யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/8/16

பட்டதாரி ஆசிரியர்கள் 19 பேர் இடமாற்றம்

மதுரை மாவட்டத்தில் பணிநிரவல் கலந்தாய்வின்படி 19 பட்டதாரி ஆசிரியர்கள் சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு கடந்த 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பணிநிரவல் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு மாநில கல்வித்துறை இணை இயக்குநர் (தேர்வுகள்) அமுதவள்ளி தலைமை வகித்தார்.
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோஇருதயசாமி முன்னிலை வகித்தார். நேர்முக உதவியாளர்கள் ஆதிராமசுப்பு, அனந்தராமன் ஆகியோர் கலந்தாய்வை நடத்தினர்.

இதில், 19 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள்ளான இடமாறுதல் உத்தரவு அளிக்கப்பட்டது. தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் 7, ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியலில் தலா 6 பேர் என 19 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அறிவியல், கணிதப் பாட ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக