யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/12/18

பனையின் சிறப்பு பற்றிய ஒரு தொடர் பகிர்வு."---உடல்நலம் மருத்துவம்




 1.எவ்வாறு இப்படி பனை மட்டுமே சாய்ந்து விழாமல் உறுதியாய் நிமிர்ந்து நிக்கின்றது???

பனை தனது வேரை அதன் உயரத்தை விட இரண்டு மடங்கு நேராக நிலத்தில் ஊடுருவி நிற்கும்.
(மரம் 50 அடி உயரம் இருப்பின் அதன் வேர் 100 அடி!!!)

பனை புல் போன்று வளைத்து கொடுத்து நிமிர்ந்து விடும்!!!
வேரின் அடி முதல் மரத்தின் உச்சி வரை வளையும் தண்மையுடைய உறுதியான  தண்டுப் பகுதி இருப்பதால் எந்த புயலும் பனையை வேரோடு சாய்ப்பது சாத்தியம் அறிது!!!

 2.எங்கனம் நிலத்தடி நீரை காக்கிறது???

பனையின் வேர் பகுதி மூன்று அடுக்குகளைக் கொண்டது.

முதல் அடுக்கு மழை நீரை உறிஞ்சும் சிறு சிறு துளைகளைக் கொண்டு மழை நீரை உறிஞ்சி பஞ்சு போன்ற இரண்டாவது அடுக்கில் சேமித்து பாதுகாக்கும்!!!
மூன்றாம் அடுக்கு நீரையும் சத்துக்களையும் மரம் முழுவதும் அனுப்பும் அடுக்கு.

பனை சிறிய மழையில் கிடைக்கும் நீரையும் தனது உச்சி மட்டைகளின் மூலம் வீண் செய்யாமல் மரத்தின் வழியே தனது வேரில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது!!!
( பனை ஏறும் மீனைப் பார்த்து ரசித்தவர்களுக்கு இந்த இரகசியம் புரியும்!.)

ஒரு பனை குறைந்த பட்சம்10000 லிட்டர் நீரை சேமித்து வைக்கும் ஆற்றல் படைத்தது!!!

இதன் மகத்துவம் புரிந்த நம் பாட்டன், பூட்டன்கள் பூமியில் வரப்புயர்த்தி அதில் வரிசையாக பனை நட்டனர்.
உயிர் காக்கும்
" உயிர் வேலி" அமைத்தனர்.

மீண்டும் மீண்டும் நினைவில் வைப்போம் "உயிர் வேலி".

 வரப்புயர நீர் உயரும்
''வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோனுயர்வான்''
என்று -அழகாய் அர்த்தத்துடன்- பாடினால் நம் ஔவைக் கிளவி!!!

பனைகள் நிமிர்ந்த பூமியில் நிலத்தடி நீர் வற்றாது!!!

 ஆறு, குளம், குட்டை,ஏரி,வரப்பு, வாய்க்கால்,கிணறு மற்றும் பல பகுதிகளில் நாம் பார்த்த நம் பாட்டன் வைத்த பனைகள் எங்கே???

அடுத்த பதிவில்...

பனை வான் மழையை ஈர்க்கும் திறன் வாய்தது... எப்படி???

ஏன் பனை பல்லுயிர் பெறுக்கும் கற்ப்பக விருட்சம் ???...

பதில் அடுத்த பதிவில்.....

பதிலளித்து,
இந்த தொடரில் நீங்களும் பங்கு பெறுங்கள்.

பனையோடு பயணம் தொடரட்டும்.

பன்னிரு திரளை உப்பு மருந்துகள்----உடல்நலம் மருத்துவம்


பன்னிரு திரளை உப்பு மருந்துகள்
 The Twelve Tissue Remedies

முன்னுரை :

நோயின் சுவடு ஏதும் இல்லாமல் முற்றிலும் ஒழிக்கின்ற ஓமியோபதி மருத்துவ முறைக்கும், ஏனைய பிற மருத்துவ முறைகளுக்கும் இடைப்பட்டதாகவும் குறிக்கத்தக்க குறையேதும் இல்லாததாகவும் அமைந்திருப்பது திரளை உப்பு மருத்துவம் ஆகும்.
ஓமியோபதி மருத்துவர்களுக்குத் துணை மருத்துவமுறையாக உள்ள இம் மருத்துவம், அந் நிலையிலேயே நில்லாமல் வீட்டு மருத்துவ முறையாகவும் பயன்படுதல் வேண்டும்.

 குறிப்புகள் :

மருத்துவ மேதை சுசுலர் ஓமியோபதி மருத்துவ முறை கண்டுபிடிப்பாளர் மாமேதை சாமுவேல் ஆனிமான் தோன்றிய அதே செருமன் நாட்டில் ஒல்டன்பர்க்கு என்னுமிடத்தில் தோன்றியவர் மருத்துவர் மெட்.டபிள்யூ. எச்.சுசுலர் என்பவர் ஆவர்.
அவர் மரபுசார் மருத்துவ கல்விக்குப் பின்னர் ஓமியோபதி மருத்துவ முறைக்கு மாறியவர். இவரே பன்னிரு திரளை உப்பு மருத்துவ முறையை உருவாக்கித் தந்தவர். இதனை அவர் உயிர் வேதியியல் மருத்துவமுறை எனக் குறித்தார்.

 உயிரணுக்களும் குருதியும்

நமது உடம்பில் உள்ள எல்லா உயிரணுக்களுக்கும் அவற்றிற்கேற்ற ஊட்டத்தை எடுத்துச் சென்று வழங்குவது குருதி.
குருதியை ஆராய்ந்து அதன் உள்ளடக்கப் பொருள்கள் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. குருதியில் உள்ளவை உறுப்புச் சார்பின் (Organic), உறுப்புச் சார்பற்றன (Inorganic) என இரண்டாகப் பகுக்கப் பெற்றன. அவை

 உறுப்புச் சார்பானவை 
1. கொழுப்பு
2. சர்க்கரை
3. வெண்புரதம்

 உறுப்புச் சார்பற்றவை
1. நீர்
2. சோடியம் குளோரைடு
3. கால்சியம் புளோரைடு
4. சிலிசிக் ஆசிடு
5. அயம்
6. கால்சியம்
7. மக்னீசியம்
8. சோடியம்
9. பொட்டாசியம

 உறுப்புச் சார்பற்றவற்றுள் நீரைத் தவிர எஞ்சியவை அவற்றுள் கூட்டுப் பொருள்களுடன் பின் வருமாறு பன்னிரெண்டாக உள்ளன.

1. கல்காரியா ஃபுளோரிகம்
2. கல்காரியா பாசுபாரிகம்
3. கல்காரியா சல்பூரிகம்
4. பெரம் பாசுபாரிகம்
5. காலி மூரியாடிகம்
6. காலி பாசுபாரிகம்
7. காலி சல்பூரிகம்
8. மக்னிசீயம் பாசுபாரிகம்
9. நேட்ரம் மூரியாடிகம்
10. நேட்ரம் பாசுபாரிகம்
11. நேட்ரம் சல்பூரிகம்
12. சைலீசியா

இக் குருதிப் பொருள்களில் ஐந்து விழுக்காட்டளவில் உள்ள உறுப்புச் சார்பிலாப் பொருள்கள் இன்றேல் ஏனையவை இயக்கமற்ற தேக்கநிலையை அடைந்தும் கட்டுக் குலைந்தும் அழிந்துபடும். அவ்வாறு அவை கெடாமல் கட்டிக் காத்தும் அவற்றை இயக்கியும் காப்பவை ஐந்து விழுக்காடு உறுப்புச் சார்பிலாப் பொருள்களேயாதலால் அவற்றின் சீர்மையும் சமநிலையும் பாதிக்கப்படின் நோய்த் துன்பங்கள் உண்டாகும் என்பதும் வெளிப்படையாகிறது.

 திரளை உப்பு மருந்துகள்

இப் பன்னிரெண்டு மருந்துகளும் திரளை உப்பு மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் ஆகிய இரண்டு முறைகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.

இத்திரளை உப்பு மருந்துகளைப் பயன்படுத்தியவர்கள் ஓமியோபதி மருத்துவர்களாகவும் இருந்தனர். அவர்கள் ஓமியோ, திரளை உப்பு மருந்துகளைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தினர்.

 1. கல்காரியா ஃபுளோரிகம்  நெகிழ்வுத் திரளை அணுக்களுக்குரியது

 2. கல்காரியா பாசுபாரிகம்  எலும்பு அணுக்களுக்கு உரியது

 *3. கல்காரியா சல்பூரிகம்  சீழ்கட்டும் நிலைகளுக்கு பயன்படுகிறது

 *4. பெரம் பாசுபாரிகம்  குருதி அணுக்கள், தசை அணுக்கள் 
முதலானவற்றின் உட்பொருளாக காணப்படுகிறது

 5. காலி மூரியாடிகம்  நரம்பு அணுக்களில் காணப்படும் உறுப்புச் சார்பிலாப் பொருள் ஆகிய மெக்னீசியம் பாசுபாரிகம், பொட்டாசியம் பாசுபாரிகம், கால்சிய்ம் என்னும் இவை பொட்டாசியம் குளோரைடு
என்பதோடு சேர்ந்து தசையணுக்களில் உள்ளன.

 6. காலி பாசுபாரிகம்  மூளை, நரம்புகள், தசைகள், குருதி அணுக்கள், ஆகியவற்றில் உள்ளது. மூளை அசதி, மூளையில் அடிபடுவதால் உண்டாகும் பாதிப்புக்கு இது மருந்தாகக் கூடும்.

 7. காலி சல்ஃபூரிகம்  மேற் புறத் தோல், தோலின் அடுக்கு ஆகியவற்றின் செயல்பாடுகளுக்குச் காலி சல்ஃபூரிகம் உரியதாகும்.

 8. மெக்னீசியம் பாசுபாரிகம்  இது தசை நரம்பு திரளைகளில் உள்ள கனிமப் பொருளாகும். இஃது எலும்புகளில் உள்ளது.

 *9. நேட்ரம் மூரியாடிகம்  உணவு உப்பு உடம்பின் நீரியல் பகுதி, திண்மைப் பகுதி ஆகிய எல்லாவற்றிலும் உள்ளது.

 10. நேட்ரம் பாசுபாரிகம்  மிகையான பால் அமிலத்தால் உண்டாகும் நோய்களுக்கு இவை தேவைப்படுகின்றன.

 11. நேட்ரம் சல்பூரிகம்   கிளாபர் உப்பு என்னும் சோடியம் சல்ஃபேட்டும், உணவு உப்பு ஆகிய சோடியம் குளோரைடும் எதிர் நிலையில்  செயலாற்றுகின்றன. உயிர் அணுக்களில் சேர்ந்த நீரைச் சோடியம் சல்ஃபேடு வெளியேற்றுகின்றது.

 12. சைலீசியா  இணைப்புத் திரளைகளிலும், தோலிலும்,
முடியிலும் நகங்களிலும் சிலிகா அமைந்துள்ளது

நோய் அறிகுறிகளை நன்கு அறிந்த பின்னும் அத்தகைய அறிகுறிகளைக் கொண்ட பல மருந்துகளுள்ளும் உரிய ஒரு மருந்தை வேறுபடுத்தித் தேர்ந்து கொள்வதாலேயே அந் நோயை மிக விரைந்து போக்க முடிகிறது.

பன்றிக் கொழுப்புக் கலவை கட்டாயம் பார்க்கவும் ---உடல்நலம் மருத்துவம்




NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. ___________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்பிள்ளைக்கு கூட ஆசையாக கொடுக்கிறோம்?
_________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
__________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

ஹிந்தி ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
____________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.

கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !