டுட்டே. நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கணும்”

கடுமையான கோபத்தில் இருந்தது பான்யா. என்னதான் செய்றது? ஆன்யா காட்டப்போற அதிசயங்களைப் பார்த்துருவோம் என்ற ஆசையும் விடலை. பசி வயிற்றைக் கிள்ளிச்சு.

“பொறுமையா இரு. பிரமாதமான விருந்து கிடைக்கும்’’ என்ற ஆன்யாவின் சமாதான வார்த்தையைக் கேட்டு ஆறுதல் அடைந்தது பான்யா.

ஈக்கள் இரண்டும் பஜாரை வந்தடைந்தன. பசும்பாலில் தயாரித்த நெய் வாசம் மூக்கைத் துளைக்க, இரண்டு ஈக்களும் நெய் விற்பனைக் கடைக்குள் நுழைந்தன. கடைக்காரர் நெய் பாத்திரத்தை மூடிவெச்சிருந்தார். வாடிக்கையாளர்கள் வரும்போது, மூடியைத் திறந்து கரண்டியால் நெய்யை எடுத்து ஊற்றிக்கொடுத்துவிட்டு மறுபடியும் மூடிவைத்தார்.

பான்யாவுக்குப் பெருத்த ஏமாற்றம். மூக்கு நிறைய வாசனை பிடித்ததுதான் மிச்சம். ஒரு துளி நெய்கூடச் சுவைக்கக் கிடைக்கவில்லை. எவ்வளவு நேரம்தான் நாக்கைச் சப்புக்கொட்டியபடி இருப்பது? “ச்சே” எனச் சலித்துக்கொண்டது.

“சரி, வா… அதோ தர்பூசணிக் கடை இருக்குது” என்றது ஆன்யா.

இரண்டு ஈக்களும் மலைபோலக் குவித்து வைக்கப்பட்டிருந்த தர்பூசணிக் கடைக்குள் நுழைந்தன. கடைக்காரர், ஒரே ஒரு பழத்தைப் பல கீற்றுகளாக வெட்டிவைத்திருந்தார். ஆனால், அவற்றை ஈக்கள் மொய்க்காதபடி வலைக்கூடையைக் கவிழ்த்திருந்தார்.

ஒரு சிறுவன் சாப்பிட்டுக் கீழே போட்ட சின்னத் துண்டில், எல்லா ஈக்களும் போட்டியிட்டு உட்கார்ந்தன. கூட்டத்துக்கு மத்தியில் நுழைய எவ்வளவோ முயற்சி செய்து பான்யா தோற்றுப்போச்சு. பசி மயக்கம்.

“நாம நெனச்சபடி ஒண்ணும் நடக்கல. நடக்கவும் நடக்காது. இதெல்லாம் வீண் ஆசை” என அலுத்துகிச்சு பான்யா.

“இப்படி யோசிசுட்டே இருந்தா பயன் இல்லை. ஒரு வாய் சாப்பிடலைன்னா செத்தா போயிருவோம். இப்படி ஓர் அனுபவமும் வாழ்க்கைக்குத் தேவைதான்” என்றது ஆன்யா.

கோடையின் கதகதப்பு குறையாத கடைத்தெருவின் மறுமுனைக்கு, ஈக்கள் இரண்டும் பறந்து கரும்புச்சாறு விற்கும் நடைவண்டியைச் அடைந்தன.

கரும்புச்சக்கை கொட்டிக்கிடந்த பிரம்புக்கூடையில், ஏராளமான ஈக்கள் உட்கார்ந்திருந்தன. ‘நீயா நானா?’ எனப் போட்டி போட்டு ஒன்றின்மேல் ஒன்று விழுந்து சண்டையிட்டபடி இருந்தன. அந்தக் காட்சியைக் கண்ட பான்யா திகைச்சுப்போய் நின்னது.

‘‘ஐயோ ஆன்யா! இதென்ன வாழ்க்கை? போட்டி, சண்டை, வம்பு, கூச்சல், குழப்பம்... இப்படி அநாகரிகமா, போட்டி நிறைந்த உலகத்தில சுகத்தை எதிர்பார்க்கிறது நல்லாயில்லே’’ என்று ஆதங்கத்தை எடுத்துச் சொன்னது பான்யா.

அதேநேரம் கரும்புச்சாறு பாத்திரத்துக்கு மேலே பறந்து வந்து உட்கார்ந்தது ஆன்யா. கடைக்காரர் தோளிலிருந்த துண்டை எடுத்து வீசினார். அவ்வளவுதான்... புயலில் சிக்கின மாதிரி பல அடிகள் தள்ளிப்போய்  விழுந்துச்சு. அதனிடம் அசைவில்லை.

ஆன்யா அருகில்போய் சில நொடிகள் கண்ணீர் விட்ட பான்யாவுக்கு அதுக்கு அப்புறம் அங்கிருக்கப் பிடிக்கல. பழைய இருப்பிடத்தை ஞாபகம்வெச்சுப் பறக்க ஆரம்பிச்சது. வழியில் ஒரு நாவல் மரத்தடியில் நசுங்கிக்கிடந்த பழத்தைச் சாப்பிட்டுப் பசியாறிச்சு.

மறுநாள் காலையில், ஒரு மாட்டுத் தொழுவத்தை வந்தடைந்துச்சு. ஒரு பாட்டி, பசுவுக்குப் புண்ணாக்கு வைத்துவிட்டு, கன்றுக்குட்டிக்குக் கையளவு வைக்கோல் வைத்தார். அவர் நகர்ந்துபோனதும், பசுவின் மடியில் பறந்துசென்று உட்கார்ந்துச்சு பான்யா. கன்றுக்குட்டி குடிச்சு மிச்சமாக ஒட்டியிருந்த ஒரு துளி பாலைக் குடிச்சதும் அதற்கு வயிறு நிரம்பியது.

“வாழ்க்கையில் நாம நிறைய எதிர்ப்புகளை உருவாக்கிக்கிறோம். அதுதான் ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் கொடுக்குது. நமக்கான தேவையை இயற்கையிடமிருந்து அளவோடு எடுத்துக்கிட்டாலே நிம்மதியா சந்தோஷமா வாழலாம் எனப் புரிஞ்சது.

பசுவுக்கும் கன்றுக்கும் நன்றி சொல்லிட்டு உற்சாகமாகப் பறந்துச்சு பான்யா.    

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைப் போராட்டம் - ஓர் அலசல் !!

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதியக்குழு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டக் களத்தில் குதித்துள்ள நிலையில் நவம்பர் 27 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த இருப்பதாக அழைப்புவிடுத்துள்ளனர். போராட்டம் மற்றும் வேலைநிறுத்தம் குறித்து ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் தியாகராஜனும், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியருமான சு.மூர்த்தியும் கூறும் கருத்துகளை இனி பார்ப்போம்…

தியாகராஜன், ஜாக்டோ ஜியோ செய்தித் தொடர்பாளர்நாங்கள் சில நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேச கூட இந்த அரசுக்கு மனமில்லை. எங்களது பிரதான கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து கடந்த இரண்டு தேர்தல்களில் ஆளும் அதிமுக அரசு தேர்தல் வாக்குறுதியை அளித்திருந்தது, இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜாக்டோ ஜியோவினால் நடத்தப்பட்ட தொடர் வேலைநிறுத்த போராட்டத்தின் விளைவாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது, தமிழகத்தின் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜரானார். அப்போது அவர் 30.11.2017க்குள் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்வது குறித்து ஏற்படுத்தப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று நடவடிக்கை மேற்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதுவரை அதை நிறைவேற்றவில்லை.

ஆக தேர்தல் வாக்குறுதி அளித்த அரசும் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்த தலைமைச் செயலாளரும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் வேறு வழியின்றி ஜாக்டோ ஜியோ மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக நீதி அரசர்கள், IAS அலுவலர்கள், IPS அலுவலர்கள் அனைவரும் 1.6.2016லிருந்து ஊதியக்குழுவின் மாற்றத்தைப் பெற்றுவிட்டனர். ஆனால், ஆசிரியர்களுக்கு மட்டும் 21 மாத நிலுவைத் தொகையினை இந்த அரசு வழங்காமல் வந்திருக்கிறது. எனவே, வேறு வழியின்றி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்திருக்கின்றோம்.

வரக்கூடிய நவம்பர் 27 முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தை நடத்தயிருக்கிறோம். அதற்கு ஆயத்தமாக அக்டோபர் 4 ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை எடுத்து போராடியிருக்கிறோம்.

தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை, இவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழக அரசு அடக்குமுறைகளை கையாளாமல் உடனடியாக எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லை எனும் பட்சத்தில் போராட்டங்கள் இதைவிட தீவிரமடையும்.

 சு.மூர்த்தி, ஆசிரியர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்ஆசி  நரியர்களின் உரிமைப் போராட்டங்கள் நடைபெறுவது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதது. உரிமைகள் அனைத்தும் வாழ்வதற்காகத்தான் கேட்கப்படுகின்றன. நம்மை ஆள்வதற்காக நாம் தேர்வு செய்த ஆட்சியாளர்களிடம்தான் நமக்கான உரிமைகளைக் கேட்டுப் போராடவும் முடியும்.

ஆனால், இங்கு ஒவ்வொரு தனிமனிதனின் கடமையும் அவரவருக்கான உரிமையை  மட்டும் கேட்டுப் போராடுவதோடு முடிந்துபோவதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு சமூக உறுப்பினனாகவும் சமூகத்தில் வாழும் பிறரால் பயனடைபவனாகவும் பிறருக்கு பயனளிப்பவனாகவும் இருக்கிறான். இதன் காரணமாகவே, பொது நலனுக்கான போராட்டத்திற்கு பங்களிப்பதிலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கடமையும் பொறுப்பும் இருக்கிறது. ஆனால், இக்கடமைகளைச் செய்தே ஆகவேண்டும் என்று யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

வாழ்நாள் முழுதும் பயனளிக்கும் அழியாத கல்வியைப் பெற ஆசிரியர்கள் துணை செய்கிறார்கள். ஆசிரியர்களுக்கு சமூகம் நன்றிக்கடன் செலுத்துவது நியாயமே. அதேசமயம், சமூகத்திற்கும் ஆசிரியரின் கடமை தேவையென சமூகம் எதிர்பார்க்கிறது. அதனால் தான், ஆசிரியர்கள் மட்டுமே ‘சமூகச் சிற்பிகள்’ என்று போற்றப்படுகிறார்கள். வகுப்பறையில் எழுத்தறிவிக்கும் வேலையைச் செய்வது, கொடுக்கப்பட்ட பாடநூல்களில் உள்ள பாடங்களைச் சொல்லிக்கொடுப்பது என்ற அளவில் மட்டும் ஓர் ஆசிரியரின் கடமை முடிந்து
விடுவதில்லை.

நாம் இன்றைக்கு மக்களாட்சி முறை சமூக அமைப்பில் வாழ்கிறோம். மக்களாட்சி சமூக அமைப்பு என்பது தனிநபரைப் பாதுகாப்பதோடு, மக்களிடையே சமத்துவத்தை வளர்ப்பதற்கும் ஒன்றிணைந்து வாழ்வதற்கும் இயற்கை வளங்கள் மட்டுமல்லாமல் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஒரு அவசியமான வழிமுறையாகும்.

மேலும், ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டிருக்கும் சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கல்வியின் பங்கே முதன்மையானது. இன்றைய தனியுைடமை சார்ந்த சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பிலான வாழ்நிலையில் மக்களாட்சி சமூக அமைப்பின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் கல்வியின் பங்கு மிகவும் முதன்மையாகிறது. கல்வியின் பங்கை நிறைவேற்றுவது ஆசிரியர்களின் செயல்பாடுகளில் உள்ளது. 

இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளை மரணிக்க வைக்கிறோம் என்றால், நாம் ஜனநாயகத்தின் எதிர்த்திசையில் செல்கிறோம் என்று பொருள். அரசுப் பள்ளிகளைக் காக்கின்ற கடமையும் ஒரு மிகப்பெரிய ஜனநாயகக் கடமைதான். ஆசிரியர் இயக்கங்கள் இக்கடமையை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்ளவேண்டும். சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது என்பதை ஆசிரியர்களும் மறந்துவிடக்கூடாது.

10,+1,+2 HALF YEARLY EXAMINATION TIME TABLE DECEMBER -2018

ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை:

வால்பாறை: வால்பாறை அருகே, மாணவர்களே இல்லாத பள்ளியில், தலைமை ஆசிரியை உட்பட இரண்டு ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர்.
கோவை மாவட்டம், வால்பாறை ஒன்றியம், சின்னக்கல்லாரில், ஆதிதிராவிடர் அரசு நலப் பள்ளி, 1943ம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு, இந்தப் பள்ளியில், ஒரே ஒரு மாணவிக்காக, ஒரு தலைமை ஆசிரியை உட்பட இரண்டு ஆசிரியைகள் பணியாற்றினர். அந்த மாணவி, இந்த கல்வியாண்டில் சின்கோனா இரண்டாம் பிரிவு அரசு நலப் பள்ளியில், நான்காம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.
இருந்த ஒரே மாணவியும், வேறு பள்ளிக்கு சென்ற நிலையில், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை என இருவர் மட்டும், தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அவர்களை, தேவை இருக்கும் பள்ளிகளுக்கு மாற்றம் செய்யாததால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

பொள்ளாச்சி ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் ஜெயந்தி கூறுகையில், ''மாணவர்கள் இல்லாததால், பள்ளியை மூட முடிவு செய்துள்ளோம். ஆசிரியைகளை வேறு பள்ளிக்கு பணிமாற்றம் செய்வது குறித்து, கல்வித் துறைக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியை நிரந்தரமாக மூடுவது குறித்து, சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.

பிளஸ் 2 துணை தேர்வு, விடைத்தாள் நகல், இன்று வெளியீடு :

பிளஸ் 2 துணை தேர்வில், விடைத்தாள் நகல், இன்று வெளியிடப்படுகிறது.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:அக்டோபரில், பிளஸ் 2 துணை தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கோரியவர்கள், இன்று பிற்பகல் முதல்,scan.tndge.inஎன்ற, இணையதளத்தில், விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம்.மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதளத்தில், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின், இரண்டு நகல்கள் எடுத்து, நாளை முதல், 15ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீடு கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும். மேலும் விபரங்களை, முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரங்களை, தயார் செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்:

லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. தமிழகத்தில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரங்களை, தயார் செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடிதம் எழுதி உள்ளார்.மத்தியில் ஆட்சியில் உள்ள, பா.ஜ., அரசின் பதவி காலம், 2019 மே மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே, 2019 ஏப்ரல் அல்லது அதற்கு முன், லோக்சபா தேர்தல் நடப்பது உறுதியாகி உள்ளது.லோக்சபா தேர்தலுக்கு, அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதேபோல், தேர்தல் கமிஷனும், தேர்தலை நடத்த தயாராகி வருகிறது.அதன்படி, தமிழகத்திலும் தேர்தல் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளை கண்காணிக்க, மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், மாஜிஸ்ட்ரேட் அந்தஸ்துள்ள அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.அதே போல, ஒவ்வொரு தொகுதிக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள்நியமிக்கப்படுவர்.

அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும், அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.இப்பணியில், மாநில, மத்திய அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.அவ்வாறு, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள் குறித்த விபரங்களை, தயார் செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடிதம் அனுப்பி உள்ளார்.அதன் அடிப்படையில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள் பெயர், பணிபுரியும் துறை, அலுவலக முகவரி போன்ற விபரங்களோடு, புகைப்படத்தையும், உடனடியாக, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பும்படி, அனைத்து துறை தலைவர்களுக்கும், மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்

மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் பயிலும் இணைப்பு பயிற்சி மையங்களில் அனைத்து குழந்தைகளுக்கும் அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் ..புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு...

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி மையத் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான 9 இணைப்பு பயிற்சி மையங்கள்,மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான 13 இணைப்பு பயிற்சி மையங்கள் ,மற்றும்  3 உண்டு உறைவிடப் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன..

இணைப்பு பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் மற்றும் உண்டு உறைவிடப் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூர் நோக்கு பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட மாவட்ட திட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது..

பயிற்சியினை தொடங்கி வைத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் பயிலும்   இணைப்பு பயிற்சி மையங்களில் அனைத்துக் குழந்தைகளுக்கும் அரசின்  நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும்.. தாயுள்ளத்தோடு அம்மாணவர்களின  கல்வி முன்னேற்றத்திற்கு மாவட்ட திட்ட அலுவலகத்துடன் இணைந்து பாடுபட வேண்டும் என்றார்.

பின்னர் அம்மையங்களின்  பதிவேடுதல் பராமரித்தல் மற்றும் உள்ளூர்  வளங்களைப் பயன்படுத்தி மையத்தின் உட்கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் கல்வி சார்ந்த வசதிகளை மேற்கொள்வது பற்றிய ஆலோசனைகளை வழங்கி 3 உண்டு உறைவிடப் பயிற்சி மையங்களுக்கு 2018-2019 ஆம் ஆண்டிற்கான அனுமதி ஆணையை வழங்கினார்..

இப்பயிற்சியில் உதவி திட்ட அலுவலர் ஆர் இரவிச்சந்திரன் கலந்து கொண்டு மையத்தில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துதல் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

பயிற்சியின் கருத்தாளர்களாக பொன்னமராவதி வட்டார ஒருங்கிணைப்பாளர் சரவணன்,மற்றும் பனங்குளம் வடக்கு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் கருப்பையன் ஆகியோர் செயல்பட்டனர்.முடிவில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் நன்றி கூறினார்.

நீதிக்கதை

நான் கத்தவே இல்லை !


கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி ஒருவர், “”நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்!” என்றார்.

கஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து, “”நாங்கள் வரவில்லை,” என்றான்.

எப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, “”நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே?” என்றார்.

“”சம்மதம்!” என்றான் கஞ்சன். தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்; விமானம் பறக்கத் தொடங்கியது.

வானத்தில் விமானம் குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை. வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.

கஞ்சனின் கையைக் குலுக்கி, “”ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத் தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள்! என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது?” என்று கேட்டார் விமானி.

“”நான் கூட, ஒரே ஒரு சமயம், என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ முயன்று அடக்கிக் கொண்டேன்!” என்றான் கஞ்சன்.

“”எப்போது?” என்று கேட்டார் விமானி.

“”என் மனைவி, விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது!” என்றான் கஞ்சன்.

மயங்கி விழுந்தார் விமானி.

உலகிலேயே அதிக பெண் விமானிகளை கொண்ட விமான நிறுவனம் எது?

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில் புதிய விமானிகளை, குறிப்பாக பெண் விமானிகளை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
கடந்த சில வருடங்களாக சுற்றுலா சார்ந்த விடயங்களில் மக்கள் அதிகளவு பணத்தை செலவழிக்கும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது.
உலக சுற்றுலா கழகத்தின் அறிக்கையின்படி, கடந்த 2010ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டு உலகளவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 350 மில்லியன் அதிகரித்துள்ளது.
எந்த விமான சேவை நிறுவனத்தில் அதிக பெண் விமானிகள் பணிபுரிகிறார்கள்?


உலகம் முழுவதுமுள்ள வர்த்தக விமானங்களின் விமானிகளில் வெறும் 5.18 சதவீதத்தினரே பெண்களாக உள்ளனர்.
உலகிலேயே இந்தியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள்தான் அதிகளவில் பெண் விமானிகளை பணியில் சேர்த்துக்கொள்கிறார்கள். அதாவது, மொத்த இந்திய விமானிகளில் 12.4 சதவீதம் பேர் பெண்களாவர்.
• 
குறிப்பாக பார்த்தோமானால், இந்தியாவை சேர்ந்த உள்நாட்டு விமான சேவை நிறுவனமான ஜூம் ஏர் உலகில் அதிக பெண் விமானிகளை கொண்ட நிறுவனமாக விளங்குகிறது. அதாவது, அந்நிறுவனத்திலுள்ள 30 விமானிகளில் ஒன்பது பேர் பெண் விமானிகள் என்று சர்வதேச பெண் விமானிகள் அமைப்பு கூறுகிறது.
எதிர்காலத்தில் விமானிகளுக்கு ஏற்படவுள்ள கடுமையான பற்றாற்குறையை சமாளிக்கும் வகையில் இந்தியா விமான சேவை நிறுவனங்கள், பெண்கள் விமானியாவதற்கு அதிகப்படியான ஊக்கத்தை அளித்து வருவதாக சர்வதேச பெண் விமானிகள் அமைப்பின் தலைவர் கேத்தி மெக்கல்லோ கூறுகிறார்.
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் வர்த்தகரீதியான விமான பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயருமென்று போயிங் நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
விமானிகளின் சராசரி ஊதியம் என்ன?
பொதுவாக விமானிகள் ஒவ்வொரு நாளும் குறுகிய அல்லது நீண்டதூர இடங்களுக்கு பயணிகள் விமானத்தையோ அல்லது சரக்கு விமானங்களையோ இயக்குகிறார்கள்.
வர்த்தக விமானிகளின் ஊதியமானது அவர்கள் பணிபுரியும் விமான நிறுவனம், அவர்கள் இயக்கும் விமானத்தின் வகை மற்றும் அவர்களது அனுபவத்தை பொறுத்து அமையும்.
சராசரியாக 20,000 முதல் 30,000 பவுண்டுகள் வரையில் அவர்களது வருமானம் இருக்கும்.

மேற்குறிப்பிட்டுள்ள அட்டவணையில் பிரிட்டனில் விமானிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் துறை வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
மிகுந்த அனுபவம் கொண்ட விமானிகளுக்கு 1,40,000 பவுண்டுகளுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படுகிறது.
விமானிகளின் ஊதியத்தில் பாலின பாகுபாடு உள்ளதா?
பிரிட்டன் வரலாற்றில் முதல் முறையாக 250 பணியாளர்களுக்கு மேல் கொண்ட விமான நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் ஆண்-பெண்களுக்கு இடையே ஊதியத்தில் நிலவும் பாலின பாகுபாடு குறித்த அறிக்கையை வெளியிட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டது.

71.8 சதவீதத்துடன் ரியான்ஆர் நிறுவனம் அதிகளவிலான பாலின ஊதிய இடைவெளியை கொண்டுள்ளது. ஈசிஜெட் நிறுவனத்தில் 45.5 சதவீதம் பாலின இடைவெளி நிலவும் நிலையில், குறிப்பிட்ட சில பணிகளில் ஆண்கள்-பெண்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தது.
மேலும், வரும் 2020ஆம் ஆண்டிற்குள் தங்களது விமான நிறுவனத்தில் 20 சதவீத பெண் விமானிகளை கொள்வதை இலக்காக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு

நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கஜா புயலானது தற்போது நாகைக்கு கடகிழக்கே 770 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது சென்னை - நாகை இடையே நவம்பர்-15 அன்று கரையை கடக்கும். இதன் கரணமாக நவம்பர் 14-ம் தேதி இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரை கனமழை பெய்யக் கூடும்.

ஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு 80-90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுக்கூடும். சில சமயங்களில் 100 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். 

தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கடல் அலையின் உயரம் இயல்பை விட ஒரு மீட்டர் அதிகமாக இருக்கும். மீனவர்கள் வரும் 15-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்  8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  கடலூர் , விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய  8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்  இதற்கான அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

11/11/18

சுட்டி விகடன் மூலம் போட்டித்தேர்வினை நடத்துதல் -சார்பு

FLASH NEWS : NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் தகவல்களை பதிவேற்றுவதில் சிக்கல் பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்ளுமா?

எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருடந்தோறும் டிசம்பர் மாதம் NMMS EXAM எனும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம் தேர்வு நடைபெறுகிறது.



சமீபத்தில் 2017-18 ல் நடைபெற்ற NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் பட்டியலை பள்ளி அளவில் பதிவேற்றம் செய்வதற்கு அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது ஆனால் 31க்குள் இணையதளம் சரிவர இயங்காததாலும்,  பல்வேறு மாவட்டங்களில் சில பள்ளிகளில் மாணவர்களின் தகவல்களை பதிவேற்றினாலும் அதில் submit என்ற ஆப்ஷன் வராததாலும் அவர்களுடைய விண்ணப்பமானது SAVE & DRAFT நிலையில் தங்கி நிற்கிறது. சில விண்ணப்பங்களில் கல்வித் தொகை பெறுவதற்கான scheme option open ஆகவில்லை.மேற்கண்ட காரணங்களால் மாணவர்களுடைய விண்ணப்பமானது மாவட்ட அளவில் FORWARD செய்யமுடியாமல் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆனது பூர்த்தி செய்ய முடியாமல் கல்வி உதவித்தொகை பெறுவது சிக்கலாகி உள்ளது.
 பள்ளி அளவில் மாணவர்களின் தகவல் உள்ளீடு செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 31 முடிந்துவிட்டதால் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் தகவல்களை உள்ளீடு செய்வது எவ்வாறு என்று  திணறி வருகிறார்கள்.

ஆனால் இதைப் பற்றி தகவல்களை பல்வேறு மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகங்களில் எடுத்துக்கூறியும் எந்த ஒரு தெளிவான தகவலும் கிடைக்கவில்லை என்று தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.

NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் பட்டியலை மாவட்ட அளவில் இருந்து மாநில அளவில் ஃபார்வர்டு செய்வதற்கு இந்த மாதம் 15ம் தேதி இறுதி நாள் என்பதால் அவர்களுடைய ஊக்கத்தொகை கிடைக்குமா??? இதனை பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்ளுமா???

மேற்கண்ட பிரச்சினைக்கான தீர்வினை விரைவில் தீர்த்து மாணவர்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிகள் அளவில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.

6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஜாக்டோ-ஜியோவில் இருந்து பிரிந்த சங்கத்தினர் மீண்டும் இணைந்தனர்: 15ம் தேதி முறையான அறிவிப்பு :

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனித் தனியாக ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தி வந்தனர். அரசு தரப்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் நீடித்ததால்,  கடந்த 5 ஆண்டுக்கு முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் என 22க்கும் மேற்பட்ட சங்கத்தினர் ஒன்றாக இணைந்து மீண்டும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை புதுப்பித்தனர். அதன் மூலம் அனைத்து சங்கங்களும்  ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு எடுத்து களத்தில்  இறங்கினர்.  நகர, ஒன்றிய, வட்ட, மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 3 ஆண்டுகளாக தங்கள் போராட்ட களத்தை மாற்றி அமைத்தனர். அதன் ஒரு அம்சம்தான், தொடர் வேலை நிறுத்தப்  போராட்டம். கடந்த ஆண்டில் தீவிரம் அடைந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் அரசு கலக்கம் அடைந்தது.

வேலை நிறுத்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்த பெரும் முயற்சி எடுத்த அரசு, தனது வியூகத்தை வேறு திசையில் திருப்பியது. ஒன்று பேச்சுவார்த்தை, மற்றொன்று தனியார் மூலம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு  தொடுத்தது. ஈரோட்டில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அத்துடன் ஜாக்டோ-ஜியோவிலும் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, ஜாக்டோ-ஜியோவில் உறுதியாக நின்றவர்கள் ஒன்று திரண்டு தொடர் வேலை நிறுத்தப்  போராட்டத்தை நடத்தினர். அதன் மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  ஜாக்டோ-ஜியோ பிளவு காரணமாக போராட்டம் கலகலத்துவிடும் என்று எதிர்பார்த்த அரசுக்கு இந்த ஆண்டு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்மட்டக் குழுவில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில்,  நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் மீண்டும் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்தது.
பிரிந்து சென்று சங்கங்கள் தனியாகவும், ஜாக்டோ-ஜியோ தனியாகவும் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த முயிற்சி  எடுத்தும் பலன் அளிக்கவில்லை. அதே நேரத்தில் புதிய சம்பள உயர்வை அரசு அறிவித்தது. அதில் பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதால் சங்கங்கள் திகைத்து நின்றன.  இந்நிலையில்தான் மீண்டும் அனைத்து சங்கத்தினரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்ற கருத்து உருவானது. இதையடுத்து, ஒன்றாக இணைவது குறித்து கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 9ம் தேதி  பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நேற்று சென்னை வேப்பேரியில் ஜாக்டோ-ஜியோ மற்றும் பிரிந்து சென்ற சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் சுப்ரமணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ரெங்கராஜன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சேகர், தமிழக ஆசிரியர்  கூட்டணியின் சார்பில் வின்சென்ட், அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் செல்வராஜ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மகேந்திரன், தொழில் கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேரு ஆகியோர் மற்றும்  ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் 6 பேர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நேற்று காலை நடந்த பேச்சுவார்த்தையில், பிரிந்து சென்ற மேற்கண்ட சங்கங்கள் அனைத்தும் ஜாக்டோ-ஜியோவில் இணைந்ததாக  அறிவித்தனர்.
ஒன்றாக இணைந்தது மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து 15ம் தேதி முறையாக அறிவிப்பதாக தெரிவித்தனர். தற்போது இணைந்தவர்களும் ஜாக்டோ-ஜியோவில் ஒருங்கிணைப்பாளர்களாக  சேர்க்கப்பட்டனர். அதன்படி தற்போது 20 ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதுதவிர இன்னும் ஒரு சில சங்கங்களை சேர்ப்பது குறித்து 15ம் தேதி கூட்டத்தில் அறிவிக்கப்படும் என  ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்

தகவல் அறியும் சட்டத்தில் 10, பிளஸ்2 விடைத்தாள் நகல் பெற பக்கத்துக்கு 2 கட்டணம் :

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடக்கிறது. மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.  தேர்வு முடிவுகளின்படி மேற்கண்ட இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அல்லது மீண்டும் தேர்வு எழுத வேண்டிய மாணவ, மாணவியர் பட்டியல் வெளியிடப்படும்.  தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண்களில் சந்தேகம் இருந்தால் குறிப்பிட்ட தேதிகளில் விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படுவார்கள். அதற்கென தனியாக கட்டணம்  செலுத்த வேண்டும்.
இந்த நடைமுறையில் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் கூடுதலாக இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விடைத்தாள் நகல் பார்க்க தனியாக கட்டணம்  வசூலிக்கப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது.  இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையில் விடைத்தாள் நகல் பெறுவதற்காக சிபிஎஸ்இ வைத்துள்ள  நடைமுறைகள் தனியாக உள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விடைத்தாள் நகல் பார்க்க விரும்புவோர் பக்கத்துக்கு ₹2, விண்ணப்ப கட்டணம் ₹10 செலுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி,  இரண்டு நடைமுறைகளுக்கும் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதி மன்றம் தெரிவித்துள்ளது

Lok sabha Election 2019 - Personal Polling Application Form:

ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி எப்போது?

ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு, அடுத்தகட்டமாக அரசின் நடவடிக்கை இல்லாததால், ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அரசுப்பள்ளி மாணவர்கள், குடும்பச்சூழல், பொருளாதார வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மாணவர்களுக்கு, உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க, நடமாடும் ஆலோசனை மையத்திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.

அதுபோல, ஆசிரியர்களுக்கும் மாணவர்களை கையாள்வது, கற்பித்தல் மற்றும் பள்ளிச்சூழலில் ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளுக்கு, ஆலோசனை வழங்க வேண்டுமென, ஆசிரியர் சங்கங் களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நடப்பாண்டில், ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான பயிற்சி வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.
அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி திட்டத்தையும் இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப் பட்டு உள்ளது.கடந்த கல்வியாண்டு வரை அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. நடப்பாண்டில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப்பட்டதால், பயிற்சி வழங்குவதிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், '' மாணவர்களுக்கு இருப்பதுபோல், ஆசிரியர்களும், பல்வேறு உளவியல் பிரச்னைகளை பள்ளிகளில் சந்திக்கின்றனர். இதற்கான தீர்வாக இந்த பயிற்சி வகுப்புகள் இருக்கும் என, எதிர்பார்த்தோம். அறிவிப்போடு, அடுத்தகட்டமாக, பயிற்சி குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.


இதனால், ஆசிரியர்களும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். பயிற்சி வழங்கும் நடவடிக்கை களை விரைவு படுத்தினால், ஆசிரியர்களுக்கு மாணவர்களை தேர்வுகளுக்கு வழிநடத்தவும், மன அழுத்தம் இல்லாமல் பணிசெய்யவும் பயனுள்ளதாக இருக்கும்,''என்றார்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சிறப்பாசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்கள் சார்பாக சில கோரிக்கைகள் !

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்கள் சார்பாக சில கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
குற்றச்சாட்டை சுட்டிக் காட்டி னால் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாங்கள் கூறிய போது தேர்வர்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய வார்த்தையாக கருதினார்கள் ஆனால் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறுவிதமான குளறுபடிகள் குறித்து செய்தி ஊடகங்களிலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திலும் நூற்றுக்கணக்கானதேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் தயாறித்து வெளியிட்ட உத்தேச பட்டியலில் உள்ள குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அதுவும் குறிப்பாக ஓவிய ஆசிரியர்பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் free hand out line model drawing highergreade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் என்று முறைகேடாக தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழ்வழி சான்றிதழ் பெற்று தகுதி யற்ற நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு 1325 பணி இடங்கள் முழுமையாக பட்டியல் வெளியீடு செய்யாமல் தகுதிவாய்ந்த நபர்கள் மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் இருக்கும் நிலையில் RESERVED என்று நிரப்பாமல் நிறத்தியுள்ளது.போன்ற பல்வேறு குளறுபடி நிலவிவரும் நிலையில் இன்று பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஒன்றுமே தெரியாதவர் போல் பேட்டி அளித்துள்ளார் என்பதை நினைக்கும் போது தேர்வர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியமே தமிழ் வழி சான்றிதழில் குழப்பத்தில் உள்ளதை ஏற்றுக்கொண்டு பரிசீலனை செய்து பதிலளிக்க தேர்வு வாரியம் கூடி முடிவு எடுக்கும் என்று சொல்லும்போது ஒரு பொறுப்புள்ள பள்ளி கல்வி துறை அமைச்சர் இவ்வாறு எந்த குளறுபடியும் இல்லைஎன்று கூறுவது ஏற்புடையது அல்ல. பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர்கள் நீதிமன்றங்களுக்கு சென்று நிருபிக்கும் பட்சத்தில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் கருத்தாகும்.ஆகவே சிரப்பாசிரியர் நியமனத்தில் சற்று அதிக அக்கறை கொண்டு ஆராய்ந்து பார்த்து பள்ளி கல்வி அமைச்சர் என்ற முறையில் ஆரம்பம் முதல் இன்று வரையிலும் உத்தேச பட்டியல் வெளியீடு செய்து வெளியிட்டது வரை ஆசிரியர் தேர்வுவாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் என்னென்ன விதிமுறைகள் சொல்லப்படுகிறது.
எப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறது போன்ற அனைத்து விதமான விஷயங்களையும் அலசி ஆராய்ந்து முடிவெடுத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி யார் தவறு செய்திருந்தாலும் தன்டிக்கப்பட வேண்டிய வர்களே.என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சிரப்பாசிரியர் நியமனம் பொருத்தவரை சரியான தீர்வு எடுப்பார் என்று அனைவராலும் அறியப்பட்ட ஒரு செய்தி ஆகவே ஏற்கனவே தாங்கள் கூறிய போது ஆய்வக உதவியாளர் பணி போல் சற்று தாமதமாக ஆனாலும் யாரும் பாதிக்கப்படாமல் முறையாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளதை நினைவுகூர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதி வாய்ந்ததேர்வர் களின் கருத்தாகும்.தாங்கள் கூறியுள்ளது முன்னால் ராணுவத்தினர் விதவைகள் இட ஒதுக்கீடு கோருவர்கள் போன்றவைகள் மிகவும் அரிதாகவே உள்ளது அது முக்கிய பிரச்சினையாக ஒன்று இரண்டு இருந்தாலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் சுட்டிக் காட்டப்படாத ஓவிய ஆசிரியர் பணிக்கு தமிழ் வழி சான்றிதழ் பிரச்சினை பிரதானமாக இரண்டு மாத காலம் வரை தீர்வு காணப்படாத நிலையில் உள்ளது.ஆசிரியர் தேர்வுவாரியத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது இது வரையில் எந்தவொரு பதிலும் இல்லை.பள்ளிகல்வி அமைச்சராக இருக்கும் தங்களிடமிருந்து இப்படிப்பட்ட பதிலை இதுவரை யாருமே எதிர்பார்க்காத வகையில் அமைந்துள்ளது.இது சரியல்ல தகுந்தமுறையில் தங்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
மேலும் ஒன்றுமே தவறு இல்லை இந்நிலையில் ஓய்வு பெற்ற அலுவளர் ஒருவரது குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று குறிப்பிட்டு காட்டப் பட்டுள்ளது.இதையும் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டும். இந்த பதிவு தகுதிவாய்ந்த தேர்வர்கள் இணைந்து பதிவு செய்து வெளியிட்டது.உரிய பதில் அளிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதி வாய்ந்த வர்களின் பணிவான வேண்டுகோள்.