யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/11/15

காலியிடங்களை நிரப்பாவிட்டால் வேலைநிறுத்த போராட்டம்: கூட்டுறவு ஊழியர் சங்க நிர்வாகி தகவல்

தமிழக கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை வரும் 40 நாட்களுக்குள் நிரப்பாவிட்டால், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய கூட்டுறவு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் 6-வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க வந்த பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 6,000 பணியிடங்களை நிரப்பிட அரசுக்கு பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அறிவிப்பை வரும் 40 நாட்களுக்குள் வெளி யிடாவிட்டால், தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட உள் ளோம். குறிப்பாக வேலைநிறுத்தத் துக்கு தயாராக உள்ளோம்.

கூட்டுறவு வங்கிகளில் பணிபுரி யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிடவேண்டும். இதற்காக அரசின் நிதியை செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.மாறாக வங்கிகளின் லாபத்தில் இருந்து 10 சதவீதம் கொடுத்தாலே போதுமானது என்றார்.முதல் நாள் மாநாட்டில் ‘நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்திடவேண்டும். கூட்டுறவு வங்கிகளில் தொழில் நுட்ப சேவையை விரிவு படுத்த வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு மாநில அரசு நிதி வழங்கிட வேண்டும். கூட்டுறவு வங்கி பணியாளர்களின் ஓய்வு வயதை 60 வயதாக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக