யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/12/15

ஆசிரியர்களின் தொடர் மறியல் ஒத்திவைப்பு

வெள்ள பாதிப்பைக் கருத்தில்கொண்டு, ஆசிரியர் இயக்கங்கள் டிசம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படவிருந்த தொடர் மறியல் போராட்டம் ஜனவரி 30, 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜாக்டோ) மாநிலத் தொடர்பாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

 மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், வெள்ள பாதிப்புக்காக போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
 மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நீண்ட நாள்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், சிறப்பு வகுப்புகள் நடத்தவும் "ஜாக்டோ'வின் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக இளங்கோவன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக