யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/12/15

பள்ளிகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

பள்ளிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றநடவடிக்கை எடுக்கவேண்டும் எனபள்ளிக் கல்விஇயக்ககம் உத்தரவிட்டுள்ளதுஇதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குபள்ளிக்
கல்விஇயக்ககம் செவ்வாய்க்கிழமைவெளியிட்ட சுற்றறிக்கை:-
மழை, வெள்ளத்தால் அதிகபாதிப்புக்கு ஆளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகள் திறக்கப்படும்நிலையில், வெள்ளநீர் சூழ்ந்துள்ளபள்ளிகளில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அதிகாரிகளுடன்இணைந்து வெள்ளநீரை வெளியேற்றதேவையான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும்.
அதோடு, பள்ளி வளாகம், வகுப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறைகளைச்சுற்றி பிளிச்சிங்பவுடரைத் தெளிக்கவேண்டும். பள்ளிகளில்உள்ள பொத்தான்கள்சரியாக உள்ளனவா, மழைநீர் படாமல்உள்ளனவா என்பதைச்சரிபார்க்க வேண்டும்.
மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவாஎன்றும், மின்இணைப்புகள் சரியாக உள்ளனவா என்பதையும் சரிபார்க்கவேண்டும். வெள்ளநிவாரண முகாம்களாகசெயல்படும் பள்ளிகளில் முறையாகக் குப்பைத் தொட்டிகளைவைத்து குப்பைகள்அகற்றப்பட வேண்டும்.
சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் இருப்பதால், மாணவர்களை அதனருகில்செல்ல அனுமதிக்கக்கூடாது உள்ளிட்டஅறிவுரைகளை தலைமையாசிரியர்களுக்கு வழங்கவேண்டும் எனஅந்தச் சுற்றறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக