யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/8/16

கோட்டையில் இன்று சுதந்திர தின விழா: தேசிய கொடியேற்றி முதல்வர் ஜெயலலிதா உரை

சுதந்திரத் தினத்தையொட்டி, சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தேசிய கொடியேற்றி வைத்து, சிறப்புரையாற்றுகிறார்.


தமிழக அரசின் சார்பில் சார்பில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா காலை 9.10 மணிக்குப் புறப்படுகிறார். காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்துக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அங்கிருந்து போலீஸாரின் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்புடன் கோட்டைக்கு வரும் முதல்வரை தலைமைச் செயலர் ராமமோகன ராவ் மலர்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.

பின்னர், திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸாரின் அணிவகுப்பை முதல்வர் பார்வையிட்டு, கோட்டை கொத்தளத்தில் 9.30 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, கொடி வணக்கம் செய்கிறார். பின்னர், சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.

விருதுகள் அளிப்பு: இதையடுத்து, அப்துல் கலாம், கல்பனா சாவ்லா ஆகியோர் பெயரிலான விருதுகளும், காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றியோருக்கும், சிறந்த மின் ஆளுமைக்கான அரசு ஊழியர் - அரசுத் துறையினருக்கும் விருதுகளும், மாற்றுத்திறனாளிகள், மகளிர் நலன் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பணி செய்தவர்களுக்கும் விருதுகளும் வழங்கப்படுகின்றன. விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

5 அடுக்குப் பாதுகாப்பு: விழாவில் கோட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் 5 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக