யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/12/15

கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்கள்: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

மழை, வெள்ளத்தில் கல்விச்சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக நடத்தப்படும்சிறப்பு முகாம்களுக்குதனி அலுவலர்களைநியமிக்க
வேண்டும்என மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ளசுற்றறிக்கையின் விவரம்:-
வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்கள்இழந்தவர்களுக்கு டிசம்பர் 14 முதல் சிறப்பு முகாம்கள்நடத்தப்படுகின்றன. கட்டணம் ஏதுமின்றிவிண்ணப்பங்களைப் பெற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்குஅனுப்ப வேண்டும். சிறப்பு முகாம்அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்குசம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்அறிவுரை வழங்கவேண்டும். இதற்காகபள்ளிகளில் தனி அலுவலர்கள் நியமனம் செய்யவேண்டும்.
ஒவ்வொரு நாளும் பெறப்படும்பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை தேர்வு வாரியாகத் தொகுத்து, பட்டியலிட்டு, உரிய மாவட்டக்கல்வி அலுவலர்களின்கையெழுத்துடன் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரில்ஒப்படைக்க வேண்டும். அரசுத் தேர்வுகள்இயக்ககத்தைச் சேர்ந்த அலுவலர்கள் விண்ணப்பங்களை ஆய்வுசெய்து, மாற்றுச்சான்றிதழ்களை உரிய முகாம்களில் மாவட்டக் கல்விஅலுவலர்கள் மூலமாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்குவர். இந்தப் பணிகளில் மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டஆசிரியர் பயிற்சிநிறுவன முதல்வர், அரசுத் தேர்வுகள்மண்டல துணைஇயக்குநர்கள் ஒருங்கிணைந்து தனி கவனம் செலுத்திதொய்வின்றி செயல்படுத்த வேண்டும்.

பத்தாம் வகுப்புக்கு கீழ்உள்ள வகுப்புகளில்மாற்றுச் சான்றிதழ், இதர சான்றிதழ்களுக்குவிண்ணப்பங்களைப் பெற்று, அதனை பள்ளிகளில் உள்ளஆவணங்களுடன் சரிபார்த்து எந்தவிதக் கட்டணமும் இன்றிவழங்க அந்தந்தபள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாதிரிவிண்ணப்பப் படிவங்களும் மாவட்டங்களுக்குஅனுப்பப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக