யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/12/15

அரசுத் தேர்வுகள் இயக்குநராக தண்.வசுந்தராதேவி மீண்டும் நியமனம்

அரசுத் தேர்வுகள் இயக்குநராக தண்.வசுந்தராதேவி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
 இவர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்- செயலராக இருந்தார். அரசுத் தேர்வுகள் இயக்குநராக இருந்த கே.தேவராஜன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பையும் வசுந்தராதேவி கூடுதலாக கவனித்து வந்தார். மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், முழு நேரமாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இவர் 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்- செயலராக இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 புதிய உறுப்பினர் செயலர்: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூடுதல் உறுப்பினராக இருந்த டி.உமா (பள்ளிக் கல்வி இணை இயக்குநர்), உறுப்பினர்-செயலராக (பள்ளிக் கல்வி இயக்குநர்) பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (பணியாளர் நலன்) உள்ளிட்டப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக