யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/12/15

உயர் கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரனை

அரசு, அரசு உதவி பெறும், அரச உதவி பெறாத கலை மற்றும் அறிவியல் ககல்லூரிகளில் மாணவர் சேர்கையில் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறிப்பிட்டுள்ளன. அதன்படி கல்லூரிகள்தகுதி(மெரிட்) அடிப்படை முறை பின்பற்ற வேண்டும் என்று சட்டம் உள்ளது.
ஆனால் சில ஆயிரம் விண்ணப்பங்களை விற்பனை செய்து மாணவர்களின் மதிப்பெண், மாணவர்களின் தகுதி (மெரிட்) அடிப்படையில் பட்டியலை லயோலா கல்லூரி வெளியீடமால் தன்னிச்சையாகதேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பட்டியலை லயோலா கல்லூரி வெளியிட்டுள்ளது.
2015-16 கல்வி ஆண்டின் நடைப்பெற்றுள்ள மாணவர்களின் சேர்க்கையை இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை நீதிபதி சத்தியநாராயணா அவர்கள் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லயோலே கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்த உயர் கல்வித்துறை 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை மனுதாராருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், நினைவூட்டால் கடிதம் கொடுத்தும் இன்று வரை இதனை உயர் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து அறிக்கையை வழக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று (17.12.2015) விசாணைக்கு வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக