யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/12/15

அரையாண்டு தேர்வு ரத்தாகுமா: ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், 1 முதல், 9ம்வகுப்பு வரை, அரையாண்டு மற்றும், 2ம் பருவத்தேர்வை, ரத்துசெய்ய வேண்டும்என்ற
கோரிக்கைவலுத்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்மற்றும் கடலுார்மாவட்டங்களில், வரலாறு காணாத வெள்ளத்தால், மக்கள்உடைமைகளை இழந்துதவிக்கின்றனர். இந்நிலையில், 14ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகள்செயல்பட உள்ளன. பள்ளிகள் திறந்ததும், ஒன்பது வேலைநாட்கள் மட்டுமேஉள்ளன. பின், மிலாடி நபி, 25ம் தேதிகிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது.ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 1ம்தேதி வரைபள்ளி, கல்லுாரிகளுக்குவிடுமுறை அளிக்கப்பட்டு, 2ம் தேதிதிறக்கப்படுவது வழக்கம். தற்போதைய நிலையில், 14ம்தேதி பள்ளிதிறந்த பின்மீண்டும், 24ம் தேதி முதல் விடுமுறைவிடப்பட்டு, 2ம் தேதி பள்ளிகள் திறக்கவேண்டும்.

இந்நிலையில், ஜனவரி முதல்வாரத்தில், அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என, அரசு அறிவித்துள்ளது. சமச்சீர் பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புமுதல், பிளஸ்2 வரை, அரையாண்டுத்தேர்வும்; 1 முதல், 9ம் வகுப்பு வரை, இரண்டாம் பருவத்தேர்வும் நடத்தப்படுகின்றன.இந்த இரண்டுதேர்வுகளையும் ரத்து செய்ய கோரிக்கை எழுந்துஉள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர்களும், பெற்றோரும்கூறியதாவது:வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், காலாண்டுத்தேர்வு முடிந்து, 10 நாட்களே பள்ளிகள் திறக்கப்பட்டு, நான்கில் ஒருபங்கு பாடங்கள்தான் நடத்தப்பட்டுள்ளன. 10 முதல், பிளஸ்2 வகுப்புகளுக்கு மட்டும் பாடங்கள் முடிக்கப்பட்டு உள்ளன.

மற்ற வகுப்புகளுக்கு பாடம்நடத்தாமல், அரையாண்டுத் தேர்வு என்பது வெறும்சம்பிரதாயமாகவே இருக்கும். இக்கட்டான இந்நேரத்தில், மாணவர்களைசோதிப்பது சரியானமுடிவாக இருக்காது. நன்றாக படிக்கும்மாணவர்கள் கூட, வெள்ளப் பாதிப்புமற்றும் குடும்பசூழலால், நல்லமதிப்பெண் பெறமுடியாமல் போகலாம்.இதையும் மீறிதேர்வு நடத்தினால், மதிப்பெண் குறைந்துவிட்டதே என, மாணவர்கள் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டு, இறுதித் தேர்வில்கவனம் செலுத்தமுடியாத அபாயம்ஏற்படும்.இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.


மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் கழகதலைவர் எத்திராஜ்கூறியதாவது:கல்வி உரிமை சட்டப்படி, 9ம்வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' தான் வழங்கப்படுகிறது. எனவே, இரண்டாம்பருவத் தேர்வுரத்தானால், நேரடியாக மூன்றாம் பருவத் தேர்வைசந்திக்க எளிதாகஇருக்கும். இல்லையென்றால், மூன்றாம் பருவத்துக்கும் நாட்கள்பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக