யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/11/15

11,000 மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது

மதுரை சர்வேயர் காலனியில் உள்ள மகாத்மா மாண்டிச்சோரி பள்ளியில் குழந்தைகள்தின விழாவையொட்டி மகாத்மா பள்ளிகள், பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சார்பில் ஆந்திர மாநிலத்தின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ‘கலாம்காரி’ஓவியம் வரையும் போட்டி நேற்று நடைபெற்றது. இதற்கு மதுரை பாத்திமா கல்லூரி முதல்வர் பாத்திமா மேரி, உயர் நீதிமன்ற நோட்டரி வழக்கறிஞர் திரவிய நாதன் நடுவர்களாக இருந்தனர்.


இதில் மதுரையில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 11,156 மாணவ, மாணவியர் ஒரே இடத்தில் அமர்ந்து கலாம்காரி ஓவியம் வரைந்தனர்.இதற்கு முன் இவ்வளவு அதிகமான குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து இந்த குறிப்பிட்ட ஓவியத்தை வரைந்ததில்லை. அதனால், இந்த ஓவிய நிகழ்ச்சி லிம்கா சாதனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இது குறித்து இந்த ஓவியப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் பள்ளிகளுடைய சூப்பர் டீச்சர் சியாமளா தேவி கூறுகையில், “தமிழ்நாட்டுக்கு தஞ்சை ஓவியம் எவ்வளவு முக்கியவம் வாய்ந்ததோ அதுபோல், ஆந்திரத்துக்கு கலாம்காரி ஓவியம் கலாச்சார முக்கியம் வாய்ந்தது.

ஆண்டுதோறும் எங்கள் நிர்வாகம் ஒவ்வொரு மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு சார்ந்த ஓவியங்களை குழந்தைகள் தெரிந்து கொள்ள அவர்களுக்கு இந்த ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதற்கு முன் பிகார், ராஜஸ்தான், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுடைய ஓவியங்கள், கிளாசிக் பெயிண்டிங் உள்ளிட்டவை குறித்து 9 முறை ஓவியப்போட்டிகள் நடந்துள்ளன. இந்த 9 ஓவிய நிகழ்ச்சிகளும் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக