யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/8/16

ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயற்சி:2 ஆசிரியர்கள் உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை:பெண் ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தில், இரண்டு ஆசிரியர்கள் உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுனை சேர்ந்தவர் சித்ரா, 40; அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை. இவரது வீட்டுக்குள், கடந்த மாதம், 25ம் தேதி, திடீரென ஒருவன் நுழைந்து, மயக்க மருந்து கைக்குட்டையை முகத்தில் வைத்து அழுத்தினான். இதில், சித்ரா மயங்கினார்.


சிறிது நேரத்தில், அவருக்கு மயக்கம் தெளிந்தது. அப்போது, எதிர் வீட்டில் வசிக்கும் அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர் சாண்டில்யன், 41, நின்றிருந்தான். அவனிடம் கேட்ட போது, 'உங்கள் வீட்டில் திருடன் நுழைந்தான். சத்தம் கேட்டு உள்ளே வந்தேன்; என்னை உங்கள் மீது தள்ளிவிட்டு ஓடிவிட்டான்' என, கூறியுள்ளான்.

சாண்டில்யன் மீது சித்ராவுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த, 1ம் தேதி, செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார், சாண்டில்யனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்த சாண்டில்யனை போலீசார் கைது செய்தனர். அவன் அளித்த வாக்குமூலம்:ஆசிரியை சித்ராவை அடைய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதை, தனியார் பள்ளி ஆசிரியரான மணி என்ற நண்பரிடம் கூறினேன். அவன், 'குளோரோபார்ம்' எடுத்து வந்தான்.

அதை ஆட்டோ ஓட்டுனர் மோத்தியிடம் கொடுத்து, சித்ராவை மயக்கமடைய செய்யுமாறு கூறினேன்; அவனும் அவ்வாறு செய்தான். பின், சித்ராவை பலாத்காரம் செய்ய வீட்டினுள் நுழைந்த போது மயக்கம் தெளிந்து கூச்சலிட்டார். வெளியே காத்திருந்த மணி, மோத்தி தப்பியோடினர்; நானும் ஓடிவிட்டேன்.இவ்வாறு அவன் தெரிவித்தான்.
இதையடுத்து, சாண்டில்யன், மணி, மோத்தி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக